புதிய பதிவுகள்
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
by ayyasamy ram Today at 20:32
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:23
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
viyasan | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி எல்லாமே நீயல்லவோ
Page 4 of 4 •
Page 4 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!
காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.
பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!
'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!
என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!
பிணம் தின்னிக் கழுகுகள்!
புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?
மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!
ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!
லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.
இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!
மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!
அறை திறந்தே இருந்தது!
உள்ளே அவளும் இருந்தாள்!
அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!
காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.
எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!
அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!
அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.
'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.
கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!
கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!
இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!
சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!
ஆனால், இன்று என்ன ஆயிற்று?
பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!
செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.
"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.
படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?
ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!
அல்லது...
"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"
அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...
"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.
வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"
"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."
"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!
"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."
"ஐயோ!"
சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.
வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?
"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."
"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"
நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!
காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.
பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!
'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!
என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!
பிணம் தின்னிக் கழுகுகள்!
புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?
மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!
ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!
லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.
இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!
மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!
அறை திறந்தே இருந்தது!
உள்ளே அவளும் இருந்தாள்!
அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!
காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.
எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!
அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!
அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.
'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.
கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!
கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!
இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!
சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!
ஆனால், இன்று என்ன ஆயிற்று?
பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!
செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.
"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.
படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?
ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!
அல்லது...
"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"
அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...
"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.
வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"
"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."
"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!
"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."
"ஐயோ!"
சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.
வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?
"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."
"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மித்ராவும் அவளும் பேசிக் கொண்டிருக்கையில், பேச்சின் நடுவே புகுந்து, மகளைக் கூட்டிப் போகிறான் என்றாள், அதற்கு என்ன அர்த்தம்?
தொடர்ந்து மகளை அவளோடு பேசவிடக் கூடாது என்று தானே?
அதற்கு முன்னரும், போர்டிகோவில் நின்றவாறே, சந்தனாவும் மகளும் பேசுவதை... இல்லை, சந்தனா மகளிடம் என்ன கேட்கிறாள் என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான்!
அதுதான், அந்த ஒரு கேள்வியில் ஓடி வந்து விட்டான்!
அப்படி என்ன நம்பிக்கையில்லாத்தனம்?
ஒரு சாதாரணக் கேள்வியைக் கூட சந்தேகப்படுவது என்றால், அந்த முதல் நாள் ஐயம் அப்படியே இருக்கின்றது என்று தானே பொருள்!
சந்தேகம் போய்விட்டது என்றதெல்லாம் சும்மா! பொய்! அவன் அம்மாவுக்காக, இப்படிச் சொன்னால்தான் வீட்டுக்கு வருவாள் என்று கூறிய பொய்!
என்ன முயன்றும் கொதிப்பை அடக்க, சந்தனாவால் முடியவில்லை!
என்ன இலகுவாக, தீபனின் பேச்சை நம்பிவிட்டாள்!
நம்பி, என்னென்னவோ நினைத்து...
அதுதான் அவளால் தாள முடியாது போயிற்று!
அறையின் தனிமையில், சற்று நேரம் கண்ணீருகுத்த பிறகே, அவளால் யோசிக்க முடிந்தது!
ஏதோ, அவளது நல்ல நேரம்! மயக்கம் ஒரேயடியாகத் தலைக்கேறு முன், ஒரு சிறு செயலில், தீபன் தன்னைக் காட்டிக் கொண்டு விட்டான்!
அண்ணன் வந்ததும், இந்த வீட்டை, வீட்டில் உள்ளவர்களை விட்டுக் கிளம்ப நேருமே என்று, வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்! இனி, அந்த வருத்தம் இல்லாமல் நிம்மதியோடு கிளம்பலாம்!
அதுவரை... மீனாட்சி ஆன்ட்டிக்கு வாக்குக் கொடுத்திருப்பதால், அதுவரை இங்கே தானே இருந்தாக வேண்டும்! அப்படி இந்த வீட்டில் இருக்கும் காலத்தில், முதலில் இருந்தது போலவே, முடிந்தவரை ஒதுங்கி விட வேண்டும்!
ஆனால், அப்படி அவள் இரண்டு நாட்கள் ஒதுங்கு முன், தீபன் அவளைத் தேடி வந்தான்!
அப்போது அவள் மீனாட்சி அம்மாளுடன் தான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
மித்ராவுக்கென, வெளேர் துணியில் சிறுத்தைத் தோல் போல பிரின்ட்! அதைப் பார்த்ததும் வாங்கி வந்து, உடம்போடு ஒட்டினாற் போல டிசைன் கொடுத்து, தைத்து வந்திருந்தது!
அதில், ஒவ்வொரு சிறுத்தைப் புலிக்கும் நடுவே, நகம் அளவில் பிரௌன் கலர் கல்லை ஒட்டிக் கொண்டிருந்தாள் சந்தனா!
"அவளை ஃபேஷன் ஷோ மாடல் மாதிரி ஆக்கி விடுவாய் போல இருக்கிறது!" என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கையில், டெலிபோன் மணி அடித்தது!
வெளிநாட்டு அழைப்புச் சத்தம்!
எலிசாவா?
இரு பெண்களுமே, ஒரு திகைப்புடன் டெலிபோன் கருவியை பார்த்தனர்!
முதலில் போல அல்லாமல், இப்போதெல்லாம் தீபனே நேரடியாக, போனை எடுக்கத் தொடங்கியிருந்தான்.
அன்றும் அதுபோலவே, அவனே எடுத்துப் பேசினான்.
ஒரு முறை மட்டும், "வீட்டில் இந்த போன் இருக்கும் போது செல் எதற்கு? அதனால் தான் அணைத்துப் போட்டிருக்கிறேன். சும்மா இதிலேயே பேசு!" என்றான், ஒரு விளக்கம் போல.
மற்றபடி வெகு நேரம் வெறுமனே "ஊம்" கொட்டிக் கொண்டிருந்தது தவிர, அவன் வேறு எதுவும் பேசவே இல்லை!
"சரி யோசித்து சொல்கிறேன்!" என்று ரிசீவரை வைத்தவன், நேரே, தாயும் சந்தனாவும் இருந்த சிட் அவுட்டுக்கு வந்தான்.
"மித்ராவுக்குக் கொஞ்சம் துணிமணி வாங்க வேண்டும்! தேர்ந்தெடுப்பதற்கு, என்னோடு வருகிறாயா? ப்ளீஸ்!" என்று சந்தனாவை அழைத்தான்!
"நான்... இது..." என்று கையில் இருந்த துணியைப் பார்த்தாள் அவள்.
துணி வேலை முடியவில்லை என்று, அதைச் சாக்கிட்டு இருந்து விடலாம் என்று நினைத்தாள் சந்தனா!
ஆனால் மீனாட்சி குறுக்கிட்டு, "இந்த வேலைதான் முடிந்துவிட்டதேம்மா! போய் வாங்கி வா! அவள் அளவு தான் உனக்கேத் தெரியுமே! சீக்கிரமாக முடித்துக் கொண்டு, மித்ரா விழிக்கு முன் வந்து விடுங்கள்!" என்று சொன்னபோது, சந்தனாவுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை!
அத்தோடு, இந்த உடை வாங்குகிற பேச்செல்லாம் சும்மா என்பது, அவளுக்குப் புரியாமல் இல்லை! புரிந்தது!
ஆனால் அப்படி தீபன், அவளிடம் என்ன தான் சொல்லப் போகிறான்? மகன் சந்தனாவிடம் ஏதோ சொல்லப் போகிறான் என்று எண்ணித்தான், மீனாட்சி ஆன்ட்டியும் அவளை அனுப்புகிறாள்!
என்ன என்று தான் அறிந்து கொள்ளலாமே!
முகத்தை மட்டும் கழுவித் துடைத்துக் கொண்டு, சந்தனா அவனோடு கிளம்பினாள்!
சற்றுத் தூரம் சென்றதுமே, காரை ஓரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு, இருக்கையில் லேசாகத் திரும்பி, சந்தனாவைப் பார்த்தாற் போல அமர்ந்தான் தீபன்.
அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு, "இரண்டு நாட்களாக என் மேல் கோபம் என்று தெரிகிறது" என்றான் அவன்.
அவள் பேசாதிருக்கவும், "இப்போது, என்னால் எதையும் விளக்கமாகச் சொல்ல இயலாது, சந்தனா! ஆனால் இப்போது, மித்தியை நான் விலக்கி, அழைத்துப் போனதற்குக் காரணம் இருக்கிறது" என்றான் தொடர்ந்து.
மௌனம் கலைந்து, "நாங்கள் பேசும்போது, வெளியே நின்று ஒட்டுக் கேட்டதற்குக் கூடவா?" என்று சற்றே ஏளனமாகக் கேட்டாள் சந்தனா.
"ஒட்டுக் கேட்டேனா? எப்... ஓ! நீயும், மித்தியும் பேசியதை, மகிழ்ச்சியோடு கேட்டு ரசித்ததற்குப் பெயர் ஒட்டுக் கேட்பதா? சரியாகச் சொல்வதானால், சற்று முன் நானும், எலிசாவும் போனில் பேசியதை, நீயும் அம்மாவும் கவனித்தீர்களே, அதைத்தான் ஒட்டுக் கேட்டல் என்று சொல்ல வேண்டும்!" என்றான் அவன், சிறு கண்டிப்பும், கிண்டலும் கூடிய குரலில்!
லேசாக முகம் சிவந்த போதும், அதை மீறி, "எலிசாதான், இல்லையா?" என்று கவலையுடன் கேட்டாள் சந்தனா!
கையை நீட்டி, அவளது நெற்றியில் புரண்ட கூந்தலை, மென்மையாக ஒதுக்கி விட்டான் தீபன்.
அந்தக் கையைப் பற்றிக் கன்னத்தில் அழுத்திக் கொள்ள வேண்டும் போலத் தோன்றிய ஆவலை அடக்கிக் கொண்டு அசையாமல் வீற்றிருந்தாள் அவள்!
ஒரு பெருமூச்சுடன், "ஆமாம்! உடனே கிளம்பி, அங்கே வரச் சொன்னாள்! அதை, அப்புறம் பார்ப்போம்! ஆனால் நான் கிளம்பும் முன், உன்னிடம் ஒன்று சொல்லியாக வேண்டும், சந்தனா! நான் மித்ராவுடைய தந்தை! ஒருத்தியை மணந்து, மணவிலக்கும் வாங்கியவன்! அது மட்டுமல்ல! அதற்கு மேலும்... நான் அவ்வளவு நல்லவனாக நடக்கவில்லை சந்தனா! அங்கே... அந்த நாட்டில், அது எனக்குத் தப்பாகத் தெரியவில்லை என்றாலும், இங்கே, உன் முன்னிலையில் தலை குனிவாகத்தான் இருக்கிறது! உனக்கும் வெறுப்பாக இருந்தால், சொல்லிவிடும்மா!" என்று குரலில் வருத்தத்துடன் கேட்டான் தீபன்!
வெறுப்பா? அவனிடமா?
இல்லை என்பது போலத் தலையை அசைத்தாள், சந்தனா!
"அன்று... மித்ராவின் விபத்தின் போது கூட... அரை நினைவில், என்னைத் தேடியிருக்கிறாள் குழந்தை! யாராலும், என்னோடு தொடர்பு கொள்ளக் கூட முடியாத நிலை! அப்போதுதான், அங்கே எல்லாம் வெறுத்துப் போயிற்று! எந்த நிலைக்குப் போயிருக்கிறேன் என்று புரிந்தது! விழுந்தடித்துக் கொண்டு, மித்திக்குக் கொஞ்சம் குணமானதும் இங்கே அழைத்து வந்துவிட்டேன்! இங்கே உன்னைப் பார்த்ததும்..."
சந்தனாவின் பார்வையில் கூர்மை ஏறிற்று!
"முதலில், அங்கே நான் ஒதுக்கிவிட்டு ஓடி வந்த கூட்டம் தான் நினைவு வந்தது! நீ கதவைத் திறந்த விதம் வேறு! மேலும், உடல் ரீதியான உணர்வுகளை உன் கவர்ச்சி தூண்டி விடுவது போல... அதை, நீ தெரிந்தே ஒரு நோக்கத்துடன் செய்வது போல... உனக்கு இப்போது புரிகிறது இல்லையா? அப்போதே, என் மனம் உன்னிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறது! ஆனால், அதை நான் புரிந்து கொண்ட விதம் தான் வேறு! அதை வெறுத்து ஓடி வந்தவன், அந்த ஈர்ப்பை எதிர்க்கச் செய்த முயற்சி! ஆனால், எப்படியும் நான் அவ்வளவு பேசியிருக்கக் கூடாது... அப்படியெல்லாம் குதறிவிட்டு, உன்னிடம் இதைக் கேட்க எனக்குத் தயக்கம் தான்! ஆனால், அதை முழுதாக மறந்து, என்னை ஏற்பாயா சந்தனா?" என்று கேட்டான் தீபன்.
ஒரு கணம், சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியாது போயிற்று!
ஆனால், உச்சி முதல், உள்ளங்கால் வரை, ஒரு பூரிப்பும், பொலிவும் ஏற்படுவதை, அவளால் உணர முடிந்தது!
முகம் பிரகாசமுற, "நி... நிஜமாகவா, கேட்கிறீர்கள்? ஆனால்..." என்று கேட்டாள்.
"ஆனால் இன்னும் நிறைய விஷயம், உனக்குத் தெரியாது! அதையெல்லாம் உன்னிடம் சொல்லுகிற நிலையில் இப்போது நானும் இல்லை! இப்போது உடனே நான் யுஎஸ்க்குப் போயாக வேண்டியிருக்கிறது, கண்ணம்மா! முடிந்த அளவு சீக்கிரமாக அங்கே எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, இங்கே வந்து விடுவேன்! இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும், கிளம்பி வந்து விடுவேன்! அப்போது, எனக்காக, இங்கேயே காத்திருப்பாயா, சது?"
சது!
இப்படி யாரும் அவளைச் செல்லமாக அழைத்தது இல்லையே!
"நிச்சயமாய்!" என்றாள் அவள்.
தீபன், மகளோடு யுஎஸ்சுக்குத் திரும்புகிறான் என்பது, மீனாட்சி அம்மாவுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது!
தொடர்ந்து மகளை அவளோடு பேசவிடக் கூடாது என்று தானே?
அதற்கு முன்னரும், போர்டிகோவில் நின்றவாறே, சந்தனாவும் மகளும் பேசுவதை... இல்லை, சந்தனா மகளிடம் என்ன கேட்கிறாள் என்று ஒட்டுக் கேட்டுக் கொண்டுதான் இருந்திருக்கிறான்!
அதுதான், அந்த ஒரு கேள்வியில் ஓடி வந்து விட்டான்!
அப்படி என்ன நம்பிக்கையில்லாத்தனம்?
ஒரு சாதாரணக் கேள்வியைக் கூட சந்தேகப்படுவது என்றால், அந்த முதல் நாள் ஐயம் அப்படியே இருக்கின்றது என்று தானே பொருள்!
சந்தேகம் போய்விட்டது என்றதெல்லாம் சும்மா! பொய்! அவன் அம்மாவுக்காக, இப்படிச் சொன்னால்தான் வீட்டுக்கு வருவாள் என்று கூறிய பொய்!
என்ன முயன்றும் கொதிப்பை அடக்க, சந்தனாவால் முடியவில்லை!
என்ன இலகுவாக, தீபனின் பேச்சை நம்பிவிட்டாள்!
நம்பி, என்னென்னவோ நினைத்து...
அதுதான் அவளால் தாள முடியாது போயிற்று!
அறையின் தனிமையில், சற்று நேரம் கண்ணீருகுத்த பிறகே, அவளால் யோசிக்க முடிந்தது!
ஏதோ, அவளது நல்ல நேரம்! மயக்கம் ஒரேயடியாகத் தலைக்கேறு முன், ஒரு சிறு செயலில், தீபன் தன்னைக் காட்டிக் கொண்டு விட்டான்!
அண்ணன் வந்ததும், இந்த வீட்டை, வீட்டில் உள்ளவர்களை விட்டுக் கிளம்ப நேருமே என்று, வருத்தப்பட்டுக் கொண்டிருந்தாள்! இனி, அந்த வருத்தம் இல்லாமல் நிம்மதியோடு கிளம்பலாம்!
அதுவரை... மீனாட்சி ஆன்ட்டிக்கு வாக்குக் கொடுத்திருப்பதால், அதுவரை இங்கே தானே இருந்தாக வேண்டும்! அப்படி இந்த வீட்டில் இருக்கும் காலத்தில், முதலில் இருந்தது போலவே, முடிந்தவரை ஒதுங்கி விட வேண்டும்!
ஆனால், அப்படி அவள் இரண்டு நாட்கள் ஒதுங்கு முன், தீபன் அவளைத் தேடி வந்தான்!
அப்போது அவள் மீனாட்சி அம்மாளுடன் தான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.
மித்ராவுக்கென, வெளேர் துணியில் சிறுத்தைத் தோல் போல பிரின்ட்! அதைப் பார்த்ததும் வாங்கி வந்து, உடம்போடு ஒட்டினாற் போல டிசைன் கொடுத்து, தைத்து வந்திருந்தது!
அதில், ஒவ்வொரு சிறுத்தைப் புலிக்கும் நடுவே, நகம் அளவில் பிரௌன் கலர் கல்லை ஒட்டிக் கொண்டிருந்தாள் சந்தனா!
"அவளை ஃபேஷன் ஷோ மாடல் மாதிரி ஆக்கி விடுவாய் போல இருக்கிறது!" என்று மீனாட்சி சொல்லிக் கொண்டிருக்கையில், டெலிபோன் மணி அடித்தது!
வெளிநாட்டு அழைப்புச் சத்தம்!
எலிசாவா?
இரு பெண்களுமே, ஒரு திகைப்புடன் டெலிபோன் கருவியை பார்த்தனர்!
முதலில் போல அல்லாமல், இப்போதெல்லாம் தீபனே நேரடியாக, போனை எடுக்கத் தொடங்கியிருந்தான்.
அன்றும் அதுபோலவே, அவனே எடுத்துப் பேசினான்.
ஒரு முறை மட்டும், "வீட்டில் இந்த போன் இருக்கும் போது செல் எதற்கு? அதனால் தான் அணைத்துப் போட்டிருக்கிறேன். சும்மா இதிலேயே பேசு!" என்றான், ஒரு விளக்கம் போல.
மற்றபடி வெகு நேரம் வெறுமனே "ஊம்" கொட்டிக் கொண்டிருந்தது தவிர, அவன் வேறு எதுவும் பேசவே இல்லை!
"சரி யோசித்து சொல்கிறேன்!" என்று ரிசீவரை வைத்தவன், நேரே, தாயும் சந்தனாவும் இருந்த சிட் அவுட்டுக்கு வந்தான்.
"மித்ராவுக்குக் கொஞ்சம் துணிமணி வாங்க வேண்டும்! தேர்ந்தெடுப்பதற்கு, என்னோடு வருகிறாயா? ப்ளீஸ்!" என்று சந்தனாவை அழைத்தான்!
"நான்... இது..." என்று கையில் இருந்த துணியைப் பார்த்தாள் அவள்.
துணி வேலை முடியவில்லை என்று, அதைச் சாக்கிட்டு இருந்து விடலாம் என்று நினைத்தாள் சந்தனா!
ஆனால் மீனாட்சி குறுக்கிட்டு, "இந்த வேலைதான் முடிந்துவிட்டதேம்மா! போய் வாங்கி வா! அவள் அளவு தான் உனக்கேத் தெரியுமே! சீக்கிரமாக முடித்துக் கொண்டு, மித்ரா விழிக்கு முன் வந்து விடுங்கள்!" என்று சொன்னபோது, சந்தனாவுக்கு மறுத்து ஒன்றும் சொல்ல முடியவில்லை!
அத்தோடு, இந்த உடை வாங்குகிற பேச்செல்லாம் சும்மா என்பது, அவளுக்குப் புரியாமல் இல்லை! புரிந்தது!
ஆனால் அப்படி தீபன், அவளிடம் என்ன தான் சொல்லப் போகிறான்? மகன் சந்தனாவிடம் ஏதோ சொல்லப் போகிறான் என்று எண்ணித்தான், மீனாட்சி ஆன்ட்டியும் அவளை அனுப்புகிறாள்!
என்ன என்று தான் அறிந்து கொள்ளலாமே!
முகத்தை மட்டும் கழுவித் துடைத்துக் கொண்டு, சந்தனா அவனோடு கிளம்பினாள்!
சற்றுத் தூரம் சென்றதுமே, காரை ஓரமாக ஒதுக்கி நிறுத்திவிட்டு, இருக்கையில் லேசாகத் திரும்பி, சந்தனாவைப் பார்த்தாற் போல அமர்ந்தான் தீபன்.
அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்து விட்டு, "இரண்டு நாட்களாக என் மேல் கோபம் என்று தெரிகிறது" என்றான் அவன்.
அவள் பேசாதிருக்கவும், "இப்போது, என்னால் எதையும் விளக்கமாகச் சொல்ல இயலாது, சந்தனா! ஆனால் இப்போது, மித்தியை நான் விலக்கி, அழைத்துப் போனதற்குக் காரணம் இருக்கிறது" என்றான் தொடர்ந்து.
மௌனம் கலைந்து, "நாங்கள் பேசும்போது, வெளியே நின்று ஒட்டுக் கேட்டதற்குக் கூடவா?" என்று சற்றே ஏளனமாகக் கேட்டாள் சந்தனா.
"ஒட்டுக் கேட்டேனா? எப்... ஓ! நீயும், மித்தியும் பேசியதை, மகிழ்ச்சியோடு கேட்டு ரசித்ததற்குப் பெயர் ஒட்டுக் கேட்பதா? சரியாகச் சொல்வதானால், சற்று முன் நானும், எலிசாவும் போனில் பேசியதை, நீயும் அம்மாவும் கவனித்தீர்களே, அதைத்தான் ஒட்டுக் கேட்டல் என்று சொல்ல வேண்டும்!" என்றான் அவன், சிறு கண்டிப்பும், கிண்டலும் கூடிய குரலில்!
லேசாக முகம் சிவந்த போதும், அதை மீறி, "எலிசாதான், இல்லையா?" என்று கவலையுடன் கேட்டாள் சந்தனா!
கையை நீட்டி, அவளது நெற்றியில் புரண்ட கூந்தலை, மென்மையாக ஒதுக்கி விட்டான் தீபன்.
அந்தக் கையைப் பற்றிக் கன்னத்தில் அழுத்திக் கொள்ள வேண்டும் போலத் தோன்றிய ஆவலை அடக்கிக் கொண்டு அசையாமல் வீற்றிருந்தாள் அவள்!
ஒரு பெருமூச்சுடன், "ஆமாம்! உடனே கிளம்பி, அங்கே வரச் சொன்னாள்! அதை, அப்புறம் பார்ப்போம்! ஆனால் நான் கிளம்பும் முன், உன்னிடம் ஒன்று சொல்லியாக வேண்டும், சந்தனா! நான் மித்ராவுடைய தந்தை! ஒருத்தியை மணந்து, மணவிலக்கும் வாங்கியவன்! அது மட்டுமல்ல! அதற்கு மேலும்... நான் அவ்வளவு நல்லவனாக நடக்கவில்லை சந்தனா! அங்கே... அந்த நாட்டில், அது எனக்குத் தப்பாகத் தெரியவில்லை என்றாலும், இங்கே, உன் முன்னிலையில் தலை குனிவாகத்தான் இருக்கிறது! உனக்கும் வெறுப்பாக இருந்தால், சொல்லிவிடும்மா!" என்று குரலில் வருத்தத்துடன் கேட்டான் தீபன்!
வெறுப்பா? அவனிடமா?
இல்லை என்பது போலத் தலையை அசைத்தாள், சந்தனா!
"அன்று... மித்ராவின் விபத்தின் போது கூட... அரை நினைவில், என்னைத் தேடியிருக்கிறாள் குழந்தை! யாராலும், என்னோடு தொடர்பு கொள்ளக் கூட முடியாத நிலை! அப்போதுதான், அங்கே எல்லாம் வெறுத்துப் போயிற்று! எந்த நிலைக்குப் போயிருக்கிறேன் என்று புரிந்தது! விழுந்தடித்துக் கொண்டு, மித்திக்குக் கொஞ்சம் குணமானதும் இங்கே அழைத்து வந்துவிட்டேன்! இங்கே உன்னைப் பார்த்ததும்..."
சந்தனாவின் பார்வையில் கூர்மை ஏறிற்று!
"முதலில், அங்கே நான் ஒதுக்கிவிட்டு ஓடி வந்த கூட்டம் தான் நினைவு வந்தது! நீ கதவைத் திறந்த விதம் வேறு! மேலும், உடல் ரீதியான உணர்வுகளை உன் கவர்ச்சி தூண்டி விடுவது போல... அதை, நீ தெரிந்தே ஒரு நோக்கத்துடன் செய்வது போல... உனக்கு இப்போது புரிகிறது இல்லையா? அப்போதே, என் மனம் உன்னிடம் ஈர்க்கப்பட்டிருக்கிறது! ஆனால், அதை நான் புரிந்து கொண்ட விதம் தான் வேறு! அதை வெறுத்து ஓடி வந்தவன், அந்த ஈர்ப்பை எதிர்க்கச் செய்த முயற்சி! ஆனால், எப்படியும் நான் அவ்வளவு பேசியிருக்கக் கூடாது... அப்படியெல்லாம் குதறிவிட்டு, உன்னிடம் இதைக் கேட்க எனக்குத் தயக்கம் தான்! ஆனால், அதை முழுதாக மறந்து, என்னை ஏற்பாயா சந்தனா?" என்று கேட்டான் தீபன்.
ஒரு கணம், சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியாது போயிற்று!
ஆனால், உச்சி முதல், உள்ளங்கால் வரை, ஒரு பூரிப்பும், பொலிவும் ஏற்படுவதை, அவளால் உணர முடிந்தது!
முகம் பிரகாசமுற, "நி... நிஜமாகவா, கேட்கிறீர்கள்? ஆனால்..." என்று கேட்டாள்.
"ஆனால் இன்னும் நிறைய விஷயம், உனக்குத் தெரியாது! அதையெல்லாம் உன்னிடம் சொல்லுகிற நிலையில் இப்போது நானும் இல்லை! இப்போது உடனே நான் யுஎஸ்க்குப் போயாக வேண்டியிருக்கிறது, கண்ணம்மா! முடிந்த அளவு சீக்கிரமாக அங்கே எல்லாவற்றையும் ஒதுக்கிக் கொண்டு, இங்கே வந்து விடுவேன்! இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும், கிளம்பி வந்து விடுவேன்! அப்போது, எனக்காக, இங்கேயே காத்திருப்பாயா, சது?"
சது!
இப்படி யாரும் அவளைச் செல்லமாக அழைத்தது இல்லையே!
"நிச்சயமாய்!" என்றாள் அவள்.
தீபன், மகளோடு யுஎஸ்சுக்குத் திரும்புகிறான் என்பது, மீனாட்சி அம்மாவுக்கு எரிச்சலாகத்தான் இருந்தது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆனால், "அவர் சீக்கிரமாவே, மித்ராவோடு திரும்பி வந்து விடுவார், ஆன்ட்டி!" என்று ஒரு விதமான உறுதியோடு கூடிய குரலில் சந்தனா கூறியது, அவளுக்கு ஆச்சரியத்தோடு ஆறுதலையும் அளித்தது!
ஆயினும், "மித்ராவையாவது விட்டுப் போகக் கூடாதா?" என்றாள் தாய்.
"ஒரேயடியாகத் திரும்பி வருவதற்காக, நிறைய விதிமுறைகளை, அனுசரித்தாக வேண்டியிருக்கிறது! அவளும் கூட இருப்பது, தேவை" என்றான் தீபன்!
மித்ராவுக்கும், இந்தப் பயணம் பிடிக்கவில்லைதான். அவளுடைய யுஎஸ் நண்பர்களை நினைவுபடுத்தி, அவளை ஓரளவு சமாதானப்படுத்தி அழைத்துப் போனான் தீபன்!
கிளம்புவதற்கு முன்பாக, இன்னும் சிலது சொன்னான் அவன்.
"அங்கே எனக்கு வேலைக்கு நேரக் கணக்குக் கிடையாது என்பதோடு, அங்கிருந்து நான் பேசுவதும் கடினம், சந்தனா! அது பற்றி, அம்மாவுக்கும் தெரியும். அதனால் பேசக்கூட இல்லையே என்று எண்ண வேண்டாம்! நீயும் அப்படி இருப்பதே நல்லது! மிகமிக முக்கியம் என்றால், என் ஏஜெண்ட் எண்ணைத் தருகிறேன். அதற்கு போன் செய்தால், விஷயத்தை அவள் என்னிடம் சொல்லுவாள்... எப்படியும் விரைவில் வருவேன். வரும்போது..." என்று முடிக்காமலே, அவளைப் பார்த்து தலையசைத்து, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
கண்ணீருடன் தன் பொம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மித்ரா கிளம்பியது, இன்னும் வேதனையாக இருந்தது!
இரண்டு நாட்கள் கழித்து, "விமானம் பயணிகளைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தது!" என்று எலிசாவிடம் இருந்து சுருக்கமான ஒரு செய்தி மட்டும் வந்தது!
சந்தனாவின் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்டதும், ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு, "அங்கே இப்படித்தானம்மா! அதிலும், அந்த எலிசா, ரத்தினச் சுருக்கம் தான்! விடு! ஏதோ உன் பள்ளியில், பரீட்சை சமயம் தானே? ஒரு நாள் லீவு போட்டுவிட்டு, சினிமா, ஷாப்பிங் என்று எங்காவது போய் வாயேன்!" என்றாள் மீனாட்சி!
தாயின் தவிப்பும் பெரிதுதானே? அதை அடக்கிக் கொண்டு, தன்னைப் போகச் சொல்லுகிறாளே என்றிருந்தது சந்தனாவுக்கு!
"இல்லை ஆன்ட்டி! தேர்வு அரைநாள் தானே? போய்விட்டு வந்து, அறையில் என் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டு, நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்!" என்று முடித்தாள் சந்தனா.
மார்ச் மாதம் முடிவதால், மருத்துவமனைக் கணக்கு வழக்குகளைப் பார்த்து முடிப்பதற்காக, மீனாட்சி பகலில் பெரும்பான்மை நேரம் மருத்துவமனையில் இருக்கும்படி ஆயிற்று!
வீடு திரும்பிய சந்தனாவுக்குப் போரடித்தது!
சரிதான் என்று, டீவியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.
ஏதோ சானலில், வெளிநாட்டுப் படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
புதிய படம் ஒன்றின் தொடக்க விழா.
கதாநாயகி அழகாக இருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தீபன் சிரித்தவாறு திரையில் வந்தான்!
மருத்துவம் படிக்க போனவன்! மருத்துவத்துக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?
இமைகளைத் தட்டக் கூட முடியாமல், விழித்த கண் விழித்தபடி சந்தனா பார்த்திருக்கையில், புதிய திரைப்படத்தின் டைரக்டர் என்று அவனைச் சொன்னார்கள்! கதை வசனமும் அவன் தானாம்!
பெயர்... தீபன் லைட் மித்ரன் என்றார்கள்! திரைக்கான புனைப் பெயரை நன்றாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறான்! தீபன் என்றால் வெளிச்சம் - லைட்! கூடத் தந்தையின் பெயரையும் விடவில்லை! தீபன் லைட் மித்ரன்!
ஓகோ! என்ன கவனம்!
ஆனால், கவனம் இதில் மட்டுமா?
அவனது முந்தைய படத்துக்கு, 'ஆஸ்கார்' பரிசு கிடைத்தது என்றார்கள்!
மித்ரா சொன்ன அப்பாவின் பொம்மை ஆஸ்கார் சிலை!
தலை சுழன்ற போதும், அந்த வீட்டில் இருந்த ரகசிய சூழ்நிலை, பத்திரிகை, மீடியா அச்சம், ஒதுக்கம், யாரிடமும் சந்தேகம், அவளை நம்பாதது... எல்லாமே சந்தனாவுக்கு இப்போது புரிந்தது!
அனைத்தும் புரிந்த போதும், அவற்றுள், அவளை நம்பாததுதான் நெஞ்சில் வெகுவாக வலித்தது!
அவன், கடைசிவரை அவளை நம்பவே இல்லையே!
நம்பியிருந்தால், சொல்லியிருக்க மாட்டானா?
எப்படிச் சொல்லுவான்?
சொன்னால், அந்த உலகத்தை விட்டு, எப்படி எப்போது திரும்பி வருவான் என்றும் சொல்ல வேண்டுமே!
கோடிக் கணக்கில் புரளும் பணம்!
அதோ, இறுக அணைத்து உதட்டிலேயே முத்தமிடுகிறாளே, அவளைப் போன்ற எத்தனை எத்தனையோ பெண்கள்! விட்டுவிட்டு, எப்படி வர முடியும்?
சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தாள் சந்தனா!
ஒரு போதும், இங்கே வந்துவிடப் போவது இல்லை என்றால், அவன் வாழ்வில், அவளுக்கு என்ன இடம்?
அதுதான் சொன்னானே, இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும் வருவான். அப்படி வரும்போது, அவனுக்காகச் சந்தனா இங்கே காத்திருக்க வேண்டும் என்று!
காத்திருப்பது என்றால்?
தீபன் இந்தியாவுக்கு வரும்போது, அவனது விருப்பப்படி ஆடுகிற இரண்டு நாள் மனைவியா?
மனைவியாவது மண்ணாங்கட்டியாவது?
அதற்குத்தான் இப்போதெல்லாம் மகா கௌரவமாக ஓர் அருமையான பட்டம் உண்டே, 'பெண் சினேகிதி'!
சிதம்பரநாதன் சாருடைய மகள் சந்தனாவை, அந்தத் தீபன் என்னவென்று நினைத்துக் கொண்டான்?
பொங்கிச் சீறும் ஆத்திரத்துடன் அவள் எழுந்த போது, "சந்தனா..." என்ற குரல் கேட்டுத் திகைப்புற்றுத் திரும்பிப் பார்த்தாள்!
மெய்யாகவே, அங்கே நின்றவன், அவளுடைய அண்ணன் பூபாலன் தான்!
ஆயினும், "மித்ராவையாவது விட்டுப் போகக் கூடாதா?" என்றாள் தாய்.
"ஒரேயடியாகத் திரும்பி வருவதற்காக, நிறைய விதிமுறைகளை, அனுசரித்தாக வேண்டியிருக்கிறது! அவளும் கூட இருப்பது, தேவை" என்றான் தீபன்!
மித்ராவுக்கும், இந்தப் பயணம் பிடிக்கவில்லைதான். அவளுடைய யுஎஸ் நண்பர்களை நினைவுபடுத்தி, அவளை ஓரளவு சமாதானப்படுத்தி அழைத்துப் போனான் தீபன்!
கிளம்புவதற்கு முன்பாக, இன்னும் சிலது சொன்னான் அவன்.
"அங்கே எனக்கு வேலைக்கு நேரக் கணக்குக் கிடையாது என்பதோடு, அங்கிருந்து நான் பேசுவதும் கடினம், சந்தனா! அது பற்றி, அம்மாவுக்கும் தெரியும். அதனால் பேசக்கூட இல்லையே என்று எண்ண வேண்டாம்! நீயும் அப்படி இருப்பதே நல்லது! மிகமிக முக்கியம் என்றால், என் ஏஜெண்ட் எண்ணைத் தருகிறேன். அதற்கு போன் செய்தால், விஷயத்தை அவள் என்னிடம் சொல்லுவாள்... எப்படியும் விரைவில் வருவேன். வரும்போது..." என்று முடிக்காமலே, அவளைப் பார்த்து தலையசைத்து, விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான்.
கண்ணீருடன் தன் பொம்மையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு மித்ரா கிளம்பியது, இன்னும் வேதனையாக இருந்தது!
இரண்டு நாட்கள் கழித்து, "விமானம் பயணிகளைப் பத்திரமாகக் கொண்டு வந்து சேர்த்தது!" என்று எலிசாவிடம் இருந்து சுருக்கமான ஒரு செய்தி மட்டும் வந்தது!
சந்தனாவின் முகத்தில் ஏமாற்றத்தைக் கண்டதும், ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு, "அங்கே இப்படித்தானம்மா! அதிலும், அந்த எலிசா, ரத்தினச் சுருக்கம் தான்! விடு! ஏதோ உன் பள்ளியில், பரீட்சை சமயம் தானே? ஒரு நாள் லீவு போட்டுவிட்டு, சினிமா, ஷாப்பிங் என்று எங்காவது போய் வாயேன்!" என்றாள் மீனாட்சி!
தாயின் தவிப்பும் பெரிதுதானே? அதை அடக்கிக் கொண்டு, தன்னைப் போகச் சொல்லுகிறாளே என்றிருந்தது சந்தனாவுக்கு!
"இல்லை ஆன்ட்டி! தேர்வு அரைநாள் தானே? போய்விட்டு வந்து, அறையில் என் சாமான்களை அடுக்கி வைத்துவிட்டு, நிம்மதியாகத் தூங்கப் போகிறேன்!" என்று முடித்தாள் சந்தனா.
மார்ச் மாதம் முடிவதால், மருத்துவமனைக் கணக்கு வழக்குகளைப் பார்த்து முடிப்பதற்காக, மீனாட்சி பகலில் பெரும்பான்மை நேரம் மருத்துவமனையில் இருக்கும்படி ஆயிற்று!
வீடு திரும்பிய சந்தனாவுக்குப் போரடித்தது!
சரிதான் என்று, டீவியைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தாள்.
ஏதோ சானலில், வெளிநாட்டுப் படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார்கள்.
புதிய படம் ஒன்றின் தொடக்க விழா.
கதாநாயகி அழகாக இருக்கிறாள் என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தீபன் சிரித்தவாறு திரையில் வந்தான்!
மருத்துவம் படிக்க போனவன்! மருத்துவத்துக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?
இமைகளைத் தட்டக் கூட முடியாமல், விழித்த கண் விழித்தபடி சந்தனா பார்த்திருக்கையில், புதிய திரைப்படத்தின் டைரக்டர் என்று அவனைச் சொன்னார்கள்! கதை வசனமும் அவன் தானாம்!
பெயர்... தீபன் லைட் மித்ரன் என்றார்கள்! திரைக்கான புனைப் பெயரை நன்றாகத்தான் வைத்துக் கொண்டிருக்கிறான்! தீபன் என்றால் வெளிச்சம் - லைட்! கூடத் தந்தையின் பெயரையும் விடவில்லை! தீபன் லைட் மித்ரன்!
ஓகோ! என்ன கவனம்!
ஆனால், கவனம் இதில் மட்டுமா?
அவனது முந்தைய படத்துக்கு, 'ஆஸ்கார்' பரிசு கிடைத்தது என்றார்கள்!
மித்ரா சொன்ன அப்பாவின் பொம்மை ஆஸ்கார் சிலை!
தலை சுழன்ற போதும், அந்த வீட்டில் இருந்த ரகசிய சூழ்நிலை, பத்திரிகை, மீடியா அச்சம், ஒதுக்கம், யாரிடமும் சந்தேகம், அவளை நம்பாதது... எல்லாமே சந்தனாவுக்கு இப்போது புரிந்தது!
அனைத்தும் புரிந்த போதும், அவற்றுள், அவளை நம்பாததுதான் நெஞ்சில் வெகுவாக வலித்தது!
அவன், கடைசிவரை அவளை நம்பவே இல்லையே!
நம்பியிருந்தால், சொல்லியிருக்க மாட்டானா?
எப்படிச் சொல்லுவான்?
சொன்னால், அந்த உலகத்தை விட்டு, எப்படி எப்போது திரும்பி வருவான் என்றும் சொல்ல வேண்டுமே!
கோடிக் கணக்கில் புரளும் பணம்!
அதோ, இறுக அணைத்து உதட்டிலேயே முத்தமிடுகிறாளே, அவளைப் போன்ற எத்தனை எத்தனையோ பெண்கள்! விட்டுவிட்டு, எப்படி வர முடியும்?
சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தாள் சந்தனா!
ஒரு போதும், இங்கே வந்துவிடப் போவது இல்லை என்றால், அவன் வாழ்வில், அவளுக்கு என்ன இடம்?
அதுதான் சொன்னானே, இடையிடையே இரண்டு மூன்று நாட்கள் கிடைத்தாலும் வருவான். அப்படி வரும்போது, அவனுக்காகச் சந்தனா இங்கே காத்திருக்க வேண்டும் என்று!
காத்திருப்பது என்றால்?
தீபன் இந்தியாவுக்கு வரும்போது, அவனது விருப்பப்படி ஆடுகிற இரண்டு நாள் மனைவியா?
மனைவியாவது மண்ணாங்கட்டியாவது?
அதற்குத்தான் இப்போதெல்லாம் மகா கௌரவமாக ஓர் அருமையான பட்டம் உண்டே, 'பெண் சினேகிதி'!
சிதம்பரநாதன் சாருடைய மகள் சந்தனாவை, அந்தத் தீபன் என்னவென்று நினைத்துக் கொண்டான்?
பொங்கிச் சீறும் ஆத்திரத்துடன் அவள் எழுந்த போது, "சந்தனா..." என்ற குரல் கேட்டுத் திகைப்புற்றுத் திரும்பிப் பார்த்தாள்!
மெய்யாகவே, அங்கே நின்றவன், அவளுடைய அண்ணன் பூபாலன் தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அண்ணன் இங்கே எப்படி வந்தான் என்பதே தோன்றாமல், அடிப்பட்ட குழந்தை போல, அவனை நோக்கி ஓடப் போன போதுதான், கூடவே ராசையாவும் நிற்பது தெரிந்தது.
"உங்க அண்ணாருன்னு சொன்னாங்கம்மா! அதான் கூட்டியாந்தேன். உள்ளாரப் போங்க சாரு!" என்று விட்டு, மீண்டும் தன் இடத்துக்குச் சென்றான் அவன்.
"உள்ளே வாண்ணா!" என்றாள் தங்கையும்! "ஆனால் இப்போது நீ எப்படி..." என்ற தங்கையின் பேச்சில் குறுக்கிட்டு, "இது யார் வீடு, சந்தனா? என்னிடம், அதை ஏன் சொல்லவில்லை?" என்று சினந்து கேட்டான், அவன்.
டீவியைக் காட்டினாள் சந்தனா.
ஹாலிவுட் படத் தொடக்க விழா முடிந்து கொண்டிருந்தது!
"எனக்கே, இ...இப்போதுதான் தெரியும்!" என்றாள் அவள் வாடிச் சுண்டிய முகத்துடன்.
"வேண்டும் என்று மறைத்திருக்கின்றான், ராஸ்கல்!" என்றான் அண்ணன் ஆத்திரத்துடன்! "ரொம்ப மோசமானவன், சந்தனா! சரியான பொம்பளைப் பொறுக்கி! அங்கே அவனுக்கு மிகவும் கெட்ட பெயர்! கொஞ்ச நாளாக இந்தியாவில் இருக்கிறான் என்றதுமே, இங்கே எவளைப் பிடித்தானோ என்றுதான் பேச்சு! அது... அது, நீயாக... நீயில்லையே, சந்தும்மா" என்று தவிப்புடன் கேட்டான். "நீ ஒன்றும் அவனிடம் ஏமாந்து போய்விடவில்லையே?"
மறுப்பாகத் தலையசைத்த போதும், சந்தனாவின் கண்கள் நீரைப் பொழிந்தன!
தங்கையின் முகத்தை ஒருதரம் கூர்ந்து பார்த்தான் பூபாலன். "சந்தனா?"
மீண்டும் தலையசைத்து, "மனம் கொஞ்சம் ஈடுபட்டிருப்பது உண்மைதான்! ஆனால் நான் உன் தங்கை! நம், அப்பாவுடைய மகள்! எந்தவித இழிநிலைக்கும் ஆளாக மாட்டேன்!" என்றாள் அவள்.
ஆறுதலும், வருத்தமுமான ஒரு பெருமூச்சுடன், "போகட்டும்! இனியும் இவன் வீட்டில் நீ இருப்பது நல்லதல்ல! வா! போகலாம்!" என்றான் அண்ணன். "ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறேன். இப்போதைக்கு, அங்கே போவோம். சீக்கிரமே வீடு பார்த்துக் கொள்ளலாம்!"
போய்விடலாம்! காலின் கீழ் தரையே எரிவது போலத் தான் இருக்கிறது! ஆனால், எந்த மாதிரி நிலையில் இங்கே வந்தாள்!
சற்று யோசித்துவிட்டு, "திடீரென்று, நீ எப்படிண்ணா வந்தாய்?" என்று கேட்டாள் தங்கை!
"அதாம்மா இன்னமும், உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்களுக்கு ஒரேயடியாகக் கெடுதல் நேர்ந்து விடாது என்று, நான் நம்புவது! பெயரைச் சொல்லாமலே ஓர் உதவி கிடைத்தது! கொஞ்ச நாட்களுக்கு முன்பாகவே, ஒரு சிறு குறிப்பு, சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டுப் போவது நல்லது என்று! சென்ற முறை வந்துவிட்டுப் போனதிலிருந்து, நீ தனியாக இருக்கிறாயே என்று நானுமே அதற்குத்தானே முயன்று கொண்டு இருந்தேன்! அசுர கதிதான். வேலை முடியவும், இப்படி இன்னார் வீட்டில் இருக்கிறாய், இவன் இப்படிப்பட்டவன் என்பதால், உனக்கு ஆபத்து என்று ஓர் எச்சரிக்கை! எதற்கும் இருக்கட்டும் என்று விசாரித்துப் பார்த்தேன்! பத்திரிகைகளில், என்னென்னவோ வந்திருக்கிறது! படித்ததும், பயந்தே போனேன்! இந்த வீட்டில் தங்குவதற்கு நானே ஒத்துக் கொண்டேனே என்று, அவ்வளவு கவலை! நல்லவேளையாக, வேலையும் முடிந்து விடவும், விழுந்தடித்துக் கொண்டு, கிடைத்த முதல் விமானத்தில் ஏறி வந்துவிட்டேன்! வாம்மா, சீக்கிரமாகப் போய்விடலாம்!" என்றான் அண்ணன்!
இவ்வளவு தூரம் எந்தப் பரோபகாரி, அண்ணனுக்கு எச்சரிக்கை தந்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால், அண்ணன் பத்திரிகைகளில் பார்த்தும் இருக்கிறான்!
பத்திரிகைகள் என்றாலே தீபனுக்கு அலர்ஜ்! அது, உண்மையை வெளிப்படுத்தியதாலா? அன்றி, பரபரப்புக்காகப் பொய்யைப் பரப்பியதாலா?
அவள் யோசிக்கையிலேயே, "பாவம்! அந்த டைரக்டர் நடிப்பை நம்பி, மகா நல்லவன் என்று நினைத்திருப்பாய்! அப்படியில்லை என்பதே, உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்!" என்று தங்கைக்காக இரங்கினான் பூபாலன்.
சட்டென உறுத்தியது!
இல்லையே! அவன் நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே! மோசமாக வாழ்ந்ததாகத்தானே சொன்னான்! அதுவும் மித்ராவின் விபத்தின் போது, தப்பாக நடந்ததை, மிகுந்த வருத்தத்துடன் கூறினானே!
அல்லது, அந்த வருத்தமே நடிப்பா?
எப்படியாயினும், ஒன்றுமே செய்யாமல், ஒரு கேள்வியேனும் கேட்காமல் போகக் கூடாது என்று தோன்றியது அவளுக்கு.
தப்புச் செய்யாதவள்! அவள் எதற்காகக் கோழையைப் போல ஓடி மறைவது?
அத்தோடு, பதில் சொல்ல, அவனுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்?
பூபாலனுக்கும் பிடிக்கவில்லைதான்!
ஆனால், கோழைத்தனம் கூடாது என்பதில் அவனுக்கும் ஒப்புதல் இருக்கவே, அரை மனதாய் அவன் சம்மதிக்க, தீபன் கொடுத்த எண்ணுடன் தொடர்பு கொண்டு, அவனுடன் பேச வேண்டும் என்றாள் சந்தனா.
"யார், சந்தனாவா? எப்படி இருக்கிறாய். வந்ததில் இருந்து, மித்ராவுக்கு உன்னைப் பற்றிய பேச்சுதான்! அவள் இல்லாமல், அங்கே போரடிக்கிறதா?" என்று சந்தோஷமாகக் குசலம் விசாரித்தாள் எலிசா.
ஆனால், தீபனுடன் பேசுவது பற்றி, சந்தனா மீண்டும் கேட்கவும், "சாரி!" என்று வருத்தம் தெரிவித்தாள் அவள். "இது லாஸ் ஏஞ்சலிஸ், சந்தனா! வேறே மாதிரி உலகம்! நேற்றுதான், தீபனின் அடுத்த படத்துத் தொடக்கவிழா நடந்தது! படத்துக் கதாநாயகியும், டைரக்டரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இப்போது, இங்கே இரவு நேரம்! வேண்டுமானால், நாளைக் காலையில் தீபனைச் சந்திக்கும் போது, நீ கூப்பிட்டாய் என்று சொல்லட்டுமா?"
எலிசா சொல்லாமல் சொன்னதில், சந்தனாவின் மனம் நொந்து போயிற்று!
காட்டிக் கொள்ள மனம் இன்றி, மித்ராவைப் பற்றி மட்டும் விசாரித்து விட்டு போனை வைத்தாள்!
ஒரு வேளை, இந்த எலிசா கெட்டவளாக இருக்கலாமோ?
ஆனால், அதற்குக் காரணமே இல்லையே! அவள் வெறும் ஏஜெண்ட்! சில ஆண்டுகளாகப் பழகியதில், மித்ராவைப் பார்த்துக் கொள்கிறாள்! மற்றபடி, தீபனின் சொந்த வாழ்வில் அவளுக்கு இடம் இல்லை என்பது, சந்தனாவுக்குத் தெரியும்.
தீபனுமே, வேறு எண் எதுவும் தரவில்லையே!
முழுக்கத் தோற்றுவிட்ட, உணர்வுடன், தன் பொருட்களை எடுத்து வைத்தாள் சந்தனா!
மீனாட்சி வந்ததும், அவளிடம் சொல்லிக் கொண்டு, அண்ணனும் தங்கையும் கிளம்பினர்.
ஒரு தரம் தடுத்த போதும், சின்னவர்கள் வெளியேறுவதில் பிடிவாதமாக இருந்தனர்.
சந்தனாவின் கண்களில் இருந்த நிராசையைப் பார்த்த பிறகு, மீனாட்சியும், அதற்கு மேல் அவர்களை வற்புறுத்தவும் இல்லை!
அவர்கள் சென்ற பிறகு, உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசித்தாள்!
அன்றிரவு 'லேட்நைட் டின்னர்!'
திரைப்படத்தின் கதைப் போக்கு, அதன் பாத்திரங்களின் மன நிலை போன்றவைகளை, நடிப்பவர்களுடன் பேசி முடித்துவிட்டு, தீபனும் எலிசாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்!
எலிசாவை அவளது கார் நிற்கும் இடத்தில் விட்டுவிட்டு, தீபன் தன் வீடு செல்ல வேண்டும்!
மறுநாளைய வேலைத் திட்டத்தைப் பேசியவாறே, இருவரும் சென்று கொண்டிருந்த போது திடுமென, "உன் மகளைத் தாய்க்குத் தாயாக, நான் பார்த்துக் கொள்கிறேன்! உடம்பு சுகத்துக்கும், இங்கே பிரச்சினையே கிடையாது! நல்ல, ஆரோக்கியமான பெண்களை, நானே ஏற்பாடு செய்து தருகிறேன் அனாவசியமாக மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே! நீ முழுக்கவனத்தையும், படம் எடுப்பதில் செலுத்து!" என்று அறிவுரை கூறினாள் எலிசா!
ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு!
திடீரென்று, இப்படி ஓர் அறிவுரை எதற்கு?
மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே என்றால், திருமணம் செய்யாதே என்றல்லவா கூறுகிறாள்!
அவனது திருமணத்தை எலிசா விரும்பவில்லை என்றால், அதன் அர்த்தம் சரியில்லையே!
ஆனால், நலபடியாகக் குடும்பம் நடத்துகிறவள் என்பதால், இவளுக்குத் தப்பான எண்ணம் இருக்க முடியாது!
ஆனால், ஏதோ இருக்கிறது!
உள்ளே குறுகுறுப்பு அதிகம் ஆகவும், "என்ன எலிசா, என்னவோ விஷயம் இருக்கிறாற் போலத் தெரிகிறதே! உனக்கே என் மேலே ஒரு கண்ணா?" என்று வேடிக்கைப் போலத் தீபன் கேட்டுவிட்டான்!
அவளது மேக்கப்பிலும் நிறம் மாறி, "ஓ, ஷட்டப், டீப்! ஒரு தமக்கையைப் போல, உன் மேல் உள்ள அக்கறையில், உனக்கு நல்லது சொன்னேன்! பிரச்சினை இல்லாத ஆரோக்கியமான எத்தனையோ பேர்..." என்று அதிலேயே நின்றாள் அவள்.
இடையிட்டு, "நான் தான் பெண்களே வேண்டாம் என்கிறேனே. பிறகு எதற்கு, இந்த ஆரோக்கியமான... அல்லாத... எல்லாம்?" என்று கேட்டான் தீபன்.
"இல்லை, டீப்! அது இயற்கைக்குப் புறம்பானது! அவ்வப்போது அதுவும் இல்லாவிட்டால், உன்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது! அதனால் தான்..."
"அதற்காகத்தான் ஓர் ஏற்பாடு செய்ய எண்ணியிருக்..." என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, "அதைத்தான் சொன்னேன்! முன்னைப் போல மாட்டிக் கொள்ளாதே என்று. சொன்னால், கேள்!" என்று கிரீச்சிட்டாள் எலிசா.
தீபன் வியப்புடன் திரும்பிப் பார்க்கவும், சட்டெனக் குரலைத் தணித்தாள்.
"உங்க அண்ணாருன்னு சொன்னாங்கம்மா! அதான் கூட்டியாந்தேன். உள்ளாரப் போங்க சாரு!" என்று விட்டு, மீண்டும் தன் இடத்துக்குச் சென்றான் அவன்.
"உள்ளே வாண்ணா!" என்றாள் தங்கையும்! "ஆனால் இப்போது நீ எப்படி..." என்ற தங்கையின் பேச்சில் குறுக்கிட்டு, "இது யார் வீடு, சந்தனா? என்னிடம், அதை ஏன் சொல்லவில்லை?" என்று சினந்து கேட்டான், அவன்.
டீவியைக் காட்டினாள் சந்தனா.
ஹாலிவுட் படத் தொடக்க விழா முடிந்து கொண்டிருந்தது!
"எனக்கே, இ...இப்போதுதான் தெரியும்!" என்றாள் அவள் வாடிச் சுண்டிய முகத்துடன்.
"வேண்டும் என்று மறைத்திருக்கின்றான், ராஸ்கல்!" என்றான் அண்ணன் ஆத்திரத்துடன்! "ரொம்ப மோசமானவன், சந்தனா! சரியான பொம்பளைப் பொறுக்கி! அங்கே அவனுக்கு மிகவும் கெட்ட பெயர்! கொஞ்ச நாளாக இந்தியாவில் இருக்கிறான் என்றதுமே, இங்கே எவளைப் பிடித்தானோ என்றுதான் பேச்சு! அது... அது, நீயாக... நீயில்லையே, சந்தும்மா" என்று தவிப்புடன் கேட்டான். "நீ ஒன்றும் அவனிடம் ஏமாந்து போய்விடவில்லையே?"
மறுப்பாகத் தலையசைத்த போதும், சந்தனாவின் கண்கள் நீரைப் பொழிந்தன!
தங்கையின் முகத்தை ஒருதரம் கூர்ந்து பார்த்தான் பூபாலன். "சந்தனா?"
மீண்டும் தலையசைத்து, "மனம் கொஞ்சம் ஈடுபட்டிருப்பது உண்மைதான்! ஆனால் நான் உன் தங்கை! நம், அப்பாவுடைய மகள்! எந்தவித இழிநிலைக்கும் ஆளாக மாட்டேன்!" என்றாள் அவள்.
ஆறுதலும், வருத்தமுமான ஒரு பெருமூச்சுடன், "போகட்டும்! இனியும் இவன் வீட்டில் நீ இருப்பது நல்லதல்ல! வா! போகலாம்!" என்றான் அண்ணன். "ஹோட்டலில் ரூம் போட்டிருக்கிறேன். இப்போதைக்கு, அங்கே போவோம். சீக்கிரமே வீடு பார்த்துக் கொள்ளலாம்!"
போய்விடலாம்! காலின் கீழ் தரையே எரிவது போலத் தான் இருக்கிறது! ஆனால், எந்த மாதிரி நிலையில் இங்கே வந்தாள்!
சற்று யோசித்துவிட்டு, "திடீரென்று, நீ எப்படிண்ணா வந்தாய்?" என்று கேட்டாள் தங்கை!
"அதாம்மா இன்னமும், உலகத்தில் நல்லவர்கள் இருக்கிறார்கள். நல்லவர்களுக்கு ஒரேயடியாகக் கெடுதல் நேர்ந்து விடாது என்று, நான் நம்புவது! பெயரைச் சொல்லாமலே ஓர் உதவி கிடைத்தது! கொஞ்ச நாட்களுக்கு முன்பாகவே, ஒரு சிறு குறிப்பு, சீக்கிரமாக வேலையை முடித்துவிட்டுப் போவது நல்லது என்று! சென்ற முறை வந்துவிட்டுப் போனதிலிருந்து, நீ தனியாக இருக்கிறாயே என்று நானுமே அதற்குத்தானே முயன்று கொண்டு இருந்தேன்! அசுர கதிதான். வேலை முடியவும், இப்படி இன்னார் வீட்டில் இருக்கிறாய், இவன் இப்படிப்பட்டவன் என்பதால், உனக்கு ஆபத்து என்று ஓர் எச்சரிக்கை! எதற்கும் இருக்கட்டும் என்று விசாரித்துப் பார்த்தேன்! பத்திரிகைகளில், என்னென்னவோ வந்திருக்கிறது! படித்ததும், பயந்தே போனேன்! இந்த வீட்டில் தங்குவதற்கு நானே ஒத்துக் கொண்டேனே என்று, அவ்வளவு கவலை! நல்லவேளையாக, வேலையும் முடிந்து விடவும், விழுந்தடித்துக் கொண்டு, கிடைத்த முதல் விமானத்தில் ஏறி வந்துவிட்டேன்! வாம்மா, சீக்கிரமாகப் போய்விடலாம்!" என்றான் அண்ணன்!
இவ்வளவு தூரம் எந்தப் பரோபகாரி, அண்ணனுக்கு எச்சரிக்கை தந்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால், அண்ணன் பத்திரிகைகளில் பார்த்தும் இருக்கிறான்!
பத்திரிகைகள் என்றாலே தீபனுக்கு அலர்ஜ்! அது, உண்மையை வெளிப்படுத்தியதாலா? அன்றி, பரபரப்புக்காகப் பொய்யைப் பரப்பியதாலா?
அவள் யோசிக்கையிலேயே, "பாவம்! அந்த டைரக்டர் நடிப்பை நம்பி, மகா நல்லவன் என்று நினைத்திருப்பாய்! அப்படியில்லை என்பதே, உனக்கு அதிர்ச்சியாக இருக்கும்!" என்று தங்கைக்காக இரங்கினான் பூபாலன்.
சட்டென உறுத்தியது!
இல்லையே! அவன் நல்லவன் என்று சொல்லிக் கொள்ளவில்லையே! மோசமாக வாழ்ந்ததாகத்தானே சொன்னான்! அதுவும் மித்ராவின் விபத்தின் போது, தப்பாக நடந்ததை, மிகுந்த வருத்தத்துடன் கூறினானே!
அல்லது, அந்த வருத்தமே நடிப்பா?
எப்படியாயினும், ஒன்றுமே செய்யாமல், ஒரு கேள்வியேனும் கேட்காமல் போகக் கூடாது என்று தோன்றியது அவளுக்கு.
தப்புச் செய்யாதவள்! அவள் எதற்காகக் கோழையைப் போல ஓடி மறைவது?
அத்தோடு, பதில் சொல்ல, அவனுக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துத்தானே ஆக வேண்டும்?
பூபாலனுக்கும் பிடிக்கவில்லைதான்!
ஆனால், கோழைத்தனம் கூடாது என்பதில் அவனுக்கும் ஒப்புதல் இருக்கவே, அரை மனதாய் அவன் சம்மதிக்க, தீபன் கொடுத்த எண்ணுடன் தொடர்பு கொண்டு, அவனுடன் பேச வேண்டும் என்றாள் சந்தனா.
"யார், சந்தனாவா? எப்படி இருக்கிறாய். வந்ததில் இருந்து, மித்ராவுக்கு உன்னைப் பற்றிய பேச்சுதான்! அவள் இல்லாமல், அங்கே போரடிக்கிறதா?" என்று சந்தோஷமாகக் குசலம் விசாரித்தாள் எலிசா.
ஆனால், தீபனுடன் பேசுவது பற்றி, சந்தனா மீண்டும் கேட்கவும், "சாரி!" என்று வருத்தம் தெரிவித்தாள் அவள். "இது லாஸ் ஏஞ்சலிஸ், சந்தனா! வேறே மாதிரி உலகம்! நேற்றுதான், தீபனின் அடுத்த படத்துத் தொடக்கவிழா நடந்தது! படத்துக் கதாநாயகியும், டைரக்டரும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லவா? இப்போது, இங்கே இரவு நேரம்! வேண்டுமானால், நாளைக் காலையில் தீபனைச் சந்திக்கும் போது, நீ கூப்பிட்டாய் என்று சொல்லட்டுமா?"
எலிசா சொல்லாமல் சொன்னதில், சந்தனாவின் மனம் நொந்து போயிற்று!
காட்டிக் கொள்ள மனம் இன்றி, மித்ராவைப் பற்றி மட்டும் விசாரித்து விட்டு போனை வைத்தாள்!
ஒரு வேளை, இந்த எலிசா கெட்டவளாக இருக்கலாமோ?
ஆனால், அதற்குக் காரணமே இல்லையே! அவள் வெறும் ஏஜெண்ட்! சில ஆண்டுகளாகப் பழகியதில், மித்ராவைப் பார்த்துக் கொள்கிறாள்! மற்றபடி, தீபனின் சொந்த வாழ்வில் அவளுக்கு இடம் இல்லை என்பது, சந்தனாவுக்குத் தெரியும்.
தீபனுமே, வேறு எண் எதுவும் தரவில்லையே!
முழுக்கத் தோற்றுவிட்ட, உணர்வுடன், தன் பொருட்களை எடுத்து வைத்தாள் சந்தனா!
மீனாட்சி வந்ததும், அவளிடம் சொல்லிக் கொண்டு, அண்ணனும் தங்கையும் கிளம்பினர்.
ஒரு தரம் தடுத்த போதும், சின்னவர்கள் வெளியேறுவதில் பிடிவாதமாக இருந்தனர்.
சந்தனாவின் கண்களில் இருந்த நிராசையைப் பார்த்த பிறகு, மீனாட்சியும், அதற்கு மேல் அவர்களை வற்புறுத்தவும் இல்லை!
அவர்கள் சென்ற பிறகு, உட்கார்ந்து என்ன செய்வது என்று யோசித்தாள்!
அன்றிரவு 'லேட்நைட் டின்னர்!'
திரைப்படத்தின் கதைப் போக்கு, அதன் பாத்திரங்களின் மன நிலை போன்றவைகளை, நடிப்பவர்களுடன் பேசி முடித்துவிட்டு, தீபனும் எலிசாவும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்!
எலிசாவை அவளது கார் நிற்கும் இடத்தில் விட்டுவிட்டு, தீபன் தன் வீடு செல்ல வேண்டும்!
மறுநாளைய வேலைத் திட்டத்தைப் பேசியவாறே, இருவரும் சென்று கொண்டிருந்த போது திடுமென, "உன் மகளைத் தாய்க்குத் தாயாக, நான் பார்த்துக் கொள்கிறேன்! உடம்பு சுகத்துக்கும், இங்கே பிரச்சினையே கிடையாது! நல்ல, ஆரோக்கியமான பெண்களை, நானே ஏற்பாடு செய்து தருகிறேன் அனாவசியமாக மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே! நீ முழுக்கவனத்தையும், படம் எடுப்பதில் செலுத்து!" என்று அறிவுரை கூறினாள் எலிசா!
ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு!
திடீரென்று, இப்படி ஓர் அறிவுரை எதற்கு?
மீண்டும் பந்தத்தில் மாட்டிக் கொள்ளாதே என்றால், திருமணம் செய்யாதே என்றல்லவா கூறுகிறாள்!
அவனது திருமணத்தை எலிசா விரும்பவில்லை என்றால், அதன் அர்த்தம் சரியில்லையே!
ஆனால், நலபடியாகக் குடும்பம் நடத்துகிறவள் என்பதால், இவளுக்குத் தப்பான எண்ணம் இருக்க முடியாது!
ஆனால், ஏதோ இருக்கிறது!
உள்ளே குறுகுறுப்பு அதிகம் ஆகவும், "என்ன எலிசா, என்னவோ விஷயம் இருக்கிறாற் போலத் தெரிகிறதே! உனக்கே என் மேலே ஒரு கண்ணா?" என்று வேடிக்கைப் போலத் தீபன் கேட்டுவிட்டான்!
அவளது மேக்கப்பிலும் நிறம் மாறி, "ஓ, ஷட்டப், டீப்! ஒரு தமக்கையைப் போல, உன் மேல் உள்ள அக்கறையில், உனக்கு நல்லது சொன்னேன்! பிரச்சினை இல்லாத ஆரோக்கியமான எத்தனையோ பேர்..." என்று அதிலேயே நின்றாள் அவள்.
இடையிட்டு, "நான் தான் பெண்களே வேண்டாம் என்கிறேனே. பிறகு எதற்கு, இந்த ஆரோக்கியமான... அல்லாத... எல்லாம்?" என்று கேட்டான் தீபன்.
"இல்லை, டீப்! அது இயற்கைக்குப் புறம்பானது! அவ்வப்போது அதுவும் இல்லாவிட்டால், உன்னால் ஒழுங்காக வேலை செய்ய முடியாது! அதனால் தான்..."
"அதற்காகத்தான் ஓர் ஏற்பாடு செய்ய எண்ணியிருக்..." என்றவன் வாக்கியத்தை முடிக்கும் முன்னரே, "அதைத்தான் சொன்னேன்! முன்னைப் போல மாட்டிக் கொள்ளாதே என்று. சொன்னால், கேள்!" என்று கிரீச்சிட்டாள் எலிசா.
தீபன் வியப்புடன் திரும்பிப் பார்க்கவும், சட்டெனக் குரலைத் தணித்தாள்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
"சொன்னால் கேட்டு நட, டீப்! ஓர் அனுபவம் போதாதா? நிரந்தரத் திட்டம் எதுவும் உனக்குச் சரிப்பட்டு வராது! அதனால், சும்மா அவ்வப்போது..." என்று மீண்டும் பழைய பல்லவியையே அவள் பாடவும், அவன் பொறுமையிழந்தான்!
"இந்தப் பேச்சு இனி வேண்டாம்! விடு எலிசா!" என்று, மறுக்க முடியாத, ஓர் இறுகிய குரலில் கூறி முடித்தான் அவன்!
அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், அவனுக்கு ஒரே யோசனை!
ஓர் உறவினரைப் போலப் பழகிய எலிசா, அவன் ஒழுங்காகத் திருமணம் செய்து வாழ்வதை விரும்பவில்லை என்பதை அறியும் போது, அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது!
அதுவும், இன்று அவள் இந்தப் பேச்சை எடுத்து, இவ்வளவு தீவிரமாகப் பேசுவானேன்?
என்னவோ நடந்திருக்கிறது!
பொதுவாகச் சென்னையில் தாயோடு, தீபனது தொடர்பு, எலிசாவின் செல் மூலமாகத்தான்!
பரபரப்பான செய்திக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதை அறிந்த பிறகும், தன் போனில் தாயோடு பேசி, அவளையும் இவர்கள் கொத்திக் குதற விட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில், அவன் செய்த ஏற்பாடு!
அதே கருத்தோடுதான், சந்தனாவிடமும் எலிசாவின் செல் எண்ணையே தந்திருந்தான்!
அவள் எதற்கேனும், அவனோடு தொடர்பு கொள்ள முயன்றிருப்பாளா என்று யோசிக்கும் போதே, அவனது நெஞ்சுத் துடிப்பு வேகமாயிற்று!
என்னவாக இருக்கும்?
அன்னைக்கு எதுவும் இராது என்று, அவனுக்குத் தெரியும்! அவனை பெற்றவளுக்கு ஏதேனும் சுகவீனம் என்றால், 'சுகம்' பெரிய டாக்டர், அவனை அப்போதே தொடர்பு கொண்டிருப்பார்! அதற்கு அவன் வேறு ஏற்பாடு செய்திருந்தான்!
இப்போது பார்த்தால், சந்தனாதான் எதற்கோ பேசியிருக்க வேண்டும் என்று, தீபனுக்கு நிச்சயமாகத் தோன்றியது!
திருமணம் பற்றி, எலிசா பேச வேண்டுமானால்...
சந்தனாவிடம், எந்தக் கழுகு மூக்குக்காரருக்கும் தெரியாமல் எப்படிப் பேசுவது என்று யோசித்தபடியே வீட்டை அடைந்தால், மித்ராவுடைய விளையாட்டுத் தோழனான மிச்சியும், அவனுடைய தந்தை நாகோட்டாவும், நள்ளிரவு தாண்டிய அந்த நேரத்திலும் அவனுக்காக, அங்கே காத்திருந்தார்கள்!
தீபன் புரியாது திகைக்கவும், முகம் கன்றிய நாகோட்டா, "இந்தப் பையனின் பிடிவாதம், சார்! உங்கள் அம்மா, எங்கள் வீட்டுக்கு போன் செய்தார்களாம்! தன்னுடன் உடனே பேசும்படி, உங்களிடம் சொல்லச் சொன்னார்களாம்! செய்தியை நேரில் சொன்னால் நூறு டாலர் கொடுப்பீர்கள் என்றார்களாம்! உங்களிடம் விஷயத்தை சொல்லாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று இவன் ஒரேயடியாக நின்றுவிட்டான்! இல்லை, சார்! இவன் சொன்னான் என்பதற்காக, நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை!" என்று, தீபன் கோட்டுப் பையிலிருந்து பணப்பையை எடுப்பதைப் பார்த்துவிட்டு, அவசரமாகச் சேர்த்துச் சொன்னார்.
தாயின் கெட்டிக்காரத்தனத்தை உள்ளூர மெச்சியவாறே முறுவலித்து, "அதற்காக மட்டும் அல்ல மிஸ்டர் நாகோட்டா! உங்கள் செல்லைக் கொஞ்சம் பயன்படுத்துவதற்கு, எனக்குத் தரவேண்டும்!" என்று இரண்டு நூறு டாலர் நோட்டுகளை எடுத்து கொடுத்தான் தீபன்.
செல்லை நீட்டியவாறு, "இந்த நேரத்திலா, மிஸ்டர் டீப்?" என்று கேட்டார் அவர்.
"இந்தியாவில் இப்போது பகல் தான் மிஸ்டர் நாகோட்டா!" என்று விட்டு, செல்லை வாங்கிப் பேசினான்.
தாய் சொன்னதைக் கேட்டுவிட்டு, "இங்கே ஒருத்தியை, உங்களுக்கு எப்போதுமே பிடிக்காது! அவளது வேலைதான் என்று நினைக்கிறேன். சந்தனா பற்றிக் கவலைப்படாதீர்கள். அவள் பொறுப்பற்றவள் அல்ல! பள்ளி வேலையை அவசரப்பட்டு விடமாட்டாள். அதுவும், அடுத்த மாதம் முழுப் பரீட்சை எனும் போது, நிச்சயம் மாட்டாள். அதனால் அவளை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்! அதனால் இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்! நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்! கவலைப்படாதீர்கள்! நான் பேசுவது, மிச்சி அப்பா போனில் தான். மித்தியிடம் இருந்து, அவன் எண்ணை நீங்கள் வாங்கி வைத்தது, ரொம்பவும் நல்லதாகிப் போயிற்று! உம்! கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தேன் என்று, என் மீது, இன்னமும் கோபமாக இருக்கிறாள்! சரியாகிவிடும் அம்மா! கவலை வேண்டாம். பை" என்று பேச்சை முடித்தான்.
மேலும் இரண்டு வார்த்தை பேசி, அவரை அனுப்பி வைத்தான்!
ஆக, எலிசாவிடம் பேசியது சந்தனாதான்!
அவளுடைய அண்ணனின் துணையோடுதான் இருக்கிறாள்!
ஒரு மாதம் முன்னதாக, அவளுடைய அண்ணன் போனதும்... அதற்கும் எலிசாதான் காரணமாக இருக்குமோ?
இங்கே தொடக்க விழாவை விரைவுப்படுத்தியது, அவளே!
அது, அவனை உடனே இங்கே வரவழைப்பதற்காக இருக்கலாம்!
ஆனால், எதற்காக உடனே வரவழைக்க வேண்டும்?
கண்மூடி யோசிக்கையில், உடனே புரிந்தது!
அன்று பூபாலன் பற்றிச் சொல்வதற்காக எலிசா போன் செய்த போது, மித்ரா அவளிடம் என்னவெல்லாம் சொன்னாள்!
வரிகளுக்கு இடையே தேடுவது என்பார்களே!
மித்தியின் பேச்சில், எத்தனையோ கண்டுபிடிக்கலாமே!
சந்தனாவுடைய அண்ணனைக் கிளப்பி அனுப்பியதும், அவளாகவே இருக்கக் கூடும்!
பூபாலனின் முகவரியைச் சொல்லி, அவளுக்கு வசதி பண்ணிக் கொடுத்ததே, தீபன் தான்...!
தொடக்க விழாவை முன்னே வைத்து, அவனை இங்கே கொணர்ந்து, பூபாலனை அங்கே அனுப்பி, அவன் தங்கையைக் கூட்டிப் போக வைத்து... எலிசா, எமகாதக வேலைதான் செய்திருக்கிறாள்!
வீட்டிலிருந்து யார் போன் பண்ணினாலும், தன் செல்லுக்குத்தானே பண்ணுவார்கள், சரியாகச் சொல்லாமல் படம் தொடங்கும் வரை, தள்ளிப் போட்டு விடலாம் என்று எண்ணியிருப்பாள்!
படம் தொடங்கிவிட்டால், இடையில் கிளம்புவது முடியாதுதானே?
ஆனால், அவனுடைய அன்னையின் அறிவுத்திறன் தெரியாமல், எலிசா திட்டம் போட்டுவிட்டாள்!
திறப்பு விழாவை முன்னே தள்ளியது, ஒரு வகையில் தீபனுக்கு வசதியாயிற்று!
படப்பிடிப்பு தொடங்குமுன் ஓர் இடைவெளி கிடைத்தது!
யாரிடமும், எதுவும் சொல்லாமல், தானே போய், டிக்கெட் எடுத்து வந்தான் தீபன்.
மீனாட்சி ஆன்ட்டியின் வீட்டை விட்டு சந்தனா வெளியே வந்து, இன்னமும் முழுதாக ஒரு வாரம் முடியவில்லை!
அதற்குள் மாதக் கணக்கில் நோய்ப்பட்டுக் கிடந்தது போன்ற உணர்வு அவளுக்கு!
அன்றும் அப்படித்தான்! பள்ளியில் இருந்து, சோர்வுடன் வீடு திரும்பினாள்.
அண்ணனின் அலுவலக கெஸ்ட் ஹவுஸ்! வேறு வீடு கிடைக்கும் வரை, தங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்! அவர்கள் வீடே கிடைக்கும் இன்னும் ஒரு மாதத்தில்! அதுவரை, இங்கேதான்...
சோர்வுடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்று கதவை மூட முயன்றால், கதவைத் தள்ளிக் கொண்டு, யாரோ உள்ளே வந்தார்கள்!
யாரோ அல்ல தீபன்!
உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் கட்டை விரலை விட்டு நின்றபடி, அவளை ஏற இறங்கப் பார்த்தான் அவன்!
"என்னம்மா, வெட்டிக் கொண்டு வந்தாயே! பிரிவு சந்தோ...ஷமாக இருக்கிறதா?"
குத்தலாகக் கேட்டபோதும், உடனேயே உருகி, அவளை இழுத்து அணைத்தான் அவன்!
"என்னடா இது? உடம்பை இப்படிக் காய விட்டிருக்கிறாயே! ஒரு வேளையாவது, ஒழுங்காகச் சாப்பிடுவாயா, இல்லையா?"
உண்மை அன்பு இல்லாதவனால், இப்படிக் கேட்க முடியுமா?
அவன் தோளில் சாய்ந்தபடியே நின்று, "நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்று ஒரு விசும்பலுடன் கேட்டாள்!
ஒரு கணம் திகைத்து, "ஓ தெரிந்து விட்டதா? ஆனால், அதற்காகவா... அதற்கும் நீ பிரிந்து வருவதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டான் தீபன்!
என்ன சாதாரணமாகக் கேட்கிறான்!
"பின்னே? எத்தனையோ மில்லியன் டாலர் பட்ஜெட் படம் என்றார்களே! அத்தனை மில்லியன் செலவு செய்து படம் எடுக்கிறவர், அதை விட்டு, அந்தத் தகதக வாழ்க்கையை விட்டு, அவர் என்னைத் தேடி எப்படி வருவார் என்று..."
அவன் முகத்தில் கடுப்பு தெரிந்தது! "ஆனால், எத்தனை மில்லியன் டாலர் செலவு செய்து படம் எடுக்கிறவனுக்கும், மனைவி குழந்தை இருக்கலாம் தானே?" என்றான் கிண்டலும் எரிச்சலுமாக.
அவளுக்கும் ஆத்திரம் வந்தது! "இருக்கலாம், இருக்கலாம்! ஆனால், அந்த டைரக்டர் தான் யார் என்பதையே மனைவியிடம் மறைப்பாரா, என்ன?" என்றாள் வெடுக்கென.
அவளை ஆழப் பார்த்து, "ஆக மறைத்ததுதான் தப்பாகி விட்டதா? ஏன் மறைத்தேன் என்று யோசிக்கலாம் தானே அல்லது அப்படி யோசிக்கிற அசட்டுத்தனங்கள் எல்லாம், அங்கே இல்லையா?" என்று பழைய மாதிரியே கேட்டான் தீபன்.
அவனுள்ளே கோபம் இருந்தது! தன் குறைகளைக் கூட மறையாது சொல்லியும், தன்னை நம்பவில்லையே என்ற கோபம்! நம்பாமல், தாயையும் வருத்தி, தன்னையும் வருத்திக் கொண்டு இப்படி இருக்கிறாளே என்ற கோபம்!
"எல்லாம் யோசித்தேன்!" என்றாள் அவள் சுருக்கமாக!
"என்னவென்று?" என்று அவளை விடச் சுருக்கமாகக் கேட்டான் அவன்
சொல்லத் தயங்கினாள் சந்தனா!
எவ்வளவு மோசமாக நினைத்தாள்! அதைக் கூசாமல் எப்படிச் சொல்வது?
பதில் சொல்லாமல் அவள் தயங்கி நின்றாள்.
(முற்றும்)
ரமணி சந்திரன்
"இந்தப் பேச்சு இனி வேண்டாம்! விடு எலிசா!" என்று, மறுக்க முடியாத, ஓர் இறுகிய குரலில் கூறி முடித்தான் அவன்!
அவளை இறக்கி விட்டுவிட்டுத் தன் வீட்டுக்குச் செல்லும் வழியெல்லாம், அவனுக்கு ஒரே யோசனை!
ஓர் உறவினரைப் போலப் பழகிய எலிசா, அவன் ஒழுங்காகத் திருமணம் செய்து வாழ்வதை விரும்பவில்லை என்பதை அறியும் போது, அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது!
அதுவும், இன்று அவள் இந்தப் பேச்சை எடுத்து, இவ்வளவு தீவிரமாகப் பேசுவானேன்?
என்னவோ நடந்திருக்கிறது!
பொதுவாகச் சென்னையில் தாயோடு, தீபனது தொடர்பு, எலிசாவின் செல் மூலமாகத்தான்!
பரபரப்பான செய்திக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதை அறிந்த பிறகும், தன் போனில் தாயோடு பேசி, அவளையும் இவர்கள் கொத்திக் குதற விட்டு விடக் கூடாது என்ற எண்ணத்தில், அவன் செய்த ஏற்பாடு!
அதே கருத்தோடுதான், சந்தனாவிடமும் எலிசாவின் செல் எண்ணையே தந்திருந்தான்!
அவள் எதற்கேனும், அவனோடு தொடர்பு கொள்ள முயன்றிருப்பாளா என்று யோசிக்கும் போதே, அவனது நெஞ்சுத் துடிப்பு வேகமாயிற்று!
என்னவாக இருக்கும்?
அன்னைக்கு எதுவும் இராது என்று, அவனுக்குத் தெரியும்! அவனை பெற்றவளுக்கு ஏதேனும் சுகவீனம் என்றால், 'சுகம்' பெரிய டாக்டர், அவனை அப்போதே தொடர்பு கொண்டிருப்பார்! அதற்கு அவன் வேறு ஏற்பாடு செய்திருந்தான்!
இப்போது பார்த்தால், சந்தனாதான் எதற்கோ பேசியிருக்க வேண்டும் என்று, தீபனுக்கு நிச்சயமாகத் தோன்றியது!
திருமணம் பற்றி, எலிசா பேச வேண்டுமானால்...
சந்தனாவிடம், எந்தக் கழுகு மூக்குக்காரருக்கும் தெரியாமல் எப்படிப் பேசுவது என்று யோசித்தபடியே வீட்டை அடைந்தால், மித்ராவுடைய விளையாட்டுத் தோழனான மிச்சியும், அவனுடைய தந்தை நாகோட்டாவும், நள்ளிரவு தாண்டிய அந்த நேரத்திலும் அவனுக்காக, அங்கே காத்திருந்தார்கள்!
தீபன் புரியாது திகைக்கவும், முகம் கன்றிய நாகோட்டா, "இந்தப் பையனின் பிடிவாதம், சார்! உங்கள் அம்மா, எங்கள் வீட்டுக்கு போன் செய்தார்களாம்! தன்னுடன் உடனே பேசும்படி, உங்களிடம் சொல்லச் சொன்னார்களாம்! செய்தியை நேரில் சொன்னால் நூறு டாலர் கொடுப்பீர்கள் என்றார்களாம்! உங்களிடம் விஷயத்தை சொல்லாமல் வீட்டுக்கு வரமாட்டேன் என்று இவன் ஒரேயடியாக நின்றுவிட்டான்! இல்லை, சார்! இவன் சொன்னான் என்பதற்காக, நீங்கள் பணம் கொடுக்கத் தேவையில்லை!" என்று, தீபன் கோட்டுப் பையிலிருந்து பணப்பையை எடுப்பதைப் பார்த்துவிட்டு, அவசரமாகச் சேர்த்துச் சொன்னார்.
தாயின் கெட்டிக்காரத்தனத்தை உள்ளூர மெச்சியவாறே முறுவலித்து, "அதற்காக மட்டும் அல்ல மிஸ்டர் நாகோட்டா! உங்கள் செல்லைக் கொஞ்சம் பயன்படுத்துவதற்கு, எனக்குத் தரவேண்டும்!" என்று இரண்டு நூறு டாலர் நோட்டுகளை எடுத்து கொடுத்தான் தீபன்.
செல்லை நீட்டியவாறு, "இந்த நேரத்திலா, மிஸ்டர் டீப்?" என்று கேட்டார் அவர்.
"இந்தியாவில் இப்போது பகல் தான் மிஸ்டர் நாகோட்டா!" என்று விட்டு, செல்லை வாங்கிப் பேசினான்.
தாய் சொன்னதைக் கேட்டுவிட்டு, "இங்கே ஒருத்தியை, உங்களுக்கு எப்போதுமே பிடிக்காது! அவளது வேலைதான் என்று நினைக்கிறேன். சந்தனா பற்றிக் கவலைப்படாதீர்கள். அவள் பொறுப்பற்றவள் அல்ல! பள்ளி வேலையை அவசரப்பட்டு விடமாட்டாள். அதுவும், அடுத்த மாதம் முழுப் பரீட்சை எனும் போது, நிச்சயம் மாட்டாள். அதனால் அவளை எப்போது வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம்! அதனால் இப்போதைக்கு எதுவும் செய்ய வேண்டாம்! நான் வந்து பார்த்துக் கொள்கிறேன்! கவலைப்படாதீர்கள்! நான் பேசுவது, மிச்சி அப்பா போனில் தான். மித்தியிடம் இருந்து, அவன் எண்ணை நீங்கள் வாங்கி வைத்தது, ரொம்பவும் நல்லதாகிப் போயிற்று! உம்! கட்டாயப்படுத்திக் கூட்டி வந்தேன் என்று, என் மீது, இன்னமும் கோபமாக இருக்கிறாள்! சரியாகிவிடும் அம்மா! கவலை வேண்டாம். பை" என்று பேச்சை முடித்தான்.
மேலும் இரண்டு வார்த்தை பேசி, அவரை அனுப்பி வைத்தான்!
ஆக, எலிசாவிடம் பேசியது சந்தனாதான்!
அவளுடைய அண்ணனின் துணையோடுதான் இருக்கிறாள்!
ஒரு மாதம் முன்னதாக, அவளுடைய அண்ணன் போனதும்... அதற்கும் எலிசாதான் காரணமாக இருக்குமோ?
இங்கே தொடக்க விழாவை விரைவுப்படுத்தியது, அவளே!
அது, அவனை உடனே இங்கே வரவழைப்பதற்காக இருக்கலாம்!
ஆனால், எதற்காக உடனே வரவழைக்க வேண்டும்?
கண்மூடி யோசிக்கையில், உடனே புரிந்தது!
அன்று பூபாலன் பற்றிச் சொல்வதற்காக எலிசா போன் செய்த போது, மித்ரா அவளிடம் என்னவெல்லாம் சொன்னாள்!
வரிகளுக்கு இடையே தேடுவது என்பார்களே!
மித்தியின் பேச்சில், எத்தனையோ கண்டுபிடிக்கலாமே!
சந்தனாவுடைய அண்ணனைக் கிளப்பி அனுப்பியதும், அவளாகவே இருக்கக் கூடும்!
பூபாலனின் முகவரியைச் சொல்லி, அவளுக்கு வசதி பண்ணிக் கொடுத்ததே, தீபன் தான்...!
தொடக்க விழாவை முன்னே வைத்து, அவனை இங்கே கொணர்ந்து, பூபாலனை அங்கே அனுப்பி, அவன் தங்கையைக் கூட்டிப் போக வைத்து... எலிசா, எமகாதக வேலைதான் செய்திருக்கிறாள்!
வீட்டிலிருந்து யார் போன் பண்ணினாலும், தன் செல்லுக்குத்தானே பண்ணுவார்கள், சரியாகச் சொல்லாமல் படம் தொடங்கும் வரை, தள்ளிப் போட்டு விடலாம் என்று எண்ணியிருப்பாள்!
படம் தொடங்கிவிட்டால், இடையில் கிளம்புவது முடியாதுதானே?
ஆனால், அவனுடைய அன்னையின் அறிவுத்திறன் தெரியாமல், எலிசா திட்டம் போட்டுவிட்டாள்!
திறப்பு விழாவை முன்னே தள்ளியது, ஒரு வகையில் தீபனுக்கு வசதியாயிற்று!
படப்பிடிப்பு தொடங்குமுன் ஓர் இடைவெளி கிடைத்தது!
யாரிடமும், எதுவும் சொல்லாமல், தானே போய், டிக்கெட் எடுத்து வந்தான் தீபன்.
மீனாட்சி ஆன்ட்டியின் வீட்டை விட்டு சந்தனா வெளியே வந்து, இன்னமும் முழுதாக ஒரு வாரம் முடியவில்லை!
அதற்குள் மாதக் கணக்கில் நோய்ப்பட்டுக் கிடந்தது போன்ற உணர்வு அவளுக்கு!
அன்றும் அப்படித்தான்! பள்ளியில் இருந்து, சோர்வுடன் வீடு திரும்பினாள்.
அண்ணனின் அலுவலக கெஸ்ட் ஹவுஸ்! வேறு வீடு கிடைக்கும் வரை, தங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்! அவர்கள் வீடே கிடைக்கும் இன்னும் ஒரு மாதத்தில்! அதுவரை, இங்கேதான்...
சோர்வுடன் வீட்டைத் திறந்து உள்ளே சென்று கதவை மூட முயன்றால், கதவைத் தள்ளிக் கொண்டு, யாரோ உள்ளே வந்தார்கள்!
யாரோ அல்ல தீபன்!
உள்ளே வந்து கதவைச் சாத்திவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் கட்டை விரலை விட்டு நின்றபடி, அவளை ஏற இறங்கப் பார்த்தான் அவன்!
"என்னம்மா, வெட்டிக் கொண்டு வந்தாயே! பிரிவு சந்தோ...ஷமாக இருக்கிறதா?"
குத்தலாகக் கேட்டபோதும், உடனேயே உருகி, அவளை இழுத்து அணைத்தான் அவன்!
"என்னடா இது? உடம்பை இப்படிக் காய விட்டிருக்கிறாயே! ஒரு வேளையாவது, ஒழுங்காகச் சாப்பிடுவாயா, இல்லையா?"
உண்மை அன்பு இல்லாதவனால், இப்படிக் கேட்க முடியுமா?
அவன் தோளில் சாய்ந்தபடியே நின்று, "நீங்கள் ஏன் என்னிடம் சொல்லவில்லை?" என்று ஒரு விசும்பலுடன் கேட்டாள்!
ஒரு கணம் திகைத்து, "ஓ தெரிந்து விட்டதா? ஆனால், அதற்காகவா... அதற்கும் நீ பிரிந்து வருவதற்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டான் தீபன்!
என்ன சாதாரணமாகக் கேட்கிறான்!
"பின்னே? எத்தனையோ மில்லியன் டாலர் பட்ஜெட் படம் என்றார்களே! அத்தனை மில்லியன் செலவு செய்து படம் எடுக்கிறவர், அதை விட்டு, அந்தத் தகதக வாழ்க்கையை விட்டு, அவர் என்னைத் தேடி எப்படி வருவார் என்று..."
அவன் முகத்தில் கடுப்பு தெரிந்தது! "ஆனால், எத்தனை மில்லியன் டாலர் செலவு செய்து படம் எடுக்கிறவனுக்கும், மனைவி குழந்தை இருக்கலாம் தானே?" என்றான் கிண்டலும் எரிச்சலுமாக.
அவளுக்கும் ஆத்திரம் வந்தது! "இருக்கலாம், இருக்கலாம்! ஆனால், அந்த டைரக்டர் தான் யார் என்பதையே மனைவியிடம் மறைப்பாரா, என்ன?" என்றாள் வெடுக்கென.
அவளை ஆழப் பார்த்து, "ஆக மறைத்ததுதான் தப்பாகி விட்டதா? ஏன் மறைத்தேன் என்று யோசிக்கலாம் தானே அல்லது அப்படி யோசிக்கிற அசட்டுத்தனங்கள் எல்லாம், அங்கே இல்லையா?" என்று பழைய மாதிரியே கேட்டான் தீபன்.
அவனுள்ளே கோபம் இருந்தது! தன் குறைகளைக் கூட மறையாது சொல்லியும், தன்னை நம்பவில்லையே என்ற கோபம்! நம்பாமல், தாயையும் வருத்தி, தன்னையும் வருத்திக் கொண்டு இப்படி இருக்கிறாளே என்ற கோபம்!
"எல்லாம் யோசித்தேன்!" என்றாள் அவள் சுருக்கமாக!
"என்னவென்று?" என்று அவளை விடச் சுருக்கமாகக் கேட்டான் அவன்
சொல்லத் தயங்கினாள் சந்தனா!
எவ்வளவு மோசமாக நினைத்தாள்! அதைக் கூசாமல் எப்படிச் சொல்வது?
பதில் சொல்லாமல் அவள் தயங்கி நின்றாள்.
(முற்றும்)
ரமணி சந்திரன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமணிச்சந்திரன் கதைகள் படிக்க படிக்க எனக்கு திகட்டுவதே இல்லை...
அதுவும் அன்புடன் குறும்புடன் சந்தனாவை தீபன் கேட்கும் கேள்விகள் ரசிக்க வைத்தது....
ரமணிச்சந்திரன் கதையாச்சே...முடிவு சுபம் தான்....
அன்பு நன்றிகள் சிவா... ரமணிச்சந்திரன் கதை பகிர்ந்தமைக்கு.... அவங்க எழுத்தின் இளமை இன்னும் அப்படியே இருக்கு....
அதுவும் அன்புடன் குறும்புடன் சந்தனாவை தீபன் கேட்கும் கேள்விகள் ரசிக்க வைத்தது....
ரமணிச்சந்திரன் கதையாச்சே...முடிவு சுபம் தான்....
அன்பு நன்றிகள் சிவா... ரமணிச்சந்திரன் கதை பகிர்ந்தமைக்கு.... அவங்க எழுத்தின் இளமை இன்னும் அப்படியே இருக்கு....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 4
|
|