புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
284 Posts - 45%
heezulia
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
20 Posts - 3%
prajai
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_m10ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய்


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 02, 2011 12:15 pm

கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக மிரட்டி வரும் யோகா குரு ராம்தேவுக்கு மிக அதிகமான முக்கியத்துவம் தரப்படுவதாகவும், அவரை அழைத்து வருவதற்காக 4 அமைச்சர்கள், அதிகாரிகளை விமான நிலையத்துக்கு அரசு அனுப்பி வைத்தது ரொம்ப ஓவர் என்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

ராம்தேவை மிகக் கடுமையாக விமர்சிப்போரில் திக்விஜய் சிங்கும் ஒருவர். ரூ. 15,000 கோடி மதிப்புள்ள மருத்துவமனை, யோகா மையம், ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் ஆகியவற்றை நடத்தி வரும் ராம்தேவ் பயணிப்பது தனி விமானத்தில் தான். மேலும் ஸ்காட்லாந்து அருகே பல மில்லியன் பவுண்டு மதிப்பில் ஒரு தீவையே விலைக்கு வாங்கியுள்ளார். இவரது அறக்கட்டளைக்கு ஏராளமான வெளிநாட்டுப் பணமும் வருகிறது
.

இந் நிலையில் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம்தேவ் குரல் கொடுக்க ஆரம்பித்ததில் இருந்தே அவருக்கு எதிராகப் பேசி வருபவர் திக்விஜய் சிங்.

கறுப்புப் பண விசாரணையை ராம்தேவின் அறக்கட்டளையிலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும் என்று கூறி வரும் திக்விஜய் சிங், நேற்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்திப்பதற்காக டெல்லி வந்த ராம்தேவுக்கு மத்திய அரசு தந்த அளவுக்கதிகமான மரியாதைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து நேரில் விளக்க விரும்புவதாகவும், இதற்காக தன்னை டெல்லியில் சந்திக்குமாறும் ராம்தேவுக்கு மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கோரிக்கை வைத்தார். இதை ஏற்று நேற்று தனது தனி விமானத்தில் டெல்லி வந்தார் ராம்தேவ்.

அவரை வரவேற்க மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பி.கே.பன்சால், சுபோந்த் காந்த் சகாய், பிரதமரின் முதன்மைச் செயலாளர் டி.கே.ஏ.நாயர் ஆகியோர் விமான நிலையத்துக்கே சென்றனர். அவரை மிக மிக மிக முக்கியமான விஐபி போல நடத்தி, கிட்டத்தட்ட ரெட் கார்பெட் வரவேற்பு அளித்து அழைத்துச் சென்றனர். இவருக்கு ஏன் இவ்வளவு பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது என்ற அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.

இது குறித்து திக்விஜய் சிங் கூறுகையில், ராம்தேவ் ஒன்றும் யோகி அல்ல. அவர் ஒரு தொழிலதிபர். அவருக்கு இவ்வளவு மரியாதை தருவதும் அமைச்சர்களை அனுப்பி அழைத்து வந்ததும் தேவையில்லாதது. இதைச் செய்தது மத்திய அரசு தான். இதில் காங்கிரசுக்குத் தொடர்பில்லை.

உண்ணாவிரதம் இருந்துவிட்டால் கறுப்புப் பண பிரச்சனை தீர்ந்துவிடாது என்பதை ராம்தேவ் உணர வேண்டும் என்றார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டம்:

இந் நிலையில் பாபா ராம்தேவின் உண்ணாவிரதம் குறித்தும், கறுப்புப் பண விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் டெல்லியில் அவசர கேபினட் கூட்டம் நடந்தது.

இதில் பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், ப.சிதம்பரம், தயாநிதி மாறன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

தட்ஸ்தமிழ்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Jun 02, 2011 1:57 pm

இந்தியர்கள் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு இந்தியாவுக்குக் கொண்டுவர வேண்டும், அதற்கான அவசரச் சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முடிவிலிருந்து விலக மாட்டேன்” என்று தன்னைச் சமாதானப்படுத்த முற்பட்ட மத்திய அமைச்சர்களிடம் கூறியுள்ளார் யோகா குரு பாபா ராம்தேவ்.

இரு தினங்களுக்கு முன், லோக்பால் சட்டத்தில் பிரதமர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோரை உள்படுத்தக்கூடாது என்ற அரசின் “பிடிவாதத்துக்கு’ ஆதரவு தெரிவித்த ராம்தேவ், தற்போது, “தான் அவ்வாறு சொல்லவே இல்லை’ என்று முரண்பட்டிருக்கிறார். இதுபோல பல விஷயங்களில் தனது கருத்தில் உறுதியாக இருப்பவர் அல்ல அவர் என்பதால், ஜூன் 4-ம் தேதிக்குள் தனது முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார் என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.

அது ஒருபுறம் இருக்கட்டும், பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு அவசரப்படுகிறது, அச்சப்படுகிறது? மத்தியப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வந்த பாபா ராம்தேவை, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால், சுபோத் காந்த் சகாய் என்று ஒரு மத்திய அமைச்சர்களின் குழுவே விமான நிலையத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து கெஞ்சுகிற அளவுக்கு அவரது போராட்டம் ஆட்சியாளர்களைப் பயமுறுத்துகிறதே அது ஏன்?

முன்னர், அண்ணா ஹஸôரே தில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டபோது அதற்கு மத்திய அரசு முதலில் முக்கியத்துவம் தரவில்லை. ஊடகங்கள் மூலம் போராட்டம் இந்தியா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியதால்தான், அதில் தலையிட வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது. அண்ணா ஹஸôரே இப்போராட்டத்துக்குப் பின்னர்தான் இந்தியா முழுவதும் அறியப்பட்ட மனிதரானார்.

ஆனால் பாபா ராம்தேவ் அப்படியல்ல. அவர் இந்தியாவின் பல நகரங்களுக்கும் சென்று தனது யோகா வகுப்புகளை நடத்தியவர். ஹிந்தி தொலைக்காட்சி சேனல்கள் மூலம் வடநாட்டில் எல்லோருக்கும் தெரிந்தவர். இந்தியாவின் நடுத்தர மற்றும் படித்த வர்க்கத்தினரிடையே நன்கு அறிமுகமானவர். அவர் தில்லியில் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதோடு, அவரது அன்பர்களும் இந்தியா முழுவதும் ஆங்காங்கே இதே மாதிரியான போராட்டத்தில் ஈடுபட்டால், இது அரசுக்கு மேலும் ஒரு தர்மசங்கடமான நிலைமையை உருவாக்கிவிடும் என்று மத்திய அரசு நினைத்தால் அது நியாயமானதுதான்.

இருப்பினும் இந்த விஷயத்தில் மத்திய அரசு அஞ்சுகிறதா அல்லது அஞ்சுவதுபோல நடித்து, இந்தப் போராட்டங்கள் மூலம் விஷயங்களைத் திசைதிருப்ப முற்படுகிறதா என்பதையும் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

அண்ணா ஹஸôரே உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியபோது மேடைக்கு வந்து வாழ்த்தியவர் பாபா ராம்தேவ். ஆனால், லோக்பால் சட்ட மசோதா குழுவில் சாந்திபூஷண் மற்றும் அவரது மகன் இடம்பெற்றபோது, தந்தை, மகன் இருவரையும் ஏன் நியமிக்க வேண்டும் என்று முதல் எதிர்ப்பைத் தெரிவித்தவரும் அவர்தான்.

பிரதமர், தலைமை நீதிபதி, எம்.பி.க்கள் மீதான நாடாளுமன்றம் சார்ந்த குற்றச்சாட்டுகள் லோக்பால் சட்ட வரம்புக்குள் வராது என்று மத்திய அரசு சொல்லிக் கொண்டிருக்க, அண்ணா ஹஸôரே தரப்பில், இதற்கு எதிர்ப்பு இருக்கிறது, மீண்டும் போராட்டத்தில் குதிக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளனர். மாநில அரசுகளின் கருத்தை அறிந்த பிறகு இதுபற்றி மீண்டும் விவாதிக்கலாம் என்று விஷயத்தை ஆறப்போட்டிருக்கிறது மத்திய அரசு.

இந்தவேளையில் பாபா ராம்தேவ் அதே நோக்கத்துக்காகப் போராட்டத்தை நடத்துவதன் மூலம், லோக்பால் விவகாரம் பின் தள்ளக்கூடும். போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொல்லிக்கொண்டே பாபா ராம்தேவை போராட்டத்தில் ஈடுபடுத்தும் அரசின் ராஜதந்திரமாகவும் இது இருக்கக்கூடும்.

நான்கு மத்திய அமைச்சர்களும் பாபா ராம்தேவை விமான நிலையத்திலேயே போய்ச் சந்திப்பதும், “”அவர் மிகவும் முக்கியமான விவகாரங்களைத்தான் வலியுறுத்துகிறார். நாங்கள் தொடர்ந்து அவரிடம் பேசி சமாதானம் செய்ய முயல்வோம்” என்று மத்திய அமைச்சர்கள் பேட்டி அளிப்பதும், விட்டால் இவர்களும் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்துவிடுவார்கள் போன்ற தோற்றத்தைத் தருவதும் ஏதோவொரு நெருடலை ஏற்படுத்துகிறது.

ஒரு போராட்டம், ஒரு தலைவனின் தலைமையில்தான் நடைபெற முடியும். ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிரான போராட்டங்கள் அவசியம் நம் நாட்டுக்குத் தேவை. இத்தகைய விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டால் மட்டுமே ஊழலையும் கருப்புப் பணத்தையும் ஒழிக்க முடியும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிரான போராட்டம் தனிநபர்களை முன்னிலைப்படுத்துவதாக அமைந்து, பல்வேறு அணிகளாகப் பிரிந்து ஆங்காங்கே நடக்குமேயானால், போராட்டத்தின் குறிக்கோள் பின்தள்ளப்பட்டுவிடும்.

ஒரே நோக்கத்துக்காக அனைவரும் ஒன்று திரளாமல், அவை தனிநபரை முன்னிலைப்படுத்துவதாக அமைந்துவிடக்கூடிய ஆபத்தை பாபா ராம்தேவின் போராட்டம் உருவாக்கியிருக்கிறது. இப்படியே தனிநபரை முன்னிலைப்படுத்தும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் அமையுமேயானால் புகையிலை ஒழிப்பு ஊர்வலம், மனிதச் சங்கிலி போன்று வெறும் சடங்காக அது மாறிவிடும். இப்படி ஆவதைத்தான் நமது அரசும் அரசியல்வாதிகளும் விரும்புவார்கள்.

முதலில் லோக்பால் விவகாரத்துக்குத் தீர்வுகண்ட பின்னர், அடுத்ததாக கருப்புப் பணத்துக்கான போராட்டத்தைத் தொடங்கினால் நன்றாக இருக்குமே!

அண்ணா ஹஸôரே ஆனாலும் சரி, பாபா ராம்தேவ் ஆனாலும் சரி அடிப்படையில் ஊழலுக்கு எதிரான அவர்களது உணர்வை நாம் சந்தேகப்படவில்லை. ஆனால், ராஜதந்திரிகளான நமது ஆட்சியாளர்கள் மிகமிக புத்திசாலிகள். அவர்களது பிரித்தாளும் சூழ்ச்சியால் ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிராக மக்கள் மத்தியில் எழுந்திருக்கும் எழுச்சி பிசுபிசுத்துப் போய்விடுமோ என்பதுதான் நமது பயம்.

தினமணி



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Aராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Bராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Dராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Uராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Lராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Lராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் Aராம்தேவ் ஒன்றும் யோகியல்ல..அவர் ஒரு தொழிலதிபர்-திக்விஜய் H
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 02, 2011 2:01 pm

மொத்ததுல எல்லோரும் விளம்பரம் பண்ணுராங்கன்னு நியணைக்கிறேன் !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
JUJU
JUJU
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

PostJUJU Thu Jun 02, 2011 2:34 pm

பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிவிடக் கூடாது என்பதில் மத்திய அரசு ஏன் இந்த அளவுக்கு அவசரப்படுகிறது, அச்சப்படுகிறது? மத்தியப் பிரதேசத்திலிருந்து விமானம் மூலம் தில்லிக்கு வந்த பாபா ராம்தேவை, பிரணாப் முகர்ஜி, கபில் சிபல், பவன் குமார் பன்சால், சுபோத் காந்த் சகாய் என்று ஒரு மத்திய அமைச்சர்களின் குழுவே விமான நிலையத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து கெஞ்சுகிற அளவுக்கு அவரது போராட்டம் ஆட்சியாளர்களைப் பயமுறுத்துகிறதே அது ஏன்?


ஏன் ?ஏன் ?ஏன் ?
மடியில் கனம் இருக்கா?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக