புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்னைத் தாலாட்ட வருவாளா?
Page 9 of 11 •
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
First topic message reminder :
இது ஒரு காதல் கதை!
தொடரும்...
இது ஒரு காதல் கதை!
அவள் ஒரு அழகி!
எல்லாப் பெண்களுமே அழகுதான் என்றாலும், அவள் மட்டும் அற்புதமான அழகு!
நல்ல சிகப்பு, அவள் கலருக்குத் தகுந்தவாறு கிளிப் பச்சக் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள். சிரிக்கும் போது, இரண்டு கன்னங்களிலும் விழும் குழி அவளுக்கு மேலும்
அழகு சேர்த்தது. கீழ் உதட்டில் ஒரு சிறிய மச்சம். அவள் தன் உதட்டைக் கடித்து எச்சில் படுத்தும் போது, அந்த மச்சம் பளபளக்கும்! நீண்ட கூந்தல் இல்லை என்றாலும், நல்ல
அடர்த்தியாக இருக்கும்! தலை சீவுவாளா என்றே தெரியாது, எப்போதும் முடிகள் சிலிம்பலாக பறந்து கொண்டே இருக்கும். அதுதான் அவளுக்கு அழகு!
அவள்!... அவள் தான்!... அந்த அழகு தேவதை தான் என் காதலி!
அவள் பெயர் "......"
- Spoiler:
(கொஞ்ச நேரத்திற்கு அந்தப் பெயர் மௌனமாகவே இருக்கட்டும்....)
சில சமயங்களில் அவள் என்னைக் காதலிக்கிறாளா? என்ற சந்தேகம் கூட வருவதுண்டு.
அவள் என்னைக் காதலிக்கும் அளவுக்கு, என்னிடம் அப்படி ஒன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை!
எங்களின் முதல் சந்திப்பு ஒரு பேருந்து நிறுத்தத்தில் தான் ஆரம்பமானது. ஒருநாள் கல்லூரிக்கு செல்ல பேருந்திற்காகக் காத்திருந்தேன். நண்பர்கள் கூட யாரும் வரவில்லை.
கடிகாரத்தில் மணியைப் பார்த்து விட்டு, எதேச்சையாக திரும்பிய போது.....
அந்தக் கண்கள்!... அந்தக் காந்தக் கண்கள்!... என்னைப் பார்ப்பதைத் தடை செய்து கொண்டு வேறுபக்கம் திரும்பியது.
அவள் தான்! சாயம் எதுவும் பூசாத, தனது சிவந்த இதழ்களை எச்சில் படுத்திக் கொண்டாள். கழுத்தில் காதல் சின்னத்தைக் கொண்ட ஒரு செயின் மட்டும், மார்பகத்தில் மௌன
ராகம் பாடிக் கொண்டிருந்தது... காதில் இரண்டு தொங்கல்கள் காதல் ராகத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது... ஏனோ தெரியவில்லை, அவளை 'மீண்டும் ஒருமுறை பார்!'
என்று என் மனது கட்டளையிட்டது! என் மனதைக் கட்டுப் படுத்தினாலும், என் கண்கள் அந்தக் கண்களையே தேடிச்சென்றது!
ஆனால், நான் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் பார்வையைத் தடை செய்து கொண்டாள்... என்னாலும் கூட, அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை!
சிறிது நேரத்தில் பேருந்து வந்து விட, நான் ஏறிக் கொண்டேன். பேருந்தில் செல்லும் போது கூட எனக்கு அவள் நியாபகம் தான்!!..
தொடரும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:தொடருங்கள் நண்பா . ஆவலுடன் காத்து இருக்கிறேன் நான்.
நன்றி!
நான் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் நண்பா. உங்களைத் தான் காணவில்லை!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ஆமாம் நண்பா கொஞ்சம் வேலை காரணமாக வர இயலவில்லை. ஆனாலும் அனைத்து பதிவுகளையும் நான் படித்து கொண்டு வந்தேன்.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:தொடருங்கள் நண்பா . ஆவலுடன் காத்து இருக்கிறேன் நான்.
நன்றி!
நான் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் நண்பா. உங்களைத் தான் காணவில்லை!
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
தொடர்ச்சி-14
தொடரும்...
நண்பர்களே தவறுதலாக இந்தப் பகுதி delete ஆகி விட்டது மீண்டும் எழுதுகிறேன்....
தொடரும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
மிகவும் சோகமாக இருக்கிறது
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:மிகவும் சோகமாக இருக்கிறது
நன்றி.
சோகம் தான் சுகம் நண்பா!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
தொடர்ச்சி-15
தொடரும்...
"சீக்கிரம் போயிட்டு வாங்க கீதன்." என்றாள் லதீபா.
நான் அவளைப் பார்த்தேன். எதையோ ஜாடை காட்டினாள். ஆனால் எனக்கு அது புரியவில்லை. எனவே என்ன என்பது போல நானும் ஜாடையில் கேட்க...
"அடேய்... நான் உங்களுக்கு முன்னாடியே கல்யாணம் ஆனவடா...!" என்றார் என் அம்மா.
"இல்லம்மா அது... "
"போடா! போ..., போயி சீக்கிரமா கார் எடுத்துக் கிட்டு வா. உங்க கிச்சு கிச்சு தாம்பளத்தையெல்லாம் அப்பாரமா வச்சிக்கோங்க. புரியுதா."
லதீபா தனது தலையில் அடித்துக் கொண்டு வெட்கத்தில் புன்னகை சிந்தினாள்...
இதுதான்... இந்த சிரிப்பு தான்... என் லதீபாவின் முகத்தில் நான் கடைசியாக பார்த்த புன்னகை!
லதீபா ஆசைப்பட்டது போல, நாங்கள் நடந்தே கோவிலுக்கு சென்றிருந்தால், ஒருவேளை எங்கள் திருமணம் நடந்திருக்கும்! லதீபாவையும் நான் இழந்திருக்க மாட்டேன்.! ஆனால் விதி... எங்கள் வாழ்க்கையில் சதி செய்து விட்டதே....!
நான் இந்த நிமிடம் வரை நினைத்து நினைத்து கண்ணீர் வடிப்பதெல்லாம், அவளுக்கு என்னோடு வாழவேண்டும் என்றிருந்த ஆசையை நினைத்து தான்! அவளுக்கு எவ்வளவு ஆசைகள் இருந்திருந்தால் இந்த துணிச்சலான நாடகத்தை நடத்தத் துணிந்திருப்பாள்...! கடைசி நிமிடம் வரை அவள் என் பதிலுக்காக காத்திருந்த "அந்தப்பார்வை" இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கின்றது..... கண்ணீர் ததும்பிய "அந்தப்பார்வை"க்குள் எத்தனை ஏக்கங்கள் எனக்குப் புரிந்தது...
ஆனாலும்.... நான் அவளை வேண்டாம் என்று சொல்லிவிட்டேனே...!?
நான் பாவி தானே!?... ஒரு பெண்ணின் உணர்வுகளைக் காயப்படுத்திய கொடுமைக்காரன் தானே!?
அவளுக்கு இருந்த துணிச்சல் எனக்கில்லையே... நான் கோழை தானே!?
எனக்கு புரியவில்லை!
அதற்காகத்தான்... நான் என் வாழ்க்கையை அழித்துக்கொள்ள முடிவு செய்தேன்!(?)
லதீபாவிடம் மீண்டும் ஜாடை காட்டிவிட்டு கார் எடுத்து வரப் புறப்பட்டேன். இப்போது என் அம்மா தன் தலையில் அடித்துக் கொண்டார்... "போடா..."
லதீபா தனது புன்னகையை, அவள் உதடுகளைக் கடித்து மறைக்க முயற்சி செய்தாள். ஆனாலும் அது அழகாக வெளிப்பட்டது. அதை ரசித்துக் கொண்டே வெளியேறினேன்...
லதீபா சொன்னது போலவே கார் கிடைக்க கொஞ்சம் தாமதம் ஆனது. சிறிது நேரத்திற்குப் பிறகு கார் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தேன்... புன்னகை மாறாமல் வீட்டிற்குள் நுழைந்தேன்...
எதிரில் வந்த என் அம்மாவின் முகம் கலவரமாக மாறியிருந்தது...!
"தம்பி... எதுவா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருப்பா... பேசிக்கலாம்!" என்றார் என் அம்மா.
நான் ஒன்றும் புரியாமல் உள்ளே சென்றேன்..
ஒரு ஓரத்தில் சுவற்றில் சாய்ந்து அழுது கொண்டிருந்தாள் என் லதீபா!...
எண்ணக் கண்டதும் திரும்பி என்னைப் பார்த்தாள்! "அந்தப்பார்வை" எனக்குப் புதிதாக இருந்தது!
காதல் ததும்பிய.... மின்னல் மிதந்த... பட்டாம் பூச்சிகளாய் சிறகடித்த அந்தக் கண்களுக்குள், இப்படி ஒரு குத்தும் பார்வையை நான் இதற்கு முன் பார்த்ததில்லை! என்னைப் பிரியும் கடைசி நிமிடம் வரை "அந்தப்பார்வை"யை அவள் வேறு பக்கம் செலுத்தவும் இல்லை. அவளை சந்தித்த முதல் பார்வையில், அவள் என்னை பார்க்கவே தயங்குவாள்... வெட்கப் படுவாள்... ஆனால் இப்போது என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்!
நான் ஒன்றும் புரியாமல், அவளருகில் சென்றேன்...
"என்னாச்சு லதீபா?" என்றேன்.
நான் கேட்டவுடன் அடக்கி வைத்திருந்த அவளது அழுகை, அவள் உதடுகளைக் கடித்து அடக்க முயன்ற போதும் தெறித்துக் கொண்டு வெளிவந்தது... ஓ! வென்று கதறி அழுதாள்...
அவள் அழுததும் என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது...
"என்ன லதீபா... சொல்லு ப்ளீஸ்!" என்றேன். அப்போது...
"தம்பீ!..." என்று என் அம்மா என்னை அழைத்தார். என் அம்மாவின் முகத்திலும் ஒரு மயான அமைதி இருந்தது!
நண்பர்களே... கொஞ்சம் பொறுங்கள்!
எனக்கு இப்போதே என் உயிர் பிரிந்து விடும் போலிருக்கிறது...
நான் கொஞ்சம் வாய்விட்டு அழுதுவிட்டு வருகிறேன்....
தொடரும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
கதை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.. ஆவலுடன் ஈகரைவாசிகள்....
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
மகா பிரபு wrote:கதை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.. ஆவலுடன் ஈகரைவாசிகள்....
ஒரே ஒரு ரசிகரை தொடர்ந்து, அனைவரது மனதிலும் இடம் பிடித்த ஒரே கதை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்....
நன்றி நண்பா!!
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- ANTHAPPAARVAIதளபதி
- பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010
தொடர்ச்சி-16
தொடரும்...
"தம்பீ!... " என்று என் அம்மா என்னை அழைத்தார்.
நான் திரும்பி பார்த்த போது, என் அம்மா பக்கத்து ரூமை நோக்கி கை காட்டினார். அந்த ரூமில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். நான் யாரென்று புரியாமல், என் அம்மாவைப் பார்க்க...
"லதீபாவோட அப்பா!... என்றார் என் அம்மா.
நான் அவரருகில் சென்றேன்....
அவர் முகத்திலும் அதே சோகமும், அதே மயான அமைதியும் தெரிந்தது!
"வாங்க... எப்போ வந்தீங்க?" என்றேன்
அவர் பதிலேதும் கூறாமல், லதீபா பார்த்த அதே குத்தும் பார்வையை என் மீது அவரும் வீசினார்!
"அழாதேம்மா.... அப்பா தானே? இப்ப ஒண்ணும் நடந்திடல... அவருகிட்ட சொல்லாம கல்யாணம் பன்னிக்கறது தப்பும்மா. பெத்தவங்க கோபத்துல ஏதாவது பேசத்தான் செய்வாங்க ..."
"....................................."
"அதான் கீதன் பேசிக்கிட்டு இருக்கான்-ல... நீ கண்ணை துடைச்சிக்கோ. ஒண்ணும் இல்லை... வா நம்ம உள்ளே போகலாம்." என்று என் அம்மா லதீவாவை அழைத்தார்.
ஆனால் லதீபா "வரமாட்டேன்" என்று அடம் பிடித்து, அங்கே இருந்து கொண்டு, என்னையே வெறித்துப் பார்த்தாள்.
அந்தப் பக்கம் லதீபா என்னை வெறித்துப் பார்க்க, இங்கே அவளுடைய அப்பாவும் என்னை வெறித்துப் பார்க்க... இருவருடைய "அந்தப்பார்வை"களும் என்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியதைப் போல இருந்தது!
இப்போது, லதீபாவின் அப்பா என்னைப் பார்த்துக் கேட்டார்,
"ஏன் தம்பி இப்படிப் பன்னீட்டீங்க...?" அந்தக் குரல் ஜீவன் இல்லாமல், நடுக்கத்துடன் வெளிப்பட்டது...
"தப்பா நினைச்சிக்காதீங்க, நீங்க நினைக்கிற மாதரி நான் உங்க பொண்ண கை வீட்டுட மாட்டேன்"
"ஐயோ!... எந்த நேரத்துல என்ன பேசுறீங்க தம்பி? உங்க சந்தோசத்துக்காக நானும் என் சின்னப் பொண்ணும் தூக்குல தொங்கணும்னு எதிர் பாக்குறீங்களா?!!!!
அவர் இப்படிக் கேட்டதும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது!
"அவ தான் சின்னப் பொண்ணு, விவரம் தெரியாதவ! அவளைப்போயி இப்படி ஏமாத்தி கூட்டிக்கிட்டு வந்துட்டீங்களே நீங்க எல்லாம் நல்லா இருப்பீங்களா? என்று அழத்தொடங்கினார்...
"ஐயா நீங்க தப்பா புரிஞ்சி கிட்டு இருக்கீங்க...."
"அடுத்தவங்க குடியைக் கெடுத்து நீங்க வாழணும்னு நினைக்கிறீங்களே... உங்களுக்கெல்லாம் அந்தக் கடவுள் தான் கூலிக் கொடுக்கணும்!"
அவர் இப்படிப் பேசியதும் எனக்கு ஆத்திரம் பொங்கியது...
"இத பாருங்க! மரியாதையா பேசுங்க!... லதீபாவோட அப்பாங்கரதால தான் நான் உங்க கிட்ட இவ்வளவு பொறுமையா பேசிக்கிட்டு இருக்கேன்"
"இல்லன்னா என்னையா பண்ணுவே... அடிப்பியா? அடி... கொல்லு... உன் கையாலயே எங்க எல்லாரையும் கொன்னு புதைச்சிடு...! அப்ப நீ சந்தோஷமா இருப்பியா? இருக்க மாட்டே! சத்தியமா நீ சந்தோஷமா இருக்க மாட்டே!!" என்று அவர் ஒப்பாரி வைக்கும் தோரணையில் சத்தம் போடத் தொடங்கினார்...
"இத பாருங்க.. சொன்னாக் கேளுங்க. நான் உங்க பொண்ணை ஏமாத்திட மாட்டேன். இப்படி சத்தம் போட்டீங்கன்னா... யாராவது பார்த்தா அசிங்கமாயிடும். நாங்கல்லாம் கவுரவமான குடும்பம். சொன்னாப் புரிஞ்சிகங்க"
"ஓ!... யாராவது பாத்தாலே உனக்கு அசிங்க வந்துடும்னு இப்படிப் பயப்படுரியே.... அப்ப என்னை நடு ரோட்டுல நீக்க வச்சி, எல்லாரு செருப்பால அடிக்கிற மாதரி கேள்வி கேப்பாங்களே... அது எனக்கு அசிங்கம் இல்லையா? நான் மட்டும் அந்த அசிங்கத்தோட வாழனும்-னு சொல்லுரியா? இல்ல வாழ்ந்துடுவேண்ணு நினைக்கிரியா?..."
"யோவ்! என்னையா ரொம்ப பேசிக்கிட்டு இருக்கே...! காதலிச்சி கல்யாணம் பன்னிக்கறது அவ்வளவு பெரிய குற்றமாய்யா? எங்க காதலைப் பத்தி உனக்கு என்னையா தெரியும்?... இதுக்கு மேல ஏதாவது மரியாதை இல்லாம பேசினே... கொன்னே போட்டுடுவேன்!" என்று நான் அவரது சட்டையைப் பிடித்து அடிக்க முற்பட்டபோது...
"கீதன்!..." என்று கத்திய லதீபா என்னை கையெடுத்துக் கும்பிட்டு, வேண்டாம் என்பது போல தலயை அசைத்துக் கொண்டு.. தன் தலையில் அடித்துக் கொண்டு அழத்தொடங்கினாள்...
என் அம்மா அவளைப் தடுத்து சமாதானம் செய்து கொண்டிருந்தார்...
லதீபாவின் அப்பா, ஏதோ பைத்தியம் பிடித்தவர் போல என்னை பார்த்து பேசத் தொடங்கினார்..
"அடிய்யா!... அடி! ஏன் நிறுத்திட்டே...? அடி!.. நான் இங்கருந்து போனா, ஒண்ணு என் பொண்ணோட போவேன்... இல்லன்னா பொணமாத்தான் போவேன்! எனக்கு உசுறு பெரிசு இல்லை... மானம் தான் பெரிசு!"
"இத பாருங்க.. திரும்பத் திரும்ப சொல்லுறேன்... உங்க பொண்ணை நான் உயிருக்கு உயிரா காதலிக்கிறேன். சாத்தியமா நான் அவளை ராணி மாதரி பாத்துக்குவேன். தயவு செஞ்சி புரிஞ்சுக்கோங்க...
"த்தூ... இப்படி சொல்ல உனக்கு வெக்கமா இல்லை?..."
எனக்கு ஆத்திரம் அளவு கடந்தது... "இத பாருங்க, வேண்டாம்..! வயசானவ்ருன்னு கூட பாக்க மாட்டேன்... மரியாதையா...."
"என்னையா மரியாதை? அடுத்தவன் பொண்டாட்டியை ராணி மாதரி பாத்துக்குவெண்ணு சொல்லுரியே... நீயெல்லாம் ஒரு மனுசனா?
"அடுத்தவன் பொண்டாட்டியா....?!?!?!" நான் அப்படியே உறைந்து போனேன்....
""ஏன்... உனக்குத் தெரியாதா?... அதனாலதானே இந்தத் திருட்டுக் கல்யாணத்தை நடத்தப் பாக்குரே..."
நான் ஒன்றும் புரியாமல் லதீபாவைப் பார்த்தேன்...
அவள் சுவற்றில் தன் தலையை மோதிக்கொண்டு...
"ஐயோ!.. நான் யாருக்கும் பொண்டாட்டி இல்லை...! நான் யாருக்கும் பொண்டாட்டி இல்லை...!" என்று கதறினாள்.
என் அம்மா எதுவும் பேச முடியாமல் வாயடைத்துப் போய் சிலையாக நின்றார்...
எனக்கு பைத்தியமே பிடித்து விடும் போலிருந்தது!
லதீபாவின் அப்பாவைப் பார்த்து கேட்டேன். "நீங்க என்ன சொல்லுரீங்கண்ணு எனக்குப் புரியலை?"
"என்னையா... நாடகம் ஆடுரியா?.. ஒண்ணும் தெரியாத மாதரி வேஷம் போடுரியா?"
அப்போது லதீபா ஓடுவந்து அவரது காலில் விழுந்து அழுதாள்...
"அப்பா! என்னை மன்னிச்சிடுங்க... அவருக்கு எதுவும் தெரியாது!... நான் அவருகிட்ட எதையும் சொல்லல.. சொல்லல! சொல்லல! சொல்..ல..ல..ப்பா...."
"அடிப்பாவி! சொல்லலையா?... எண்டி இப்படிப் பண்ணினே... இந்தத் துணிச்சல் உனக்கு எப்படிடி வந்திச்சி?"
"அப்பா... எனக்கு கீதன் வேணும்பா!.... நான் அவரோட வாழணும்பா... என்னை விட்டுடுங்கப்பா! என்னை விட்..டு..டு..ங்கப்பா....!"
"என்னம்மா சொல்லுறே?... இந்த அப்பாவோட கவுரவம் உனக்கு பெரிசா தெரியலையா?"
"......................"
"உன் தங்கச்சியோட எதிர்காலத்தை நினைச்சிப் பார்க்கலையா...?"
"ஐயோ... அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா! எனக்கு வேற வழி தெரியலைப்பா... தெரியலைப்பா! தெரியலைப்பா! தெரியலைப்பா!" என்று வேக வேகமாக தனது தலையில் அடித்துக் கொண்டு அழுதாள்...
நான் ஆத்திரத்தோடு கத்தினேன்...
"ஐயோ! முதல்ல ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா!.."
எங்கள் வீடே நிசப்தமானது...
"அப்பாவும் பொண்ணுமா சேர்ந்து என்னை ஏன் இப்படி சித்திரவதை செய்றீங்க?"
"............................"
"இப்ப என்ன நடந்ததுன்னு சொல்லப் போறீங்களா இல்லையா?"
"கீதன்!" என்று என் கையைப் பிடித்தாள் லதீபா...
"நீ பேசாதே...! நான் உங்க அப்பாகிட்ட கேக்குறேன்!"
"ஏன் கீதன்... என் கிட்ட பேச மாட்டீங்களா?"
"நீ சொன்னதை நம்பித்தானே நான் கல்யாணம் வரைக்கும் வந்தேன்? இனிமேல நான் உன் பேச்சை நம்பத் தயாரா இல்லை"
"கீதன்.... நான் உங்களோட வாழணும்னுதானே எல்லாத்தையும் மறைச்சேன்..."
"ஆமா, நீதான் எல்லாத்தையும் மறைச்சிட்டியே..."
"கீதன்!..."
"உங்க அப்பா உன்னை இன்னொருத்தன் பொண்டாட்டின்னு சொல்லுராரு ... நீ இல்லைங்கரே.... யாரை ஏமாத்தத் திட்டம் போடுறே... இதுக்காகத்தான் காதலிக்கும் போது, தொடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டியா?"
நான் இப்படிக் கேட்டதும் லதீபா பத்திரக்காளியாக மாறினாள்...
"கீ...தன்!.... என்னைத் தப்பா நினைச்சீங்கன்னா.... அறுத்துகிட்டு செத்துப் போயிடுவேன்!!" என்று தன் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டாள்!...
தொடரும்...
"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
இதுவரை 4498 முறை பார்க்கப்பட்டுள்ளது.ANTHAPPAARVAI wrote:மகா பிரபு wrote:கதை பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.. ஆவலுடன் ஈகரைவாசிகள்....
ஒரே ஒரு ரசிகரை தொடர்ந்து, அனைவரது மனதிலும் இடம் பிடித்த ஒரே கதை இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்....
நன்றி நண்பா!!
- Sponsored content
Page 9 of 11 • 1, 2, 3 ... 8, 9, 10, 11
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 9 of 11
|
|