புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
3 Posts - 3%
Manimegala
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
2 Posts - 2%
prajai
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
401 Posts - 48%
heezulia
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
28 Posts - 3%
prajai
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_m10கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் !


   
   

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 7:37 am

கல்யாண சாப்பாடு செலவு குறித்த நண்பன் தேவா கட்டுரையும், அதற்கு மாற்று கருத்து ஒன்றும்...
**
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! (By தேவ குமார்)

ஒரு திருமண பந்தியில் அமர்ந்து இருக்கீர்கள். கொஞ்சம் சாதமும் சாம்பாரும் பரிமாறிவிட்டு, அவ்வளவுதான் என சொல்லி விடுகிறார்கள். ஒரு கூட்டு இல்லை, கறி இல்லை, இனிப்பு இல்லை,ஏன் ரசம், தயிர் கூட இல்லை - எப்படி இருக்கும்? மொய் பணத்தை திரும்ப வாங்கிக்கலாம் என தோன்றும் இல்லையா (என்னது, சாப்பிட்டு பார்த்து சாப்பாடு எப்படி இருந்ததோ அதுக்கு தகுந்த மாதிரி தான் மொய் வைப்பிங்களா? கை கொடுங்க!!)

சமீபத்தில் KV தாமஸ், மத்திய உணவு துறை அமைச்சர் இவ்வாறு சொன்னார் "திருமணத்தில் நிறைய உணவு வீணாவதால், ஒரு விதமான உணவு வகை மட்டுமே பரிமாற வேண்டும் ! இப்படி செய்வதால், குறைந்தது 20% -30% உணவுவீணாவதை தவிர்க்க முடியும். இதற்காக அரசாங்கம் ஒரு சட்டத்தையோ அல்லது கைட்லைன்கலையோ (Guidelines ) கொண்டு வரும்". இப்படியாக இந்த விஷயம் ஹிந்துவும், அவுட்லுக்கும் கட்டுரை எழுதும் அளவிற்கு போய் விட்டது !!


நான் முதல் முதலில் கலந்து கொண்ட டெல்லி திருமணம் கொஞ்சம் மயக்கம் தர கூடியது. அது ஒரு Government Contractor - வீட்டு திருமணம். பெரிய விளையாட்டு திடலில் பந்தலிட்டு, 32 வகை (பஞ்சாபி, சவுத் இந்தியன், அரபிக், இட்டாலியன் இப்படி போனது லிஸ்ட்!) உணவு பரிமாற பட்டது. ஊறுகாய் கவுன்ட்டர் ஒரு ஊறுகாய் கடை மாதிரி இருந்தது. என்னை அந்த திருமண வீட்டுக்காரர் சவுத் இந்தியன் கவுன்ட்டர்க்கு கூட்டி போய், இந்த தோசை மாஸ்டர் சென்னையில் இருந்து கூட்டி வந்து இருக்கோம், தோசையை சாப்பிட்டு பார்த்து authenticக்கா இருக்கான்னு சொல்லுங்க என்றார். அந்த மாஸ்டரும் நிறைய நெய் போட்டு மசாலா தோசை தர, அந்த இரவு மசால் தோசையோடு நிறைவு பெற்று (32 வகை உணவு இருந்தும்) அந்த மாஸ்டர் என் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டி கொண்டார்.


அப்படி திருமணம் நடத்தும் ஒரு Government contractor - இடம், உங்கள் மகள் திருமணத்தில் ரொட்டியும், ஒரு சப்ஜியும் தான் பரிமாற வேண்டும் என சொன்னால்,அவருக்கு அதை புரிந்து கொள்ளவே இரண்டு நாள் ஆகும்!! அது கூட பரவாயில்லை, தமிழ் திருமணத்தில் ஒரு வகை தான் பரிமாற வேண்டும் என்றால், எதை பரிமாறுவது? இட்லி, சட்டினி? அல்லது தயிர் சாதம்? அல்லது பாயசம் மட்டும்? என்ன கொடுமை சார் இது... ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயம், யாரும் சாப்பாட்டை அதிகமா குறை சொல்ல மாட்டாங்க!

ஆனால், இந்த proposal - இல் இருக்கிற கொஞ்சூண்டு காமெடியை புறம் தள்ளி வைத்து, அதில் உள்ள அடிப்படை விஷயத்தை பார்த்தால், அது அவசியமான விஷயமாகத்தான் தோன்றுகிறது... ஒரு திருமணத்தில் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? மேற்கத்திய நாடுகளில் இவ்வளவு விமரிசையாக திருமணத்தை நடத்துவது இல்லையே (ஒரு வேளை , ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை ஒருவர் செய்ய வேண்டிய சாத்தியம் இருப்பதாலோ?) நமது திருமண முறை இத்தனை நீட்டி முழக்கி இருப்பதற்கான காரணம், அந்த காலத்தில் போக்கு வரத்து இல்லை, திருமணத்துக்கு போக, வரவே சில வாரங்கள் ஆகும், எனவே "வந்தது வந்தாங்க கொஞ்ச நாள் இருந்துட்டு போகட்டுமே" என நினைத்து, திருமண சடங்குகளை நீட்டினார்கள். ஆனால், இந்த காலத்திற்கு இந்த முறை பொருந்துகிறதா? திருமண நேரத்தையும், செலவையும் இப்போதாவது சுருக்க வேண்டாமா? இவ்வளவு செலவு செய்வது சரியா? அதுவும் கடன் வாங்கி செலவு செய்பவர்களை பார்த்தால் பாவமாகவும், வீம்புக்காக இப்படி செலவு செய்கிறார்களே என வருத்தம் ஆகவும் இல்லையா?

அதற்காக நான் "அத்தான் வீட்டில் கல்யாணம்... அவரவர் வீட்டில் சாப்பாடு" என்று சொல்லவில்லை. நூறு பேருக்கு மிகாமல், ஒரு நேர விருந்தோடு திருமணத்தை நிகழ்த்துதல் நலம் இல்லையா என்பதுதான் என் கேள்வி. இரண்டு குருவிகள் இணைந்து அழகிய கூடு கட்டுவது பார்க்க எவ்வளவு அழகாகவும் எளிமையாகவும் இருக்குமோ அப்படி இருக்கவேண்டும் திருமணமும்... குடும்ப அந்தஸ்து, வறட்டு கௌரவம் (சானியா திருமணத்தில் நாட்டு பிரச்சனையை இழுத்தது உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?) தவிர்த்து
இரண்டு இளைய உள்ளங்களின் இணைவாக அது நிகழ்ந்தால், சுகம்... !

***********
இன்னொரு மாற்று கருத்து (By மோகன் குமார்)
தேவா அவசியம் யோசிக்க வேண்டிய விஷயம் பற்றி தான் எழுதியிருக்கிறார். ஆயினும் இதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

1 . நூறு பேருக்கு மட்டும் அழைப்பு என்பது இன்றைய நிலையில் மிக சிரமம். கணவன்- மனைவி இரண்டு பக்கமும் நெருங்கிய உறவினர், உடன் வேலை செய்பவர், தெருவில் உள்ளோர், சிறு வயது முதல் தொடரும் நண்பர்கள்.. இப்படி அனைவரும் அழைக்க விரும்பும் லிஸ்ட் பெரிது. இது பெண்- மாப்பிள்ளை இரண்டு வீட்டுக்கும் வேறு தனி தனியே சேர்த்தால் இன்னும் அதிகமாகும். (நூறு பேர் மட்டும் தான் அழைக்க வேண்டுமென்றால் டில்லியில் உள்ள தேவா, சென்னையிலிருக்கும் என்னை தன் பிள்ளை திருமணதிற்கு கூப்பிடுவாரா ? புன்னகை)

2 . இன்று பெரும்பாலானோர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் பெறுகின்றனர். எனவே தன் குடும்பத்தில் நடக்கும் மிக பெரிய விசேஷமான தன் குழந்தை திருமணத்தில் தெரிந்த அனைவரையும் அழைக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

3 . நமது கலாசாரம் சற்று சிக்கலானது. கல்யாண நேரத்தில் உள்ள அதீத
வேலை காரணமாக கல்யாண பத்திரிக்கை தர மறந்ததால் முறிந்து போன உறவுகளும் நட்புகளும் கூட உண்டு என்பதையும் நாம் மறக்க கூடாது.

4 . இன்றைக்கும் நாம் சென்று வந்த கல்யாணத்தில் நடந்த நிகழ்வுகளை மறந்து விடுவோம். ஆனால் அந்த சாப்பாடை மட்டும் மறக்க மாட்டோம். நான் சென்று வந்த திருமணங்களில் எங்கு சாப்பாடு அற்புதமாக இருந்ததோ அதை மனதில் ஒரு Yardstick-ஆக வைத்திருப்பேன். இன்னொரு அற்புத சாப்பாடு அடுத்த சில மாதம் அல்லது வருடங்களில் வந்து தான் அதை beat செய்யும். இது பலருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.


5 . ஒரே வகை உணவு எனில் இசுலாமியர் வீட்டு திருமணங்களில் செய்வது போல பிரியாணி தான் செய்ய வேண்டுமோ? அந்த திருமணங்களில் சாப்பிடுவது ஒரே வித உணவு எனினும் திருப்தி ஆக தான் வந்து விடுகிறோம். ஆனால் இந்து திருமணங்களில் அநேகமாய் நான்வெஜ் செய்வது இல்லை.

6. எனக்கென்னவோ இந்த விஷயத்தில் மக்களின் சென்சிடிவ் உணர்வுகள் காரணமாய் அரசு இப்படி ஒரு சட்டம் இயற்றாது என்றே தோன்றுகிறது. ஒரு வேளை சில கைட்லைன்கள் தரலாம். அவை எந்த அளவு பின் பற்றப்படும் என்பது கேள்வி குறிதான் .

நிற்க இவை எல்லாம் இன்னொரு பார்வை இந்த விஷயத்தில் வேண்டும் என்பதால் எழுதப்பட்டவையே.

திருமணங்களில் சாப்பாட்டில் மட்டுமல்ல, மண்டபம், பத்திரிக்கை, உடைகள் போன்ற பல விஷயத்தில் தேவைக்கு அதிகமாக செலவு செய்கிறோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. திருமணத்திற்கு எடுக்கிற உடைகள் கூட அதன் பின் ஒரு சில முறைக்கு மேல் நாம் போடுவதில்லை (உருவம் இருவருக்குமே ரொம்பவும் மாறி போய் உடை பற்றாமல் போய் விடுகிறது). ஆனால் இப்படி ஒரு சில முறை மட்டுமே போடப்படும் உடைக்கு எத்தனை ஆயிரம் செலவு செய்கிறோம்?

"எவ்வளவு பவுன் நகை போடுவீர்கள்?" என்கிற கேள்வி இல்லாமல் எந்த திருமணமும் இன்றைக்கும் நடப்பது இல்லை. நகை, வரதட்சணை பெண்ணை பெற்றவர்களை வேதனைக்குள்ளாக்குகிறது.

பலரும் தங்கள் வாழ் நாள் சேமிப்பு முழுக்க பெண் திருமணத்தில் செலவழித்து விட்டு பின் அவர்கள் ஓய்வு காலத்தில் கஷ்டப்படுகிறார்கள். என் வீட்டுக்கருகில் ஒரு பெரியவர் சொந்த வீட்டை விற்று, தன் ஓய்வூதியம் முழக்க செலவழித்து தன் இரண்டு பெண்களுக்கும் திருமணம் செய்தார். இன்று வாடகை வீட்டில் இருந்து கொண்டு கடைசி காலத்தை தள்ள, 65 வயதில் வேலைக்கு போகிறார்.

சாப்பாட்டு செலவு, மண்டபம்,உடைகள் என அனைத்திலுமே நாம் செலவை குறைக்க வேண்டியது அவசியமே. இரு வீட்டாரும் பேசி ஒப்பு கொண்டு நடந்தால் மட்டுமே இது சாத்தியம் என தோன்றுகிறது.

இந்த விஷயத்தில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?


வீடு திரும்பல்




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Jun 01, 2011 8:41 am

நாங்க நல்லா ஒரு கட்டு கட்டுற இடமே கல்யாண வீட்டில் தான். அதுக்கும் உலை வச்சுடுவாங்களோ?

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Wed Jun 01, 2011 8:51 am

கல்யாணத்துக்கு போவதே சாப்பிடுவதற்கு தான் சாப்பாட்ட குறைச்சா கூட்டம் காலியாயி போயிரும்...சிரி சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jun 01, 2011 9:41 am

பல குடும்பங்கள் திருமணத்திற்காக கடன் வாங்கும் நிலமையில் இருக்கிறது அவர்களுக்கு சுமை இதனால் கொஞ்சம் குறையும்.. அப்புறம் ஆடம்பர திருமணம்களில் தேவை யில்லாமல் உணவு வீணாகிறது. அவர்களின் பணம்தானே ! என்று நினைக்க கூடாது. அதை உற்பத்தி பண்ணிய விவசாயிகள் , அவர்களின் உழைப்பு ,இப்படி எத்தனையோ.....இதெல்லாம் தானாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு (அட் லீஸ்ட் ...சாப்பிடுகிற நாமாவது..வீணாக்காமல் இருக்கலாமே? :idea: )



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Wed Jun 01, 2011 9:50 am

ரா.ரமேஷ்குமார் wrote:கல்யாணத்துக்கு போவதே சாப்பிடுவதற்கு தான் சாப்பாட்ட குறைச்சா கூட்டம் காலியாயி போயிரும்...கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! 705463
கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! 677196 கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! 677196 கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! 677196 கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! 677196



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! Scaled.php?server=706&filename=purple11
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 11:11 am

நன்றி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 2:37 pm

அட இது நல்ல யோஜனையா இருக்கே?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கல்யாண சாப்பாடு - தடை போட ஓர் சட்டம் ! 47
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 2:50 pm

சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 3:05 pm

மகா பிரபு wrote:நாங்க நல்லா ஒரு கட்டு கட்டுற இடமே கல்யாண வீட்டில் தான். அதுக்கும் உலை வச்சுடுவாங்களோ?

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 3:37 pm

புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக