புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_c10+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_m10+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_c10 
30 Posts - 88%
heezulia
+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_c10+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_m10+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_c10+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_m10+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

+2 தேர்வு முடிவுகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 11:22 am

First topic message reminder :

பிளஸ் 2 தேர்வு முடிவு: ஓசூர் மாணவி முதல் இடம்: கனவு நனவானது : என்கிறார் ரேகா


சென்னை: பிளஸ் 2 தேர்வில் ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி முதல்‌ ரேங்க் பெற்றுள்ளார். ஓசூர் விஜய் வித்யாலயா மெட்ரிக் மேலநிலைப்பள்ளி மாணவியான இவர் ஆயிரத்து 190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவரது தந்தை திரு.கேசவன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். தாயார் திருமதி மலர்விழி நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணியாற்றுகிறார். ரேகாவின் தங்கை கிருத்திகா. இவர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார்.

மாணவி ரேகா பாடவாரியாக பெற்ற மதிப்பெண்கள் : தமிழ் : 195 ; ஆங்கிலம் - 195; கணிதம் - 200; இயற்பியல் - 200; வேதியியல் - 200, உயிரியல் - 200.

விழுப்புரம் மாணவன் இரண்டாமிடம் பிடித்தார்: விழுப்புரம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த பாரதி மெட்ரிக்., பள்ளி மாணவன் வேல்முருகன் ஆயிரத்து 187 மார்க்குகள் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.


3 வது இடத்தை பிடித்த 4 பேர் : வித்தியா சகுந்தலா ( எஸ்.‌ஜே.எஸ்.எஸ்.,‌ஜே மெட்ரிக்., பள்ளி , மகாராஜநகர் , திருநெல்வேலி) ரகுநாத் (டி.எச்.எம்.என்.யு., மேல்நிலப்பள்ளி முத்துதேவன் பட்டி பெரியகுளம்), சிந்துகவி (குறிஞ்சி மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி நாமக்கல்) , பி.எஸ்., ரேகா (ஸ்ரீ விஜய்வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலப்பைள்ளி ஓசூர்). இந்த நான்கு பேரும் ஆயிரத்து 186 மார்க்குகள் பெற்றுள்ளனர்.




கனவு நனவானது : மாணவி ரேகா பேட்டி
பிளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற ஓசூர் விஜய வித்யாலயா பள்ளி மாணவி ரேகா அளித்த பேட்டியில் : தனது கனவு நனவானதாக மகிழ்ச்சி தெரிவித்தார். தனது வெற்றிக்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், பெற்றோர்கள் மற்றும் சகோதரி அளித்த ஊக்கமும் பெரும் உதவியாக இருந்ததாக தெரிவித்தார்.

இதய சிறப்பு டாக்டராக சிந்துகவிக்கு ஆசை: 3வது இடத்தை பிடித்த நாமக்கல் குறிஞ்சிபாடி மேல்நி‌லைப்பள்ளி மாணவி பி.சிந்துகவி நான்கு பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் உட்பட 1186 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3 வது இடத்தையும், மாவட்ட அளவில் முதல் இடத்தையும் பிடித்தார். இது குறித்து அவர் கூறியதாவது, மாநில அளவில் 3வது இடம் பிடித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. படிக்கும் போது டி.வி., பார்க்க மாட்டேன். நன்றாக படித்ததால் தான் என்னால் இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்தது. எதிர்காலத்தில் ஒரு பெரிய டாக்டராகி கார்டியாக்(இருதய அறுவை சிகிச்சை) பிரிவில் நிபுணராகி, ஏழை மக்களுக்கு சேவை செய்‌ய வேண்டும். அதுவே எனது லட்சியம் என்று கூறியிருக்கிறார். சிந்துகவி கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பஞ்சலிங்கம், லோகநாயகி ஆகி‌யோரின் ஒரே மகள் ஆவர். நாமக்கல்லில் விடுதியில் தங்கி படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


பிளஸ் 2 தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது. மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை, "தினமலர்' இணையதளத்தில் மாணவர்கள் உடனடியாக பார்த்து தெரிந்து கொள்ளலாம்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 5,477 பள்ளிகளில் பயின்ற, ஏழு லட்சத்து, 23 ஆயிரத்து, 545 பேர், பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளனர். இத்துடன், தனித்தேர்வர்கள், 57 ஆயிரத்து, 86 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 1,890 மையங்களில் தேர்வுகள் நடந்தன.இத்தேர்வு முடிவுகள், இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதலிடம் பெற்ற மாணவர்களின் விவரம் மற்றும் பாட வாரியாக முதல் இடம் பெற்றவர்களின் விவரமும் இத்துடன் வெளியிடப்பட்டது.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் குறித்த விவரம், அந்தந்த பள்ளிகளிலேயே, காலை 10 மணிக்கு அறிவிப்பு பலகைகளில் ஒட்டப்படும்.மாணவர்கள், தங்கள் மதிப்பெண் பட்டியலை, வரும் 25ம் தேதி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். தனித்தேர்வர்களாக தேர்வு எழுதியவர்கள், தாங்கள் தேர்வு எழுதிய அந்தந்த தேர்வு மையங்களிலேயே மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

விடைத்தாள் ஜெராக்ஸ் மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புபவர்கள், வரும் 11 முதல், 16ம் தேதி வரை, அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம்.விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மாற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
தினமலர்






தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Mon May 09, 2011 6:26 pm

கூலி தொழிலாளி மகள் விலங்கியலில் 2வது இடம்

காளையார்கோவில் : கூலித் தொழிலாளி மகள் விலங்கியல் பாடத்தில் 199 மதிப்பெண் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சூசையப்பர் பட்டிணம் சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சங்கீதா பிளஸ் 2 தேர்வில் 1082 பெற்றுள்ளார். விலங்கியல் பாடத்தில் 200க்கு 199 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாவது இடம் பெற்றார்.மாணவி சங்கீதா கூறுகையில்,' கூலி த் தொழிலாளியான எனது தந்தை நான்கு பெண் குழந்தைகளை படிக்க வைக்க கஷ்டப்பட்டு வந்தார். எனக்கு படிக்க வேண்டும் என்ற ஒரே ஆர்வம். பாதிரியார் பிரான்சிஸ் ஜெயபதி நடத்தும் அன்னை இல்லத்தில் தங்கி படித்தேன். ஆசிரியர் பாடம் நடத்தும் போது சந்தேகம் வந்தால் உடனே தீர்த்துக்கொள்வேன். ஆசிரியர் நடத்தும் பாடங்கள் அனைத்தையும் அன்றைய தினமே படித்து விடுவேன். அதிகாலை 3மணியிலிருந்து இரவு 12 மணிவரை படிப்பேன். மாணவிகளுடன் சேர்ந்து பாடம் சம்பந்தமாக ஆலோசனை செய்வேன்.' டி வி' பார்த்ததில்லை.எனது வறுமையை நினைத்து கடினமாக படித்தேன். உயர் கல்வி பெற வசதியில்லாததால் யோசனையில் உள்ளேன்.'என்றார்.
தினமலர்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon May 09, 2011 6:56 pm



' கூலித் தொழிலாளியான எனது தந்தை நான்கு பெண் குழந்தைகளை படிக்க வைக்க கஷ்டப்பட்டு வந்தார்.[/b]

[b]எனது வறுமையை நினைத்து கடினமாக படித்தேன். உயர் கல்வி பெற வசதியில்லாததால் யோசனையில் உள்ளேன்.

இலவசமாய் தொலைக்காட்சியும் மிக்ஸியும் கிரைண்டரும் தரப்போவதாக கூறும் அரசு இவர்களைக் கண்ணுருமா?



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

+2 தேர்வு முடிவுகள்  - Page 3 A+2 தேர்வு முடிவுகள்  - Page 3 B+2 தேர்வு முடிவுகள்  - Page 3 D+2 தேர்வு முடிவுகள்  - Page 3 U+2 தேர்வு முடிவுகள்  - Page 3 L+2 தேர்வு முடிவுகள்  - Page 3 L+2 தேர்வு முடிவுகள்  - Page 3 A+2 தேர்வு முடிவுகள்  - Page 3 H
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 10, 2011 2:02 am

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சூப்பருங்க



+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 4:39 pm

பிளஸ்டூ தேர்ச்சி விகிதம் 85.9%-வழக்கம் போல மாணவிகளே அதிகம்


சென்னை: பிளஸ்டூ தேர்வில் ஒட்டுமொத்தமாக 85.9 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விகிதம் 85.15 சதவீதமாகும். மேலும் வழக்கம் போல மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் ஓசூர் மாணவி கே.ரேகா மாநிலத்திலேயே முதல் இடத்தைப் பிடித்தார்.

மாநில அளவில் தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 85.9 சதவீத மாணவ, மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.

மாணவிகளே அதிக தேர்ச்சி

மாணவ, மாணவியரின் தேர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரை மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாக உள்ளது. அதேசமயம், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 82.3 சதவீதம்தான்.

ஒவ்வொரு ஆண்டும் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். இந்த ஆண்டும் அது அப்படியே நடந்துள்ளது.

அதேசமயம், ஒட்டுமொத்த் தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 4:40 pm

சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்ததால் முதலிடத்தை தவற விட்ட மாணவி


சென்னை : பிளஸ்டூவில் 1191 மதிப்பெண்கள் பெற்ற சென்னை குரோம்பேட்டை மாணவி சந்தியாதான் தமிழகத்திலேயே அதிக மதிப்பெண் பெற்றவராவார். ஆனால் அவர் தமிழை முதல் பாடமாக எடுக்காததால் ரேங்கிங் கிடைக்காமல் போய் விட்டது.

தமிழக அளவில் ஓசூர் மாணவி கே.ரேகாதான் முதலிடம் பிடித்தவராக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

ஆனால் சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஸ். மாணவி சந்தியா 1191 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். இருப்பினும் இவர் தமிழை முதல் பாடமாக எடுக்கவில்லை, சமஸ்கிருதத்தை முதல் பாடமாக எடுத்திருந்தார். இதனால் இவருக்கு மாநில அளவிலான ரேங்கிங் கிடைக்கவில்லை.

தமிழை முதல் பாடமாக எடுத்து அதிக மதிப்பெண் பெற்றால்தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. எனவே தமிழை முதல் பாடமாக சந்தியா எடுக்காததால் அவருக்கு முதலிடம் நழுவிப் போயுள்ளது.

அதே போன்று பிரஞ்சு மொழியை எடுத்து படித்தவர்களில் வித்யோதயா மாணவி ஜெயப்பிரதா 1190 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

3வது இடத்தை பிரெஞ்சு மொழியை முதல் பாடமாக எடுத்துப் படித்தவரான சென்னை அருகே உள்ள கீழ்க்கட்டளையைச் சேர்ந்த எச்.எப்.சி பள்ளி மாணவி மகாலட்சுமி பிடித்துள்ளார். இவர் எடுத்த மதிப்பெண்கள் 1189 ஆகும்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 4:41 pm

பிளஸ் டூ: பாடம் வாரியான ரேங்க் பட்டியல்


சென்னை: இன்று பிளஸ் டூ முடிவுகள் வெளியாகின. இதில் ஒசூர் மாணவி கே. ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

பாடம் வாரியான தரவரிசைப் பட்டியல் வருமாறு,

கணினி அறிவியல்:

கணினி அறிவியலில் 223 பேர் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவரது மொத்த மதிப்பெண் 1189. கோவை அவிலா கான் மெட்ரிக் பள்ளி மாணவி அர்ச்சனா கணினி அறிவியலில் 200 மதிப்பெண்களுடன் மொத்தம் 1181 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். திருச்சி ஆர்.எஸ்.கே. பள்ளி மாணவி திவ்யா 1174 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவரும் கணினி அறிவியலில் 200 மதிப்பெண் பெற்றுள்ளார்.

விலங்கியல்:

இந்த ஆண்டு விலங்கியலில் ஒருவர் கூட 200க்கு 200 மதிப்பெண் வாங்கவில்லை. சேரன்மாதேவி, வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சிவகாமி விலங்கியலில் 199 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் எஸ்,ஏ.பட்டினம் சகாயராணி பெண்கள் பள்ளி மாணவி ஏ.சங்கீதா இரண்டாவது இடத்தையும், கோவை மாவட்டம் சர்கார்சமக்குளம் அரசு பள்ளி மாணவி எல். சண்முகப்பிரியா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

தாவரவியல்:

இந்த ஆண்டு தாவரவியலில் 4 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1167 மதிப்பெண் பெற்றுள்ள திருவாரூர் ரஹ்மத் மெட்ரிக் பள்ளி மாணவி அயனுல்மர்லியா தாவரவியலில் 200 மதிப்பெண்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 1150 மதிப்பெண்கள் பெற்றுள்ள தக்கலை புனித மேரி ஜார்ஜெட்டி பள்ளி மாணவி இர்பானும், மூன்றாவது இடத்தில் 1094 மதிப்பெண்கள் பெற்றுள்ள அருப்புக்கோட்டை எஸ்.எச்.என்., எத்தல் ஹார்வி பள்ளி மாணவி எஸ். மாலதியும் உள்ளனர். இவர்கள் இருவரும் தாவரவியலில் 200 மதிப்பெண் வாங்கியுள்ளனர்.

உயிரியல்:

இந்த ஆண்டு உயிரியல் பாடத்தில் 615 பேர் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்துள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா உயிரியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 1188 மதிப்பெண்கள் வாங்கியுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் இரண்டாவது இடத்தில் உள்ளார். 1187 மதிப்பெண்கள் பெற்றுள்ள நாமக்கல் மாவட்ட கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி மாணவி தக்சினி மூன்றாவது இடத்தில் உள்ளார். இவர்கள் அனைவரும் உயிரியலில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.

வேதியியல்:

இந்த ஆண்டு வேதியியல் பாடத்தில் ஆயிரத்து 243 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா வேதியியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 1189 மதிப்பெண்கள் பெற்றுள்ள செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண்டாவது இடத்திலும், 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் வேதியியலில் 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

இயற்பியல்:

இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 646 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா இயற்பியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 1189 மதிப்பெண்கள் பெற்றுள்ள செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண்டாவது இடத்திலும், 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் இயற்பியலில் 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

கணிதம்:

இந்த ஆண்டு அதிகபட்சமாக 2 ஆயிரத்து 720 மாணவ-மாணவிகள் கணிதப் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 1190 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவி கே.ரேகா இயற்பியலில் 200 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். 1189 மதிப்பெண்கள் பெற்றுள்ள செங்கல்பட்டு எச்.எப்.சி. மெட்ரிக் பள்ளி மாணவி எஸ்.மகாலட்சுமி இரண்டாவது இடத்திலும், 1188 மதிப்பெண்கள் பெற்றுள்ள சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மெட்ரிக் பள்ளி மாணவி சுருதி கணேஷ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இவர்கள் இருவரும் கணிதத்தில் 200 மதிப்பெண்கள் வாங்கியுள்ளனர்.

ஆங்கிலம்:

ஆங்கிலத்தில் ஒசூர் ஸ்ரீ விஜய வித்யாலயா பள்ளி மாணவிகள் கே.ரோகா 1190 மதிப்பெண்களுடன் முதல் இடத்திலும், அதே பள்ளியைச் சேர்ந்த மாணவி பி. எஸ். ரேகா 1186 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்திலும், சென்னை சூளைமேடு டி.ஏ.வி., மெட்ரிக் பள்ளி மாணவி கே.அட்சயா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். இதில் ஒசூர் மாணவிகள் 200-க்கு 195 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 10, 2011 4:47 pm

2720 பேர் கணிதத்தில் 200: விலங்கியலில் ஒருவர் கூட இல்லை

சென்னை: பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் 2 ஆயிரத்து 720 பேர் கணிதத்தில் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ்டூ தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், ஓசூர் மாணவி கே.ரேகா 1190 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்தார்.

ஓசூர் விஜய வித்யாலயா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்தவரான கே.ரேகா பெற்ற மதிப்பெண்கள்

தமிழ் 195, ஆங்கிலம் 195, கணிதம், வேதியியல் இயற்பியல் உயிரியல் பாடங்களில் தலா 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

2வது இடத்தில் வேல்முருகன்:

கள்ளக்குறிச்சி பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவரான வேல்முருகன் 1187 மதிப்பெண்களுடன் 2-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

4 மாணவர்களுக்கு 3வது இடம்:

நெல்லை வித்யா சகுந்தலா, பெரியகுளம் ரகுநாதன், நாமக்கல் சிந்து கவி, ஓசூர் பி.எஸ்.ரேகா ஆகியோர் 3வது இடத்தைப் பிடித்துள்ளனர். இவர்கள் தலா 1186 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

சமஸ்கிருதத்தை முதல் பாடமாகக் கொண்டு படித்தவர்களில் சென்னை குரோம்பேட்டை எஸ்.ஆர்.டி.எஸ். மாணவி சந்தியா 1191 மதிப்பெண் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார். அதே போன்று பிரஞ்சு மொழியை எடுத்து படித்தவர்களில் வித்யோதயா மாணவி ஜெயப்பிரதா 1190 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழில் 3 பேர் முதலிடம்:

தமிழ் பாடத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாடமி மாணவர்கள் கோகுல கிருஷ்ணன், மாதேஸ்வரன், தினகரன் ஆகியோர் 198 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பகிர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டு கணிதப் பாடத்தில் அதிக பட்சமாக 2 ஆயிரத்து 720 மாணவர்கள் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். அடுத்தபடியாக வேதியியலில் ஆிரத்து 243 பேர் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியலில் 615 பேரும், கணிணி அறிவியலில் 223 பேரும், தாவரவியலில் 4 பேரும் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஒருவர் கூட விலங்கியல் பாடத்தில் 200 மதிப்பெண் பெறவில்லை.

இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7 லட்சத்து 81 ஆயிரத்து 385 மாணவ-மாணவியரில் 6 லட்சத்து 15 ஆயிரத்து 593 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 85.9 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தட்ஸ் தமிழ்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


+2 தேர்வு முடிவுகள்  - Page 3 Scaled.php?server=706&filename=purple11
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக