புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிழையான பெண் கவிதை


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed May 11, 2011 6:52 pm

பிழையான பெண் கவிதை   Penn2

எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை

தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை

மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்

இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 11, 2011 8:02 pm

சகோ மன்னிக்கவும்

எம்கருக்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனை பிழையென்று சொல்லுமளவு கவிதைகள் படைத்திடக்கூடாது உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் சாலிகான குழந்தைகளாகத்தான் பிறக்கிறது அக்குழந்தைகள் அடையுமிடத்தில்தான் பிழைகள் ஏற்படுகிறது
யாராலும் குறித்துச்சொல்ல முடியாத விடயம் கத்ர்
அவ்வாறு படைத்த இறைவன்தான் பகுத்தறிவையும் மனிதனுக்கு மேலதிகமாக படைத்திருக்கிறான்
சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு மனதின் ஆசைக்கு கட்டுப்பட்டு வழிகெடுபவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லும் வார்த்தை இறைவன் இவ்வாறு எழுதிவிட்டான் என்று
அவ்வாறென்றால் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் தண்டனைகள் எதற்கு
நண்மை தீமை சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் எதற்கு மனிதனை சரிசெய்வதற்குத்தானே

ஆக மனிதனில் பிழையினை வைத்து இறைவன்மீது குற்றம் சொல்வது அடிப்படை ஈமானுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்

இதனை சற்று யோசித்துப்பாருங்கள் நன்றி சகோ.....
ஹாசிம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹாசிம்



நேசமுடன் ஹாசிம்
பிழையான பெண் கவிதை   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Postvcnsethumadhav Wed May 11, 2011 8:06 pm

நண்பா !
கவிதை பிழையன்று ! அதில்
எழுத்துப் பிழையுமில்லை !
கருத்துப் பிழையுமில்லை !
வாசித்தவன் தவறுக்கு
கவிஞனை (இறைவனை ) குற்றப் படுத்தாதே !



பிழையான பெண் கவிதை   677196சேதுமாதவன்.நா பிழையான பெண் கவிதை   677196
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed May 11, 2011 8:18 pm

செய்தாலி wrote:

எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை

தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை

மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்

இறைவனின் படைப்பை
பிழையாக்கி

தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை

அருமை வரிகள் நண்பா! சூப்பருங்க

துரோகம்.... செய்யாதவன் தூய்மை தனைப் பேசலாம்!

பாவம்... செய்யாதவன் "அவள்" மேல் கல் வீசலாம்!!

உதிந்த உதிரிப் பூவா... பெண் உருகு மெழுகு திரியா?...

யாருக்கும் அவளை திருத்தவும் மனமில்லை. அவளே திருந்தினாலும் ஏற்றுக் கொள்ளவும் மனம் இல்லை!




பிழையான பெண் கவிதை   Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Wed May 11, 2011 8:58 pm

மிகவும் அழகான பொருள் பொதிந்த கவிதை,
மனதை மிகவும் வருத்தியது.சில வரிகளில் உள்ள உண்மைகள் சுடுகிறது.
பெண்ணியம் பற்றி பேசும் ஆண்கள் கூட இத்தகைய பெண்களுக்கு
வாழ்க்கை கொடுக்க முன்வருவதில்லை.

மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்


இந்த பாராக்களில் உள்ள உண்மைகள் உள்ளத்தை உருக்குகிறது.

வாழ்த்துக்கள் செய்தாலி,இதுபோன்ற ஆக்கப்பூர்வமான கவிதை படைத்ததற்கு.

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 12, 2011 12:10 am

செய்தாலி wrote:
பிழையான பெண் கவிதை   Penn2

எழுத்துப் பிழைகளால்
தவறுதலாக இறைவன் எழுதிய
பெண் கவிதை

தலை எழுத்தில் பிழை
பசி வறுமை அடையாளம்
ஊர்வீதியில் விற்றாள் கற்பை

மனிதர்கள் வாசித்து பின்
கசக்கி வீதியில் எரியும்
அற்ப மதுரக் கவிதை

கவிதையில் பிழைகள்
வாசிக்க தெரிந்தவர்கள் கூட
திருத்த தயங்கி நிற்கிறார்கள்

தீண்டாமை கவிதை இது
வாசித்து சுவைத்த பின்
கிழித்து எறிகிறார்கள்

இறைவனின் பிழை
தண்டனைகள் எமக்கோ
அழும் பிழையான பெண்கவிதை

இறைவனின் படைப்பில் நல்லவை மட்டும் வேண்டும் என்றே நான் வேண்டிட....
இறைவனோ ஒரு படி மேல் போய் புரிபடா கணக்குகளை சரியாக்க முடியாது......
இப்படி சில கவிதைகளை பிழையாய் படைத்துவிட......
கோரம் தான்......அழுகை முட்டுகிறதே ஏன்னு தெரியலையே.... வரிகளின் தாக்கமா?
அருமை அருமை செய்தாலி அன்பு வாழ்த்துக்கள் மனதை நெகிழவைக்கும்படி அமைந்த வரிகளுக்கு.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பிழையான பெண் கவிதை   47
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Thu May 12, 2011 12:36 am

கவிஞனும் (கவிதை) படைப்பதனால் இறைவன்,
அழகான கவிதை,
ஆழமான கவிதை,
கிழிந்து போனதை ஒட்டிப் பாதுகாக்க வேண்டிய கவிதை இது. பிழையான பெண் கவிதை   678642
வாழ்த்துக்கள் கவிஞரே பிழையான பெண் கவிதை   224747944

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 12:38 am

எனக்கும் ஹாசிம் சொன்னது சரியென்றே படுகிறது செய்தாலி. அதற்கான என் காரணத்தை முன் வைக்கிறேன்.

மனிதன் எத்தனை பிழைகளைச் செய்கிறானோ அத்தனைக்கும் தன்னை புறப்படுத்திவிட்டு பிறர் மேல் குறை போடுவதை கவனித்திருக்கலாம்.

என் ஓவியம் சரி வரவில்லை என்றால் அது என் பிழையே தவிர தூரிகை வண்ணம் மற்றும் காகிதத்தின் மேல் குறை சொல்வது எங்ஙன்ம் பொருந்தும்..?

இங்கே மனிதன் தன் பிழைகளை இறைவன் மேல் ஏற்றி தன்னை குற்றத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முயல்கிறான்.

ஒரு பெண் கசக்கபப்ட்ட மலராய் வீசி எறியபப்டுவதற்கு இன்னொரு ஆணோ அல்லது அவளைப் பெற்ற பெண்ணோ அல்லது சமூகமோ அல்லது பொருளாதாரமோ அன்றி இறைவன் எங்கே தவறிழைத்தான்...?

இறைவன் மழையை அனைவருக்குமாய் பொழிவிக்கிறான். சில மலை மேல் விழுந்து வீணாகிறது. சில வனத்தை செழிப்பாக்குகிறது. சில மணலில் வீழ்ந்து மண்ணுக்குள் செல்கிறது. இதில் மழையின் பிழைஎன்ன..?

எல்லாவற்றிற்கும் இறையைக்குற்றம் சாட்டி தப்பிக்காமல் மனிதனின் முயற்சியைக் கைவிடாமலிருப்பதே சிறந்த வழியாகும்..

சாரி செய்தாலி ... உங்கள் கவிதையைக் குறை கூறவில்லை. குயிலன் செய்த மாற்றம் போல் இருந்திருந்தால் சிறந்திருக்கும் இன்னும் என்றே சொலல் விழைகிறேன்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 10:22 am

ஹாசிம் wrote:சகோ மன்னிக்கவும்

எம்கருக்களில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் இறைவனை பிழையென்று சொல்லுமளவு கவிதைகள் படைத்திடக்கூடாது உலகில் பிறக்கின்ற அத்தனை குழந்தைகளும் சாலிகான குழந்தைகளாகத்தான் பிறக்கிறது அக்குழந்தைகள் அடையுமிடத்தில்தான் பிழைகள் ஏற்படுகிறது
யாராலும் குறித்துச்சொல்ல முடியாத விடயம் கத்ர்
அவ்வாறு படைத்த இறைவன்தான் பகுத்தறிவையும் மனிதனுக்கு மேலதிகமாக படைத்திருக்கிறான்
சிந்தித்து செயல்படுவதை விட்டுவிட்டு மனதின் ஆசைக்கு கட்டுப்பட்டு வழிகெடுபவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக சொல்லும் வார்த்தை இறைவன் இவ்வாறு எழுதிவிட்டான் என்று
அவ்வாறென்றால் நீதிமன்றங்கள் தீர்ப்புகள் தண்டனைகள் எதற்கு
நண்மை தீமை சுவர்க்கம் நரகம் என்றெல்லாம் எதற்கு மனிதனை சரிசெய்வதற்குத்தானே

ஆக மனிதனில் பிழையினை வைத்து இறைவன்மீது குற்றம் சொல்வது அடிப்படை ஈமானுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்

இதனை சற்று யோசித்துப்பாருங்கள் நன்றி சகோ.....


பாசமுள்ள தோழரின் வெளிப்படையான கருத்தை
மனப்பூர்வமாக நான் வரவேற்கிறேன்

வருமையில் வாடிய பெண் பசிக்காக தன் பெண்மையை விற்றாள்
ஆனால் சமூகம் அவளை பலவகைகளில் காயப்படுகிறது

தன் நிலை குறித்து வெம்பி அழும் அந்த விலைமாதுவின் மனநிலை
எந்த பெண்ணும் சற்று சிந்திக்காமல் வாய்தவறி சொல்லிவிடுவாள்
ஏன் இறைவா எனக்கு இந்தப் பிறவி

அந்த பெண்ணின் மனநிலையை அப்படியே இங்கு பதிந்தேன் அவ்வளவுதான்

இறைவனை திட்டாமல் சற்று அவள் சிந்தித்தால் தன் வழியை
அவள் மாற்றி நடந்து இருப்பாள்

இறைவனை பிழை சொல்ல நான் இதை எழுதவில்லை
பிழையாய் போனவளின் மனநிலையை சொல்லவே எழுதினேன்

சில நேரங்களில் சில வரிகள் தவிர்க்க முடியாமல் போய்விடுகிறது

என்னை வழிநடத்தும் இறைவன் மேல் ஆக்கபூர்வமான நம்பிக்கை உள்ளவன் நான்

எழுதுவதெல்லாம் சரி என்று ஆகிவிடாது பிழைகளை சுட்டிக் காட்டுங்கள்
திருத்திக் கொள்கிறேன் என் இனிய உறவுகளே



என்றும் தோழமையுடன்
செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu May 12, 2011 10:30 am

vcnsethumadhav wrote:நண்பா !
கவிதை பிழையன்று ! அதில்
எழுத்துப் பிழையுமில்லை !
கருத்துப் பிழையுமில்லை !
வாசித்தவன் தவறுக்கு
கவிஞனை (இறைவனை ) குற்றப் படுத்தாதே !

குற்றம் இல்லை என்றால் சுற்றம் இல்லை நண்பா

நண்பன் சொன்னது 100 /100 உண்மை

உங்கள் அன்புக்கு நன்றி




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக