புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 37 of 43 •
Page 37 of 43 • 1 ... 20 ... 36, 37, 38 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யாதும் ஊரே யாவரும் கேளிர்
"ராஜேஷ்கிட்ட ஒப்படைச்சிட்டேன்"
தமிழ் சினிமாவின் இளம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஹீரோ அரிதாரம் பூசியிருக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் உதயநிதி தான் ஹீரோ. உதயநிதியின் நடை, உடை, பாவனையில் ஒரு பக்காவான ஹீரோவுக்குத் தேவையான மாற்றம். பட்டரில் இழைத்த லேட்டஸ்ட் இறக்குமதி ஹன்ஸிகா மோத்வானிதான் ஜோடி. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கிடைத்த 'டச்' மூலமாக உதயநிதி ஸ்டாலினும், இயக்குநர் ராஜேஷும் 'நண்பேன்ன்ன்டா...' என்று இப்படம் மூலம் கைகோர்த்திருக்கிறார்கள்.
"கண்களை மூட வைக்கிற ஆபாசமோ, காதுகளை கூச வைக்கிற இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாத படங்களைத்தான் ஒரு தயாரிப்பாளராக இதுவரை கொடுத்திருக்கேன். நான் நடிகன் ஆனாலும் இந்த டீஸன்ட்டான ஃபார்முலாவை விட்டுக் கொடுக்கமாட்டேன். எல்லோரும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிற படங்களை எடுக்கிறது, நடிக்கிறதுதான் என்னோட ஆசை" என்று தனது ஃபேவரிட் புன்னகையைத் தவழ விடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதய் சொல்ற ஃபார்முலாவுக்கு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல நான் கியாரண்டி! இந்த சிங்கிள் ஸ்டேட்மெண்ட்டோடு, அடுத்த ஷாட்டுக்கு கிளம்புகிறார் இயக்குநர் ராஜேஷ். மொழு மொழுவென இருக்கும் ஹன்ஸிகா பக்கம் நம் பார்வை திரும்ப, அதைப் புரிந்துகொண்டு புன்னகைத்த உதயநிதி, "பெண்களுக்குத்தான் முதல் இடம். நீங்க அவங்ககிட்ட முதல்ல பேசுங்க" என்று எஸ்கேப்பாகப் பார்த்தார். ஆனால், ஒரே அமுக்காக அமுக்கினோம்.
ஹேய்.. உதய் ரொம்ப கூல் யா... தனுஷ், ஜெயம் ரவி இவங்க கூட சேர்ந்து படம் பண்ணியிருக்கிறேன். அவங்க அளவுக்கு உதய்க்கு அனுபவம் இல்லாட்டாலும் கூட கேமராவுக்கு முன்னாடி கேஷுவலாக நிற்கிறார். ஆக்டிங்கும் நல்லா வருது.. உதய்க்கு 'பெட்டர் ஆக்டிங்' சர்டிஃபிகேட் கொடுத்தார் 'பட்டர் லுக்கிங்' ஹன்ஸி.
ஐயையோ! சும்மா சொல்றாங்க. நான் எப்படி நடிக்கப் போறேன்னு டைரக்டர் ராஜேஷ் முதல்ல பயந்தது உண்மைதான். 'உங்களை வைச்சு ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணலாமா'ன்னு கேட்டார். ஓ.கே சொன்னேன். அவ்வளவுதான். இருபது நாள் எல்லா சீன்களிலும் நடிக்க வைச்சு டிரில் எடுத்துட்டார். ஆனால் அந்த டெஸ்ட் ஷூட் விஷுவல்களை பார்த்ததும் ரிலாக்ஸாகிட்டார். எனக்கும் ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. இப்பக்கூட நாங்க இதுவரை எடுத்த காட்சிகளை எடிட் பண்ணி, ரஷ் பார்த்தோம். நல்லா வந்திருக்கு.
'ஆதவன்' படத்துல ஒரே காட்சியில மட்டும்தான் நடிச்சேன். அதுல என்னோட ஸ்கிரீன் பாடிலாங்வேஜ் சுமாராகத்தான் இருந்துச்சுன்னு நிறையப்பேர் சொன்னாங்க. சூர்யா, நயன்தாரா, சரோஜா தேவி அம்மான்னு பெரிய ஆர்டிஸ்ட்டுகள் இருந்ததால ஒரு உதறல் இருந்துச்சு. அதுவுமில்லாம திடீர்னு நடிக்கச் சொல்லிட்டாங்க. அந்த உதறல் இருக்கக் கூடாதுன்னு இப்போ தினமும் டான்ஸ் கிளாஸூக்கு போறேன். பவர் பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஆக்ஷன் பயிற்சிகள் பண்றேன். ஜிம்முக்குப் போறேன். இப்போதாங்க ஒரு ஹீரோவாகிறது எவ்வளவு கஷ்டம்னு புரியுது.
நான் ஹீரோவாக நடிக்கப் போறேன்னு சொன்னதுமே சூர்யாவும், ஆர்யாவும் என்னை உற்சாகப்படுத்தினாங்க. ஆர்யா தினமும் காலையில ஆறு மணிக்கே போன் பண்ணி, 'என்ன பாஸ் ஜிம்முக்கு இன்னும் கிளம்பலையா'ன்னு கேட்பார். உடனே தடதடக்க கிளம்பி ஓடுவேன். இவங்க உற்சாகப்படுத்துறது ஒரு பக்கம்னா, அப்பாவும் பிஸியான பிரசார நிகழ்ச்சிகளுக்கு நடுவேயும் சாயந்தரமா போன் பண்ணி விசாரித்தாங்க. அதனால என்னோட பொறுப்பை உணர்ந்து ஒரு நடிகனாக என்னை இயக்குநர் ராஜேஷ்கிட்ட ஒப்படைச்சிட்டேன், என்று சிரிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
'ஓ.கே...ஓ.கே' என்றபடி நாம் கை குலுக்க, 'பாஸ்.. இதுவும் எங்க படத்தோட டைட்டில்தான். 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யைத்தான் சுருக்கமாக 'ஓ.கே..ஓ.கே..'ன்னு வைச்சிருக்கோம் என்றார் உற்சாகமாக.
TMT
தமிழ் சினிமாவின் இளம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஹீரோ அரிதாரம் பூசியிருக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் உதயநிதி தான் ஹீரோ. உதயநிதியின் நடை, உடை, பாவனையில் ஒரு பக்காவான ஹீரோவுக்குத் தேவையான மாற்றம். பட்டரில் இழைத்த லேட்டஸ்ட் இறக்குமதி ஹன்ஸிகா மோத்வானிதான் ஜோடி. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கிடைத்த 'டச்' மூலமாக உதயநிதி ஸ்டாலினும், இயக்குநர் ராஜேஷும் 'நண்பேன்ன்ன்டா...' என்று இப்படம் மூலம் கைகோர்த்திருக்கிறார்கள்.
"கண்களை மூட வைக்கிற ஆபாசமோ, காதுகளை கூச வைக்கிற இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாத படங்களைத்தான் ஒரு தயாரிப்பாளராக இதுவரை கொடுத்திருக்கேன். நான் நடிகன் ஆனாலும் இந்த டீஸன்ட்டான ஃபார்முலாவை விட்டுக் கொடுக்கமாட்டேன். எல்லோரும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிற படங்களை எடுக்கிறது, நடிக்கிறதுதான் என்னோட ஆசை" என்று தனது ஃபேவரிட் புன்னகையைத் தவழ விடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.
உதய் சொல்ற ஃபார்முலாவுக்கு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல நான் கியாரண்டி! இந்த சிங்கிள் ஸ்டேட்மெண்ட்டோடு, அடுத்த ஷாட்டுக்கு கிளம்புகிறார் இயக்குநர் ராஜேஷ். மொழு மொழுவென இருக்கும் ஹன்ஸிகா பக்கம் நம் பார்வை திரும்ப, அதைப் புரிந்துகொண்டு புன்னகைத்த உதயநிதி, "பெண்களுக்குத்தான் முதல் இடம். நீங்க அவங்ககிட்ட முதல்ல பேசுங்க" என்று எஸ்கேப்பாகப் பார்த்தார். ஆனால், ஒரே அமுக்காக அமுக்கினோம்.
ஹேய்.. உதய் ரொம்ப கூல் யா... தனுஷ், ஜெயம் ரவி இவங்க கூட சேர்ந்து படம் பண்ணியிருக்கிறேன். அவங்க அளவுக்கு உதய்க்கு அனுபவம் இல்லாட்டாலும் கூட கேமராவுக்கு முன்னாடி கேஷுவலாக நிற்கிறார். ஆக்டிங்கும் நல்லா வருது.. உதய்க்கு 'பெட்டர் ஆக்டிங்' சர்டிஃபிகேட் கொடுத்தார் 'பட்டர் லுக்கிங்' ஹன்ஸி.
ஐயையோ! சும்மா சொல்றாங்க. நான் எப்படி நடிக்கப் போறேன்னு டைரக்டர் ராஜேஷ் முதல்ல பயந்தது உண்மைதான். 'உங்களை வைச்சு ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணலாமா'ன்னு கேட்டார். ஓ.கே சொன்னேன். அவ்வளவுதான். இருபது நாள் எல்லா சீன்களிலும் நடிக்க வைச்சு டிரில் எடுத்துட்டார். ஆனால் அந்த டெஸ்ட் ஷூட் விஷுவல்களை பார்த்ததும் ரிலாக்ஸாகிட்டார். எனக்கும் ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. இப்பக்கூட நாங்க இதுவரை எடுத்த காட்சிகளை எடிட் பண்ணி, ரஷ் பார்த்தோம். நல்லா வந்திருக்கு.
'ஆதவன்' படத்துல ஒரே காட்சியில மட்டும்தான் நடிச்சேன். அதுல என்னோட ஸ்கிரீன் பாடிலாங்வேஜ் சுமாராகத்தான் இருந்துச்சுன்னு நிறையப்பேர் சொன்னாங்க. சூர்யா, நயன்தாரா, சரோஜா தேவி அம்மான்னு பெரிய ஆர்டிஸ்ட்டுகள் இருந்ததால ஒரு உதறல் இருந்துச்சு. அதுவுமில்லாம திடீர்னு நடிக்கச் சொல்லிட்டாங்க. அந்த உதறல் இருக்கக் கூடாதுன்னு இப்போ தினமும் டான்ஸ் கிளாஸூக்கு போறேன். பவர் பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஆக்ஷன் பயிற்சிகள் பண்றேன். ஜிம்முக்குப் போறேன். இப்போதாங்க ஒரு ஹீரோவாகிறது எவ்வளவு கஷ்டம்னு புரியுது.
நான் ஹீரோவாக நடிக்கப் போறேன்னு சொன்னதுமே சூர்யாவும், ஆர்யாவும் என்னை உற்சாகப்படுத்தினாங்க. ஆர்யா தினமும் காலையில ஆறு மணிக்கே போன் பண்ணி, 'என்ன பாஸ் ஜிம்முக்கு இன்னும் கிளம்பலையா'ன்னு கேட்பார். உடனே தடதடக்க கிளம்பி ஓடுவேன். இவங்க உற்சாகப்படுத்துறது ஒரு பக்கம்னா, அப்பாவும் பிஸியான பிரசார நிகழ்ச்சிகளுக்கு நடுவேயும் சாயந்தரமா போன் பண்ணி விசாரித்தாங்க. அதனால என்னோட பொறுப்பை உணர்ந்து ஒரு நடிகனாக என்னை இயக்குநர் ராஜேஷ்கிட்ட ஒப்படைச்சிட்டேன், என்று சிரிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
'ஓ.கே...ஓ.கே' என்றபடி நாம் கை குலுக்க, 'பாஸ்.. இதுவும் எங்க படத்தோட டைட்டில்தான். 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யைத்தான் சுருக்கமாக 'ஓ.கே..ஓ.கே..'ன்னு வைச்சிருக்கோம் என்றார் உற்சாகமாக.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 37 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
ஹன்சிகாவுக்கு ஊசி
ஹன்சிகா மோத்வானியின் பருமனான உடம்பை பார்த்து வயசு இருபதுக்கும் மேல் இருக்குமா என்று கேட்கிறார்களாம் திரையுலகத்தில். உண்மையில் என் வயசு இவ்வளவுதான் என்று அவர் சொல்லும் வயசை கேட்டால் மயக்கமே வந்துவிடும். பதினாறுக்கும் கம்மி என்கிறாராம்.
சிவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்ற வடிவேலுவின் டயலாக் இவருக்கு தெரிந்து இப்படி சொல்கிறாரோ என்று கிண்டலடித்தாராம் ஒரு ஹீரோ. எப்படியோ இவர் குறித்து ஆராய்ந்து பார்த்து விசாரித்து தெரிந்து கொண்ட யூனிட் ஆட்கள் ஹன்சிகாவின் வளர்த்திக்கு ஒரு சரியான காரணம் கண்டு பிடித்துவிட்டார்கள்.
அதைதான் போகிற இடத்திலெல்லாம் பரப்பி வருகிறார்கள். முன்பு மந்த்ரா என்றொரு நடிகை இருந்தார். அவர் எப்படி ஹார்மோன் ஊசியை போட்டுக் கொண்டு பெரிய மனுஷியாக காட்சியளித்தாரோ, அதே மருத்துவ மகத்துவம்தான் இவர் விஷயத்திலும் என்கிறார்கள். எது உண்மையோ?
TMT
ஹன்சிகா மோத்வானியின் பருமனான உடம்பை பார்த்து வயசு இருபதுக்கும் மேல் இருக்குமா என்று கேட்கிறார்களாம் திரையுலகத்தில். உண்மையில் என் வயசு இவ்வளவுதான் என்று அவர் சொல்லும் வயசை கேட்டால் மயக்கமே வந்துவிடும். பதினாறுக்கும் கம்மி என்கிறாராம்.
சிவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்ற வடிவேலுவின் டயலாக் இவருக்கு தெரிந்து இப்படி சொல்கிறாரோ என்று கிண்டலடித்தாராம் ஒரு ஹீரோ. எப்படியோ இவர் குறித்து ஆராய்ந்து பார்த்து விசாரித்து தெரிந்து கொண்ட யூனிட் ஆட்கள் ஹன்சிகாவின் வளர்த்திக்கு ஒரு சரியான காரணம் கண்டு பிடித்துவிட்டார்கள்.
அதைதான் போகிற இடத்திலெல்லாம் பரப்பி வருகிறார்கள். முன்பு மந்த்ரா என்றொரு நடிகை இருந்தார். அவர் எப்படி ஹார்மோன் ஊசியை போட்டுக் கொண்டு பெரிய மனுஷியாக காட்சியளித்தாரோ, அதே மருத்துவ மகத்துவம்தான் இவர் விஷயத்திலும் என்கிறார்கள். எது உண்மையோ?
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 37 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
தள்ளிப்போட்ட விமல்
முன்னணி நடிகர்கள் யார் திருமணம் செய்தாலும் குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பிதழாவது வைப்பார்கள். சிலர் எல்லாரையும் நேரில் வரவழைத்து விருந்து கொடுப்பது சம்பிரதாயம். இந்த வழக்கம் எதையும் பின்பற்றவே இல்லை விமல்.
காரணம் இவரே அவசரம் அவசரமாக வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதுதான். ஒரு முறை வேறொரு பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர்களிடம் இதற்காக வருத்தம் தெரிவித்தவர், விரைவில் உங்களையெல்லாம் அழைத்து உங்கள் முன்னிலையில் ஒருமுறை எங்கள் திருமணத்தை நடத்தணும்னு ஆசைப்படுறேன் என்றார்.
அந்த பிரஸ்மீட்டோடு அதையும் மறந்துவிட்டார். இப்போது விமல் அப்பாவாக ஆகப் போகிறாராம். மனைவி மூன்று மாத கர்ப்பம். பேசாம குழந்தையும் பிறந்தபின் குடும்பத்தோடு பிரஸ்சை மீட் பண்ணினா போச்சு. என்ன அவசரம்?
TMT
முன்னணி நடிகர்கள் யார் திருமணம் செய்தாலும் குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பிதழாவது வைப்பார்கள். சிலர் எல்லாரையும் நேரில் வரவழைத்து விருந்து கொடுப்பது சம்பிரதாயம். இந்த வழக்கம் எதையும் பின்பற்றவே இல்லை விமல்.
காரணம் இவரே அவசரம் அவசரமாக வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதுதான். ஒரு முறை வேறொரு பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர்களிடம் இதற்காக வருத்தம் தெரிவித்தவர், விரைவில் உங்களையெல்லாம் அழைத்து உங்கள் முன்னிலையில் ஒருமுறை எங்கள் திருமணத்தை நடத்தணும்னு ஆசைப்படுறேன் என்றார்.
அந்த பிரஸ்மீட்டோடு அதையும் மறந்துவிட்டார். இப்போது விமல் அப்பாவாக ஆகப் போகிறாராம். மனைவி மூன்று மாத கர்ப்பம். பேசாம குழந்தையும் பிறந்தபின் குடும்பத்தோடு பிரஸ்சை மீட் பண்ணினா போச்சு. என்ன அவசரம்?
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 37 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
நயனதாரா கல்யாணம் நடக்கட்டும், பார்க்கலாம்-பொடி வைக்கும் சிம்பு
எனக்கு ஏற்ற பெண்ணாக அமையும் போது திருமணம் செய்து கொள்வேன். அது காதல் கல்யாணமாகக் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
அதை விட முக்கியமாக, நயனதாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்றும் அவர் பொடி வைத்துப் பேசியிருப்பதால் நயனதாரா கல்யாணத்தில் ஏதாவது சிக்கல் வருமோ என்ற பரபரப்பும் கூடியுள்ளது.
தனது தங்கைக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்த பின்னர்தான் தனது கல்யாணம் குறித்து யோசிக்கப் போவதாகவும் சிம்பு கூறுகிறார். தனக்குப் பிடித்த, ஏற்ற பெண்ணாக அமைந்தால் கல்யாணம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர் தனது கல்யாணம், காதல் கல்யாணமாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சரி நயனதாரா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரே என்ற கேள்விக்கு, கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்று பொடி வைத்துப் பேசியுள்ளார் சிம்பு.
வானம் படத்தின் வெற்றியால் சிம்பு பெரும் குஷியடைந்துள்ளார். அதே சூட்டோடு தற்போது ஒஸ்தி என்ற புதிய படத்தில் நடிக்கப் போகிறார். தரணி தான் படத்தை இயக்குகிறார்.
டபாங் படத்தின் ரீமேக்தான் இது. இதில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை முடிந்து விட்டது. படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
தட்ஸ் தமிழ்
எனக்கு ஏற்ற பெண்ணாக அமையும் போது திருமணம் செய்து கொள்வேன். அது காதல் கல்யாணமாகக் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.
அதை விட முக்கியமாக, நயனதாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்றும் அவர் பொடி வைத்துப் பேசியிருப்பதால் நயனதாரா கல்யாணத்தில் ஏதாவது சிக்கல் வருமோ என்ற பரபரப்பும் கூடியுள்ளது.
தனது தங்கைக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்த பின்னர்தான் தனது கல்யாணம் குறித்து யோசிக்கப் போவதாகவும் சிம்பு கூறுகிறார். தனக்குப் பிடித்த, ஏற்ற பெண்ணாக அமைந்தால் கல்யாணம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர் தனது கல்யாணம், காதல் கல்யாணமாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சரி நயனதாரா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரே என்ற கேள்விக்கு, கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்று பொடி வைத்துப் பேசியுள்ளார் சிம்பு.
வானம் படத்தின் வெற்றியால் சிம்பு பெரும் குஷியடைந்துள்ளார். அதே சூட்டோடு தற்போது ஒஸ்தி என்ற புதிய படத்தில் நடிக்கப் போகிறார். தரணி தான் படத்தை இயக்குகிறார்.
டபாங் படத்தின் ரீமேக்தான் இது. இதில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை முடிந்து விட்டது. படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 37 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
துபாய் ரசிகர்களிடம் சிக்கித் தவித்த நயனதாரா - பிரபுதேவா
நயனதாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இப்போது கல்யாணத்தில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் தனி பங்களா ஒன்றில் இருவரும் குடித்தனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திருமணச் செய்தியை இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், நயனதாராவும், பிரபுதேவாவும் துபாய்க்கு ஜோடியாக சென்றுள்ளனர். துபாயில்தான் நயனதாராவின் அண்ணன் வசிக்கிறார். அவரிடம் பிரபுதேவாவை அறிமுகப்படுத்தவே நயன் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.
துபாய் சென்ற இருவரும் ஜோடியாக ஷாப்பிங் மால் ஒன்றுக்கு போனார்கள். பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்கள், செருப்பு உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தார் நயன்.
இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் இருந்த ஒரு கடைக்குத் தெரியாத்தனமாக போய் விட்டனர். இருவரையும் ஜோடியாக பார்த்த ரசிகர்களுக்கு குஷியாகி விட்டது.
இருவரையும் சூழ்ந்து கொண்டனர். கையில் இருந்த கேமராக்கள், செல்போன் கேமராக்கள் மூலம் இருவரையும் படம் பிடித்துத் தள்ளினர். ஆளாளுக்கு ஆட்டோகிராபும் கேட்டனர். இருவரையும் ஜோடியாக சேர்ந்து நிற்குமாறு கூறி புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் அதற்கு மட்டும் பிரபுதேவா, நயன் சம்மதிக்கவில்லையாம்.
ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நீண்ட நேரமாக விடாததால் நயனதாராவும், பிரபுதேவாவும் அங்கிருந்து கிளம்ப பெரும்பாடு பட வேண்டியதாயிற்று.
ஒரு வழியாக அத்தோடு ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு ரசிகர்களின் அன்புப் பிடியிலிருந்து மீண்டு வெளியேறினார்களாம் நயனும், பிரபுதேவாவும்.
தட்ஸ் தமிழ்
நயனதாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இப்போது கல்யாணத்தில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் தனி பங்களா ஒன்றில் இருவரும் குடித்தனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திருமணச் செய்தியை இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், நயனதாராவும், பிரபுதேவாவும் துபாய்க்கு ஜோடியாக சென்றுள்ளனர். துபாயில்தான் நயனதாராவின் அண்ணன் வசிக்கிறார். அவரிடம் பிரபுதேவாவை அறிமுகப்படுத்தவே நயன் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.
துபாய் சென்ற இருவரும் ஜோடியாக ஷாப்பிங் மால் ஒன்றுக்கு போனார்கள். பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்கள், செருப்பு உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தார் நயன்.
இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் இருந்த ஒரு கடைக்குத் தெரியாத்தனமாக போய் விட்டனர். இருவரையும் ஜோடியாக பார்த்த ரசிகர்களுக்கு குஷியாகி விட்டது.
இருவரையும் சூழ்ந்து கொண்டனர். கையில் இருந்த கேமராக்கள், செல்போன் கேமராக்கள் மூலம் இருவரையும் படம் பிடித்துத் தள்ளினர். ஆளாளுக்கு ஆட்டோகிராபும் கேட்டனர். இருவரையும் ஜோடியாக சேர்ந்து நிற்குமாறு கூறி புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் அதற்கு மட்டும் பிரபுதேவா, நயன் சம்மதிக்கவில்லையாம்.
ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நீண்ட நேரமாக விடாததால் நயனதாராவும், பிரபுதேவாவும் அங்கிருந்து கிளம்ப பெரும்பாடு பட வேண்டியதாயிற்று.
ஒரு வழியாக அத்தோடு ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு ரசிகர்களின் அன்புப் பிடியிலிருந்து மீண்டு வெளியேறினார்களாம் நயனும், பிரபுதேவாவும்.
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 37 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
சன் டிவியின் கேம் ஷோக்களிலேயே பிரமாண்டமானதாக பேசப்பட்ட டீலா நோ டீலா, டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காட்டவில்லையாம். இதனால் அப்செட் ஆகியுள்ள தயாரிப்பாளர்கள் அதற்கு சினிமா நடிகைகள் மூலம் புது மெருகூட்ட களம் இறங்கியுள்ளனர்.
நடிகர் ரிஷி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் டீலா நோ டீலா. ரூ. 1 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான பணப் பெட்டிகள் போட்டியில் வைக்கப்படும். அதை தேர்வு செய்வது வெல்வது யார் என்பதுதான் போட்டி.
இந்தப் போட்டிக்கு ஆரம்பத்தில் அடடே சூப்பரப்பூ என்று ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் போகப் போக நிகழ்ச்சிக்கான மவுசு குறைந்து வருகிறதாம். டிஆர்பி ரேட்டிங்தான் ஒரு டிவி நிகழ்ச்சியின் பிரபலத்தை நிர்ணயிப்பதாகும். அந்த அடிப்படையில் டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் கிடைக்கவில்லையாம்.
நமது நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா என்று கடுப்பாகிப் போன சேனல், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை அழைத்து எதையாவது செய்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டுமாறு கூறியுள்ளதாம்.இதையடுத்து தயாரிப்பாளரர்கள் பேசாமல் ஒரு நடிகையை வைத்து நிகழ்ச்சியை தேற்றினால் என்ன என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக சில பிரபலமான நடிகைகளை அணுகினர். ஆனால் அவர்களை ஸாரி என்று கூறி விட்டனராம். இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் குழு, சேனல் கூப்பிட்டுமா வர மறுக்கிறீர்கள் என்று கோபத்தைக் காட்ட அந்த நடிகைகள் கண்டு கொள்ளவில்லையாம்.
இதையடுத்து மார்க்கெட் இழந்து டான்ஸ் ஆடிக் கொண்டுள்ள நயனதாராவை எப்படியாவது நிகழ்ச்சிக்கு இழுத்து வந்த விடும் நோக்கோடு அவரை அணுகவுள்ளனராம்.
சமீபத்தில்தான் தனது பிடிவாத பாலிசியை தளர்த்திக் கொண்டு விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார் நயனதாரா. எனவே இதை சாக்காக வைத்து அவரை டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு இழுக்க முயற்சிக்கப் போகிறார்களாம்.
டீலுக்கு ஒத்து வருவாரா நயனதாரா...?
தட்ஸ் தமிழ்
நடிகர் ரிஷி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் டீலா நோ டீலா. ரூ. 1 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான பணப் பெட்டிகள் போட்டியில் வைக்கப்படும். அதை தேர்வு செய்வது வெல்வது யார் என்பதுதான் போட்டி.
இந்தப் போட்டிக்கு ஆரம்பத்தில் அடடே சூப்பரப்பூ என்று ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் போகப் போக நிகழ்ச்சிக்கான மவுசு குறைந்து வருகிறதாம். டிஆர்பி ரேட்டிங்தான் ஒரு டிவி நிகழ்ச்சியின் பிரபலத்தை நிர்ணயிப்பதாகும். அந்த அடிப்படையில் டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் கிடைக்கவில்லையாம்.
நமது நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா என்று கடுப்பாகிப் போன சேனல், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை அழைத்து எதையாவது செய்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டுமாறு கூறியுள்ளதாம்.இதையடுத்து தயாரிப்பாளரர்கள் பேசாமல் ஒரு நடிகையை வைத்து நிகழ்ச்சியை தேற்றினால் என்ன என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.
இதுதொடர்பாக சில பிரபலமான நடிகைகளை அணுகினர். ஆனால் அவர்களை ஸாரி என்று கூறி விட்டனராம். இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் குழு, சேனல் கூப்பிட்டுமா வர மறுக்கிறீர்கள் என்று கோபத்தைக் காட்ட அந்த நடிகைகள் கண்டு கொள்ளவில்லையாம்.
இதையடுத்து மார்க்கெட் இழந்து டான்ஸ் ஆடிக் கொண்டுள்ள நயனதாராவை எப்படியாவது நிகழ்ச்சிக்கு இழுத்து வந்த விடும் நோக்கோடு அவரை அணுகவுள்ளனராம்.
சமீபத்தில்தான் தனது பிடிவாத பாலிசியை தளர்த்திக் கொண்டு விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார் நயனதாரா. எனவே இதை சாக்காக வைத்து அவரை டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு இழுக்க முயற்சிக்கப் போகிறார்களாம்.
டீலுக்கு ஒத்து வருவாரா நயனதாரா...?
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 37 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
படத்தை வெளியிட தேதிக்காக சண்டையிடும் அஜய் தேவ்கன், ஷாஹீத்
மும்பை: படத்தை வெளியிடும் தேதிக்காக அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் சண்டை போடுகின்றனர்.
பாலிவுட்டில் பெரிய நடிகர்கள், நடிகைகள் ஒருவருக்கொருவர் ஒத்துபோவதே இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் சண்டை. சேச்சே சின்னப் புள்ளத் தனமா இருக்கே என்று நினைத்தால், அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் கூட இப்போது சண்டையில் குதித்துள்ளனராம்-ஆனால் இன்னும் சட்டையெல்லாம் கிழியவில்லையாம்.
நம் சூரியாவின் சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கமாய் வருவது அஜய் தேவ்கன். இந்த படத்தை கோல்மால் புகழ் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். சிங்கம் படத்தை வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி வெளியிட அஜய் திட்டமிட்டுள்ளார்.
அதே தேதியில் தனது மௌசம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் ஷாஹீத் கபூர். அஜய் தேவ்கனிடம் தேதியை மாற்றிக் கொள்ளுமாறு ஷாஹீத் கேட்டுக் கொண்டாராம். ஆனால் படத்தின் இயக்குனர் ரோஹித் மாறுவதாக இல்லை.
ரோஹித் ஷாஹீத் கபூருக்கு முன்பே சிங்கம் வெளியீட்டு தேதியை அறிவித்தார். இந்த பிரச்சனையைத் தீர்க்க ஷாஹீத் தந்தை பங்கஜ் கபூர் ரோஹித்தை சந்தித்து பேசவிருக்கிறார்.
தட்ஸ் தமிழ்
மும்பை: படத்தை வெளியிடும் தேதிக்காக அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் சண்டை போடுகின்றனர்.
பாலிவுட்டில் பெரிய நடிகர்கள், நடிகைகள் ஒருவருக்கொருவர் ஒத்துபோவதே இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் சண்டை. சேச்சே சின்னப் புள்ளத் தனமா இருக்கே என்று நினைத்தால், அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் கூட இப்போது சண்டையில் குதித்துள்ளனராம்-ஆனால் இன்னும் சட்டையெல்லாம் கிழியவில்லையாம்.
நம் சூரியாவின் சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கமாய் வருவது அஜய் தேவ்கன். இந்த படத்தை கோல்மால் புகழ் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். சிங்கம் படத்தை வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி வெளியிட அஜய் திட்டமிட்டுள்ளார்.
அதே தேதியில் தனது மௌசம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் ஷாஹீத் கபூர். அஜய் தேவ்கனிடம் தேதியை மாற்றிக் கொள்ளுமாறு ஷாஹீத் கேட்டுக் கொண்டாராம். ஆனால் படத்தின் இயக்குனர் ரோஹித் மாறுவதாக இல்லை.
ரோஹித் ஷாஹீத் கபூருக்கு முன்பே சிங்கம் வெளியீட்டு தேதியை அறிவித்தார். இந்த பிரச்சனையைத் தீர்க்க ஷாஹீத் தந்தை பங்கஜ் கபூர் ரோஹித்தை சந்தித்து பேசவிருக்கிறார்.
தட்ஸ் தமிழ்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 37 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- Sponsored content
Page 37 of 43 • 1 ... 20 ... 36, 37, 38 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 37 of 43
|
|