புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
68 Posts - 53%
heezulia
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
1 Post - 1%
Shivanya
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
15 Posts - 3%
prajai
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
9 Posts - 2%
jairam
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Jenila
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எல்லாமே நீயல்லவோ


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:15 pm

First topic message reminder :

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!

காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.

பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!

'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!

என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!

பிணம் தின்னிக் கழுகுகள்!

புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?

மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!

ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!

லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.

இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!

மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!

அறை திறந்தே இருந்தது!

உள்ளே அவளும் இருந்தாள்!

அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!

காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.

எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!

அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!

அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.

'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.

கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!

கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!

இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!

சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!

ஆனால், இன்று என்ன ஆயிற்று?

பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!

செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.

"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.

படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?

ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!

அல்லது...

"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"

அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...

"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.

வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"

"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."

"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!

"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."

"ஐயோ!"

சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.

வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?

"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."

"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:27 pm

தீபனின் பார்வையைச் சந்தனா பெரிதாக நினைக்கவில்லை!

அவனைப் பொறுத்தவரையில், சந்தனா கெட்டவள்! அவனைப் பற்றிய விவரங்களைக் கண்டறிந்து, அதாவது அவனைப் பற்றிய மோசமான விவரங்களைக் கண்டறிந்து, ஏதோ அமெரிக்கப் பத்திரிகைக்கு அனுப்புவதற்காகவே, வேறு ஏதோ காரணத்தைக் காட்டி அவனுடைய அன்னையை ஏமாற்றி, இங்கே வந்து உட்கார்ந்து கொண்டு இருக்கிறாள்!

யார் என்ன சொன்னாலும், இந்த எண்ணத்தை அவன் மாற்றிக் கொள்ளப் போவது இல்லை!

போகட்டும்! அவனது கருத்து அவனோடு என்று சந்தனாவும் அதைப் பற்றி யோசிப்பதை விட்டுவிட்டாள்!

எந்த வித ஆதாரமும் இல்லாத ஒரு கருத்தை அவனாக ஏற்படுத்தியதோடு, அதையே குரங்குப் பிடியாக ஒருவன் பிடித்துக் கொண்டிருந்தால், அதைப் பற்றி நினைப்பதே, நேர விரயம் தானே?

தன்னை ஒருவர் தப்பாக நினைப்பது, அதுவும் மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் அப்படி எண்ணுவது அவளுக்கு வருத்தம் தான்!

ஆனால், ஆன்ட்டியின் அபிப்பிராயப்படியே, தீபன் இன்னும் சில நாட்களில், தன் மாபெரும் சொர்க்கம் அமெரிக்காவுக்குப் பறந்துவிடப் போகிறான்! அங்கே போய், அவன் என்ன நினைத்தாலும், அது அவளைப் பாதிக்கப் போவது இல்லையே!

இங்கேயே, அப்படித்தான், பாதிப்பின்றி தான் இருக்க வேண்டும்! ஆனால், ஏனோ அவளால் ஒரேயடியாக அப்படி அலட்சியப் படுத்த முடியவில்லை!

அதனாலேயே ஒருவேளை, அவன் இங்கேயே இருந்து விடக் கூடுமோ என்ற எண்ணத்தில், தங்குவதற்கான இடத்துக்காக, நல்ல விடுதி ஒன்றைத் தேடிக் கொண்டேதான் இருந்தாள்!

ஆனால் மித்ரா?

அவளைப் பற்றிய கவலை, சந்தனாவுக்கு இருந்தது!

தந்தை சங்கமித்ரனின் பெயரில் பாதியை மகளுக்கு வைத்ததோடு மகள், தந்தை இருவருக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டதாகத் தீபன் எண்ணுகிறான் என்பது, சந்தனாவின் அபிப்பிராயம்!

மற்றபடி, தந்தை விட்டுச் சென்ற தொழிலையும் அவன் பார்க்கவில்லை!

பெற்ற மகளுக்கு வேண்டியதையும் செய்யவில்லை!

இந்த வயதில் அவள் அங்கே தனிக் குழந்தையாக வளர்வது போலத்தானே தெரிகிறது!

எப்போதோ ஒரு முறை சந்திக்கும் அக்கம் பக்கத்துக் குழந்தைகள் தவிர, அங்கே மித்ரா தனிமைச் சிறையில் தான் இருந்திருக்கிறாள்!

அவனுக்குப் பிடிக்காதுதான்! ஆனாலும், குழந்தையின் தனிமை ஏக்கம் பற்றித் தீபன் கிளம்பும் முன், அவனிடம் பேசியே ஆக வேண்டும் என்று, சந்தனா தீர்மானித்திருந்தாள்!

மித்ராவிடம் இருந்த பரிதாபத்தினாலேயே அவளுடைய தந்தைக்கு மறைத்து, அவளுடன் நெருங்கிப் பழக, சந்தனாவுக்குத் தயக்கமே வரவில்லை!

இங்கே இருக்கும் வரையேனும், மித்ராவுக்கு ஒரு துணை இருக்கட்டுமே!

இந்த எண்ணத்தினால், தீபன் அறியாமல், மித்ரா அவளது அறைக்கு வருவதும், பேசிப் பழகுவதும், தொடர்ந்து நடந்தது!

தீபன் அறியாமல் இது நடப்பதாகத்தான் சந்தனா நினைத்திருந்தாள்!

ஆனால், சில நாட்கள் கழித்து, ஒரு விடுமுறை தினத்தன்று, மீனாட்சியும், மித்ராவும் மதியத் தூக்கத்தில் ஆழ்ந்த பிறகு, அவளது அறைக் கதவைத் தட்டி, அறைக்குள் வந்த தீபன் வேறு சொன்னான்!

அந்த நேரத்தில், அவனை, அதுவும் அங்கே எதிர்பாராமல் திகைத்து நின்றவளின் தோளைப் பற்றி நகர்த்திவிட்டு, அறையினுள் வந்து, தன் மகள், சந்தனாவின் அறைக்கு அடிக்கடி வருவது, தனக்குத் தெரியும் என்றவன், "நீ எதற்காக என் மகளுக்கு இப்படி வலை விரிக்கிறாய் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும்" என்றும் சேர்த்துச் சொன்னான்!
வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா என்ன, மீனா? என்ன உளறல் என்று தோன்றியது சந்தனாவுக்கு! அத்தோடு, எப்போது பார்த்தாலும், ஏதாவது இல்லாத பொல்லாத குறை ஏதாவது சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமா என்று அவளுக்குக் கோபமும் வந்திருந்தது!

"வலை விரித்துப் பிடிப்பதற்கு, மித்ரா மீனோ, மானோ அல்ல என்பது என் தாழ்மையான அபிப்பிராயம்! ஆனால், உங்களுக்கு என்னவோ தெரியும் என்றீர்களே, அது என்னது, என் மனதுக்குள்ளே எனக்கே தெரியாமல் ஒளித்து வைத்திருந்தது, நீங்கள் கண்டுபிடித்துவிட்ட சிதம்பர ரகசியம்?" என்றாள் கிண்டலாக. "சொன்னால், அய்யோ பாவம், எதையும் அறியாத நானுமே அதைத் தெரிந்து கொள்ளுவேனே!"

"ஓகோ! இப்படி ஏளனமாகப் பேசினால், உண்மை, பொய்யாகிவிடும் என்கிற எண்ணமா?"

"அந்த உண்மை எது என்று சொன்னால் தானே, அது உண்மையா, பொய்யா என்பது தெரியும்?" என்று, மீண்டும் மட்டம் தட்டும் குரலிலேயே கேட்டாள் சந்தனா!

நல்லவேளை, ஆன்ட்டி இங்கே இல்லை! அவர்கள் எதிரில், அவர்களுடைய மகனை இப்படி மட்டம் தட்ட மனம் வராது!

"எது உண்மை என்று எனக்குத் தெரியும்! உன் சர்டிஃபிகேட் அவசியம் இல்லை!" என்றான் அவன் உதாசீனமாக.

"சந்தோஷம்! ஆனால், உண்மை உண்மை என்கிறீர்களே, அந்த உண்மை என்னவென்று சொல்ல மாட்டேன் என்கிறீர்களே! உண்மை சொல்வது, உங்களுக்கு அவ்வளவு கடினமா?"

இது நிஜமாகவே, நன்றாகத் தைக்கும் என்று எண்ணுகையில், சந்தனாவுக்கு உற்சாகமாகக் கூட இருந்தது!

தானுண்டு, தன் வேலையுண்டு என்று சும்மா இருக்கிறவளை, எத்தனை முறை இப்படி வலிக்கப் பேசியிருப்பான்! இப்போது, அவன் முறை! படட்டுமே என்று எண்ணும்போதே, இதற்காக வேறு தன் மீது ஆத்திரப்படுவானே என்று, அவளுக்குப் பெருமூச்சும் வந்தது!

"என்ன? கிண்டலாகப் பேசினால், சமாளித்து விடலாம் என்று எண்ணமா?"

"நீங்கள் தான், என்னவென்று சொல்லவே மாட்டேன் என்கிறீர்களே!"

"சொல்லாமலேதான், தெரியுமே என்று நினைத்தேன்! காது குளிரக் கேட்கத்தான் ஆசை என்றால், இதோ சொல்கிறேன், கேட்டுக்கொள்! அம்மாவை ஏமாற்றி, இந்த வீட்டுக்குள் வந்தாய்! அடுத்துச் சின்ன குழந்தையை மயக்கி, அவள் மூலமாக, என்னையும் வளைத்துப் போட்டு விடலாம் என்பது உன் திட்டம்...!"

சந்தனாவுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை!

வந்ததில் இருந்து, அவளிடம் கடுமையாக மட்டும் தான் பேசியிருக்கிறான்! நல்ல வார்த்தையே.. நல்ல வார்த்தை இருக்கட்டும், மனிதனுக்கு மனிதன் காட்டும் சுமுகம் கூடக் கிடையாது. இருந்திருந்து, இவனை வளைத்துப் போடுவதா?

எதற்கு?

அருகில் இருந்து கொத்திப் பிடுங்கிக் கொண்டே இருப்பதற்கா?

என்ன மடத்தனம்!

அவனிடமே கேட்டாள், "அப்படி உங்களை எதற்காக சார், நான் வளைத்துப் போட்டாக வேண்டும்?" என்று, புருவம் உயர்த்தி விசாரித்தாள் அவள்.

எதையோ சொல்ல வாயெடுத்துவிட்டு, அவளை ஊடுருவுவது போலப் பார்த்தான் தீபன்.

பிறகு, "எத்தனையோ காரணங்கள்! முக்கியமாக யுஎஸ் மோகம்! அதுதானே, உங்களுக்கெல்லாம் தலையாய குறிக்கோள்! அதை அடைவதற்குத்தான், என்ன வேண்டுமானாலும் செய்யலாமே!" என்றான் ஏளனமாக.

"இதை, நீங்கள் சொல்லுகிறீர்களா? தன் முதுகு தனக்குத் தெரியாது என்று சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்கள்! என்னவோ படிக்கப் போய், அந்த நாட்டிலேயே ஐக்கியமானவர்!..."
மீண்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, "நான் உன்னைப் பற்றிச் சொன்னேன்! அதற்குப் பதில் சொல்!" என்றான் அவன்.

"தாராளமாகச் சொல்லுகிறேன்!" என்று நிமிர்ந்தாள் சந்தனா. "யுஎஸ் ஒன்றும், யாராலும் எட்டிப் பிடிக்க முடியாத பூலோக சொர்க்கம் அல்ல. அதை அடைவதற்காக என்னத் தியாகம் வேண்டுமானாலும் செய்வதற்கு! இப்போது, என் அண்ணனே அங்கேதான் இருக்கிறான்...!"

"யாரை மோப்பம் பிடிக்க?" என்று குறுக்கிட்டுக் கேட்டான் தீபன்!

எரிச்சலுற்று "சே!" என்றாள் சந்தனா.

"எப்போது பார்த்தாலும், இதே பேச்சா? என் அண்ணனை, அவன் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து அங்கே அனுப்பியிருக்கிறார்கள்! எனக்காகவே, அண்ணன் திரும்பி வந்து விடுவதாக இருக்கிறான். அவனே இங்கே திரும்பி வந்துவிடும் போது, நான் எதற்காக அங்கே போக ஆசைப்பட வேண்டும்?"

"இதை, நம்பச் சொல்லுகிறாயா?" என்றான் அவன் பதிலுக்கு.

இதைவிட, நம்ப மாட்டேன் என்று நேராகவே சொல்லியிருக்கலாம்!

அசட்டையாகத் தோளைக் குலுக்கினாள் சந்தனா.



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:27 pm

"நான் நிஜத்தைச் சொன்னேன்! நம்புவதும், நம்பாததும், உங்கள் விருப்பம்! குதிரையைத் தண்ணீரிடம் கொண்டு போய் நிறுத்தத்தான் முடியும்! குடிக்க வைக்க முடியுமா? அது போலத்தான் இதுவும்! சொல்ல மட்டும் தான் முடியும்! ஆனால் ஒன்று! உங்களைப் போல, உண்மை சொல்லுவது, எனக்குக் கடினம் அல்ல!" என்றாள் அவள்.

சற்று அதிகப்படியாகப் பேசிவிட்டோமோ என்று அவளுக்குத் தோன்றத்தான் செய்தது!

ஆனால், அவனுக்கு இது அவசியம்! எப்போதோ செய்திருக்க வேண்டியது என்றும் தோன்றிவிட, சற்று அலட்சிய பாவனையுடனேயே நின்றாள்.

மறுபடியும் அவளை வெறித்துப் பார்த்துவிட்டு, "ஆசிரியர் மகள் என்றாயில்லையா? அதற்கு ஏற்பப் பிரமாதமாகப் பேசுகிறாய்! அந்த வகையில், உன்னைப் பாராட்டத்தான் வேண்டும்! ஆனால், உன் நோக்கம் எனக்குத் தெரியும்!" என்று தீபன் கூறவும், சந்தனாவின் மனம் சோர்ந்தது!

இவனிடம் பேசியது எல்லாம் வீண்!

விடையை வைத்துக் கொண்டு கணக்கு எழுதுவது போல, இவன் முடிவு செய்துவிட்டு, அதற்காக ஆதாரங்களைச் சேகரிக்கிறான். அவள் என்ன சொன்னாலும், செய்தாலும், அவன் விரும்பிய விதமாகத்தான், அதைச் சித்தரிக்கப் போகிறான்!

எனவே, இவனிடம் என்ன சொன்னாலும், எந்தப் பயனும் இராது!

எப்போதும் இப்படித்தானே, போகிறான் என்று அலட்சியப்படுத்த முடியாமல் உள்ளே வலித்தது!

ஆனால், அதைக் காட்டிக் கொள்ளாமல், தலையைத் திருப்பிக் கொண்டு, "தெரிந்து விட்டதல்லவா? ரொம்பவும் சந்தோஷம். இனி வெளியே போங்கள்!' என்று அசட்டை காட்ட முயன்றாள் அவள்.

"போவதா? உன் நோக்கம் தெரிந்து விட்ட பிறகும், அதற்கு வேண்டியதைச் செய்யாமல் வெளியே போனேன் என்றால் என்னைப் பற்றி என்ன நினைப்பாய்?" என்றதோடு, கதவைத் தாளிட்டான் அவன்!

"என்ன..." என்று அவள் திகைப்புற்றுத் திரும்பவும், "திருமணத்துக்கு மட்டும் ஆசைப்படாதே! ஒரு சூடு எனக்குப் போதும்! ஆனால், மற்றபடி உனக்கு ஏமாற்றம் இராது! பண விஷயத்தில், நான் எப்போதுமே தாராளமாகத்தான் இருப்பேன்!" என்றபடி, அவளைப் பற்றி அணைத்தான் தீபன்!

தீபன் இப்படிச் செய்யக்கூடும் என்ற எண்ணம் சற்றும் இல்லாததாலோ என்னவோ, சந்தனா சில வினாடி நேரம் செயலற்றுப் போனாள்!

ஆனால், அதைச் சம்மதமாக எண்ணி, அவன் செயல்பட்ட விதத்தில் வெகுண்டு, இரு மடங்கு பலத்துடன் தன்னை விடுவித்துக் கொண்டு, அவனைப் பிடித்துத் தள்ளினாள்.
சற்றுத் தடுமாறியபோதும், இலகுவாகவே சமாளித்துக் கொண்டு, "ரொம்பவும் பிகு பண்ண வேண்டாம், சந்தனா!" என்றான் தீபன்! "அப்புறம், அதை நிஜம் என்று நான் நம்பிவிட்டால், உனக்குத்தான் நஷ்டம்!"

என்ன மனிதன் இவன்...?

நிஜத்தை, நிஜம் என்று நம்பிவிட்டால் என்கிறான்!

உண்மை, பொய் பற்றி அரிச்சுவடி கூடத் தெரியாத...

ஒரு கணம் தயங்கிய போதும், 'அடிமுட்டாள்' என்று வாக்கியத்தை, மனது முடிக்கத்தான் செய்தது!

பட்டப் பகலில்! அவனுடைய தாய் வீட்டில்! அந்தத் தாயும், அந்த வீட்டிலேயே இருக்கையில்!

இதிலெல்லாம் நீக்குப் போக்காக இருக்கிற நாட்டில் இப்போது வாழ்ந்தாலும், இவன் பிறந்து வளர்ந்தது, இங்கே தானே?

அப்படியென்ன ஒரு வெறி, அவளை நம்பவே கூடாது என்று?

ஏன் இப்படி?

ஏன், எப்படி என்று யோசிக்கிற நிலையெல்லாம் முடிந்து போயிற்று!

என்னதான் வெறி என்றாலும், கடைசி எல்லையையும், தீபன் தாண்டிவிட்டான்.

இனி...

எஃகு நாணின் விறைப்புடன் நிமிர்ந்து நின்று, கை நீட்டிக் கதவைக் காட்டினாள் சந்தனா. "போங்கள் வெளியே!"

"சந்தனா..."

"உடனே வெளியே போங்கள்! அல்லது... மூன்றாம் அறையில் உங்கள் அம்மா தூங்கிக் கொண்டு இருப்பது, உங்களுக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்! இந்தப் பிற்பகல் தூக்கம், திடுமெனக் கலைந்து, பதற்றத்துடன் எழுவது, ஆன்ட்டியின் உடல் நிலைக்கு நல்லதல்ல என்பதும் தான்! இதற்கு மேல், நீங்கள் இங்கே நின்றால், அப்படி அவர்கள் விழித்தெழும்படியாக, நான் கத்திக் கூச்சலிட வேண்டியிருக்கும்! அதற்கு, ஒரு கணம் கூடத் தயங்க மாட்டேன். அதனால்... ம்! கெட் அவுட்!" என்றாள் உறுதியான குரலில், அழுத்தம் திருத்தமாகச் சந்தனா!

ஒரு வினாடி, அவள் முகத்தில் எதையோ தேடுவான் போலப் பார்த்தான் அவன்.

கருங்கல் சிலை மாதிரி, கதவைக் காட்டிய கை கூட இறங்காமல், அவள் அப்படியே நிற்கவும், சட்டெனத் திரும்பி வெளியே சென்றான்.

மாடிப் படிகளில், அவனது காலடியோசை தேய்ந்து மறையும் மட்டும், சந்தனா நின்ற நிலையில் எந்த மாற்றமும் இல்லை!

அப்புறம் கூட, சில பல நிமிஷங்கள் அவளிடம் அசைவே இல்லைதான்.

அறை ஜன்னலின் அருகருகாகப் பறந்து சென்ற, அந்த விட்டு மாமரக் கிளியின் கீச்சிடல் மட்டும் அவளைச் சுய உணர்வுக்குக் கொண்டு வரவில்லை என்றால், இன்னும் எவ்வளவு நேரம், அப்படியே நின்றிருப்பாளோ!

பசிய நிறத்தில் அம்புகளாய் வானத்தில் பாயும், அந்தக் கிளிகளை, ஆன்ட்டியும், அவளும் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பார்கள்!

ஆனால், இனி, அது முடியாது!

ஒரு போதும்!

சட்டென சுற்றுப் புறம் புரிந்தவள் போன்று, சந்தனா ஓடிச் சென்று கதவைச் சாத்தி, உட்புறம் தாளிட்டாள்.

இந்தத் தாளிடலை, அந்த வீட்டில், அவள் முக்கியமாக நினைத்தது கிடையாது!

அதுவரை!

ஆனால், இனி இது முடியாது!

அந்தத் தேவையோடு, அவள் அங்கே இருப்பதே கூடாதே!

இருந்தால், அவளது மறுப்பு வெறும் பிகுதான் என்று, அவன் நிச்சயமாக நினைப்பான்!

அப்புறம்... சே!

தலைமை ஆசிரியருடைய மகள் என்பதாலோ, என்னவோ, சந்தனாவுக்கு, இந்த மாதிரியான அவமதிப்புகள் நேர்ந்ததே இல்லை எனலாம்!

எப்போதுமே மதிப்பும், மரியாதையும் தான்! பண்பும், பிரியமும் தான்!

எல்லாவற்றுக்கும் ஒட்டு மொத்தமாகச் சேர்த்து வைத்து, இன்று...

சேசே! அதைப் பற்றி நினைக்கக் கூடாது! இனி என்ன செய்வது என்று மட்டும் தான்...

'விண் விண்' என்று தெறித்த தலையைப் பிடித்தபடி, சந்தனா யோசிக்க முயன்றாள்.

எப்படியும், இந்த வீட்டை விட்டுப் போயாக வேண்டும்! எங்கே, எப்படி என்று மட்டும் தான் எண்ணிப் பார்க்க வேண்டும்!

சிரமப்பட்டு, வலியை ஒதுக்கி யோசித்ததில், உடனடித் தீர்வுக்கு, ஒரே ஒரு வழி அவளுக்குத் தென்பட்டது!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:28 pm

அன்றைய மதியத் தூக்கம் முடிந்து, மாலைக் காபிக்காக மீனாட்சி அம்மாள் கீழே வந்து உட்கார்ந்த போது, மகன் தீபனும் உடன் வந்து அமர்ந்தான்.

எப்போதேனும் வேலை இல்லாத சமயங்களில், அவன் அப்படி வருவது உண்டுதான் என்பதால், மீனாட்சிக்கு அதில் அதிசயம் ஏதும் தோன்றவில்லை!

ஆனால், "சந்தனாவுடைய அண்ணன் எங்கேம்மா இருக்கிறார்?" என்று கேட்டது ஆச்சரியமாகத்தான் இருந்தது!

சந்தனாவின் பெயரைக் கேட்டாலே, எண்ணெயில் விழுந்த அப்பமாகக் குதிக்கிறவன், அவளுடைய உறவைப் பற்றியெல்லாம் விசாரிக்கிறானே!

வியப்புடன் நோக்கி, "ஏன் கேட்கிறாய்?" என்று பதில் கேள்வி கேட்டாள் அன்னை!

"என்னம்மா நீங்கள்? அதிகப் பழக்கம் இல்லாத பெண்! அவளை வீட்டுக்குக் கூட்டி வந்து வைத்திருக்கிறீர்கள்! அவளுடைய உற்றம், சுற்றம் எப்படி, எங்கே என்று விசாரிக்கக் கூடாதா?" என்று குறையோடு கேட்டான் மகன்.

பழக்கம் இல்லாத ஒருத்தியைத் திருமணமே செய்தவன், என்னைக் கேட்கிறாயா என்று எழுந்த கேள்வியை உள்ளேயே அடக்கினாள் அன்னை!

அவனே, அதில் நொந்துவிட்டவன்! அதை, இப்போது குத்திக் கிளறுவதில் என்ன லாபம்?

ஒருவேளை, அவளை வைத்து எடை போடுவதால் தான், சந்தனாவிடம், இப்படிக் காய்கிறானா?

அத்தோடு, இந்தப் பத்திரிகைப் பிரச்சினை வேறு!

மகனை நியாயப் படுத்துகிறோம் என்று உணர்ந்து, அந்த வகை எண்ண ஓட்டத்தை அத்தோடு நிறுத்திக் கொண்டு, அவன் கேட்ட விவரங்கள் அனைத்தையுமே தாயார் தெரிவித்தாள்.

"தாய் இல்லாததால், உறவுகள் பழக்கம் ரொம்பவே விட்டுப் போயிற்று போல! ஆனால், அண்ணன் தங்கைக்குள் பாசம் அதிகம்! தந்தை இறந்த பிறகு, தங்கையைத் தனியாக இங்கே விட்டுவிட்டு, யுஎஸ் போகவே அவனுக்கு மனமில்லை. ஆனால், போக மறுத்தால், தந்தை இவ்வளவு காலம் சேர்த்து வைத்தது அனைத்தையுமே கட்ட வேண்டிய நிலைமையாம்! அதனால் சந்தனா தான், அண்ணனைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்திருக்கிறாள்! மொத்தத்தில், ஆறு மாத வேலை என்றாலும், முடிந்தவரை, அதைச் சீக்கிரமே முடித்துவிட்டுத் திரும்பி வந்து விடுவதாகச் சொல்லியிருக்கிறானாம்!"

எல்லாமே, சந்தனாவாகச் சொன்னவையாகத்தான் இருக்கிறது!

"அந்த அண்ணனின் முகவரி உங்களிடம் இருக்கிறதாம்மா?"

திரும்பி மகன் முகத்தைப் பார்த்தாள் பெற்றவள். "என்னடாப்பா சந்தேகமா? பூபாலன் வந்துவிட்டால், சந்தனாவைக் கூட்டிப் போய்விடுவானே, அவளைப் பிரிய நேருமே என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறேன்! நீயானால்..."

"ஐயோ, என்னம்மா நீங்கள்! ஓர் அன்னியப் பெண்! நம் பொறுப்பில் இருக்கிறாள்! ஏதோ ஓர் அவசரம் என்றால், ஒரு காய்ச்சல் என்றால் கூடத் தகவல் தெரிவிக்கவேனும், அவளுடைய உறவினர் முகவரி வேண்டாமா? அதற்காகக் கேட்டால், என்னென்னமோ சொல்லுகிறீர்களே!

"அவள் இங்கே என்னோடு தங்க வந்தபோது, தங்கை தனியே தவிக்க நேராமல், உடன் வைத்திருப்பதற்காக நன்றி தெரிவித்து, அந்தப் பையன் யுஎஸ்சில் இருந்து ஒரு கடிதம் எழுதினான். அதில் அவனது விலாசம் முழுதாக இருக்கிறது! பாவம்! தாயில்லாவிட்டாலும், பெரியவர், பிள்ளைகளைப் பண்போடு வளர்த்திருக்கிறார்!"

"அந்தக் கடிதத்தைப் பார்க்க வேண்டும்!" என்று தீபன் கேட்கவும், "கேட்பாய் என்று நினைத்தேன்!" என்றாள் தாய் ஒரு மாதிரிக் குரலில்! "நல்ல மனிதர்களைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சந்தேகப்படுகிறாயே!" என்று சற்று வருத்தமும் பட்டாள்!

இப்போது, மகன் தன்னை மறைக்க முயற்சிக்கவில்லை! "என்னைப் பொறுத்தவரை, எவ்வளவு எச்சரிக்கையோடு இருந்தாலும், போதாது என்று தான் சொல்வேன், அம்மா! அத்தோடு, எவ்வளவுக்கு எவ்வளவு அடுத்தவரை, நம்பாமல் இருக்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஏமாற்றத்துக்கு இடமிராது! அந்த முகவரியைத் தருகிறீர்களா?"

யாரை நம்பலாம் என்று கூட அறிந்து கொள்ளத் தெரியாமல், இவன், அங்கே என்ன தான் வாழ்க்கை நடத்துகிறானோ என்று உள்ளூர அலுத்தபடி, "தாராளமாகத் தருகிறேன்! அவர்கள் யாருமே, தங்கள் முகவரியையோ, டெலிபோன் எண்ணையோ யாருக்கும் தரக்கூடாது என்று சொன்னதே இல்லை!" என்று மகனுக்கு ஒரு சிறு குட்டுக் கொடுத்துவிட்டு, பூபாலனின் முகவரியை எடுத்து வந்து மகனிடம் கொடுத்தாள் அன்னை!

தாயின் செல்லை வாங்கி, எலிசாவோடு தொடர்பு கொண்டு, பூபாலனின் முகவரியை அவளிடம் சொன்னான் தீபன்.

"இந்த முகவரி சரிதானா என்று செக் பண்ண வேண்டும், எலிசா!" என்றான்.

எதிர் முனையில் அவள் ஏதோ கேட்கவும், "என் அம்மா மிகவும் பிரியம் வைத்திருக்கும் பெண்ணுடைய அண்ணன்! அம்மா ஏமாந்துவிடக் கூடாதே என்று தான்! என்னது? நான் வருவதா? பா...ர்க்கலாம்! கொஞ்ச நாள் ஆகட்டும்! அதன் பிறகு சொல்கிறேன்! வைத்துவிடு...பை!" என்று செல்லை அணைத்தான் தீபன்!

"என்ன? கூப்பிடத் தொடங்கிவிட்டாளா? என்றைக்கு டிக்கெட் எடுக்கப் போகிறாய்?" என்று மீனாட்சி எரிச்சலோடு கேட்க, "இப்போதைக்கு இல்லைம்மா! நிஜம்!" என்று அழுத்திச் சொன்னான் அவன்.

தன் பொம்மையோடு வந்து, "பசி!" என்றாள் மித்ரா. "இன்றைக்கு ஏன் கிராண்ட்மா, சந்தனா சிற்றுண்டி சாப்பிட வரவில்லை? என்னை மட்டும், கட்டாயம் சாப்பிடணும் என்பாளே?" என்று, சந்தனாவைத் தேடினாள்.

"ஆமாம், அவள் ஏன் இன்னும் வரவில்லை?" என்றாள் மீனாட்சியும்!

சமயத்தில் சமையல்காரம்மாவும் வந்து, "அவங்க அறைக் கதவு சாத்திருக்கம்மா! நானும், கூப்பிட்டுப் பார்த்துவிட்டுத்தான் வந்தேன்! சந்தனாப் பொண்ணு, பதிலே சொல்லவில்லை! பாத்ரூமிலே இருக்கிறாளோ என்று வந்துவிட்டேன்!" என்றாள்.

ஆட்டம் காட்டுகிறாளா, அல்லது அவனைச் சந்திக்கக் கூடாது என்று எண்ணுகிறாளா?

எதுவானாலும் வயிறு காய்ந்தால், தானாக வருவாள் என்று நினைத்த தீபன், "ஏதாவது முக்கியமாக முடிக்க வேண்டிய வேலையாக இருக்கும், அம்மா! நோட்டுத் திருத்துவது, பாடம் தயார் பண்ணுவது என்று நீங்கள் தான் கடமை, கண்ணியத்தோடு வளர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னீர்களே! ஆனால், அப்படி ஒன்றும், ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யமாட்டாள் என்று நினைக்கிறேன்! பசித்தால், தானாக வந்து சாப்பிடுவாள், நீங்கள் முதலில் சாப்பிட வாருங்கள்!" என்று, தாயையும் மகளையும் உண்ண அழைத்துப் போனான்.

மகனோடு பேசிக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் அவனோடு உணவருந்தச் சென்றாலும், உள்ளூர ஏதோ நெருட சந்தனாவை அழைத்து வருமாறு, சமையல்காரம்மாவை மீண்டும் அனுப்பி வைத்தாள் மீனாட்சி.

மீண்டும் பதில் இல்லை என்றானதும், சந்தனா யாரையும் அலட்சியம் செய்கிற பெண் இல்லையே என்று எண்ணி சமையல்காரி, என்னவோ என்று, சட்டெனப் பதறிப் போனாள்.

கீழே விழுந்து, கிழுந்து அடி ஏதும் பட்டிருந்தால்?

கதவுக் குமிழைத் திருகினால், கதவு உடனே திறந்து கொண்டது! உட்புறம் தாளிடவே இல்லை!

அறையின் உள்ளேயோ, குளியல் அறையிலோ சந்தனா இல்லை என்றானதும், சுற்றிலும் பார்வையை ஓட்டியவளுக்கு, படுக்கையை ஒட்டியிருந்த முக்காலி மீது மடித்து வைக்கப்பட்டிருந்த காகிதம் கண்ணில் பட்டது!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:28 pm

அதைப் பிரித்துப் படிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என்று உணர்ந்து, கடிதத்தை அப்படியே எடுத்துப் போய், மீனாட்சியிடம் கொடுத்தாள்.

"அறையில் சந்தனா இல்லையம்மா! இந்தக் கடிதாசி மட்டும் முக்காலி மேலே இருந்தது!"

ராட்சசி! எல்லாவற்றையும் எழுதியிருப்பாளோ என்று, சட்டென தீபனின் முகம் கன்றிவிட்டது!

அன்னையின் ஒழுக்க விதிகளே வேறாயிற்றே!

"என்னது?" என்று பதட்டத்துடன் மீனாட்சி கடிதத்தைப் பிரிக்கையிலேயே, "நான் படிக்கிறேன் அம்மா! நீங்கள் அமைதியாக இருங்கள்!" என்று பிடுங்காத குறையாகக் கடிதத்தை வாங்கிப் பார்த்தவனுக்கு, அப்பாடி என்றிருந்தது!

சந்தனாவின் சுருக்கமான கடிதத்தில், அவனது பெயரே இல்லை!

அவளுக்குத் தங்குவதற்கு, ஒரு நல்ல் விடுதியில் இடம் கிடைத்துவிட்டது! இன்றே வந்தால் தான், இடம் உறுதி என்பதால், ஒரே செடி மாற்றுடையோடு போவதாகவும், பிறகு வந்து மற்றவைகளை எடுத்துக் கொள்வதாகவும் எழுதியிருந்தாள்.

"உங்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்புவதுதான் சரியான முறை, ஆன்ட்டி! ஆனால், என் மீதுள்ள அன்பினால், தடுக்கப் பார்ப்பீர்கள்! உங்களை மீறிச் செல்ல நேருமே என்றுதான், இப்படிக் கிளம்புகிறேன், ஆன்ட்டி! நீங்கள் எனக்குச் செய்திருக்கும் அனைத்துக்கும் மிக்க நன்றி!" என்றவள், அந்த வீட்டில் இருக்கையில் தன் மீது அன்பு காட்டிய சமையல்காரம்மா, ராசையா, பணிப்பெண் எல்லோருக்குமே நன்றி தெரிவித்ததோடு, 'மித்திக் குட்டிக்கு அன்பைச் சொல்லவும்' என்று முடித்திருந்தாள்!

கடிதத்தை உரக்கப் படித்து முடித்த போது, அவனது பெயர் விடுபட்டிருந்ததே, இப்போது முகத்தில் அறைந்தது போலத் தீபனுக்குத் தோன்றியது!

அவனால் தான் போயிருக்கிறாள் என்று காட்டியிருக்கிறாள்!

அவளது இந்தியப் பண்பாட்டுக்கு, அவனது செயலைச் சாதாரணமாக எடுத்து, உரிய மதிப்புக் கொடுத்து, ஒன்றுமில்லை என்று விட்டுவிடத் தெரியவில்லை!

அப்படி, அவன் என்ன முரட்டுபலம் காட்டி, அவளை பலாத்காரமா பண்ணிவிடப் போகிறான்? முட்டாள், என்று எண்ணியவனுக்குத் தாயின் முகத்தில் வருத்தத்தைப் பார்க்கையில், சந்தனா மீது கோபமும் வந்தது!

ஏதோ, சரியாக இதே சமயத்தில், அவளுக்கு ஒரு விடுதியில் இடம் கிடைத்திருக்கிறது! இல்லாவிட்டால் முழுங்கிக் கொண்டு சும்மாதானே இருந்திருப்பாள்! இப்போதும், அப்படியே இருந்துவிட்டுப் போயிருக்கலாமே என்று எரிச்சலுடன் நினைத்தான்!

அழத் தயாராக இருந்த மகளையும், முகம் வாடியிருந்த தாயையும் சமாதானம் செய்து, வேடிக்கையும் விளையாட்டுமாகப் பேசி உற்சாகப் படுத்துவதிலேயே, அன்றைய மாலை முழுவதையும் தீபன் செலவிட நேர்ந்தது!

அப்போதும், அதில் முழு வெற்றி கிடைத்ததாகச் சொல்ல முடியாத நிலைதான்!

இபப்டி வீட்டை விட்டுப் போவாள் என்று தெரிந்திருந்தால் எப்போதும் போல ஒதுங்கியே இருந்திருப்பான்!

சந்தனா, இவ்வளவு அழகாக இல்லாமல் இருந்து தொலைந்திருந்தாலும், இந்தப் பிரச்சினை நேர்ந்திராது!

பளிச்சென்று கண்ணைக் கவர்கிற அழகோடு, வீட்டில் ஒருத்தி வளைய வந்தால், ஓரிரு சமயம் இப்படியும் நடக்கக்கூடும் தானே?

இதற்குப் போய், இப்படி வீட்டை விட்டே வெளியேறி விட்டால், எத்தனை பேருக்கு மனது கஷ்டப்படும் என்று யோசிக்க வேண்டாமா என்று, சந்தனா மீதே எரிச்சல் பட்டான் தீபன்!

இந்த அழகில் அவள் ரொம்பத்தான் பாசம் உள்ள பெண் என்று உருகுகிறார்கள், இந்த அம்மா! அப்படிப் பாசம் இருக்கிறவள் என்றால், தன் பிரிவால் ஒரு முதியவளும் குழந்தையும் பாதிக்கப் படுவார்களே என்று, வீட்டை விட்டு வெளியேறு முன் யோசித்திருக்க மாட்டாளா என்ன?

என்னதான் முயன்றும், வீடு களையிழந்து தெரிந்தது!

மித்ரா, தன் பழைய வழக்கப்படி, பொம்மையை அணைத்துப் பிடித்தபடி, ஒரு சோபா மூலையில் முடங்கி விட்டாள்.

மீனாட்சி அம்மாள், மருத்துவமனைக் கணக்குகளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தவள், கண்ணாடி கூடப் போடாமல், விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தாள்!

ஹால் டீவி ஓடிக் கொண்டிருந்தபோதும், அதைப் பார்ப்பார் இல்லாமல், சமையல்காரம்மா கூடத் தலையைப் பிடித்துக் கொண்டு கண் மூடிக் கால் நீட்டி அமர்ந்திருந்தாள்!

தன் எழுத்து வேலையைத் தொடங்கிய தீபன், அதில் மனம் ஒன்றாமல் எழுந்து வெளியே வந்தபோது, கண்ட காட்சி இதுதான்!

என்ன இது?

எவளோ ஒருத்தி, ரத்த சம்பந்தமே இல்லாதவள், சில மாதங்கள் இருந்துவிட்டு, அவளுடைய அண்ணன் வந்ததும் அவனோடு இந்த வீட்டை விட்டுப் போய்விடப் போகிறவள்! அவள் இல்லை என்பதற்காக, எல்லோரும் ஏதோ வீடு மாதிரித் துக்கம் காக்கிறார்கள்!

இத்தனைக்கும், சந்தனா நல்லவளா, கெட்டவளா என்பது கூட, இன்னமும் நிச்சயமில்லை!

எரிச்சலோடு நடந்து போய், டீவியை ஆஃப் செய்தான் தீபன்!

என்ன என்பது போல, வெறுமனே அவனைப் பார்த்தாள் அவளுடைய அன்னை!

தூக்கம் கலைந்த மாதிரி, வாரிச் சுருட்டி எழுந்து, "நேரமாகிவிட்டதா, தம்பி? டிபன் எடுத்து வைக்கட்டுமா?" என்று வினவிய சமையல்காரம்மா, ஹாலின் பழைய காலத்துக் கடிகாரத்தில் மணியைப் பார்த்துவிட்டு, ஆசுவாசமாய் மூச்சு விட்டாள்.

"இன்னும் நேரமாகவில்லையே! தம்பிக்குப் பசித்து விட்டதா? பலகாரமே வைத்து விடட்டுமா, அல்லது, கொறிக்கிற மாதிரி ஏதாவது கொண்டு வரட்டுமா?" என்று மீண்டும் கேட்டாள்.

"ஒன்றும் வேண்டாம்! ஆனால், நீங்கள் எல்லோரும், ஏன் இப்படி ஒரேயடியாக டல்லடிக்கிறீர்கள்? அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு, சாதாரணமாக இருங்களேன்!" என்றான் அவன் பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில்!

'உச்சு'க் கொட்டினாள் மீனாட்சி அம்மாள்.

"என்னவோ, சந்தனா இங்கே இருந்தால், பள்ளியில் நடந்தது, பேப்பரில் வந்தது என்று ஏதாவது சொல்லுவாள்! நாம் சொல்லுவதையும் கேட்பாளா, அவள் இல்லாதது, கையொடிந்த மாதிரி, வேலையே ஓட மாட்டேன் என்கிறது! நாலைந்து நாட்கள் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்! போகட்டும் போ! நாங்கள் எப்படியோ சமாளிக்கிறோம்! நீ போய், உன் வேலையைக் கவனி!" என்று தாயார் சொல்லவும் தான், தீபனுக்குச் சுரீலென உறைத்தது!

அவனும் வேலை ஓடாமல் தான் எழுந்து வந்தான்!

அப்படியானால், அவனும், சந்தனா வீட்டில் இல்லாததை உணர்கிறானா?

எப்படி?

நம்ப முடியவில்லை அவனால்!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:28 pm

சந்தனா வீட்டை விட்டுப் போனதற்கும், அவனுக்கு வேலையில் மனம் ஈடுபடாததற்கும் எந்த விதமான தொடர்பும் இருக்கக் கூடும் என்று, தீபனால் மெய்யாகவே நம்ப முடியவில்லை!

அவனுடைய மனைவி, அவனுடைய குழந்தையைப் பெற்றவள் பிரிந்து போன போது கூட, அவனது வேலைக்கு எந்த விதமான தடையும் நேரவே இல்லை!

அவளுக்கு விமான நிலையத்துக்குப் போவதற்குக் கார் அனுப்பும்படி எலிசாவிடம் சொல்லிவிட்டு, எழுதிக் கொண்டிருந்த காட்சியை முழுதாக முடித்து விட்டுத்தானே, அறைக்குள் இருந்து அவன் வெளியே வந்ததே!

வந்து, பத்திரிகைகளுக்குப் பேட்டி, போஸ் எல்லாம் கொடுத்து, "ஓர் அத்தியாயம் முடிந்தது" என்று சொன்னது எல்லாமே, அவனுக்கு நன்றாகவே நினைவிருக்கிறதே!

இரவில் 'காஸ்டிங்' டைரக்டரோடு டின்னர் பேச்சு கூட!

எதிலுமே, அவனுக்கு எந்தத் தடையும் நேரவே இல்லை!

மனைவியே அப்படி என்றால், யாரோ ஒருத்தியான சந்தனா இல்லாதது அவனைப் பாதித்திருக்க வாய்ப்பில்லை!

ஆனால், தன்னால் தான், அந்த முட்டாள் பெண் வீட்டை விட்டுப் போனாளோ என்ற குற்ற உணர்ச்சி... ஒரு வேளை, அது காரணமாக இருந்திருக்கலாம்!

சொல்லப் போனால், சந்தனா வீட்டை விட்டு வெளியேறியதால், ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகி விட்டதில், அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்.

சந்தனா பத்திரிகைக்காரி அல்ல என்ற முக்கியமான விஷயம்!

அவனைப் பற்றி செய்தி சேகரிப்பதற்காக வந்தவள் அவள் என்றால், இப்படி இடையில் வீட்டை விட்டு வெளியேறியிருக்க மாட்டாள்.

செய்தி கிடைக்கும் வரை, உடும்பாய் ஒட்டிக் கொண்டு, அங்கேயே இருந்திருப்பாள்.

அந்த வகையில், அவனது சந்தேகம் நிவர்த்தியாகி, அங்கங்கே வீட்டில் அவளைப் பார்க்கும் போது, என்ன குறிப்பு எடுக்கிறாளோ என்ற எரிச்சல் இல்லாமல் இருக்க முடிவது, அவனுக்கு நிம்மதியாகத்தான் இருக்க வேண்டும்!

மாரீட்டா பிரிந்து போனதும் நிம்மதியாக இருந்த மாதிரி!

ஆனால், அப்போது போல, இப்போது ஏன் எழுத முடியவில்லை?

ஒரு வேளை, தாய், மகள் இருவரின் வாடிய முகங்களும் அவனது எழுத்தைக் கெடுத்தனவோ என்று எண்ணி முடிக்கப் பார்த்தால், அந்த எண்ணத்திலும் ஒரு பெரிய பிழை இருந்தது!

வேலை ஓடாமல் அறையை விட்டு வெளியே வந்த பிறகுதான், வீட்டினரின் வாடிய முகங்களை அவன் பார்த்ததே! எனவே, அவனது வேலை கெட்டுப் போனதற்கு, அதைக் காரணம் காட்ட, அடியோடு முடியாது!

பின்னே?

காரணம் கண்டுபிடிக்க முடியாததால், எரிச்சல் இன்னமும் அதிகமாக, அதை யாருக்கும் காட்ட மனமற்று, தீபன் மீண்டும் அவனது அறைக்குள் புகுந்து கொண்டான்.

குறைந்த பட்சமாய் வெளியே இருந்தவர்களாவது, அவன் மும்முரமாய் வேலை செய்வதாக நினைக்கட்டுமே!

சந்தனா சென்றது, அவனைப் பாதிக்கவில்லை என்றும்!

இரவு உணவும் ஏனோ தானோ என்று, எப்படியோ முடிந்தது!

"எந்த விடுதி? அது எங்கே இருக்கிறது என்று, சந்தனா ஒன்றுமே குறிப்பிடவில்லையே! என்ன, இப்படி செய்து விட்டாள்! எதற்காக என்று, உனக்கு ஏதாவது புரிகிறதா, தீபு?" என்று வருத்தத்துடன் மீனாட்சி அம்மாள் முனகவும், தீபன் பொறுமை இழந்தான்.
"என்னைக் கேட்கிறீர்கள்! இத்தனை நாளும், அவளைக் கொஞ்சிக் குலவிக் கொண்டு இருந்தது நீங்கள் தான்! உங்களையே மதிக்காமல் கிளம்பிவிட்டாள்! போகிறாள் என்று அவளை மறக்க முயற்சிப்பீர்களா, அதை விட்டு... விடுங்கள், அம்மா!" என்றான் அவன்.

"அதில்லைப்பா! என்னவோ, இது அவள் குணத்தோடு ஒத்துப் போகவில்லை!... சரி சரி, விடு. உனக்குத்தான் அவளை எப்போதுமே பிடிக்காதே!"

"கிராண்ட்மா, எனக்கு சந்தனா ஆன்ட்டி பிடிக்கும்!" என்றாள் மித்ரா கண்ணீருடன். "இப்போது யார் எனக்கு கதை சொல்வது?" என்று அழுதபடியே பாட்டியிடம் சென்று, அவளை ஒட்டிக் கொண்டு அமர்ந்தாள் சிறுமி!

பாட்டியும் பேத்தியும் ஒட்டிக் கொண்டு அமர்ந்திருப்பதை பார்த்து, செய்கையற்று நின்றான் தீபன்.

அந்த வேளையில், பக்கக் கதவைக் கைவிட்டு திறந்து கொண்டு வந்த ராசையா, பின்புறமாய்ச் சாப்பிட போகாமல், வீட்டினுள் குடும்பத்தார் அமர்ந்திருந்த ஹாலுக்கு வந்தான்.

அவனைப் பார்த்ததும், "என்ன ராசையா, உன் தங்கை குடும்பத்தை வழியனுப்பி விட்டாய் அல்லவா? ரயில் சரியான நேரத்துக்குக் கிளம்பியதா?" என்று, அவனிடம் பொதுவாக விசாரித்தாள் மீனாட்சி.

கிராமத்துப் பக்கம் போக முடிவு செய்து கிளம்பிய தங்கை குடும்பத்தை ரயிலேற்றி விடுவதற்காக, ரயில் நிலையத்துக்குச் சென்றிருந்தான் அவன்.

திரும்பி வந்துவிட்டதைத் தன்னிடம் சொல்லவே, அவன் அங்கே வந்திருப்பதாக எண்ணிய மீனாட்சி, அதற்குத்தக பணியாளரிடம் விசாரித்தாள்.

"ஆமாம்மா, பிள்ளை குட்டியோட, மூட்டை முடிச்சு எல்லாம் ஏற்றி அனுப்பி விட்டேம்மா! ஆனா... நான் சொல்ல வந்தது, வேறேம்மா! அங்கே..." என்று குழப்பத்துடன் இழுத்தான் அவன்.

"அங்கே என்ன?"

"அங்கே... நம்ப சந்தனாம்மா வீட்டிலே இல்... வந்து, சந்தனாம்மா, எங்கயாச்சும் வெளியூரு போறாங்களாம்மா?" என்று அவன் கேட்கவும், எல்லோருமே ஷாக் அடித்தது போலத் திகைப்புடன் அவனைப் பார்த்தனர்!

இரண்டெட்டில் அவன் அருகே வந்து, "சந்தனாவை அங்கே பார்த்தாயா?" என்று ராசையாவின் தோளைப் பற்றிக் கேட்டான் தீபன்!

"விடுதிக்குப் போனவள், ரயில் நிலையத்திலா? அதுவும் இந்த நேரத்தில் எப்படி? நீ சரியாகத்தான் பார்த்தாயா, ராசையா?" என்று கேட்டாள் வீட்டுத் தலைவி.

"சொல்லு! நீ, சந்தனாவைத்தான் பார்த்தாயா?" என்று மறுபடியும் கேட்டான் தீபன்.

"ஆமாங்கய்யா! அவங்க மாதிரியேதான் இருந்தது! ஆனா, ரயிலுக்கு வெளியிலே நிக்கலை! ராவு ரயிலுக்குக் காத்திருப்பாங்களே, அந்த ரூம்புக்குள்ளார ஒரு மாதிரித் தலையைப் பிடித்துக்கிட்டு உட்கார்ந்திருந்தாங்க! நம்ப அம்மா, எப்பவும் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்களே, அப்படி இல்லையேன்னு, எனக்கு சந்தேகமாப் போயிட்டுதும்மா. முக்காடும் போட்டிருக்க மாட்டாங்களே! சரி பொம்பளைங்க உட்கார்ந்திருக்கிற ரூம்பு! ஆள் அம்பு சரியாத் தெரியாம, உள்ளே போனா வம்பாப் போகுமோன்னு பயந்து விட்டேன்! அம்மா, வீட்டிலே இருக்கிறாங்களா இல்லியா?" என்று கவலையுடன் விசாரித்தான் வேலையாள்.

"என்னவோ நடந்திருக்கின்றது..." என்று மீனாட்சி சந்தேகமாகக் குழம்புகையில், தீபனுக்கு விஷயம் புரிந்து போயிற்று!

ஏனெனில் தொடங்கி வைத்தவன் அவன் அல்லவா?

இப்போது, அவனுக்கு இரண்டு பொறுப்புகள்!

சந்தனாவை சமாதானப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வருவதோடு, நடந்தது எதுவும் அன்னையின் காதுக்குப் போய் விடாமல் சமாளிப்பதும்!

"ஏன் தீபு, நீ சந்தனாவை ஏதேனும் சொன்னாயா?" என்று பெற்றவள் திடுமென, அவனை நேரடியாகக் கேட்கவும், ஒரு கணம் தீபன் தடுமாறிப் போனான்.
"என்னம்மா நீங்கள்? இப்படி கேட்கிறீர்கள்!" என்று சும்மா சமாளிக்க முயன்றான்.

"பின்னே? இங்கே அவளிடம் ஏதாவது தகராறு பண்ணுகிற ஒரே ஆள் நீதானே?"



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:29 pm

"அன்னம்மா, என் கைப்பையை எடுத்து வாருங்கள். ராசையா? டிரைவர் வீடு பக்கம் தானே? நீ அவனை அழைத்து..." என்று எழுந்த தாயின் பேச்சில் குறுக்கிட்டு, "அம்மா, இந்த நேரத்தில் நீங்கள் அலைய வேண்டாம்! நான் போய் அவளைக் கூட்டி வருகிறேன்! ராசையா, எழும்பூர் தானே?" என்று, கார் சாவியை எடுத்தான் தீபன்.

தாயார் சஞ்சலத்தோடு பார்க்கவும், "நம்புங்கள், அம்மா! சந்தனாவை கட்டாயமாக கூட்டி வருவேன்! நான் வழக்கம் போல ஏதோ சொன்னேன் தான்! ஆனால், சந்தனா, இவ்வளவு தூரம்... வீட்டை விட்டுப் போகும் அளவுக்குப் பெரிதாக, அதை எடுத்துக் கொள்வாள் என்று எதிர் பார்க்கவில்லை! அவள் கையில், காலில் விழுந்தேனும், மன்றாடிக் கூட்டி வருகிறேன்! உங்களுக்காகவும், மித்ராவுக்குமாக அவளைத் திரும்ப அழைத்து வந்தே தீருவேன்! நிச்சயம்!" என்று விட்டு, வேகமாகக் கிளம்பிச் சென்றான் அவன்!

சந்தனாவை அழைத்தும் வரவேண்டும்! அதற்கு முன், அவளிடம் தனியாக பேசவும் வேண்டும்!

நல்லவேளை! சந்தனா ஒரு மாதிரிப் பழி வாங்குகிற தினுசில்லை!

"ராசையாவை..." என்று தாயார் தொடங்கியதை கேட்க, அவன் அங்கே இருக்கவில்லை! அதற்குள் வேகமாக வெளியே சென்றுவிட்டிருந்தான்.

காரை வேகமாக ஓட்டிச் சென்ற போது, அவனது கவலையெல்லாம் சந்தனா எழும்பூரில் இருந்து, எங்கேயும் போய்விடக் கூடாதே என்பதுதான்.

காரை நிறுத்திவிட்டு, வெயிட்டிங் ரூம் எங்கே இருக்கிறது என்று பார்வையால் துழாவிய போது, யாரோ பேசும் குரல் கேட்டது!

"தனியாதான் இருக்குதுபா! எப்படியாவது, அறையை விட்டு வெளியே கொண்டு வர்றது என் பொறுப்பு! அப்புறம் நீதான் பார்த்துக்க வேணும்! இன்னா சொல்ற?"

பதைப்புடன் பார்த்த போது, வெயிட்டிங் ரூம் கண்ணில் பட்டது!

உள்ளே தலை தாங்கி அமர்ந்திருந்த அவளும்!

அந்த அறையின் பொறுப்பாளர் போலத் தோன்றிய பெண்ணிடம் அனுமதி கேட்டுக் கொண்டு, அருகில் வந்தவனைப் பார்த்ததுமே சந்தனா எழுந்துவிட்டாள்.

"வெளியே வா! உன்னிடம் பேச வேண்டும்!" என்ற போதும், மறுக்காமல் உடன் சென்றாள்.

ஓரளவு ஆள் நடமாட்டம் இருக்கும் இடத்துக்குப் போனதும், அவ்வளவு நேரம் இருந்த பதைப்பு முழுவதும் கோபமாக மாற, "பெரிய கதாநாயகி என்ற எண்ணமாக்கும்?" என்ற தீபன், ஆத்திரத்தோடு சீறினான்.

"வில்லனாக நடந்தது, நீங்கள் தானே?" என்றாள் அவள் பதிலுக்கு!

"அதற்கு? இப்படி எங்கோ வந்து மாட்டிக் கொள்வதா? உன்னை வெயிட்டிங் ரூமில் இருந்து வெளியே கொணர்ந்து, எப்படி அழைத்துக் கொண்டு போவது என்று பேசிக் கொண்டிருந்தார்கள், தெரியுமா? அப்படி நான் என்ன செய்திருப்பேன் என்று நினைத்தாய்? மூன்றாம் தர சினிமா வில்லன் மாதிரிக் கதறக் கதறக் கற்பழிப்பவன் என்றா? அம்மா இருக்கும் இடத்தில், அப்படி நடப்பேனா? நான் கெட்டவனாக இருந்தால் கூட, அங்கே அம்மா இருப்பதே உனக்குப் பாதுகாப்பு அல்லவா?" என்று படபடத்தான் அவன்.

அவன் வெளிப்படையாக பேசியது, அவளது முகத்தைச் சிவக்க வைத்த போதும், "மூன்றாம் அறையில் ஆன்ட்டி இருக்கும் பொழுதுதான், வந்தீர்கள்!" என்று குத்திக் காட்டினாள் அவள்.

"அது வேறு! உன்னைப் பற்றிய தவறான எண்ணம் இருந்தது! என்ன விரட்டினாலும், அட்டைப் போல ஒட்டிக் கொண்டு, இங்கேயே இருக்கிறாய். மித்ராவை வேறு வசியம் செய்து வைத்திருக்கிறாய். காரியம் நடப்பதற்காக, எதுவும் செய்வாய் என்று நினைத்தேன்! அழகாகவும் இருந்தாயா? ஒரு முயற்சி செய்யலாமே என்று தோன்றியது... அப்போதுமே, உண்மையிலேயே மறுக்கிறவளை விரட்டுவேனா?"
என்னவெல்லாம் பேசுகிறான்!

சிவந்த முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றாள் சந்தனா.

"அந்த மாதிரி, நீ நினைக்கும்படியாக, நான் நடந்திருந்தால் சாரி. தயவு பண்ணி, என்னை மன்னித்துவிடு! ஆனால், நீ வீட்டை விட்டு வெளியேறியதும், ஒரு வகையில் நல்லதாயிற்று! உன்னைப் பற்றிய என் சந்தேகம் அடியோடு தீர்ந்து போயிற்று! ஆனால், இந்த மாதிரி, எந்த விதமான ஏற்பாடும் இல்லாமல் தனியே பெண்கள் கிளம்புவது, எந்த நாட்டிலுமே நல்லதில்லைதான்! சரி! வா, வீட்டுக்குப் போகலாம்!" என்று அழைத்தான் தீபன்.

அசையாமலே நின்று, "நான் இங்கே இருப்பது எப்படித் தெரியும்?" என்று கேட்டாள் அவள்.

நடந்ததைச் சொன்னான் அவன்.

"ஓ! தங்கைக்காக ராசையா இரண்டு நாட்கள் லீவு கேட்டிருந்தான். இன்றைக்குத்தான் அனுப்பி வைத்தானா?" என்றாள் சந்தனா.

இல்லாவிட்டால் என்ற வார்த்தை இருவர் மனதிலும் தோன்றியது!

"முதலில் காருக்குப் போகலாமா? காரில் போய்க் கொண்டே பேசலாம்!" என்றவன், அவள் ஒரு வினாடி தயங்கவும், "என்னை முழுதாக நம்பலாம்! இனி, அது போல நடக்க மாட்டேன், காட் ப்ராமிஸ்!" என்றான் தீபன்.

காரில் ஏறியதும், "உன்னைச் சீக்கிரமாக வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும்! இல்லாவிட்டால், மித்ரா அழுது கரைந்து விடுவாள்! அம்மாவும் தவிப்பில், உடம்பைக் கெடுத்துக் கொள்வார்கள்!" என்றான் தீபன்.

"அவர்களுக்காகத்தான் கூட்டிப் போகிறீர்களா?" என்ற கேள்வி, தன்னை அறியாமல் அவள் வாயிலிருந்து வந்தது.

நெரிசலில் காரைக் கவனமாகச் செலுத்திவிட்டு, "எல்லோருக்காகவும்தான்! எனக்காகவும் தான்! என்னால், வீட்டை விட்டுப் போனாய் என்பது, நினைப்பதற்குச் சுகமாக இருக்கும் என்றா நினைத்தாய்?" என்று கேட்டான் தீபன்.

தொடர்ந்து அவனது முறையாக, "ஆனால், நீ என்ன, திடுமென இப்படிச் செய்து விட்டாய்? அங்கே ஏதோ எழுதி வைத்துவிட்டு, இங்கே வெயிட்டிங் ரூமில் வந்து இருந்து, என்ன இது?" என்று கேட்டான் தீபன்.

"என்ன செய்வது?" என்றாள் அவள்! "நீங்கள் அப்படி நடந்த பின், அங்கே தொடர்ந்து இருப்பது, மறைமுகமாக ஒப்புக் கொள்வது போலத் தோன்றும் என்ற பயம்! ஏற்கனவே, தங்குவதற்குக் கௌரவமான இடமாக்த் தேடித் தேடி அலுத்திருந்த சமயம். இன்றிரவுக்கு இங்கே பெண்கள் அறையில் தங்கி விட்டால், நாளைக்கு ஏதாவது இரண்டாம் தர விடுதியிலாவது சேர்ந்து விடலாம் என்று நினைத்தேன்..."

"நன்றாக நினைத்தாய்! அசட்டுத்தனமாய்!"

சிறு அமைதியின் பின் "சற்று நேரமாக, எனக்கும் அப்படித்தான் தோன்றத் தொடங்கியிருந்தது!" என்றாள் அவளும். "சும்மா உள்ளே வருவதும், போவதுமாக ஆண்கள் நடமாட்டம் தெரிந்தது! டிக்கெட் இருக்கிறதா என்று கேள்வி வேறு! கொண்டு வருவார்கள் என்று சொல்லி, அப்போதைக்குச் சமாளித்தேன்..."

"அதனால் தான், உன்னிடம் பேசவேண்டும் என்றதும், டிக்கெட் கொண்டு வந்தீர்களா என்கிற மாதிரி, ஏதோ கேட்டார்கள் போல! நான் சும்மா தலையாட்டிவிட்டு வந்தேன். ஆனால், இனி இந்த அசட்டுத்தனம் வேண்டாம். தேவையிராது" என்றான் தீபன்.

யோசனையோடு அவனைப் பார்த்தாள் சந்தனா.
பார்வையை உணர்ந்து, "நம்ப வேண்டும் சந்தனா. இங்கே பிறந்து வளர்ந்தவன் தான் என்றாலும், எனக்கு ஏழு ஆண்டுகளாக, அங்குள்ளதே பழகி விட்டதால், அனுசரிப்பது கொஞ்சம் கடினம். தற்செயலாகக் கை பட்டால் கூட உனக்கும் சட்டென சந்தேகம் தான் வரும்! எனவே, ஒன்று செய்வோம். பொதுவாகப் பார்த்துப் பேச வேண்டிய தருணங்கள் தவிர, இருவருமே, அடுத்தவர் பாதையில் குறுக்கிடாமல் ஒதுங்கிப் போய்விடலாம்! மித்தி, அம்மாவுக்காகத் தயவு செய்து, நீ இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும்" என்றான் தீபன்.

ஏதோ யோசித்து, "ப்ளீஸ்!" என்று சேர்த்துச் சொன்னான்!

வேறு வழியும் தான் இல்லையே என்று யோசிக்கும் போதே, தனக்குமே, அந்த வீட்டை விட்டு வெளியே செல்ல விருப்பம் இல்லை என்று சந்தனா உணர்ந்தாள்!

அந்த வீட்டு வசதிகளுக்குப் பழகி விட்டதாலா என்று உள்ளூரக் கூசியவளுக்கு, அன்று, அவள் வீட்டை விட்டு வெளியேறிய போதும், அதே வசதிகள் இருக்கத்தானே செய்தன என்பது நினைவு வந்தது ஆறுதலைத் தர, "உம்" என்று சிக்கனமாய் சம்மதித்தாள்!

சற்று நேரம் பேசாமலே காரை ஓட்டிவிட்டு லேசாகத் தொண்டையைச் செறுமி, "வழக்கம் போலவே கடுமையாகப் பேசிவிட்டதாக அம்மாவிடம் சொன்னேன்..." என்று இழுத்தான் தீபன்.

அவன் மேலே பேசுமுன், "அப்படியே இருக்கட்டும்!" என்றாள் சந்தனா.

மற்றபடி, இதைப் போய், மீனாட்சி ஆன்ட்டியிடம் விலாவாரியாக விளக்குவாளா என்ன? கண்ராவி!

அதுவும், அவர்களுடைய பிள்ளையைப் பற்றி!

அத்தோடு, தீபனும்தான், ஒரு மாதிரியாக மன்னிப்பும் கேட்டுவிட்டானே!

"தாங்க்ஸ்!" என்றபடி, காரை வீட்டினுள் செலுத்தினான் தீபன்!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:29 pm

ஆவலும், ஆர்வமுமாக எல்லாரும் அவளை வரவேற்ற விதத்தில், அவர்களையெல்லாம் விட்டு விட்டு, அங்கிருந்து சென்றோமே என்று, சந்தனாவுக்கு உள்ளூர மனம் நெகிழ்ந்தது. உருகிப் போயிற்று!

தீபன் சொன்ன மாதிரி, என்னிடம் இந்த வேலை வைத்துக் கொள்ளாதே என்று அவனிடம் கண்டிப்பாக சொல்லியிருந்தால் போதுமா?

பழைய காலக் கதாநாயகி போல வீட்டை விட்டு ஓடி, படாத கஷ்டத்தில் மாட்டி... சரியான சமயத்தில் தீபன் வந்திராவிட்டால், அப்படியும் கூட நேர்ந்திருக்கலாம்!

மற்றவர்கள் எப்படி உணர்வார்கள் என்றும் எண்ணிப் பார்க்கவில்லை. தனக்கு என்ன நடக்கக் கூடும் என்றும் யோசிக்கவில்லை!

அதையெல்லாம் யோசியாது செல்வது, எந்த நாட்டிலும் பெண்களுக்கு நல்லதில்லை, என்றானே!

எண்ணிப் பார்க்கையில், அது எவ்வளவு சரியாகத் தோன்றுகிறது!

கடைசியில் சற்று நேரம் மனது என்னமாகப் பதறிப் போயிற்று!

இருந்திருந்து தீபனின் பேச்சு சரியாக இருப்பதாக, அவள் எண்ணுகிற காலம் கூட வரும் என்று அவள் கனவிலும் கருதியது இல்லை!

தன்னை வீட்டுக்கு அழைத்து வருவதற்காக... மீனாட்சி ஆன்ட்டி என்ன சொன்னாள்... அவளது கையில் காலில் விழுந்தேனும் அழைத்து வருவதாகச் சொன்னானாமே! அப்படி அவன் வந்து அவளை அந்த வீட்டுக்கு அழைத்து வருவான் என்பதும், கற்பனைக்கு எட்டாத விஷயமே!

ஆனால், எதிர்பாராதது நடப்பதுதானே வாழ்க்கை!

அவளுடைய தந்தையின் மறைவைப் போல!

சட்டென அதிர்ந்து, படுக்கையில் இருந்து, எழுந்து அமர்ந்தாள் சந்தனா!

'எஸ்கேப்பிஸம்' என்று கூடச் சில பேர் சொல்லலாம்!

ஆனால், சந்தனா அவளுடைய தந்தையின் மறைவு குறித்து நினைத்துப் பார்ப்பதே கிடையாது!

அருமையான தந்தையான அவரை தினந்தோறும் நினையாதிருக்க அவளால் முடியாதுதான்! ஆனால், அவரைப் பற்றிய பலப்பல மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளை நினைவுக்குக் கொணர்ந்து பார்த்து, உருகிப் போவாளே தவிர, அவரது முடிவை, கடைசிப் பகுதியை அப்படியே மனதில் இருந்து ஒதுக்கியே தான் வைத்திருந்தாள்.

பூஞ்சை மனம் படைத்தவள் அல்ல என்பதால், அவளால், அது முடிந்தது!

ஆனால், இன்று திடுமென, ஏன் இந்த நினைவு வந்தது?

அன்று அனுபவித்த பல்வேறு உணர்ச்சிகளால் அவள் மனம் பலவீனப்பட்டு விட்டிருந்ததா?

அப்பாவின் மரணமும், அதற்கு முன்னிருந்த...

மனம், அதைத் தொடர்ந்து நினைப்பதைத் தவிர்க்க எண்ணி, அவசரமாகப் படுக்கையை விட்டு இறங்கினாள் சந்தனா.

முக்காலியின் மீது இருந்த பாட்டிலை எடுத்து, அதில் இருந்த தண்ணீரை குடித்தாள்!

வழக்கமாக இரவு உணவுக்காகச் செல்லும் போது, இந்த பாட்டிலை எடுத்துப் போவாள். தூங்குவதற்காக மீண்டும் மேலே வரும் போது, பாட்டிலை நிரப்பிக் கொண்டு வருவாள்.

இன்று என்னென்னவோ நடந்து, கீழேயே இருந்து விட்டுப் படுப்பதற்காக மட்டுமே, அறைக்கு வந்தததில், வழக்கம் விட்டுப் போயிற்று!

அப்போதும், அதில் அருந்த தண்ணீர் போதுமானதாக இருந்ததால், அதைக் குடித்துவிட்டு, ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க முயன்றாள்.

மனம் அதில் பதியாததோடு, உடலும் அயர்ந்திருந்ததால், சற்று நேரம் படிப்பதற்குள் கண் சொக்கிவிட, விளக்கை அணைத்துவிட்டுத் தூங்கிவிட்டாள்.

நல்ல அயர்ந்த உறக்கம்!

திடுமென, சந்தனா படுக்கையில் உருண்டு புரளலானாள்!

கடற்கரையில் கூட நடந்து கொண்டிருந்த தந்தை, திடுமென வீசத் தொடங்கிய சூறாவளியில், அவளை விட்டு விலகி எங்கே போனார்?

இங்கும் அங்கும் ஓடி ஓடித் தேடினால், நுரைத்துக் கொண்டு உயரே எழும்பிய அலை, முகத்தில் ரத்த காயத்துடன் அவரது முகம்!

அலை, அவரை இழுத்துப் போய்விடாமல் பிடிப்பதற்காக ஓடினாள், கால் தடுக்கிக் கீழே விழுகிறாள்!

தவிப்புடன் அலை நீரின் இழுப்பைச் சமாளித்து எழ முயலும்போதே, நடந்ததெல்லாம் கனவு என்பது, சந்தனாவுக்குப் புரியத் தொடங்கிவிட்டது.

என்னதான் முயன்றும், உடனடியாக முழு விழிப்பை கொண்டு வர முடியாமல், உடல் சண்டித்தனம் செய்தது!

சிரமப்பட்டு எழுந்து, குளியலறைக்குப் போய், வியர்த்து வடிந்த முகத்தைக் கழுவிக் கொண்டு வந்து, தண்ணீர் பாட்டிலுக்காகக் கையை நீட்டும் போதுதான், பாட்டிலில் தண்ணீர் இல்லை என்பது, அவளுக்கு நினைவு வந்தது!

அதொன்றும் பெரிய விஷயம் இல்லை!

வியர்த்துக் கொட்டியிருந்ததால், சற்றுக் குளிர்ச்சியாகக் குடிக்க வேண்டும் போலத்தான் சந்தனாவுக்கும் இருந்தது! எப்படியும், கீழே போய் ஐஸ் வாட்டரைத்தான் குடித்திருப்பாள்.

கூடவே, எப்போது விழித்தாலும், மீண்டும் உறங்குமுன் அவளுக்கு ஒரு மிடறேனும் தண்ணீர் குடிக்க வேண்டும்!

மீண்டும் தூக்கம் கலைந்தால், குடிப்பதற்குத் தண்ணீர் வேண்டுமே என்று காலி பாட்டிலையும் எடுத்துக் கொண்டு, மெல்லப் படியிறங்கி சாப்பாட்டு அறைக்குச் சென்றாள் அவள்.

ஃபிரிஜ்ஜைத் திறந்து, உள்ளிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துத் திறக்கும் போது, "சந்தனா?" என்று தீபனின் குரல் கேட்கவும், அவள் அதிர்ந்த வேகத்தில், பாதி திறந்த நிலையில், கையில் இருந்த தண்ணீர் பாட்டில், கீழே விழுந்து உருண்டது!

"என்ன சந்தனா?" என்றபடி, விளக்கைப் போட்டுவிட்டு, அவள் அருகில் வந்தான் அவன்.

இன்னமும் தண்ணீரைக் கொட்டிக் கொண்டிருந்த பாட்டிலை அவசரமாக எடுத்தவளின் கைகள் நடுங்குவதைக் கண்டதும், பாட்டிலை வாங்கிக் கொண்டு, சாப்பாட்டு அறை நாற்காலி ஒன்றை இழுத்து, அதில் அவளை உட்கார வைத்தான்!

அவள் வந்த நோக்கம் உணர்ந்து ஒரு தம்ளரில் குளிர்ந்த நீர் நிரப்பி அவளிடம் கொடுத்துவிட்டு, "என்ன சந்தனா? என் குரலைக் கேட்டதும் பயந்து விட்டயா?" என்று இதமான குரலில் வினவினான்.

இல்லை என்று தலையாட்டினாள் அவள். "அந்தக் க... கனவு! தி...திரும்பவும், இன்று வந்து விட்டது!" என்றாள் கலங்கிய குரலில்!

அருகிருந்த இன்னொரு நாற்காலியை இழுத்து, அதில் அமர்ந்து, "திரும்பவும், என்றால்? இதே கனவு முன்னேயும் வந்திருக்கிறதா?" என்று கேட்டான் தீபன்.

"இம்!" என்றாள் அவள் ஒப்புதலாக. "இது மூன்றாவது தடவை!"

"என்ன கனவு?" என்று கேட்டான் தீபன்.

அவனை ஒரு தரம் பார்த்துவிட்டு, அவள் பேசாதிருக்கவும், "தயங்க வேண்டாம், சந்தனா. ஒரே கனவு, திரும்பத் திரும்ப வந்தால், அதற்குக் காரணம் இருக்கும்! உன் நிலைமையைப் பார்த்தால், அது பயங்கரக் கனவு என்றும் தோன்றுகிறது! அதிலிருந்து உன்னை மீட்கும் முயற்சியாகத்தான் கேட்கிறேன் சொல்லு!" என்று, தீபன் மறுபடியும் கேட்கவும், ஒரு சிறு தயக்கத்தின் பின், சந்தனா தன் கனவுகளை விவரித்தாள்!
"ம்ம்ம், எல்லாக் கனவுகளும் கடைசியில்... சந்தனா, உன் அப்பாவின் மறைவில் பிரச்சினை இருந்ததா?" என்று கேட்டான் தீபன்!

ஆம் என்பது போலத் தலையாட்டினாள் அவள்.

"என்ன அது?"



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:30 pm

மடியில் கோத்திருந்த விரல்களைப் பார்த்தபடி, அவள் சொன்னாள், "திருட்டு! ஒரு... ஓர் ஒன்றாம் தேதி சமயம். பள்ளியில், ஸ்டாஃப் மீட்டிங் முடிந்து, அப்பா வர நேரம் ஆகும் என்று நான் முன்னதாக வந்து விட்டேன்! பிறகு பார்த்தால், வெகு நேரம் அப்பா வரவே இல்லை! கடைசியாக ஏழு மணிக்கு மேலே, கதவைத் தட்டிக் கொண்டு, அப்பா நிற்கிறார்! அவரிடமும் ஒரு சாவி உண்டு. பிறகு தான் தெரிந்தது, சாவி துவாரத்தில் சாவியை நுழைக்கும் அளவுக்கு, அவருக்குக் கை நிதானம் இல்லை! வீட்டு வாயில் வரை அப்பா எப்படி வந்தார் என்பதே அதிசயம்! அந்த அளவுக்கு அவரது தலையில் அடி! முகமெல்லாம்... ரத்தம்!

"ஒன்றாம் தேதி அல்லவா? சம்பளம் வாங்கி வந்திருப்பார் என்று, அவரைத் தலையில் அடித்துக் கீழே தள்ளி, எல்லாவற்றையும் பிடுங்கியிருக்கிறார்கள்...!" தொடங்கி விட்ட பிறகு, நிறுத்த முடியாதவள் போல, சந்தனா சொல்லிக் கொண்டே போனாள்.

அவனும் குறுக்கிடாமல் கேட்டான்.

"...ஆனால், அப்பா சம்பளத்தைச் செக்காக வாங்கி, பள்ளியில் இருந்த பாங்கில் கட்டி விடுவார் என்று தெரியாத முட்டாள்கள்!

"அப்படி, என் அப்பாவிடம் அவர்கள் திருடியது எவ்வளவு தெரியுமா? சுமார் முன்னூறு ரூபாயும், ஒரு வெள்ளி மோதிரமும் மட்டும்தான்!

"இதைப் பிடுங்க, என் அப்பாவின் உயிரையே எடுத்து விட்டார்கள்!

"எவ்வளவு நல்லவர் தெரியுமா, என் அப்பா! தேவை என்று கேட்டிருந்தால், அவரே கொடுத்திருப்பார்! அவரைப் போய், அநியாயமாய் அடித்துக் கொன்று விட்டார்களே!" என்று முடித்த போது, அவளது கண்களில், கண்ணீர் பொங்கி வழியலாயிற்று!

சற்று நேரம் குறுக்கிடாமல் அவளை அழ விட்டுவிட்டு, அதன் பின், "அந்தக் குற்றவாளிகளைப் பிடித்தார்களா?" என்று கேட்டான் தீபன்.

"இல்லை! இன்னமும் தேடிக் கொண்டிருக்கிறார்களாம்! ஆனால், அவர்களை எப்படியாவது பிடித்து முன்னூறு ரூபாயும் வெள்ளி மோதிரமும், நான் தருகிறேன். என் அப்பாவின் உயிரைத் திருப்பித் தருவாயாடா என்று கேட்க வேண்..." என்று ஆத்திரத்துடன் சொல்லும் போதே, அதன் பயனற்ற தன்மையை உணர்ந்து, உச்சிக் கொட்டினாள், சந்தனா! "என்ன பிரயோஜனம்? யாரை, என்ன கேட்டும் தான் என்ன பிரயோஜனம்?" என்றாள் சோர்வுடன்.

"உண்மைதான்!" என்றான் அவனும்!

சில வினாடி அமைதியின் பின், "இந்தக் கனவைப் பற்றி, யாரிடமும் சொன்னாயா, சந்தனா?" என்று வினவினான்.

"லேசாக ஒரு தரம், அண்ணனிடம் தொடங்கினேன். முதலில் வந்த படகுக் கனவு! ஆனா, டைட்டானிக் பார்த்ததின் பாதிப்பு என்று சொல்லிச் சிரித்தானா? அதற்குப் பிறகு, அண்ணனைப் பிடித்து வைத்துச் சொல்ல, மனது வரவில்லை! அத்தோடு, அவனும் என்னை இங்கே விட்டுவிட்டு வெளிநாடு செல்ல வேண்டிய நிலை! அவனும் வருத்தம்தானே படுவான் என்று..."

தன்னிச்சையாக எழுந்த கையை அடக்கிக் கொண்டு, "அதுதான் காரணம்!" என்றான் தீபன்.

சந்தனா ஏறிட்டுப் பார்க்கவும், "பெரிய இழப்பு, அநியாயமான முறையில் அது நேர்ந்த விதம், இவற்றால் ஏற்பட்ட துக்கம், ஆத்திரம் என்று எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே போட்டு அடைத்து வைத்ததுதான் இந்தக் கனவுகளின் காரணம் சந்தனா. எல்லாமே உள்ளே கிடந்து முட்டி மோதிக் கொண்டு இருந்திருக்கின்றன! உன் மனமோ, உடலோ களைப்படையும் போது, கனவாக வெளிப்பட்டிருக்கிறது! இன்றைய தினத்தை, அப்படிப்பட்ட நாளாக ஆக்கியதற்கு, சாரிம்மா! ஆனால், உள்ளே அடைத்து வைத்திருந்ததை எல்லாம் இப்போது கொட்டிவிட்டாய் அல்லவா? இனி, இந்தக் கனவுகள் வர வாய்ப்பில்லை! அதனால், இனிக் கவலையற்றுப் படுத்துத் தூங்கு!" என்றான் அவன்.
என்னவோ, சர்வமும் அறிந்தவன் போல, தீபன் கூறிய விதம், சந்தனாவுக்கு வியப்பாக இருந்தது!

நம்ப முடியாததாகவும்!

அவளது கனவுகள் கூடவா, இவன் பேச்சுக்குக் கட்டுப் படும்? ஆனால், இவன் சொல்லும் போது, நம்ப முடியாததைக் கூட நம்பலாம் போலவும் தோன்றியது!

"என்ன? உன் கனவுகள் கூட, என் பேச்சுக்குக் கட்டுப்படுமா என்று யோசிக்கிறாயா?" என்று கேட்டு, அவளைத் திகைக்கச் செய்து விட்டு, "இது, சாதாரண மனோ தத்துவம், சந்தனா! வைத்தியத்தில், மனோ தத்துவம் ஓர் அங்கம்! உனக்குத் தெரியுமோ, என்னவோ, நான் வைத்தியம் படித்தவன் தான்! அதில் மேல் படிப்பையும் முடித்திருக்கிறேன்! யுஎஸ்சில்தான்!" என்றவன், அத்தோடு பேச்சை நிறுத்தி, தோளைக் குலுக்கினான்.

முதல் நாளே, 'சுகம்' மருத்துவமனையில் உள்ள மருத்துவக் கருவிகள், அவை தொடர்பான செலவுகள் பற்றித் தெரிந்தவன் போலத் தீபன் பேசியது, சந்தனாவுக்கு இப்போது நினைவு வந்தது!

பிறருக்கு உதவும் பணி என்று மருத்துவத் தொழிலைச் சொல்வார்கள்! அதைப் படித்து முடித்துவிட்டு, இங்கே சொந்த மருத்துவமனையும் வைத்துக் கொண்டு, இவன் ஏன், அதைப் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறான்?

ஒரு வேளை, 'அரை வைத்தியன்...' என்று ஏதோ சொல்லுவார்களே, அது போல ஏதோ செய்து விட்டானோ?

அதுதான் மீடியாவுக்கு அப்படிப் பயப்படுகிறானோ?

மனோதத்துவம் பயின்றவனுக்கு, அவளது முகம் காட்டிய பாவம் பிடிக்கவில்லை போலும்!

சட்டென எழுந்து, "ஓகே! என் விஷயம் போதும்! இனியாவது போய், நிம்மதியாகத் தூங்கு! இரவுத் தூக்கம் ரொம்பவும் குறைவது, ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல! நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே? கூடக் கொஞ்ச நேரம் சேர்த்துத் தூங்கு! குட்நைட்!" என்று விட்டு, அவனது அறைப் பக்கம் சென்றான் அவன்.

திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!

அதாவது, அவனைப் பற்றிய பேச்சோ, நினைப்போ கூட, அவனுக்குப் பிடிக்கவில்லை! ஆனால் ஏன்?

தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொண்டு, அவளது அறையை நோக்கி நடந்தவாறே சந்தனா யோசித்தாள்.

தீபனைப் பற்றிய ஒரு விவரமும், யாரும் சொல்வது இல்லை!

மீனாட்சி ஆன்ட்டியின் பர்சில் இருப்பது தவிர, அவனது புகைப்படங்கள் எதையுமே அந்த வீட்டில் அவள் பார்த்தது இல்லை! அவனது கட்டளையாகவே இருக்க வேண்டும்!

அவனது விருப்பப்படி அவனுடைய தாயாரே, அவனைப் பற்றிப் பேசுவது இல்லை எனும் போது, அவனைப் பற்றி எப்படித் தெரிந்து கொள்வது?

தெரிந்து கொள்வது பற்றி யோசிக்கும் போதே, சற்று முன் பேச்சை நிறுத்தி, அவன் திரும்பிப் பாராமல் சென்றது, அவளுக்கு நினைவு வந்தது!

அடுத்தவர் பாதையில் குறுக்கிடக் கூடாது என்று நேரடியாகவே சொன்னானே!

அவனைப் பற்றிய பேச்சு, கேள்விகள் எல்லாமே, அந்த வீட்டில், பெரும் குற்றங்களே!

கேட்கிறவர் குற்றவாளி என்பது குறைந்த பட்சமாய், அவனது கருத்து!
அதாவது, தீபனைப் பற்றிக் கேட்டு அறிய நினைப்பது, தீக்குள் விரலை வைப்பது போலத்தான்! சூடு பட்டுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால், அவனைப் பற்றி விசாரிக்கவும் கூடாது!

இருக்கிற நிம்மதியைக் கெடுத்துக் கொண்டு, அவளுக்கு எதற்கு வீண் வம்பு!

எப்படியும் அவள் இங்கே இருக்கப் போவதே, அண்ணன் பூபால் வருகிற வரையில் தான்! அது, ஒரு மாதமோ, இரண்டு மாதங்களோ!

அதன் பிறகும் சந்தோஷமாகவே மீனாட்சி ஆன்ட்டியை வந்து பார்த்துப் பேசுகிற மாதிரி, சுமுகமான உறவோடு இருக்க வேண்டாமா?

இவ்வளவு பழகிய பிறகு, மீனாட்சி ஆன்ட்டியின் உறவை அடியோடு விடுவது வேதனையாக இருக்கும்!

மித்ராவும் அப்படித்தான்! ஆனால், அவளை எப்போது வேண்டுமானாலும், அவளுடைய தந்தை, நாட்டை விட்டு அழைத்துச் சென்று விடலாம்! அதனால், அவள் மீது பாசத்தை வளர விடுவது, மித்ராவுக்குமே நல்லதல்ல!

அப்படிக் குழந்தையோடு தீபன் சென்று விடுகின்ற சமயத்தில், ஆன்ட்டிக்கு ஆறுதலாகக் கூட, சந்தனா இங்கே அடிக்கடி வர வேண்டியிருக்கும்!

எனவே, எந்த வகையிலும், இந்த சுமுகமான உறவைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது!

அதற்காக, தீபன் சம்பந்தப்பட்ட அனைத்திலிருந்தும் தூர...தூரமாய் ஒதுங்கிப் போய்விட வேண்டும்!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:30 pm

யோசித்துச் செய்த முடிவைச் செயலாற்றுகிறவளாக சந்தனா எப்போதும் எச்சரிக்கையுடனேயே நடந்து கொண்டாள்.

தீபன் முன்னிலையை, முடிந்தவரை தவிர்த்ததோடு, அவனைப் பற்றிய கேள்விகளையும், மனதுக்குள்ளேயே மறைத்து வைத்தாள்!

மித்ராவிடம் இருந்தும் ஒதுங்கத்தான் முயன்றாள்.

ஆனால் ஒரு தரம் சொல்லாமல் கொள்ளாமல் போனாளே என்ற பயத்தில், சிறுமி அவளிடம் பசை போட்ட மாதிரி ஒட்டிய போது அவளால் விலக்க முடியவில்லை!

வீட்டின் மற்றவர்களிடம் எப்போதும் போல் நல்லுறவு தான்!

சொல்லப் போனால், அவளைச் சந்தோஷப்படுத்த முயன்றார்கள் என்றே சொல்லலாம்!

மீனாட்சி மட்டும், ஒரு தரம் அவளைத் தனியே அழைத்து, அவளுக்கு ஏதேனும் மனக்கஷ்டம் என்றால், தன்னிடம் நேரில் சொல்லும்படி கூறி, இனி இப்படிப் போவது இல்லை என்ற வாக்குறுதியும் வாங்கிக் கொண்டாள்!

மொத்தத்தில் வீடு பிரச்சினையற்று அமைதியாக இருந்தது!

அன்று காலை உணவு முடிந்ததும், "இன்று சாப்பிட்ட நூடுல்சை அன்னம்மா என்னவென்று சொன்னாள்?" என்று கேட்டாள் மித்ரா!

அன்று காலைக்கு அன்னம்மா இடியாப்பம் வைத்திருந்தாள். தொட்டுக் கொள்ள, இனிப்புக்குத் தேங்காய்ப்பூ சர்க்கரையும், காரத்துக்குக் குருமாவும்!

சுவை பிடித்துப் போகவே, நன்றாகச் சாப்பிட்டுவிட்டு, அதன் பெயரைக் கேட்டாள் மித்ரா.

முறுவலோடு, "சொல்வதற்கு, உனக்குக் கொஞ்சம் கடினமாக இருக்கக் கூடும்! அதனால், இப்படிப் பிரித்து சொல்லிப் பார். இடி...யாப்பம்!" என்று பெயரை இலகுவாக உச்சரிக்கக் கற்றுக் கொடுத்தாள் சந்தனா!

மித்ராவும் அதே போலச் சொல்லிவிட, இருவரும் சந்தோஷமாகக் கைதட்டி மகிழ்ந்தனர்.

புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, "மித்ராவுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கலாம் என்று பார்க்கிறேன் தீபு! சும்மா, வீட்டில் பேசும் அளவுக்கேனும் கற்றுக் கொடுக்கும்படி, யாரையேனும் ஏற்பாடு செய்யட்டுமா?" என்று மகனிடம் அனுமதி கேட்டாள் மீனாட்சி.

ஒரு வகையில், இது சற்றுத் துருவும் கேள்விதான்!

விரைவிலேயே யுஎஸ்சுக்குக் கிளம்புகிற திட்டத்தில் இருந்தால் எதற்கம்மா என்று மறுத்துவிடுவான் அல்லவா?

ஆனால், தீபன் இன்னொரு பதில் சொல்லி, எல்லோரையும் திகைக்க வைத்தான்! "அதென்னம்மா 'யாரையேனும்?' வீட்டிலேயே ஒரு டீச்சரம்மாவை வைத்துக் கொண்டு, இன்னொருவரை எதற்காக ஏற்பாடு செய்வது? பேசாமல் சந்தனாவையே கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள்! மித்ராவும், அவளிடம் முரண்டு பிடிக்காமல் படிப்பாள்!" என்றான் இலகுவாக!

சந்தனா பிரமித்துப் போனாள்!

'மித்ராவை வசியம் செய்கிறாய்' என்று குற்றம் சாட்டிய அதே தீபன்!

என்னதான், உன்மேல் இருந்த சந்தேகம் போய்விட்டது என்றாலும், விலகியிருக்குமாறும் சொன்னான் தானே?

அவன் வாயால், மகளுக்குக் கற்றுக் கொடுக்கச் சொல்வது என்றால்?

'வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷிப் பட்டம்' என்பது, இதுதான் போலும்!

அன்று முழுவதும், தரையிலேயே கால் பரவவில்லை அவளுக்கு!

மித்ராவுக்கும் ஆர்வம் இருந்ததால், உட்கார்ந்து இருக்கும் போதும், நடக்கும் போதும், சாப்பிடும் போதும், போக வர... ஓரொரு வார்த்தைகளாக, அவளுக்குத் தமிழ் கற்றுக் கொடுத்ததே, சந்தனாவுக்கு சந்தோஷம்.
அதைத் தீபன் அவ்வப்போது கவனித்து, ஒப்புதலாக முறுவலித்தது, இன்னமும் ஆனந்தமாக இருந்தது!

முறுவலித்தது மட்டுமல்ல, கூடச் சேர்ந்து அவனும் ஏதாவது சொல்லுவான்.

சில சமயங்களில் ஓரோர் எழுத்துக்களை மாற்றிச் சொல்லி, மித்ரா இருவருக்குமே சிரிப்பு மூட்டுவாள்!

சாப்பிடுகிற சமயத்தில், தமிழில் சொல்லுகிறேன் என்று, 'அப்பா, செருப்பு சாப்பிடுகிறார்!' என்பாள்!

பருப்பு, செருப்பான விதத்தில் எல்லோருக்கும் சிரிப்பு பிய்த்துக் கொண்டு போகும்!

புத்திசாலிப் பெண் என்பதால், எதற்குச் சிரிக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, தானாகவே, இதுபோலத் தோசையையும் மீசையையும் குழப்பி, "ராசையா முகத்திலே 'தோசை' வளர்த்திருக்கிறார்" என்று விட்டு எல்லோரும் சிரிக்கையில் கண் சிமிட்டலோடு சேர்ந்து கொள்வாள், சிறுமி!

இது, இன்னமும் மகிழ்ச்சியைப் பெருக்கும்!

மீன் என்ற வார்த்தையின் அர்த்தம் தெரிந்த பின், மீனாட்சி, 'ஃபிஷ்'மா ஆகிப்போனாள்.

அன்னம்மா, 'ரைஸ்மா'.

"என் பெயரை, இப்படிக் கெடுக்கக் கூடாதும்மா" என்று தீபன் சொன்ன பிறகுதான், மித்ராவின் இந்த விளையாட்டு நின்றது!

அவளோடு ஓடியாடி விளையாடுவதும், பெரும்பாலும் தீபனும் கூடவே இருந்ததும், பள்ளி முடிந்து, எப்போது வீட்டுக்குப் போவோம் என்ற துடிப்பை, சந்தனாவுக்கு ஏற்படுத்தின!

இடையில் ஒரு கலக்கமும் நேர்ந்தது!

சிதம்பரநாதனிடம் திருடி, அவரது மரணத்துக்குக் காரணமானவர்களைப் பிடித்துவிட்டதாகவும், அவர்களிடமிருந்து கைப்பற்றிய, அவளுடைய தந்தையின் பேனா, மோதிரம், பர்ஸ் முதலியவற்றை அடையாளம் காட்ட வருமாறும், சந்தனாவைப் போலீஸ் நிலையத்திலிருந்து அழைத்தார்கள்!

சந்தனாவின் கலக்கம் புரிந்து, தீபனே, அவளை அழைத்துச் சென்றான்!

அவன் தாய்க்கு, அதுவே அதிசயம்!

யாராவது பத்திரிகைக்காரர்கள் மோப்பம் பிடித்து விடுவார்கள் என்று சென்னையில் தீபன் வெளியே போகவே மாட்டான்!

அன்று ரயில் நிலையத்துக்குச் சந்தனாவை அழைத்து வர அவன் போனதே மீனாட்சிக்கு ஆச்சரியம்தான்!

ஏதோ மடத்தனமாகச் சொல்லி, அவளை விரட்டிவிட்டுப் பிறர் அறியாமல் மன்னிப்பு கேட்கப் போகிறான் என்பது, அவளது ஊகம்!

அத்தோடு, அப்போது இரவும் கூட!

ஆனால், இப்போது பட்டப்பகலில் சந்தனாவோடு கிளம்புகிறான் என்றால், அவளது ஆறுதல் மற்ற எதையும் மறக்கடிக்கிறது என்று தானே அர்த்தம்?

அப்படியானால்... அதற்கு மேல் யோசிக்கக் கூடாது. நடப்பது நல்லதாக இருந்தால், அவளுக்கு மகிழ்ச்சியே! ஆனால், வெறும் ஊகத்திலேயே கோட்டை கட்டுவது கூடாது என்று மீனாட்சி அம்மாள், தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.

காவல் நிலையத்தில், தீபனின் கைப்பிடியிலேயே நிற்பதை, சந்தனா உணரவே இல்லை!

வெறும் முந்நூறு ரூபாய்க்கும், ஒரு வெள்ளி மோதிரத்துக்குமாக, என் தந்தையைக் கொன்றுவிட்டாயே என்ற தவிப்பில், அவளது உள்ளத்தோடு, உடலும் பதறியது! தீபனின் கைப்பிடி இல்லையென்றால், என்ன ஆகியிருப்பாளோ?
ஆனால், திருடர்களைப் பிடித்து வைத்திருந்த இன்ஸ்பெக்டர் வேறு சொன்னார்!

"உங்கள் அப்பா காந்தி மாதிரிம்மா! சாவில் கூடப் பிறருக்கு நல்லது செய்கிற விதம்! இந்த மூவரும் ஈவிரக்கமற்ற கொலைகாரர்கள். மற்றவர்களின் உயிர் இவர்களுக்குத் துச்சம்! இவர்கள் கணக்கில், ஆறு கொலைகள் இருக்கின்றன. இவ்வளவு நாள் இவர்களைப் பிடிக்கச் சரியான ஆதாரம் கிடைக்காமலே இருந்தது! இப்போது இந்த வெள்ளி மோதிரத்தைப் பிளாட்டினம் என்று நினைத்து விற்கப் போய், மாட்டிக் கொண்டார்கள்! பெரிய தலைமை ஆசிரியர், பாஸ் பண்ணிவிட, பள்ளியில் சேர்க்க என்று நிறைய வாங்கியிருப்பார். இருந்திருந்து வெள்ளியிலா போடுவார் என்று எண்ணினார்களாம்! மாட்டிக் கொண்டார்கள் அல்லவா? சிதம்பரம் சார் விஷயத்தில், நேரில் பார்த்த சாட்சிகளும் இருப்பதால், இனி இவர்கள் ஜெயிலை விட்டு வெளியே வராதபடி, நான் பார்த்துக் கொள்கிறேன்! சமூகத்துக்கு ஒரு பெரிய சாபக்கேடு தீர்ந்தது! உங்கள் அப்பா, தன் உயிரைக் கொடுத்துத் தீர்த்து வைத்திருக்கிறார்!" என்றார் அவர் நன்றியோடு!

கண்ணைக் கரித்தபோதும், இதை எங்கேயோ இருந்து கேட்டிருந்தால், அப்பாவும் சந்தோஷப்பட்டிருப்பார் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!

திரும்பி வரும்போது கண்மூடி அமர்ந்திருந்தவளை மென்மையாக இழுத்து தன் தோள்மீது சாய்த்துக் கொண்டான் தீபன்.

வீடு வந்த பிறகு, காவல் நிலையத்தில் நடந்ததை மீனாட்சியிடம் விவரிக்கும் பாவனையில், சிதம்பரநாதனைப் பற்றி மிக உயர்வாகத் தீபன் பேசவும், உள்ளிருந்த வருத்தம் குறைந்து, பெருமையாக உணர்ந்தாள் சந்தனா!

அதன் பிறகும், சந்தனாவிடம் ஒரு கனிவுடனேயே அவன் நடந்த கொள்ள, அதைக் கவனித்த மித்ராவும், அவளைத் தடவிக் கொடுப்பதும், கொஞ்சுவதுமாக தன் அன்பைக் காட்ட, விரைவிலேயே, சந்தனாவின் முகத்தில் புன்னகையே மலரத் தொடங்கியது!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:31 pm

உள்ளூர அஞ்சியிருந்த போதும், அன்றிரவு, பழைய கனவு வராதது, சந்தனாவிற்குப் பெரும் ஆறுதலாக இருந்தது!

அதையே யோசித்தவன் போலத் தீபனும் அவளிடம் விசாரிக்க, அதில் தொடங்கி, இருவருமாகத் தனியே பேசிக் கொண்டிருப்பதும், இயல்பாகவே நடக்கலாயிற்று!

பாராதது போல, இதைப் பார்த்திருந்த மீனாட்சி அம்மாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சியே!

தாயின் இந்த மகிழ்ச்சியை, மேலும் அதிகப்படுத்தும் விதமாக, இன்னொன்று நடந்தது!

அன்று, யுஎஸ்சில் இருந்து தீபனுடைய ஏஜெண்ட் எலிசா போன் செய்தாள்.

"ஹல்லோ எலிசா..." என்று தீபன் சொன்னதுமே, மீனாட்சியின் முகம் மாறிவிட்டது!

தாய்நாட்டில் பெற்றவளோடு இருப்பதற்கு, மகனே விரும்பினால் கூட இவள் விடமாட்டாள் போல இருக்கிறதே என்று கலக்கமும் கடுப்பும்!

இவள் போன் செய்தால், தீபன் கிளம்பி விடுவான்! அப்புறமாக, அவன் திரும்பி வர எத்தனை ஆண்டுகள் ஆகுமோ?

சலிப்புடன் பெற்றவள் திரும்பும்போதே, "எலிசா ஆன்ட்டியாப்பா?" என்று மகள் ஆவலோடு ஓடிவந்தாள்.

"நான் பேசணும்பா! ஆன்ட்டி கிட்டே, நான் தமிழ் படிப்பது சொல்லணும்!" என்று அவள் கேட்கவும், புன்னகையோடு போனை மித்ராவிடம் கொடுத்தான் தந்தை.

"ஆன்ட்டி நான் இங்கே தமிழ் படிக்கிறேன்! என் கிராண்ட்மா, சந்தனா ஆன்ட்டி, அன்னம்மா, ராசையா எல்லோரும் பேசுகிற பாஷை! நான்சி, மிச்சிகிட்டே எல்லாம் சொல்லு! என்ன? சந்தனா ஆன்ட்டிதான் சொல்லித் தருகிறான்னும் சொல்லு! சந்தனா ஆன்ட்டி ரொம்ப ஸ்வீட் தெரியுமா? ஆனால், உன் மாதிரி சாக்லேட்லாம் நிறையத் தரமாட்டாள்! என் உடம்புக்கு நல்லதில்லையாம்! அப்புறம், ஜேடி, இப்போதெல்லாம் ரொம்பத் தூங்கிப் போகுது. என்னோட விளையாடவே வராமல், என்னைத் தமிழ் படிக்க விடுது!" என்று மனதில் நினைத்ததை எல்லாம் அளந்தாள்.

"அப்போ சரி ஆன்ட்டி, எழுப்பி விளையாடுறேன். இதோ, உடனே அப்பாவிடம் கொடுத்து விடுகிறேன். பை ஆன்ட்டி!" என்று போனைத் தந்தையிடம் கொடுத்தாள்.
எதிர்முனையில், எலிசா என்ன சொன்னாளோ, "சேச்சே! அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை! இது, என் அம்மாவின் வீடு! இப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேச வேண்டாம் எலிசா!" என்றான் ஒரு மாதிரியான குரலில்!

மீண்டும் அவள் பேச்சைக் கேட்டுவிட்டு, "அப்படியா! ஆனால், இது நான் சில நாட்களாக எதிர்பார்த்ததுதான்! உன்னிடம் பார்க்கச் சொல்லியிருக்கவே கூடாது! பழைய பழக்கத்தில், எதையும் நம்பாமல்... இல்லையில்லை! வேண்டாம், எலிசா. இதற்கு மேல் அவசியம் இல்லை! சந்தேகம் எல்லாம் ஏற்கெனவே இங்கேயே தீர்ந்துவிட்டது! விட்டுவிடு! நான் வருவதா? இருக்கட்டும்! கொஞ்ச நாள் ஆகட்டும். அப்புறம் பார்ப்போம்! ஊகூம்! இப்போது வருவதற்கு இல்லை. வைத்து விடுகிறேன்!" என்று ரிசீவரைக் கீழே வைத்தான்.

சற்று விலகி நின்றிருந்த தாயின் முகம் ஓரளவு மலர்ந்திருந்தது!

"அடுத்தவர் போன் பேச்சைக் கவனிப்பது அநாகரீகம் என்று எனக்குத் தெரியும்! ஆனால், இந்தப் பேச்சைக் கேளாமல் விட்டுவிட்டுப் போக முடியவில்லை! இந்த முறை வரவில்லை என்று விட்டாய்! இனித் தினமும் யுஎஸ் போனை எதிர்பார்க்கலாமா? எத்தனை தரம் தாக்குப் பிடிப்பாய்?" என்று புன்னகையும் கலக்கமுமாகக் கேட்டாள்.

"இல்லைம்மா! எனக்கே, இங்கே வந்து விடத்தான் இப்போது விருப்பம்! அதற்குத்தான் பெரிதும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றேன்! கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பார்ப்போம்! அப்புறம், எலிசா இப்போது போன் செய்தது, என்னை அங்கே வருமாறு அழைப்பதற்காக இல்லை! சந்தனாவுடைய அண்ணன் பற்றி விசாரிக்கச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவர் விஷயம் எல்லாம் சரிதான், தப்பாக எதுவும் இல்லை என்று... அதைத் தெரிவிப்பதற்காகத்தான்!"

"சந்தனாவுடைய அண்ணன் என்ற பிறகு, அந்தப் பையன் மேல், நீ சந்தேகப்பட்டதே தப்பு! நல்லவர்கள் இருப்பார்கள் என்று நம்பவும் வேண்டும்!" என்றாள் தாய்!

ஆனால், "இங்கே இருந்து கொண்டு, இலகுவாகச் சொல்லலாம்!" என்றான் பிள்ளை!

"அப்போது, அங்கே போகாதே!" என்றாள் அன்னை பதிலுக்கு!

"அம்மா, ப்ளீஸ்! அதிலேயே நில்லாதீர்கள்! நான் தான் முயற்சி செய்வதாக சொன்னேன் இல்லையா?"

"எப்போதும் இப்படித்தான்" என்றாள் தாயார், அவன் பேச்சில் அவ்வளவாக நம்பிக்கையற்று.

"ப்ராமிஸ், அம்மா! இந்த முறை, எல்லாம் வேறு! முன்பெல்லாம், அவ்வளவாக விருப்பமற்று, உங்களைச் சமாதானப்படுத்த மட்டுமே சொன்னேன். ஆனால் இந்தத் தடவை, நூறு சதவீதமாக என் மனதிலேயே நிச்சயமாக இருக்கிறேன்! எனக்கே சிலதிற்கு மிக அதிக விலை கொடுத்து விட்டதாக எண்ணம்! ஆனால் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செயல்பட என்னால் முடியாது! அது, உங்களுக்கும் தெரியும்! அதனால் இப்போதைக்கு, இது பற்றி யாரிடமும், குறிப்பாகக் கூடச் சொல்லி வைக்காதீர்கள்!" என்றான் தீபன்.

"இத்தனை ஆண்டுகளாக, உன்னைப் பற்றி, எதை யாரிடம் சொன்னேன்? சின்னப் பிள்ளைப் படம் தவிர, ஒரு போட்டோவேனும் வெளியே இருக்கிறதா, பார்! பின்னிப் பின்னிக் கேட்கிறார்கள் என்று சொந்த பந்தங்களைக் கூட விட்டுவிட்டேன்! என்னிடம் வந்து, இன்னமும் சொல்கிறாயே!" என்று குறைபட்டாள் அவள்.

"சாரிம்மா! உங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைதான்! ஆனால், இன்னும் கொஞ்ச காலம், இப்படியே இருந்து விடுங்கள், என்றேன். அவ்வளவுதான்!" என்றான் அவன்!

அப்படியே, வீடு சந்தோஷமாக நடந்து கொண்டும் இருந்தது!

இந்தச் சமயத்தில், வானில் மிதந்து கொண்டிருந்த சந்தனா, தரைக்கு இறங்கி வருகிற மாதிரி ஒன்று நடந்தது!
அன்று ஓர் அரசாங்க விடுமுறை தினம்.

நன்றாக தலைக்கு ஷாம்பூ போட்டுக் குளித்துவிட்டு வந்த சந்தனா, வெளியே போர்டிகோவில் நின்று, ராசையாவுடன் தீபன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தபடி ஹால் சோஃபாவில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த மித்ராவின் அருகில் அமர்ந்தாள்.

ஆனால், சிறுமி "அச்சச்சோ!" என்று கத்தவும் பதறி, "என்னம்மா?" என்று விசாரித்தாள்!

"என் ஜேடி!" என்று சோஃபாவை காட்டினாள் மித்ரா.

சோஃபாவின் இடுக்கில் சாத்தி வைக்கப்பட்டிருந்த பொம்மையின் கால் பகுதி, சந்தனாவின் கீழே இருந்தது!

குழந்தையின் உணர்ச்சியை புரிந்து கொண்டு, "அடடா! உன் ஜேடிப் பாப்பாவின் கால் மீதா உட்கார்ந்து விட்டேன்! பாப்பாவுக்கு வலித்திருக்குமே!" என்று பொம்மையின் கால்களை வருடிவிட்டாள் சந்தனா!

ஆனால், அதற்கும் ஒரு படி மேலே போய், "ஊகூம்! பாப்பா கால் உடைந்தே போய்விட்டதே! கட்டுப் போடணும்! எனக்குப் போட்ட மாதிரி!" என்றாள் மித்ரா!

எப்போதேனும் ஒரு தரம், தனக்கு நேர்ந்த விபத்துப் பற்றி, மித்ரா, இப்படிக் குறிப்பிடுவது உண்டு! முதலில் சாதாரணமாகவே குறிப்பிட்டாலும், தொடர்ந்து உடம்பு சரியாகாதது போலக் காலைத் தாங்கி நடப்பாள், அவள்.

அது அடியோடு மறக்கும் வரை, நடை அப்படியே இருக்கும்.

இந்த முறை அந்த நடையை தவிர்க்க எண்ணி, "பாப்பாவைப் பார்த்துக் கொள்!" என்று, மித்ராவின் மடியில் பொம்மையை வைத்துவிட்டு ஓடிப் போய், ஒரு துண்டு துணியை எடுத்து வந்தாள், சந்தனா.

பொம்மையின் காலில் அதைக் கட்டி, "இனிமேல் சரியாகிப் போகும்! எங்கள் மித்திச் செல்லத்துக்கு கட்டுக் கட்டியதும் குணமாகிப் போய், இப்பல்லாம் அவள் ஆன்ட்டியோடு ஓடி விளையாடுகிற மாதிரி, ஜேடிப் பாப்பாவுக்கும், சீக்கிரமாக சரியாகிவிடும்! இதோ, இதே மாதிரி, சுத்தமாகக் குணமாகிவிடும்!" என்று மித்ராவின் காலைத் தொட்டுக் காட்டினாள்.

"ஆமாம், நல்லாயிட்டது!" என்று காலை நீட்டிப் பார்த்துவிட்டு, "ஆமாம் ஜேடி. ஆன்ட்டி சொல்லுகிற மாதிரி, உனக்கும் நிஜம்மாக நல்லாயிடும்!" என்று பொம்மையை மறுபடியும் சோஃபாவில் கிடத்தப் போனவள், "ஊகூம்!" என்று அதைத் தூக்கிக் கொண்டாள். "திரும்பவும், யாராவது ஜேடி மேலே உட்கார்ந்திட்டால்? பாவம்! இன்னொரு காலும் உடைந்து, இன்னொரு காலும் வலிக்கும்!" என்று அவள் யோசித்து சொன்ன தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!

காட்டிக் கொள்ளாமல், "அது சரிதான்!" என்று அவள் தலையாட்டவும், பொம்மையை மடியில் போட்டுக் கொண்டு, "என்னோட ஜேடிக்குத்தான் இப்படி வலிக்கும்! அப்பாவோட பொம்மைக்கு வலிக்கவே வலிக்காது!" என்றாள் சிறுமி!

அதிசயப்பட்டு, "அப்பாவின் பொம்மையா?" என்று கேட்டுவிட்டாள் சந்தனா!

தீபனைப் பற்றி கேட்பது, பேசுவது எல்லாமே, அந்த வீட்டில் பெருங்குற்றமாகக் கருதப்படுவது, சந்தனாவுக்கும் தெரியும்!

ஆனால், ஒரு முழு மனிதனோடு, பொம்மையை சம்பந்தப்படுத்தி, அவனுடைய மகளே பேசவும், திடுக்கிட்டுக் கேட்டுவிட்டாள்!

அவ்வளவே!

அதற்குள் தீபன் அங்கே வந்துவிட்டான்!

மகளை எழுப்பி, "மித்தி, சும்மா பாப்பாவைத் தொந்தரவு பண்ணக் கூடாதுடா! அசந்து மறந்து, எங்கேயாவது வைத்துவிட்டால், இப்படி அடிபட்டுக் கொண்டே இருக்கும்! போய் அவளது தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு வா!" என்றவன், மேலே பேசவிடாமல், மித்ராவின் கையைப் பிடித்து அங்கிருந்து கூட்டிப் போனான்!

முகத்தில் அறை வாங்கியது போல, அப்படியே உட்கார்ந்து விட்டாள்.



இனி எல்லாமே நீயல்லவோ - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக