புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_m10ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏன் இப்படி செய்ய கூடாது


   
   

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu May 05, 2011 9:09 pm

First topic message reminder :


கோவில் வாசல் என்ற உடனே நம் நினைவுக்கு வருபவர்கள், கண்டு பிடித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் பிச்சை காரர்கள் தான். இந்த கதையும் அவர்களுக்கான ஒன்று தான். இந்த கதை நிஜமானால் நம் நாடு பிச்சை காரர்கள் இல்லாத நாடாக மாறும் என்று நம்புகிறேன்.

நமக்கு பிச்சை காரர்கள் படும் கஷ்டங்கள் என்ன என்பது ஓரளவிற்கு தெரியும். இந்த கதை ஒரு குறிப்பிட்ட பிச்சை கார கூட்டத்தை உதாரணமாக கொண்டது.

சுப்பன் இந்த கூட்டத்தின் தலைவன். ஏதாவது ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றால் இவனிடம் அனுமதி பெற்று தான் செயல்படுத்துவர். இந்த கூட்டத்தில் மொத்தம் 25 நபர்கள் உள்ளனர். இதில் சில பெண்கள் கர்ப்பம் தரித்தும் உள்ளனர். இவர்கள் தங்கி இருக்கும் இடம் சென்னையில் ஒரு சாலை ஓரத்தில். நாம் போர்வையை குளிரை போக்க மட்டுமே உபயோக படுத்துகிறோம் ஆனால் அவர்களுக்கு போர்வை தான் வீடே.

வெயில் காலங்களில் இரவு கொஞ்சம் சிரமம் இருக்காது ஆனால் பருவ மழை பெய்யத் தொடங்கினால் இவர்கள் படும் பாடு அனுபவித்தால் மட்டும் தெரியும். கம்பளி போர்வை பிளாஸ்டிக் போர்வையாக மாறி விடும். தட்டு முட்டு சாமான்கள் குடையாக மாறிவிடும். தூக்கம் சொல்லாமல் போய் விடும். துக்கம் அழையாமல் வந்து விடும். எதற்க்காக வாழ்கிறோம் என்று தெரிவதற்குள்ளாகவே. காலன் அவன் வேலையை காட்டி விடுவான்.

நம்மில் ஒரு சிலர் இவர்களை கடந்து செல்லும் போது ஐயோ பாவம் என்று மனதிற்குள் நினைபவர்களும் உண்டு, இந்தாங்க 10 ரூபா ஏதாவது வாங்கி சாப்டுங்கனு தருபவர்களும் உண்டு, அட கருமம் என்று முகத்தை திருப்பி கொள்பவர்களும் உண்டு. ஒரு நாயாக பிறந்திருந்தால் கூட எளிதாக வாழ்ந்து விடலாம் ஆனால் இவர்கள் மனிதனாக பிறந்ததினால் சிலவற்றை கடை பிடித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படி கடை பிடிப்பது இருப்பதோ தெருவில் உண்ண, உறங்க, குளிக்க, கழிக்க, உடை மாற்ற, உறவு கொள்ள அனைத்தும் ஒரே இடத்தில. பிறகு எப்படி தனிமனிதனின் ஒழுக்கத்தை கடை பிடிப்பது அதை நாம் அவர்களிடம் இருந்து எதிர் பார்ப்பதும் தவறு. எதிர் பார்பவர்கள் அவர்கள் நிலை அறியாத பதறு.
இவர்கள் பேருந்தில் ஏறினாள் கண்டக்டர் முதல்கொண்டு கடனாளி வரை பார்க்கும் தோரணையே அவர்கள் வாழ்கையை நரகமாக மாற்றி விடுகிறது . நம்மை மனிதனாக கூட கருத மாடிங்க்ரான்களே என்ற ஏக்கம் அவர்களை மழையுடன் சேர்ந்து தூங்காமல் செய்கிறது.

இந்த கொடுமையை எல்லாம் பார்த்து சகித்து கொண்டு இருந்த சுப்பன். நமக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை நமக்கு என்று தான் இந்த நரக வாழ்க்கையில் இருந்து விடுதலை நம் அடுத்த தலை முறைக்கும் இதே கொடுமை தானா இதை எவ்வாறு தடுக்கலாம் நம் அடுத்த தலை முறையை எவ்வாறு சமூகத்தில் மதிப்புடன் இருக்கச் செய்யலாம் என்று பல கோணங்களில் யோசித்துக் கொண்டு இருந்தார்.

அவருக்கு அந்த சமயத்தில் தோன்றிய மகத்தான யோசனை கல்வி. குழந்தைகளுக்கு எப்படியாவது கஷ்ட்டப்பட்டு கல்விச் செல்வத்தை கொடுத்து விட்டால் அந்த செல்வம் நம்மை வேறு ஒரு உலகிற்கு அழைத்து செல்லும் இந்த இழி நிலை இல்லாமல் ஆகும். அவர்களால் நம்மை போன்ற வர்க்கம் வேருடன் களையெடுக்கப்படும். நம்மை போன்றவர்களுக்கு உணவு உறைவிடம் உடை அனைத்தும் கிடைக்கும். கல்வி கல்வி இது தான் இனி நமக்கு தாரக மந்திரம்.

காலை விடிந்து விட்டது சுப்பன் அனைவரையும் ஒன்றாக அழைத்து. தான் சிந்தித்து வைத்ததை கூறினான். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெருவிதனர் ஒரு சிலர் நாம் இருக்கவே இடம் இல்லாமல் கஷ்டப்படுகிறோம் இந்த நிலையில் எப்படி குழந்தைகள் கல்வி கற்க முடியும் என்றனர். ஒரு சிலர் நாம் இத்தனை நாள் கஷ்டம் மட்டுமே பட்டுக் கொண்டிருந்தோம் ஆனால் பலன் ஒன்றும் இல்லை ஆனால் இப்பொழுது நாம் படபோகும் கஷ்டத்திற்கு பலன் கண்டிப்பாக உண்டு. கஷ்டம் நமக்கு ஒன்றும் புதிது இல்லையே என்றனர். ஒருவாறாக அனைவரும் ஒப்புக் கொண்டனர். சுப்பன் மீண்டும் அனைவரிடமும் நான் இன்னும் சில வருடங்களில் இறந்தாலும் இறந்து விடுவேன் ஆனால் நம் லட்சியம் இறக்கக்கூடாது என்று அனைவரிடமும் உறுதி மொழி பெற்றுக்கொண்டார்.

கற்பமாக இருந்த பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தனர் மொத்தம் மூன்று குழந்தைகள். இவர்களை என்ன துறைக்கு படிக்க வைக்கலாம் என்று அனைவரும் யோசித்தனர். இறுதியில் மூவரில் ஒருவரை ஐ‌ஏ‌எஸ் ஆகவும் ஒருவரை ஐ‌பி‌எஸ் ஆகவும் ஒருவரை டாக்டர் ஆகவும் படிக்க வைக்க தீர்மானித்தனர். அதன் படியே குழந்தைகளை ஆரம்பதிளிரிந்தே சொல்லி சொல்லி வளர்த்தனர். அனைவரும் சிறப்பாக படித்தனர் இவர்கள் படிப்பிற்கு உதவ ஒரு சில நல்லுள்ளம் படைத்தவர்கள் முன் வந்தனர். சுப்பன் நினைத்த படி மூவரும் தீர்மானித்த துறையை அடைந்தனர்.

அவர்கள் பணியில் சேர்ந்த அன்றைய தினத்தில் இருந்து சாலை ஓரம் மரங்கள் மட்டுமே இருந்தன மனிதர்கள் இல்லை. அவர்கள் கஷ்டங்கள் இல்லை. சில ஆண்டுகளில் சாலை ஓர வாசிகள் என்ற சொல் அகராதியில் இருந்தே எடுக்கப்படும் நிலைக்கு அம்மூவரும் மாற்றினர். சுப்பன் அன்று சிந்திக்க வில்லை என்றால் சிரமமும் கஷ்டமும் அவர்களை சிறை பிடித்துக்கொண்டே இருந்திருக்கும். விடுதலை வெறும் கனவாகி இருக்கும்.

ஒரு நல்ல சிந்தனை ஒரு சமுதாயத்தையே மாற்றி விடும் அளவிற்கு சக்தி கொண்டது அது லட்சியமாக மாறும் பொழுது. என் கேள்வி எல்லாம் ஏன் இந்த சுப்பனை போல மற்றவர்கள் மாற்றிக்கொள்ள் நினைக்க கூடாது. என் தந்தை பிச்சை எடுத்தார் நான் பிச்சை எடுக்கிறேன் என் குழந்தையும் பிச்சை எடுப்பான் என்பதை மாற்றி என் குழந்தை உலகை ஆள்வான் என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதே என் எண்ணம்




காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 2:41 pm

ANTHAPPAARVAI wrote:உங்கள் நம்பிக்கை சில காலங்களில் நிறைவேறும் நண்பா!உங்களின் இந்த உயர்ந்த சிந்தனைக்கு பாராட்டுக்கள்!!

நன்றி நண்பா....ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 1194657695
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!" அருமையான உண்மை.... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 06, 2011 2:44 pm

பிரியமான தோழி wrote:
ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 359383

நன்றி தோழி!



ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 2:52 pm

எனக்கு வந்த மின் அஞ்சலை இங்கு எனது 1000 வது பதிவாக பதியலாம் என்று நினைதிருந்தேன் ஆனால் இதை இப்போது இதில் பதிய வேண்டிய கட்டாயம் ஆதலால் பதிகிறேன்


ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Pch4717

பிச்சை என்பது நம் நாட்டில் ஓர் அங்கமாய் காலம் காலமாக இருந்து வருகின்றது. ஒரு காலத்தில் ஆதரவற்றோரும், துறவிகளும் இல்லறத்தாரிடம் யாசகம் பெற்று உண்டார்கள். கிட்டத் தட்ட இந்த நடைமுறையானது இன்று மேல்நாடுகளில் காணப்படும் சமூக உதவியின் அந்தக் கால வடிவமாகப் பார்க்கலாம். ஆனால் காலம் செல்ல செல்ல உழைப்பற்றவர்களும், உழைக்கக் கள்ளமானவர்களும், அதற்கு ஒரு படி மேலாக நோகாமல் அதிக பணம் சம்பாதிக்கவும் பிச்சை எடுக்கத் தொடங்கினார்கள். இது ஒரு வகை மறைமுக தொழிலாகவே மாறியது. இந்தத் தொழில் பல லாபங்கள் வருவதைத் தொடர்ந்து பல ஆதரவற்றவர்களை இந்தப் பிச்சை எடுக்கும் குழு, பிச்சை என்னும் பெரும் தொழில் தள்ளியது எனலாம்


ஒரு முறைக் கோடைக்கானல் சென்றப் போது அங்கு நகரத்தில் பிச்சை எடுக்கும் ஒருவருக்கு பிச்சைப் போட வேண்டாம் என்றால் எனது சகோ ஒருவர். ஏன் என்று வினவிய போது, அவர் சொன்ன செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஆம் !!! அங்கு பிச்சை எடுப்பவர்களின் வருமானம் அங்கு இருக்கும் சராசரி மக்களின் வருமானத்தை விடவும் அதிகம். அதில் ஒரு படி மேலே அவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் கொடுமையில் கொடுமை அவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குவது வேறு யாரும் இல்லை, அங்கு இண்டர்நேசனல் பள்ளிகளில் படித்து வரும் பணக்கார மாணவர்கள் தானாம்.


அப்படி பிச்சை என்பது ஒரு வருமானம் தரும் தொழிலாகவே நடந்து வருகின்றது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் சென்னை, மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல், குமரி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பிச்சைக் காரர்கள் அதிகம். குறிப்பாக வழிப்பாட்டுத் தலங்களில் இவர்களை வெகு இயல்பாய் காண முடியும். வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்களும், வெள்ளையர்களும் கூட இவர்கள் மீது பரிதாபம் கொண்டு ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

பிச்சைக் காரர்களும், சமூகத்தில் நாதியற்றவர்களும் ஒன்றே என நாம் நினைப்பதும் பெரிய தவறாகும். ஆம் !!! சமூகத்தில் நாதியற்றவர்கள் பிச்சைக் காரர்களாக இருக்கின்றார்கள். ஆனால் பிச்சைக் காரர்கள் அனைவரும் நாதியற்றவர்கள் கிடையாது. நம் சமூகத்தின் இன்னுமொரு பிரச்சனை ஐந்து ரூபாய் பிச்சைப் போட்டுவிட்டு தான் செய்தது பெரும் சமூக சேவைப் போல காட்டிக் கொள்ளும் மனோபாவம். இதுவும் பிச்சை எடுப்பவர்களை மறை முகமாக வளர்த்துவிட்டது.

அது மட்டுமின்றி நாள் ஒன்றுக்கு பிச்சையாகப் பெறும் பணங்கள் கணக்கில் வருவதும் இல்லை. அப்படியான பணங்களை பிச்சைத் தொழிலை நல்லப் படியாக நடத்த வேண்டும் என்பதற்காக மாநகராட்சியில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கும், காவல் துறையினருக்கும், அரசியல் வாதிகளுக்கும் செல்கின்றது என எனது பத்திரிக்கை நண்பர் ஒருவர் கூறினார்.

பிச்சைக் காரர்களை மறுவாழ்வு அளிக்கவோ, சிறு தொழில்களில் ஈடுபடுத்தவோ அரசு பெரிய முயற்சிகள் செய்யாமல் போவதற்கும் மேற்கணட பிச்சை எடுப்பவரிடம் பிச்சை எடுக்கும் மனோநிலையும் ஒரு காரணம். அது போக சிறு தொழில்களில் ஈடுபட்டால் பிச்சையில் வரும் வருமானம் போல அதிக வருமானம் வராது என்பதால் பலர் தொழில் செய்ய விரும்புவதில்லை.

இப்படியான பிச்சைக்காரர்களை வளர்த்து எடுத்ததில் நமது பங்கே அதிகம். இவர்களுக்கு பிச்சை இட்டது மட்டுமின்றி, இவர்களை மாற்ற நாம் ஒருபோதும் சிந்தித்ததும் இல்லை. நிச்சயம் பிச்சைகாரர்களில் எத்தனையோ நபர்கள் ஆதரவு வேண்டியும், நல்வாழ்வு வேண்டியும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நாம் வெறும் ஐந்து ரூபாயைப் போட்டு விட்டு புண்ணியக் கணக்குத் தேடுகின்றோம்.

பிச்சைக்கார்களால் நமது நாட்டின் இமேஜ் எப்படி இருக்கின்றது தெரியுமா. இந்தியா பிச்சைக்காரர்களின் நாடு எனவே பெரும்பாலானோரால் அறியப்படுகின்றது. காரணம் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடமெல்லாம் பிச்சைக்காரர்கள் குவிந்து இருப்பதால். சில இடங்களில் குறிப்பாக வேளாங்கண்ணி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் ஒரு வழிப்பறி கொள்ளையர்கள் கணக்காக மிரட்டியே பிச்சை எடுக்கின்றார்கள். திருச்சி முக்கொம்பு போன்ற பகுதிகளில் பள்ளிப் படிக்கும் சிறுவர்கள் அங்கு வரும் காதலர்களை நச்சரித்தே பிச்சை வாங்குகின்றார்கள். இதே நிலை தான் மெரினா கடற்கரையில் நடக்கின்றன.


சமீபத்தில் விழுப்புரம் பேருந்து நிலயத்தில் இறந்து கிடந்த ஒரு பிச்சை காரணின் பையில் 30000/- பணமும் கனரா வங்கியின் பாஸ் புக்கும் இருந்தது அந்த வங்கியில் அவன் கணக்கில் 1.75 லட்சம் இருந்ததும் தெரிய வந்தது






விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 06, 2011 3:00 pm

பூஜிதா wrote:
.................................................
.................................................
பிச்சைக் காரர்களும், சமூகத்தில் நாதியற்றவர்களும் ஒன்றே என நாம் நினைப்பதும் பெரிய தவறாகும். ஆம் !!! சமூகத்தில் நாதியற்றவர்கள் பிச்சைக் காரர்களாக இருக்கின்றார்கள். ஆனால் பிச்சைக் காரர்கள் அனைவரும் நாதியற்றவர்கள் கிடையாது. நம் சமூகத்தின் இன்னுமொரு பிரச்சனை ஐந்து ரூபாய் பிச்சைப் போட்டுவிட்டு தான் செய்தது பெரும் சமூக சேவைப் போல காட்டிக் கொள்ளும் மனோபாவம். இதுவும் பிச்சை எடுப்பவர்களை மறை முகமாக வளர்த்துவிட்டது.
.......................................


சூப்பருங்க



ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 3:14 pm

பூஜிதா wrote:எனக்கு வந்த மின் அஞ்சலை இங்கு எனது 1000 வது பதிவாக பதியலாம் என்று நினைதிருந்தேன் ஆனால் இதை இப்போது இதில் பதிய வேண்டிய கட்டாயம் ஆதலால் பதிகிறேன்


ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 Pch4717

பிச்சை என்பது நம் நாட்டில் ஓர் அங்கமாய் காலம் காலமாக இருந்து வருகின்றது. ஒரு காலத்தில் ஆதரவற்றோரும், துறவிகளும் இல்லறத்தாரிடம் யாசகம் பெற்று உண்டார்கள். கிட்டத் தட்ட இந்த நடைமுறையானது இன்று மேல்நாடுகளில் காணப்படும் சமூக உதவியின் அந்தக் கால வடிவமாகப் பார்க்கலாம். ஆனால் காலம் செல்ல செல்ல உழைப்பற்றவர்களும், உழைக்கக் கள்ளமானவர்களும், அதற்கு ஒரு படி மேலாக நோகாமல் அதிக பணம் சம்பாதிக்கவும் பிச்சை எடுக்கத் தொடங்கினார்கள். இது ஒரு வகை மறைமுக தொழிலாகவே மாறியது. இந்தத் தொழில் பல லாபங்கள் வருவதைத் தொடர்ந்து பல ஆதரவற்றவர்களை இந்தப் பிச்சை எடுக்கும் குழு, பிச்சை என்னும் பெரும் தொழில் தள்ளியது எனலாம்


ஒரு முறைக் கோடைக்கானல் சென்றப் போது அங்கு நகரத்தில் பிச்சை எடுக்கும் ஒருவருக்கு பிச்சைப் போட வேண்டாம் என்றால் எனது சகோ ஒருவர். ஏன் என்று வினவிய போது, அவர் சொன்ன செய்தி பெரும் அதிர்ச்சியைத் தந்தது. ஆம் !!! அங்கு பிச்சை எடுப்பவர்களின் வருமானம் அங்கு இருக்கும் சராசரி மக்களின் வருமானத்தை விடவும் அதிகம். அதில் ஒரு படி மேலே அவர்கள் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் கொடுமையில் கொடுமை அவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்குவது வேறு யாரும் இல்லை, அங்கு இண்டர்நேசனல் பள்ளிகளில் படித்து வரும் பணக்கார மாணவர்கள் தானாம்.


அப்படி பிச்சை என்பது ஒரு வருமானம் தரும் தொழிலாகவே நடந்து வருகின்றது. குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் அதிகம் குவியும் சென்னை, மாமல்லபுரம், ஊட்டி, கொடைக்கானல், குமரி, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் பிச்சைக் காரர்கள் அதிகம். குறிப்பாக வழிப்பாட்டுத் தலங்களில் இவர்களை வெகு இயல்பாய் காண முடியும். வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழர்களும், வெள்ளையர்களும் கூட இவர்கள் மீது பரிதாபம் கொண்டு ஆயிரக் கணக்கில் பணம் கொடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள்.

பிச்சைக் காரர்களும், சமூகத்தில் நாதியற்றவர்களும் ஒன்றே என நாம் நினைப்பதும் பெரிய தவறாகும். ஆம் !!! சமூகத்தில் நாதியற்றவர்கள் பிச்சைக் காரர்களாக இருக்கின்றார்கள். ஆனால் பிச்சைக் காரர்கள் அனைவரும் நாதியற்றவர்கள் கிடையாது. நம் சமூகத்தின் இன்னுமொரு பிரச்சனை ஐந்து ரூபாய் பிச்சைப் போட்டுவிட்டு தான் செய்தது பெரும் சமூக சேவைப் போல காட்டிக் கொள்ளும் மனோபாவம். இதுவும் பிச்சை எடுப்பவர்களை மறை முகமாக வளர்த்துவிட்டது.

அது மட்டுமின்றி நாள் ஒன்றுக்கு பிச்சையாகப் பெறும் பணங்கள் கணக்கில் வருவதும் இல்லை. அப்படியான பணங்களை பிச்சைத் தொழிலை நல்லப் படியாக நடத்த வேண்டும் என்பதற்காக மாநகராட்சியில் இருக்கும் முக்கிய புள்ளிகளுக்கும், காவல் துறையினருக்கும், அரசியல் வாதிகளுக்கும் செல்கின்றது என எனது பத்திரிக்கை நண்பர் ஒருவர் கூறினார்.

பிச்சைக் காரர்களை மறுவாழ்வு அளிக்கவோ, சிறு தொழில்களில் ஈடுபடுத்தவோ அரசு பெரிய முயற்சிகள் செய்யாமல் போவதற்கும் மேற்கணட பிச்சை எடுப்பவரிடம் பிச்சை எடுக்கும் மனோநிலையும் ஒரு காரணம். அது போக சிறு தொழில்களில் ஈடுபட்டால் பிச்சையில் வரும் வருமானம் போல அதிக வருமானம் வராது என்பதால் பலர் தொழில் செய்ய விரும்புவதில்லை.

இப்படியான பிச்சைக்காரர்களை வளர்த்து எடுத்ததில் நமது பங்கே அதிகம். இவர்களுக்கு பிச்சை இட்டது மட்டுமின்றி, இவர்களை மாற்ற நாம் ஒருபோதும் சிந்தித்ததும் இல்லை. நிச்சயம் பிச்சைகாரர்களில் எத்தனையோ நபர்கள் ஆதரவு வேண்டியும், நல்வாழ்வு வேண்டியும் வாழ்கிறார்கள். அவர்களுக்கு நாம் வெறும் ஐந்து ரூபாயைப் போட்டு விட்டு புண்ணியக் கணக்குத் தேடுகின்றோம்.

பிச்சைக்கார்களால் நமது நாட்டின் இமேஜ் எப்படி இருக்கின்றது தெரியுமா. இந்தியா பிச்சைக்காரர்களின் நாடு எனவே பெரும்பாலானோரால் அறியப்படுகின்றது. காரணம் சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடமெல்லாம் பிச்சைக்காரர்கள் குவிந்து இருப்பதால். சில இடங்களில் குறிப்பாக வேளாங்கண்ணி, மாமல்லபுரம் போன்ற இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் ஒரு வழிப்பறி கொள்ளையர்கள் கணக்காக மிரட்டியே பிச்சை எடுக்கின்றார்கள். திருச்சி முக்கொம்பு போன்ற பகுதிகளில் பள்ளிப் படிக்கும் சிறுவர்கள் அங்கு வரும் காதலர்களை நச்சரித்தே பிச்சை வாங்குகின்றார்கள். இதே நிலை தான் மெரினா கடற்கரையில் நடக்கின்றன.


சமீபத்தில் விழுப்புரம் பேருந்து நிலயத்தில் இறந்து கிடந்த ஒரு பிச்சை காரணின் பையில் 30000/- பணமும் கனரா வங்கியின் பாஸ் புக்கும் இருந்தது அந்த வங்கியில் அவன் கணக்கில் 1.75 லட்சம் இருந்ததும் தெரிய வந்தது



மிக்க நன்றி பூஜிதா.....
நான் இந்த கதையை எழுத காரணமாக இருந்தவர்கள்.....
உண்மையில் பிச்சை காரர்கள் மட்டும் அல்ல.....
சாலை ஓரத்தில் மூங்கில் கொண்டு வேயப்பட்ட பொருட்களை விற்றுக்கொண்டும்.....அதே இடத்தில் உறங்கி கொண்டும்.....மழை வெயில் எதுவாக இருந்தாலும்....மழைகாகித வீட்டில் உறங்கி கொண்டிருந்தவர்களை பார்த்து தான்....இந்த கதையை எழுதினேன்.....

நான் இத்தகைய காட்சியை கண்டது.....சென்னையில்....
நிச்யமாக சொல்ல முடியும்......அன்று நான் பார்த்த அந்த மக்கள்...மிகவும் நாதி அற்ற நிலையில் தான் இருந்தார்கள்.......ஆனால் அவர்கள் பிச்சையோ வேறு எதுவுமோ கேட்கவில்லை......இருப்பதை உண்டு.....பிழைத்து வருகின்றனர்....என்று எனக்கு தோன்றியது....அதனால் வந்த கதை தான் இது....

நீங்கள் மேற்கூறியதை வைத்து பார்த்தால்.....
பிச்சை காரகளுக்கு உதவுவதை விட.....
பிச்சை எடுக்கும் நிலையில் இருந்தும்.......உழைக்க வேண்டும்....உழைத்து உண்ண வேண்டும் என நினைபவர்களை......தான் நாம் இலக்காக கொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது.......

மிக்க நன்றி பூஜிதா..... ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 1194657695 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 224747944 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 224747944 ஏன் இப்படி செய்ய கூடாது - Page 3 2825183110



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 3:22 pm

நீங்கள் அவர்களை சென்னையில் எங்கு பார்த்தீர்கள் என்று கூற மூடுயுமா



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 3:24 pm

சென்னையில்......chepakam stadium அருகிலும்....அங்கு தான் நான் தங்கி இருந்தேன்.......பிறகு.......அங்கு இருந்து....அரும்பாக்கம் செல்லும் வழியிலும் கண்டிருக்கிறேன்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 06, 2011 3:29 pm

ராமன், குயிலன் மற்றும் பூஜிதாவின் கருத்துக்கள் அருமை. பாராட்டுக்கள்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri May 06, 2011 3:34 pm

திருவல்லிக்கேணி மற்றும் லஸ் பகுதிகளில் பார்திருபீர்கள் என்று நினைக்கிறேன்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri May 06, 2011 3:36 pm

திருவல்லி கேணி தான்......நா பார்தது....கலைவாணர் அரங்கிற்கு அருகில்.......மைதானத்திற்கு அருகிலும்......



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
Sponsored content

PostSponsored content



Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக