புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
62 Posts - 39%
heezulia
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
55 Posts - 35%
mohamed nizamudeen
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
10 Posts - 6%
prajai
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
4 Posts - 3%
mruthun
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
3 Posts - 2%
Saravananj
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
3 Posts - 2%
Guna.D
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
191 Posts - 41%
ayyasamy ram
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
21 Posts - 5%
prajai
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
7 Posts - 2%
mruthun
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_m10ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன்.


   
   
avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Mon Jun 13, 2011 8:59 pm

ஐ.நா. நிபுணர் குழு
அறிக்கையும் தமிழீழ விடுதலையும் என்ற தலைப்பில் சென்னையில் மே 17 இயக்கம்
நடத்திய கருத்தரங்கில் பேராசிரியர் பால் நியூமேன் பேசியது. இவர் பெங்களூரு
பல்கலைக் கழகத்தின் அரசியல் துறையில் பணியாற்றிவருகிறார். போரினால்
இலங்கைத் தமிழர்களின் வாழ்வு எந்த அளவிற்கு சிதைக்கப்பட்டது என்பதை
நேரிடையாக கண்டு வந்து ஆய்வு செய்து அறிக்கையளித்து முனைவர் பட்டம்
பெற்றவர் பால் நியூமேன்)


ஐ.நா.
பொதுச் செயலர் பான் கி மூன் அமைத்த நிபுணர் குழு அறிக்கை குறித்து நான்
பேசத் தொடங்குவதற்கு முன்னால், ஒரு முக்கிய விடயத்தை தெளிவுபடுத்த
விரும்புகிறேன். எனக்கு முன்பு இங்கு பேசிய பலர், இலங்கையில் நடந்த போரில்
40,000 பேர் வரை தமிழர்கள் கொல்லப்பட்டதாகக் கூறினார்கள். அவர்கள்
அனைவருக்கும் தெரிவித்துக்கொளகிறேன். அந்தப் போரில் 1,46,679 பேர்
கொல்லப்பட்டோ அல்லது காணாமல் போயோ உள்ளனர் என்பது உறுதியான, சிறிலங்க
அரசால் கூட மறுக்க முடியாத உண்மையாகும். இதனை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச
அமைத்த கற்ற பாடங்களும், இணக்கபாபடு ஆணையமும் என்ற விசாரணை ஆணையம் முன்பு,
மன்னார் பேராயர் ராயப்பு ஜோசஃப் அவர்கள் வாக்குமூலமாக அளித்துள்ளார்கள்.
அதிகாரப்பூர்வமான இந்த எண்ணிக்கையை அனைவரும் எடுத்துரைக்க வேண்டும் என்று
கேட்டுக்கொள்கிறன்.


இலங்கையில்
தமிழர்களுக்கு எதிராக நடத்திய போர் முடிந்த பிறகு அங்கு சென்ற ஐ.நா.
பொதுச் செயலர் பான் கி மூன், அந்தப்போரில் நடந்த அத்துமீறல்கள் குறித்து
இலங்கை அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றார். ஆனால் ராஜபக்ச ஒப்புக்கொண்டதை
செய்யவில்லை.


அதன்
பிறகு 2010ஆம் ஆண்டு ஜனவரியில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நிரந்தர
மக்கள் தீர்ப்பாயம் ஒரு விசாரணையை நடத்தி, இலங்கை அரசும், அதன் அதிபர்
ராஜபக்சவும் போர்க் குற்றவாளிகளே என்று அறிவித்தது. இலங்கை அரசு மனித
குலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளது என்று தீர்ப்பளித்தது. அதனைத்
தொடர்ந்து பன்னாட்டு அளவில் எழுந்த அழுத்தத்தை அடுத்து ஒரு நிபுணர் குழுவை
பான் கி மூன் அமைத்தார்.


போர்
நடந்து முடிந்து 13 மாதங்கள் இந்தக் குழுவை நியமிப்பதற்கு
காலதாமதப்படுத்தினார். 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்தக் குழு
நியமிக்கப்பட்டது. ஜூலை 2ஆம் தேதி ஜேவிபி எம்.பி.யாக இருந்த சிங்களத்
தலைவர் ஒருவர், தற்போது அமைச்சராக இருக்கிறார். அவர் ஐ.நா. சபை
அலுவலகத்திற்குப் போகிறார். இரண்டு நாட்கள் உள்ளே யாரும் போக முடியாது.
வெளியே யாரும் வர முடியாத வகையில் கொழும்பு ஐ.நா.அலுவலகத்தை
முற்றுகையிட்டார். அதை பார்த்து கூட பான் கீ மூனோ, வேறு எந்த நாடோ
கண்டிக்கவில்லை.


இந்தியாவில்
இதுபோன்ற நடந்திருந்தால், ஐ.நா.வில் இருந்து ஒரு ராணுவத்தையே
அனுப்பியிருப்பார்கள். ஆனால் இரண்டு நாள் உள்ளே இருக்கும் அலுவலர்களை
வெளியில் அனுமதிக்கவில்லை. அடைத்து வைத்திருந்தார்கள். அரசு உதவியோடு ஒரு
அமைச்சர் செய்த குற்றத்திற்கு ராஜபக்சவினுடைய ஆசிர்வாதம் இருந்தது. ஆனாலும்
யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. இது நடந்தது ஜூலை மாதத்தில்.
செப்டம்பர் மாதத்தில்தான் இந்தக் குழு செயல்பட ஆரம்பிக்கிறது.


இந்தக்
குழுவைப் பற்றி யாரும் பேசுவதற்கு தகுதி கிடையாது. ஏனென்றால்,
அப்படிப்பட்ட நேர்மையாளர்களைக் கொண்ட குழு இது. மார்சுகி தாருஸ்மான்
என்பவர் இந்தோனேஷியாவினுடைய அரசு தலைமை வழக்குரைஞராக இருந்தவர். ஜென்ரல்
சுகார்டோ என்ற இந்தோனேஷியா ஜென்ரலை கூட அவர் விட்டுவைக்கவில்லை. 7 ஆண்டுகள்
வழக்கை நடத்தி, விசாரணை நடத்தி அங்கிருப்பவர்களுக்கு விடுதலை வாங்கித்
தந்தவர் மார்சுகி தாருஸ்மான். குழுவின் மற்றொரு உறுப்பினராக யாஷ்மின்
சூக்கா, நெல்சன் மண்டேலாவிற்கு நெருங்கிய நண்பர். ஸ்டீவன் ராட்னர்
இண்டர்நேஷனல் கமிட்டி ஆஃப் ரெட் கிராஸினுடைய ஆலோசகர். அதுமட்டுமல்லாமல்,
அவர் உலக அளவில் புகழப்படும் மனித உரிமைகள் வழக்குரைஞர். இவர்களை
நியமிக்கும் போது இலங்கை அரசை கேட்டுதான் பான் கீ மூன் நியமித்தார்.
அதுவரைக்கு அவருக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் குழு அறிக்கை வந்த
பிறகு, அதுகுறித்து அவர்கள் சொன்ன முதல் வாக்கியம் என்னவென்றால், இதுவொரு
பயன்றற அறிக்கை என்று. இலங்கை சர்வதேச அளவில் நிறைய ஒப்பந்தங்களில்
கையெழுத்திடவில்லை.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Img1110613053_1_2
FILE

இலங்கையில்
நடந்த போரில் தமிழர்கள் கொல்லப்பட்டது மட்டுமின்றி, அவர்கள் வாழ்ந்த
பகுதியில் 67 விழுக்காடு விவசாயம் குறைந்துள்ளது. மீன் பிடிப்பு 45
விழுக்காடு குறைந்துள்ளது. தமிழ் மக்கள் வாழ்ந்த இடங்களில். 50 லட்சம் பனை
மரங்களை வெட்டிப் போட்டிருக்கிறார்கள். இதைப்பற்றி இந்தக் குழு ஒன்றுமே
பேசவில்லை. அதனால் இது ஃபால்ஸ் ரிப்போர்ட். ஆனாலும் இந்த அறிக்கையை நாம்
ஏற்றுக்கொள்கிறோம். ஏனென்றால் இந்த மூன்று பேருடைய நேர்மைக்கு எதிராக
கேள்வி எழுப்ப முடியாது. இவர்கள் யாருடைய அழுத்தத்திலும் வேலை செய்யவில்லை.
அந்தப் பெருந்தன்மையை இலங்கை அரசு புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள்
தயாரித்த 122 பக்க அறிக்கை மார்ச் 31ஆம் தேதியே தயாராகிவிட்டது. ஆனால்
வெளியிட்டது ஏப்ரல் 26. தமிழகம் உட்பட இந்தியாவின் 5 மாநிலங்களில் தேர்தல்
முடிந்த நாள் ஏப்ரல் 25. தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த நாள் ஏப்ரல் 13.
இந்த அறிக்கை ஏப்ரல் 1ஆம் தேதி வெளி வந்திருந்தால் இங்கே உள்ள அரசு வெற்றி
பெறாது என்ற நம்பிக்கையில் உள்ளே வைக்கப்பட்டது. ஆனால், இங்கிருக்கும் சில
சகோதரர்கள் ஐ.நா. அறிக்கையை அறிக்கையை விட வேகமாக வேலை செய்வார்கள் என்று
அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.


avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Mon Jun 13, 2011 9:06 pm

இந்த மாதிரி ஏப்ரல் 26ஆம்
தேதி வெளியான அறிக்கையில் நிறைய விஷயங்களைப் பற்றி பேசுகிறார்கள்.
விடுதலைப் புலிகள் ஒரு வலுவான இயக்கம் என்று பாராட்டிப் பேசுகிறார்கள்.
ஆனால், இவர்கள் அதிலிருந்து ஒரு வார்த்தையை மட்டும் எடுத்து வலுவான இயக்கம்
என்று குறிப்பிடுகிறார்கள். அதனுடைய முழு வரியைப் பார்த்தால், தமிழ்
பகுதிகளில் இயங்கும் அமைப்புகளில் விடுதலைப் புலிகள் வலுவானவர்கள் என்று
குறிப்பிட்டுள்ளார்கள். இவர்கள் என்ன செய்தார்கள். அந்த ஒரு வார்த்தையை
மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டார்கள்.
அதுமட்டுமல்லாமல், மிகவும் ஒழுக்கமான அமைப்பு என்றும்
குறிப்பிட்டிருக்கிறார்கள். ராஜபக்சவை கேட்டாலும் இதைத்தான் சொல்வார்,
சோனியா காந்தியைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வார். உலகத்தில் யாருமே இதனை
மறுக்கமாட்டார்கள். அறிமுகப் பக்கத்தில்தான் இந்த வார்த்தையை அவர்கள்
உபயோகிக்கிறார்கள். இதை நாங்கள் சொல்லவில்லை, மற்றவர்கள் எழுதியிருப்பதை
நாங்கள் அடியிடுகிறோம் என்றுதான் கூறியிருக்கிறார்கள்.


இந்த
அறிக்கையை முதலில் வாசித்தது இவர்கள் கிடையாது, இந்தியாதான். அறிக்கை
வந்ததும் முதலில் அனுப்பியது மன்மோகன் சிங்கிற்கு. ஏனென்றால், அவர்களால்
அதற்கு பதில் கொடுக்க முடியவில்லை. பதில் கொடுக்க வேண்டியது இந்தியா என்று
சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்கள்! அந்த அறிக்கைக்கு இந்தியா இன்னமும்
அவர்களுக்கு பதில் கொடுக்கவில்லை. மன்மோகன் என்ன செய்தார், சிவ்சங்கர்
மேனனை அழைத்து பதில் தயார் செய்யுங்கள் என்று கொடுத்திருக்கிறார். இன்னமும்
பதில் தயாராகவில்லை. எப்படி தயார் செய்வது என்று தெரியவில்லை. ஏனென்றால்,
ராஜபக்சவிற்காக பதில் தயார் செய்வதா, இல்லை தமிழ்நாட்டில் உருவாகியுள்ள
புதிய சூழ்நிலையைப் பார்த்து தயார் செய்வதா என்ற புரியாத சூழ்நிலையில்
இந்தியா இருக்கிறது.


இதில்
இரண்டு முக்கியக் காரணங்களைப் பார்க்கிறார்கள். ஒன்று பயங்கரவாதத்திற்கு
எதிரான போர், மற்றொன்று இந்தியாவின் தலையீடு. இந்த அறிக்கையில் மனித
உரிமைகளைப் பற்றிப் பேசுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், இந்தப் போர்
நடந்த சமயத்தில் 66 மனித உரிமைப் போராளிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்
அல்லது காணாமல் போயிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், 2008ஆம் ஆண்டு,
செப்டம்பர் 8ஆம் தேதி பசில் ராஜபக்ச, கோத்தபய ராஜபக்சவுடன் சேர்ந்து ஒரு
அறிக்கையை விடுகிறார்கள். அங்கிருக்கும் ஐஎன்ஜிஓ, என்ஜிஓ, சர்வதேச தொண்டு
நிறுவனங்கள் எல்லாமே போர் நடக்கும் இடத்தை விட்டு வெளியே வரவேண்டும்.
அதன்பிறகுதான் ஐ.நா.வினுடைய உலக உணவு கழகத்தை தவிர மற்ற அனைவரும் வெளியே
வந்துவிடுகிறார்கள். செஞ்சிலுவை சங்கம் கூட வெளியே வந்துவிடுகிறது.


1858ஆம்
ஆண்டிலிருந்து உலகில் எங்கெங்கு போர் நடந்ததோ அங்கெல்லாம் இன்று வரைக்கும்
இருக்கக்கூடிய ஒரே அமைப்பு செஞ்சிலுவை சங்கம்தான். ஜெனீவா ஒப்பந்தப்படி,
யாரெல்லாம் இதில் கையெழுத்திட்டிருக்கிறார்களோ அந்த நாடுகளெல்லாம்
இவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும். ஆனால், அதற்கு அனுமதி கொடுக்காமல்
வெளியேற்றிய ஒரே நாடு இலங்கை. ஐசிஆர்சிஏ-வும் வெளியே வந்துவிட்டார்கள்.
வெளியே வந்துவிட்டு முல்லைத் தீவுப் பகுதியில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை
வெளியேற்றும் ஒரு வேலையை மட்டும் செய்து வந்தார்கள். இதே அறிக்கையில் என்ன
சொல்லியிருக்கிறது என்றால், 2009, ஜனவரி 24ஆம் தேதி ஐ.நா. சபை அலுவலகம்
என்று தெரிந்தும் அதன் மீது குண்டு வீசுகிறார்கள். ஆனாலும் வாயை மூடிக்
கொண்டு சும்மா இருந்தவர்கள் யாரென்றால், பான் கீ மூன் மற்றும் நம்முடைய
இந்திய சகோதரர்கள்தான். அலுவலகம் மீது குண்டு போட்டாலும் பரவாயில்லை.

ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Img1110613053_2_2
FILE

உணவு,
மருத்துவப் பொருட்கள் வைத்திருக்கும் மையத்திலும் குண்டு வீசுகிறார்கள்.
இதெல்லாம் அங்கிருந்த ஐ.நா. சபை அலுவலகத்தில் வேலை செய்தவர்கள் கொடுத்த
தகவல்கள். மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள். பொது மக்கள்,
போராளிகள் அல்ல. எங்களுக்கு உதவி செய்ய வந்தார்கள். அவர்களை குறிவைத்தும்
குண்டு போட்டது இலங்கை ராணுவம்தான். கடைசியாக இரண்டு ஐ.நா. அதிகாரிகள்
மட்டும் ஜனவரி 29ஆம் தேதி வரை அங்கு இருக்கிறார்கள். அதன்பிறகு அங்கு வாழ
முடியாத ஒரு சூழ்நிலை உருவாகிறது. இவர்களையும் வெளியே வரச்சொல்லி
விடுகிறார்கள். வெளியே வரும் போது அவர்கள் பார்த்த காட்சியைப் பற்றி
குறிப்பிடுகிறார்கள், எங்கு பார்த்தாலும் பிணங்கள், கை கால்கள் சிதறி
கிடக்கின்றன எல்லா இடங்களிலும். வரும் வழி முழுவதுமாக இப்படி இருக்கிறது.
இதனைப் பார்க்க முடியாமல் பச்சையாக எதையாவது பார்க்கலாம் என்று மேலே நோக்கி
மரங்களைப் பார்த்தால், குழந்தைகள் மரங்களில் சிதறிக்கிடக்கின்றன.
இதையெல்லாம் பார்த்துவிட்டு நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல்
ஓடிவந்தோம் என்று சொல்கிறார்கள்.
Babies blasted upon the Trees என்று சொல்கிறார்கள்.

இதுதவிர,
இந்தக் குழு அறிக்கையில், மருத்துவமனைகள் பற்றியும் விளக்கம்
கொடுத்துள்ளார்கள். ஒரு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. மருத்துவர்கள்
பயன்படுத்தும் மேசையில் எல்லாம் காயமடைந்தவர்கள் படுக்கவைக்க
வைத்திருந்தனர். மேசை மீது மட்டும் கிடையாது, மேசைக்கு கீழேயும் படுக்க
வைத்திருந்தார்கள். இப்படி முழுக்கவும் காயமடைந்தவர்கள், நடக்கக்கூட
இடமில்லை. வண்டி வரும் பாதைகளில் கூட பாதிக்கப்பட்டவர்கள்
படுக்ககவைக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு மருத்துவமனையை பார்த்து
பார்த்து பல்குழல் பீரங்கிகளை வைத்து தாக்கியுள்ளனர். இந்த பல்குழல்
பீரங்கிகள் ஒரே தடவையில் 40 எறிகணைகளை வீசும். இது 10 கி.மீ. தூரம் வரை
சென்று தாக்கும்.


avatar
alwin
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 32
இணைந்தது : 26/06/2009

Postalwin Mon Jun 13, 2011 9:09 pm

மேலும் என்ன
சொல்கிறார்களென்றால், இதெல்லாம் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு
வலையப் பகுதிகள் ஆகும். அங்கு எப்படி வரவழைக்கிறார்கள் என்றால், இந்த
இடத்திற்கு வாருங்கள், ஒரு துன்பமும் வராது, காப்பற்றப்படுவீர்கள்
என்றுதான் வரச் சொல்கிறார்கள். ஆனால் அங்கு மக்கள் வந்த பிறகு பல்குழல்
பீரங்கிகளை வைத்து பார்த்து பார்த்து சுட்டு அழிக்கிறார்கள். இவர்கள் எந்த
இடத்திற்குப் போகச் சொன்னார்களே, அதே இடத்தை குறிவைத்து தாக்கி
அழிக்கிறார்கள். இதுபோல மருத்துவமனைகளை, தார் சாலைகளை, பள்ளிகள்,
கல்லூரிகளை குறிவைத்து தாக்குகிறார்கள். தவிர, கோயில்கள், சர்ச்கள் என்று
பாதுகாப்பு வலையம் என்று எங்கெல்லாம் போகச் சொன்னார்களோ அங்கெல்லாம் மக்கள்
வந்ததும் தாக்கினார்கள். இதுவும் ஒரு வகையான இனப்படுகொலைதான்.


1,300 போராளிகளைத்தான் கொன்றோம் என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் ஐ.சி.ஆர்.சி. என்ன சொல்கிறதென்றால், we evacuated 14,000 wounded civilians என்ற
வார்த்தையை பயன்படுத்துகிறார்கள். ஐசிஆர்சி என்பது நம்முடைய அரசு
மருத்துவமனை போன்று அப்படியே சேர்த்துக் கொள்வது கிடையாது. அவர்கள்
ஒவ்வொருவரையும் பதிவு செய்து அனுமதிப்பார்கள். எல்லா விவரத்தையும்
கேட்டுதான் சேர்ப்பார்கள். அந்த ஐ.சி.ஆர்.சி. சொல்கிறது, 14,000 பேருக்கு
நாங்கள் சிகிச்சை அளித்துள்ளோம். இந்த 14,000 பேரும் பொதுமக்கள், அனைவரும்
பாதுகாப்பு வலையப் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று சொல்கிறது. அதிலும்,
அதில் நிறைய பேர் கை, கால் இல்லாமல் வந்தார்கள் என்று
குறிப்பிடுகிறார்கள். அவர்களிடம் நாங்கள் விசாரித்தோம், எப்படி ஆபரேஷன்
நடந்தது என்று. வந்திருந்தவர்களில் 5,000 பேருக்கு கை, கால்கள்
போயிருந்தது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், மயக்க மருந்து
கொடுக்காமல் அறுவை சிகிச்சை செய்து கை, கால்களை அகற்றினார்கள். கையுறைகள்
கூட கிடையாது. ஆரம்ப காலத்தில் இருந்த மயக்க மருந்தை தண்ணீரில் கலந்து
கொடுத்திருக்கிறார்கள் கொஞ்சம் பேருக்கு. அதுமட்டுமல்லாமல், அறுவை கிகிச்சை
எங்கு நடைபெற்றிருக்கிறது? ஆபரேஷன் தியேட்டர் கிடையாது, மணல் மீது கடத்தி
அறுவை சிகிச்சை நடத்தியிருக்கிறார்கள். பேண்ட் எய்ட் இல்லாததால் பெண்கள்
கட்டியிருந்த சேலையைக் கிழித்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.

மே
13ஆம் தேதி ஐ.நா. சபையில் இருந்து வந்த அறிக்கை படி, இந்தப் போர் நடக்கும்
பகுதியில் ஒரு லட்சம் மக்கள் இருந்தார்கள். ஆனால், இலங்கை அரசு வெறும்
10,000 மக்கள்தான் இருந்தார்கள் என்று சொல்கிறது. அந்த நேரத்தில் இந்திய
அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, ஜனவரி மாதத்தில் இருந்தே 70,000
பேர்தான் இருந்தார்கள் என்று. இந்தப் போர் சூழ்நிலை எப்படி இருக்கிறது
என்று ரிபோர்ட்டில் எழுதினார்கள், ரெமினசன்
ஆ·ப்
ஹெல் என்று. நரகம் என்பது எப்படி இருக்கும் என்று கற்பனை செய்கிறீர்களோ
அப்படி இருக்கிறது இலங்கைப் போர்ச் சூழல். இதைவிட ஒரு நல்ல ரிப்போர்ட் எழுத
முடியுமா என்று தெரியவில்லை. இதே ரிப்போர்ட்டை ஐ.சி.ஆர்.சி. என்ன
சொல்கிறதென்றால், unimaginable human catastrophy. நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மனித இழப்பு என்று குறிப்பிடுகிறார்கள்.
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை இலங்கை அரசால் ஏற்க முடியாத உண்மைகளை பேசுகிறது: பேராசிரியர் பால் நியூமேன். Img1110613053_3_1
FILE

இதேபோல, ஐ.நா.வின் உலக உணவுத் திட்ட அமைப்பு (WFP)
அறிக்கை என்ன சொல்கிறதென்றால், 2008இல் பாதுகாப்பு வளையப் பகுதியில்
ஏறக்குறைய 4.2 லட்சம் மக்கள் இருக்கிறார்கள். அதில் 70,000 குழந்தைகள்
போர்ப் பிரதேசத்தில் இருக்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால்,
இலங்கை அரசு என்ன சொல்கிறதென்றால், 70,000 குழந்தைகள் இருக்கலாம். ஆனால்
மொத்தமாக 1,00,000 மக்கள்தான் இருக்கிறார்கள். அதனால் ஒரு லட்சம்
மக்களுக்குத் தேவையான உணவைத்தான் எடுத்துக் கொண்டு போகவேண்டும் என்று
சொல்லி, 4.2 லட்சம் மக்கள் இருந்த இடத்திற்கு உணவை அனுமதித்தார்கள்.
இதனால், அங்கு உள்ளவர்களுக்கு 25 விழுக்காடு உணவுதான் கிடைக்கும். அதாவது 4
இட்லிக்கு ஒரு இட்லிதான் சாப்பிட்டுவிட்டு உயிர் வாழ வேண்டும். செப்டம்பர்
2008இல் இருந்து மே 2009 வரை இதுதான் அங்கிருந்த நிலை. கடந்த ஆண்டு
செப்டம்பர் மாதம் மன்னார் ஆயரிடம் எப்படி நிலைமை இருக்கிறது என்று நான்
கேட்டேன். அதற்கு அவர், My people are walking skeleton. என் மக்கள் நடக்கும் எலும்புக் கூடுகளாக இருக்கிறார்கள் என்று கூறினார்.

இந்த
மாதிரி அரசாங்கம் எதற்காக குறைத்து மதிப்பீடு செய்தது என்றால், பட்டினிப்
போட்டு சாகடிப்பது மட்டுமல்ல, 8 மாதமாக இருக்கும் பெண்களுக்குப் பிறக்கப்
போகும் குழந்தைகளும், சத்து குறைந்து பிறப்பார்கள், இனி வாழ்நாள் முழுவதும்
அவர்கள் பாதிக்கப்படுவார்கள். மேலும் இந்த அறிக்கையில், 3 மருத்துவர்கள்
அங்கு இருந்தார்கள். அவர்கள், மயக்க (அனிஸ்திடிக்) மருந்து, இரத்தப் பைகளை
கொடுங்கள் என்று கேட்டார்கள். ஆனால் அரசாங்கம் அனுப்பி வைத்தது
பாராசிட்டாமல் எனப்படும் தலைவலி மாத்திரைகளை! அங்கிருந்த மூன்று
மருத்துவர்களுக்கு சத்தியமூர்த்தி என்பவர் தலைமை வகித்தார். இந்த மூன்று
மருத்துவர்களையும், போர் முடிந்த பிறகு 6 மாதம் உள்ளே வைத்து விசாரணை
நடத்தி, தவறான முறையில் விசாரணை நடத்தி, நீ செய்தது தப்பு என்கிறார்கள்.


இதுமட்டுமல்லாமல்,
பெண்களை எப்படி நடத்தினார்கள். கற்பழிப்பு என்பது தற்போது போரின் ஒரு
ஆயுதம் என்பதைப் போல செய்திருக்கிறார்கள். இதற்கு முன்னால்,
போஸ்னியாவில்தான் கற்பழிப்பை போரின் ஒரு ஆயுதமாகப்
பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். அதேபேல,
இலங்கையில் நடந்திருக்கிறது, தற்பொழுது நடந்துகொண்டுதான் இருக்கிறது.


இதே நேரத்தில் இந்தக் குழு கேட்டிருப்பது என்னவென்றால், Sovereign right to every country to end terrorism. But the way had not justified. கடைபிடித்த
மார்க்கம், வழி சரியில்லை என்று சொல்கிறது ஐ.நா.அறிக்கை. இதுதவிர, எந்தப்
போரானாலும் மக்களை இலக்காக வைத்து தாக்கக்கூடாது என்று சொல்கிறது இந்தக்
குழு. ஆனால், இந்தப் போரில் நடந்தது என்னவென்றால், மக்களை இலக்காக
வைத்திருக்கிறீர்கள், பார்த்து பார்த்து குண்டு வீசியிருக்கிறீர்கள்.
மக்களுக்கும் போராளிகளுக்கும் வித்தியாசம் தெரியாமல்
நடத்தியிருக்கிறீர்கள். பொதுமக்கள் வாழும் பகுதிகள் தெரிந்தும் அவர்களை
பசியிலும், பட்டினியிலும் வைத்திருந்திருக்கிறீர்கள். உணவு, தண்ணீர்,
மருத்துவம் எதுவும் சென்று சேராமல் தடுத்திருக்கிறீர்கள். கடைசி 9 மாதமாக
இதனை கடைபிடித்திருக்கிறீர்கள்.

இதுபோல
நிறைய விஷயங்கள் இருக்கிறது இந்த அறிக்கையில், பேசினால் பேசிக்கொண்டே
போகலாம். அது கூறும் உண்மைகள் இலங்கை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது,
அதனால் எதிர்க்கிறது. ஆனால் அது கூறும் உண்மை தமிழர்கள் நியாயத்தை உலகின்
மனசாட்சிக்கு கொண்டு சென்றுள்ளது.
நன்றி: வெப்துனியா


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jun 13, 2011 9:47 pm

நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக