புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது உலகின் முதல் விண்வெளி பயணம்!--யூரி ககாரின்
Page 1 of 1 •
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
நன்றி நக்கீரன் :::
""காகரின் விண்வெளியில் நுழைந்துவிட்டார். ஆனால் அங்கு அவர் எந்த கடவுளையும் பார்க்கவில்லை.''
- நிகிட்டா குருசேவ், 1961.
மனிதன் முதன் முதலில் விண்வெளியில் பயணம் செய்து 50 ஆண்டுகளாகின்றது. இந்த மாபெரும் சாதனையை புரிந்தவர் ரஷ்ய விண்வெளி வீரர் யூரிஅலெக்சேவிச் ககாரின். இவர் 1961 ஏப்ரல் 12-ஆம் தேதி, வாஸ்டாக்-1 விண்கலத்தில், விண்வெளியில், 1 மணி 48 நிமிடங்கள் பறந்து சாதனை படைத்தார். பூமியின்
சுற்றுப்பாதையில் பூமியை வலம் வந்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அன்று இந்த விண்வெளி சாதனையை உலகமே பாராட்டி மகிழ்ந்தது. இந்த அரிய நிகழ்வு நடந்து, 50 ஆண்டுகள் ஆனதை, ரஷ்ய அரசு மிகச்சிறப்பாக அண்மையில் கொண்டாடியது.
1961-இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் தேதி விண்வெளி வீரர்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் தேதி
கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த ரஷ்யரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் யூரி ககாரின் விண்வெளி பயண அனுபவத்தை இங்கு வெளியிடுகிறோம். இது விண்வெளிக்கு சென்று திரும்பியவுடன் யூரி ககாரின் பேசிய முதல் சொற்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று என்னுடைய சுயசரிதையை அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால் என்னைப்பற்றி முதலில் அறிமுகம் செய்து கொள்கிறேன்.
நான் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 1934-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி
பிறந்தேன். என்னுடைய பிறப்பிடம் ஸ்மோலன்ஸ்க் பகுதி. என்னுடைய பரம்பரையில் இளவரசர்களோ அறிஞர்களோ பிறந்ததில்லை. ரஷ்ய புரட்சிக்கு முன்னர் என்னுடைய பெற்றோர் மிகவும் ஏழை விவசாயிகளாக இருந்தனர்.
நான் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள லூயிபெர்ஸ்டி என்னுமிடத்தில் சாதாரண பள்ளியில் படித்தேன். அதற்கு பிறகு சாராடாவ் தொழில் நிறுவனத்தில் பொறியியல்
வடிவமைப்பாளராக பணிபுரிந்தேன். இருந்தபோதிலும் என்னுடைய நீண்டகால கனவு, நான் ஒரு விமான ஓட்டியாக வேண்டுமென்பதுதான். 1955-இல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்து, சாராடோ விமான அகாடமியில் பைலட் படிப்பை முடித்தேன். அதன் பிறகு ஒரன்பர்க் விமான பள்ளியில் சேர்ந்தேன். 1957-இல் அங்கு நான் ஏர்போர்ஸ் பைட்டர் பைலட் என்ற பட்டம் பெற்றேன். பின்பு சோவியத் விமானப்படை பிரிவில் பணிபுரிந்தேன். என்னுடைய லட்சியம், நான் விண்வெளி வீரராக வர வேண்டும் என்பதுதான். பல்வேறு தேர்விற்கு பிறகு விண்வெளி வீரரானேன்.
அடுத்து விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட பல கட்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றேன்.
விண்வெளிக்கு பயணிக்க தேவையான தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டேன். நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை இந்த விண்கலத்தில் அனுப்பிய நமது கட்சிக்கும், நமது அரசாங்கத்திற்கும் எனது குழுவிற்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். நமது நாட்டிற்கும், மக்கள் மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
விண்வெளி பயணத்திற்கு முன்னர் நான் நலமாகவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தேன். எனக்கு இந்த விண்வெளிப் பயணம் வெற்றியை அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது திட்டம் மிகவும் சவாலானது. நமது தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், என்ஜினியர்கள் மற்றும் தோழர்கள் என்னுடைய வெற்றியை குறித்து ஒரு நொடிக்கூட சந்தேகப்படவில்லை. நான் சென்ற விண்கலம் மிகச்சிறந்ததாக வடிவமைக்கப்பட்டது. என்னுடைய விண்வெளி ஓடம் விண்வெளியில் நுழைந்தபோது அதனுடைய செயல்பாடு, அதிர்வு, சத்தம் போன்றவை என்னிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
விண்வெளி சுற்றுப்பாதையில் நுழைந்தபோது நான் இருந்த கலம் தனியாக பிரிந்தது. அப்போது விண்வெளியில் நான் எடையின்மையை உணர்ந்தேன். ஆரம்பத்தில் இந்த உணர்வு எனக்கு ஒருமாதிரியாகதான் இருந்தது. ஆனால் இந்த பயணத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்றால் அங்கே எடையின்மையை குறித்து சிறப்பாக பயிற்சி பெற்றதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்த சூழ்நிலைக்கேற்ப பழக அதிக நேரம் தேவைப்படவில்லை.
என்னுடைய சொந்த கருத்து என்னவெனில், எடையின்மை உடல் உறுப்புகள் நம்மிடத்தில் இல்லாதது போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அவ்வளவுதான். அதனால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. என்னுடைய விண்வெளி பயணத்தின்போது சாப்பிட்டேன். தண்ணீர் குடித்தேன். தொடர்ந்து ரேடியோ மூலம் பூமியில் உள்ள அனைத்து சேனல்களிலும் தொடர்பு வைத்திருந்தேன். என்னை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை புரிந்துக் கொண்டேன். நான் விண்வெளி ஓடத்தின் செயல்பாடுகள் குறித்து பூமிக்கு தகவல் அனுப்பினேன். சுயமாக தகவல்களை பதிவும் செய்தேன். என்னுடைய குறிப்பு புத்தகம் மற்றும் டேப்ரெக்காடர்களிலும் நான் என்னுடைய எடையின்மையை உணர்ந்து செய்த வேலைகள் அனைத்தும் அருமையாக இருந்தது.
விண்வெளி ஓடம் தானாகவே தனது நிலைப்பாட்டை சரி செய்துகொண்டது. பிரேகிங் முறை செயல்படுத்தப்பட்டதால் விண்வெளி ஓடத்தின் வேகம் குறைய தொடங்கியது. விண்வெளி ஓடம் பத்திரமாக தரை இறங்கியது.
எனக்கு பெரும் வரவேற்பு செய்த எனது சோவியத் மக்களை சந்தித்தேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், அளவில்லா மகிழ்ச்சியையும் தந்தது. விண்வெளி ஓடம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பத்திரமாக தரை இறங்கியது.
அடுத்து, நான் விண்வெளியில் எவற்றை கண்டேனோ அவைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
175-300 கி.மீ. செங்குத்து உயரத்திலிருந்து பூமியை பார்க்கும்போது பூமி மிகவும் துல்லியமாக தெரிந்தது. இன்னும் தெளிவாக தெரிந்தது பெரிய மலை சிகரங்கள், பெரிய நதிகள், பெரிய வன பகுதிகள், கடற்கரைகள் மற்றும் தீவுகள். பூமியின் பரப்பை மறைத்து செல்லும் மேகங்கள், அவற்றின் நிழல்கள் பூமியின் மீது விழுவது ஆகியவை தெளிவாக தெரிந்தது.
வானத்தின் நிறம் முற்றிலும் கருப்பாக இருந்தது. இந்த கருப்பின் பின்னணியில் நட்சத்திரங்கள் தெளிவாகவும், பிரகாசமாகவும் தெரிந்தன. இந்த பூமியானது நீலநிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருந்தது. இந்த ஒளிவட்டம் குறிப்பாக தொடுவானத்தில் நன்றாக தெரிந்தது. மெல்லிய நீலநிறத்தில் இருந்த வானம், பிறகு அடரத்தியான நீலநிறம், பிறகு கருநீலநிறமாகவும் பின்பு ஊதா நிறமாகவும் இறுதியில் முழுவதும் கருமை நிறமாகவும் இருந்தது.
நான் இங்கே விண்கல வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப
வல்லுனர்கள் மற்றும் சோவியத் நாடு முழுமைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். "வோஸ்டக்' மிக சிறந்த அற்புதமான விண்கலம். இதனை உருவாக்கியதற்காக நாம் பெருமைபடுவோம்.
எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஏனெனில் சோவியத் யூனியன்தான் உலக வரலாற்றில் முதன்முதலாக விண்வெளி ஓடம் ஏவியது என்ற பெருமையை பெற்றுள்ளது. முதல் விமானம், முதல் செயற்கைகோள், முதல் விண்வெளி ஓடம், மனிதனை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பியது என பல பெருமைகளை பெற்றது நமது நாடுதான். தனிப்பட்ட முறையில் நான் விண்வெளிக்கு இன்னும் சிலமுறை செல்ல விரும்புகிறேன். எனக்கு பறப்பது மிகவும் பிடிக்கும். என்னுடைய மிகப்பெரிய ஆசை என்னவெனில் நான் வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான். நன்றி.
(1968-ஆம் ஆண்டு மிக் -15 யுடிசி என்ற விமானத்தில் பறந்த போது, ஏற்பட்ட விமான விபத்தில் இறந்து போனார்.)
தமிழில்: கே. கேசவன்.
நன்றி நக்கீரன் :::
""காகரின் விண்வெளியில் நுழைந்துவிட்டார். ஆனால் அங்கு அவர் எந்த கடவுளையும் பார்க்கவில்லை.''
- நிகிட்டா குருசேவ், 1961.
மனிதன் முதன் முதலில் விண்வெளியில் பயணம் செய்து 50 ஆண்டுகளாகின்றது. இந்த மாபெரும் சாதனையை புரிந்தவர் ரஷ்ய விண்வெளி வீரர் யூரிஅலெக்சேவிச் ககாரின். இவர் 1961 ஏப்ரல் 12-ஆம் தேதி, வாஸ்டாக்-1 விண்கலத்தில், விண்வெளியில், 1 மணி 48 நிமிடங்கள் பறந்து சாதனை படைத்தார். பூமியின்
சுற்றுப்பாதையில் பூமியை வலம் வந்த முதல் மனிதர் என்ற பெருமையை பெற்றார். அன்று இந்த விண்வெளி சாதனையை உலகமே பாராட்டி மகிழ்ந்தது. இந்த அரிய நிகழ்வு நடந்து, 50 ஆண்டுகள் ஆனதை, ரஷ்ய அரசு மிகச்சிறப்பாக அண்மையில் கொண்டாடியது.
1961-இல் விண்வெளிக்கு முதன் முதலில் சென்ற யூரி ககாரின் நினைவாக ரஷ்யாவில் ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் தேதி விண்வெளி வீரர்கள் தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12-ஆம் தேதி
கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த ரஷ்யரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை தீர்மானித்துள்ளது.
அந்த வகையில் யூரி ககாரின் விண்வெளி பயண அனுபவத்தை இங்கு வெளியிடுகிறோம். இது விண்வெளிக்கு சென்று திரும்பியவுடன் யூரி ககாரின் பேசிய முதல் சொற்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது. இன்று என்னுடைய சுயசரிதையை அறிந்து கொள்வதற்கு மக்கள் ஆர்வமாக உள்ளனர். அதனால் என்னைப்பற்றி முதலில் அறிமுகம் செய்து கொள்கிறேன்.
நான் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் 1934-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி
பிறந்தேன். என்னுடைய பிறப்பிடம் ஸ்மோலன்ஸ்க் பகுதி. என்னுடைய பரம்பரையில் இளவரசர்களோ அறிஞர்களோ பிறந்ததில்லை. ரஷ்ய புரட்சிக்கு முன்னர் என்னுடைய பெற்றோர் மிகவும் ஏழை விவசாயிகளாக இருந்தனர்.
நான் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள லூயிபெர்ஸ்டி என்னுமிடத்தில் சாதாரண பள்ளியில் படித்தேன். அதற்கு பிறகு சாராடாவ் தொழில் நிறுவனத்தில் பொறியியல்
வடிவமைப்பாளராக பணிபுரிந்தேன். இருந்தபோதிலும் என்னுடைய நீண்டகால கனவு, நான் ஒரு விமான ஓட்டியாக வேண்டுமென்பதுதான். 1955-இல் தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்து, சாராடோ விமான அகாடமியில் பைலட் படிப்பை முடித்தேன். அதன் பிறகு ஒரன்பர்க் விமான பள்ளியில் சேர்ந்தேன். 1957-இல் அங்கு நான் ஏர்போர்ஸ் பைட்டர் பைலட் என்ற பட்டம் பெற்றேன். பின்பு சோவியத் விமானப்படை பிரிவில் பணிபுரிந்தேன். என்னுடைய லட்சியம், நான் விண்வெளி வீரராக வர வேண்டும் என்பதுதான். பல்வேறு தேர்விற்கு பிறகு விண்வெளி வீரரானேன்.
அடுத்து விஞ்ஞானிகளால் நடத்தப்பட்ட பல கட்ட பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றேன்.
விண்வெளிக்கு பயணிக்க தேவையான தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டேன். நான் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னை இந்த விண்கலத்தில் அனுப்பிய நமது கட்சிக்கும், நமது அரசாங்கத்திற்கும் எனது குழுவிற்கும், நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். நமது நாட்டிற்கும், மக்கள் மற்றும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன்.
விண்வெளி பயணத்திற்கு முன்னர் நான் நலமாகவும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருந்தேன். எனக்கு இந்த விண்வெளிப் பயணம் வெற்றியை அளிக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது திட்டம் மிகவும் சவாலானது. நமது தொழில்நுட்ப வல்லுநர்கள், விஞ்ஞானிகள், என்ஜினியர்கள் மற்றும் தோழர்கள் என்னுடைய வெற்றியை குறித்து ஒரு நொடிக்கூட சந்தேகப்படவில்லை. நான் சென்ற விண்கலம் மிகச்சிறந்ததாக வடிவமைக்கப்பட்டது. என்னுடைய விண்வெளி ஓடம் விண்வெளியில் நுழைந்தபோது அதனுடைய செயல்பாடு, அதிர்வு, சத்தம் போன்றவை என்னிடத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
விண்வெளி சுற்றுப்பாதையில் நுழைந்தபோது நான் இருந்த கலம் தனியாக பிரிந்தது. அப்போது விண்வெளியில் நான் எடையின்மையை உணர்ந்தேன். ஆரம்பத்தில் இந்த உணர்வு எனக்கு ஒருமாதிரியாகதான் இருந்தது. ஆனால் இந்த பயணத்திற்கு முன்னர் விண்வெளிக்கு சென்றால் அங்கே எடையின்மையை குறித்து சிறப்பாக பயிற்சி பெற்றதால் எனக்கு ஒன்றும் தெரியவில்லை. அந்த சூழ்நிலைக்கேற்ப பழக அதிக நேரம் தேவைப்படவில்லை.
என்னுடைய சொந்த கருத்து என்னவெனில், எடையின்மை உடல் உறுப்புகள் நம்மிடத்தில் இல்லாதது போன்ற ஒரு மனநிலையை ஏற்படுத்தும். அவ்வளவுதான். அதனால் உடலுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. என்னுடைய விண்வெளி பயணத்தின்போது சாப்பிட்டேன். தண்ணீர் குடித்தேன். தொடர்ந்து ரேடியோ மூலம் பூமியில் உள்ள அனைத்து சேனல்களிலும் தொடர்பு வைத்திருந்தேன். என்னை சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை புரிந்துக் கொண்டேன். நான் விண்வெளி ஓடத்தின் செயல்பாடுகள் குறித்து பூமிக்கு தகவல் அனுப்பினேன். சுயமாக தகவல்களை பதிவும் செய்தேன். என்னுடைய குறிப்பு புத்தகம் மற்றும் டேப்ரெக்காடர்களிலும் நான் என்னுடைய எடையின்மையை உணர்ந்து செய்த வேலைகள் அனைத்தும் அருமையாக இருந்தது.
விண்வெளி ஓடம் தானாகவே தனது நிலைப்பாட்டை சரி செய்துகொண்டது. பிரேகிங் முறை செயல்படுத்தப்பட்டதால் விண்வெளி ஓடத்தின் வேகம் குறைய தொடங்கியது. விண்வெளி ஓடம் பத்திரமாக தரை இறங்கியது.
எனக்கு பெரும் வரவேற்பு செய்த எனது சோவியத் மக்களை சந்தித்தேன். இது எனக்கு மிகுந்த உற்சாகத்தையும், அளவில்லா மகிழ்ச்சியையும் தந்தது. விண்வெளி ஓடம் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் பத்திரமாக தரை இறங்கியது.
அடுத்து, நான் விண்வெளியில் எவற்றை கண்டேனோ அவைகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
175-300 கி.மீ. செங்குத்து உயரத்திலிருந்து பூமியை பார்க்கும்போது பூமி மிகவும் துல்லியமாக தெரிந்தது. இன்னும் தெளிவாக தெரிந்தது பெரிய மலை சிகரங்கள், பெரிய நதிகள், பெரிய வன பகுதிகள், கடற்கரைகள் மற்றும் தீவுகள். பூமியின் பரப்பை மறைத்து செல்லும் மேகங்கள், அவற்றின் நிழல்கள் பூமியின் மீது விழுவது ஆகியவை தெளிவாக தெரிந்தது.
வானத்தின் நிறம் முற்றிலும் கருப்பாக இருந்தது. இந்த கருப்பின் பின்னணியில் நட்சத்திரங்கள் தெளிவாகவும், பிரகாசமாகவும் தெரிந்தன. இந்த பூமியானது நீலநிற ஒளிவட்டத்தால் சூழப்பட்டிருந்தது. இந்த ஒளிவட்டம் குறிப்பாக தொடுவானத்தில் நன்றாக தெரிந்தது. மெல்லிய நீலநிறத்தில் இருந்த வானம், பிறகு அடரத்தியான நீலநிறம், பிறகு கருநீலநிறமாகவும் பின்பு ஊதா நிறமாகவும் இறுதியில் முழுவதும் கருமை நிறமாகவும் இருந்தது.
நான் இங்கே விண்கல வடிவமைப்பாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப
வல்லுனர்கள் மற்றும் சோவியத் நாடு முழுமைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். "வோஸ்டக்' மிக சிறந்த அற்புதமான விண்கலம். இதனை உருவாக்கியதற்காக நாம் பெருமைபடுவோம்.
எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஏனெனில் சோவியத் யூனியன்தான் உலக வரலாற்றில் முதன்முதலாக விண்வெளி ஓடம் ஏவியது என்ற பெருமையை பெற்றுள்ளது. முதல் விமானம், முதல் செயற்கைகோள், முதல் விண்வெளி ஓடம், மனிதனை முதன்முதலில் விண்வெளிக்கு அனுப்பியது என பல பெருமைகளை பெற்றது நமது நாடுதான். தனிப்பட்ட முறையில் நான் விண்வெளிக்கு இன்னும் சிலமுறை செல்ல விரும்புகிறேன். எனக்கு பறப்பது மிகவும் பிடிக்கும். என்னுடைய மிகப்பெரிய ஆசை என்னவெனில் நான் வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான். நன்றி.
(1968-ஆம் ஆண்டு மிக் -15 யுடிசி என்ற விமானத்தில் பறந்த போது, ஏற்பட்ட விமான விபத்தில் இறந்து போனார்.)
தமிழில்: கே. கேசவன்.
நன்றி நக்கீரன் :::
Similar topics
» விண்வெளி பயணம் இனப்பெருக்க திறனை பாதிக்கும்
» விண்ணைத் தொட்ட மனிதர்கள் - யூரி ககாரின்
» உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் -ஏற்காடு இளங்கோ நூல் .
» அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணம்: 30 வருட விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» எனது 10000 -மாவது சிறப்பு பதிவு உலகின் முதல் 'விமான கார்' ஏலம் - ஆரம்ப விலை ரூ.5 1/2 கோடி
» விண்ணைத் தொட்ட மனிதர்கள் - யூரி ககாரின்
» உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் -ஏற்காடு இளங்கோ நூல் .
» அட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தின் இறுதிப் பயணம்: 30 வருட விண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது
» எனது 10000 -மாவது சிறப்பு பதிவு உலகின் முதல் 'விமான கார்' ஏலம் - ஆரம்ப விலை ரூ.5 1/2 கோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|