புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
prajai
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
சிவா
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
viyasan
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
Rutu
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
1 Post - 8%
Rutu
கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_m10கண்டதேவிப் புராணம் - Page 4 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதேவிப் புராணம்


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.



இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:16 am

248 அன்னமால்வரைதனைத்தொழுவலிகுறித்தன்றோ
மின்னவாவியமார்புடைவித்தகனொருகை
முன்னமோர்வரையெடுத்திடமெலியதாமுடிந்து
நன்னர்வான்குடையாயதுநானிலம்வியப்ப. 11

249 அயனையோர்மலர்சுமக்குமற்றரியைநீர்சுமக்கும்
வியனிலாவுமிவ்வேதுவான்மெல்லியரவரே
பயனிலாவுமிம்மால்வரைசுமத்தலிற்பரனே
சயநிலாம்வலியோனெனிற்சாற்றுவதென்னே. 12

250 வானநாடவர்சூட்டியபொன்னரிமாலைக்
கானமெங்கணுங்கிடப்பனகழித்திடவீழ்ந்து
பேனவார்திரைப்பாற்கடற்பெருக்கமேற்பிறங்கி
யானபற்பலாயிரந்துகிர்க்கொடிப்படர்வனைய. 13

251 பொலங்கொள்கற்பகப்புதுமணம்போர்த்தியபுரமு
நலங்கொள்சத்தியவுலகமும்வைகுந்தநகரு
நிலங்கொளவ்வரைக்கடிமையாய்நிகழ்தலின்றோ
வலங்கொளப்பொலிதரலுடன்மாறுமாறுறினே. 14

252 உலகுபற்றுயிர்சரியையாதியவொருமூன்று
மிலகுபொற்புறப்புரிதலவ்வரைகுறித்தென்னி
லலகுமுற்றுறாவத்தகுமால்வரைப்பெருமை
பலகுறித்துளத்தெண்ணினும்பாடமுற்றுவதோ. 15

253 வேறு.
அன்னமால்வரைமேலாயிரங்கோடியவிரிளங்கதிரொருங்குதித்தா
லன்னமாமதில்கோபுரங்கருக்கிரகமத்தமாமண்டபம்விமான
மன்னமாநடையாராடரங்காதியாடகப்பசும்பொனான்மணியா
னன்னகாவண்ணமமைத்ததம்மனையோடங்கணரினிதமர்கோயில். 16

254 அனையவான்றளியுளாயிரங்கரமுமாயிரங்கால்களாநிறுவிப்
புனையவாங்கதிரேமேற்பரப்பாகப்பொருந்தியதென்னமண்டபமொன்
றெனையநாவலரும்புகழமுற்றாததிலங்குமம்மண்டபநாப்பண்
வினையம்வாய்ந்தவருமிற்றெனப்படாதமிளிர்மணிவேதியொன்றம்ம. 17

255 அத்தகுமணிசெய்வேதிமேல்விறல்சாலாளரியாகியஞான்று
பொத்தியவகங்காரந்தவிர்த்தாண்டபுண்ணியந்தெரிந்ததுவிளைக்கும்
வித்தகமலசத்தியுந்தவிர்த்திடுவான்விழைந்தரிமுழுவதுமரியா
யுத்தமனடிகடாங்கினாலென்னவொளிர்மணிமடங்கலாதனமேல். 18

256 உருவுளொன்றாயும்விழியுளொன்றாயுமொளிவளர்தலைக்கலனாயு
மருவியவிரதக்காலுளொன்றாயும்வைகிடமாயும்வீற்றிருப்பெற்
கொரவரங்களங்கமொழியெனவிரப்பவொழித்தலுமுவந்தருடெரிப்பான்
வெருவருமதியமுடிமிசைப்பொலியும்விதமெனவெண்குடைநிழற்ற. 19

257 அற்புதமுடிமேல்விரையிலாவருக்கமகற்றுபுதாம்வதிதருவான்
பொற்புறமலர்வெண்டாமரைமலர்கள்புந்தியுற்றெழுந்திருபாலும்
விற்பயின்மதிகண்டுறத்தலைகவிழ்ந்துமீளவுமெழுந்துழிதரல்போ
லெற்பொலிபசும்பொற்பூணணிமடவாரிரட்டுசாமரைதலைபனிப்ப. 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:16 am

258 புலிதருசருமப்பிருதிவியரையிற்பொங்கொளியப்புவான்முடியி
னொலிதருதழல்கைநுதற்கணினடியாருறுமலக்குரோதவானுளத்தின்
மலிதருநம்போலெங்கணுங்கலந்துவயங்குவதில்லெனவுவந்து
கலிதருசிவிறிவிடுவளியெழுந்துகமழ்திருமெனிமேற்றவழ. 21

259 திரிபுரமெரித்தாய்காலனைக்குமைத்தாய்சிலைமதனீறெழவிழித்தா
யரிபிறப்பைந்திற்றண்டநன்குஞற்றியதண்முதலறிகுறிபூண்டாய்
பரிகலமறையோன்றலையறுத்துவந்தாய்பற்பலதேவரென்பணிந்தா
யிரிதரவசுரரளவிலர்ச்செற்றாயென்றுவந்தியர்விறல்பாட. 22

260 பலமுகமுழவமுதற்பலவியமும்படர்கணத்தவர்சிலரதிர்ப்ப
நலமலிபணிலம்வயிர்குழல்பீலிநகுதுளைக்கருவிகள்பிறவுஞ்
சிலகணமிசைப்பத்திவவியாழெடுத்துச்சிலர்நரம்புளர்ந்திசையமுத
மலகறவூற்றவரம்பையர்முதலோரபிநயத்தொடுமெதிர்நடிப்ப. 23

261 சாரணரியக்கர்சித்தர்கந்தருவர்தக்ககிம்புருடர்கின்னரர்வெள்
வாரணரமரர்தயித்தியரரக்கர்மடலவிழ்கமலம்வீற்றிருக்கு
மாரணர்நறியபசுந்துழாய்ப்படலையலங்கியவிலங்கெழினிறத்து
நாரணர்பிறருந்தலைமிசைக்கரங்கணன்றெழீஇக்குவித்தனர்நெருங்க. 24

262 குழிவிழிப்பிறழ்பற்குடவயிற்றிருண்மெய்க்குறுகுறுநடந்திடுகுறுத்தாட்
பழிதபுத்தியங்குபாரிடக்குழுவும்பற்பலவயிரவர்கணமுங்
கழியருட்கொடியசிறுவிதிமகத்தைக்கருக்கியவீரனுமறத்தை
யழிவறக்காக்குமையனும்பிறருமணிமையினெருங்கினர்நிற்ப. 25

263 முனைவனங்குரவன்றிருமரபினுக்குமுதற்குருவாகியமுன்னோ
னனைவரும்பரமசிவனெனப்புகழ்வராரருணிரம்புறப்பெற்றோன்
றனைநிகர்கருணைநந்தியெம்பெருமான்றடங்கரச்சூரல்சற்றசைத்து
நினையவரவர்தந்தராதரந்தெரிந்துநிறுத்துபுதிருமுனருலாவ. 26

264 கயமுகத்தவுணனுயிர்தபமாட்டிக்கடவுளர்பலரையும்புரந்த
வயவொருமருப்புப்புகர்முகக்கடவுள்வலப்புறத்தினிதுவீற்றிருப்ப
வியனமருலகமுழுதுமீன்றெடுத்தும்விளங்கருட்கன்னியேயாய
கயன்மருள்கருங்கட்செய்யவாய்ப்பசுந்தோட்கவுரிமற்றிடத்துவீற்றிருப்ப. 27

265 ஒருவரைதாழ்த்திக்கொடுந்தொழிற்றகுவருடலெனும்பலவரையுயர்த்தி
வெருவருமொருவாரிதியறச்சுருக்கிவிளம்பியதகுவர்மெய்நெய்த்தோர்
பெருகியபலவாரிதியுறப்பெருக்கிப்பிறங்குமத்தகுவரைச்சாய்த்துப்
பொருவில்வானவரைநிமிர்த்தவேடனக்கும்புண்ணியவுமைக்குநள்ளிருப்ப. 28

266 சடைமுடிநிலவுவெள்ளமுதொழக்கச்சற்பங்கள்காரமுதொழுக்க
வடையொருகரமானுடையெனப்பொலியுமரைப்புலியஞ்சியதேய்ப்ப
மிடைமிசைத்தாவவெள்ளியதரங்கம்விரிபுனல்கைத்தழலெழறேர்ந்
துடைதரும்பொருட்டுக்கிழக்கிழிதரவேரொருங்கமைதிருமுகம்பொலிய. 29

267 புண்ணியநீறுநெற்றியிற்பொலியப்பொங்கிமேலெழுந்தழனோக்கந்
திண்ணியபகைதேர்ந்தடங்கியதொளிரத்திருமுகக்கண்களோரிரண்டுங்
கண்ணியகருணைமடைதிறந்தென்னக்கதிர்த்திடக்கரிசறுப்பவரே
யெண்ணியகழலிற்கழலுறத்தனிவீற்றிருந்தனனெம்மையாளுடையான். 30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:17 am

268 வேறு.
காமருதிருவோலக்கங்கண்களிகொள்ளநோக்கித்
தேமருவலரின்மேலான்றிகழ்மணிமறுவினோடு
மாமருவலங்கன்மார்பன்வலனுயிர்குடித்ததோன்றல்
பாமருவியசீர்மற்றயாவரும்படிந்தாரின்பம். 31

269 அவரவர்முறைப்பாடெல்லாமஞ்செவிநிறையவேற்றுத்
துவர்படுசடிலத்தோன்றறூயநன்மொழியாற்கங்கை
யிவர்முடியசைப்பானோக்குநோக்கினாலின்பமெய்தக்
கவரருள்செய்துபோக்கிக்கவுரியோடெழுந்தானன்றே. 32

270 காந்தளம்போதிற்செய்யகமலமென்மலரேய்ந்தென்ன
மாந்தளிர்மேனியம்மைவலக்கரமிடக்கைபற்றிப்
பூந்தளிரடிப்பூமாயோன்புதல்வன்வாய்வைத்துக்காப்புற்
றாய்ந்தபாதுகைமேற்சூட்டியந்நின்றுபெயர்ந்தானன்றே. 33

271 மரகதச்சுடரினோடுமாணிக்கச்சுடரெழுந்து
பரவுறநடந்தாலென்னப்பயப்பயநடந்துசென்று
கரவறவெதிர்தாழ்வோர்க்குக்கண்ணருள்வழங்கிப்புக்கான்
குரவமந்தாரமாதிகுலவுபூந்தெய்வச்சோலை. 34

272 புண்ணியப்பொழிலினூடுபுகுதலும்பொழில்காப்பாளர்
நண்ணியவிருப்பிற்போற்றிநயந்திருபாலுமோடித்
தண்ணியமலர்களகொய்துதருந்தொறும்வாங்கிமோந்து
துண்ணியமருங்குனாசிநுனையினுஞ்சேர்த்தாநின்றான். 35

273 அறிபொருள்செறியத்தோன்றுமான்றவர்கவிபோல்வித்துச்
செறிகனிசுமந்துநிற்குந்தாடிமச்சிறப்புநோக்காய்
குறிபருப்பொருளொன்றேய்ந்தசெய்யுளிற்குலவித்தோன்றும்
பறிகனிசுமவாநின்றுபரந்தமுந்திரிகைநோக்காய். 36

274 மிகுபொருளமையக்கற்றும்வெளிப்படைசெய்யார்போல
மிகுகனிமண்ணுட்கொண்டுவெளிசெயாப்பலவுநோக்காய்
நகுபொருள்பலவுமியாருந்தெவ்வுறநயப்பார்போல
நகுகனிபலவுமியாரந்தெவ்வவாழ்நன்மாநோக்காய். 37

275 தம்முடையாயுள்காறுநூலொன்றேசமைப்பார்போல
விம்முகாய்க்குலையொன்றம்மவெளிசெயுமரம்பைகாணா
யம்மபற்பலசெய்வாரினடர்பழக்குலைபல்கொண்டு
செம்மையுமுயர்வுவாய்ந்துதிகழ்தருதெங்குகாணாய். 38

276 சிலகவியானுஞ்செய்துசெறிதருபயன்படாரா
யலகறவுரைவிரித்துப்பயன்படுமவரையொப்பச்
சிலகனியானுமீன்றுசெறிதருபயன்படாவா
யலகறவலர்விரித்துப்பாடலமமைவநோக்காய். 39

277 ஒருகவியேதுக்கொண்டுபலவிரித்துரைப்பார்போன்றோர்
மருவடிகொண்டுபற்பல்விரிந்தமாதவியைநோக்காய்
பெருகியசெய்யுட்கோதம்பிறங்கிலக்கணமாறுற்றுக்
கருதடியொன்றேகொண்டவஞ்சியைத்தெரியக்காணாய். 40



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:17 am

278 ஆன்றநின்கொங்கைபோலவரும்பியக்கொங்கைமேலாற்
சான்றவொண்சுணங்குபோலத்தண்சுணங்கெழமலர்ந்தே
யேன்றநின்பதத்துமென்மையெனப்பொலிபஞ்சிகாய்த்துத்
தோன்றவிங்கமராநிற்குஞ்சொற்பொலிகோங்கம்பாராய். 41

279 ஏயுநின்மேனிவண்ணமெனப்பசுந்தளிர்களீன்ற
யாயும்வெண்ணகையின்வண்ணமாமெனவரும்புகான்று
சாயுநுண்மருங்குல்வண்ணமெனத்தளர்தொசிவதாகித்
தோயுமென்குணத்தமுல்லைக்கொடிபலதுவன்றல்காணாய். 42

280 எனப்பொழில்வளத்துட்சில்லவிமயமீன்றெடுத்தபாவை
தனக்கினிதியம்பியெங்கடம்பிரானங்கண்மேய
மனக்கினிதாயசெம்பொன்மண்டபத்தினிதுமேவி
யுனற்கருமுவப்பிற்சிங்கவொளிரணையிருந்தான்மன்னோ. 43

281 அண்ணலவ்வாறுமேவமற்றவனனுஞைபெற்று
வண்ணமென்மலர்கள்கொய்வான்மலைமகளாயவன்னை
யெண்ணருமிகுளைமார்களேவலினுவந்துமேவக்
கண்ணகனாங்கோர்பாங்கர்க்கயிற்சிலம்பொலிக்கச்சென்றாள். 44

282 உந்தியின்வனப்பைவவ்வியொளித்தனவென்றுதேர்ந்து
முந்தியமௌவல்கொய்துமுளையெயிற்றழகுவவ்வி
யந்திலிங்கொளித்ததென்றுதளவரும்படங்கக்குற்றுஞ்
சந்தணிகொங்கைநங்கைவேறிடஞ்சாரச்சென்று. 45

283 படர்வளியலைப்பத்தேம்பிப்பற்றுக்கோடின்றியொல்கு
மடர்பசுங்கொடிகட்கெல்லாந்தனித்தனியவிர்கொம்பூன்றித்
தொடர்புசெய்திடுமினென்றுதோழியர்சிலரையேவி
யிடர்தபுத்தெம்மையாளுமேந்திழையந்நின்றேகி. 46

284 மற்றொருபாங்கரண்மிமணங்கமழ்ந்திங்குமேய
பொற்றபாடலத்தின்பூவும்புதுமதுப்பொழியுங்கோங்குஞ்
செற்றமந்தாரப்பூவுஞ்செறிதரக்கொணர்மினென்றே
யுற்றவர்சிலரைப்போக்கியந்நின்றுமுவந்துசென்று. 47

285 வேறுமோரிடத்தையண்மிமென்புனலகத்துப்பூத்த
நாறுசெங்கழுநீர்நீலநக்ககோகனகமின்ன
கூறுகொண்டணைமினென்றுகூடநின்றவரையேவித்
தேறுநர்க்கருளந்தேவிதனித்தனடிருமினாளே. 48

286 மதிமுடிக்கணவற்சாரும்வாஞ்சையின்வருபிராட்டி
திதியமைபாண்டிநாடுசெய்தமாதவத்தின்பேற்றால்
வதிமருதவனச்சீர்த்திவானமும்பொதிர்த்துச்செல்ல
வதிரருமகிழ்ச்சியாலேயாடலொன்றகத்துட்கொண்டு. 49

287 பாதசாலங்களெல்லாம்பாதமேற்செலவொதுக்கி
யோதருங்காஞ்சியாதியுத்தராசங்கங்கொண்டு
மேதகமரங்குல்யாத்துமென்மெலநடந்துபின்போய்ப்
பூதநாயகன்முகக்கண்புதைத்தனண்மலர்க்கைகொண்டு. 50



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:17 am

288 நிறைகலைமதியத்தேவேநிகழ்கதிர்த்தேவேநீவி
ரிறையவன்முகத்துக்கண்ணாயிருக்கினும்விடேம்யாமென்று
கறைமுகில்கரங்கணீட்டிக்கதுமெனமறைத்ததொக்கு
மறைபெரும்புவனமின்றாளையர்கண்புதைத்தகாட்சி. 51

289 மூராரியென்றுரைக்கும்பெண்யான்முதலைநீங்குபுதனித்து
விராம்வனத்துறைவதோர்ந்தும்வெளிப்பட்டுமறைந்தும்வாட்ட
லிராவகையொழிப்பவின்றேயென்றவண்மறைத்ததொக்கும்
புராதனர்முகத்துநாட்டம்புராதனிமறைத்தகாட்சி. 52

290 மறைமொழியிகந்தபாவிமகத்தவியுண்ணப்புக்கு
முறைதிறம்புற்றுமையன்முகத்துவீற்றிருந்துநாளு
மறைதரவிளங்கலொல்லாதவிரிருகதிர்காளென்று
பிறைநுதல்சினந்துபொத்தும்பெற்றியும்பொரூஉமக்காட்சி. 53

291 அடியவருளத்துநீங்காவருட்பிரான்முகத்துநாட்டங்
கடியமைக்குழலிவ்வாறுகரங்களாற்புதைத்தலோடு
நெடியபல்புவனமுற்றுநிறைந்தபல்லுயிருஞ்சாம்பக்
கொடியகேவலமேயென்னக்குருட்டிருள்பரந்ததம்மா. 54

292 எண்ணருநாள்கடோறுமெழுந்துதற்காயாநிற்கு
மண்ணலங்கதிர்கடம்மையடர்த்திடவலியிலாமை
யொண்ணலமின்றித்தேம்பியொடுங்கியவந்தகாரந்
தண்ணமுதனையாள்செங்கைத்தலங்களைப்புகழ்ந்ததன்றே. 55

293 தெறுபகையொழிந்ததென்றுசெறிந்தெழுமிருளோடொத்துக்
கறுவுநம்பகையுந்தீர்ந்துகழிந்ததென்றுவப்புமேவி
மறுவறவிதுசெய்தாட்குமாறெவன்செய்வாமென்று
குறுநகைச்செவ்வாய்மாதைக்கூகையும்புகழ்ந்ததம்மா. 56

294 செய்யதாமரைநேர்நாட்டச்செல்வனுமெண்கணானு
மையவாயிரங்கணானுமிமைப்பிலாதமர்விண்ணோரும்
வெய்யவாளவுணர்சித்தர்விஞ்சையர்முதலோர்யாரு
மொய்யவாமிருள்வீக்கத்தான்மூட்டமொத்திருந்தாரன்றே. 57

295 வெருவில்பாதலத்துநாளுமேவிவாழுலகரெல்லா
மிருபுலன்கவராநிற்குமேற்றமார்நமதுகண்க
ளொருபுலன்கவருமற்றையொருபுலன்கவர்ந்ததில்லை
மருவுகாரணம்யாதோவென்றெண்ணினர்மயங்காநின்றார். 58

296 மம்மருற்றுயிர்களெல்லாமின்னணமயங்காநிற்ப
வம்மவென்செய்தாள்பேதையாயினார்போலவென்று
செம்மலெம்பெருமான்வலலேதிருவுளத்திரக்கம்பூண்டு
விம்முசெந்தழனுதற்கண்டிறந்தனன்றிமிரம்வீய. 59

297 நுதல்விழிதிறத்தலோடுநோக்கியவெம்பிராட்டி
விதலையுற்றஞ்சியென்னாய்விளைந்ததென்செய்தாமென்று
முதலவனெதிரேவந்துமுன்னுறாதிழைத்தகுற்ற
மதலையாய்பொறுத்தியென்றுவணங்கினளெழுந்துநின்றாள். 60



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:18 am

298 திருவடிவணங்கிநின்றசேயிழையணங்கைநோக்கிப்
பொருவருங்கருணைமூர்த்திபுண்ணியப்பூங்கொம்பன்னா
யொருவருமுயிர்கண்மம்மருழந்திடநீயென்செய்தாய்
மருவுநித்தியமுன்னாயகருமங்கண்மாய்ந்தவன்றே. 61

299 நீள்வரியறலைவென்றநிறைகுழற்கொம்பனாய்நம்
வாள்விழிபுதைத்துவிட்டவரையறைகணமேயேனு
மாள்செய்பல்லுயிர்க்குமூழியாயிற்றேயனையதாய
மூள்வருபாவநின்மேற்றன்றியார்முகந்துகொள்வார். 62

300 எண்ணரும்பாவமேனுமிரித்தருள்கொழிக்கவல்ல
கண்ணருநமதிலிங்கபூசனைகைக்கொண்டன்றிப்
பண்ணருங்கழுவாய்வேறுபகர்ந்திலமனையதாய
நண்ணருங்கழுவாயாற்றினாம்வந்துகலப்பேமென்றான். 63

301 என்றலும்பிரியாத்தேவிபிரிவதற்கிரங்கியேங்கி
யொன்றியபிரிவாற்றோன்றுமச்சமுமுஞற்றுபூசை
நன்றியல்சிறப்பாற்றோன்றுமன்புநன்கிருபாலீர்ப்பத்
தன்றுணைப்பெருமான்றுாளிற்றாழ்ந்தெழுந்திதனைச்சொல்வாள். 64

302 அடிகளோடடியேனாற்றுமாடலைக்கருதியன்றோ
தொடியவாங்கரத்தாற்கண்கள்புதைத்ததுசொல்லொணாத
கொடியதீவினையாய்வந்துமுடிந்ததுகூறலென்னே
கடியதாம்பிரிவையுன்னிநெஞ்சகங்கலங்காநின்றேன். 65

303 எவ்விடத்தடியேன்சென்றுபூசனையியற்றாநிற்ற
லெவ்வமுற்றொழியநீவந்தருளுநாளெந்நாளென்று
கௌவையிற்றேவிநெஞ்சங்கரைந்துவிண்ணப்பஞ்செய்யக்
கௌவையிற்கடனஞ்சுண்டோன்கனிந்திஃதருளிச்செய்வான். 66

304 மங்கைநீயஞ்சேனின்னைப்பிரிந்தியாம்வழங்கலில்லை
துங்கமார்பரதகண்டந்துற்றமர்பன்னாட்டுள்ளுஞ்
சிங்கலிறமிழ்நாடொன்றேசிறந்ததந்நாட்டினுள்ளும்
பங்கயப்பழனஞ்சூழும்பாண்டிநாடுயர்ந்ததாமால். 67

305 அத்தகுபாண்டிநாட்டுளருச்சுனவனமென்றொன்று
வித்தகமாயதானம்விருப்பமிக்குடையேமன்ன
வுத்தமதலத்திலியாமேயாதலாலுங்கணெய்திச்
சித்தம்வைத்தருச்சிப்பார்க்குவிரைந்தருள்செய்தல்கூடும். 68

306 ஆதலாங்கணெய்தியருச்சனையாற்றினொல்லைக்
காதலாலருள்வோமியாம்வந்தென்றனன்கருணைமூர்த்தி
போதெலாம்பொலியுங்கூந்தற்பொற்கொடியிருகைகூப்பி
மாதர்சாலனையதானத்தெல்லையைவகுத்தியென்றாள். 69

307 தன்னுயிர்த்தேவிவேண்டத்தம்பிரானருளிச்செய்வான்
றென்னுயிர்த்தழகுவாய்ந்ததிருப்பெருந்துறைக்குச்சற்றே
மின்னுயிர்த்தனையாய்மேற்கில்விரிபொழிற்சாலிவாடி
யென்னுயிர்த்தலத்திற்குத்தென்கீழெனவிசைக்குந்திக்கில். 70



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:18 am

308 மன்னியவளஞ்சால்வீரைவனத்திற்குத்தெற்குவாய்மை
மின்னியதிருவாடானைத்தலத்திற்குவடக்குமேலோர்
பன்னியவொருதேனாறும்பகர்தருவிரிசலாறுந்
துன்னியவடக்குந்தெற்குந்துன்னவுற்றுளதத்தானம். 71

309 அத்தகுபெருந்தானத்தினருச்சுனவலிருக்கநீழ
லுத்தமவிலிங்கமாகியொளிருவோம்வன்மீகத்துள்
வித்தகநீயங்கெய்திமேதகுருபூசையாற்றிற்
சத்தறிவின்பயாம்வந்தருளுதுஞ்சார்தியென்றான். 72

310 என்றருள்புரிந்துபெம்மானிரும்பொழிலிருக்கைநீத்து
மின்றிகழ்பேரத்தாணியகத்தெழுந்தருளிமேவி
யொன்றவந்திரப்போர்க்கெல்லாமருள்சுரந்துறைந்தானிப்பான்
மன்றலங்குழலாள்கூடத்தொடர்ந்தனண்மாதர்சூழ. 73

311 நாயகனிருக்கைசார்ந்துநளினமென்பதத்திற்றாழ்ந்து
தூயநல்விடையும்பெற்றுத்துவன்றியகணங்கள்சூழப்
பாயதென்னாடுசெய்தபாக்கியப்பேற்றாலம்மை
யாயமென்மருதவைப்பையணைவதற்குள்ளங்கொண்டாள். 74

312 இன்னநற்காதைகேட்டுமிண்டையாதனத்தினானைப்
பன்னகப்பாயலானைப்பானுவைமற்றையோரை
யுன்னரும்பிரமமென்பாரொள்ளியவாயும்வாழ்க
நன்னர்கொணாவும்வாழ்கவென்றுமேனவிலலுற்றான். 75

திருக்கண்புதைத்தபடலம் முற்றிற்று.
ஆக படலம் 5 -க்கு திருவிருத்தம். 312.




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:19 am


6. தேவிதவம்புரி படலம். (313 - 362 )


313 பன்னியெவருந்தழுவுபாண்டிவளநாட்டு
மன்னியவருச்சுனவனம்புகுதும்வாஞ்சை
முன்னியெழவேழுலகுமுற்றுமினிதீன்ற
சுன்னிதலைமீதுகுவிகையொடுமெழுந்தாள். 1

314 வாழியறமோம்புமலைமங்கையெழலோடும்
வீழிபொருவாயெழிலனிந்திதைமுன்மேய
தோழியரெழுந்தனர்துவன்றிமகிழ்துள்ளிக்
காழ்வலியமைந்துயர்கணங்களுமெழுந்த. 2

315 குடைகவரிசாமரைகொழுஞ்சிவிறிபிச்ச
மிடையொலியறோரணம்விரும்புவடவட்டந்
தடையறநெருங்கினதடாரிபணைதக்கை
யுடைகடன்முழங்குமுழவாதிகளொலித்த. 3

316 சங்குவயிர்பீலியுறுதாரைகணரன்ற
நங்குதவிர்வீணையினரப்பொலியெழுந்த
மங்குதலில்கஞ்சவொலியாதிகண்மலிந்த
பொங்குமறைவாழ்த்தொலிபொலிந்துதிசைபோர்த்த. 4

317 பன்னரியசெங்கதிர்பலப்பலதிரண்டா
லன்னதொருதிப்பியவிமானமெதிரண்ணப்
பொன்னகரவாணர்பொழிபூமழையின்மூழ்கித்
தன்னனையதாய்மகிழ்தலைக்கொளலிவர்ந்தாள். 5

318 ஏவறலைநிற்குமடமாதருமிவர்ந்தார்
காவலமைகூன்குறள்கனன்றுமுனெழுந்த
வோவவிலதாவிருதுமாகதருரைப்ப
நாவலர்சொறென்றிசைநடத்தினள்விமானம். 6

319 வடாதுதிசைநின்றுயர்தெனாதுதிசைவாஞ்சை
படாதமகிழ்வோடெழுபருப்பதமடந்தை
தடாதவலியோனமர்தலந்தொறுமணைந்து
விடாநசையினேத்துபுவிமானமிசையுய்ப்பாள். 7

320 காசியையடைந்துவிரிகங்கைநதிமூழ்கிப்
பூசியவிபூதியொடுபுண்டரிகன்மாயோன்
பேசியபுகழ்ப்பரமர்பெய்கழல்வணங்கி
யாசில்பலநாடுநதியாவையுமிகந்து. 8

321 தண்டையெனநெல்விளைதடம்பணையுடுத்த
தொண்டைவளநாட்டுமகிழ்துன்றிடவணைந்து
கண்டைவிடையானமர்கவின்பொலிதலந்தோ
றிண்டைமலராதிகொடுபூசனையியற்றி. 9

322 நாடுபலபோற்றுநடுநாட்டகநுழைந்து
காடுபடுசெஞ்சடையர்காமர்தலமெல்லா
நீடுபெருகன்புநிகழப்பெரிதுபோற்றி
யாடுமயிலன்னவியலாவயினகன்று. 10



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:19 am

323 பொங்குபுனறங்குபொருபொன்னிவளமன்னி
யெங்குநிகழ்சோழவளநாட்டினிடையெய்தித்
தங்குபலவாகியதலந்தொறுமிறைஞ்சிக்
கொங்குமலர்தூயதுகடந்துகுறிகொள்வாள். 11

324 வெடிகெழுவராலெழுபுமேகமிசைபாயும்
படிகெழுதடங்கள்பொலிபாண்டிவளநாட்டுத்
துடிகெழுமருங்குலொருதோகையடைகுற்றாள்
வடிகெழுமலர்த்தொகுதிவானவரிறைப்ப. 12

325 ஆங்குமருவந்தலமனேகமும்வணங்கிப்
பாங்குபெறுகோனுரைகுறிப்படிபடர்ந்து
தீங்குதவிரன்புநெகிழ்சிந்தையுணிரம்ப
வோங்குநலருச்சுனவனத்தினருகுற்றாள். 13

326 மதுநதியுமான்மியம்விழாவிரிசலென்னு
முதநதியுநாயகன்மொழிந்தபடிகண்டாள்
சதுமுகன்முன்னோர்தொழுதலங்களொருநான்கும்
புதுமையுறநாற்றிசைபொலிந்துறுதல்கண்டாள். 14

327 இறைவனுரைசெய்தலமிதேயெனமதித்து
நிறையொளிவிமானமிசைநின்றுடனிழிந்து
குறையறுகணங்கண்முதலோர்குழுமியேத்தப்
பொறைகெழுமடந்தைபுவிபோந்தனள்பணிந்தாள். 15

328 வேறு.
பணிந்தெழந்துபராவிக்கரங்குவித்
தணிந்தபாங்கியரியாருமணைதரத்
துணிந்தவென்றிக்கணங்களுஞ்சூழ்வரத்
தணிந்தசாகையத்தாழ்வனம்புக்கனள். 16

329 செல்லச்செல்லச்சிவானந்தமூற்றெழ
வொல்லற்காயவுரோமஞ்சிலிர்த்திட
மல்லற்றோகைமயில்பலவற்றையும்
வெல்லற்காம்பலவிம்மிதநோக்குவாள். 17

330 பகலெலாம்பன்மரத்தோடொன்றாயிருந்
திகலிலாவிரவெய்திடும்போழ்தினிற்
புகரிலாவழல்பொங்கியதொத்தொளிர்
நிகரிலாதநெடுந்தருவோர்புறம். 18

331 இளமரத்தின்கனைப்பங்கெழுந்தொறுங்
களமிலாவிளங்கன்றுகனைத்ததென்
றுளநெகிழ்ந்துகனைத்துறமேதியவ்
வளநிலம்புகுமாட்சியுமோர்புறம். 19

332 கொம்பரேறில்வெண்கோட்டுக்களிறுமா
வம்பொற்றேர்முதலாகியவற்புத
மும்பராரும்வியப்பவுண்டாக்கிடும்
வம்பறாததருவொருமாடரோ. 20



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 20, 2011 3:20 am

333 பட்டகட்டையிற்பாதுகைசெய்ததி
லொட்டவேறினுடனும்பரார்பதிக்
கிட்டமாகவெழுந்துகொடுசெலுங்
கட்டமில்லாத்தருவொருகண்ணெலாம். 21

334 உறவிளைத்தவுடம்புடையார்களு
முறவடுப்பினுதிப்பவளாரினா
லுறவடித்துமறலியுறுநக
ருறவிடுக்குந்தருவுமொருபுறம். 22

335 அடித்துமோதியலைக்குந்தருவொரீஇத்
துடித்தயற்புறந்துன்னினச்செல்லலை
நொடித்துவல்லையுயச்செயுநோன்றருப்
பிடித்துமேவப்பிறங்குமொருபுறம். 23

336 ஆயைநீத்தவமலன்றிருவருண்
மேயையாலெத்தவம்விளைத்தாய்கொலிம்
மாயைநீத்தவடிவமுறற்கெனச்
சாயைநீத்ததருவுமொருபுறம். 24

337 எந்தநோயினிடர்ப்படுவார்களு
முந்தவந்துபரிசித்துமோப்பரே
லந்தநோய்நரையாதித்துயரொடுஞ்
சிந்தநல்குந்தருவுஞ்செறியுமால். 25

338 கவலைவெம்பசிகாற்றுஞ்செயலிலார்
திவலைபாலுணிற்றிங்களோராறள
வுவலைபோன்றவுடம்பைவருத்துமத்
தவலைநீக்குந்தருவுமொருபுறம். 26

339 அன்னபேதியகிலமவாங்கருஞ்
சொன்னபேதிசுடுவிடத்திற்கமு
தன்னபேதியூன்பேதியவைமுதற்
சொன்னபேதித்தருக்கடுவன்றுவ. 27

340 போற்றுநீர்நிழல்போலப்பொலிதரு
மேற்றுவார்கொடியெந்தைகொலோவெனச்
சாற்றுமேன்மைதனைப்பிறர்காணுறத்
தோற்றுறாததருவுந்துவன்றுவ. 28

341 கருநிறத்தவுங்காலையிளங்கதிர்
பொருநிறத்தவுமாகிப்பொலிதரு
திருநிறத்தவிர்சித்திரமூலங்கள்
வருநிறத்தவ்வனத்தொருபாலெலாம். 29

342 வெட்டுகின்றநலியம்விளங்கொளி
பட்டுமல்கும்பசியபொன்னாயுறு
முட்டுநீக்கமுகிழ்க்குந்தருக்களும்
பெட்டுநிற்கும்பிறங்கியோர்பாலெலாம். 30



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக