புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by ayyasamy ram Today at 12:55 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....
Page 30 of 43 •
Page 30 of 43 • 1 ... 16 ... 29, 30, 31 ... 36 ... 43
- கார்த்திநடராஜன்இளையநிலா
- பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011
First topic message reminder :
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.
விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.
ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.
இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நாளை நடக்கவிருக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் - லட்சுமி பிரணதி திருமணத்துக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பேரன் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். இவருக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரி மகள் லட்சுமி பிரணதிக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம் மாதாப்பூரில் அமைந்துள்ள ஐடெக்ஸ் வளாகத்தில் இவர்களுடைய திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்பட சுமார் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் திருமணத்திற்காக ஐடெக்ஸ் வளாகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பிரம்மாண்டமான செட்டிங்குகளுடன் திருமண மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சினிமா கலை இயக்குனர் ஆனந்து சாயி தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது. திருமண ஏற்பாடுகளுக்கான செலவு மட்டும் ரூ 18 கோடி. 300 பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றிவருகின்றனர்.
மணமக்கள் அமர உள்ள மண்டபத்தின் மீது பெரிய கலசங்களுடன் யானைகளின் உருவ சிலைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மணமேடைக்கு இருபுறமும் சிறிய சிறிய மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் வருவதால், அவர்களுக்கென்று தனியாக மண்டபத்திற்கு வருவதற்காக வி.ஐ.பி. கேட் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக ஐடெக்ஸ் பின்புறமுள்ள மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டபம் அமைக்கும் பணிகளை ஜுனியர் என்.டி.ஆர். தினமும் வந்து மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருவதாக கலை இயக்குனர் ஆனந்து சாயி தெரிவித்தார்.
திருமணம் முடிந்தவுடன் நடைபெற உள்ள சிறப்பு விருந்துக்கு, விஜயவாடாவை சேர்ந்த பிரபல கேட்டரிங் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐடெக்ஸ் வளாகத்தில் உள்ள மூன்று மாபெரும் ஹால்கள் ஒதுக்கப்பட்டு, அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
TMT
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் பேரன் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர். இவருக்கும், ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சகோதரி மகள் லட்சுமி பிரணதிக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம் மாதாப்பூரில் அமைந்துள்ள ஐடெக்ஸ் வளாகத்தில் இவர்களுடைய திருமணம் நடக்கிறது. இந்தத் திருமணத்துக்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உள்பட சுமார் 15 ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் திருமணத்திற்காக ஐடெக்ஸ் வளாகத்தில் கடந்த ஒரு வாரகாலமாக பிரம்மாண்டமான செட்டிங்குகளுடன் திருமண மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரபல சினிமா கலை இயக்குனர் ஆனந்து சாயி தலைமையில் இப்பணி நடைபெற்று வருகிறது. திருமண ஏற்பாடுகளுக்கான செலவு மட்டும் ரூ 18 கோடி. 300 பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றிவருகின்றனர்.
மணமக்கள் அமர உள்ள மண்டபத்தின் மீது பெரிய கலசங்களுடன் யானைகளின் உருவ சிலைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மணமேடைக்கு இருபுறமும் சிறிய சிறிய மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்களின் திருமணத்திற்கு ஏராளமான பிரபலங்கள் வருவதால், அவர்களுக்கென்று தனியாக மண்டபத்திற்கு வருவதற்காக வி.ஐ.பி. கேட் அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக ஐடெக்ஸ் பின்புறமுள்ள மைதானம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மண்டபம் அமைக்கும் பணிகளை ஜுனியர் என்.டி.ஆர். தினமும் வந்து மேற்பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கி வருவதாக கலை இயக்குனர் ஆனந்து சாயி தெரிவித்தார்.
திருமணம் முடிந்தவுடன் நடைபெற உள்ள சிறப்பு விருந்துக்கு, விஜயவாடாவை சேர்ந்த பிரபல கேட்டரிங் நிறுவனத்திற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஐடெக்ஸ் வளாகத்தில் உள்ள மூன்று மாபெரும் ஹால்கள் ஒதுக்கப்பட்டு, அலங்கார பணிகள் நடைபெற்று வருகின்றன.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த மும்பை, இந்தியா கேட் பகுதியில் 3 வருடங்களுக்குப் பிறகு ‘வந்தான் வென்றான்’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் கண்ணன் கூறியதாவது: ‘வந்தான் வென்றான்’ படத்தின் கதையில் பெரும்பகுதி மும்பையில் நடக்கிறது. அதனால் மும்பையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தினோம். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தாஜ் ஓட்டல் முன்பும், இந்தியா கேட் பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லை. கடுமையாகப் போராடி அனுமதி பெற்றோம். சண்டை காட்சிகள், குண்டு வெடிப்பு, விபத்து காட்சிகள் படமாக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி கொடுத்தார்கள். பிறகு 4 நாட்கள் பாதுகாப்போடு படப்பிடிப்பை நடத்தினோம் ஜீவா, டாப்ஸி, சந்தானம் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டது. தீவிரவாத தாக்குதல் நடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு நாங்கள்தான் முதன் முதலில் படப்பிடிப்பு நடத்தினோம். இன்னும் இரு பாடல் காட்சிகள் மட்டுமே பாக்கி உள்ளது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து செல்கிறோம்.
TMT
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நன்மைக்கே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் வகுத்து கொண்டவர் ஆக்ஷன் கிங் அர்ஜூன். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுத்து கொண்டு இருக்கும் அவர், தற்போது அஜீத்துடன் "மங்காத்தா" படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இதுதவிர ஏற்கனவே "மாசி" படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது புதிதாக மற்றொரு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்திற்கு ஓம் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை டைரக்டர் இலன்கண்ணன் இயக்குகிறார். ஏற்கனவே இவர் அர்ஜூனை வைத்து ஒற்றன் என்ற படத்தை இயக்கி இருந்தார். ஓம் படத்தின் கதை மிகவும் பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் அர்ஜூன். இப்படத்தை தயாரிப்பாளரும், இயக்குநருமான சக்தி சிதம்பரம் தயாரிக்க இருக்கிறார். முதலில் ஓம் படத்தை சக்தி சிதம்பரம் இயக்குவதாக இருந்தார். பிறகு இலன்கண்ணனை இயக்க சொல்லி, தான் தயாரிப்பதாக கூறிவிட்டாராம்.
TMT
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
பூங்கொத்துகள் புடைசூழப் புன்னகையும் பெருமிதமுமாக இருக்கிறார் கே.பாலசந்தர். ''தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது தாதா சாகேப் பால்கே விருது!'' எனச் சொன்னால், ''உங்களின் அதிக பட்சப் புகழாரம் என்று வேண்டுமானால், அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்!'' என்கிறார் பளிச் சிரிப்பில்.
''நான் ஆரம்பத்தில், தியேட்டர்களில் விழுந்துகிடக்கும் ஃபிலிம்களை எடுத்து வந்து வீட்டுக்குள்ளேயே படம் ஓட்டிய வன். எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைப் பார்க்க மைல் கணக்கில் சைக்கிள் மிதித்து, வறுமையையும் தாண்டிய வைராக்கியத்தோடு நாடகங்கள் நடத்தி, திரைத் துறையிலும் அடியெடுத்துவைத்தது பெரிய சாதனைதான். கடந்து வந்தபாதை களை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தால், இலக்கை அடைந்துவிட்ட சிலிர்ப்புநிச்சயமாக இருக்கிறது!''
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 P96](https://2img.net/h/new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p96.jpg)
''உங்கள் இடத்தை நோக்கி வரும் அளவுக்கு இன்றைக்கு எந்த இயக்குநரும் இல்லை என்கிற கருத்தில் உடன்படுகிறீர்களா?''
''எனக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்து பாரதிராஜா வந்தார். அவருக்குப் பின்னால் பெரிய இடைவெளி ஏற்பட்டது உண்மை. ஆனால், இப்போது நிறையப் பேர் வருகி றார்கள். வித்தியாசங்களைப் படைக்கிறார் கள். ஆனால், ஒரு படத்தோடு அவர்களின் வித்தியாசம் வீழ்ந்துவிடுகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு வாய்க்காத விஞ்ஞான வரம் இன்றைய இயக்குநர்களுக்கு வாய்த்து இருக்கிறது. உலகத்தின் எந்த திசையில் எடுக்கப்பட்ட படத்தின்டி.வி.டி -யையும் உடனே பார்க்க முடிகிறது. நம் சிந்தனையை உலகளாவிய அளவோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. டெல்லியில் ஜனவரி மாதம் நடத்தப்படும் ஃபிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் மட்டுமே எங்க ளால் இதர மொழிப் படங்களைப்பார்க்க முடியும் என்கிற நிலை அப்போது இருந் தது. எல்லா வசதிகளும் இருந்தும் சிந்தனை வளத்தைப் பெருக்கிக்கொள்ளாமல் இருப் பது தவறு. அதே நேரம், 'வசூலைக் குவிக் கும் படம்தான் நல்ல படம்’ என்கிறநிலை யும், 'முதல் படம் ஓடினால்தான்வாழ்க்கை’ என்கிற இக்கட்டும் ஒருசேர இருப்பதும் இன்றைய இயக்குநர்களின் சுயத்தைக் காவு வாங்கிவிடுகிறது!''
''நடிகர்களுக்காகச் சமரசம் ஆகும் நிலையைச் சொல்கிறீர்களா?''
''யாருடைய கையில் படம் இருக்கிறது என்பதைப் பொறுத்துதான், அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியும். ஸ்டார்ஸ் கையில் எல்லாமும் இருந்தால், அவர் எதைவிரும்பு வார், ரசிகர்கள் அவரிடம் எதை விரும்புவார்கள் என்பதை எல்லாம் ஆராய்ந்து, அதற்குத் தக்கபடி தான் படம் செய்ய முடியும். அங்கே இயக்குநரின் சுயம் அடிபட்டுப்போய்விடும். நான் தயாரிப்பாளராக இருந்து ரஜினியை வைத்து 'தில்லுமுல்லு’ படத்தை மட்டும்தான் இயக்கி இருக்கிறேன். அதிலும் ரஜினிக்காக நான் சமரசம் ஆகாமல், என்னுடைய படமாகத்தான் எடுத்தேன். நடிகர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்றுதெரிந்தவுடன், நான் தள்ளி நின்றுவிட்டேன். என்னுடைய ரஜினிகாந்த்தை வைத்து என்னாலேயே படம்செய்ய முடியாத நிலை. அது தெரிந்து நான் ஓரமாக விலகிவிட்டேன். ஆனால், கமலைவைத்து 30 படங்கள் செய்தேன். கமல் எப்போதுமே குறிப்பிட்ட இமேஜை மட்டும் எடுத்துக்கொள்ள மாட்டார். அதனால், கமலை வைத்துப் பண்ண நான் பயந்தது இல்லை. ஆனால், ரஜினியிடம் வேறு விதமான எதிர்பார்ப்பு இருக்கிறது!''
''ரஜினி, கமலை வைத்து மீண்டும் படம் பண்ணும் எண்ணம் இல்லையா?''
''நான் அழைத்தால் நாடகத்தில்கூட நடிப்பதாகச் சொல்லிவிட்டார் ரஜினி. கமலும் தயார்தான். ஆனால், இன்றைய ரசனைக்கு ஏற்றபடி என்னால் படம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. மக்களின் ரசனை மாறும்போது, அதைப் புரிந்துகொண்டு விலகி நிற்பதுதான் உத்தமம். கழுத்தை அறுக்கிற காட்சிக்கு கைத்தட்டல் பறக்கிறதைப் பார்க்கையில், பயமா இருக்கு. ரசிகனின் இந்த மனப் போக்குக்குத் தக்கபடி படம் பண்றவங்கதான் நிற்க முடியும் என்கிற நிலையாகிவிட்டது. நான் படம் எடுப்பதாக இருந்தால்கூட, மதுரையைமையப் படுத்திதான் யோசிக்க வேண்டும். அதனால், தனித்திருத்தலே நலம்!''
''உங்களின் மனம் கவர்ந்த இயக்குநர்களைப் பட்டியலிடுங்களேன்?''
''என் பாணியைவிட்டு சற்றும் விலகாமல் படம் செய்யும் வசந்த், பாத்திரத் தேடலில் எல்லோரையும் வியக்கவைக்கும் பாலா, எவர்கிரீன் மணிரத்னம், புதிய சிந்தனைகளைப் பாய்ச்சும் அமீர், வேகமான திரைக்கதையில் மிரட்டும் சமுத்திரக்கனி, அத்தனை தளங்களிலும் ஆச்சர்யப்படுத்தும் மிஷ்கின், அழகியலில் பிரமாதப்படுத்தும் கௌதம் மேனன்,மென்மை யிலும் மெனக்கெடுதலிலும் வியக்கவைக்கும் விஜய் ஆகிய எட்டுப் பேர்!''
''உங்களுடைய படங்களில் உங்களைப் பெரிதாக ஈர்த்த ஒன்று?''
''ரொம்ப பழைய படமான 'புன்னகை’. அதைப் பார்க்கிறபோது எல்லாம் அழுதுவிடுவேன்! 'மரோசரித்ரா’, 'அக்னி சாட்சி’ படங்களையும் அந்தப் பட்டியலில் வைக்கலாம்!''
''இந்தப் படத்தை நாம் செய்திருக்கலாமே என உங்களை ஏங்கவைத்த படம்?''
'' 'மதராசபட்டினம்’. காலத்தையும் காதலையும் கொஞ்சமும் பிசகாமல் வார்த்த அழகு அபாரமானது. இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு படத்தை எடுக்க ஆசைப்பட்டாலும், அது எனக்குச் சாத்தியம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்!''
''உங்களின் வார்ப்புகளில் நீங்கள் யாரிடம் மிகுந்த அந்நியோன்யம் பாராட்டுவீர்கள்?''
''நான் காட்டும் அந்நியோன்யத்திலேயே வித்தியாசம் இருக்கிறது. கமலிடம் பேசுவதுபோல், ரஜினியிடம் பேச முடியாது. 10 நிமிடங்கள் சந்திக்கிறோம் என்றால், ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசிவிட்டு, மௌனமாக இருப்பான் ரஜினி. கமல் அப்படி இல்லை... நிறையப் பேசுவான்!''
''ரஜினி, ஏன் இதை இன்னமும் செய்யவில்லை என நீங்கள் நினைக்கும் விஷயம்?''
''அவன் ஏன் இன்னும் தேசிய விருது வாங்க முயற்சி பண்ணலை என்பதுதான் என் வருத்தம். அதற்கான எல்லாத் தகுதிகளும் அவனுக்கு இருக்கு. ஆனால், 'ஜனங்க ரசிச்சா சரி’ன்னு நின்னுடுறான். சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைக்காமல் போயிடுச்சேன்னு, இப்போ நினைச்சாலும் வருத்தமா இருக்கு. ரஜினி விஷயத்திலும் இந்த வருத்தம் நீடிக்கக் கூடாது.
என்னுடைய அனுமானத்தில் சொல் றேன்... இந்த வருடம் 'எந்திரன்’ படத்துக்காக நிச்சயம் ரஜினிக்குத் தேசிய விருது கிடைக்கும். 'பொழுதுபோக்கு’ என்கிற சிறப்புத் தகுதியில் அது சாத்தியப்படும் என நம்புகிறேன்!''
''கே.பி. சார் யாருடைய ரசிகர்?''
''நான் உருவாக்கிய கமலுக்கே நான் ரசிகன்!''
''விருது அறிவிப்பு தெரிந்ததும் யாரிடம் முதலில் சொன்னீர்கள்?''
''முதல் நாள் இரவே எனக்கு பால்கே விருது சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து தகவல் வந்துவிட்டது. அதே நேரம், அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்கும் வரை ரகசியம் காக்கும்படி சொன்னார்கள். அதனால், யாரிடமும் சொல்லவில்லை. என் மனைவியிடம் மட்டும் மறைக்க முடியாமல், 'நாளைக்கு ஒரு குட் நியூஸ் வரும்’ எனச் சொன்னேன். சற்று நேரம் யோசித்தவள், 'என்ன, பால்கே விருது கிடைக்கப்போகுதா?’ என்றாள். அசந்துபோய் விட்டேன்!''
''நடிகர்களின் அரசியல் ஆர்வம் சரியானதா?''
''அரசியலை மனதில் வைத்துக்கொண்டு சினிமாவுக்கு வந்தவர்கள் சிலர் உண்டு. அவர்கள் ஜெயித்ததாகச் சரித்திரம் இல்லை. நடிப்பில் ஏற்பட்ட வரவேற்பு, ஒருவரை அரசியலை நோக்கித் திருப்பினால் அது தவறு இல்லை.
'ஒரு வார்த்தை சொன்னால் தமிழக அரசியலே மாறும்’ என்கிற நிலை இருந்தும் ரஜினி அமைதியாக இருக்கிறானே... எதையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பாதவன் அவன். அவனுடைய ஆன்மிகச் சிந்தனையே அவனை இயக்குகிறது. அவன் என்ன நினைத்தாலும், அது நடக்கும். நான் தனிப்பட்ட விதத்தில் அவனிடம் அரசியல் குறித்துக் கேட்டபோதுகூட, 'எல்லாம் அவன் செயல்’ என மேலே கை காட்டி சஸ்பென்ஸ் வைத்துவிட்டான்!''
''முதல்வர் கருணாநிதி..?''
''அரசியல் வாழ்க்கை என்னைக் கைவிட்டாலும் எனக்கு சினிமா இருக்கிறது என இத்தனை வயதிலும் தில்லாகச் சொன்ன அவருடைய நம்பிக்கையும் ஆர்வமும் யாருக்குமே வாய்க்காதது!''
''ஜெயலலிதாவின் இரண்டாவது படத்தை இயக்கியவர் நீங்கள். பால்கே விருதுக்காக அவர் உங்களைப் பாராட்டினாரா?''
''இல்லை!''
''நடிகை சுஜாதாவின் மரணம்?''
''கடந்த 10 வருடங்களாக அவர் எங்கே இருந்தார் என்பதே எனக்குத் தெரியாது. ஆனாலும் அடிக்கடி அவரைப்பற்றி விசாரிப்பேன். இறப்பு விஷயம் தெரிந்து பதறி ஓடினேன். 'நீங்க இங்கே வந்ததில் நிரம்ப சந்தோஷம்’ என்றார் சுஜாதா வின் கணவர். அந்த வார்த்தைகளைச் சொல்லி இருக்க வேண்டியவள் சுஜாதா!''
''மிச்சம் இருக்கும் கனவு?''
''சத்யஜித் ரே போல் மிகக் குறைந்த பட்ஜெட் டில் ஒரு படம் இயக்க வேண்டும்!''
ஆனந்த விகடன்![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
''நான் ஆரம்பத்தில், தியேட்டர்களில் விழுந்துகிடக்கும் ஃபிலிம்களை எடுத்து வந்து வீட்டுக்குள்ளேயே படம் ஓட்டிய வன். எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைப் பார்க்க மைல் கணக்கில் சைக்கிள் மிதித்து, வறுமையையும் தாண்டிய வைராக்கியத்தோடு நாடகங்கள் நடத்தி, திரைத் துறையிலும் அடியெடுத்துவைத்தது பெரிய சாதனைதான். கடந்து வந்தபாதை களை மனதுக்குள் ஓட்டிப் பார்த்தால், இலக்கை அடைந்துவிட்ட சிலிர்ப்புநிச்சயமாக இருக்கிறது!''
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 P96](https://2img.net/h/new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p96.jpg)
''உங்கள் இடத்தை நோக்கி வரும் அளவுக்கு இன்றைக்கு எந்த இயக்குநரும் இல்லை என்கிற கருத்தில் உடன்படுகிறீர்களா?''
''எனக்குப் பிறகு 10 வருடங்கள் கழித்து பாரதிராஜா வந்தார். அவருக்குப் பின்னால் பெரிய இடைவெளி ஏற்பட்டது உண்மை. ஆனால், இப்போது நிறையப் பேர் வருகி றார்கள். வித்தியாசங்களைப் படைக்கிறார் கள். ஆனால், ஒரு படத்தோடு அவர்களின் வித்தியாசம் வீழ்ந்துவிடுகிறது. எங்களைப் போன்றவர்களுக்கு வாய்க்காத விஞ்ஞான வரம் இன்றைய இயக்குநர்களுக்கு வாய்த்து இருக்கிறது. உலகத்தின் எந்த திசையில் எடுக்கப்பட்ட படத்தின்டி.வி.டி -யையும் உடனே பார்க்க முடிகிறது. நம் சிந்தனையை உலகளாவிய அளவோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது. டெல்லியில் ஜனவரி மாதம் நடத்தப்படும் ஃபிலிம் பெஸ்டிவல் நிகழ்ச்சியில் மட்டுமே எங்க ளால் இதர மொழிப் படங்களைப்பார்க்க முடியும் என்கிற நிலை அப்போது இருந் தது. எல்லா வசதிகளும் இருந்தும் சிந்தனை வளத்தைப் பெருக்கிக்கொள்ளாமல் இருப் பது தவறு. அதே நேரம், 'வசூலைக் குவிக் கும் படம்தான் நல்ல படம்’ என்கிறநிலை யும், 'முதல் படம் ஓடினால்தான்வாழ்க்கை’ என்கிற இக்கட்டும் ஒருசேர இருப்பதும் இன்றைய இயக்குநர்களின் சுயத்தைக் காவு வாங்கிவிடுகிறது!''
''நடிகர்களுக்காகச் சமரசம் ஆகும் நிலையைச் சொல்கிறீர்களா?''
''யாருடைய கையில் படம் இருக்கிறது என்பதைப் பொறுத்துதான், அது எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைச் சொல்ல முடியும். ஸ்டார்ஸ் கையில் எல்லாமும் இருந்தால், அவர் எதைவிரும்பு வார், ரசிகர்கள் அவரிடம் எதை விரும்புவார்கள் என்பதை எல்லாம் ஆராய்ந்து, அதற்குத் தக்கபடி தான் படம் செய்ய முடியும். அங்கே இயக்குநரின் சுயம் அடிபட்டுப்போய்விடும். நான் தயாரிப்பாளராக இருந்து ரஜினியை வைத்து 'தில்லுமுல்லு’ படத்தை மட்டும்தான் இயக்கி இருக்கிறேன். அதிலும் ரஜினிக்காக நான் சமரசம் ஆகாமல், என்னுடைய படமாகத்தான் எடுத்தேன். நடிகர்கள் வேறு எதையோ எதிர்பார்க்கிறார்கள் என்றுதெரிந்தவுடன், நான் தள்ளி நின்றுவிட்டேன். என்னுடைய ரஜினிகாந்த்தை வைத்து என்னாலேயே படம்செய்ய முடியாத நிலை. அது தெரிந்து நான் ஓரமாக விலகிவிட்டேன். ஆனால், கமலைவைத்து 30 படங்கள் செய்தேன். கமல் எப்போதுமே குறிப்பிட்ட இமேஜை மட்டும் எடுத்துக்கொள்ள மாட்டார். அதனால், கமலை வைத்துப் பண்ண நான் பயந்தது இல்லை. ஆனால், ரஜினியிடம் வேறு விதமான எதிர்பார்ப்பு இருக்கிறது!''
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 P96a](https://2img.net/h/new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p96a.jpg)
''நான் அழைத்தால் நாடகத்தில்கூட நடிப்பதாகச் சொல்லிவிட்டார் ரஜினி. கமலும் தயார்தான். ஆனால், இன்றைய ரசனைக்கு ஏற்றபடி என்னால் படம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை. மக்களின் ரசனை மாறும்போது, அதைப் புரிந்துகொண்டு விலகி நிற்பதுதான் உத்தமம். கழுத்தை அறுக்கிற காட்சிக்கு கைத்தட்டல் பறக்கிறதைப் பார்க்கையில், பயமா இருக்கு. ரசிகனின் இந்த மனப் போக்குக்குத் தக்கபடி படம் பண்றவங்கதான் நிற்க முடியும் என்கிற நிலையாகிவிட்டது. நான் படம் எடுப்பதாக இருந்தால்கூட, மதுரையைமையப் படுத்திதான் யோசிக்க வேண்டும். அதனால், தனித்திருத்தலே நலம்!''
''உங்களின் மனம் கவர்ந்த இயக்குநர்களைப் பட்டியலிடுங்களேன்?''
''என் பாணியைவிட்டு சற்றும் விலகாமல் படம் செய்யும் வசந்த், பாத்திரத் தேடலில் எல்லோரையும் வியக்கவைக்கும் பாலா, எவர்கிரீன் மணிரத்னம், புதிய சிந்தனைகளைப் பாய்ச்சும் அமீர், வேகமான திரைக்கதையில் மிரட்டும் சமுத்திரக்கனி, அத்தனை தளங்களிலும் ஆச்சர்யப்படுத்தும் மிஷ்கின், அழகியலில் பிரமாதப்படுத்தும் கௌதம் மேனன்,மென்மை யிலும் மெனக்கெடுதலிலும் வியக்கவைக்கும் விஜய் ஆகிய எட்டுப் பேர்!''
''உங்களுடைய படங்களில் உங்களைப் பெரிதாக ஈர்த்த ஒன்று?''
''ரொம்ப பழைய படமான 'புன்னகை’. அதைப் பார்க்கிறபோது எல்லாம் அழுதுவிடுவேன்! 'மரோசரித்ரா’, 'அக்னி சாட்சி’ படங்களையும் அந்தப் பட்டியலில் வைக்கலாம்!''
''இந்தப் படத்தை நாம் செய்திருக்கலாமே என உங்களை ஏங்கவைத்த படம்?''
'' 'மதராசபட்டினம்’. காலத்தையும் காதலையும் கொஞ்சமும் பிசகாமல் வார்த்த அழகு அபாரமானது. இப்படி ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை. அப்படி ஒரு படத்தை எடுக்க ஆசைப்பட்டாலும், அது எனக்குச் சாத்தியம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்!''
''உங்களின் வார்ப்புகளில் நீங்கள் யாரிடம் மிகுந்த அந்நியோன்யம் பாராட்டுவீர்கள்?''
''நான் காட்டும் அந்நியோன்யத்திலேயே வித்தியாசம் இருக்கிறது. கமலிடம் பேசுவதுபோல், ரஜினியிடம் பேச முடியாது. 10 நிமிடங்கள் சந்திக்கிறோம் என்றால், ஒரு சில வார்த்தைகளை மட்டுமே பேசிவிட்டு, மௌனமாக இருப்பான் ரஜினி. கமல் அப்படி இல்லை... நிறையப் பேசுவான்!''
''ரஜினி, ஏன் இதை இன்னமும் செய்யவில்லை என நீங்கள் நினைக்கும் விஷயம்?''
''அவன் ஏன் இன்னும் தேசிய விருது வாங்க முயற்சி பண்ணலை என்பதுதான் என் வருத்தம். அதற்கான எல்லாத் தகுதிகளும் அவனுக்கு இருக்கு. ஆனால், 'ஜனங்க ரசிச்சா சரி’ன்னு நின்னுடுறான். சிவாஜி கணேசனுக்கு தேசிய விருது கிடைக்காமல் போயிடுச்சேன்னு, இப்போ நினைச்சாலும் வருத்தமா இருக்கு. ரஜினி விஷயத்திலும் இந்த வருத்தம் நீடிக்கக் கூடாது.
என்னுடைய அனுமானத்தில் சொல் றேன்... இந்த வருடம் 'எந்திரன்’ படத்துக்காக நிச்சயம் ரஜினிக்குத் தேசிய விருது கிடைக்கும். 'பொழுதுபோக்கு’ என்கிற சிறப்புத் தகுதியில் அது சாத்தியப்படும் என நம்புகிறேன்!''
''கே.பி. சார் யாருடைய ரசிகர்?''
''நான் உருவாக்கிய கமலுக்கே நான் ரசிகன்!''
''விருது அறிவிப்பு தெரிந்ததும் யாரிடம் முதலில் சொன்னீர்கள்?''
''முதல் நாள் இரவே எனக்கு பால்கே விருது சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து தகவல் வந்துவிட்டது. அதே நேரம், அமைச்சர் அம்பிகா சோனி அறிவிக்கும் வரை ரகசியம் காக்கும்படி சொன்னார்கள். அதனால், யாரிடமும் சொல்லவில்லை. என் மனைவியிடம் மட்டும் மறைக்க முடியாமல், 'நாளைக்கு ஒரு குட் நியூஸ் வரும்’ எனச் சொன்னேன். சற்று நேரம் யோசித்தவள், 'என்ன, பால்கே விருது கிடைக்கப்போகுதா?’ என்றாள். அசந்துபோய் விட்டேன்!''
''நடிகர்களின் அரசியல் ஆர்வம் சரியானதா?''
''அரசியலை மனதில் வைத்துக்கொண்டு சினிமாவுக்கு வந்தவர்கள் சிலர் உண்டு. அவர்கள் ஜெயித்ததாகச் சரித்திரம் இல்லை. நடிப்பில் ஏற்பட்ட வரவேற்பு, ஒருவரை அரசியலை நோக்கித் திருப்பினால் அது தவறு இல்லை.
'ஒரு வார்த்தை சொன்னால் தமிழக அரசியலே மாறும்’ என்கிற நிலை இருந்தும் ரஜினி அமைதியாக இருக்கிறானே... எதையும் பயன்படுத்திக்கொள்ள விரும்பாதவன் அவன். அவனுடைய ஆன்மிகச் சிந்தனையே அவனை இயக்குகிறது. அவன் என்ன நினைத்தாலும், அது நடக்கும். நான் தனிப்பட்ட விதத்தில் அவனிடம் அரசியல் குறித்துக் கேட்டபோதுகூட, 'எல்லாம் அவன் செயல்’ என மேலே கை காட்டி சஸ்பென்ஸ் வைத்துவிட்டான்!''
''முதல்வர் கருணாநிதி..?''
''அரசியல் வாழ்க்கை என்னைக் கைவிட்டாலும் எனக்கு சினிமா இருக்கிறது என இத்தனை வயதிலும் தில்லாகச் சொன்ன அவருடைய நம்பிக்கையும் ஆர்வமும் யாருக்குமே வாய்க்காதது!''
''ஜெயலலிதாவின் இரண்டாவது படத்தை இயக்கியவர் நீங்கள். பால்கே விருதுக்காக அவர் உங்களைப் பாராட்டினாரா?''
''இல்லை!''
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 P97](https://2img.net/h/new.vikatan.com/av/2011/05/njrlmg/images/p97.jpg)
''கடந்த 10 வருடங்களாக அவர் எங்கே இருந்தார் என்பதே எனக்குத் தெரியாது. ஆனாலும் அடிக்கடி அவரைப்பற்றி விசாரிப்பேன். இறப்பு விஷயம் தெரிந்து பதறி ஓடினேன். 'நீங்க இங்கே வந்ததில் நிரம்ப சந்தோஷம்’ என்றார் சுஜாதா வின் கணவர். அந்த வார்த்தைகளைச் சொல்லி இருக்க வேண்டியவள் சுஜாதா!''
''மிச்சம் இருக்கும் கனவு?''
''சத்யஜித் ரே போல் மிகக் குறைந்த பட்ஜெட் டில் ஒரு படம் இயக்க வேண்டும்!''
ஆனந்த விகடன்
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
கே பி ஓர் அற்புத விளக்கு... தேய்க்கத் தெரிந்தவர் பிழைத்துக்கொண்டார்.. இயலாதவர் ஏமாந்து நின்றார்..
எனது 10 வயது முதல் நான் கேபி யின் ரசிகன் என்பது நம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை..!
அவருக்கு என் வந்தனங்கள்..!
எனது 10 வயது முதல் நான் கேபி யின் ரசிகன் என்பது நம்ப கஷ்டமாக இருக்கும். ஆனால் உண்மை..!
அவருக்கு என் வந்தனங்கள்..!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை..,என விஜய்க்கு டாப் ஹிட் கொடுத்த இந்த படங்கள்தான் விஜய்க்கு தமிழ்சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை கொடுத்தது என்றால் மிகையில்லை..காதல் படங்களால் வளர்ந்த விஜய் ஆக்***ஷன் அதகளத்துக்கு மாறினார்.மாறிய படம் திருமலை...
திருமலை சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள்..அது விஜய் சினிமா வாழ்க்கையில் உண்மை ஆயிற்று...திருமலை விஜய் க்கு ஆக்***ஷனும் வரும்...நடனத்துடன் சண்டையும் போடத்தெரியும்..என மக்களுக்கு உணர்த்தியது....ஆனா அதையே தொங்கிய விஜய் ஆக்***ஷன் சினிமாக்களாக தொடர்ந்து நடித்து,ரஜினியின் வசூலை முறியடித்து,ரஜினி யை தோற்கடித்து சூப்பர் ஸ்டார் ஆகிவிடவேண்டும் என பேராசைப்பட்டார்..ரஜினி தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி,நிரந்தர தமிழ் சினிமாவின் முதல்வர் என சந்திரமுகி,வசூலில் ரசிகர்கள் நிரூபித்தனர்...சந்திரமுகிக்கு போட்டியாக விஜய்யும்,அவர் தந்தையும் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்ட சச்சின் படம்,என்னப்பா படம் முழுக்க ஒரே புகை புகையா சீன் எடுத்திருக்கானுங்க..என்ற விமர்சனத்துடன் ஃப்ளாப் ஆனது...
வெகு வேகமாக வளர்ந்த விஜய்க்கு மற்றொரு பெரிய திருப்பம் கொடுத்த படம் என்றால்.,கில்லி .இயக்குனர் தரணியின் பரபர திரைக்கதையில்,வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் தட்டியெறிந்த படம்...தெலுங்கு ஒக்கடுவை உருவி அப்படியே எடுத்திருந்தாலும்,தெலுங்கு mageshbabu அளவுக்கு விஜய ஆக்***ஷன் காட்டாவிட்டாலும்,கதை நன்றாக இருந்ததும்,படம் பரபரப்பாக இருந்ததும்,முக்கியமாக அப்படிபோடு பாட்டு சிறுசுகள் முதல் பெருசுக வரை எப்போதும் முண்ணுமுணுக்க செய்ததாலும் மாஸ் ஹிட்.
விஜய் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ,ஆக்***ஷன் படம் கொடுத்தவர்களில் இயக்குனர் பேரரசுக்கு முக்கிய பங்கு உண்டு...
அண்ணன்,தங்கை பாசத்தை கொட்டி எடுக்கப்பட்ட ,அதே சமயம் விதம் விதமான பல வில்லன்களை வேட்டையாடும் வேடத்தில் விஜய் கலக்கியிருக்கும் படம்தான் திருப்பாட்சி..
முதல்பாதி கிராமத்திலும்,இரண்டாம் பாதி நகரத்திலுமாக படம் வேகமெடுக்கும்..முதல் பாதி பாசம்..இரண்டாம் பாதி ஆக்***ஷன்.... பட்டி தொட்டியெங்கும் வசூல் அள்ளியது...
சிவகாசி,அடேயப்பா படம் முழுக்க பட்டாசு மாதிரி வெடிக்கும்...திரைக்கதை...பிரகாஷ்ராஜ் அண்ணனாகவும்,விஜய் தம்பியாகவும் நடித்திருப்பார்கள்..சும்மா இருவரும் செம கலக்கு கலக்கியிருப்பார்கள்...முழுக்க பட்டாசு வெடிப்பது போல வெடித்து தூள் கிளப்பினார்..அட..என்னத்த சொல்வேனுங்க..வடுமாங்கா ஊறுதுங்க..என அசின் கனவுக்கன்னியாக தமிழ் இளைஞர்கள் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தார்.இதுவும் வசூலில் பின்னியெடுத்தது...இந்த இரண்டு படங்களும் கொடுத்த வெற்றியை விஜய்யால் அடுத்தடுத்து காப்பாற்றிகொள்ள முடியவில்லை.
இப்படி வேகமாக மேலே ஏறுவதும்,கீழே இறங்குவதுமாக இருக்கும் நேரத்தில் ,அடுத்தடுத்து ஆதி,குருவி,என மக்கள் மனதில் நஞ்சை விதைத்தார் விஜய்...இதன் கொடூரங்கள் தாங்க முடியாமல் மக்கள் அவருக்கு ஃப்ளாப் கொடுத்தும் அவர் அசரவில்லை..அடுத்தும் சுறா என்ற படத்தை கொடுத்து மக்களை கொத்து கொத்தாக கடிக்க வைத்தார்...இதன் கொடூரம் இன்னும் மோசமாக இருந்தது...மொட்டைமாடியில் இருந்து ரயிலுக்கு பறக்கும் அந்த காட்சியை பார்த்துவிட்டு,ஜாக்கிஷானே இனி என் படங்கள் ஓடாது என தேம்பினார் என்றால் பாருங்கள்....
அதன்பிறகு காவலன்....ஆக்சன் படங்கள் தோல்வி அடைவதால் ,சரி ஒரு மாறுதலுக்கு ஆக்சனும் இல்லாமல் காமெடியும் இல்லாமல் காதலும் இல்லாமல் ,ஒரு மாதிரி வந்த படம்...படம் வெற்றி என்றாலும் எதிர்பார்த்த வெற்றி அல்ல...
tmt
திருமலை சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள்..அது விஜய் சினிமா வாழ்க்கையில் உண்மை ஆயிற்று...திருமலை விஜய் க்கு ஆக்***ஷனும் வரும்...நடனத்துடன் சண்டையும் போடத்தெரியும்..என மக்களுக்கு உணர்த்தியது....ஆனா அதையே தொங்கிய விஜய் ஆக்***ஷன் சினிமாக்களாக தொடர்ந்து நடித்து,ரஜினியின் வசூலை முறியடித்து,ரஜினி யை தோற்கடித்து சூப்பர் ஸ்டார் ஆகிவிடவேண்டும் என பேராசைப்பட்டார்..ரஜினி தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி,நிரந்தர தமிழ் சினிமாவின் முதல்வர் என சந்திரமுகி,வசூலில் ரசிகர்கள் நிரூபித்தனர்...சந்திரமுகிக்கு போட்டியாக விஜய்யும்,அவர் தந்தையும் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்ட சச்சின் படம்,என்னப்பா படம் முழுக்க ஒரே புகை புகையா சீன் எடுத்திருக்கானுங்க..என்ற விமர்சனத்துடன் ஃப்ளாப் ஆனது...
வெகு வேகமாக வளர்ந்த விஜய்க்கு மற்றொரு பெரிய திருப்பம் கொடுத்த படம் என்றால்.,கில்லி .இயக்குனர் தரணியின் பரபர திரைக்கதையில்,வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் தட்டியெறிந்த படம்...தெலுங்கு ஒக்கடுவை உருவி அப்படியே எடுத்திருந்தாலும்,தெலுங்கு mageshbabu அளவுக்கு விஜய ஆக்***ஷன் காட்டாவிட்டாலும்,கதை நன்றாக இருந்ததும்,படம் பரபரப்பாக இருந்ததும்,முக்கியமாக அப்படிபோடு பாட்டு சிறுசுகள் முதல் பெருசுக வரை எப்போதும் முண்ணுமுணுக்க செய்ததாலும் மாஸ் ஹிட்.
விஜய் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ,ஆக்***ஷன் படம் கொடுத்தவர்களில் இயக்குனர் பேரரசுக்கு முக்கிய பங்கு உண்டு...
அண்ணன்,தங்கை பாசத்தை கொட்டி எடுக்கப்பட்ட ,அதே சமயம் விதம் விதமான பல வில்லன்களை வேட்டையாடும் வேடத்தில் விஜய் கலக்கியிருக்கும் படம்தான் திருப்பாட்சி..
முதல்பாதி கிராமத்திலும்,இரண்டாம் பாதி நகரத்திலுமாக படம் வேகமெடுக்கும்..முதல் பாதி பாசம்..இரண்டாம் பாதி ஆக்***ஷன்.... பட்டி தொட்டியெங்கும் வசூல் அள்ளியது...
சிவகாசி,அடேயப்பா படம் முழுக்க பட்டாசு மாதிரி வெடிக்கும்...திரைக்கதை...பிரகாஷ்ராஜ் அண்ணனாகவும்,விஜய் தம்பியாகவும் நடித்திருப்பார்கள்..சும்மா இருவரும் செம கலக்கு கலக்கியிருப்பார்கள்...முழுக்க பட்டாசு வெடிப்பது போல வெடித்து தூள் கிளப்பினார்..அட..என்னத்த சொல்வேனுங்க..வடுமாங்கா ஊறுதுங்க..என அசின் கனவுக்கன்னியாக தமிழ் இளைஞர்கள் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தார்.இதுவும் வசூலில் பின்னியெடுத்தது...இந்த இரண்டு படங்களும் கொடுத்த வெற்றியை விஜய்யால் அடுத்தடுத்து காப்பாற்றிகொள்ள முடியவில்லை.
இப்படி வேகமாக மேலே ஏறுவதும்,கீழே இறங்குவதுமாக இருக்கும் நேரத்தில் ,அடுத்தடுத்து ஆதி,குருவி,என மக்கள் மனதில் நஞ்சை விதைத்தார் விஜய்...இதன் கொடூரங்கள் தாங்க முடியாமல் மக்கள் அவருக்கு ஃப்ளாப் கொடுத்தும் அவர் அசரவில்லை..அடுத்தும் சுறா என்ற படத்தை கொடுத்து மக்களை கொத்து கொத்தாக கடிக்க வைத்தார்...இதன் கொடூரம் இன்னும் மோசமாக இருந்தது...மொட்டைமாடியில் இருந்து ரயிலுக்கு பறக்கும் அந்த காட்சியை பார்த்துவிட்டு,ஜாக்கிஷானே இனி என் படங்கள் ஓடாது என தேம்பினார் என்றால் பாருங்கள்....
அதன்பிறகு காவலன்....ஆக்சன் படங்கள் தோல்வி அடைவதால் ,சரி ஒரு மாறுதலுக்கு ஆக்சனும் இல்லாமல் காமெடியும் இல்லாமல் காதலும் இல்லாமல் ,ஒரு மாதிரி வந்த படம்...படம் வெற்றி என்றாலும் எதிர்பார்த்த வெற்றி அல்ல...
tmt
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
பிரிக்க முடியாதது த்ரிஷாவும் அமர்க்களமான பார்ட்டிகளும்தான் என்றால் மிகையல்ல. சாதாரண வார விடுமுறை நாட்களிலேயே விருந்து என்றால் தூள் கிளப்புவார்கள் த்ரிஷாவும் அவரது அம்மாவும் நண்பர்களுடன் சேர்ந்து. பிறந்த நாள் என்றால் கேட்கவா வேண்டும்...
இன்று த்ரிஷாவுக்கு பிறந்த நாள். இந்த நாளை வழக்கம் போல காலையில் எழுந்து புத்தாடை அணிந்து, கோயிலுக்குப் போய்... ம்ஹூம் இந்த பிஸினஸே கிடையாது.
புதன்கிழமை அதாவது இன்று அதிகாலை 12.01-க்கு செனடாப் சாலையில் உள்ள த்ரிஷாவின் வீடு அமர்க்களப்பட்டது. த்ரிஷாவின் அம்மா உமா மற்றும் நெருங்கிய தோழிகள் புடை சூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் த்ரிஷா.
அதன் பிறகு விடிய விடிய நடந்தது பிறந்த நாள் பார்ட்டி. சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் படங்களில் மன்மதன் அம்பு ஏமாற்றம் தந்தாலும், பவன் கல்யாணுடன் அவர் நடித்த தீன் மார் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.
இந்த வெற்றிக்கும் சேர்த்து இன்றைய நள்ளிரவு விருந்தில் போதும் போதும் எனும் அளவுக்கு நண்பர்களை கவனித்து அனுப்பினாராம் த்ரிஷா!!
TMT
இன்று த்ரிஷாவுக்கு பிறந்த நாள். இந்த நாளை வழக்கம் போல காலையில் எழுந்து புத்தாடை அணிந்து, கோயிலுக்குப் போய்... ம்ஹூம் இந்த பிஸினஸே கிடையாது.
புதன்கிழமை அதாவது இன்று அதிகாலை 12.01-க்கு செனடாப் சாலையில் உள்ள த்ரிஷாவின் வீடு அமர்க்களப்பட்டது. த்ரிஷாவின் அம்மா உமா மற்றும் நெருங்கிய தோழிகள் புடை சூழ கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார் த்ரிஷா.
அதன் பிறகு விடிய விடிய நடந்தது பிறந்த நாள் பார்ட்டி. சமீபத்தில் வெளியான த்ரிஷாவின் படங்களில் மன்மதன் அம்பு ஏமாற்றம் தந்தாலும், பவன் கல்யாணுடன் அவர் நடித்த தீன் மார் வசூலில் சக்கைப் போடு போடுகிறது.
இந்த வெற்றிக்கும் சேர்த்து இன்றைய நள்ளிரவு விருந்தில் போதும் போதும் எனும் அளவுக்கு நண்பர்களை கவனித்து அனுப்பினாராம் த்ரிஷா!!
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
சூர்யா ,ஏ.ஆர்.முருகதாஸ் இணைந்த கஜினி தமிழ் சினிமாவின் முக்கிய மைல் கல் ஆன பிறகு மீண்டும் இதே கூட்டணி இணையும் படம்,ஏழாம் அறிவு...
இந்தப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகிறது..படம் பெரிய செலவில் தயாரவது பெரிய விசயமில்லை.அந்தளவு சத்தான கதை,திரைக்கதையுடன் வளர்வதுதான் முக்கியம்...முருகதாஸ் ரமணா,கஜினிக்கு பின் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர் ஆகிவிட்டார்.சூர்யாவும் அடுத்தடுத்த ஹிட்ஸ்களால் தமிழின் முக்கிய ஹீரோவாக ஜொலிக்கிறார்.
டாப் ஹீரோவும்,டாப் ஹீரோவும்,பாப்புலர் டெக்னீசியன்களும் கலந்து கட்டி அடிக்கும், மசாலா விருந்தாக ஏழாம் அறிவு இருக்கப்போகிறது...இதில் தசாவதாரம் போல பல வேடங்களில் சூர்யா நடிக்க போகிறாராம்...
சீனாவுக்கு குங்ஃபூ கலையை கற்றுக்கொடுத்ததே ஒரு தமிழ் மன்னன்தான் என்பதை ஆணித்தரமாக, ஆதாரத்துடன் இந்த படம் மூலம் நிரூபிக்க போகிறார்கள்...
சிங்கம் படத்தின் வெற்றி ஏ.பி.சி என தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது.விஜய் தொடர் தோல்விகளுக்கு பிறகு கொடுத்த நல்ல படமான காவலன் கூட சுமாரான வசூலே கொடுத்த நிலையில்,சூர்யாவின் சிங்கம் வெற்றிக்கு பின்,ஏழாம் அறிவும் மெஹாஹிட் ஆனால் வினியோகஸ்தர்களும்,தயாரிப்பாளர்களும் தன்னை மதிக்காமல் போய் விடுவார்களோ என்ற நடுக்கம் விஜய்க்கு ஏற்படுவது இயற்கைதானே
TMT
இந்தப்படம் மிக பிரம்மாண்டமாக தயாராகிறது..படம் பெரிய செலவில் தயாரவது பெரிய விசயமில்லை.அந்தளவு சத்தான கதை,திரைக்கதையுடன் வளர்வதுதான் முக்கியம்...முருகதாஸ் ரமணா,கஜினிக்கு பின் இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர் ஆகிவிட்டார்.சூர்யாவும் அடுத்தடுத்த ஹிட்ஸ்களால் தமிழின் முக்கிய ஹீரோவாக ஜொலிக்கிறார்.
டாப் ஹீரோவும்,டாப் ஹீரோவும்,பாப்புலர் டெக்னீசியன்களும் கலந்து கட்டி அடிக்கும், மசாலா விருந்தாக ஏழாம் அறிவு இருக்கப்போகிறது...இதில் தசாவதாரம் போல பல வேடங்களில் சூர்யா நடிக்க போகிறாராம்...
சீனாவுக்கு குங்ஃபூ கலையை கற்றுக்கொடுத்ததே ஒரு தமிழ் மன்னன்தான் என்பதை ஆணித்தரமாக, ஆதாரத்துடன் இந்த படம் மூலம் நிரூபிக்க போகிறார்கள்...
சிங்கம் படத்தின் வெற்றி ஏ.பி.சி என தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் சக்கை போடு போட்டது.விஜய் தொடர் தோல்விகளுக்கு பிறகு கொடுத்த நல்ல படமான காவலன் கூட சுமாரான வசூலே கொடுத்த நிலையில்,சூர்யாவின் சிங்கம் வெற்றிக்கு பின்,ஏழாம் அறிவும் மெஹாஹிட் ஆனால் வினியோகஸ்தர்களும்,தயாரிப்பாளர்களும் தன்னை மதிக்காமல் போய் விடுவார்களோ என்ற நடுக்கம் விஜய்க்கு ஏற்படுவது இயற்கைதானே
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் மோசமான படங்களில் நடிப்பதாக இல்லை. மேலும் ஒரு படம் உருவாகிக் கொண்டிருக்கும்போதே அதைப் பற்றி ஆஹா ஓஹோ என புகழ்வது வேஸ்ட். நல்ல படமா இருந்தா ஓடும், என்றார் நடிகை த்ரிஷா.
ஹைதராபாதில் த்ரிஷா அளித்த பேட்டி:
ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது.
எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.
படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்றார் த்ரிஷா.
TMT
ஹைதராபாதில் த்ரிஷா அளித்த பேட்டி:
ஒரு படத்தில் நடிக்கும் போது நடிகர், நடிகைகள் இஷ்டத்துக்கும் அடித்துவிடுகின்றனர். தாங்கள் நடிக்கும் படத்தை ஆஹா ஓஹோவென புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் படம் ரிலீசான பிறகு ஒரு சில நாட்களிலேயே தியேட்டரை விட்டு போய்விடுகிறது.
எனவே இந்த மாதிரி வெற்று பில்ட் அப் எதற்கு? தாங்கள் நடிக்கும் படங்களை தாங்களே மிகைப்படுத்தி பேசுவது எனக்கு பிடிக்காது. எல்லா படங்களும் வெற்றி பெறுவது இல்லை. படங்கள் ஓடுமா? ஓடாதா? என்பதை தீர்மானிப்பவர்கள் ரசிகர்கள். அவர்கள் முடிவுக்கு விட்டு விட வேண்டும்.
படம் ரிலீசுக்கு முன்பே அதை புகழ்வது ரசிகர்களை ஏமாற்றுவதுபோல் ஆகி விடும். நல்ல கதையம்சம் உள்ள படங்களையே தேர்வு செய்து நடிக்கிறேன். எனது கேரக்டர் நன்றாக இருந்தாலும் படம் வெற்றி பெற வேண்டும். கதாபாத்திரம் நன்றாக அமைந்தாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
கூடுதல் சம்பளம் தருவதாக ஆசை காட்டி, கோடி கோடியாகக் கொட்டினாலும் தோல்வி அடையும் படங்களில் நடிக்க மாட்டேன்," என்றார் த்ரிஷா.
TMT
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 30 Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
- Sponsored content
Page 30 of 43 • 1 ... 16 ... 29, 30, 31 ... 36 ... 43
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 30 of 43
|
|