புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
7 Posts - 64%
heezulia
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
8 Posts - 2%
prajai
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_m10முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும்


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 14, 2011 11:29 am

சத்தமின்றி நமது மொத்த உடலையும் பாதுகாப்பது முதுகுதான் என்றாலும், அதில் வரும் பிரச்சினைகளை நாம் மறந்தே ஒதுக்கி விடுகிறோம். மற்ற நோய்களை விட அதிகமான பாதிப்பை தருவது முதுகு வலிதான்! இன்றைக்கு எல்லாமே சேரில் உட்கார்ந்து செய்யும் வேலையாகிப் போனதால், அனைவருக்குமே முதுகு வலி என்பது அழையா விருந்தாளி தான் என்கிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.



முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌ம்:

ம‌னிதனு‌க்கு ந‌ம்‌பி‌க்கை‌க்கு அடு‌த்த படியாக முதுகெலு‌ம்பு ‌மிகவு‌ம் அவ‌சியமா‌கிறது. ஒருவ‌ன் ‌நி‌மி‌ர்‌ந்து நட‌ப்பத‌ற்கே முதுகெலு‌ம்புதா‌ன் காரணமாக அமை‌கிறது.

*

ம‌னித‌னி‌ன் ‌பி‌ன்புற இடு‌ப்‌பி‌ல் துவ‌ங்‌கி மே‌ற்புற‌ம் முகுள‌ம் வரையான த‌ண்டுவட‌ம் ஆ‌ற்று‌ம் ப‌ணி அ‌ரியது.

*

மூளை‌யி‌ன் செயலை‌ப் போலவே இத‌ன் செய‌ல்களு‌ம் மு‌க்‌கியமானவை. இத‌ன் மே‌ல் முனையான முகுள‌ம் உண‌ர்வுகளை கட‌த்துவ‌திலு‌ம் நர‌ம்பு ம‌ண்டல செய‌ல்பா‌ட்டிலு‌ம் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கிறது.

*

த‌ண்டுவட‌ம் இ‌ல்லா‌வி‌‌ட்டா‌ல் ம‌னித‌ன் துவ‌ண்டு போ‌ய்‌த்தா‌ன் இரு‌ப்பா‌ன். த‌ண்டுவட‌ம் செய‌ல் இழ‌ந்தாலு‌ம் பெரு‌ம்பாலான ப‌ணிக‌ள் பா‌‌தி‌க்கு‌ம்.

*

மூளை‌யி‌ன் க‌ட்டளைகளை‌ப் பெ‌ற்று உண‌ர்வுகளை‌க் கட‌த்து‌ம் ப‌ணியை முதுகெலு‌ம்புக‌ள்‌ ‌மிக‌ச் ‌சிற‌ப்பாக செ‌ய்‌கி‌ன்றன.

*

முதுகெலு‌ம்‌பி‌ல் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்ப‌ட்டா‌ல் கைகா‌ல்களை அசை‌க்க முடியாத ஜட ‌நிலையை ம‌னித‌ன் அடையு‌ம் வா‌ய்‌ப்பு‌ம் உ‌ள்ளது.

***







புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 14, 2011 11:32 am

முதுகுவலியைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்:

by- டாக்டர் ஆர். குமரேசன்




பரவலாக அதிகரித்து வரும் நோய் முதுகுவலி. . . தினம் தினம் இது தீராப்பிரச்சினை! டூ வீலர் ஓட்டுபவர்கள். . . ஓய்வாக டி.வி. பார்ப்பவர்கள். . . கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள். . . வீட்டு வேலை செய்யும் பெண்கள். . . ஏன் `ஹோம் ஒர்க்' செய்யும் குழந்தைகள் கூட முதுகுவலி என்று கூறுகின்றனர்.

*

முதுகு வலிக்கு ஏதேனும் தைலத்தையோ வலி நிவாரணிகளையோ தேய்த்தால் அப்போதைக்கு வலி போய்விடும். ஆனால். . . அதன் அடிப்படைக் காரணம் என்ன? ஏன் வருகிறது. அதற்கு நிரந்தரத் தீர்வு என்ன? என்பது பற்றி எல்லாம் தீவிரமாக ஆராய்ந்து சிகிச்சை எடுக்க வேண்டும்.


சிக்கல் இல்லாத. . . நிரந்தரத் தீர்வுதரக் கூடிய சிகிச்சை எடுக்கவேண்டும்.

**

எதை முதுகு வலி என்கிறோம்?

மருத்துவ ரீதியாகச் சொல்வதனால் முதுகுத் தண்டின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் ஓர் அசௌகரியம் தான் வலியாகிறது.


இது ஒரு வியாதியல்ல. . . ஆனால் வெளிப்படாமல் அமுங்கியுள்ள ஒரு காரணத்தின் அறிகுறி.


***


முதுகுவலியின் மூல காரணத்தை ஆராய்வோம்:


1. இடுப்பின் வழியாக உச்சந்தலை வரை செல்லும் தண்டுவடம் 24 எலும்புகளால் ஆனது. ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது இது.

*

2. முதுகெலும்பின் முதல் ஏழு எலும்புகள் மண்டை ஓட்டின் கீழ்ப்புறத்தில் உள்ள கழுத்தில் அமைந்துள்ளன. இவை தலையை விரிவான அளவில் சுழற்றுவதற்கு ஏற்றவாறு திருப்ப அனுமதிக்கின்றன.

*

3. கழுத்தெலும்பின் கீழே உள்ளது நடுமுதுகு எலும்புகள் (ஆனை-bடினல ளுயீiநே) இவை 12 ஆகும். விலா எலும்புகள் இவற்றோடு இணைந்துள்ளன. இவை உண்மையில் அசையாதவை தான். எனினும் இந்த நிலைத்த தன்மை கழுத்தின் கூடுதல் அசைவிற்கு ஊக்கமளிக்கிறது.

*

4. அதற்கும் கீழே ஐந்து பெரிய எலும்புகள் அடிமுதுகு எலும்பின் (டுரஅயெச ளுயீiநே) பகுதியாக ஐந்து பெரிய எலும்புகள் உள்ளன. இந்தப்பகுதி தான் பெரும்பாலான முதுகுவலித் தொல்லைகளின் காரணியாகும்.

*

5. இந்த அடிமுதுகுப் பகுதி திடீர் அசைவிற்கும் உடல் கனம் அல்லது பளுச் சுமையின் அழுத்தத்திற்கும் ஆளாகக் கூடியது. முதுகெலும்புக்கும் முதுகுத் தசைகளுக்கும் மாமூலாக ஏராளமான அழுத்தங்களை இப்பகுதியே உருவாக்குகிறது.



***



முதுகுவலி எந்த வயதில் வரும்?


வாழ்வில் 5-ல் 3 பேர் மோசமான முதுகுவலியால் பாதிக்கப்படுகிறார்கள்.

சமீபத்திய சர்வே (ஆய்வுக் கண்ணோட்டம்) ஒன்றின்படி வேலையில் இருந்து விடுபடுவதற்கு முக்கிய காரணமாகக் காட்டப்படுவது முதுகு வலி தான்.

*

இளமைப் பருவத்தில் இது அவ்வளவு கடுமையாக இருப்பதில்லை. சீக்கிரம் போய்விடுகிறது. ஆனால் முதுகு வலி அடிக்கடி வருமானால் கவனிக்காமல் விடப்பட்டால் ஒருவரது முப்பதாவது மற்றும் நாற்பதாவது வயதுகளில் பெரிய பிரச்னை ஆகிவிடும்.

*

முதுமைப்பருவத்தில் செயல்பாடு இழத்தல், பெருமளவில் நேரிடும். இந்தியாவில் பள்ளிக் குழந்தைகள் கனமான புத்தக மூட்டைகளை முதுகில் சுமந்து செல்வதால் முதுகு வலி அதிகரித்து வருவதைக் கண்டுபிடித்துள்ளனர்.

***

முதுகுவலி எப்படி - ஏன் வருகிறது?


நவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (ளுவசநளள) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.

*

எதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது.

*

முதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை.

*

திடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும்.

*

சிலரது பணிகள் (வேலை நிலை) முதுகுவலி வரக் காரணமாகி விடுகின்றன. அதுவும் முதுகிற்கு அதிகத் தொல்லை தரும் பணி செய்பவர்களுக்கே இந்த வலி வந்துவிடும்.

*

உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், டைப்பிஸ்டுகள், கீ-போர்டு ஆபரேட்டர்கள், போர்ட்டர்கள் முதலியோரைக் கூறலாம்.

*

தொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பைத் தாங்கும் தசைகள் பலவீனமுற வாய்ப்பளிக்கின்றன.

*

பொருத்தமற்ற நாற்காலியில் அமர்வதில் இருந்து இசகு பிசகான முறையில் உட்கார்ந்தே நின்ற படியோ (உதாரணங்கள் : பீடி சுற்றுவோர், கண்டக்டர்கள்) வேலை செய்வது வரை முதுகு வலி வரக் காரணங்களாகிவிடும்.

***

எப்படி வெளிப்படுகிறது?

முதலித் தசைத்துடிப்பு லேசான வலி தென்படும். இது தாங்க முடியாத நிலை வருவதற்கு முந்திய கட்டம்.

வழக்கத்துக்கு மாறான ஒரு கடினமான வேலையில் முதுகுவலியின் தாக்குதல் முழு வேகத்தில் இருக்கும்போது வலி மிகவும் கடுமையாக இருக்கும்.

*

நிற்கிற இடத்திலேயே உறைந்துவிட்டது போல் நகரவே முடியாத நிலை ஏற்படும்.

*

உடலே வித்தியாசமான முறையில் வளைந்து முறுக்கிக் கொண்டது போல் தோற்றமளிக்கும். இந்த நிலை இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கலாம்.

*

முதுகின் கீழ்ப்பகுதியில் தான் முதலில் இது தோன்றும்.

முதுகின் மேற்பகுதி மரத்துப்போதல், பளிச் பளிச்சென்று விட்டுவிட்டு வலித்தல் காணப்படும்.


***





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 14, 2011 11:32 am



திருகுவலியாகும் முதுகுவலி:



1. அதிகநேரம் சேரில் உட்கார்ந்திருப்பவர்கள், அதிகம் பயணிப்பவர்கள், ஓயாமல் வீட்டு வேலை செய்யும் பெண்கள், வகுப்பறையில் நிமிர்ந்து உட்கார்ந்திருக்கும் குழந்தைகள், முதியவர்கள் என வயது வித்தியாசமின்றி தாக்கும் நோய்களில் முதலிடம் வகிப்பதும் முதுகுவலி தான்.

*

2. முதுகு விஷயத்தில் அலட்சியம் காட்டினால் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

*

3. தோள்பட்டை, மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாபகுதி தசைகளும் முதுகோடு இணைந் திருக்கின்றன. அரக்கப் பரக்க வேலை செய்யும் போது இந்த தசைகள் இறுகி விடுகின்றன.

*

4. வேலை முடிந்து ரிலாக்ஸ் ஆகும் போது இவை இறுக்கம் தளர்ந்து இயல்பு நிலைக்கு திரும்பப் பார்க்கின்றன. இதன் விளைவே முதுகு வலி.

*

5. முதுகுவலி வந்துவிட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அதன் தாக்கமும் பல விதத்தில் இருக்கும். ஆதலால் சரியான நிபுணர்களிடம் சென்று, சிகிச்சை பெறு வதே சிறந்த வழி.

*

6. மேலும் வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது, கவுன்சிலிங் ஆகியவைதான் இந்த முதுகு வலிக்கான சிகிச்சை. அதே போல் அளவுக்கு மீறிய வேலைகளைச் சுமந்து கொண்டு மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறவர்களுக்கும் முதுகு வலி வரும்.

***

சில எளிய வழிகள்:


1. முதுகுவலியில் இருந்து தப்பிக்க சில எளிய வழிகளும் உண்டு.

*

2. மல்லாந்து, கவிழ்ந்து படுக்காமல் ஒருபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. முழங்காலை வளைத்து முன்னே கொண்டு வரவும். சிலருக்கு குப்புறப்படுத்தால் தான் தூக்கம் வரும்.

*

3. அப்படி படுக்கும்போது தலையணையை தலைக்கு வைக்காமல், இடுப்புக்கு கீழே வைத்து படுப்பது சிறந்தது. அதிக கடினமாகவும், அதிக மென்மையாகவும் இல்லாத மெத்தையை பயன்படுத்துவது நல்லது.

*

4. முதுகுவலி ஏற்படாமல் இருக்க, உட்காருவது மிகவும் முக்கியம். நாற்காலியில் உட்காரும்போது முதுகு நன்றாக நாற்காலியோடு ஒட்டும்படி அமரவும்.

*

5. கீழே சின்னதாக ஒரு பலகை போட்டு அதன்மீது இரண்டு கால்களையும் வைக்கவும். இப்படி செய்வதன் மூலம் முழங்கால் மூட்டு இடுப்பை விட உயரமான நிலையில் இருக்கும்.

*

6. உட்காருவதில் இதுதான் சிறந்த முறை. தொடர்ந்து பல மணி நேரம் உட்காராமல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை எழுந்து சில நிமிடங்கள் நடப்பது நல்லது.

*

7. எல்லாப் பொருட்களையும் மேஜையில் எட்டக்கூடிய இடத்தில் வைக்கவும். இடுப்பை அடிக்கடி திருப்ப வேண்டாம். அப்படி ஒரு சூழல் அமைந்தால், உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களையும் அதாவது உடம்பு முழுவதையும் திருப்பவும்.

*

8. அதேபோல் கனமான பொருட்களை தூக்கும்போது இடுப்பை வளைக்காமல் தூக்கவும். எப்போதும் தலையை நிமிர்த்தி நடக்க வேண்டும். நடக்கும்போது கால் விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

*

9. மிருதுவான, மெல்லிய குஷன்களை கொண்ட காலணிகளை அணிவது நல்லது. மிகவும் உயரமான ஹீல்ஸ் காலணி முதுகுவலியை உண்டாக்கும்.

*

10. நீண்ட நேரம் நிற்பது கூடாது. அப்படியே நிற்க நேர்ந்தாலும், பாதங்களில் ஒன்றை மற்றதை விட உயரமாக வைக்கவும். அடிக்கடி நிற்கும் நிலையை மாற்றவும். கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். சாதாரண முதுகுவலிக்கு ஓய்வும், உடற்பயிற்சியும்தான் தீர்வு.




***

thanks webulagam
THANKS மலை மலர்



http://azhkadalkalangiyam.blogspot.com/2010/10/blog-post_7354.html




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Jun 14, 2011 12:06 pm

பயனுள்ள பதிவு அண்ணா



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 14, 2011 12:07 pm

நன்றி sk அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 14, 2011 12:11 pm

பயனுள்ள தொகுப்பு தாமு

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 14, 2011 12:14 pm

முதுகெலு‌ப்‌பி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌மும் அதன் வலியும் 224747944



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jun 14, 2011 12:16 pm

நன்றி ராஜா & தோழி அன்பு மலர்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக