புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_c10 
6 Posts - 67%
heezulia
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_c10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_m10ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....


   
   

Page 17 of 43 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 43  Next

கார்த்திநடராஜன்
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 303
இணைந்தது : 14/03/2011

Postகார்த்திநடராஜன் Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT



யாதும் ஊரே யாவரும் கேளிர்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:38 pm

நண்பன் படத்தை பற்றி தினம் ஒரு தகவல் வந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் சூட்டி***ங்கை முடிந்த நண்பன் குழு, இப்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை அந்தமான் தீவில் படமாக்கி வருகிறது.

இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான "3-இடியட்ஸ்" படம் தமிழில் "நண்பன்" என்ற பெயரில் உருவாகி வருகிறது. ஜெமினி பிலிம்ஸ் தயாரிக்க, பிரமாண்ட டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். பொதுவாக ஷங்கர் தன்னுடைய படங்களை குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது எடுப்பார். ஆனால் நண்பன் படத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு சூட்டிங்கை விறுவிறுப்பாக நடத்தி கொண்டு இருக்கிறார். படத்தின் பாதி காட்சிகளை படமாக்கிவிட்ட ஷங்கர், இப்போது க்ளைமாக்ஸ் காட்சிக்காக அந்தமானில் முகாமிட்டுள்ளார். தற்போது அந்தமானில் உள்ள ரம்மியமான பகுதியில் நண்பன் சூட்டிங் நடந்து வருகிறது. தீபாவளிக்கு நண்பன் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Scaled.php?server=706&filename=purple11
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 7:39 pm

ஓ தீபாவளிக்கு வந்துருமா ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 755837 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 755837 ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 755837




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:43 pm

நடிகர் கார்த்தி ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் கொடுமுடி அருகே கிராமத்தில் உள்ள மணப்பெண் வீட்டில் நேற்று நடந்தது. நடிகர் சிவகுமார் லட்சுமி தம்பதியின் இளைய மகன் கார்த்தி. பருத்தி வீரன் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை ஆகிய படங்களில் நடித்துள்ளார். சென்னையில் பிஇ படித்த அவர், அமெரிக்காவில் உள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். பட்டம் பெற்றுள்ளார். கார்த்திக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர், ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள குமாரசாமி கவுண்டம்பாளையம் விவசாய குடும்பத்தை சேர்ந்த சின்னசாமி ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனியை மணக்கிறார். ரஞ்சனி எம்ஏ ஆங்கில இலக்கியம் படித்து முடித்துள்ளார். இவரது தம்பி ராம்குமார், சென்னை லயோலா கல்லூரியில் எம்பில் படித்து வருகிறார்.

கார்த்தி ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் நேற்று மதியம் மணமகள் இல்லத்தில் நடந்தது. நடிகர் சிவகுமார், அவரது மனைவி லட்சுமி, மூத்த மகன் நடிகர் சூர்யா, தங்கை பிருந்தா, அவரது கணவர் சிவகுமார், சூர்யாவின் மகள் தியா கலந்து கொண்டனர். முன்னதாக அவர்கள் குமாரசாமி கவுண்டம்பாளையம் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு மணப்பெண் வீட்டுக்கு வந்தனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு இரு தரப்பிலும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கார்த்தி, சூர்யா வருவதை அறிந்த கிராம மக்களும் ரசிகர்களும் ஏராளமானோர் குமாரசாமி கவுண்டம்பாளையத்தில் நேற்று குவிந்திருந்தனர். கிராமமே விழாக்கோலம் பூண்டிருந்தது. நடிகர் கார்த்தி மணக்கப்போகும் பெண், தங்கள் கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் கிராமமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கார்த்தி ரஞ்சனி திருமணம் கோவை கொடீசியா வளாகத்தில் ஜூலை மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:45 pm

http://www.google.co.in/imgres?imgurl=http://4.bp.blogspot.com/_o3uzDXgbi7M/TA3WYyLVzcI/AAAAAAAACa8/pFS5Hx6FwLA/s1600/Tapsee%2BActress%2BPhotos%2B_22_.JPG&imgrefurl=http://indiancinemagallery.blogspot.com/2010/06/south-actress-tapsee-photos-tapsee.html&usg=__D12zIgbCmU8POgFzcjPWXwvMe5M=&h=1206&w=800&sz=111&hl=en&start=0&zoom=1&tbnid=I7hWFIkNOzTGlM:&tbnh=158&tbnw=117&ei=RRm8Taa4NYqEvAPfvYCTBg&prev=/search%3Fq%3Dtapsee%26um%3D1%26hl%3Den%26sa%3DN%26biw%3D1360%26bih%3D495%26tbm%3Disch&um=1&itbs=1&iact=hc&vpx=386&vpy=93&dur=1746&hovh=276&hovw=183&tx=115&ty=207&page=1&ndsp=18&ved=1t:429,r:2,s:0
ஜீவாவுடன் ‘வந்தான் வென்றான்’ படத்தில் நடித்து வரும் டாப்ஸி கூறியதாவது: ‘ஆடுகளம்’ படத்துக்குப் பிறகு என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. கண்ணன் இயக்கும் ‘வந்தான் வென்றான்’ படம் எனக்கு வேறொரு அடையாளத்தை கொடுக்கும். நான் அதிக சம்பளம் கேட்பதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. என் தகுதிக்கு என்ன தேவையோ அதைதான் கேட்கிறேன். தெலுங்கில் நான் நடித்துள்ள ‘மிஸ்டர் பெர்பக்ட்’ சமீபத்தில் ரிலீஸ் ஆகியுள்ளது. பிரபாஸ், காஜலுடன் என் நடிப்பும் இதில் பேசப்படுகிறது. இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேசியுள்ளேன். இதே போல தமிழிலும் பின்னணி பேச ஆசை இருக்கிறது. அதற்காக தமிழ் கற்று வருகிறேன். இப்போது யாராவது பேசினால் புரிந்துகொள்ள முடிகிறது. விரைவில் தமிழில் பேசுவேன். தெலுங்கில் ரவிதேஜாவுடன் ‘வீரா’ படத்தில் இப்போது நடித்துவருகிறேன். தமிழில் ஒரு படத்தில் நடிக்க பேச்சு நடந்து வருகிறது. இவ்வாறு டாப்ஸி கூறினார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:46 pm

ஐதராபாத்: உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்களை கொண்டவர் சத்ய சாய்பாபா. இவர், கடந்த 24ம் தேதி புட்டபர்த்தியில் மறைந்தார். சிறுவயதிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட பாபா, பிரசாந்தி நிலையம் என்ற ஆசிரமம் நடத்தினார். ஆன்மிகத்துடன் சமூக சேவைகளிலும் ஈடுபடத் தொடங்கினார். பின்தங்கிய கிராமமாக இருந்த புட்டபர்த்தி உலகத்தினரின் கவனத்தை ஈர்ப்பதற்கு காரணமாக இருந்தது பாபாவின் ஆன்மிகப்பணி. இதை மையமாக வைத்து அவரது வாழ்க்கை வரலாறை சிசி மோஷன் பிக்சர்ஸ் என்ற கார்பரேட் நிறுவனம் படமாகத் தயாரிக்கிறது. ‘இதில் நடிப்பவர்கள் உள்ளிட்ட விஷயங்கள் பற்றி பேச்சு நடக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும்’ என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:50 pm


கிளாமராக எப்போதும் நடிக்க மாட்டேன்’ என்று அஞ்சலி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது: இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் ஜெய் ஜோடியாக நடிக்கிறேன். நிறைய படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை வசந்தபாலனின் ‘அங்காடி தெரு’தான் எனது அடையாளமாக இருக்கிறது. அந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாது. ‘இந்த கேரக்டரில் செயற்கையாக நடிக்கக் கூடாது. கதாபாத்திரத்துக்கு ஏற்ப இயற்கையான பாவனைகள் செய்தால் போதும். அப்போதுதான் அந்த வேடத்தோடு ரசிகர்களால் ஒன்ற முடியும்’ என்று இயக்குனர் வசந்தபாலன் கூறினார். அவர் கூறியது எவ்வளவு உண்மை என்று படம் ரிலீஸ் ஆன பிறகு தெரிந்துகொண்டேன். மீண்டும் அவர் படத்தில் நடிக்க ஆவலாக இருக்கிறேன். விரைவில் அதற்கான வாய்ப்பு அமையும். ஒரு படத்தில், நான் கிளாமராக நடித்துள்ளதாகக் கூறுகிறார்கள். அதில் உண்மை இல்லை. என்னிடம் கிளாமருக்கு இடம் கிடையாது. நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்கள்தான் என்னை தேடி வருகிறது. அதைத்தான் நானும் விரும்புகிறேன்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:53 pm

சிவாஜி, கமல், சிவகுமார் உள்ளி***ட்டோரின் வாரிசுகள் கூடத்தான் சினிமாவில் இருக்கிறார்கள். என்னுடைய வாரிசுகளின் வளர்ச்சியில் மட்டும் அர்த்தம் கற்பிப்பது ஏன்? என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தொண்டாற்றியும், தொடர்ந்து தியாகங்கள் செய்தும் கட்சியின் தருக்களாக என்னுடைய பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோர் வளர்ந்துள்ளனர். அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகில் பொருளீட்டி புகழ் ஈட்டுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக் கணைகள் பாய்ச்சுவதால் உரிய விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறேன். இதில் அபிமன்யூ, ராஜகுமாரி, பராசக்தி உள்ளிட்ட ஏராளமான படங்களும் அடக்கம். எனக்கும், திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் அனைவருடனும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகத்தினர் தெளிவாகப் புரிந்தவர்கள் என்பதை மறந்திருக்க முடியாது.

கருணாநிதியின் பேரன், பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி? எனக் கேள்வி எழுப்பி ஒரு புத்தகத்தில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து, பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம். முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்பிரமணியம், ஏ.வி.எம்.சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும்-நடிகர் சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, ராம்குமாரின் மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும், நடிகர் ரஜினி, அவருடைய மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும், நடிகர் கமல், அவருடைய சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் இந்தத் துறையில் ஈடுபட்டு இருப்பதும், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மற்றும் அவருடைய பிள்ளைகள், ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவக்குமார், அவருடைய பிள்ளைகள் சூர்யா, கார்த்தி ஆகியோர் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளனர். இவையெல்லாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் போனது வேடிக்கை. அதுமாத்திரம் அல்ல; கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதனை முடிக்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்கள்; எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாகி தெருவிலே நின்றார்கள் என்பதையெல்லாம் கவிஞர் கண்ணதாசன் புத்தகமாக எழுதியுள்ளார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும்-திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ?

இவ்வாறு கருணாநிதி அறிக்கையில் கூறியுள்ளார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:54 pm

சைக்கோ வில்லன் வேடத்தில் காமெடி நடிகர் விவேக் நடிக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: 25 வருடங்களில் தமிழ், மலையாளத்தில் 450 படங்களில் நடித்து விட்டேன். இப்போது பெயரிடப்படாத படம் ஒன்றில் சைக்கோ வில்லன் வேடத்தில் நடிக்கிறேன். காமெடி பாணியிலிருந்து விலகி, வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த கேரக்டரை தேர்வு செய்தேன். மிதுன் ஹீரோ. அன்புச்செழியன் இயக்குகிறார். மலைப்பகுதிகளில் ஷூட்டிங் நடக்க உள்ளது. இதற்காக எனது கெட்டப்பை மாற்றுகிறேன். இதற்குமுன் நடித்த எந்த நடிகரின் சாயலும் இல்லாமல், வில்லன் வேடம் ஏற்றுள்ளேன். எனக்குள் எப்படி சைக்கோத்தனம் புகுந்தது, ஏன் வில்லன் ஆனேன் என்பதற்கான காட்சி புதுமையாக இருக்கும்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:55 pm

தேவரின அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் விக்ரமின் தெய்வ திருமகன் என்ற படத்தின் தலைப்பு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிதா, தெய்வமகன், தெய்வ குழந்தை உள்ளிட்ட ஒரு டஜன் தலைப்புகளுக்கு பிறகு விக்ரமின் புதிய படத்திற்கு தெய்வ திருமகன் என்ற பெயரை சூட்டினார் அதன் இயக்குனர் விஜய். படத்தில் நடிகர் விக்ரம், மனதை உருக்கும் படியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுஷ்கா, அமலா பால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் பெயருக்கு தேவர் இன மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு தேவர்குல கூட்டமைப்பு தலைவர் சண்முகையா பாண்டியன், அளித்த பேட்டியில், தெய்வத் திருமகன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை மட்டுமே நாங்கள் அழைத்து வருகிறோம். இந்த நிலையில் அந்த பெயரில் திரைப்படம் வருவதை எங்கள் சமுதாய மக்களால் ஏற்க முடியாது. எனவே அந்த படத்தின் பெயரை மாற்றி வெளியிட வேண்டும். அவ்வாறு படத்தின் பெயரை மாற்றி வெளியிடா விட்டால் தமிழகம் முழுவதும் அந்த படம் திரையிடப்படும் திரையரங்கங்களை முற்றுகையிடுவோம். திரைப்பட பிரதிகளையும் கைப்பற்றுவோம். கோர்ட்டுக்கும் போவோம், என்று கூறியிருந்தார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் தெய்வ திருமகன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் கோரிக்கை மனுவும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பார்வேர்டு பிளாக் கட்சியை சேர்ந்த 100 பேர் சென்னையில் உள்ள நடிகர் விக்ரம் வீட்டை முற்றுகையிட முயன்றனர். தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அசம்பாவிதம் ஏற்படாமல் தடுத்தனர்.

தெய்வ திருமகன் தலைப்பு விவகாரத்தில் நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்து வருவதால் படத்தின் பெயரை மாற்ற அதன் தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் டைரக்டர் விஜய், நாயகன் விக்ரம் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்த தயாரிப்பு தரப்பு தெய்வ திருமகன் படத்தின் தலைப்பை மாற்றி விரைவில் அதிகாரப்பூர்வ புதிய தலைப்பை அறிவிக்கும் என்று தெரிகிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்.... - Page 17 Scaled.php?server=706&filename=purple11
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Apr 30, 2011 7:57 pm

அஞ்சலியிடம் கிளாமருக்கு இடமில்லை அப்படியே படத்திலும் இடமில்லைன்னு சொல்லிடுவாங்களே! அச்சச்சோ புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 17 of 43 Previous  1 ... 10 ... 16, 17, 18 ... 30 ... 43  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக