புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
96 Posts - 49%
heezulia
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
7 Posts - 4%
prajai
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
223 Posts - 52%
heezulia
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
16 Posts - 4%
prajai
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
2 Posts - 0%
Barushree
இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_m10இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி எல்லாமே நீயல்லவோ


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:15 pm

First topic message reminder :

நள்ளிரவு நெருங்கிக் கொண்டிருந்த வேளை! அந்தச் சாலையோரத்துச் சின்ன விடுதியின் முன்னே சத்தமின்றி, ஒரு நீளக் கார் வந்து நின்றது!

காரை நிறுத்தி விட்டு, உள்ளே சென்றால், "உங்கள் அறை தயாராக இருக்கிறது. கடைசி மாடியில் ஒரே பெரிய அறை!" என்றார்கள்.

பரவாயில்லை! அவன் கேட்டபடிதான் தந்திருக்கிறார்கள்!

'ஆட்டிக்' மீதுள்ள ஒற்றை அறை என்றால், அடுத்த அறை மனிதர்கள் என்று, யாரையும் சந்திக்கத் தேவையிராது! சென்றது போல், ஓசையின்றி, அடுத்தவர் அறியாமல் திரும்பியும் சென்று விடலாம்! எந்தப் பிரச்சினைக்கும் வாய்ப்பே இராது! இல்லாவிட்டால், எங்கிருந்தாவது, கழுகுகள் மாதிரிப் பாய்ந்து விடுவார்கள்! குத்திக் குதறி, மனிதனை அடையாளமே இல்லாதபடி, அவர்கள் விருப்பத்துக்கு மாற்றிக் காட்டி விடுவார்கள்!

என்னமோ, அவன் தினமும் இப்படித்தான், ஏதோ வெறியன் என்பது போல!

பிணம் தின்னிக் கழுகுகள்!

புகழும் பணமும் வந்துவிட்டால், மனிதனுக்குச் சொந்த வாழ்க்கையே இருக்கக் கூடாதா?

மற்ற கோடிக்கணக்கான மனிதர்களைப் போன்ற தேவைகள், அவனுக்கும் இருக்கும் தானே? அதுவும், எதற்கும் சுதந்திரம் மிகுந்த இந்த நாட்டில்!

ஆனாலும், இவ்வளவு ரகசியம் காக்க வேண்டியிருக்கிறது! அப்படி இருந்துமே, சில சமயங்களில் கண்ட பேச்சுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது... ஆனால், அதெல்லாம், தானாக மேலே வந்து விழுகிறவர்களால் நேர்ந்தது! அதனால், ரொம்பப் பேர் கெட்டு விடாமல் மீளவும் முடிந்திருக்கிறது!

லிஃப்டில் செல்லும் போதே, அவன் எலிசாவை மெச்சிக் கொண்டான்.

இடையிடையே, அவனது தேவை புரிந்து, இப்படிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்வதிலும், எலிசா கெட்டிக்காரிதான்!

மற்றபடி, படிக்க வந்தவனின் இன்னொரு திறமை புரிந்து, அதைச் செயல்படுத்தும் உரிமை பெற்றுத் தந்து, இன்று குன்றின் மீதிட்ட விளக்காய்க் கோடீசுவரனாக வாழ வழி செய்து கொடுத்தவளும் அவளே தானே!

அறை திறந்தே இருந்தது!

உள்ளே அவளும் இருந்தாள்!

அவனைக் கண்டதும், அறையின் உள்ளே இருந்தவள் அருகில் வந்துவிட, அவனுக்கு எலிசாவின் நினைவு மறைந்தது!

காலையில், இருள் மறையாத அளவுக்குச் சற்று அதிகாலையிலேயே, அந்தப் பெண்ணுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு, அவன் கிளம்பும்போது, அவள் கெஞ்சுதலாகக் கேட்டாள், "எனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கக் கூடாதா?" என்று.

எல்லோரும் இப்படித்தான் என்று மனதில் எண்ணியதைக் காட்டாமல், "அதற்கு உரிமை, எனக்குக் கிடையாதேம்மா! அதைக் காஸ்டிங் டைரக்டரிடம் கேட்டுப் பார்!" என்று விட்டுக் கிளம்பினான் அவன்!

அவளது செல், கைப்பைக்குள் இருந்து சிணுங்கியது!

அடுத்த வாடிக்கையாக இருக்கும் என்று அலட்சியமாக நினைத்தபடி, 'லிஃப்ட்' விசையை அழுத்தினான் அவன்.

'லிஃப்ட்' வந்து, கதவு திறக்கையில், "ஏய் இண்டியன் மேன், நில்லு, நில்லு!" என்று உள்ளிருந்து அவள் ஓடி வந்தாள்.

கடுப்புடன், "விடமாட்டார்களே!" என்று எண்ணியவாறு, அவசரமாக லிஃப்டின் உள்ளே செல்ல அவன் முயன்ற போது, செல்லை நீட்டி, "எலிசா! உன்னிடம் பேச வேண்டுமாம்! உன் பெயர் சொல்லாமல், பேசச் சொன்னாள்!" என்றாள் அவள்!

கை நீட்டி, செல்லை வாங்கும்போதே, உள்ளூரக் கலக்கியது அவனுக்கு!

இந்த மாதிரிச் செல்லும் போது, எந்த இடையூறும் அவனுக்குப் பிடிப்பதில்லை! அதனால், அவனது செல் எதையும் எடுத்துப் போக மாட்டான்! கார் கூட, அவன் பெயரில் வாங்கியது அல்ல!

சிறு தகவல் தெரிந்தாலும், மொய்த்து விடுவார்கள் என்று அவன் மிகவும் கவனமாக இருப்பான்! அது எலிசாவுக்கும் தெரியும் என்பதால், அவளும் எந்த வகையிலும் தொடர்பின்றி, தெரிந்த மாதிரியே காட்டிக் கொள்ளாமல், ஒதுங்கியே இருப்பாள். ஏற்பாட்டோடு சரி!

ஆனால், இன்று என்ன ஆயிற்று?

பெயர் சொல்லக் கூடாது என்றால், ஏதோ மீடியா பிரச்சினை தான்!

செல்லைக் காதில் வைத்து, "என்ன?" என்றான் அவன்.

"பதட்டப்படாமல், அமைதியாகக் கேள்! லாஸ் ஏஞ்சல்சில் இருந்து எவ்வளவு தூரத்தில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்று எலிசா தொடங்கவும், பொறுமையிழந்து குறுக்கிட்டு, "முதலில் விஷயத்தைச் சொல்லு! சீக்கிரம்!" என்றான் அவன்.

படப்பிடிப்பு நிறுவனத்தோடு பிரச்சினையா?

ஒப்பந்தம் தான் கையெழுத்திட்டாயிற்றே!

அல்லது...

"மித்ரா பத்திரமாகத்தான் இருக்கிறாள்?"

அவன் வீடு இருந்த பகுதியில் பாதுகாப்பு அதிகம் தான்! என்றாலும்...

"அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்" என்றாள் எலிசா.

வயிறு காலியான உணர்வுடன், "என்ன ஆயிற்று? சீக்கிரமாகச் சொல்லு! ப்ளீஸ்!"

"இனிப் பிழைத்து விடுவாள் என்று மருத்துவமனையில் சொல்லுகிறார்கள்! அதற்குள் விஷயம் வெளியே கசிந்து, ஒரே ரிப்போர்ட்டர்கள் கூட்டம்! நீ எங்கே, எங்கே என்று கேள்வி! தேடல்! நீ, மித்ராவை என்னிடமாவது விட்டுப் போயிருக்கலாமே!..."

"முதலில் என் மகளுக்கு என்ன ஆயிற்று? என்ன நிலையில் இருக்கிறாள் என்பதைச் சீக்கிரமாகச் சொல்லு! மற்றதைச் சொல்லி வளவளக்க வேண்டாம்!" என்றான் அவன் கவலையும், அதில் பிறந்த ஆத்திரமுமாக!

"அடுத்த தெருவில் யாருக்கோ பிறந்த நாள் என்று போயிருக்கிறாள்! ஆட்டம் போட்டதில், எப்படியோ தெருவுக்குப் போயிருக்கிறார்கள்! வேகமாக வந்த கார் இடித்து..."

"ஐயோ!"

சினேகிதியின் பிறந்த நாளைக்கு மித்ரா போக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததால், 'பேபி சிட்டர்', வேண்டாம் என்று சொன்னது நினைவு வந்தது அவனுக்கு.

வீட்டுக்கு வரும் பிள்ளைகளைச் சரியாகப் பார்த்துக் கொள்ளத் தெரியாதவர்கள், தன் பிள்ளைகளுக்குப் பிறந்த நாளை ஏன் கொண்டாடுகிறார்கள்?

"அதனால் தான் என் வீட்டில் விட்டிருக்கலாமே என்றேன்! இனிமேலாவது..."

"மித்ரா எங்கே இருக்கிறாள்? எந்த மருத்துவமனை?"



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:20 pm

மீனாட்சி அம்மாளின் வீட்டுக்குக் கிளம்பிய போது, அன்று ஒரு நாளை மட்டும் தான், சந்தனா மனதில் எண்ணியிருந்தாள்.

அன்றைக்கு அந்த அவர்களது ஃப்ளாட்டில் தங்குவது, தன்னால் முடியாது என்பது மட்டும் தான் அவள் மனதில் இருந்தது.

அதற்குச் சரியாக, மீனாட்சி அம்மாளும் அவளது வீட்டுக்கு அழைக்கவும், வேறு எதையும் யோசியாமலே, அவள் கிளம்பி விட்டாள்.

எதிர் வீட்டுப் பெண்மணியும், அதற்குச் சாதகமாகப் பேசினாள் என்பது நிம்மதியைத் தந்தது.

இல்லையென்றால், நல்லது நினைக்கும் ஒருத்தியை எதிர்த்துக் கொண்டு வந்தோமே என்று, அவளுக்கு உறுத்தியிருக்கும்.

ஆனால், அவளது ஒப்புதல், சந்தனாவுக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தரவே, புது இடத்துக்குப் போகிறோம் என்கிற உணர்வே இல்லாமல், காரிலேயே, அவளுக்குத் தூக்கம் வந்து விட்டது.

"அதிர்ச்சியின் பின் விளைவு!" என்று மீனாட்சி சொன்னது, லேசாகக் காதில் விழுந்தது. அப்புறமாக, அண்ணா நகரில் மீனாட்சி அம்மாளின் வீட்டு வாயிலில், அவள் எழுப்பியது தான் சந்தனாவுக்குத் தெரியும்.

அவ்வளவு ஆழ்ந்த தூக்கம்!

மீனாட்சி அம்மாளின் வற்புறுத்தலுக்காக இரண்டு தோசைகளை விழுங்கி விட்டுப் பழக்க தோஷத்தில் பல்லைத் துலக்கி, அவளுக்கென்று கொடுக்கப்பட்ட அறையில் கிடந்த படுக்கையில் விழுந்தவள், மீண்டும் சில மணி நேரம், உலகை மறந்து உறங்கினாள்.

அதன் பிறகு... அந்தக் கனவு!

ஏதோ ஒரு பயணம்!

சந்தனாவும், அவளுடைய தந்தையும் சந்தோஷமாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள்! வண்ண வண்ணப் பூக்களுடன் கூடிய செடிக் கொடிகளும், மரங்களும் நிறைந்த மலையில், அவற்றை ரசித்தபடி, ஆனந்தமாக ஏறிப் போகிறார்கள்!

திடுமென பேய்மழையுடன் சூறைக்காற்று எங்கிருந்தோ வீசக் கண் மண் தெரியாமல் ஓடுகிறார்கள்! ஓடிக் கொண்டே பார்த்தால், அவள் மட்டுமாய்த் தனியே ஓடிக் கொண்டு இருக்கிறாள்! அவருக்கு என்னவோ ஆகிவிட்டது என்று தெரிகிறது!

அந்த இருட்டு, மழையில் பதறிக் கொண்டு, தந்தையைத் தேடுகிறாள்! திடுமென அவரது திகைத்த முகம் மட்டும் தூரத்தில் தெரிகிறது! ரத்தக் காயங்களுடன்!

ஓடி அவரை அடைகிற வேகத்தில் கீழே விழுந்து, உடல் நடுங்க எழுந்து அமர்ந்த சந்தனாவுக்குச் சற்று நேரம், சுற்றுச் சூழல் ஒன்றுமே புரியாத நிலை! கண்களைக் கசக்கி, கைகால்களை உதறி, தலையை உலுக்கி, ஒருவாறு தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்ட பிறகே, கனவு வேகத்தில் படுக்கையில் இருந்து, உருண்டு கீழே விழுந்திருப்பது அவளுக்குப் புரிந்தது!

இங்கே எப்படி வந்திருக்க முடியும் என்பதும்!

இது, அந்த நல்ல பெண்மணி மீனாட்சி அம்மாளின் வீடு!

திருட்டு நடந்த வீட்டில், சந்தனா தனித்திருக்க வேண்டாம் என்று, தன் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறாள்.

அந்தப் பர்சைத் திருப்பிக் கொடுத்த ஒரே காரணத்தால்! நல்லது செய்தால், நல்லதே நடக்கும் என்று, தந்தை சொல்வது சரிதான்!

ஆனால், அந்தக் கனவு!

வாழ்நாள் முழுவதும், அது அவளைத் தொடருமா?

திருப்பித் திருப்பி, அதே கனவு என்று இல்லை!

முந்தியது, கடலில் ஒரு படகுப் பயணம்!

புயலில், ஒரு பனிப் பாறையில் படகு மோதிக் கவிழ்கிறது!
ஆனாலும், அதிலும், இதே போலத் தந்தையைத் தேடி அலைகிறாள்! கடைசியில் ரத்தம் வழியத் தந்தையின் திகைத்த முகம்.

அண்ணன் கூட இருந்தபோது, தந்தையின் பகுதியை மட்டும் விட்டுவிட்டு, அவனிடம் தன் கனவை விவரித்தாள்.

வேடிக்கையில் பிரியம் உள்ள அவன், "பனிப் பாறையா? டைட்டானிக் எத்தனை தடவை பார்த்தாய், அருமைத் தங்கையே? அதில் உள்ள காட்சி கனவாகவே வரத் தொடங்கி விட்டதே!" என்று சிரித்தான்.

கூடச் சேர்ந்து முறுவலித்துவிட்டு, சந்தனா சும்மா இருந்து விட்டாள்.

இது, தந்தையின் மறைவுடன் தொடர்பு உள்ள ஒன்று என்பது, அவளுக்கு நிச்சயம்! அதைச் சொல்லி, அவனையும் புண்படுத்துவானேன்?

ஆனால், இன்றையக் கனவில், சந்தனா சற்று அதிகமாகவே மிரண்டு போனாள். வாழ்க்கை முழுவதும், இந்தப் பயங்கரமான கனவுகள், அவளை வருத்தப் போகின்றனவா?

மெல்ல எழுந்து, படுக்கையில் அமரப் போனவள் தயங்கினாள்.

இத்தோடு, அப்படியே படுத்துத் தூங்கி, மறுபடியும் அந்தக் கனவு வந்து விட்டால்?

கனவில் தந்தையைப் பார்க்கையில், மகிழ்ச்சியாகத்தான் இருந்தது! அதுவும், அப்பா இறந்து விட்டதாக நினைத்தோமே இதோ இருக்கிறாரே என்று இரட்டிப்பு சந்தோஷம்!

ஆனால், அவரைக் காணாமல், அதுவும் பயங்கரமான சூழ்நிலையில் இங்கும் அங்குமாய், அவரைப் பதற்றத்துடன் தேடும் போது... இன்னொரு தரம் அதைத் தாங்க முடியாது!

இன்னமும், குளிர் காய்ச்சல் வந்தது போல, உள்ளே நடுங்கிக் கொண்டு தான் இருந்தது.

கொஞ்சம் நடந்து உடலில் சூடேறினால், இந்தப் படபடப்பும், பதற்றமும் குறையக் கூடும்! ஆனால், அடுத்தவர் வீட்டில், அதுவும் முதல் முதலாக வந்திருக்கையில், இரவில் தனியே அங்குமிங்கும் அலைவதும் தப்பு! யாரும் பார்த்தால் தப்பாக எண்ணத் தோன்றும்!

அதுவும், முதல் முதலாக அன்றுதான் சந்தித்த ஒருத்தியை, அந்த அம்மா நம்பி வீட்டுக்குக் கூட்டி வந்திருப்பதே அதிசயம் என்கையில்...

யோசித்துவிட்டு, விளக்கைப் போட்டவள், படுக்கையில் தலைப்புறமாக ஒரு சிறு முக்காலியின் மீது வைக்கப்பட்டிருந்த பாட்டிலை எடுத்துக் கொஞ்சம் தண்ணீரைக் குடித்துவிட்டுத் தோட்டத்துப் புறமாக இருந்த ஜன்னல் வழியே வெளியே பார்த்தபடி நின்றாள்.

தோட்டத்திலிருந்து வந்த மிதமான குளிர் காற்று, முகத்தில் மோதிச் செல்கையில், உடலும் மனமும், மெல்ல இறுக்கம் தளர்வதை உணர்ந்தாள்.

இந்தப் பெரிய தோட்டத்தில் காலார நடந்தால், இன்னமும் நன்றாகத்தான் இருக்கும் என்று எண்ணியபடியே பார்த்தவளுக்கு, உள்ளூர ஒரு திகைப்பு உண்டாயிற்று!

அவள் இருந்த அறைக்கு, ஓர் அறை தள்ளி, இன்னோர் அறையில் இருந்தும், ஜன்னல் வழியே, விளக்கொளி, தோட்டத்தில் விழுந்து கொண்டிருந்தது!

ஒரு பெண் தலையின் நிழலும் கூட!

அது மீனாட்சி அம்மாளாக இருக்கும் என்று சந்தனாவால், ஊகிக்க முடிந்தது! ஆனால் இரவில் தூக்கமின்றித் தவிக்கும் அளவுக்கு அந்த அம்மாவுக்கு என்ன துன்பம்? மருத்துவமனைக்குக் கூடப் போயிருந்தாரே?

எந்தத் துன்பமும் இருக்கக் கூடாது கடவுளே என்று வேண்டிக் கொண்டு, கூடவே, வேறு கனவு எதுவும் வரக் கூடாது என்று தனக்காகவும் கடவுளிடம் ஒரு வேண்டுதலை வைத்துவிட்டு, சந்தனா, விளக்கை அணைத்து விட்டுப் பிடிவாதமாகப் படுக்கப் போனாள்.



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:20 pm

இன்னும் ஓரிரு மணி நேரமாவது, கட்டாயமாகத் தூங்கியாக வேண்டும்!
ஒழுங்கான உறக்கம் இல்லாவிட்டால், பள்ளியில் சரியானபடி பாடம் எடுக்க முடியாது! அத்தோடு, அங்கே வீட்டை ஒழுங்குபடுத்தும் வேலை வேறு இருக்கிறது!

சற்று அதிகாலையிலேயே எழுந்து, ஒட்டியிருந்த குளியலறையில் குளித்து, மீனாட்சி அம்மாளின் உந்துதலின் பேரில், முந்திய நாள் இரவு எடுத்து வந்திருந்த சல்வாரில் அவள் வெளியே வந்த போது, பணியாள் போலத் தோன்றிய ஒரு பெண் அவளை அழைத்துப் போக வந்திருந்தாள்.

"அம்மா கூட்டி வரச் சொன்னாங்க."

சாப்பாட்டு அறையில், வீட்டு எஜமானி காத்திருந்தாள்.

இரவு சரியாக தூங்காததின் அடையாளமாக அவளது கண்களைச் சுற்றிலும் கருவளையத்தைக் கண்ட சந்தனாவுக்கு, அதன் காரணம் தானோ என்று ஒரு சந்தேகம் திடுமெனத் தோன்றி வாட்டிடலாயிற்று!

என்னவோ இரக்க குணத்தினால், அவளை அழைத்து வந்து விட்ட போதும், அவளைப் பற்றி மீனாட்சி அம்மாளுக்கு என்ன தெரியும்? இந்தப் பெண் எப்படிப் பட்டவளோ, என்னவோ என்று, அதன் காரணமாக விழித்திருந்தாள் என்றால்?

ஆனால், சந்தனாவைக் கண்டதும் மீனாட்சி முகம் மலர்ந்த விதம், அந்தக் குன்றலைப் போக்கி, அவளுக்கு நிம்மதி அளித்தது.

"வாம்மா! வா, உட்கார். காலையில் உனக்கு என்ன சாப்பிட்டுப் பழக்கம்? காபியா? டீயா? பலகாரத்தோடா? அப்புறமா அல்லது..." என்று கேட்டுக் கொண்டே போனவளைப் புன்னகையோடு, இடைமறித்து, "எப்படி என்றாலும் ஒன்றுதான் ஆன்ட்டி! எப்படியும் பள்ளிக்குக் கிளம்புமுன், ஒரு காபி பழக்கம்! அவ்வளவுதான்! இப்போது வெறும் காபி மட்டும் தந்தீர்களானால், சீக்கிரமாக வீட்டுக்குப் போய், பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டு, பள்ளிக்குப் போக நேரம் சரியாக இருக்கும்..." என்றவள், மீனாட்சி அம்மாளின் கண்கள் பளிச்சிடவும், சிறு திகைப்புடன் அவளை நோக்கினாள்.

"நீ அவசரப்படுவது சரிதான் என்று நினைத்தேன்! பள்ளிக்குத் தாமதமாகப் போனால் பெஞ்சில் ஏற்றிவிட மாட்டார்களா, என்ன?" என்று பெரியவள் முறுவலிக்கவும், சந்தனாவுக்குச் சிரிப்பு பீறிட்டது!

அவள் ஆசிரியை! அவளைப் போய்ப் பெஞ்சில்...

சிரித்துவிட்டு, "அப்பா அங்கே தலைமை ஆசிரியராக இருந்தவர் ஆன்ட்டி! கற்றுக் கொடுப்பவர்களே தாமதமாகப் போனால், பிள்ளைக்கு நேரம் தவறாமை எப்படி வரும் என்று இதில் ரொம்பக் கண்டிப்பு" என்ற பெண்ணின் முகம், தந்தையின் நினைவில், லேசாக வாடியது!

கவனியாதது போல, "முதலில் சாப்பிடு நேற்றுக்கூட இரவில் சரியாகச் சாப்பிடவில்லை! இப்போதும் பட்டினியாகப் போனால், பிள்ளைகளுக்குச் சரியாகக் கத்த எப்படி முடியும்? கார், அந்தப் பக்கம் போக வேண்டியிருக்கிறது! அப்படியே, உன்னைக் கொண்டு விடச் சொல்லுகிறேன். இப்போது நாம் சாப்பிடுவோம்!" என்ற மீனாட்சி, உட்புறமாகப் பார்த்து ஏதோ சைகை செய்யவும், உள்ளிருந்து வந்த பணிப்பெண், தட்டு வைத்துப் பரிமாறலானாள்.

இதற்கு மேல் மறுப்பது நன்றாயிராது. கூடவே, காரைக் கூடத் தனக்காக மட்டுமே தான் அனுப்புகிறாள் இந்த அன்பான பெண்மணி என்றும் தோன்றிய போதும், இன்னொரு காரணம் சொல்லும் போது, அதையும் தான் எப்படி மறுப்பது?

இரவு தூங்காதது பற்றிக் கேட்கலாமா என்று சந்தனா யோசிக்கும் போதே, "இரவில் நீ சரியாகத் தூங்கவில்லையேம்மா! புது இடம் என்பதாலா? அல்லது... அப்பா... அங்கே வீடு பற்றியா?" என்று மீனாட்சி வினவினாள்.

"எ... எல்லாம் சேர்ந்து என்று நினைக்கிறேன்..." என்ற பதிலுடன், ஒரு கணம் மௌனமாக இருந்தவள், உடனேயே, "நீங்களும் தூங்கவில்லையே, ஆன்ட்டி?... உடம்புக்கு ஒன்றுமில்லையே? டாக்டரிடம் வேறு போய் வந்திருக்கிறீர்கள்?" என்று மனதில் சிறு உறுத்தலோடு வினவினாள்.

உச்சுக் கொட்டிவிட்டு, "கொஞ்ச நாளாக சிறு படபடப்பு! அது, பெரிதாக ஒன்றும் இல்லை!" என்றாள் விட்டேற்றியாக.

ஆரோக்கியம் பற்றி மீனாட்சி காட்டிய அலட்சியத்தோடு, வீட்டு மனிதர்களாக அதுவரை யாரும் கண்ணில் படாததும் மேலும் மனதை உறுத்த, "வீட்டில் வேறு யார்... நீங்கள் த... தனியாகவா இருக்கிறீர்கள், ஆன்ட்டி?" என்று கவலையுடன் வினவினாள் சின்னவள்.

"தலைவிதி!" என்றாள் மீனாட்சி கசந்த குரலில், சுருக்கமாக.

"ஆன்ட்டி..."

சந்தனாவை நிமிர்ந்து பார்த்த மீனாட்சியின் முகத்தில் சிந்தனை தெரிந்தது!

"வாம்மா... ஹாலில் உட்கார்ந்து காபியைக் குடிப்போம்! அப்படியே, நானும் உன்னோடு கூட வருகிறேன்.. உனக்குத் துணையாக இல்லை! மருத்துவமனையில் சில கணக்குகள் பார்க்க வேண்டும்! அத்தோடு... ஒரு யோசனை! வாயேன் யோசிப்போம்!"

காரில் செல்லும் போதுதான், மீனாட்சி தன் யோசனையைச் சொன்னாள்.

சந்தனா தன்னந் தனியே அந்த வீட்டில் மூன்று தினங்களைக் கழிப்பதை விட, மீனாட்சியின் வீட்டிலேயே இருந்து விட்டால் என்ன?

ஒன்றாம் தேதி குடிவரும் ஆட்களுக்காக வீட்டை ஒதுக்கிக் கொடுப்பது ஒன்றுதானே, அந்த வீட்டில் செய்ய வேண்டிய வேலை? சந்தனாவின் துணிமணிகளை எடுக்கச் செல்லும் போது, இரண்டு ஆட்களைக் கூட்டிப் போய், அதைச் செய்து விடலாம்!

சந்தனா அந்த வீட்டில் தனியே இருக்க வேண்டாம் என்பதற்காகச் சொல்லுகிறாள்! ஆனால், ஒரு பிரியமாக இருக்கிறாள் என்பதற்காக அவள் தலையிலேயே சுமையாய் ஏறி உட்காரலாமா? அது தப்பு அல்லவா?

"ஆன்ட்டி, வேண்டாம். என்னைத் தூண்டாதீர்கள்! என் பொறுப்பை நான் தான் செய்ய வேண்டும்! உங்களிடம் தள்ள முடியாது! அத்தோடு, இந்த ஒரு நாள் நீங்கள் செய்ததே பெரிய உதவி! இதற்கு மேல், நான் உங்களைத் தொல்லை செய்வது தப்பு!" என்றாள் சந்தனா.

"தொல்லையே அல்லம்மா!" என்றாள் பெரியவள், "வீட்டில், எந்த வேலையையும் நான் செய்வது இல்லை! அதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், அந்த வீட்டில் நான் தனியாக அல்லவா இருக்கிறேன்! நீயே கவலையாகக் கேட்டாயே, அப்படிக் கேட்க நாதியற்ற தனிமை! சந்தனா எனக்கு என்னவோ, உன்னைப் பார்த்ததுமே, முற்பிறவிப் பந்தம் போல மிகவும் பிடித்துப் போயிற்று! நீ, இங்கே சில நாட்கள் இருப்பாய் என்றால், சில நாட்கள் என்ன? எப்போதுமே இருந்தாலும், எனக்கு மிகுந்த மகிழ்ச்சியே. எனவே உனக்காக என்று எண்ணாமல், எனக்காக, என் மகிழ்ச்சிக்காக, இங்கே வாயேன்!" என்றாள் வற்புறுத்தலாக!

"ஆன்ட்டி, நீங்கள் சொல்வதைக் கேட்டால், என்னவோ, உங்களுக்காக நான் தான் தியாகம் பண்ணுகிற மாதிரி, எனக்கே தோன்றிவிடும் போல இருக்கிறது! ஆனால், அது பொய் என்று எனக்குத் தெரியும். உங்களுக்கும் தெரியும்! அத்தோடு அண்ணா நகரில் இருந்து, எங்கள் பள்ளிக்கு வருவதும் ரொம்பக் கஷ்டம், ஆன்ட்டி! நேர் பஸ்சில் கூட, ஒரு மணி நேரத்துக்கு அதிகம் ஆகும்."

"பஸ்சில் போனால்தானே? தினமும், 'சுக'த்திலிருந்து எனக்குக் கணக்கு வழக்குகளும், அன்றாட நிலவரங்களும் வரும். அவைகளில் கையெழுத்திட்டுக் காலையில் அனுப்புவேன்! அதே காரில், நீ பள்ளிக்குப் போய் வாயேன்! முதலில், இன்றோடு சேர்ந்து இந்த மூன்று நாட்கள் நம் வீட்டிலேயே இரு! அதன் பிறகு மற்றதைப் பார்ப்போம்!"

மீனாட்சி அம்மாள் தனிமையின் கொடுமையில் மிகவும் நொந்து போயிருக்கிறாள் என்பது, சந்தனாவுக்குப் புரிந்தது!

பார்க்கப் போனால், சந்தனாவுக்கும், இப்போது கிட்டத்தட்ட அதே நிலைதான்! அக்கறை காட்ட யாருமற்ற தனிமை!

ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்! மீனாட்சி அம்மா, ஓர் இக்கட்டில் உதவியவளும் கூட! ஒரு மூன்று நாட்கள், அவளோடு கூட இருப்பதில் என்ன தப்பு?

இப்படித்தான் சந்தனா, மீனாட்சி அம்மாவின் வீட்டுக்கு வந்தது! மூன்று நாட்களுக்காக மட்டுமே என்று!

ஆனால், அந்த மூன்று நாட்களில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கம், பெண்கள் விடுதியைப் பற்றிய நினைவையே, சந்தனாவின் மனதில் இருந்து அகற்றி விட்டது!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:21 pm

மும்பையில் இருந்து, பூபாலன் பள்ளி எண்ணுக்கு போன் செய்த போது, மீனாட்சி அம்மாவைப் பற்றிய எதையுமே, சந்தனா அவனிடம் சொல்லவில்லை!

திருட்டு, எதிர் வீட்டாரின் உதவ முடியாத நிலை பற்றியெல்லாம் சொன்னால், மற்றதை மறந்து, உடனேயே சென்னைக்கு வந்து நிற்பான்! அவனது எதிர்காலம், பாழாகிப் போகும்!

எனவே, எந்தவிதச் சந்தேகமும் தோன்றாதபடிக்கு, முன்பு திட்டமிட்டபடியே எல்லாம் நடப்பதுபோலத் தோன்றுமாறு, பேசிவிட்டு போனை வைத்தாள்.

அன்று பள்ளி முடிகிற நேரத்துக்கு, மீனாட்சியும் வந்து விட, இருவருமாகச் சந்தனாவின் வீட்டுக்குச் சென்றனர்.

வீட்டைப் பார்த்த பிறகு, தன் வீட்டுக்கு வருமாறு மீனாட்சி அவளை வற்புறுத்தத் தேவையே இருக்கவில்லை!

இங்கே, தனியே இருக்க முடியாது என்பது, சந்தனாவுக்கு, சர்வ நிச்சயமாகத் தெரிந்து போயிற்று!

அதே போல, மீனாட்சி அம்மாவைப் பிரிந்து, ஏதோ ஒரு புதிய இடத்தில் வசிப்பது முடியாது என்றும், அடுத்த மூன்று நாட்களில், அவளுக்குத் தெரிந்து போயிற்று!

அந்த அளவுக்கு, மீனாட்சி பிரியமாக இருந்தாள்!

பிரியம் என்றால், அன்பைக் கொட்டி அமுக்குவது போல அல்ல! சும்மா கேலியும், சிரிப்புமாகவே!

விருந்தோம்பல் என்கிற பெயரில், அளவு மீறித் திணிப்பது இல்லை!

அவள் நினைத்ததற்கு ஓர் இட்லியோ, ஒரு ஸ்லைஸ் ரொட்டியோ, சந்தனா குறைவாக உண்டாள் என்றால், "எனக்கும் ஒரு டிக்கெட் இலவசமாகத் தருவாய் அல்லவா?" என்று கேட்பாள்!

முதலில் புரியாமல், "எதற்கு டிக்கெட்?" என்று சந்தனா கேட்டதுண்டு!

பதிலாக, "அதுதானம்மா, நீ கலந்து கொள்கிற அழகிப் போட்டிக்கு!" என்பாள் சாதாரணமாக.

"நானா? அழகிப் போட்டியா?" என்று சந்தனா குழம்புகையில், "ஆமாம்மா! அதற்குத்தானே, ஒல்லியாக ஒடிந்து விழுகிற மாதிரி இருக்க வேண்டும்? அப்படி மெலிவதற்காகத்தானே, நீ இப்படிச் சாப்பாட்டைக் குறைக்கிறாய்?" என்று அப்பாவி பாவனையில் மீனாட்சி கண்ணை உருட்ட, சந்தனாவுக்குச் சிரிப்பு பீறிடும்!

முதல் தடவை இப்படிக் குழம்பிய போதும், அடுத்த முறை "தரலாம்! ஆனால் அப்புறம் உங்களுக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் ஆசை வந்துவிட்டால், எனக்குப் பரிசு எப்படிக் கிடைக்கும்? அதனால், தரவே மாட்டேன்!" என்று சந்தனா பதில் கொடுக்க, மீனாட்சி விழுந்து விழுந்து சிரிப்பாள்!

நேரமாகிவிட்டது என்று வேகமாகச் சென்றால், "பார்த்துப் போம்மா! எங்கள் அண்ணா நகரில், நிறையப் புதையல்கள் உண்டு. அங்கங்கே விழுந்து, அதையெல்லாம் நீ தட்டிக் கொண்டு போய்விட்டால் எப்படி?" என்பாள்.

"பரவாயில்லை! உங்களுக்கு மட்டும், புதையலில் கொஞ்சூண்டு பங்கு தருகிறேன்!" என்று சந்தனாவும் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போவாள்!

இந்தக் கேலி, சிரிப்புகளூடே, மீனாட்சியை உள்ளூர ஒரு சோகம் அரிப்பதைச் சந்தனா கண்டு பிடித்திருந்தாள்.

யாரும் கவனியாத போது, எங்கேயோ நிலைக்கும் பார்வை, ஒரு சின்ன வார்த்தையில் கண்ணில் தோன்றும் நிராசை...

காரணம் என்னவாக இருக்கும் என்று தெரிந்தால், இந்த வருத்தத்தை குறைக்க முயற்சி செய்யலாமே என்று தோன்றினாலும், அது பற்றிக் கேட்க, சந்தனாவுக்குத் தயக்கமாக இருந்தது! அதிகப்படி உரிமை எடுத்துக் கொண்டு மூக்கை நுழைப்பது போலத் தோன்றி விடக்கூடாதே என்ற பயம்!

அந்தரங்கங்களை, அவரவராகத்தான் சொல்ல வேண்டும்! தூண்டித் துருவி அதிகப்படுத்தி விடக் கூடாது என்கிற இன்னோர் அச்சமும் அவளுக்கு இருந்தது!

எனவே, எதையும் பாராதது போலக் காட்டிக் கொண்டு, பெரியவளைச் சிரிக்க வைப்பதில் முனைவாள் சின்னவள்!
மீனாட்சியும் முட்டாள் அல்ல! சந்தனாவின் முயற்சியைப் புரிந்து கொண்டு, தானும் முயன்று எதையாவது சொல்லி நகைக்க முயற்சிப்பாள். சற்று நேரத்தில் அது மெய்யான சிரிப்பாகவே மாறிவிடும்!

உடல்நிலையைப் பற்றி அதிக அக்கறையற்று மீனாட்சி அம்மாள் இருப்பதைக் கவனித்து, அவளது மாத்திரை, மருந்துகளைப் பற்றிக் காலை, இரவு வேளைகளில் நினைவூட்டுவதையும், சந்தனா வழக்கமாக்கிக் கொண்டாள்.

அந்த மூன்று தினங்களிலேயே, இப்படி ஒருவருக்கொருவர் காட்டிய அக்கறையும், கரிசனமும், இருவரையும் பிணைத்து விட, தன் வீட்டிலேயே தங்கி விடும்படி மீனாட்சி மீண்டும் கேட்ட போது, சில நிபந்தனைகளோடு, சந்தனாவும் விருப்பமாகவே சம்மதித்தாள்.

முதலாவதாகத் தன் முடிவின் காரணங்களை, அண்ணன் பூபாலனிடம் தெரிவித்தாள்.

தங்கையின் மன அமைதி, மகிழ்ச்சி, பதுகாப்பு முதலியவற்றை முக்கியமாகக் கருதிய பூபாலனும், தன் நண்பர்கள் மூலம் மீனாட்சி அம்மா பற்றி விசாரித்து விட்டு, அவளது முடிவை நல்லவிதமாகவே ஏற்றான்.

அடுத்து, தன் செலவுக்கான பணத்தை மீனாட்சி வாங்கிக் கொண்டே ஆகவேண்டும் என்பதில் சந்தனா பிடிவாதமாக இருந்தாள்.

"என்னம்மா, வீட்டில் பொதுவாகச் செய்வதுதானே? உன் ஒருத்திக்காக, அதிகமாக என்ன ஆகிவிடப் போகிறது?" என்று பெரியவள் ஆட்சேபித்த போது, "ஒட்டுண்ணியாக உறிஞ்சி வாழ என்னால் முடியாது ஆன்ட்டி! அங்கே, அண்ணன் பார்த்து வைத்திருக்கும் விடுதியில் உள்ள கட்டணம் நீங்களும் வாங்கிக் கொள்ள வேண்டும்!" என்றாள் உறுதியான குரலில்.

"இல்லாவிட்டால், நான் இங்கே இருக்க முடியாது, ஆன்ட்டி!" என்றாள் மென்மையாகவும்.

"சரிம்மா!" என்று விட்டுக் கொடுத்த போதும், "ஆனால் அந்த மாதிரி விடுதி எல்லாம் லாப நோக்குடன் நடத்தப்படுகின்றவை! உன்னிடம், நான் சம்பாதிக்க வேண்டுமா? குறைத்துக் கொடு!" என்றாள் மீனாட்சி.

சந்தனாவும் இறங்கி வந்து, விடுதிச் செலவில் எழுபத்தைந்து சதவீதம் கொடுப்பதாக முடித்தார்கள்!

அதே போல, அவளுக்காக காரை அனுப்புவதையும், சந்தனா ஒப்புக்கொள்ளவில்லை.

ஏனெனில், மீனாட்சியின் பார்வைக்கான காகிதங்கள், காரில் அனுப்பப்படுவது இல்லை என்று அதற்குள் அவள் கண்டுபிடித்திருந்தாள். ரகசியமான குறிப்புகள் கூரியர் மூலமும் மற்றவை, அந்தப் பகுதியில் இருந்து மருத்துவமனைப் பணிகுச் சென்று வரும் ஒருவரிடமும் அனுப்பப்பட்டன. திருப்பி அனுப்புவதும், அப்படித்தான்.

எனவே, பள்ளிக்குச் செல்வதற்கும், திரும்பி வருவதற்கும் வேன் ஒன்றில் ஏற்பாடு செய்து கொண்டாள்.



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:21 pm

தடுக்க மாட்டாமல், "ஆனாலும், உனக்குக் கொஞ்சம் அதிகப்படியான சுதந்திர புத்திதான்! உன் அப்பா உன்னைப் பிடிவாதக்காரியாக வளர்த்து விட்டார்!" என்று மீனாட்சி குறைப்பட்ட போது, "இல்லாவிட்டால், இந்தக் காலத்தில் வாழவே முடியாது ஆன்ட்டி! நசுக்கி விடுவார்கள்! தைரியம், புருஷ லட்சணம் மட்டுமல்ல, இப்போது பெண்கள் லட்சணமும் கூடத்தான்!" என்று சந்தனா சிரிக்க, மற்றவளும் தன்னை மீறிப் புன்னகை செய்தாள்!

இரு பெண்களுக்கும், வயது வேற்றுமையை மீறிப் பல விஷயங்களில் மனம் ஒத்துப் போயிற்று!

பொது விஷயங்களில், உணவுச் சுவையில்... இலகுவாகப் பேசியபடி காலாற நடப்பதில்கூட!

'பெஞ்சில் ஏற்றுவது' என்று, மீனாட்சி கூறிய அப்போதிலிருந்தே, அவளுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறது என்ற ஊகம், சந்தனாவுக்கு இருந்தது! அவளுடைய தந்தையும், மகளுக்குச் சிரிக்கக் கற்றுக் கொடுத்திருந்தார்!

எனவே, வீட்டில் அடிக்கடி சிரிப்புச் சத்தம் கேட்கலாயிற்று!
ஒரு நாள் பள்ளி வீட்டுப் பாட நோட்டுப் புத்தகத்தைத் திருத்திக் கொண்டிருந்த சந்தனா, திடுமென வாய்விட்டுச் சிரித்தாள்!

கேள்வியாக நோக்கிய மீனாட்சியிடம், "ஒன்றுமில்லை, ஆன்ட்டி! குறிக்கோளை அடைய என்னென்ன செய்ய வேண்டும் என்று கேள்வி. இவன், முதலில் நாம் தாயாராக வேண்டும் என்று எழுதியிருக்கிறான்," என்று விளக்கவும் "தயார், தாயாராகிவிட்டதா?" என்று மூத்தவளும் சேர்ந்து நகைத்தாள்.

அதே போலச் சந்திரனில் பேசினால் கேட்காது. ஏன் என்று கேட்டால், பேசுவதற்கு அங்கே மனிதர்கள் இல்லாததுதான் காரணம் என்று பதில் சொன்ன புத்திசாலியைப் பற்றி, ஒருநாள் சந்தனா மீனாட்சியிடம் விவரித்தாள்.

"ஒலி பயணம் செய்யத் தேவையான காற்று இல்லாததால் தான் என்று சொல்லிக் கொடுத்தாலும், ஒத்துக் கொள்ளாமல் எப்படியும் பேசுவதற்கு மனிதர்கள் இருந்தால் தானே, அவர்கள் பேசுவது கேட்கும் என்று அதிலேயே நிற்கிறாள். ஆன்ட்டி! சொல்லிச் சொல்லிப் பார்த்து, அலுத்துப் போய், காற்று பற்றி எழுதினால், மதிப்பெண் கிடைக்கும் மற்றது எழுதினால் முட்டை கிடைக்கும் என்ற பிறகுதான், அவள் ஓரளவு வழிக்கு வந்தாள், ஆன்ட்டி! இத்தனைக்கும், கண்ணாடிக் கதவுக்கு அந்தப் பக்கம் நின்று, பேசிக் கூடக் காட்டிவிட்டேன். அப்படியும் சந்திரனில், கண்ணாடிக் கதவு கிடையாது மிஸ், என்று எனக்குக் கற்றுத் தருகிறாள், அந்த புத்திசாலி!" என்றாள் சந்தனா, சிரிப்புடனேயே.

இதுபோல, மீனாட்சியும் சொல்லுவாள்!

அவளுடைய தோழி ஒருத்தியைப் பெண் பார்க்க வந்தார்களாம்! "அப்போதெல்லாம், ரேடியோதான் சந்தனா. தோழி வீட்டில் புதிதாக ரேடியோ வாங்கியிருந்தார்கள்! சத்தமாக வைத்திருந்தார்கள்! விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சி! அப்போதே பழைய பாடல் ஒன்று, ரொம்பப் பிரிபலமானது! 'வாட்டசாட்டமான காட்டுப் பயல் வந்தானம்மா, இந்த வீட்டில் நுழைந்தானம்மா' என்று ரேடியோ பாடுகிறது. மாப்பிள்ளை வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறார்! நாங்களெல்லாம் எப்படிச் சிரித்திருப்போம் என்று, நீயே கற்பனை செய்து பார்!"

சிரித்து விட்டு, "கற்பனை செய்யும் போதே, ஒரு சின்ன சந்தேகம், ஆன்ட்டி! பெண் பார்க்க வந்தது, தோழியையா? அன்றி, உங்களையா?" என்று சாதுவாய் விசாரித்தாள் சந்தனா.

"போக்கிரி, வாயைப் பார்! அங்கிள், அந்தக் காலத்து டாக்டர்! முழுக்கைச் சட்டையும், டையுமாகக் கம்பீரமாக இருப்பார்! அவரைப் போய்க் காட்டுப் பயல் என்கிறாயா? உன்னை..." என்று சந்தனாவின் காதைத் திருகுவது போலப் பாவனை செய்தாள், மீனாட்சி!

"ஐயோ!" என்று வலிப்பது போல், சின்னவள் நடிக்க, இருவருமே, சிரிப்பில் மூழ்கினர். இப்படிப் பழைய சுவாரசியமான விஷயங்களைச் சொல்கையில், ஒரு நாள், "முன்பு ஒரு விளம்பரம் வரும், சந்தனா, 'நீங்கள் சோர்வாக இருக்கிறீர்களா? பலவீனமாக இருக்கிறீர்களா?' என்றெல்லாம் பல கேள்விகள் கேட்டுவிட்டுக் கடைசியாக, இந்த டானிக்கைச் சாப்பிடுங்கள் என்று, விளம்பரம் முடியும்! விளம்பரங்களைக் கிண்டலடிப்பது, தீபுவுக்கு, மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு!..." என்று தொடங்கி, முதல் முறையாக மகனைப் பற்றி, மீனாட்சி அம்மா பேசினாள்!... "இந்த ஒவ்வொரு கேள்விக்கும், 'ஆமாம்... ஆமாம்.. அட ஆமாம்ப்பா' என்று சொல்லிக் கொண்டிருப்பான்! இன்று, ஒரு கேள்வியாக, 'நீங்கள் கர்ப்பிணியாக இருக்கிறீர்களா?' என்று விளம்பரத்தில் கேட்க, இவனும் சற்றும் யோசியாமல், 'ஆமாம்ப்பா, ஆமாம்!" என்று சொல்லிவிட்டு, அதே சமயத்தில் அறைக்குள் தற்செயலாகச் சென்றுவிட்ட என்னைப் பார்த்து விழித்தான் பார்! இப்போதும், அந்த முகம் கண்ணிலேயே நிற்கிறது!" என்று நகைத்தாள் பெரியவள்.

கூடச் சேர்ந்து சிரித்துவிட்டு, "தீபு என்றால் உங்கள் மகனா ஆன்ட்டி?" என்று வினவினாள் சந்தனா.

கண்களில் மெல்லச் சிரிப்பு மறைய, "ஆமாம்! பிள்ளையே பிறக்காதோ என்றிருந்த சமய்ம் உண்டாகிப் பிறந்தான்! எங்கள் வாழ்வில் ஒளியேற்றப் பிறந்தவன் என்று, இந்தப் பெயர் வைத்தோம்! ஆனால், அவன் அயல் நாட்டுக்கு ஒளியேற்றப் போய்விட்டான்..." என்ற மீனாட்சி, மேற்கொண்டு எதுவும் பேசாமல் வாயை இறுக மூடிப் பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

சொல்லக் கூடாது என்று ஒதுக்கி வைத்திருப்பது போலும் என்று சந்தனாவுக்குத் தோன்றியது.
இப்போது ஒரு நெகிழ்வில் வாயை விட்டுவிட்டு, அப்புறம் ஏன் சொன்னோம் என்று வருந்துவது, அன்பில் விரிசல் விழ வைத்துவிடும்! அப்படி விரிசல் விழுந்து, கிட்டத்தட்ட தாய் போல எண்ணத் தொடங்கியிருந்த, இந்தப் பிரியமான பெண்மணியைப் பிரிய நேருமானால்?

சந்தனாவால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை!

அத்தோடு, அவரவர் அந்தரங்கங்கள் அவரவருக்கு! இவ்வளவு அன்பிருந்தும், சந்தனா மட்டும், எல்லாவற்றையும் மீனாட்சி அம்மாவிடம் ஒப்பித்து விட்டாளா என்ன?

முறுவலித்து, "எங்கோ ஓர் இடத்தில் ஒளியேற்றினால் சரிதானே ஆன்ட்டி! இப்போது, நீங்கள் அந்தக் 'காட்டுப் பய்ல்' மாதிரி, வேறு கதைகள் இருந்தால், சொல்லுங்களேன்" என்று கேட்டுக் கொண்டாள். "எனக்கு என்னவோ, அந்த நிகழ்ச்சி உங்கள் வீட்டில் தான் நடந்திருக்குமோ என்கிற சந்தேகம் போகவே மாட்டேன் என்கிறது!" என்று, ஓரக் கண்ணால், குறும்பாக நோக்கினாள்.

சிரித்தவாறே, கையை நீட்டிச் சின்னவளின் கன்னத்தை வருடினாள், மீனாட்சி.

"அருமையான பெண்ணம்மா நீ!" என்றவள், தொடர்ந்து, தான் சந்தித்த வேறு சில பல வேடிக்கை நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

அவற்றுள் ஒன்று, அவளது எட்டாம் வகுப்பில், 'ஹோம் சயன்ஸ்' தேர்வில், அவரை நல்ல பலன் தர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு, அவரைச் செடிக்குப் பதிலாக, 'அவரை' அதாவது கணவரை என்று எடுத்துக் கொண்டு, சில மாணவிகள் எழுதிய பதில்!

இருவரும் விழுந்து விழுந்து சிரித்த போது, சந்தனாவுக்கு, வீட்டில் தமையன், தந்தையோடு ஜோக்கடித்துச் சிரிக்கும் அதே உணர்வு!

மீனாட்சி அம்மா வீட்டுச் சமையல்காரம்மா கூட, சந்தனாவிடம் தனியே வந்து, "அம்மா இப்படிச் சிரித்து சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து, ஏழெட்டு வருஷம் ஆகிப் போச்சும்மா! அய்யாவும் போய், சின்னவரும் வெளிநாட்டிலேயே தங்கிவிட்ட பிறகு, ஆளே மாறிப் போய், வெறும் எந்திரம் மாதிரி, நடமாடினாங்க. எப்படியோ, அது மாறி அவங்க நல்லா ஆனால் சரி! அதனாலே, நீ மட்டும், எங்கம்மாவை விட்டு, எங்கேயும் போய்விடாதேம்மா!" என்று கூறிவிட்டுப் போனாள்!

இந்த ஆன்ட்டியை விட்டுப் போவதா?

நினைக்கக் கூட முடியவில்லை, சந்தனாவால்!

பெண் துணையின்றி வளர்ந்தவள் சந்தனா! அதனால், மீனாட்சி அம்மாவை, ஒரு தாய் போல என்று அவளால், ஒப்புமை கட்டி நினைக்க முடியவில்லை!

ஆனால், உலகில் யாருமே இல்லை என்று தன்னந்தனியே நின்றவளுக்கு, நானிருக்கிறேன் என்று, ஆதிமூலமாய், அபயகரம் கொடுத்தவள் ஆயிற்றே!

கோடி ரூபாய் கொடுத்தால் கூட, அந்த அபயகரத்தை விட்டுப் போவதா?

"நானாக ஒரு போதும் இங்கிருந்து போகவே மாட்டேன்!" என்று சமையல்காரம்மாவிடம் உறுதி கூறிய போது சந்தனா முழுமனதோடு, தன் வார்த்தைகளை நம்பித்தான் சொன்னாள்!

ஆனால், அங்கே இருக்கப் பிடிக்காமல், மனம் வெறுத்து, அந்த வீட்டை விட்டுத் தானாகவே ஒரு நாள் வெளியேறுவாள் என்று அப்போது அவளுக்குத் தெரியாது!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:22 pm

அன்று சந்தனா வீடு திரும்பக் கிளம்பிய நேரம், வழக்கம் போலத்தான்.

ஆனால், வெகு அதிசயமாக வரும் வழியில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறைவாக இருக்கவே, எப்போதும் வரும் நேரத்துக்குக் கிட்டத்தட்ட அரை மணி நேரம் முன்னதாகவே, சந்தனா வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள்.

ஆனால், அதிலும் ஒரு சிறு பிரச்சினையாக, கேட்டைத் திறந்து விடுவதற்கு, வாயில் காவலன், கேட் அருகே இல்லை!

பெரிய கேட், சின்ன கேட் இரண்டின் அருகிலும் இல்லாமல், பின்புறமாக அவன் ஏதோ தோட்ட வேலை செய்து கொண்டிருந்தான்!

பொதுவாக ராசையா வேலையில் அலட்சியம் காட்டுகிறவன் இல்லை!

ஆனால் தோட்டக்காரனுக்கு உதவியாக கொத்திக் கிளறி, முரட்டு வேலை ஏதாவது செய்து கொடுப்பான்!

அன்றும் அது போலச் செய்து கொண்டிருந்த போதுதான், சந்தனா திரும்பி வந்தது!

ஆனால், கேட் திறந்து விட அவன் இல்லாததையும் அவளுக்குப் பிரச்சினை என்று சொல்லிவிட முடியாது!

அப்படி வாயில் கதவருகில் யாரும் இல்லாதபோது, தடையின்றி உள்ளே வருவதற்கு, அந்த வீட்டு மனிதர்கள் அறிந்த ரகசியம் ஒன்று உண்டு!

சின்ன கேட்டின் உட்புறமாகக் கையை நன்றாக நீட்டிப் பக்கவாட்டுச் சுவரில், சற்றுத் தள்ளிப் பதித்திருந்த தாளைத் திறந்து கொண்டு, உள்ளே செல்வார்கள்.

கேட் தாண்டி, நாலு எட்டுதான் உள்ளே வைத்திருப்பாள்!

அதற்குள், "இவ்வளவு தூரம் தாண்டி, இங்கேயுமா இந்தத் தொல்லை? மரியாதையாக, வந்த வழியே திரும்பிச் செல்! அல்லது, உன் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்!" என்று அதட்டியது, ஓர் ஆண் குரல்!

குரல் ஆணினதாக இருந்ததோடு, வெகு கடுமையாகவும் இருக்கவே, பக்கத்து வீட்டில் தான் ஏதோ, காற்று வீசிய தினுசில், இந்த வீட்டில் இருந்து பேசுவது போல் தோன்றிவிட்டது என்று எண்ணியவளாய், சந்தனா மேலும் வீட்டை நோக்கி நடக்கலானாள்.

"சொல்லிக் கொண்டே இருக்கிறேன், திமிராக உள்ளே வருகிறாயா? பெண் என்பதால், சும்மா இருப்பேன் என்று நினைத்தாயா? ஏய் ராசையா, இவளைப் பிடித்து வெளியே தள்ளிக் கதவைப் பூட்டு!" என்றபடி, வீட்டின் உள்ளிருந்து வாயில் வராந்தாவுக்கு வந்து, வாயில் காவலனுக்கு ஒருவன் உத்தரவிடவும், சந்தனாவுக்கு ஒரே ஆச்சரியமாகப் போயிற்று.

இந்த வீட்டில், யார் இவன்? அதுவும், இந்த அதட்டலோடு?

அவள் வியந்து நோக்குகையிலேயே, அவனது குரலுக்கு ஓடி வந்த ராசையா, சந்தனாவைப் பார்த்துவிட்டுத் திகைத்து நின்றான்.

"என்னடா, பெண்ணைப் பார்த்ததும் விழித்துக் கொண்டு நிற்கிறாய்? இதுகள் எல்லாம், பெண்களே அல்ல! பிசாசுகள்! காரியம் சாதிப்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்! திருட்டுத்தனமாகக் கதவைத் திறந்து கொண்டு வருகிறாள், பார்! போ! போய் அடித்து விரட்டு! மீண்டும் இந்தப் பக்கம் வரவிடாதே!" என்று மீண்டும் அவன் அதட்டிய விதத்தில், சந்தனாவுக்கு ஒரு விஷயம் தெளிவாயிற்று.

இந்த அளவுக்கு உரிமையோடு வீட்டு வேலையாளை விரட்டுவது என்றால், இவன் இந்த வீட்டுக்கு உரியவனாகத் தான் இருக்க வேண்டும்!

அப்படியானால், எங்கோ விளக்கேற்றப் போய்விட்டதாக, மீனாட்சி அம்மா வருத்தத்துடன் சொன்ன அந்த தீபன், இந்த மனிதனா? ஆன்ட்டியுடைய சொந்த மகன்!

ஆன்ட்டியின் அமைதிக்கும் இவனது ஆத்திரத்துக்கும்!

உள்ளே கைவிட்டுக் கதவைத் திறந்ததால், தப்பாக நினைத்து விட்டானா?

இப்படிக் குற்றவாளி போல, வீட்டுக்கு வெளியே நின்று விளக்கம் சொல்ல, சந்தனாவுக்குப் பிடிக்கவில்லை.
அதைவிடத் தன்னைப் பற்றிய விளக்கத்தைத் தானே சொல்வதை விட, வேலையாள் சொல்வது நல்லது என்றும் தோன்றவே, தீபனுக்குப் பதில் சொல்ல முயற்சி கூடச் செய்யாமல், சும்மா பார்த்துக் கொண்டு நின்றாள் அவள்.

அதற்கு ஏற்ப ராசையாவும், "அய்யா, இந்த அம்மா கொஞ்ச நாளா, நம்ம வீட்டிலேதான் இருக்கிறாங்க. இவங்க கிட்டே, அம்மாவுக்கு ரொம்பப் பிரியம். இந்தம்மா வந்தப்புறம்..." என்று விளக்கத் தொடங்கினான்.

ஆனால், அவன் பேச்சை மதியாமல், "ஓகோ! மோப்பம் பிடித்து, முன்பே வந்து காத்திருக்கிறாளோ! பார் பெண்ணே, அதெல்லாம் என்னிடம் ஒன்றும் பலிக்காது! முதலில் இங்கிருந்து வெளியே நட!" என்று உறுமினான் தீபன்.

இப்போது, சந்தனாவுக்கும் கோபம் வந்திருந்தது!

அவனுக்கு முன்பிருந்தே அங்கிருக்கும் வேலையாள் ஒரு விளக்கம் சொல்கிறான். அதை என்னவென்று கூடக் கேளாமல், வாய்க்கு வாய் வெளியேறு, வெளியேறு என்றால் எப்படி?

பிசாசுப் பட்டம் வேறு!

எந்தப் பெண், அவனை எப்படி ஏமாற்றினாளோ?

அதற்காக, என்னமோ இவன் மகா மன்மதன் போலவும், இவனுக்காகவே, சந்தனா இந்த வீட்டுக்கு வந்து, காத்துக் கிடப்பது போல, என்ன அசட்டுத் தனமான பேச்சு!

அப்படி எந்த ஆண் மகனுக்காகவும், அவள் ஒரு போதும் காத்துக் கிடக்கவே மாட்டாள்!

அதை அவனிடம் விளக்கிவிடும் எண்ணத்தில், "பாருங்கள் மிஸ்டர் தீபன்..." என்று சந்தனா தொடங்கும்போதே ஆத்திரத்துடன் குறுக்கிட்டான் அவன்!

"முடியாது! பார்க்கவும் முடியாது! கேட்கவும் முடியாது! முதலில், இங்கிருந்து வெளியே போ! அல்லது, உன்னையும் உன்னை அனுப்பியவர்களையும், கேஸ் போட்டு, உண்டு இல்லை என்று ஆக்கி விடுவேன்!"

அனுப்பியவர்களா?

இவனை வளைத்துப் பிடிக்க, ஒரு கூட்டமே வேலை செய்வதாக எண்ணினானா?

என்ன திமிர்! என்ன கர்வம்!

இனி, இவனிடம் பேசிப் பயன் இல்லை!

பார்வையை அவனிடமிருந்து திருப்பிக் கொண்டு, ஓர் அலட்சிய பாவனையுடன் வீட்டை நோக்கி நடந்தாள் சந்தனா!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:22 pm

அவன் கொதி நிலைக்குப் போய்விட்டான் போலும்! "ஏய்! ஓர் அடி முன்னே எடுத்து வைத்தாலும், அப்புறம் உன்னை நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது..."

தீபன் ஆத்திரத்துடன் கத்திக் கொண்டிருக்கும் போதே, "என்ன இங்கே சத்தம்?" என்ற மீனாட்சியின் குரல் கேட்க, அதைத் தொடர்ந்து, அவளும் வெளியே வந்தாள்!

சந்தனாவைப் பார்த்ததும் முகம் மலர்ந்து, "வாம்மா! இன்று சீக்கிரமே வந்துவிட்டாய் போல!" என்று கனிவோடு வரவேற்றாள்.

பதிலுக்கு முறுவலித்து, "இன்னும் ஐந்து நிமிஷம் முன்னாலேயே உள்ளே வந்திருப்பேன், ஆன்ட்டி! ஆனால், உங்கள் பிள்ளைக்குத்தான் ஏதோ பிரச்சினை!" என்று கிண்டலாக, மீனாட்சியுடைய மகனைக் கண்ணால் காட்டினாள் சின்னவள்!

ஆத்திரத்துடன் அன்னையை நெருங்கினான் தீபன். "அம்மா, இவளை நம்பாதீர்கள். பாருங்கள், இங்கே ஏதாவது செய்தி கிடைக்கும் என்று, உங்களோடு ஒட்டிப் பழகிக் கொண்டு, உங்கள் வீட்டிலேயே, குடி வந்து விட்டாள், இவள்! என்ன கதை சொன்னாளோ, நீங்கள் ஏமாந்து விட்டீர்கள்! முதலில் இவளை வெளியேற்றுங்கள்!"
"சேச்சே, நிறுத்துப்பா! என்ன பேச்சு இது, தீபன்? நீ சொல்லுகிற மாதிரி எதுவும் இல்லை! எனக்குச் சந்தனாவைப் பற்றி நன்றாகத் தெரியும். அதனால்..." என்ற தாயைக் குறுக்கிட்டு, "என்னம்மா தெரியும்? இவளை முதல் தடவையாக இப்போதுதான் பார்க்கிறேன்! அதற்குள், இவளுக்கு என் பெயர் தெரிந்திருக்கிறது. நான் யார் என்று தெரிந்திருக்கிறது! எப்படி முடியும்? என் வார்த்தைக்கு மாறாக, நீங்களாக என்னைப் பற்றிச் சொல்லியிருக்க மாட்டீர்கள்! என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகே இங்கே வந்திருக்கிறாள் என்று, இதிலிருந்தே தெரிந்து விடவில்லையா?" என்று வாதாடினான்.

மீனாட்சியிடம் பேசிய பிறகு, சிரித்த முகமாக வீட்டு வாயிலின் படிகளை நோக்கி ஓர் எட்டு எடுத்து வைத்த சந்தனா, வியப்புடன் திரும்பிப் பார்த்தாள்.

தன்னைப் பற்றிப் பேசக்கூடாது என்று, இவன் தான் தாயிடம் சொல்லி வைத்திருக்கிறானா?

ஒரே மகன் என்றாலும், அந்த மகன், அவனுடைய குடும்பத்தார் ஒருவரின் புகைப்படத்தைக் கூட, அந்த வீட்டில் பார்த்திராதது நினைவு வந்தது, இன்னமும் அவளது ஆச்சரியத்தை அதிகரித்தது!

இந்தத் தீபன் தான் தடுத்திருக்க வேண்டும்!

இவனைப் பற்றி யாரும் அறிந்து விடக் கூடாது என்று ரகசியம் காக்கும் அளவுக்கு, இவன் அப்படியென்ன கொம்பன்? அல்லது குற்றவாளியா?

அதனால் தான், பர்சில் இருந்த படங்களை, மீனாட்சி ஆன்ட்டி, அவ்வளவு முக்கியமாகக் கருதியிருக்க வேண்டும்.

ஆனால் எதற்காக?

"சும்மா, அதையே சொல்லிக் கொண்டிராதே, தீபன். நான் தான் ஒரு தரம், பேச்சு வாக்கில், என் மகன் என்று, உன் பெயரைச் சந்தனாவிடம் சொல்லி விட்டேன்! அது, நீதான் என்று எப்படித் தெரியும் என்று, அடுத்த கேள்வி கேட்காதே! இந்த வீட்டில் நின்று, இந்தக் கத்துக் கத்துகிறவன் வேறு யாராகவும் இருக்க முடியாது என்று, ஒரு முட்டாள் கூடப் புரிந்து கொள்வாள்" என்று சற்றே அலுத்த குரலில் கூறிய மீனாட்சி, சந்தனாவிடம் திரும்பி, "நீ உள்ளே போம்மா! இன்றைய சிற்றுண்டி, உனக்குப் பிடித்த குழிப் பணியாரம். இதோ, இவனுக்கும் அது பிடிக்குமே என்று செய்யச் சொன்னேன்! போய், முகம் கழுவிவிட்டுச் சாப்பிடு" என்று கூறவும், அதற்கு மேல் அங்கே நில்லாமல், சின்னவள் உள்ளே சென்றாள்.

மாடியில் வாயிற்புறத்தை நோக்கிய அறை அவளுக்குத் தரப்பட்டிருப்பது! எனவே தொடர்ந்து தாயும் மகனும் பேசியது, அறைக்குள் சென்ற பிறகு, அவள் விரும்பாவிட்டாலும் அவளது காதுகளில் தெளிவாக விழுந்தது!

"உங்களுக்கு உலகம் தெரியாது, அம்மா! இவளை, இங்கே இருக்க விடுவது, நல்லதில்லை!" என்றான் மகன்.

"எனக்கு உலகம் தெரியாதா? அப்படி உலகம் தெரியாத அம்மா எப்படியோ போகட்டும் என்று தானே, இத்தனை ஆண்டுகள் அங்கேயே இருந்துவிட்டாய்! சரி. அது உன் வாழ்வு, உன் விருப்பம்! சந்தனாவுக்கு என்று, இங்கே, இப்போது யாரும் இல்லை! அவள் வீட்டில், திருட்டு வேறு நடந்து, தவித்துக் கொண்டு நின்றாள் பாவம்! எனக்கும், இந்தத் தனிமை, தாங்க முடியாத பாரமாகி விட்டது! அதனால், எனக்குத் துணையாக, அவளை, நான் தான் இங்கே அழைத்து வந்திருக்கிறேன்! இரு மாதங்களாக, எனக்கு அவள் தான் ஒரே துணை! இனி, நீ கிளம்பிய பிறகும், அவள் தான் துணையாக இருக்கப் போகிறாள்!" என்றாள் மீனாட்சி அம்மா சற்று அழுத்தமான குரலில்!

"அது, தேவையில்லை, அம்மா! இதை இப்போதைக்கு மனதோடு வைத்துக் கொள்ளுங்கள்! இந்த முறை, என் மனதில் வேறு கருத்து இருக்கிறது! இனி, இங்கேயே இருந்து விடலாமா என்ற எண்ணத்தில் தான், இப்போது வந்ததே!"

நம்பாமல், 'உச்'சுக் கொட்டினாள் அன்னை!

"கடந்த இரண்டு முறை வந்த போதும் கூட, நீ இப்படித் தான் ஏதோ சொன்னாய்! ஆனால், உன் ஏஜெண்ட் தான், உனக்கு நன்றாக அமெரிக்க மோகத்தை ஏற்றி வைத்திருக்கிறாளே! சுயநலம் பிடித்தவள்! இரண்டே நாளில், ஏதாவது சாக்கிட்டு, அவள் ஒரு போன் பண்ணிக் கூப்பிட்டாள் என்றால், குடிகாரன் பேச்சு மாதிரி, எல்லாம் அத்தோடு சரி! உடனே, விழுந்தடித்துக் கொண்டு ஓடி விடுவாய்!..."
"இல்லைம்மா! இந்தத் தடவை மித்ராவுக்காகவேனும்..."

"மித்ராவைக் காட்டி, என்னை மடக்கப் பார்க்காதே! முதலில் ஒரு மாதமேனும் இருந்து காட்டு! அப்புறமாக, உன்னை நம்புகிறேன்! ஆனால், சந்தனா விஷயத்தில் தலையிடாதே! அவளை, நான் தான் கட்டாயப்படுத்தி, இங்கே கூட்டி வந்தேன்! அவள் இங்கே தான் இருப்பாள். அவளைப் போகச் சொல்ல முடியாது!" என்றாள் தாயார் உறுதியான குரலில்!

"என்னவோ, எனக்குப் பிடிக்கவில்லை! எதற்கும், நான் இங்கே தங்க நினைப்பது பற்றி, அந்தப் பெண்ணிடம் வாய் விட்டு விடாதீர்கள்! அப்புறம், அவள் ஏதாவது பத்திரிகைக்குச் செய்தி கொடுத்து, ஒரே களேபரம் ஆகிவிடப் போகிறது!" என்று, தாயை எச்சரித்தான் தீபன்.

"ஆமாம், நீயும், உன் பத்திரிகையும்! யார் யாரோ, எது எதற்கோ பயப்படுகிறார்கள்! உனக்கு, இது ஒரு ஃபோபியா!" என்றாள் தாயார் சற்று அலட்சியமாகவே!

"இந்த மீடியாக்காரர்கள், செய்திக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியாது! டயானாவின் மரணம் எப்படி நடந்தது, நினைத்துப் பாருங்கள்! அந்தப் பெண்ணின் வீட்டில் நடந்த திருட்டே, அவள் நம் வீட்டில் நுழைவதற்கான நாடகம் என்பது தான் என் கருத்து! ஆராய்ந்து பார்த்தால், அதுதான் உண்மையாகவும் இருக்கும்!" என்றான் மகன்.

என்ன உளறல் இது என்ன சந்தனா யோசிக்கையிலேயே, "முழுப் பைத்தியமாக மாறுமுன், உன் ஃபோபியாவுக்கு ஏதாவது சிகிச்சை செய்!" என்று மீனாட்சி எரிச்சலாகக் கூறிய விதத்தில், அவளுக்குச் சிரிப்பு வர, அந்த சிரிப்புடனேயே திரையை ஒதுக்கிக் கொண்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள்!

தாயும் மகனும், அதே இடத்தில், வீட்டின் முன்புறத் தோட்டத்தில் தான் நின்றனர்.

தீபனின் எரிச்சல் மிகுந்த முகம் அவளுக்கு நன்றாகவே தெரிந்தது!

அதே நேரத்தில், ஜன்னல் திரையின் அசைவை உணர்ந்து விழி உயர்த்தி நோக்கிய தீபனின் பார்வையில், அவளது சிரித்த முகம் பட்டுவிட, அவனது கண்கள் கனலை உமிழ்ந்தன.

எரித்து விடுவான் போல, எவ்வளவு கோபம்!

துணி கொண்டு துடைத்தாற் போல அவளது சிரிப்பு தானாக மறைய, உள்ளூர வாட்டத்துடன், சந்தனா உள்ளே திரும்பினாள்.

மீனாட்சி அம்மாவுடைய மகனுக்கு, அவளிடம் ஏன் அவ்வளவு வெறுப்பு?

காரணம் எதுவாக இருந்தாலும், அவனது வெறுப்பு அவளை மிகவும் பாதித்தது என்பது மட்டும் நிஜம்!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:22 pm

மீனாட்சி அம்மா மிகவும் நல்லவள்! பல தரும காரியங்களில் ஈடுபட்டிருந்தாள்.

நூறு சதவீதம் ஆரோக்கியமான உடல்நிலை கிடையாது!

ஆனாலும், அதற்காக, முகத்தை சீர்யசாக வைத்துக் கொண்டிருக்க மாட்டாள்.

கேலியும் சிரிப்புமாக, மிகவும் சந்தோஷமான மனோ பாவம் உடையவள்!

அதனாலேயே சந்தனாவுக்கும், அவளை மிகவும் பிடித்துப் போய், வேற்று வீடு என்கிற எண்ணமே இல்லாமல், சந்தனா அந்த வீட்டில் மிகவும் சந்தோஷமாகவே வாழ்ந்து வந்தாள்!

தந்தையைப் பற்றிக் கூடப் பல சந்தோஷமான சம்பவங்களை, அவ்வப்போது பெருமையாகவும், சிறு ஏக்கங்களுடனும் மீனாட்சி அம்மாளிடம் பேசி, அவளால் ஆறுதல் அடைய முடிந்திருக்கிறது!

இப்போது, மகன் வரவினால், அந்த நிலை மாறிவிடும் போல இருக்கிறதே என்று சந்தனா வருத்தத்துடன் நினைத்தாள்.

அண்ணன் வரும் வரை, பாதுகாப்பாக இங்கேயே இருப்பது, அவன் வந்த பின்னும் அந்தப் பக்கத்திலேயே வீடு பார்த்து வசிப்பது என்று எண்ணியதெல்லாம், தலைகீழாக மாறியது.

அந்த வீட்டில் தீபனுக்கு எந்த அளவு அதிகாரம் உண்டோ, சந்தனாவுக்குத் தெரியாது! ஆனால், ஒரு மகனின் உரிமை, மற்ற எதையும் விட அதிகம் தானே?

வீட்டு அம்மாவுடைய மகனுக்கு அடியோடு பிடிக்காத போது, அந்த வீட்டில் தொடர்ந்து தங்க, அவளுக்கும் விருப்பம் இருக்கவில்லை!

அதுவும், அவன் தாயுடன் தொடர்ந்து தங்கும் விருப்பத்துடன் வந்திருந்தால், அவனது விருப்பத்துக்குத்தான் முதல் உரிமை கொடுக்க வேண்டும்! பானகத் துரும்பு மாதிரி, அவன் முகம் சுளிக்க, அவள் அங்கே இருப்பது சரியல்ல!

இந்தப் பிரச்சினைக்குச் சீக்கிரமே ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று எண்ணியவாறே, மெல்லக் கீழே இறங்கிச் சென்றாள் சந்தனா.

படிகள் ஹால் பகுதிக்குத் திரும்பும் போதே, யாரோ தன்னைக் கவனிப்பது போன்ற உணர்வு சந்தனாவுக்கு.

தீபனாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணி, சோஃபாக்கள் போடப்பட்டிருந்த பக்கம் பாராமலே, உட்புறம் திரும்பியவளின் பார்வை வட்டத்தில், அவனது நெடிய உருவம் போல எதுவும் தெரியாது போகவும், விழி திருப்பிப் பார்த்தாள் அவள்.

அந்தப் பெரிய சோஃபாவுக்குள் புதைந்து விடுவாள் போல, ஒரு சிறுமி!

அவளது நாலைந்து வயதுக்குரிய ஆரோக்கியமோ, துறுதுறுப்போ தெரியவில்லை!

ஒரு துணிப் பொம்மையை அணைத்தபடி, தன் நீல நிறக் கண்களால், சந்தனாவை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கண்கள் அன்னியமாய் நீல நிறமாக இருந்த போதும், அறிமுகமான ஏதோ அவளிடம் இருப்பதாகத் தோன்ற சந்தனா அவளைப் பார்த்துப் புன்னகை செய்து, "ஹல்லோ?" என்றாள்.

பள்ளியில் புது மாணவிகளிடம் பேசி, இளக வைத்துப் பழக்கம் தானே?

ஆனால், இந்தச் சிறுமியின் பாணி வேறு மாதிரி இருந்தது! சந்தனாவை ஒரு தரம் சந்தேகமாக நோக்கிவிட்டுத் தலையைத் திருப்பிக் கொண்டாள் அவள்.

ஆனால், அந்த சந்தேகமான பார்வையே, அவள் யாரென்று சந்தனாவுக்குக் காட்டிக் கொடுத்தது! அறிமுகமான சாயலும் புரிந்தது!

இவள் தீபனுடைய மகள்! மீனாட்சி ஆன்ட்டியுடைய பேத்தி!

தந்தையின் அதே சந்தேகத்தைச் சிறுமியின் கண்களில் பார்த்ததும், சந்தனாவின் முடிவு இன்னமும் வலுப்பெற்றது!

அவனுக்கு, இவள் ஒரு மகள் தானா? வேறு பிள்ளைகளும் இருக்கிறார்களா? மனைவி?

யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்?
சாப்பாட்டு அறைக்குள் சென்று, மீனாட்சி அம்மாள் சொன்னதற்காக, இரண்டு பணியாரங்களைக் கொறித்து விட்டு, பரீட்சை நோட்டுகள் திருத்தும் வேலை இருப்பதாகச் சொல்லிக் கையில் காபியை வாங்கிக் கொண்டு சந்தனா மீண்டும் அவளது அறைக்குத் திரும்பும் வரை, வேறு யாரும் அவள் கண்ணில் படவில்லை!

ஆனால், அதற்குள் வேறு யாரும் குறுக்கிடாத அந்தத் தனிமையில், "சந்தனாம்மா, தீபன் என்ன சொன்னாலும், அதைப் பெரிதாக நினைக்காதே! இந்த நாட்டுப் புத்தியும், அந்த நாட்டுப் பழக்கமுமாக, அவனுக்குள் ஒரே குழப்பம்! அதில், யாரைப் பார்த்தாலும், சந்தேகம்! அவன் மனைவி பிரிந்துவிட்ட விவகாரம் விஷயத்தை... விஷத்தை என்று தான் சொல்ல வேண்டும்... அதை ஊதிப் பெரிதாக்கி வைத்திருக்கிறது! இந்தக் குழப்பத்தில் அவன் ஏதாவது உளறினால், அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளாதேம்மா! எனக்காக, இங்கே இருந்து விடும்மா! ப்ளீஸ்!" என்று மீனாட்சி, மிகவும் கெஞ்சலாகக் கேட்டுக் கொண்டாள்.

அப்படியே, வீட்டின் முன்புறமாக, அதட்டலாக மகனின் குரல் கேட்கவும், "அங்கேயே யாரைப் பார்த்துக் கத்துகிறானோ..." என்றவாறு அவசரமாக எழுந்து சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றாள்!

தீபனோடு வேறு யார் யார் வந்திருக்கிறார்கள் என்று மீனாட்சி சொல்லவே இல்லை!

அப்படியே யார் யார் வந்திருந்த போதும், ஆன்ட்டி அறிமுகம் செய்து வைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணியவாறு, சந்தனா அறைக்குள் புகுந்து கொண்டாள்.

இரவு உணவை மீனாட்சியுடனே சேர்ந்து உண்பது, அங்கே வந்த பின் அவளது வழக்கம்!

இருவரும் அன்றைய நிகழ்வுகள் பற்றிக் கலகலப்பாகப் பேசியபடி, உண்ணும் அந்த நேரத்தைச் சந்தனா ஆவலாக எதிர்பார்ப்பாள்!

ஆனால், இன்று தயக்கமாக இருந்தது!

சாப்பாட்டு மேஜையில் அவளை வீட்டை விட்டு வெளியேற்றச் சொன்ன மகனும் இருப்பானே!

தந்தையின் மனதைப் பிரதிபலிக்கும், அவனுடைய மகளும் கூட இருக்கலாம்!

இவர்களோடு சேர்ந்து அமர்ந்து உண்பது, எவ்வளவு சங்கடமாக இருக்கும்!

சங்கடம் அவளுக்கு மட்டுமல்ல!

மகனை எதிர்த்துப் பிடிவாதமாக அவளை வீட்டில் இருக்கச் சொன்ன மீனாட்சி அம்மாவுக்கும், கஷ்டம்தான்!

பசியில்லை என்று, பேசாமல் அறையில் இருந்து விடலாமா என்று கூட, ஒரு தரம் அவளுக்குத் தோன்றியது!

ஆனால், இப்படியெல்லாம் நடக்கக் கூடும் என்று யோசித்து, அறையில் கொஞ்சம் பிஸ்கட்டுகளைக் கூடச் சந்தனா வாங்கி வைத்திருக்கவில்லை!

பட்டினியும், அதன் விளைவாகச் சரியாகத் தூங்காமலும் இருந்துவிட்டு நாளைக்குப் பள்ளிக்குப் போனால், வாங்குகிற சம்பளத்துக்கு நியாயமாகப் பள்ளியில் உருப்படியாக என்ன வேலை செய்ய முடியும்?

அது மட்டுமல்ல!

மீனாட்சி ஆன்ட்டி முட்டாள் அல்ல!

எதற்காகப் பசியில்லை என்கிறாள் என்று புரிந்து, நிச்சயமாக வருத்தப்படுவாள்.

பட்டினியாக இருக்க விடவும் மாட்டாள்! அந்தப் பெரியவள் வந்து, அவளை வருந்தி அழைத்துச் சாப்பிட வைத்து, அதெல்லாம் வேறு ஆன்ட்டிக்குக் கஷ்டம்!

அத்தனையையும் யோசிக்கையில், கௌரவம் பாராமல், பேசாமல் பல்லைக் கடித்துக் கொண்டு போய், இரண்டு வாய் எதையோ அள்ளிப் போட்டுக் கொண்டு வந்து விடுவது மேல் என்று சந்தனாவுக்குத் தோன்றியது!

ஒரு வேளை, தீபனே, அவனுடைய அன்னைக்காகச் சற்று இளகி, நல்லபடியாக நடந்துகொள்ளலாம்!
நல்லதே நினைக்கலாமே என்று எண்ணினால் கூட, அவளுக்கு அதில் நம்பிக்கை வர மறுத்தது! அவளது ஜன்னலை நிமிர்ந்து பார்த்த அவனது கோப முகம், அவ்வளவு எளிதாக மாறக் கூடியது அல்ல!

ஆனால், சந்தனா அஞ்சிய மாதிரி, அசம்பாவிதமாக, அவளை வாயிலில் வைத்து விரட்டியது போல, உணவருந்தும் போது, நிகழவில்லை! 'டேபிள் மானர்ஸ்' என்பார்களே, அது போல சாப்பிடுகையில் தீபன் உணவு வேலை நாகரிகம் கடைப்பிடித்தான் போலும்! சந்தனாவிடம் தனியாக எதுவும் பேசவில்லை என்றாலும், கடுகடுக்கவும் இல்லை!

அவன் தாயிடம் 'சுகம்' மருத்துவமனையைப் பற்றிய சில விவரங்களைக் கேட்டான்.

ஆனால் அப்படி அவன் விசாரித்தது, வெறும் உரையாடலுக்காக மட்டுமாகக் கேட்டது போலத் தோன்றாதது, அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

பல ஆண்டுகளாக எட்டிக் கூடப் பாராத, என்னவென்று கேட்டுக் கூட இராத தொழில் மீது, அவனுக்கு எப்படி அக்கறை இருக்க முடியும்?

மீனாட்சி அம்மாவுக்கும் அதே ஆச்சரியம் இருந்ததோ என்னவோ, முதலில் சற்று விட்டேற்றியாகவே பதில் சொன்னவள், தொடர்ந்து மகனின் கேள்விகளில் வியப்பும், திருப்தியும் அடைந்து, விவரமாகவே விடை கூறலானாள்!

தொடர்ந்து, தாயும் மகனுமாக, மருத்துவமனை, அதில் புதிதாகத் தொடங்கி இருக்கும் சில துறைகள், அவற்றின் வேலை முறைகள் பற்றி, அலசி ஆராயத் தொடங்கினார்கள்.

விஷயம் எதுவும் புரியாததால், இந்த உரையாடல் போரடித்த போதும், ஒரு வகையில், சந்தனாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது! அவள் காரணமாகப் பிள்ளைக்கும் தாய்க்கும் இடையே, மனவேறுபாடு வந்து விடவில்லை! நல்லபடியாகப் பேசுகிற நிலையில் தான் இருக்கிறார்கள்! பெரு நிம்மதி!

ஆனால், இந்த நிம்மதி நிலைக்க வேண்டுமானால், ஆன்ட்டியின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கக் கூடாது! அதை மீறி, அவளது திட்டத்தைச் செயல்படுத்தியே தீர வேண்டும்!

அதன் முதல்படியாக, மாலையில் மீனாட்சி அம்மா மருத்துவமனைக்கு வருவதாகத் திட்டம் இருக்கிறதா என்று விசாரித்தாள்.

மீனாட்சி விவரம் கேட்டதற்கு, "ஒரு சின்ன வேலை! கொஞ்சம் வெளியே போக வேண்டியிருக்கிறது! ஆனால், டெஸ்ட் நோட்டுகள் திருத்த வேண்டும். வெளியே போவதால், திரும்பி வருவதற்கு, வேனைப் பிடிக்க முடியாது! நீங்கள் வருவது தெரிந்தால், மருத்துவமனையில் வைத்து விட்டு என் வேலையைப் பார்க்கப் போவேன்! நீங்கள் வரும்போது, கொண்டு வந்துவிடலாம்! எனக்குச் சுமை மிச்சம்!" என்றாள் சின்னவள்!

"கொண்டு வந்துவிடலாம்! ஆனால், அவ்வ்...வ்ளோ நோட்டுத் திருத்துவாயே! நோட்டிகளின் பளு தாங்காமல், டயர் வெடித்துவிட்டால், என்ன செய்வது? அதுதான் கவலையாக இருக்கிறது!" என்றாள் மீனாட்சி சோகமாக!

"அதெல்லாம் வெடிக்காது, ஆன்ட்டி! குறைந்தது நூறு கிலோ கனத்தில், நான் உங்களோடு வரும்போதே வெடிக்காத டயர், வெறும் இந்த மூன்று கிலோ சுமையில் தானா வெடிக்கப் போகிறது? நடக்கவே நடக்காது! பயமே படாதீர்கள்!" என்று சிரித்தாள் சந்தனா.

வழக்கமாக, மீனாட்சியும் அவளும் பேசிக் கொள்கிற தினுசில்தான்!

ஆனால், "நூறு கிலோவா? சேச்சே! அவ்வளவு மோசமாகக் கற்பனை கூடப் பண்ண முடியாது!" என்று விட்டு, அவளை ஏற இறங்க அளவிடுபவன் போலப் பார்த்து, "மிஞ்சி மிஞ்சி அறுபது கிலோ சொல்லலாம்! அதுவும் உயரத்தைக் கொண்டுதான்!" என்று தீபன் கூறவும், பிரமிப்பை மீறிக் கொண்டு, அவனது அளவிடும் பார்வையில், சந்தனாவின் உடல் சிலிர்த்தது.

ஆனால் உடனேயே, "புதிதாகத்தானே, இந்த வேலையில் சேர்ந்திருப்பாய், அதற்குள் டெஸ்ட் வைப்பதையெல்லாம் உன் பொறுப்பில் விடுகிறார்களா?" என்று அவன் சந்தேகத்துடன் கேட்கவும் அவளுக்கு எரிச்சல் வந்தது!

இவன் புத்தி என்ன மாதிரியெல்லாம் வேலை செய்கிறது!
இவனைப் பற்றித் துப்பறிந்து, ஏதோ பத்திரிகை, டீவிக்கு விவரம் கொடுப்பதற்காக, அவள் இந்த வேலையில் சேர்ந்து, அவன் தாயின் கவனத்தைக் கவர்ந்து இந்த வீட்டிற்குள் புகுந்திருக்கிறாளாம்!

"நான் சென்ற ஆண்டிலிருந்தே வேலை பார்க்கிறேன்!" என்று ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பதில் சொன்னாள் அவள்!

அயராமல், "ஓ அப்போதே, இதற்காகத் தொடங்கிவிட்டாயா?" என்று தீபன் கேட்கவும், அவள் தான் அயர்ந்து, வாயடைத்துப் போனாள்!

மீனாட்சி ஆன்ட்டி சொன்ன மாதிரி, இவனுக்குப் பைத்தியம் தான் பிடிக்கப் போகிறது!

பெரியவளின் கண்களிலும் ஒருவிதச் சலிப்பைக் காணவும், சட்டென விழி தாழ்த்தித் தட்டில் பார்வையைப் பதித்தாள் சந்தனா.

ஆனால், திருத்த வேண்டிய நோட்டுப் புத்தகங்களை ஒரு கட்டாகக் கட்டி, 'சுகம்' மருத்துவமனையில் கொடுத்து விட்டு, அண்ணன் இடம் பார்த்து வைத்திருந்த விடுதிக்குப் போய்க் கேட்டால், அங்கே இடமே இல்லை என்றார்கள்!

"எங்கள் இடத்துக்குப் போட்டி அதிகம்மா! அப்போதே, உங்கள் அண்ணன் பெரிய சிபாரிசோடு வந்ததால், இடம் கொடுத்தோம்! நீங்கள் தான் வரவே இல்லையே! அப்போதே, அந்த இடத்துக்கு வேறு ஆள் வந்துவிட்டது! இனி, இப்போதைக்கு, இங்கே இடம் கிடையாது!" என்றார்கள் கண்டிப்பாகவே!

அதை மட்டுமே நம்பிச் செல்லவில்லை அவள்!

உடன் வேலை செய்வோர், இன்னும் தெரிந்தவர்களிடம் கேட்டுச் சென்று, வேறு சில இடங்களில் விசாரித்ததிலும், அவளுக்குத் தோல்விதான் கிடைத்தது!

இல்லை, இல்லை என்று கேட்கக் கேட்க, அவளுக்குத் தன் மீதே ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது!

தும்பை விட்டு வாலைப் பிடிக்க ஓடுகிற கதையாக அண்ணன் அலைந்து திரிந்து ஏற்பாடு செய்து கொடுத்த இடத்தை அலட்சியமாக விட்டுத் தொலைத்து விட்டு, இப்போது இப்படி அலைகிறாளே!

எவனோ ஒரு மடத் திருடன் உருப்படியாய் ஒன்றும் இல்லாத வீட்டுக்குத் திருட வந்தான் என்றால், அவன் மீண்டும் வருவானோ என்று பயப்படுகிறவள், அவனை விடவும் எவ்வளவு பெரிய மடச்சி!

அப்படிப் பயந்து, அடுத்தவர் வீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு, இடம் கொடுத்த நல்ல பெண்மணிக்கு, இப்போது எவ்வளவு தொல்லை!

தன்னைத் தானே திட்டித் தீர்த்தபடி, அவள் சோர்வுடன் வீடு திரும்பினால், கண்ணில் ஆவல் மின்ன, அவளைத் தேடி வந்தாள், தீபனுடைய மகள் மித்ரா!

பிரியமாக அழைத்த போது முகத்தைத் திருப்பிக் கொண்ட மித்ராவிடம், நட்பு, பாசம், பிரியம் என்று சந்தனா பெரிதாக எதையும் எதிர்பார்த்து விடவில்லை!

முக்கியமான காரணம், அவள் தீபனுடைய மகள்!

தன் மனதில் இருக்கும் விஷத்தில், எத்தனை சதவீதத்தை, மகள் மனதிலும் அவன் புகுத்தி வைத்திருக்கிறானோ!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:24 pm

சின்னப் பெண்! உடனடியாகப் புதியவளான சந்தனாவிடம் சிரிக்க வேண்டும் என்றோ, அவளுக்குப் பதில் சொல்ல வேண்டும் என்றோ எதிர்பார்க்க முடியாதுதான்!

ஆனால், அப்படித் தயங்குகிற குழந்தைகள் வெட்கப்படுவார்கள்... அல்லது பயத்துடன் பார்ப்பார்கள்!

இரண்டும் இல்லாமல், குழந்தை முகம் திரும்பியதே விசித்திரம் தான்! கூடவே, அந்த சந்தேகமான பார்வை வேறு!

அதிலும், உணவருந்தும் போது, சந்தனாவை மித்ரா கண்டு கொள்ளவே இல்லை எனவும், தந்தையின் வெறுப்பு, சிறுமியின் மனதிலும் ஏறியிருப்பதாகவே, அவள் எண்ணியிருந்தாள்!
ஒரு சின்னக் குழந்தையின் மனதைக் கெடுத்து வைத்திருக்கிறானே என்று உள்ளூர, வருத்தமும் இருந்தது!

ஆனால், மித்ராவே அவளைத் தேடி வரவும், ஆச்சரியத்தோடு, சந்தனாவுக்குச் சந்தோஷமும் உண்டாயிற்று!

வீடு வரும் போது இருந்த சோர்வு மறைந்துவிட, முறுவலோடு அவளை வரவேற்றாள்.

மித்ராவின் மனதில் மிச்சமிருந்த தயக்கத்தை நீக்கும் முயற்சியாக, "உன் பாப்பா ரொம்ப அழகாக இருக்கிறாளே! இவள் பெயர் என்ன?" என்று ஆங்கிலத்தில் விசாரித்தாள்.

சந்தனா நினைத்தபடியே, மித்ராவின் முகம் மலர்ந்தது! "பாப்பா பெயர் ஜேடி!" என்று சந்தோஷமாகச் சொன்னவள், சந்தனாவை ஆச்சரியமாகப் பார்த்து, "உனக்கு இங்கிலீஷ் தெரிகிறதே! சமையல் லேடி, தோட்டக்காரன் ஒருத்தருக்கும் தெரியலை! கிராண்ட்மா மட்டும் பேசுது! அதுவும், கோயிலுக்குப் போயிருக்குது! அப்பாவும் வேலை செய்கிறப்போ, வேறே யார்கிட்டேயும் பேச முடியலை! ஒரே போர்!" என்று மனதில் உள்ளதைக் கொட்டினாள்.

பாவம்! தனிமையில் போரடித்துப் போயிருக்கிறாள்.

இன்று, ஆன்ட்டி கோயிலுக்குப் போகிற நாள்!

தந்தையும், ஏதோ வேலை செய்யப் போய்விடவே, இவளோடு பேச ஆள் இல்லை!

பாட்டியோடு கோயிலுக்குச் சென்றிருக்கலாம். ஆனால் அங்கே யாரும் துப்புத் துலக்க வந்துவிடுவார்கள் என்ற பயத்தில், தந்தை அனுமதித்திருக்க மாட்டான்!

என்ன பயம்?

அப்படி என்ன பெரிய மனிதன்... அல்லது, குற்றவாளியேதானா?

சேச்சே! அப்படியெல்லாம் இராது! மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன், கிரிமினலாக இருக்க முடியாது!

தலையை உலுக்கி விட்டுக் கொண்டு, சிறுமியோடு உரையாட முயன்ற சந்தனா திகைத்தாள்!

அங்கே வீட்டில் என்ன செய்வாய்? எப்படிப் பொழுதைப் போக்குவாய் என்று, புதிதாக அறிமுகமான ஒரு சிறுமியிடம் கேட்கும் எந்தக் கேள்வியை மித்ராவிடம் கேட்டாலும், அவளுடைய தந்தை குற்றம் சாட்டியது போல, அவளைப் பற்றித் துப்புத் துலக்குவதாகவே அமைந்தது!

ஆனால், அவளைப் பற்றி எதுவும் தெரியாமல், அவளோடு இணைந்து பேசுவது எப்படி?

யோசித்து விட்டு, "அங்கே உனக்குப் பிடித்த மாதிரி, டீவி நிகழ்ச்சிகள் நிறைய உண்டா? என்று வினவினாள்.

அப்பாடா! குடைவது போல இல்லாத ஒரு கேள்வியைக் கண்டு பிடித்துவிட்டாள்!

தோள் வரை கிடந்த, அடர்ந்த கூந்தல் துள்ளிவிழ, "ஆமாம்! ஆனால் எனக்கு என் கம்ப்யூட்டரில் சிடி போட்டுப் பார்ப்பதுதான் ரொம்பப் பிடிக்கும்!" என்று மித்ரா உற்சாகத்துடன் பதில் சொன்னது மிக அழகாக இருந்தது!

அவளை அள்ளி அணைக்கும் ஆவலைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஹாரிபாட்டர் பார்ப்பாயா? ஹாரிபாட்டரில் எது ரொம்பப் பிடிக்கும்?" என்று மேலே விசாரித்தாள் சந்தனா.

"பறக்கும் கார் வருமே! அதுதான் ரொம்ம்...பப் பிடிக்கும்!"

"அப்புறம்?"

"நார்னியா... அது கூட மாஜிக்தான்! அப்புறம் 'டிஜிமோன்'... டிஜிமோன் தெரியுமா?"

நல்லவேளையாக, அந்த ஜப்பானியக் கார்ட்டூன் பற்றி சந்தனா அறிந்து வைத்திருந்தது, மித்ராவின் மனதில், சந்தனாவிடம் மதிப்பை ஏற்படுத்தியது!

இன்னும் பல்வேறு டீவி நிகழ்ச்சிகள், அவற்றுள் நான்சிக்குப் பிடித்தது, மிச்சிக்குப் பிடித்தது என்று இருவரும் அரட்டையில் ஈடுபட்டனர்!

இடையே எப்படியோ மித்ரா, சந்தனாவின் மடிக்கு வந்து சேர்ந்திருந்தாள்!

"மிச்சி வீட்டிலே பகல்லே யாரும் கிடையாதா? அவன் பெரியவர்களோட..." என்று சந்தோஷமாக அளந்து கொண்டிருந்த சிறுமியின் குரல் சட்டென நின்று விட, அவசரமாகச் சந்தனாவின் மடியிலிருந்து குதித்துக் கீழிறங்கினாள் அவள்!

"மித்ரா!" என்ற அதட்டலும், மாடிப்படியில் கேட்ட அழுத்தமான காலடிச் சத்தமும் காரணத்தை விளக்கிவிட, அதுவரை மறக்கப்பட்டுப் பக்கத்தில் கிடந்த பொம்மையைத் தூக்கிச் சிறுமியின் கையில் கொடுத்தாள் சந்தனா.

அவசரத்தில் தடுமாறிப் பொம்மையைத் தவற விட்டு, மீண்டும் எடுத்துக் கொண்டு அவள் விரைகையில், அவளுடைய தந்தை அங்கேயே வந்துவிட்டான்!

"இங்கே என்ன வேலை உனக்கு?" என்று அவன் அதட்டிய போது, சந்தனாவுக்கே திக்கென்றது!

அச்சத்தில் கண்கள் விரிய விழித்த மித்ரா, சட்டென, சந்தனாவைக் கை காட்டினாள்!

"இ...இந்த ஆன்ட்டிதான்... ஆன்ட்டிதான் வா வா என்று, என்னைக் கூப்பிட்டு..." என்று குரல் நடுங்கக் கூறினாள்.

ஒரு கணம் பிரமித்த போதும், சந்தனாவுக்கு உடனே விஷயம் புரிந்தது!

தந்தையின் கோபத்துக்கு அஞ்சிய சிறுமி, தான் தப்பிப்பதற்காகப் பொய் சொல்லியேனும், அதைத் திசை திருப்பப் பார்க்கிறாள்!

சந்தனாவின் திசைக்கு!

ஆனால், 'சும்மா ஆடுகிற ஒன்று, கொட்டுக் கண்டால்...' என்று சொல்வார்களே என்று எண்ணியவாறே சின்னவளைப் பார்த்தாள் சந்தனா.

மித்ராவின் பெரிய விழிகளில் கலக்கத்தைக் காணவும், சட்டென சுதாரித்து, "ஆமாம் மிஸ்டர் தீபன், உடன் விளையாட யாரும் இல்லாமல், குழந்தை கீழே போரடித்துப் போய் உட்கார்ந்திருந்தாள். அதனால் தான் கொஞ்சம் விளையாட்டுக் காட்டலாம் என்று கூட்டி வந்தேன்!" என்று பழியைத் தன் பேரிலேயே போட்டுக் கொண்டாள்!

மித்ராவின் பெரிய கண்கள் மீண்டும் விரிந்து, இப்போது தந்தையையும், சந்தனாவையும் மாறி மாறிப் பார்த்தன.

மித்ராவை விடப் பெரியவர்கள் என்றாலும், வகுப்புப் பிள்ளைகளோடு நன்றாகவே பழகும் வழக்கத்தால், அவளது மனதில் இருப்பதைச் சந்தனாவால் ஊகிக்க முடிந்தது!

சந்தனா காட்டிக் கொடுக்காததால், அவளைப் பற்றி நன்றியுணர்ச்சி! அவளைப் பொய்யாக மாட்டி வைத்த கூச்சம்!

கூடவே தந்தை இதை நம்புவானோ, மாட்டானோ என்ற கலக்கம்!

தீபனோ, "அடடா! என்ன இரக்க குணம்! அப்படியே தெருவில் இறங்கிப் போய், அங்கே பிச்சையெடுத்துத் திரிகிறார்களே, அந்தப் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் விளையாட்டுக் காட்டுவதுதானே?" என்றான் இளக்காரமாக!

பழமொழி ரொம்பவே சரிதான்! ஓர் இணுக்குக் கிடைத்ததும், எவ்வளவு அவமதிப்பாகப் பேசுகிறான்! மித்ராவைக் காட்டிக் கொடுக்காமல், இவனை உணர வைப்பது எப்படி என்று சந்தனா யோசிக்கையிலேயே, அவன் தொடர்ந்தான்.

"குழந்தைக்குப் போரடிக்கிறதே என்று இந்தம்மா விளையாட்டுக் காட்டினாளாமே! யாரிடம் இந்தக் கதை! தனியே இருந்த பிள்ளையை, யாரும் அறியாமல் பிடித்து வந்து, என்னைப் பற்றித் தூண்டித் துருவி, விசாரித்துக் கொண்டிருக்கிறாய்! இப்போது, கையும் களவுமாகப் பிடித்துவிட்டேன் என்பதால், இந்தக் கதை விடுகிறாய்! இந்த மாதிரிப் புளுகு மூட்டைகளை நம்புவதற்கு, நான் ஆளல்ல! அதை முதலில் தெரிந்து கொள்!" என்றான் கடுமையான குரலில்!

சந்தனாவுக்கும் சீற்றம் மிகுந்துவிட, "அப்படி எதை விசாரித்து அறிந்து விடுவேன் என்று இந்தப் பயம்? அங்கே யுஎஸ்சில் அடுக்கடுக்காய்ச் செய்துவிட்டு வந்த கொலைகளைப் பற்றியா? அல்லது, கொள்ளைகள் பற்றியா? எதற்காக இப்படிப் பயந்து நடுங்குகிறீர்கள்?" என்று ஆத்திரத்துடன் கேட்டு விட்டாள்.

ஒரு கணம் திகைத்துப் பேச்சிழந்து நின்ற தீபன், சட்டெனத் தலையைப் பின்னே தள்ளி, வாய்விட்டு நகைத்தான்!

மண்ணைத் தின்ற கண்ணனின் வாய்க்குள் உலகத்தைப் பார்த்த யாசோதைக்குக் கூட, இவ்வளவு பிரமிப்பு ஏற்பட்டிராது!

வரிசைப் பற்கள் பளிச்சிட, கனைப்போ காட்டுத்தனமோ இல்லாமல், இவனுக்குப் போய், இப்படி ஒரு சிரிப்பா?...

சந்தனா வியந்து நிற்க, மித்ரா மகிழ்ச்சியோடு கையைக் கொட்டிக் குதித்தாள்.

"ஹைய்யா! அப்பா சிரிச்சாச்சுது! அப்பாவுக்குக் கோபம் போயாச்சுது!"

'அப்பா' வை மட்டும் தமிழில் சொல்லி அவள் குதித்தது, சந்தனாவிடமும் புன்னகையை வரவழைத்தது!

அவன் சிரிப்பு மறைய, சந்தனாவைக் கூர்ந்து ஆராய்ந்தான்.

அதன் பின் "நடிப்பு பிரமாதம்!" என்றான்.

"என்ன நடிப்பு?" என்று அவனை நேராகப் பார்த்துக் கேட்டாள் சந்தனா.

பெரியவர்களின் குரல் மாறுபடுவதைக் கவனித்த மித்ரா, அவர்கள் இருவரும் வெட்டுவது போலப் பார்த்து நின்ற அந்தத் தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அங்கிருந்து ஓடியே போய்விட்டாள்!

"என்ன நடிப்பா? அது தெரியாமலா நிஜம்போல, அப்படி நடித்தாய்? அடேயப்பா! ஊகூம்! இவ்வளவு கெட்டிக்கார நடிகையை வீட்டில் வைத்துக் கொண்டு, என்னால் நிம்மதியாக இருக்கவே முடியாது! அதனால், சீக்கிரமே வேறு இடம் பார்த்துக் கொண்டு, இங்கிருந்து போய்விடு தாயே!" என்றான் தீபன்!

வேறு இடம் பார்ப்பதா?

அன்று அடைந்த தோல்விகள் சந்தனாவின் மனதில் பவனி வந்தன!

இவன் வேறு, சும்மாச் சும்மா போ போ என்று கொண்டு!

அப்படிச் சொல்வதைக் கேட்க நேரும் போது, அடுத்தவருக்கு எவ்வளவு வேதனையாக இருக்கும் என்று யோசிக்கவே தோன்றாதா?

வருத்தத்தை மறைத்து, எரிச்சலைக் காட்டி, "அதை என்னை இங்கே அன்போடு அழைத்து வந்த உங்கள் அம்மா சொல்லட்டும் போய்விடுகிறேன்!" என்றாள் அலட்சியமாக!

தீபனின் முகம் கன்றியது!

அவனுடைய அம்மாவாவது இவளைப் போகச் சொல்வதாவது! நடக்கிற காரியமா?

"அம்மாவைத்தான் நன்றாக மயக்கி வைத்திருக்கிறாயே!" என்றான் அவன் கைத்த குரலில்.

"ஆமாம்! மீனாட்சி ஆன்ட்டி பச்சைக் குழந்தை! சாக்லேட்டைக் கொடுத்து மயக்கி விட்டேன்!" என்று எரிச்சலோடு முணுமுணுத்தாள் சந்தனா.

"என்னது?"

நிமிர்ந்து, "இது ஆன்ட்டி எனக்குக் கொடுத்திருக்கும் அறை! இங்கிருந்து நீங்கள் வெளியே போனால், நான் என் வேலையைப் பார்க்க வசதியாக இருக்கும்!" என்றவள், அவன் இளக்காரமாக ஏதோ சொல்ல வாய் திறக்கவும், அவசரமாக, "இந்த வேலையை!" என்று, அருகில் அரை மீட்டர் உயரத்துக்குக் கட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளி நோட்டுப் புத்தகங்களைக் காட்டினாள்!
கட்டின் மேலே இருந்த காகிதத்தில் 'ஐந்தாம் வகுப்பு, மாதத் தேர்வுப் புத்தகம், தமிழ்' என்று பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்ததை, அவன் உற்றுக் கவனிப்பதைக் கண்டதும், அவளுக்குச் சுருசுருவென்று, உள்ளே புகைந்தது!

எதிலும் சந்தேகமா? விட்டால், மேலே இருக்கும் காகிதத்தை எடுத்துவிட்டுக் கட்டில் இருக்கும் ஒவ்வொரு நோட்டுப் புத்தகத்தையும் சோதிப்பான் போல!

"நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும், நான் மனச்சாட்சிப்படி வேலை செய்கிறவள்! இந்தக் காலத்தில், தமிழ் நோட்டுகளைச் சரியாகத் திருத்த, நேரம் அதிகம் பிடிக்கும்! அதனால், தயவு பண்ணிச் சற்று சீக்கிரமாக இடத்தைக் காலி செய்தீர்கள் என்றால், நான் வேலையைத் தொடங்க வசதியாக இருக்கும்!" என்றாள் குரலில் சிறு எள்ளலை விரவி!

ஆனால், "சற்று முன், என் மகளை ஏமாற்றிக் குல்லாப் போட்டுக் கொண்டிருந்த போது, இந்த மனசாட்சி எங்கே...கொஞ்சம் ஓய்வெடுக்கப் போயிருந்தது போல!" என்று தீபன் அவளது குரலிலேயே திருப்பிக் கொடுக்கவும், அவளுக்குத் தன்னை மீறிச் சிரிப்பு வந்தது!

ஆனால், இவன் கூடச் சேர்ந்து சிரிக்கிறவன் இல்லையே!

அல்லது சிரிப்பானோ?

இப்படித்தான் என்று நம்ப முடியாத பிறவி! எதற்கு வம்பு?

முகம் மாறாமல் காத்து, "என்ன செய்வது? சில பேரின் சகவாசத்தில், உலகமே மறந்து போகிறது! வேறு சில பேரைப் பார்க்கிற போது தானே, கஷ்டமான கடமைகள், அவசரமாக நினைவு வருகின்றன!" என்றாள் நக்கலாக அவள்.

இப்போது, அவளைக் கூர்ந்து நோக்கினான் தீபன்.

பிறகு, "கவனி! என் பொறுமைக்கும் ஓர் அளவு உண்டு! அளவு மீறி, அதைச் சோதிக்காமல் இருப்பது, உனக்கு நல்லது!" என்ற எச்சரிக்கையோடு அங்கிருந்து சென்றான்.



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:24 pm

சந்தனா ஓரளவு எதிர்பார்த்தது போலவே, விரைவிலேயே ஒரு நாள், அவளுடைய தந்தை வேலையென்று அவனது அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டிருந்த நேரத்தில், மித்ரா அவளைத் தேடி வந்து நன்றி தெரிவித்தாள்.

"அன்றைக்கு அப்பாவுக்குக் கோபம் என்றதும் ரொம்பப் பயந்துவிட்டேன், ஆன்ட்டி! பெரியவர்கள் யார் கிட்டேயும், நான் பேசினால் அப்பாவுக்குப் பிடிக்காது! ஒரு தரம் போனிலே பேசினதுக்கே, அப்பா போனையே உடைச்சிட்டார்! இப்போ, போன் இல்லையே, என்னையே உடைச்சிடுவாரோன்னு பயமாய் இருந்தது..."

முகத்தில் பாவனை காட்டி அவள் பேசிய தினுசில், சந்தனாவுக்குச் சிரிப்பு வந்தது!

அதைக் காட்டிக் கொள்ளாமல், "அதனாலே, ஆன்ட்டியை உடைத்தால் பரவாயில்லை என்று, என் தலையில் பழியைப் போட்டுவிட்டாயாக்கும்!" என்றாள் கிண்டலாக.

ஒரு கணம் பேந்த விழித்துவிட்டு, "நீ பெரிய ஆள் இல்லையா? பெரியவர்களை உடைக்கவே முடியாது, அடித்தாலும் திருப்பி அடிப்பாங்களோன்னு பயந்து, அடிக்க மாட்டாங்கன்னு, மிச்சி சொன்னானே! அதனாலேதான், அப்படிச் சொன்னேன்!" என்றவள் சந்தனாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "உன்னை உடைக்கலை! ஆனால், அப்பா உன்னை அடித்தாரா?" என்று கண்கள் விரியக் கவலையுடன் கேட்டாள் குழந்தை.

இல்லை என்பது போலத் தலையசைத்தவளுக்கு, சின்னப் பிள்ளைகள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. காரணகாரியம் கண்டுபிடித்து, இப்படித்தான் என்று முடிவு வேறு!

ஆனால், கோபத்தில் போனை உடைப்பது என்றால்?

யார் மீதோ உள்ள கோபத்துக்கு போன் பலியாகியிருக்க வேண்டும்!

யார் மீது? என்ன கோபம்?

அர்த்தமற்று, அவளிடம் ஆத்திரப்படுகிறானே, அது போலத்தானா?

அல்லது, அதற்கு அர்த்தம் இருக்கிறதா?

தீபனின் திருமணமும், மனைவியின் பிரிவும், பத்திரிகையாளர்களால், பெரிய பிரச்சினை ஆகியிருக்குமா?

அவனுடைய மனைவியின் பிரிவு பற்றி, ஒரே ஒருதரம் குறிப்பிட்டது தவிர, மீனாட்சி ஆன்ட்டியும், மகனின் வாழ்வு பற்றி எதுவும் சொன்னது இல்லை!

தன்னைப் பற்றி எதுவும், யாரிடமும் சொல்லக் கூடாது என்ற மகனின் விருப்பத்துக்கு மதிப்புக் கொடுக்கிறார் என்பது, சந்தனாவின் ஊகம்!

மனதை மறையாது அவளிடம் பேசும் ஆன்ட்டியே சொல்லாத போது, அதைத் துருவிக் கேட்டு, அவருக்குத் தருமசங்கடத்தை ஏற்படுத்தச் சின்னவளுக்கும் விருப்பம் இல்லை!

அத்தோடு, மீனாட்சி ஆன்ட்டியுடைய மகன் என்பது தவிர, தீபனுக்கும் அவளுக்கும் என்ன இருக்கிறது?

ஆன்ட்டியே சொல்லுகிற மாதிரி, அவனது பணி பற்றிய அழைப்பு வந்ததும், திரும்பவும் யுஎஸ்சுக்கு ஓடப் போகிறான் என்பதும் நிச்சயம்! அப்படித் திட்டம் இல்லையென்றால் தான், மருத்துவமனை நிர்வாகத்தை தாய்க்கு உதவியாக நேரில் போய்ப் பார்த்திருப்பானே!

அவன் இங்கே தங்கப் போவதில்லை என்பதற்கு, இது ஒன்றே, நிச்சயமாக சான்று!

அப்படியே, இந்தியாவிலேயே அவன் இருப்பதானாலுமே, இங்கே உள்ள கோடிக் கணக்கான மனிதர்களில், அவனும் ஒருவனாக இருக்கப் போகிறான்!

அவனைப் பற்றி யோசித்து, மனதைக் குழப்பிக் கொள்ளுவானேன்?

அதை விடவும், நல்ல தங்குமிடம் ஒன்றைக் கண்டு பிடித்துப் போய்விட்டால், தீபனுக்கும் அவளுக்கும் தொடர்பே இருக்கப் போவதில்லை!

முதலில் அதைத்தான் பார்க்க வேண்டும்!

சந்தனா யோசித்து ஒரு முடிவுக்கு வருகையில், "என் மேலே கோபமா ஆன்ட்டி?" என்று கேட்டது ஒரு சின்னக் குரல்!

திகைப்புற்றுப் பார்த்தால், தன் பொம்மையை இறுகக் கட்டி அணைத்தபடி, அவள் முகத்தையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் சிறுமி!

பொம்மையை அவள் அணைத்திருந்த விதம், சந்தனாவை ஒரு மாதிரித் தாக்கியது!

ஏதோ, தனக்கு வேறு துணையே இல்லாத மாதிரி...

இவளை என்ன செய்வது?

சட்டென மனம் உருக, அவளை அருகிழுத்து, "அப்படி யார் சொன்னது? மித்ராக் குட்டிகிட்டே கூட யாருக்காவது கோபம் வருமா என்ன? மித்ரா என்றாலே என்ன அர்த்தம் தெரியுமா? சினேகிதி! உலகத்தில் எல்லோருமே, உன்னிடம் நட்பாகத்தான் இருப்பார்கள்! அதாவது, நீ எனக்கு சினேகிதி. நான் உனக்குச் சினேகிதி!" என்றுரைத்து, சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டாள் சந்தனா!

சிறுமியும் சந்தோஷமாகப் பதிலுக்கு அவளை முத்தமிட, அவர்களுக்கிடையே, ஒரு ரகசிய ஒப்பந்தம் அமுலாகத் தொடங்கிற்று!

அன்றிலிருந்து சந்தனா வீட்டில் இருக்கும் சமயங்களில் தீபன் வேலை என்று அவனது அறைக்குள் புகுந்துவிட்டான் என்றால், மித்ரா விழுந்தடித்துக் கொண்டு, சந்தனாவிடம் ஓடி வந்து விடுவாள்.

அது, இது என்று சிறுமி ஏதாவது தன் யுஎஸ் தோழர்கள், அவர்களோடு சேர்ந்து விளையாடும் இடம், அங்கே இருக்கும் விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் பற்றிச் சொல்லுவாள்.

பொறுமையாகக் கேட்பதோடு, இங்குள்ளது பற்றி சந்தனா சொல்லுவாள்.

படக்கதைப் புத்தகங்களை வாங்கி வந்து, இதிகாசக் கதைகளைக் கற்றுக் கொடுத்தாள். அவளுடைய தந்தை செய்தது!

கிரேயான், க்ளே வாங்கி வந்து கொடுக்கவே, படங்கள் வரைவதும், உருவங்கள் செய்வதும், உற்சாகமான பொழுது போக்காயிற்று!

முதலில், மீனாட்சி அம்மாள் சத்தம் கேட்டாலும் மித்ரா ஓடி விடுவாள்.

ஆனால், விரைவிலேயே பாட்டி தன் பக்கம் என்று தெரிந்து விடவும், அவ்வப்போது, அவளையும் விளையாட்டில் சேர்த்துக் கொண்டாள் பேத்தி!

ஆனால் எல்லாமே, எப்போதுமே வெகு சுமுகமாகவே இருந்தது என்று சொல்ல முடியாது!

பெரும்பாலும் தனித்திருந்து வளர்ந்தவள் என்பதால், சில பிடிவாதங்கள், முசுட்டுத்தனம், காட்டுக் கத்தல் எல்லாம் மித்ராவுக்கும் இருக்கவே செய்தது!

இவள் நம்மிடம் பிரியமாக இருக்கிறாளே, இன்னும் எவ்வளவு சலுகை எடுத்துக் கொள்ளலாம் என்று, குழந்தைகளுக்கே உரிய முறையிலும், மித்ரா நடந்துகொள்ளத்தான் செய்தாள்.

ஆனால், பள்ளி ஆசிரியை என்கிற முறையில், இந்த மாதிரிப் பிள்ளைகளையும் சமாளித்துப் பழகியிருந்ததால், மித்ராவைச் சமாளிப்பதும், சந்தனாவுக்குக் கடினமாக இருக்கவில்லை!

மீனாட்சிக்குச் சந்தனாவிடம் நம்பிக்கை இருந்ததால் இதில் தலையிடுவது இல்லை!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 23, 2011 5:26 pm

தீபன், அவனது கம்ப்யூட்டர் வேலையில் முழுகிவிட்டால், அவனை வெளியே பார்க்கவே முடியாது என்பதால், அவனது தலையீடும் இராது போகவே, கண்டிப்பும் கனிவுமாகச் சந்தனா, மித்ராவைக் கவனித்ததில், சிறுமியின் உடலும் தேறலாயிற்று!

அத்தோடு, ஒரே வீட்டில் இருக்கையில், ஒருவரோடு ஒருவர் பேசாமலே இருப்பது கடினம் என்று தீபனுக்குமே புரிந்திருந்ததால், சில பொதுவான நேரத்துக்கு உரையாடல்களை, அவனும் தடுக்க முயன்றதில்லை.

அதனால், தீபன் முன்னிலையிலும் கூட, ஒரேயடியாக அன்னியமாகக் காட்டிக் கொள்ளாமல், ஓரளவுக்குச் சந்தனாவும் மித்ராவும் சாதாரணமாகப் பேச முடிந்தது! ஆனால், அவன் அறியாமல் அறைக்குள் கொட்டமடிப்பதை மட்டும் இருவருமே அவன் அறியக் காட்டிக் கொள்வதில்லை!

அன்று இரு பெண்களும் மட்டுமாகச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம்!

தீபன் வேலையிலிருந்து வெளியே வரவில்லை!

மீனாட்சி, மருத்துவமனை வேலையாகச் சென்றவள், இன்னமும் திரும்பியிருக்கவில்லை!

அன்றையச் சிற்றுண்டி, புட்டு!

பொதுவாக இங்குள்ள சிற்றுண்டி வகைகளை பிடிக்காவிட்டால், ரொட்டியில் வெண்ணை, ஜாம் தடவிக் கொடுத்துவிட்டால், மித்ரா சந்தோஷமாகச் சாப்பிட்டு விடுவாள்.

அவளே, இப்படிச் சாப்பிடு நன்றாக இருக்கும் என்று சந்தனா சொன்னால், அவளிடமிருந்து வாங்கி ருசி பார்த்துவிட்டு, உரிய அளவு உண்ணவும் பழகி இருந்தாள்.

ஆனால், அன்றைக்கு என்னவோ, தனக்கு எதுவும் வேண்டாம், ஃபிரிஜ்ஜில் இருக்கும் சாக்லேட்டுகள் அத்தனையும் வேண்டும். பார்க்கவே நன்றாக இல்லாத புட்டுக்குப் பதிலாகச் சாக்லேட்டைத்தான் சாப்பிடப் போகிறேன் என்று அடம் பிடித்தாள் மித்ரா!

தானாகச் சொல்லிப் பார்த்துவிட்டு, சமையல்காரம்மா, சந்தனாவிடம் முறையிட்டாள்.

சந்தனா மென்மையாகச் சொல்லச் சொல்ல, மித்ராவின் பிடிவாதம் அதிகம் ஆயிற்று!

ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து, "இந்தப் புட்டைத் தான் சாப்பிட வேண்டும்! பிடிக்காவிட்டால், ரொட்டி, சாக்லேட் கிடையவே கிடையாது!" என்று சாவி கொண்டு பூட்டக் கூடிய, அந்தப் பழைய காலத்து ஃப்ரிஜ்ஜைப் பூட்டிச் சாவியைச் சமையல்காரம்மாவிடம் சந்தனா கொடுத்துவிட, மித்ரா அழத் தொடங்கினாள்!

"ஷ்! என்ன மித்ரா..." என்று சந்தனா அவளை அமைதிப் படுத்த முயலுகையில், "அவள் கேட்பதைக் கொடுத்துவிட வேண்டியதுதானே?" என்று தீபனின் குரல் கேட்கவும், திகைப்பில் சந்தனா துள்ளிக் குதிக்காத குறை எனலாம்!

தந்தையைக் கண்டதும், மித்ரா சலுகையாக, இன்னும் அழுதாள்.

"எலிசா ஆன்ட்டி, எனக்கு எவ்வளவு சாக்லேட் கேட்டாலும் கொடுப்பாளே! சந்தனாவையும் கொடுக்கச் சொல்லு!" என்று அழுதாள் சிறுமி!

சந்தனா முகத்தில் ஐயம் தெரிந்ததோ, என்னவோ, "உடனே, தப்பாக நினைக்க வேண்டாம்! எலிசா என் ஏஜண்ட்! என்னை விடப் பத்து வயது பெரியவளும் கூட!" என்று எரிச்சலுடன் மொழிந்தான் தீபன்!

அத்தோடு நிறுத்தாமல், "பெரிய ஒழுக்க சிகரம்! தன்னைத் தவிர, மற்ற எல்லோருமே, மோசம் என்று எண்ணிக் கொள்வது! அல்லது, தன்னைப் போல என்றோ, என்னவோ?" அவள் காதுகளில் விழுமாறு, தெளிவாகவே முணுமுணுத்தான்!

ஆத்திரமுற்று, "சாக்லேட்டை அள்ளி அள்ளிக் கொடுப்பாளாமா? அப்படியானால், ஆன்ட்டி அன்று சொன்னது போல, அவள் உங்களைக் கெடுப்பதோடு நில்லாமல், மித்ராவையும் கெடுக்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்!" என்று சுள்ளெனச் சொல்லிவிட்டாள் சந்தனாவும்!

"ஏய், ஜாக்கிரதையாகப் பேசு! மித்ராவுக்கு விபத்து நடந்த போது, உடனே வந்து செயல்பட்டு, அவளது உயிரைக் காப்பாற்றியது, எலிசாதான்! அவளுக்கு இல்லாத அக்கறையும் அன்பும், உனக்கு இருக்க வாய்ப்பில்லை! வெறும் பந்தாக் காட்ட வேண்டாம்!" என்று கோபத்துடன் தூக்கி எறிந்து பேசினான் அவன்!

உண்மையான அக்கறையை, அவன் அலட்சியமாகப் பேசியது எரிச்சலூட்ட, "அப்படி அவள் வந்து காப்பாற்றுகிற நிலையில் மகளை விட்டுவிட்டு, நீங்கள் அப்படி என்ன வெட்டி முறித்துக் கொண்டு இருந்தீர்களாம்?" என்று குத்தலாகக் கேட்டு, அவனை மட்டம் தட்டினாள் அவள்.
அவள் மட்டந் தட்டத்தான் சொன்னாள்! ஆனால், உண்மை சுடும் அல்லவா?

சூடு தாங்காமல், அவளிடம் தப்புத் தேடினான் தீபன்.

"அப்படியானால், அதைத் தெரிந்து கொள்ளத்தான், இத்தனை முயற்சியுமா? என்னவோ, வேலை அது, இது என்று நிஜம் போல அளந்தாயே!" என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, தன் விஷயம் மறக்கப்பட்டு விடப் போகிறதே என்று எண்ணிய மித்ரா "சாக்லேட், சாக்லேட்!" என்று, காலை உதைத்துக் கத்தினாள்!

"அதைக் கொடுத்துதான் தொலையேன்!" என்றான் அவன் எரிச்சலுடன்.

"நல்ல பொறுப்புள்ள தந்தை! இப்படி யாருக்குக் கிடைப்பார்!" என்று ஏளனமாகச் சிலாகித்துவிட்டு, மித்ராவிடம் திரும்பினாள்.

தீபன் ஆத்திரத்துடன் முறைத்ததை, அவள் கண்டுகொள்ளவே இல்லை!

அவனுக்கு முதுகு காட்டித் திரும்பியவள், பள்ளி அனுபவம் கைகொடுக்க, கண்டிப்பான குரலில், "மித்ராம்மா, நீ எவ்வளவோ நல்ல பெண் என்று நினைத்தேன்! இப்படிக் காலை உதைத்துக் கத்துவது, நல்ல பெண்கள் செய்வதா? சொல்லு!" என்று அதட்டிக் கேட்டாள்.

"அது..." என்று ஒரு கணம் தடுமாறிவிட்டு, "ஆனால், நீ சாக்லேட் தரமாட்டேன் என்கிறாயே!" என்று காரணம் சொன்னாள் சிறுமி!

"எப்படித் தருவது? நீ நல்ல பெண்ணாக இருந்தால், அதற்குப் பரிசாகச் சாக்லேட் மாதிரி இனிப்புகளைத் தரலாம்! ஆனால், ஒழுங்காகச் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் போது, எப்படிப் பரிசு கொடுப்பது? அதற்கும் மேலாக, இப்போது மோசமாக வேறு நடக்கிறாயே! இந்த வீட்டில் வேறு யாரும் சாக்லேட் சாப்பிடுவதில்லை! மித்ரா நல்ல பெண். அவளுக்குப் பரிசு கொடுத்துக் கொண்டே இருக்கலாம் என்று நல்ல நல்ல சாக்லேட் எல்லாம் வாங்கி வைத்தால், அதை உனக்குக் கொடுக்க விடாமல், நீயே பண்ணுகிறாயே!"

சற்று விழித்து விட்டு, "ஆனால், எனக்குச் சாக்லேட் சாப்பிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறதே!" என்றாள் சிறுமி.

"சாப்பிடு! முதலில் இந்தச் சிற்றுண்டி எவ்வளவு ருசி தெரியுமா? புட்டரிசி என்று இதற்கென்றே தனியாக உள்ள புட்டரிசி என்ற ஒரு தினுசு அரிசியில் மாவு செய்து, தேங்காய்ப் பூ, நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பு, ஏலக்காய், இனிப்பு எல்லாம் போட்டு, மிகவும் நன்...றாக இருக்கிறது! இந்தப் பலகாரத்தில், நீ இவ்...வளவு வளருவதற்கு வேண்டிய எத்தனை சத்துக்கள் இருக்கிறது, தெரியுமா? இதெல்லாம் சாப்பிட்டால், சீக்கிரமே... உன் அப்பா மாதிரி, உயரமாக வளர்ந்து விடலாமே! சீக்கிரமாகச் சாப்பிட்டு விட்டு, சாக்லேட்டை வாங்கிக் கொள்! வா! சீக்கிரம்!" என்று, சந்தனா நிறைய ஆசை காட்டவும், மித்ரா யோசித்தாள்.

அவளும் வெறும் அழும்பு பிடிக்கும் பெண் அல்ல என்பதால், "அப்படியானால், சாப்பிட்டதும் சாக்லேட் தரணும்!" என்ற நிபந்தனையோடு புட்டை உண்ண வந்தாள்.

"மித்திக் குட்டி நல்ல பெண் என்பதுதான் எனக்குத் தெரியுமே!" என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டு, "கட்டாயம் தருவேன்! ஆனால், இன்னொரு தடவை இப்படிக் காலை உதைத்து அசிங்கமாகக் கத்தினால் அப்புறம், இரண்டு நாட்களுக்குச் சாக்லேட்டே கிடையாது!" என்று அதையும் பிள்ளை மனதில் பதிய வைத்தாள் சந்தனா!

கிண்ணத்தில் தனக்கென்று கொஞ்சம் புட்டை எடுத்து வைத்த தீபன், கீழ்க் கண்ணால் அவர்கள் இருவரையும் ஒரு தரம் பார்த்து விட்டுக் கிண்ணத்துடன் அங்கிருந்து அகன்றான்!



இனி எல்லாமே நீயல்லவோ - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக