புதிய பதிவுகள்
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
by ayyasamy ram Today at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan | ||||
eraeravi | ||||
sureshyeskay |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்வு
Page 1 of 1 •
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள் நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்போது, சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில் தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாய்.
"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.
தினமலர்
பெட்ரோல் மீதான விலை நிர்வாக கட்டுப்பாட்டு முறையை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு கைவிட்டு விட்டதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம், உள் நாட்டில் பெட்ரோல் விலையை, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ள முடியும். அதன்படி, சர்வதேச சந்தையில், இதுவரை இல்லாத வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், பெட்ரோல் விலையை கடந்த ஜனவரி மாதமே உயர்த்த, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டன. ஆனால், ஐந்து மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மத்திய அரசு பிறப்பித்த வாய்மொழி உத்தரவால், விலையை உயர்த்துவது நிறுத்தி வைக்கப்பட்டது.
இப்போது, சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டதால், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 4.99 முதல் 5.01 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. டில்லியில் தற்போது, பெட்ரோல் விலை லிட்டருக்கு 58.37 ரூபாய்.
"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சிவா wrote:
"சர்வதேச விலை நிலவரங்களின்படி பார்த்தால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 9.50 முதல் 10 ரூபாய் வரை உயர்த்த வேண்டும். ஆனால், அதில் பாதியளவுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன' என்று, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். விரைவில், மீண்டும் ஒரு முறை பெட்ரோல் விலை உயர்த்தப்படலாம் என்றும், அவர் மேலும் கூறினார்.
இனி இந்த தேசத்தில் பெட்ரோல் உற்பத்தி
செய்யும் நிறுவனங்களே அதற்கான விலையை நிர்ணயம் செய்யலாம் என்று சமீபத்தில்
மத்திய அரசு அறிவித்த அறிவிப்பின் தொடர் அதிர்வு இன்னும் மக்களுக்குத்
தெரியவில்லை. அல்லது அதை நமது ஊடகங்கள் மக்களுக்கு தெரியப் படுத்த
விரும்பவில்லை. அறிவிக்கப்படாமல் பல திட்டங்கள் நடைமுறைக்குள்ளாவது போல
எண்ணெய் நிறுவனங்களின் அரசியல் குறித்தும் மக்களுக்கு தெரிவதில்லை. ஆனால்
இந்த முடிவு 2002 ஆம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டு தற்போதுதான் நடைமுறைக்கு
வருகிறது. நமது இந்திய நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 74 சதமானம்
வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 26 சதமானம்
இந்தியாவிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் இந்த 26 சதமான கச்சா
எண்ணெய் வளத்தை அரசு தனது பொதுத் துறை நிறுவனத்திடம் கொடுத்து வினியோகம்
செய்யாமல் அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், எஸ்ஸார்
நிறுவனத்திற்கும் தாரை வார்த்துள்ளது. அவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு
ஏற்ப விலையை தீர்மானிக்க திட்டமிட்டு அரசுக்கு நெருக்குதல் கொடுத்து
அதையும் இப்போது சாதித்து-விட்டனர். சர்வதேச சந்தையில் கச்சாப்பொருளின்
விலையேற்றத்தால் இங்கு எண்ணெய் விலை உயர்வதாக ஒரு பொய்யான வாதம்
ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அப்படியே எனினும் வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் மீது பலவரிகள் விதிக்கப்பட்டு இந்த
விலைக்கு விற்கப்படுகிறது. இந்திய தனியார் நிறுவனங்கள் உள்நாட்டில்
கிடைக்கும் எண்ணெயும் அதே அளவுக்கு விலை-வைத்து விற்று கொள்ளையடிப்பது
அநியாயம் இல்லையா?
நட்டம் என்ற பொய்:
இந்த ஆண்டில்
மூன்றாவது முறையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை
உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின்
விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்கள் கடுமையான இழப்புகளை
சந்திக்கின்றன, மானியம் அதிகம் வழங்குவதால் அரசுக்கு கடுமையான நட்டம்
ஏற்படுகிறது இதனால் தவிர்க்கமுடியாமல் கொஞ்சம் விலை உயர்வு ஏற்படுகிறது
என்று காரணம் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை
குறைந்தால் எண்ணெய் நிறுவனங்களும் அரசும் விலையை குறைப்பது கிடையாது.
விலையை ஏற்றுவதைத் தவிர இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நட்டம் காரணமாக
விலையேற்றம் என்கிறார்களே உண்மை என்ன?
நட்டம்
என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறுவது உண்மையா என்று பார்த்தால்
அதில் கொஞ்சமும் உண்மை கிடையாது. லாப வருவாய் இழப்புதான் இவர்களால் நட்டம்
என காட்டப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திலேயே இயங்குகின்றன.
2009_2010 ஆம் நிதியாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 10,200 கோடியும்,
பாரத் பெட்ரோலியம் 1,500 கோடியையும், ஹெச்.பி.சி.எல் 1,300 கோடியையும்,
ஓ.என்.ஜி.சி 16,700 கோடியையும், கைல் 3,140 கோடியையும் லாபமாக
ஈட்டியுள்ளனர் இவை அறிவிக்கப்பட்டதால் எவ்வளவு லாபம் வெளியில் தெரிகிறது.
ஆனால் அம்-பானி மற்றும் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்கள் அடித்த கொள்ளை லாபம்
எவ்வளவு என்று வெளியில் தெரியாது. வருமானம் இப்படி இருக்க எண்ணெய்
நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன, அரசுக்கு கடுமையான இழப்பு என்று ஏமாற்றுவது
அரசுக்கு மக்கள் குறித்த கேவலமான சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.
மற்றொரு
கணக்கும் இருக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு
பேரல் 77 டாலர் என்று வைத்துக்கொண்டால். அதாவது 160 லிட்டர் கச்சா எண்ணெய்
விலை 3619 ரூபாய். அப்படி எனில் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 22 ரூபாய்
அறுபதுகாசு. இந்த கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்
உள்ளிட்ட பொருட்களும் பாரபின் மெழுகும் பிரித்தெடுத்தபின் எஞ்சியிருப்பது
சாலை போட தாராக பயன்படுகிறது. அதாவது இதில் கழிவு என்பதே கிடையாது. 23
ரூபாயில் இத்துனை பொருட்களை தயாரித்து பிறகு நட்டம் எனில் அது எத்துனை
பித்தலாட்டம். 55 ரூபாய்க்கு பெட்ரோலை விற்பனை செய்வது எவ்வளவு பெரிய பகல்
கொள்ளை.
இதனால் அரசுக்கு எண்ணெய்
நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபவிகிதம் ஆண்டுக்காண்டு பெருகிவருகிறது.
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி, பங்குத்தொகை, காப்புரிமை தொகை என 2002
_03 இல் 64,595 கோடி அரசுக்கு வருமானம். இது 2004_05 இல் 77,692 கோடியாக
உயர்ந்து 2009_10 ஆண்டில் 1,00,000 (ஒரு லட்சம்) கோடியாக உயர்ந்துள்ளது.
இந்திய அரசின் ஒட்டு மொத்த வரிவசூலில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான
வரிவசூல் மட்டும் ஐந்தில் இரண்டு மடங்காகும். இந்த சூழலில்தான் நட்டம்
என்று கதையளக்கின்றனர்.
ஏன் விலையேற்றம்:
சர்வதேச சந்தையில்
விலையேறுவதும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதும்
விலையேற்றத்திற்கு காரணமல்ல. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியால்
தான் விலையேறுகிறது. இன்று பெட்ரோலியப் பொருட்களில் 52 சதம் வரியாக மத்திய,
மாநில அரசுகளுக்கு மக்கள் தண்டம் கட்டி வருகின்றனர். இந்த வரி இல்லை எனில்
பெட்ரோலை நாம் லிட்டர் 23 ரூபாய்க்கு வாங்க முடியும். ஆனால் மக்கள்
தலையில் வரி-யைக்கட்டி வேறு வழியில்லை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நட்டு
மக்களுக்கு ஊடகங்களில் நமது பிரதமரும் அமைச்சர் பெருமக்களும் உரையாற்றிக்
கொண்டுள்ளனர். நம்மிடம் 100 ரூபாயை வரி என்று கொள்ளையடித்து 25 ரூபாய்
மானியம் கொடுத்துவிட்டு பார்த்தீர்களா மானியம் கொடுக்கிறோம் என்கின்றனர்.
இதனால்தான் நட்டம் என்கின்றனர். யார் யாருக்கு மானியம் தருகிறார்கள் என்பது
புரியவில்லையா? கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய பெரு
நிறுவனங்-களுக்கு கம்பெனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் அளித்த
சலுகை 80,000 கோடியாகும். இது தவிர கலால் வரி, சுங்க வரி போன்ற வரி
விதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மொத்தமாக 4,19,786
கோடியாகும். கிட்டத்தட்ட 5 லட்சம் கோடியை பெரு முதலாளிகளுக்கு சலுகை யாகக்
கொடுக்கும் நமது அரசாங்கம், மக்களிடம் கொள்ளையடித்து எங்கு கொடுக்கிறது
பாருங்கள்.
அடிக்கடி அரசாங்கம்
விலையை உயர்த்தினால் அது தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் தற்போது கிரிட்
பாரிக் பரிந்துறை என்ற பெயரில் இந்த விலை நிர்ணயத்திலிருந்து அரசின்
கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி எண்ணெய் நிறுவனங்கள் தங்களது
தேவைக்கு ஏற்ப விலையை தீர்மானிக்கலாம். அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை
சர்வதேச சந்தையில் மாறும் விலைக்கு ஏற்ப இவர்கள் விலையைமாற்றிக்கொண்டே
இருப்பார்கள். அப்படி எனில் எதற்கு அரசாங்கம் என்ற நமது கேள்வியில் நியாயம்
இல்லாமல்இல்லை. இந்த எண்ணெய் நிறுவனங்கள் லாபம் மட்டும் அரசுக்கு வேண்டும்
ஆனால் மக்களை பற்றி கவலைப்பட அவர்கள் தயாரில்லை. இந்திய நாட்டில்
இருக்கின்ற 80 சதமான மக்கள் வறுமையில் உழலும் போது அவர்களுக்கு நிவாரணம்
அளிக்க துப்பில்லாத அரசுகள் இந்திய நாட்டின் பெருமுதலாளிகளுக்கு மேலும்
மேலும் சலுகைகளை வழங்குவது அவர்களின் வர்க்க குணத்தின் வெளிப்பாடு.
போராட்டங்களே தீர்வு:
பெட்ரோல் மீதான விலை உயர்வு
என்பது ஒரு சங்கிலித் தொடரைப் போல விலைவாசியை அப்படியே பாதிக்கும்.
சரக்கு’கட்டண உயர்வு என்ற பெயரில் சாமான்யர்கள் வாங்கும் குண்டூசி துவங்கி
உணவுப்பொருட்கள் வரை தாக்கும். இதில் பாதிக்கப்போவது ஆட்சியாளர்களும்
பெருமுதலாளிகளும் அல்ல. “விலைவாசி ஏறும் போது சாமான்யர்கள், ஏழை மக்கள்
அவதிப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன்’’ என பிரணாப் முகர்ஜி
நாடாளுமன்றத்தில் பேசி பசப்புவது யாரை ஏமாற்ற என்பது புரியாததல்ல. இத்துனை
அக்கரை கொண்டவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் ஆட்டோ, பேருந்தில்
பயணம் செய்யும் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு 14.78 சதம் டீசலுக்கு
4.75 சதம் விலையை உயர்த்தியவர் பணக்காரர்கள் பயன்படுத்தும் விமானங்களுக்கு
இதைவிட வரியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் விமானங்களுக்கான
பெட்ரோலுக்கு 3.60 ரூபாய் மட்டுமே உயர்த்தினார். இதுதான் அல்லல் படும்
மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய செய்தி. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசாங்கம் எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல்
அலைபாயும் குதிரையைப்போல செயல்படுகிறது. கடந்த ஆட்சிகாலத்தில் இடதுசாரிகள்
இவர்களை கொஞ்ச மேனும் கட்டுப்படுத்தினர் ஆனால் அவர்களது பலம் குறைந்தது
இந்திய நாட்டின் முதலாளி களுக்கு மிகவும் வசதியாக மாறி-விட்டது. இந்த
அரசாங்கம் தாங்கள் நினைக்கும் அனைத்தையும் மக்களுக்கு எதிராக செய்து
வருகின்றனர். இதை தடுக்க ஒரே வழி நமது மக்கள் வீதியில் வந்து
போராடுவதுதான். மக்கள் வீதியில் அணிதிரள பெட்ரோல் அரசியலில் உள்ள உண்மையை
அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். நம்மிட மிருந்து கொள்ளையடித்து அதில் ஒரு
சிறு பகுதியை மானியம் என்ற பெயரில் நமக்கே கொடுப் பதை, சர்வதேச சந்தை
என்று ஏமாற்றுவதை, இந்திய நாட்டின் எண்ணெய் வளங்களை தனியார் பெரு
முதலாளிகளிடம் கொட்டிக்கொடுத்ததை, பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் எண்ணெய்
நிறூவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக பொய் சொல்வதை உரக்கப் பேசி போராட்டப்
பதாகையை உயர்த்திப்பிடிப்பதுதான் வாழ்க்கையை பாது காத்திட ஒரே வழி.
நன்றி: மானுட விடுதலை
செய்யும் நிறுவனங்களே அதற்கான விலையை நிர்ணயம் செய்யலாம் என்று சமீபத்தில்
மத்திய அரசு அறிவித்த அறிவிப்பின் தொடர் அதிர்வு இன்னும் மக்களுக்குத்
தெரியவில்லை. அல்லது அதை நமது ஊடகங்கள் மக்களுக்கு தெரியப் படுத்த
விரும்பவில்லை. அறிவிக்கப்படாமல் பல திட்டங்கள் நடைமுறைக்குள்ளாவது போல
எண்ணெய் நிறுவனங்களின் அரசியல் குறித்தும் மக்களுக்கு தெரிவதில்லை. ஆனால்
இந்த முடிவு 2002 ஆம் ஆண்டிலேயே எடுக்கப்பட்டு தற்போதுதான் நடைமுறைக்கு
வருகிறது. நமது இந்திய நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 74 சதமானம்
வெளியிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. மீதமுள்ள 26 சதமானம்
இந்தியாவிலேயே கிடைக்கிறது. இந்தியாவில் கிடைக்கும் இந்த 26 சதமான கச்சா
எண்ணெய் வளத்தை அரசு தனது பொதுத் துறை நிறுவனத்திடம் கொடுத்து வினியோகம்
செய்யாமல் அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், எஸ்ஸார்
நிறுவனத்திற்கும் தாரை வார்த்துள்ளது. அவர்கள் அவர்களின் விருப்பத்திற்கு
ஏற்ப விலையை தீர்மானிக்க திட்டமிட்டு அரசுக்கு நெருக்குதல் கொடுத்து
அதையும் இப்போது சாதித்து-விட்டனர். சர்வதேச சந்தையில் கச்சாப்பொருளின்
விலையேற்றத்தால் இங்கு எண்ணெய் விலை உயர்வதாக ஒரு பொய்யான வாதம்
ஆட்சியாளர்களால் முன்வைக்கப்படுகிறது. அப்படியே எனினும் வெளிநாட்டிலிருந்து
இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் மீது பலவரிகள் விதிக்கப்பட்டு இந்த
விலைக்கு விற்கப்படுகிறது. இந்திய தனியார் நிறுவனங்கள் உள்நாட்டில்
கிடைக்கும் எண்ணெயும் அதே அளவுக்கு விலை-வைத்து விற்று கொள்ளையடிப்பது
அநியாயம் இல்லையா?
நட்டம் என்ற பொய்:
இந்த ஆண்டில்
மூன்றாவது முறையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை
உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு வழக்கம் போல சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின்
விலை உயர்ந்துவிட்டது, பெட்ரோலிய நிறுவனங்கள் கடுமையான இழப்புகளை
சந்திக்கின்றன, மானியம் அதிகம் வழங்குவதால் அரசுக்கு கடுமையான நட்டம்
ஏற்படுகிறது இதனால் தவிர்க்கமுடியாமல் கொஞ்சம் விலை உயர்வு ஏற்படுகிறது
என்று காரணம் கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை
குறைந்தால் எண்ணெய் நிறுவனங்களும் அரசும் விலையை குறைப்பது கிடையாது.
விலையை ஏற்றுவதைத் தவிர இவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நட்டம் காரணமாக
விலையேற்றம் என்கிறார்களே உண்மை என்ன?
நட்டம்
என்று அரசும் எண்ணெய் நிறுவனங்களும் கூறுவது உண்மையா என்று பார்த்தால்
அதில் கொஞ்சமும் உண்மை கிடையாது. லாப வருவாய் இழப்புதான் இவர்களால் நட்டம்
என காட்டப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் லாபத்திலேயே இயங்குகின்றன.
2009_2010 ஆம் நிதியாண்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 10,200 கோடியும்,
பாரத் பெட்ரோலியம் 1,500 கோடியையும், ஹெச்.பி.சி.எல் 1,300 கோடியையும்,
ஓ.என்.ஜி.சி 16,700 கோடியையும், கைல் 3,140 கோடியையும் லாபமாக
ஈட்டியுள்ளனர் இவை அறிவிக்கப்பட்டதால் எவ்வளவு லாபம் வெளியில் தெரிகிறது.
ஆனால் அம்-பானி மற்றும் எஸ்ஸார் எண்ணெய் நிறுவனங்கள் அடித்த கொள்ளை லாபம்
எவ்வளவு என்று வெளியில் தெரியாது. வருமானம் இப்படி இருக்க எண்ணெய்
நிறுவனங்கள் நட்டம் அடைகின்றன, அரசுக்கு கடுமையான இழப்பு என்று ஏமாற்றுவது
அரசுக்கு மக்கள் குறித்த கேவலமான சிந்தனையின் வெளிப்பாடு ஆகும்.
மற்றொரு
கணக்கும் இருக்கிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு
பேரல் 77 டாலர் என்று வைத்துக்கொண்டால். அதாவது 160 லிட்டர் கச்சா எண்ணெய்
விலை 3619 ரூபாய். அப்படி எனில் ஒரு லிட்டர் கச்சா எண்ணெய் விலை 22 ரூபாய்
அறுபதுகாசு. இந்த கச்சா எண்ணெயிலிருந்து பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய்
உள்ளிட்ட பொருட்களும் பாரபின் மெழுகும் பிரித்தெடுத்தபின் எஞ்சியிருப்பது
சாலை போட தாராக பயன்படுகிறது. அதாவது இதில் கழிவு என்பதே கிடையாது. 23
ரூபாயில் இத்துனை பொருட்களை தயாரித்து பிறகு நட்டம் எனில் அது எத்துனை
பித்தலாட்டம். 55 ரூபாய்க்கு பெட்ரோலை விற்பனை செய்வது எவ்வளவு பெரிய பகல்
கொள்ளை.
இதனால் அரசுக்கு எண்ணெய்
நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் லாபவிகிதம் ஆண்டுக்காண்டு பெருகிவருகிறது.
பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரி, பங்குத்தொகை, காப்புரிமை தொகை என 2002
_03 இல் 64,595 கோடி அரசுக்கு வருமானம். இது 2004_05 இல் 77,692 கோடியாக
உயர்ந்து 2009_10 ஆண்டில் 1,00,000 (ஒரு லட்சம்) கோடியாக உயர்ந்துள்ளது.
இந்திய அரசின் ஒட்டு மொத்த வரிவசூலில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான
வரிவசூல் மட்டும் ஐந்தில் இரண்டு மடங்காகும். இந்த சூழலில்தான் நட்டம்
என்று கதையளக்கின்றனர்.
ஏன் விலையேற்றம்:
சர்வதேச சந்தையில்
விலையேறுவதும், எண்ணெய் நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதும்
விலையேற்றத்திற்கு காரணமல்ல. மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியால்
தான் விலையேறுகிறது. இன்று பெட்ரோலியப் பொருட்களில் 52 சதம் வரியாக மத்திய,
மாநில அரசுகளுக்கு மக்கள் தண்டம் கட்டி வருகின்றனர். இந்த வரி இல்லை எனில்
பெட்ரோலை நாம் லிட்டர் 23 ரூபாய்க்கு வாங்க முடியும். ஆனால் மக்கள்
தலையில் வரி-யைக்கட்டி வேறு வழியில்லை பொறுத்துக் கொள்ளுங்கள் என்று நட்டு
மக்களுக்கு ஊடகங்களில் நமது பிரதமரும் அமைச்சர் பெருமக்களும் உரையாற்றிக்
கொண்டுள்ளனர். நம்மிடம் 100 ரூபாயை வரி என்று கொள்ளையடித்து 25 ரூபாய்
மானியம் கொடுத்துவிட்டு பார்த்தீர்களா மானியம் கொடுக்கிறோம் என்கின்றனர்.
இதனால்தான் நட்டம் என்கின்றனர். யார் யாருக்கு மானியம் தருகிறார்கள் என்பது
புரியவில்லையா? கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்திய பெரு
நிறுவனங்-களுக்கு கம்பெனி வரி உள்ளிட்ட நேரடி வரிவிதிப்புகளில் அளித்த
சலுகை 80,000 கோடியாகும். இது தவிர கலால் வரி, சுங்க வரி போன்ற வரி
விதிப்புகளிலிருந்து அளிக்கப்பட்டுள்ள சலுகைகள் மொத்தமாக 4,19,786
கோடியாகும். கிட்டத்தட்ட 5 லட்சம் கோடியை பெரு முதலாளிகளுக்கு சலுகை யாகக்
கொடுக்கும் நமது அரசாங்கம், மக்களிடம் கொள்ளையடித்து எங்கு கொடுக்கிறது
பாருங்கள்.
அடிக்கடி அரசாங்கம்
விலையை உயர்த்தினால் அது தேர்தலில் பிரதிபலிக்கும் என்பதால் தற்போது கிரிட்
பாரிக் பரிந்துறை என்ற பெயரில் இந்த விலை நிர்ணயத்திலிருந்து அரசின்
கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. இனி எண்ணெய் நிறுவனங்கள் தங்களது
தேவைக்கு ஏற்ப விலையை தீர்மானிக்கலாம். அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை
சர்வதேச சந்தையில் மாறும் விலைக்கு ஏற்ப இவர்கள் விலையைமாற்றிக்கொண்டே
இருப்பார்கள். அப்படி எனில் எதற்கு அரசாங்கம் என்ற நமது கேள்வியில் நியாயம்
இல்லாமல்இல்லை. இந்த எண்ணெய் நிறுவனங்கள் லாபம் மட்டும் அரசுக்கு வேண்டும்
ஆனால் மக்களை பற்றி கவலைப்பட அவர்கள் தயாரில்லை. இந்திய நாட்டில்
இருக்கின்ற 80 சதமான மக்கள் வறுமையில் உழலும் போது அவர்களுக்கு நிவாரணம்
அளிக்க துப்பில்லாத அரசுகள் இந்திய நாட்டின் பெருமுதலாளிகளுக்கு மேலும்
மேலும் சலுகைகளை வழங்குவது அவர்களின் வர்க்க குணத்தின் வெளிப்பாடு.
போராட்டங்களே தீர்வு:
பெட்ரோல் மீதான விலை உயர்வு
என்பது ஒரு சங்கிலித் தொடரைப் போல விலைவாசியை அப்படியே பாதிக்கும்.
சரக்கு’கட்டண உயர்வு என்ற பெயரில் சாமான்யர்கள் வாங்கும் குண்டூசி துவங்கி
உணவுப்பொருட்கள் வரை தாக்கும். இதில் பாதிக்கப்போவது ஆட்சியாளர்களும்
பெருமுதலாளிகளும் அல்ல. “விலைவாசி ஏறும் போது சாமான்யர்கள், ஏழை மக்கள்
அவதிப்படுகிறார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன்’’ என பிரணாப் முகர்ஜி
நாடாளுமன்றத்தில் பேசி பசப்புவது யாரை ஏமாற்ற என்பது புரியாததல்ல. இத்துனை
அக்கரை கொண்டவராக இருந்தால் என்ன செய்திருக்க வேண்டும் ஆட்டோ, பேருந்தில்
பயணம் செய்யும் மக்கள் பயன்படுத்தும் பெட்ரோலுக்கு 14.78 சதம் டீசலுக்கு
4.75 சதம் விலையை உயர்த்தியவர் பணக்காரர்கள் பயன்படுத்தும் விமானங்களுக்கு
இதைவிட வரியை அதிகப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் விமானங்களுக்கான
பெட்ரோலுக்கு 3.60 ரூபாய் மட்டுமே உயர்த்தினார். இதுதான் அல்லல் படும்
மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய செய்தி. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசாங்கம் எந்த விதக் கட்டுப்பாடும் இல்லாமல்
அலைபாயும் குதிரையைப்போல செயல்படுகிறது. கடந்த ஆட்சிகாலத்தில் இடதுசாரிகள்
இவர்களை கொஞ்ச மேனும் கட்டுப்படுத்தினர் ஆனால் அவர்களது பலம் குறைந்தது
இந்திய நாட்டின் முதலாளி களுக்கு மிகவும் வசதியாக மாறி-விட்டது. இந்த
அரசாங்கம் தாங்கள் நினைக்கும் அனைத்தையும் மக்களுக்கு எதிராக செய்து
வருகின்றனர். இதை தடுக்க ஒரே வழி நமது மக்கள் வீதியில் வந்து
போராடுவதுதான். மக்கள் வீதியில் அணிதிரள பெட்ரோல் அரசியலில் உள்ள உண்மையை
அவர்களுக்கு சொல்லித்தர வேண்டும். நம்மிட மிருந்து கொள்ளையடித்து அதில் ஒரு
சிறு பகுதியை மானியம் என்ற பெயரில் நமக்கே கொடுப் பதை, சர்வதேச சந்தை
என்று ஏமாற்றுவதை, இந்திய நாட்டின் எண்ணெய் வளங்களை தனியார் பெரு
முதலாளிகளிடம் கொட்டிக்கொடுத்ததை, பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் எண்ணெய்
நிறூவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக பொய் சொல்வதை உரக்கப் பேசி போராட்டப்
பதாகையை உயர்த்திப்பிடிப்பதுதான் வாழ்க்கையை பாது காத்திட ஒரே வழி.
நன்றி: மானுட விடுதலை
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் இனி விலைவாசி ஏறாது என்றல்லவா நினைத்திருந்தேன்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தேர்தலின் தோல்விக்கு அரசு கொடுக்கும் பரிசு இதுதான் !!!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஒரு சிறிய கணக்கு:
1 பேரல் கட்சா எண்ணெய்:113$
இந்தியமதிப்பு:113*45=5085
1 பேரல் கட்சா எண்ணெய்=160 லிட்டர்
1 லிட்டர் விலை:31.78 ரூபாய்
பிரித்துஎடுப்பு செலவு: 1 லிட்டர்= 1 ரூபாய்
மொத்தம் செலவு:32.78ரூபாய்
விளக்கம்:
கட்சா எண்ணெய்யில் கழிவு எண்பதே கிடையாது எண்பது தேறிந்த விடயம்..
கட்சா எண்ணெய்யில் இருந்து கிடைக்கும் பொருள்கள்
1.விமான எரிபொருள் (ஒயிட் பெட்ரோல்)
2.உயர் எரிபொருள் (சூப்பர் பெட்ரோல்)
3.தாழ்வுநிலை எரிபொருள் (அண்லிடட் பெட்ரோல்)
4.டீசல் எரிபொருள்
5.மண் எண்ணெய் (கேரோசின்)
6.பரபின் மொழுகு
7.தார் (சாலை போட பயன்படுவது)
எனவே கழிவு எண்பதே கிடையாது..
வளர்ந்த நாடுகள் பயன்படுத்துவது - உயர் எரிபொருள் (சூப்பர் பெட்ரோல்)
1 லிட்டர்= 35 ரூபாய்
உதாரணம்:
அமெரிக்கா 100% எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடு.
பயன்படுத்துவது உயர் எரிபொருள் (சூப்பர் பெட்ரோல்).
விலை: 1 லிட்டர்= 35 ரூபாய்.
புகை குறைவு.
நாம் பயன்படுத்துவது தாழ்வுநிலை எரிபொருள் (அண்லிடட் பெட்ரோல்).
விலை: 1 லிட்டர்= 65 ரூபாய்.
புகை அதிகம்.
தீர்வு:
இந்தியா 1 லிட்டர் விமான எரிபொருள் (ஒயிட் பெட்ரோல்) எடுக்க ஆகும் செலவு 32.78ரூபாய்
அப்போது நாம் பயன்படுத்தும் மூன்றாம் தர தாழ்வுநிலை எரிபொருள் (அண்லிடட் பெட்ரோல்) விலை என்னவாக இருக்க வேண்டும்?
23-26ரூபாய் மட்டுமே
- Sponsored content
Similar topics
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 உயர்வு!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும்!
» பெட்ரோல் லிட்டருக்கு விலை ரூ3.18, டீசல் ரூ3.09 உயர்வு!
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.80 உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
» இந்திய வரலாற்றில் முதல் முறையாக பெட்ரோல் விலை ஒரே நாளில் லிட்டருக்கு ரூ7.50 உயர்வு
» பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 4 குறையும்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|