புதிய பதிவுகள்
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 1:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
48 Posts - 34%
i6appar
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
63 Posts - 45%
ayyasamy ram
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
48 Posts - 34%
i6appar
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_m10கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Fri Jun 03, 2011 10:24 am

கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Kalasar
அன்பு ஈகரை உள்ளங்களுக்கு, இது ஒரு சஸ்பென்ஸ் தொடர் கதை..
இதன் முதல் பகுதியை இங்கு துவங்குகிறேன்.

ரு கிராமத்தில்...

சுள்ளென காலை வெயில்... விரிசல் விழுந்த பாலத்தின் கட்டையில் ஆடு மேய்க்கும் சிறுவன் கையில் புளி கொட்டைகளை வைத்துகொண்டு தனக்குத் தானே ஒத்தையா ரெட்டையா விளையாடி கொண்டிருந்தான்... தொலைவில் புளுதியை கிளப்பிக்கொண்டு தார்சாலையில் ஏதோ ஒன்று வருவது தெரிகிறது...
குண்டும் குழியுமான அந்த சாலையில் பேருந்துகள் வருவதே நாளொன்றுக்கு இருமுறைதான்... செழுமையான கிராமம்தான் வேடுவமழுதூர்... இருந்தாலும் போக்குவரத்துக்கு பஞ்சம்தான்.
புளுதியின் அளவை அதிகரித்துக் கொண்டு முடிந்த அளவு வேகமாக தன்னை நோக்கி வருவது என்னவென்று வியப்புடன் பார்க்கிறான் அந்த சிறுவன்.. தன்னை நெருங்கியதும் புளுதியை விளக்கி ஆவலுடன் பார்க்கிறான். ஒரு சிகப்பு நிறக்கார் அவனை கடந்து கார் தார்சாலைகளின் நெளிவுகளில் வளைந்து சென்று ஊருக்குள் நுழைகிறது...

பெரிய வீடு என்று சொல்லுமளவிற்கு இல்லாவிடினும் அழகாய் வடிவமைக்கப்பட்ட ஒரு வீட்டின் வாசலில் கார் வந்து நிற்கிறது. வீட்டின் வாசலில் முழுவதும் மர நிழல்தான். கார் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வருகிறாள் ஒரு 60 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்... காரின் கதவு திறக்கப்படுகிறது... உள்ளிருந்து ஒரு இளைஞன் இறங்குகிறான்.

பெயர் ருத்ரன், நல்ல நிறம், நல்ல உயரம், முகத்தில் மட்டும் சோகம் தவழ்ந்துகொண்டிருந்தது... புன்னகையுடன் அவனை நோக்கி வருகிறாள் அந்தப் பெண்... காரிலிருந்து இறங்கிய இளைஞன் காரின் மற்றொரு கதவினை திறக்கிறான்.. உள்ளிருந்து வெள்ளைவெளேரென்று ஒரு பாக்சர் நாய் இறங்குகிறது...

சற்று தலுதலுத்த குரலில் அந்த பெண் இளைஞனை நோக்கி...

"வாப்பா வா...கல்லுகிடக்கு பார்த்து வா... நாய்யோடவா வந்த? வண்டி அங்கையே நிற்கட்டும்பா... மெதுவா வா... அப்பா காரியத்துக்கு வரலாம்னுதான் இருந்தேன், தேவிகா பிரசவ நேரமா இருந்ததால வரமுடியலை... ஒண்ணும் மனசுல வைச்சுக்காதப்பா... கேதத்துக்கு வந்த அன்னிக்கே புள்ள முகத்த பார்க்க முடியலை... ஆத்தாவ இழந்த புள்ளைக்கு ஒத்த மரமா இருந்தாலும் பரவாயில்லைனு ஒவ்வொரு விஷயமும் உனக்கு பார்த்து பார்த்து செஞ்சான் உங்கப்பன், கடைசில இப்டி விபதுல கெடந்து சாவுவானு யாரு எதிர் பார்த்தா?..."

ராத்திரியானா உங்கப்பன் வந்து அக்கா... அக்கானு கூப்பிடுற மாதிரியே இருக்கு..."

அவள் பேசிக்கொண்டிருந்த போதே நாய் அவளிடம் குழைந்து குழைந்து உரசி தன் அன்பை வெளிப்படுத்தியது...

"சரி விடுங்க அத்தை ஊர்ல இருந்தா மனசுக்கு ஒரு மாதிரி இருக்கு... கொஞ்ச நாள் இங்க வந்து இருக்கலாம்னு வந்தேன்... அப்பாவ தவிர வேற எதுவும் மனசுல நிக்கலை... எப்பவும் அவர் நினைப்பாவே இருக்கு... கொஞ்ச நாள் நம்ம ஊர்ல இருந்தா மனசுக்கு கொஞ்சம் இதமா இருக்கும்னு தோணுச்சு..."

நாயை பிடித்து ஒரு ஓரமாய் கட்டினால் அந்த பெண்...

நாயை பார்த்துக்கொண்டே அந்த இளைஞனிடம் "தோனி நல்லா வளந்துட்டான்ல" என்று கேட்டால்.

"அத்தை அது தோனி இல்லை Danny"

"என்னமோப்பா நம்ம ஊரு நாய்களுக்கு எப்பவுமே பேரு மணி, ராஜாதான், நீ சொல்ற பேரு என் வாய்லயே வரமாட்டேங்குது... நான் தோணினே கூப்பிடுறேன்"

இருவரும் சிறிது சிரித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தனர்...

இரவு மணி 7...

கொல்லையில் உள்ள தோப்பில் tube light வெளிச்சத்தில் 7 சிறுவர்களுடன் தன்னை மறந்து விளையாடி கொண்டிருந்தான் ருத்ரன். அவர்களுக்கு மேஜிக் செய்து காட்டுவதும், அவர்களுக்கு சிறு விளையாட்டு போட்டிகள் வைத்து வெற்றி பெற்ற சிறுவர்களுக்கு சாக்லேட் கொடுத்து சந்தோஷப்படுத்துவதுமாக தன் துயரத்தை சற்று மறந்திருந்தான்..

அப்போது தொலைவில் ஒரு பெரிய ஒளி தெரிந்தது... உற்று நோக்கினால் அங்கு நெருப்பு கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பது ருத்ரனுக்கு விளங்கியது... ருத்ரன் குழந்தைகளிடம் "டாய் என்னடா பசங்களா அது நெருப்பு மாதிரி இருக்கு" என்று கேட்டான்...

சிறுவர்களில் ஒருவன் "அண்ணே அது கலசர் கோவில் ஜோதினே, தினமும் ராத்திரி 7 மணிக்கு தானா எரியும்"

ருத்ரன்: "கலசர் கோவிலா?"
சிறுவன்: "ம்... நாளைக்கு காலைல போயி பார்போம்ணே, நான் கூட்டிட்டு போறேன்"

ருத்ரன்: "இப்ப போயி பார்க்க முடியாதா?"
சிறுவன்: "காட்டுக்குள்ளதாணே போகணும், கரடு முரடா இருக்கும், இப்போ போகமுடியாது, அது மட்டுமில்லை அந்திசாஞ்சா எங்கப்பாவே அங்க போக பயப்படுவார் தெரியுமா?"

ருத்ரன்: "உங்கப்பா பயந்தாங்குலியா இருப்பாரு போல"
சிறுவன்: "அதெல்லாம் இல்லையே, எங்கப்பா மட்டும் இல்லை ராத்திரி யாருமே அங்க போக மாட்டாங்க, யாராளையும் அங்க போக முடியாது தெரியுமா?"

ருத்ரன்: விளையாட்டாக "சரி நான் போயி அந்த கோவிலை தொட்டுட்டு வந்தா என்ன தருவிங்க? என்ன பந்தயம் வைச்சுக்கலாம்?"
சிறுவர்கள்: "5 ரூபா", "ஒரு கரும்பு", "ஒரு கல்கோனா"
ருத்ரன்: "சரி அதை வந்து பார்துக்கலாம், முதல்ல அண்ணன் போயி அந்த கோவிலை பார்த்துட்டு வரேன்"

சிறுமி ஒருவள்: "ஐயையோ இருங்க இருங்க உங்களை பாட்டிட்ட சொல்றேன், அங்க போகதிங்கண்ணே"
ருத்ரன்: "ஹேய் அத்தைடலாம் சொல்லக்கூடாது அண்ணன் தனியா போய்ட்டு வந்து நான் யாருனு உங்களுக்கு காற்றேன்" விளையாட்டாக சொல்லிவிட்டு கையில் இருக்கும் Torch lightஐ எடுத்துக் கொண்டு கிளம்பினான்...

இருட்டும் பாதையும் சற்று பயமுறுத்தவே Dannyயையும் கூட அழைத்துக் கொண்டு புறப்படுகிறான்...

ருத்ரன்: "ஹேய் Danny Danny எங்க ஒடுற? மெதுவாபோ மெதுவாபோ"...

டேனியும் ருத்ரனும் அந்த அடர்ந்த காட்டிருக்குள் நுழையத் துவங்கினார்கள்.

கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 White_boxer_dog_h03

தொடரும்....


கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Boxrun3
இத்தொடரை பற்றிய உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன... தங்கள் விமர்சனங்களை அனுப்ப வேண்டிய முகவரி..
http://www.eegarai.net/t60833-1 கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 224747944


கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 2


கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Kalasar

இதன் இரண்டாம் பகுதியை இங்கு தொடர்கிறேன்.



கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Dark-forest-night-image-31002



னது பயணத்தை டேனியுடன் தொடர்ந்த ருத்ரன் காட்டிற்குள் அந்த கொழுந்து விட்டெரியும் ஜோதியின் ஒளியை நோக்கி சிறிது தூரம் நடக்கிறான்..

அவன் மனதில் "அத்தையிடமும் கூறவில்லை, தனியாக வருகிறோம், செல் போனும் கொண்டு வரவில்லை, பாதையும் சரியாக இல்லை.. திரும்பிவிடுவோமா???" என்ற எண்ணம் மெலிதாய் தோன்றுகிறது...

பறவைகளின் சத்தமும், பூச்சிகளின் சத்தமும் அவன் பயணதிற்கு துணையாய் தொடர்ந்து கொண்டே வந்தன...

சிறிது நேர பயணதிற்கு பிறகு ஒரு சிறிய நீரோடை பாயும் சத்தம் அவன் காதில் கேட்கிறது...
"இந்தக் காட்டிற்குள் நீரோடை உள்ளதா!!!" சிந்தனையுடன் தொடர்கிறான் ருத்ரன்...

காட்டில் பயணம், இலைகளின் இடுக்கில் புகுந்த நிலவொளி தரையில் சிந்தி சிதறிய வண்ணம் விரவிய காட்சி, பறவைகளின் கூக்குரல், நீரோடையின் சலசலப்பு இவை ருத்ரனுக்கு ஒரு புதிய ஸ்வாரஸ்யத்தை ஏற்படுத்தின...

பயத்தின் காரணமாய் நடையின் வேகம் குறைந்தாலும் ஸ்வாரஸ்யம் அவன் கைகளை பிடித்து இழுத்துச் செல்வதை உணர்ந்தான்...

கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Darkforest

சற்று தொலைவில் கூட்டம் கூட்டமாய் தன்னை நோக்கி யாரோ வருவது போன்ற சத்தம் கேட்டு திடுக்கிடும் ருத்ரன் டேனியின் சங்கிலியை இறுக பிடித்துக் கொண்டு வெறித்து நோக்குகிறான், சத்தம் தன்னை சுற்றி நாற்பக்கமும் எழவே சுற்றி முற்றி பார்த்தபடி பதற்றதுடன் நடையின் வேகத்தை அதிகரிக்கிறான்.

திடீரென்று டேனி மிகவும் ஆக்ரோஷதுடன் சங்கிலிக்கு அடங்காமல் வெறித்து பாய்கிறது, திடீரென்று இழுக்கப்பட்டதால் நிலை குலைந்து டேனியுடன் தடுமாறி ஒரு மரத்தில் மோதி கீழே விழுகிறான் ருத்ரன்...

தலையில் பலத்த அடி... இரத்தம் வரவில்லை... ஆனால் மண்டை புடைத்துவிட்டது... கண்கள் சொருக மெதுவாக தன்னிலை மறக்க மயக்கம் அவனை தழுவுகிறது... டேனியின் வெறித்தனமான குரைக்கும் சத்தம் மட்டும் அவன் காதில் விழுந்து கொண்டே இருக்கிறது..

சற்று நேர மயக்கத்திற்கு பின்னர் மெதுவாக கண்ணை விழிக்கிறான் ருத்ரன்... டேனியை காணவில்லை... தலையில் வலி உயிர் போகும் அளவிற்கு வலித்தது..
தான் எங்கு நிற்கிறோம், என்ன நடந்தது எல்லாவற்றையும் சிந்தித்து சுய நினைவிற்கு வருவதற்கு 2 நிமிடங்கள் பிடித்தது...

கையில் டேனியின் சங்கிலி மட்டும்...

பதட்டதுடன் "டேனி டேனி... டாய் எங்கடா இருக்க?... டேனி..."

கத்திக்கொண்டே நாலாபுறமும் தேடுகிறான்... கண்ணுக்கெட்டிய தொலைவில் டேனி தென்படவில்லை...
என்ன செய்வதென்று ஒன்றும் விளங்கவில்லை...

சற்று தொலைவில் தான் கொண்டு வந்த Torch Light கிடப்பதை கண்ட ருத்ரன் வேகமாய் அதனை கையில் எடுத்து தன் கடிகாரத்தில் மணியை பார்க்கிறான்... தான் மயங்கியதிலிருந்து சரியாக 1 மணிநேரம் ஆகியிருந்தது...

"1 மணிநேரமாய் நான் மயக்கத்தில் இருந்தேனா!!! இந்த 1 மணி நேரத்திக்குள் டேனி எங்கு சென்றிருப்பான்?... இந்த நேரத்தில் எப்படி அவனை தனியாய் தேடுவது?..." சற்று நேர யோசைனைக்குப் பிறகு வந்த வழியே வீட்டினை நோக்கி நடக்கிறான்...

போகும் வழியெல்லாம் அவன் கண்கள் காட்டின் பரப்பை மேய்ந்தபடி டேனியை தேடின...
கண்களில் தளும்பிய கண்ணீர்கூட வெளியே வர பயந்து கண்களிலேயே தேங்கி நின்றது...

தூரத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவில் தன் அத்தையின் வீடு தெரிய காட்டின் விளிம்பில் அவன் கால்களின் வேகம் அதிகரித்து ஓடத் துவங்கின...

திடீரென்று தனக்கு பின்னால் யாரோ ஓடி வருவதை போல் உணர்ந்த ருத்ரன் டக்கென திரும்பிப் பார்க்கிறான்...

திரும்பிய மாத்திரத்தில் அவன் மேலே....




தொடரும்....
கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Boxrun3
இத்தொடரை பற்றிய உங்களது விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன... தங்கள் விமர்சனங்களை அனுப்ப வேண்டிய முகவரி..
http://www.eegarai.net/t61223-2

அடுத்த பாகத்திற்கான லிங்க் http://www.eegarai.net/t61492-3



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Hகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Aகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Sகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Aகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 N
muthu86
muthu86
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 672
இணைந்தது : 31/07/2010

Postmuthu86 Mon Jun 06, 2011 9:22 pm

மர்ம கதையா ?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 4:40 am

தொடருங்கள் நண்பா

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jun 07, 2011 7:06 am

muthu86 wrote:மர்ம கதையா ?

ஆம் நண்பரே...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Hகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Aகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Sகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Aகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jun 07, 2011 7:08 am

முரளிராஜா wrote:தொடருங்கள் நண்பா

கட்டாயம் தொடர்கிறேன் நண்பா... நேற்று கொஞ்சம் வேலை அதிகமாக இருந்ததால் தொடர இயலவில்லை. இன்று மாலைக்குள் 2 வது பதிவினை பதிகிறேன்...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Hகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Aகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Sகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Aகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 N
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Jun 07, 2011 8:01 am

நண்பா கதை விறுவிறு என்று இருகின்றது .

கதை அருமயான தொடக்கம் .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

( ஒரு 58 வயது கிழவி யாஆஆஆஆஅ ??? - ஒரு 70 வயது கிழவின்னு சொல்லுங்க , இல்லடி ருத்ரன் உடைய அத்தை வந்தர்கல்னு சொல்லுங்க )


ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jun 07, 2011 9:41 am

jeylakesengg wrote:நண்பா கதை விறுவிறு என்று இருகின்றது .

கதை அருமயான தொடக்கம் .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

( ஒரு 58 வயது கிழவி யாஆஆஆஆஅ ??? - ஒரு 70 வயது கிழவின்னு சொல்லுங்க , இல்லடி ருத்ரன் உடைய அத்தை வந்தர்கல்னு சொல்லுங்க )

சரி உங்களுக்காக 60 வயது கிழவி... இப்போது OKva?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Boxrun3
with regards ரான்ஹாசன்



கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Hகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Aகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Sகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Aகலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 N
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Jun 07, 2011 9:53 am

ranhasan wrote:
jeylakesengg wrote:நண்பா கதை விறுவிறு என்று இருகின்றது .

கதை அருமயான தொடக்கம் .

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

( ஒரு 58 வயது கிழவி யாஆஆஆஆஅ ??? - ஒரு 70 வயது கிழவின்னு சொல்லுங்க , இல்லடி ருத்ரன் உடைய அத்தை வந்தர்கல்னு சொல்லுங்க )

சரி உங்களுக்காக 60 வயது கிழவி... இப்போது OKva?

அத்தை வந்தார்கள் அப்படின்னு சொல்லுங்க நல்ல இருக்கும் .

அப்பாதா ருத்ரன் நா இளமையா காட்டும்

இல்லாட்டி ஒரு old லுக் வந்தரும்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 07, 2011 9:56 am

உங்களின் மர்மக் கதை எழுதும் ஆர்வத்திற்கு பாராட்டுக்கள் சகோதரா! முதல் பகுதியிலேயே அடுத்த பகுதியைப் படிக்க வேண்டும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளீர்கள். அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்!



கலசர் - மர்ம தொடர்கதை - பகுதி 1 & 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue Jun 07, 2011 10:04 am

அம்மா அம்மா ருத்ரன் கோவிலிக்கு போயி யென நடதுசு ?


Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக