புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
by ayyasamy ram Yesterday at 10:50 pm
» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 43 of 43 •
Page 43 of 43 • 1 ... 23 ... 41, 42, 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
யாதும் ஊரே யாவரும் கேளிர்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சினிமா செய்திக்கு நன்றி கார்த்தி
அசின் அலும்பு தாங்கல!': சலித்துக்கொள்ளும் பாலிவுட்
மும்பை: பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பவில்லை என்றால் அசினுக்கு தூக்கம் வராது போலிருக்கிறது.
பாலிவுட் மீடியாக்கள் அசினை தாக்குதவது அதிகரித்து வருவதாக அசின் தரப்பு கூறுகிறது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துகொள்ளும் முறை சரியில்லை. அந்த ஹீரோ கூட நடிக்க மாட்டேன், இந்த டைரக்டர் படத்தில் நடிக்க மாட்டேன் என இவர் போடும் கண்டிஷன்கள் பந்தாக்களோடு ஒப்பிடுகையில், வருகிற செய்திகள் ரொம்ப குறைவுதானாம்.
இப்போது வாரத்துக்கு ஒரு மேக்கப்மேன் என மாற்ற ஆரம்பித்துள்ளாராம். காரணம், பாலிவுட் மேக்கப்மேன்களுக்கு தன் முகவெட்டுக்கு ஏற்றமாதிரி மேக்கப் போடத் தெரியவில்லை என்கிறாராம் அசின்.
இதுவரை 4 மேக்கப்மேன்களுக்கு பேக்கப் சொல்லிவிட்டாராம். இவர் விரட்டிய மேக்கப்மேன்களில் ஒருவர் பல ஆண்டுகளாக அமிதாப் பச்சனுக்கு மேக்கப் போடுபவர் என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். இந்த விவகாரத்தை பாலிவுட் மீடியாக்கள் பெரிதாக்க முயல, சட்டென்று பம்மிவிட்டாராம் அசின்.
பாலிவுட்டில் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் எல்லாம் சத்தம் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கையில் ஒன்று அல்லது 2 படத்தை வைத்துக் கொண்டு அசின் பண்ற அலும்பு தாங்க முடியலப்பா என சலித்துக் கொள்கிறார்கள் பாலிவுட்டில்.
அப்படியும் அசின் பின்னால் ஒரு கூட்டம் ஏதாவது பரபரப்பு கிடைக்குமா என சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது!
தட்ஸ் தமிழ்
மும்பை: பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்ததில் இருந்து ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பவில்லை என்றால் அசினுக்கு தூக்கம் வராது போலிருக்கிறது.
பாலிவுட் மீடியாக்கள் அசினை தாக்குதவது அதிகரித்து வருவதாக அசின் தரப்பு கூறுகிறது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் நடந்துகொள்ளும் முறை சரியில்லை. அந்த ஹீரோ கூட நடிக்க மாட்டேன், இந்த டைரக்டர் படத்தில் நடிக்க மாட்டேன் என இவர் போடும் கண்டிஷன்கள் பந்தாக்களோடு ஒப்பிடுகையில், வருகிற செய்திகள் ரொம்ப குறைவுதானாம்.
இப்போது வாரத்துக்கு ஒரு மேக்கப்மேன் என மாற்ற ஆரம்பித்துள்ளாராம். காரணம், பாலிவுட் மேக்கப்மேன்களுக்கு தன் முகவெட்டுக்கு ஏற்றமாதிரி மேக்கப் போடத் தெரியவில்லை என்கிறாராம் அசின்.
இதுவரை 4 மேக்கப்மேன்களுக்கு பேக்கப் சொல்லிவிட்டாராம். இவர் விரட்டிய மேக்கப்மேன்களில் ஒருவர் பல ஆண்டுகளாக அமிதாப் பச்சனுக்கு மேக்கப் போடுபவர் என்பதுதான் இதில் சுவாரஸ்யமான விஷயம். இந்த விவகாரத்தை பாலிவுட் மீடியாக்கள் பெரிதாக்க முயல, சட்டென்று பம்மிவிட்டாராம் அசின்.
பாலிவுட்டில் பெரிய பெரிய நடிகர், நடிகைகள் எல்லாம் சத்தம் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கின்றனர். கையில் ஒன்று அல்லது 2 படத்தை வைத்துக் கொண்டு அசின் பண்ற அலும்பு தாங்க முடியலப்பா என சலித்துக் கொள்கிறார்கள் பாலிவுட்டில்.
அப்படியும் அசின் பின்னால் ஒரு கூட்டம் ஏதாவது பரபரப்பு கிடைக்குமா என சுற்றிக் கொண்டுதான் இருக்கிறது!
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
செல்வராகவன் அதிரடி நீக்கம்: விஸ்வரூபத்தை கமல் ஹாஸனே இயக்குகிறார்!!
கமல் - செல்வராகவன் இடையே கடுமையான கருத்துவேறுபாடு இருப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தன்னைப் பார்க்க வந்த செல்வராகவனை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமலே கமல் திருப்பி அனுப்பியதைப் பற்றியும் கூறியிருந்தோம்.
ஆனால் இதை மறுத்து வந்த தயாரிப்பாளர், கமல் - செல்வராகவன் குழு லண்டனில் படப்பிடிப்பு நடத்துவதாக நேற்று கூறியிருந்தாரம. ஆனால் இன்று அந்த செய்தி புஸ்வாணமாகிவிட்டது.
விஸ்வரூபம் படத்துக்காக கமல்-சோனாக்ஷி சின்ஹா லண்டன் போவது மட்டுமே உண்மை. ஆனால் படத்தை இயக்குபவர் செல்வராகவன் அல்ல. கமல்ஹாஸன்!!
டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கதை-திரைக்கதை-வசனம்- எழுதி இயக்குகிறார் கமல்ஹாஸன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.
செல்வராகவன் தூக்கப்பட்டது ஏன்?
கடந்த பல வாரங்களாகவே இந்தப் படம் தொடர்பாக கமல்-செல்வராகவன் இடையே கடும் பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டாராம்.
காத்திருக்க முடியாது...
அதுவரை காத்திருக்க முடியாது என கமல் கூறியதை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டாராம். நேற்று கமல்ஹாசனும் தயாரிப்பாளரும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இதன்படி இயக்குநராக இருந்த செல்வராகவன் தூக்கப்பட்டார். ஜுன் முதல் வாரத்திலிருந்து கமல்ஹாஸன் இயக்கத்தில் இந்தப் படம் ஆரம்பமாகிறது.
லண்டனில் படப்பிடிப்பு
படப்பிடிப்பு லண்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. 'தசாவதாரம்' படத்தை விட, பத்து மடங்கு பிரமாண்டமான முறையில், 'விஸ்வரூபம்' உருவாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. 'ஹாலிவுட்'டின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் பணிபுரிகிறார்கள்.
சோனாக்ஷி சின்ஹா
இளமையான புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் தோன்றுவார். அவருடைய தோற்றத்தை 'ஹாலிவுட்' தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். படத்தின் உடையலங்காரத்தை நடிகை கவுதமி கவனிக்கிறார்.
கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், ரெட் காமிரா மூலம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசனின் பிறந்தநாளான, வரும் நவம்பர் 7-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஹே ராம், விருமாண்டிக்குப் பிறகு கமல் நேரடி இயக்குநராகப் பணியாற்றும் மூன்றாவது படம் இது.
கமல் - செல்வராகவன் இடையே கடுமையான கருத்துவேறுபாடு இருப்பது குறித்து ஏற்கெனவே செய்தி வெளியிட்டிருந்தோம். தன்னைப் பார்க்க வந்த செல்வராகவனை இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்து சந்திக்காமலே கமல் திருப்பி அனுப்பியதைப் பற்றியும் கூறியிருந்தோம்.
ஆனால் இதை மறுத்து வந்த தயாரிப்பாளர், கமல் - செல்வராகவன் குழு லண்டனில் படப்பிடிப்பு நடத்துவதாக நேற்று கூறியிருந்தாரம. ஆனால் இன்று அந்த செய்தி புஸ்வாணமாகிவிட்டது.
விஸ்வரூபம் படத்துக்காக கமல்-சோனாக்ஷி சின்ஹா லண்டன் போவது மட்டுமே உண்மை. ஆனால் படத்தை இயக்குபவர் செல்வராகவன் அல்ல. கமல்ஹாஸன்!!
டெலி போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை கதை-திரைக்கதை-வசனம்- எழுதி இயக்குகிறார் கமல்ஹாஸன் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர்.
செல்வராகவன் தூக்கப்பட்டது ஏன்?
கடந்த பல வாரங்களாகவே இந்தப் படம் தொடர்பாக கமல்-செல்வராகவன் இடையே கடும் பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
செல்வராகவன் இப்போது, அவருடைய தம்பி தனுஷ் நடிக்கும் இரண்டாம் உலகம் என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தை முடிப்பதற்கு இன்னும் 2 மாதங்கள் ஆகும் என்று செல்வராகவன் உறுதியாக கூறிவிட்டாராம்.
காத்திருக்க முடியாது...
அதுவரை காத்திருக்க முடியாது என கமல் கூறியதை தயாரிப்பாளரும் ஏற்றுக் கொண்டாராம். நேற்று கமல்ஹாசனும் தயாரிப்பாளரும் நேரில் சந்தித்து இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டும் வகையில் புதிய உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.
இதன்படி இயக்குநராக இருந்த செல்வராகவன் தூக்கப்பட்டார். ஜுன் முதல் வாரத்திலிருந்து கமல்ஹாஸன் இயக்கத்தில் இந்தப் படம் ஆரம்பமாகிறது.
லண்டனில் படப்பிடிப்பு
படப்பிடிப்பு லண்டன், கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. 'தசாவதாரம்' படத்தை விட, பத்து மடங்கு பிரமாண்டமான முறையில், 'விஸ்வரூபம்' உருவாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில், ரூ.150 கோடி செலவில் இந்த படம் தயாராகிறது. 'ஹாலிவுட்'டின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், படத்தில் பணிபுரிகிறார்கள்.
சோனாக்ஷி சின்ஹா
இளமையான புதிய தோற்றத்தில் கமல்ஹாசன் இந்த படத்தில் தோன்றுவார். அவருடைய தோற்றத்தை 'ஹாலிவுட்' தொழில்நுட்ப கலைஞர்கள் வடிவமைத்துள்ளனர். படத்தின் உடையலங்காரத்தை நடிகை கவுதமி கவனிக்கிறார்.
கதாநாயகியாக, பிரபல இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா நடிக்கிறார். சங்கர் எசான் லாய் இசையமைக்கிறார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில், ரெட் காமிரா மூலம் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
கமல்ஹாசனின் பிறந்தநாளான, வரும் நவம்பர் 7-ம் தேதி படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டுள்ளார். ஹே ராம், விருமாண்டிக்குப் பிறகு கமல் நேரடி இயக்குநராகப் பணியாற்றும் மூன்றாவது படம் இது.
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
ஜுன் 5-ம் தேதி நடிகர் ராதாரவி மகன் திருமணம்!
சென்னை: நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை அவர் மணக்கிறார்.
மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகனான நடிகர் ராதா ரவிக்கு ரேகா என்ற மகளும், ஹரி ராதாரவி என்ற மகனும் இருக்கிறார்கள்.
மகள் ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மகன் ஹரி ராதாரவி, பி.காம் பட்டதாரி. 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
ஹரி ராதாரவிக்கும் பெங்களூரைச் சேர்ந்த டி.மோகன்-சாந்தி தம்பதிகளின் மகள் திவ்யா என்ற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில், ஜுன் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இந்தத் திருமணம் நடக்கிறது.
முன்னதாக, ஜுன் 4-ந் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தத் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் ராதாரவி. ஆனால் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா என்று தெரியவில்லை
தட்ஸ் தமிழ்
சென்னை: நடிகர் சங்க பொதுச் செயலாளர், நடிகர் ராதாரவியின் மகன் ஹரி ராதா ரவிக்கு வரும் ஜூன் 5-ம் தேதி சென்னையில் திருமணம் நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த திவ்யா என்ற மகாலட்சுமியை அவர் மணக்கிறார்.
மறைந்த நடிகர் எம் ஆர் ராதாவின் மகனான நடிகர் ராதா ரவிக்கு ரேகா என்ற மகளும், ஹரி ராதாரவி என்ற மகனும் இருக்கிறார்கள்.
மகள் ரேகாவுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. மகன் ஹரி ராதாரவி, பி.காம் பட்டதாரி. 'திருமந்திரம்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
ஹரி ராதாரவிக்கும் பெங்களூரைச் சேர்ந்த டி.மோகன்-சாந்தி தம்பதிகளின் மகள் திவ்யா என்ற மகாலட்சுமிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலசில், ஜுன் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இந்தத் திருமணம் நடக்கிறது.
முன்னதாக, ஜுன் 4-ந் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு மணமக்களுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தத் தேர்தலில் அதிமுகவுக்காக தீவிர பிரச்சாரம் செய்தவர் ராதாரவி. ஆனால் திருமணத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வருவாரா என்று தெரியவில்லை
தட்ஸ் தமிழ்
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கழற்றிவிடப்பட்ட இயக்குனர்
பூமி நாயகனும், காதல் கொண்ட இயக்குனரும் இணைந்து படம் எடுக்கிறார்கள் என்றபோதே எதிர்பார்த்ததுதான்… இந்தக் கூட்டணி கரை சேராது. அதேபோல்தான் நடந்திருக்கிறது.
காதல் கொண்டவரின் செகண்ட் வேல்ட் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. அதுவரை காத்திருக்க முடியாது என்பதாலேயே பூமி நாயகன் அவரை கழற்றிவிட்டு படத்தின் இயக்குனர் பொறுப்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் கதை மற்றும் திரைக்கதையில் ஏற்கனவே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதனால்தான் இந்தப் பிளவு என்கிறார்கள்.
எப்படியோ… காதல் கொண்டவர் கழற்றிவிடப்பட்டது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
தமிழ் சினிமா
பூமி நாயகனும், காதல் கொண்ட இயக்குனரும் இணைந்து படம் எடுக்கிறார்கள் என்றபோதே எதிர்பார்த்ததுதான்… இந்தக் கூட்டணி கரை சேராது. அதேபோல்தான் நடந்திருக்கிறது.
காதல் கொண்டவரின் செகண்ட் வேல்ட் படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்கள் நடைபெறும் என தெரிகிறது. அதுவரை காத்திருக்க முடியாது என்பதாலேயே பூமி நாயகன் அவரை கழற்றிவிட்டு படத்தின் இயக்குனர் பொறுப்பையும் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் கதை மற்றும் திரைக்கதையில் ஏற்கனவே இருவருக்கும் கருத்து வேறுபாடு அதனால்தான் இந்தப் பிளவு என்கிறார்கள்.
எப்படியோ… காதல் கொண்டவர் கழற்றிவிடப்பட்டது மட்டும் உறுதியாகியிருக்கிறது.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
அடுத்தடுத்து ஏமாற்றம்! கவுதம் மேனன் கோபம்!!
விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிப்படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதும், அஜித் ரசிகர்கள் குஷியானார்கள். துப்பறியும் ஆனந்த் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் கதையை கேட்ட அஜித், ஏனோ உடனடியாக அந்த படத்தில் நடிக்காமல், டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டார். இதில் கடும் கோபமடைந்த கவுதம்மேனன், “இனிமேல் அஜித் எனக்கு தேவையில்லை என கூறிவிட்டார்.
இதையடுத்து அந்த கதையை வேறு நடிகரை வைத்து எடுக்க திட்டமிட்ட கவுதம் மேனன், கதையில் சிலபல மாற்றங்களை செய்தார். ஹீரோ தவிர மற்ற கேரக்டர்கள் தேர்வில் இறங்கிய கவுதம், முக்கிய கேரக்டரில் நடிக்க பிரகாஷ் ராஜிடம் கால்ஷீட் கேட்டார். கதையை முழுமையாக கேட்ட பிரகாஷ் ராஜோ… சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருக்கிறார். அப்படி மாற்ற முடியாது என்று கூறியதால் கால்ஷீட் தர மறுத்து விட்டாராம்.
முதலில் அஜித், இப்போது பிரகாஷ் ராஜ் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் ஏமாற்றம் தந்ததால் கோபத்தில் இருக்கும் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜிக்காக ஒதுக்கப்பட்ட கேரக்டரில் நடிகர் ஜீவனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
தமிழ் சினிமா
விண்ணைத்தாண்டி வருவாயா வெற்றிப்படத்திற்கு பிறகு கவுதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்கிறார் என்ற செய்தி வெளியானதும், அஜித் ரசிகர்கள் குஷியானார்கள். துப்பறியும் ஆனந்த் என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் கதையை கேட்ட அஜித், ஏனோ உடனடியாக அந்த படத்தில் நடிக்காமல், டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்திற்கு கால்ஷீட் கொடுத்து விட்டார். இதில் கடும் கோபமடைந்த கவுதம்மேனன், “இனிமேல் அஜித் எனக்கு தேவையில்லை என கூறிவிட்டார்.
இதையடுத்து அந்த கதையை வேறு நடிகரை வைத்து எடுக்க திட்டமிட்ட கவுதம் மேனன், கதையில் சிலபல மாற்றங்களை செய்தார். ஹீரோ தவிர மற்ற கேரக்டர்கள் தேர்வில் இறங்கிய கவுதம், முக்கிய கேரக்டரில் நடிக்க பிரகாஷ் ராஜிடம் கால்ஷீட் கேட்டார். கதையை முழுமையாக கேட்ட பிரகாஷ் ராஜோ… சில மாற்றங்களை செய்யச் சொல்லியிருக்கிறார். அப்படி மாற்ற முடியாது என்று கூறியதால் கால்ஷீட் தர மறுத்து விட்டாராம்.
முதலில் அஜித், இப்போது பிரகாஷ் ராஜ் என அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் ஏமாற்றம் தந்ததால் கோபத்தில் இருக்கும் கவுதம் மேனன், பிரகாஷ் ராஜிக்காக ஒதுக்கப்பட்ட கேரக்டரில் நடிகர் ஜீவனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
நீச்சல் உடையில் நடிக்கமாட்டேன் – காஜல் அகர்வால்
பழனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால். சரோஜா, மோதிவிளையாடு, நான் மகான் அல்ல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். காஜல் அகர்வால் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாகவும், நீச்சல் உடைக்கு இறங்கி வந்திருப்பதாகவும் தெலுங்கு படஉலகில் கிசுகிசுக்கள் பரவின.
இதுபற்றி காஜல்அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நீச்சல் உடையில் நடிப்பதுதான் கவர்ச்சி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாடர்ன் டிரெஸ்சும் கூட கவர்ச்சியாக தெரியலாம். எனக்கு நீச்சல் உடையில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் ஏற்கமாட்டேன். மறுத்து விடுவேன்.
தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறோம். இந்தியிலும் நடித்துள்ளேன். என்னைப்பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. அவற்றில் உண்மை இல்லை. விரைவில் ஐதராபாத்தில் வீடு பார்த்து தங்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
தமிழ் சினிமா
பழனி படத்தில் கதாநாயகியாக நடித்தவர் காஜல் அகர்வால். சரோஜா, மோதிவிளையாடு, நான் மகான் அல்ல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உள்ளார். காஜல் அகர்வால் கவர்ச்சிக்கு மாறி இருப்பதாகவும், நீச்சல் உடைக்கு இறங்கி வந்திருப்பதாகவும் தெலுங்கு படஉலகில் கிசுகிசுக்கள் பரவின.
இதுபற்றி காஜல்அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
நீச்சல் உடையில் நடிப்பதுதான் கவர்ச்சி என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. மாடர்ன் டிரெஸ்சும் கூட கவர்ச்சியாக தெரியலாம். எனக்கு நீச்சல் உடையில் நடிக்க அழைப்பு வந்தால் நிச்சயம் ஏற்கமாட்டேன். மறுத்து விடுவேன்.
தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறோம். இந்தியிலும் நடித்துள்ளேன். என்னைப்பற்றி நிறைய வதந்திகள் பரவுகின்றன. அவற்றில் உண்மை இல்லை. விரைவில் ஐதராபாத்தில் வீடு பார்த்து தங்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
கல்லா கட்டும் கஞ்சா! அதிர்ச்சியில் ஆபாச காமெடியன்!!
சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் வலம் வந்த வைகைப்புயலுக்கு அடுத்த 5 ஆண்டுகாலம் இருண்ட காலம்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் முதலில் சந்தோஷப்பட்டவர், கடந்த திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு நடத்தும் பாராட்டு விழாக்களிலெல்லாம் கலந்து கொண்டு, புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளிய ஆபாச காமெடியன்தான். அதிரடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் வாழ்த்து சொல்லி சினிமாக்காரர்களுக்கே உரிய ஜால்ராவை போட ஆரம்பித்து விட்டார். அம்மாவுக்கு நெருக்கம் என்று காட்டிக் கொண்டால், எப்படியும் வைகைப்புயல் இழக்கும் வாய்ப்புகள் எல்லாம் தனக்கே வரும் என தப்புக் கணக்கு போட்ட ஆபாச காமெடியனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.
ஆம்! புயலுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்களை நிரப்பிக் கொண்டிருப்பவர் கஞ்சா காமெடியன்தான். தேர்தல் முடிவுக்கு பிறகு கடந்த 10 நாட்களில் மட்டும் கஞ்சாவுக்கு 3 வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதனால் தான் நினைத்தது நடக்கவில்லையே என்ற அதிர்ச்சியில் இருக்கிறாராம் ஆபாச காமெடியன். அதிலும் மன்னார் வளைகுடா என்ற படத்தில் ஹீரோ கம் காமெடியனாக நடிப்பதற்கான வாய்ப்பும் கஞ்சாவுக்கு போய் விட்டதால் ரொம்பவே அதிர்ச்சி கம் கோபத்தில் இருக்கிறாராம்.
புதுப்பட வாய்ப்புகளால் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் கஞ்சா.
புதுப்பட வாய்ப்புக்காக வழக்கம்போல ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கிறார் ஆபாசம காமெடியன்.
புதுப்பட வாய்ப்பே இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார் வைகைப்புயல்!
தமிழ் சினிமா
சட்டமன்ற தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் வலம் வந்த வைகைப்புயலுக்கு அடுத்த 5 ஆண்டுகாலம் இருண்ட காலம்தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இதனால் முதலில் சந்தோஷப்பட்டவர், கடந்த திமுக ஆட்சியின்போது அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு நடத்தும் பாராட்டு விழாக்களிலெல்லாம் கலந்து கொண்டு, புகழோ புகழென்று புகழ்ந்து தள்ளிய ஆபாச காமெடியன்தான். அதிரடியாக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் வாழ்த்து சொல்லி சினிமாக்காரர்களுக்கே உரிய ஜால்ராவை போட ஆரம்பித்து விட்டார். அம்மாவுக்கு நெருக்கம் என்று காட்டிக் கொண்டால், எப்படியும் வைகைப்புயல் இழக்கும் வாய்ப்புகள் எல்லாம் தனக்கே வரும் என தப்புக் கணக்கு போட்ட ஆபாச காமெடியனுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருக்கிறது.
ஆம்! புயலுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்களை நிரப்பிக் கொண்டிருப்பவர் கஞ்சா காமெடியன்தான். தேர்தல் முடிவுக்கு பிறகு கடந்த 10 நாட்களில் மட்டும் கஞ்சாவுக்கு 3 வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இதனால் தான் நினைத்தது நடக்கவில்லையே என்ற அதிர்ச்சியில் இருக்கிறாராம் ஆபாச காமெடியன். அதிலும் மன்னார் வளைகுடா என்ற படத்தில் ஹீரோ கம் காமெடியனாக நடிப்பதற்கான வாய்ப்பும் கஞ்சாவுக்கு போய் விட்டதால் ரொம்பவே அதிர்ச்சி கம் கோபத்தில் இருக்கிறாராம்.
புதுப்பட வாய்ப்புகளால் கல்லா கட்டிக் கொண்டிருக்கிறார் கஞ்சா.
புதுப்பட வாய்ப்புக்காக வழக்கம்போல ஜால்ரா தட்டிக்கொண்டிருக்கிறார் ஆபாசம காமெடியன்.
புதுப்பட வாய்ப்பே இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார் வைகைப்புயல்!
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
சல்மான்கானுடன் காதல் இல்லை: தென் இந்தியரைதான் திருமணம் செய்வேன் -அசின்
சல்மான்கானும், அசினும் காதலிப்பதாக மும்பை திரையுலகில் தொடர்ந்து வதந்திகள் பரவுகின்றன. இருவரும் “லண்டன் டிரீம்ஸ்”, “ரெடி” படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
இந்த வதந்திகள் பற்றி அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சல்மான்கானுக்கும் எனக்கும் காதல் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன. புதுப்படங்களில் எனக்காக வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்கிறார் என்றும் கிசு கிசுக்கின்றனர். சல்மான்கான் வயதில் எனக்கு பாதி வயதுதான் ஆகிறது. எங்களுக்கு கல்யாணம் என்று வரும் செய்திகளை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை. எனக்கும் குடும்பம் இருக்கிறது.
அவர்கள் இது போன்ற செய்திகளை பார்த்து எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்பதை வதந்திகளை பரப்புவோர் புரிந்து கொள்ள வேண்டும். நான் தென்இந்தியரைத்தான் திருமணம் செய்வேன். எனது திருமணம் ரகசியமாக நடக்காது. எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன். ஏற்கனவே அமீர்கான், சல்மான்கான் போன்றோருடன் நடித்து விட்டேன்.
தற்போது ஷாருக்கான் ஜோடியாக “உஸ்டேப்ஸ்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். டெல்லியைச் சேர்ந்த நாயகனும் சென்னையைச் சேர்ந்த நாயகியும் ஆமதாபாத்தில் கல்லூரியில் படிக்கின்றனர். அவர்களின் வித்தியாசமான கலாசாரம் காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் போன்ற கதையம்சத்துடன் இப்படம் உருவாகிறது.
தமிழ் சினிமா
சல்மான்கானும், அசினும் காதலிப்பதாக மும்பை திரையுலகில் தொடர்ந்து வதந்திகள் பரவுகின்றன. இருவரும் “லண்டன் டிரீம்ஸ்”, “ரெடி” படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
இந்த வதந்திகள் பற்றி அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சல்மான்கானுக்கும் எனக்கும் காதல் என்றும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன. புதுப்படங்களில் எனக்காக வாய்ப்பு கேட்டு சிபாரிசு செய்கிறார் என்றும் கிசு கிசுக்கின்றனர். சல்மான்கான் வயதில் எனக்கு பாதி வயதுதான் ஆகிறது. எங்களுக்கு கல்யாணம் என்று வரும் செய்திகளை பார்த்து சிரிப்பதா? அழுவதா? என்று புரியவில்லை. எனக்கும் குடும்பம் இருக்கிறது.
அவர்கள் இது போன்ற செய்திகளை பார்த்து எவ்வளவு வருத்தப்படுவார்கள் என்பதை வதந்திகளை பரப்புவோர் புரிந்து கொள்ள வேண்டும். நான் தென்இந்தியரைத்தான் திருமணம் செய்வேன். எனது திருமணம் ரகசியமாக நடக்காது. எல்லோருக்கும் சொல்லி விட்டுத்தான் திருமணம் செய்து கொள்வேன். ஏற்கனவே அமீர்கான், சல்மான்கான் போன்றோருடன் நடித்து விட்டேன்.
தற்போது ஷாருக்கான் ஜோடியாக “உஸ்டேப்ஸ்” என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். டெல்லியைச் சேர்ந்த நாயகனும் சென்னையைச் சேர்ந்த நாயகியும் ஆமதாபாத்தில் கல்லூரியில் படிக்கின்றனர். அவர்களின் வித்தியாசமான கலாசாரம் காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் போன்ற கதையம்சத்துடன் இப்படம் உருவாகிறது.
தமிழ் சினிமா
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
- Sponsored content
Page 43 of 43 • 1 ... 23 ... 41, 42, 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 43 of 43
|
|