புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
68 Posts - 40%
heezulia
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
3 Posts - 2%
manikavi
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
2 Posts - 1%
Guna.D
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
2 Posts - 1%
prajai
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
319 Posts - 50%
heezulia
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
22 Posts - 3%
prajai
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
2 Posts - 0%
manikavi
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_m10என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன வேண்டும் எங்களுக்கு? மின்சாரத் துறை


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun May 01, 2011 9:01 am

சட்டப் பேரவை முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் வரை அனைத்து இடங்களிலும் மின்சார பிரச்னைதான் முக்கிய விவாதப் பொருள். இதனால் பொதுமக்கள் அனுபவித்த, அனுபவித்து வரும் தொல்லைகள் ஏராளம். தொழில் துறையும், அதனால் பயனடைந்து வரும் லட்சக்கணக்கானோரின் வேலைகளும் பறிபோகும் அவலம். ஆம்..அந்தப் பிரச்னை மின்வெட்டு தான்.
2007-ம் ஆண்டுக்கு முன்பு வரை மின்சார பற்றாக்குறை என்பது பெரிய அளவில் இல்லை. 2007-க்குப் பிறகு பெரிய அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் இயங்கத் தொடங்கின. தமிழகத்தின் இப்போதைய மின்சாரத் தேவையின் அளவு 11 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் கோடையில் சிறிது மின்தட்டுப்பாடு ஏற்படுவது வழக்கம். ஆனால், சில ஆண்டுகளாக மின்தட்டுப்பாடும், அதனால் மின்வெட்டும் ஏற்படுவது பழகிப்போன ஒன்றாகி விட்டது. பல்வேறு மின் உற்பத்தித் திட்டங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 7 ஆயிரத்து 500 மெகா வாட்டாக உள்ளது. அதாவது, தேவைக்கும் உற்பத்திக்கும் இடையிலான இடைவெளி 3 ஆயிரம் மெகா வாட். இதுவே மின்பற்றாக்குறையின் அளவாகும்.
இந்த மின்வெட்டைச் சமாளிக்க சென்னையைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தினசரி இரண்டு மணி நேர மின்வெட்டும், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு 30 சதவீத மின்வெட்டும் அமல்படுத்தப்பட்டது. தொழிற்சாலைகள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தின் மூலம் இயந்திரங்களை இயக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. மாவட்டங்களில் வழக்கமாக செய்யப்படும் மூன்று மணி நேர மின்வெட்டுடன் ஒரு பெரிய தொழிற்சாலைக்கு நாளொன்றுக்கு 11 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்பட்டது.
பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களைத் தவிர்த்து, பஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளால் 50 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பயன் பெற்று வந்தன. இப்போது அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இப்போது கோடைக்காலம் என்பதால், மின்வெட்டின் அளவு மேலும் தீவிரமாகி உள்ளது. சென்னையில் ஒரு மணி நேரமும், பிற மாவட்டங்களில் 3 மணி நேரமும் மின்வெட்டு அமலில் உள்ளது.
வீட்டு உபயோகத்துக்கான மின் பயனீட்டாளர்கள் என்ற அளவில் தமிழகத்தில் 2 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் உள்ளன. மிகப் பெரிய தொழில் நிறுவனங்களின் வரவு அதிகரித்து இருக்க, மற்றொருபுறம் வீட்டு உபயோகத்துக்கான மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
என்ன செய்யலாம்: 1997-ம் ஆண்டில் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது. அப்போது, மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தை ஜெனேரேட்டர்கள் மூலம் தயாரித்துக் கொண்டன. அப்போது, ஒரு லிட்டர் டீசலின் விலை 20 ரூபாய்க்குள் இருந்தது. இப்போது ஒரு லிட்டர் டீசல் விலை 35 ரூபாயைத் தாண்டி விற்கிறது. இந்தச் சூழ்நிலையில் தொழில் நிறுவனங்களால் ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய முடியாது. ஆனால், ஜெனேரேட்டர் மூலம் தயாராகும் மின்சாரத்தை ஒரு யூனிட்டுக்கு ரூ.7 என்ற அளவில் அரசு தர வேண்டும் என தொழில் நிறுவனங்கள் மத்தியில் கோரிக்கை எழுப்பப்பட்டன. இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய ஆகும் செலவு, தமிழ்நாடு மின்வாரியம் அளிக்கும் மின்சாரத்தின் விலையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். எனவே, தொழில் நிறுவனங்கள் ஜெனேரேட்டர் மூலம் மின்சாரத்தைத் தயார் செய்ய முன்வரவில்லை.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள மின்வெட்டில் எந்தப் பாகுபாடும் காட்டக் கூடாது என்பதே தொழில் நிறுவனங்கள் மத்தியில் உள்ள கோரிக்கையாகும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளித்தது, மானிய விலையில் மின்சாரம் வழங்குவது போன்றவற்றுக்காக மட்டுமே கடந்த மூன்றாண்டுகளில் தமிழக மின்வாரியம் செலவிட்ட தொகை ரூ.18 ஆயிரம் கோடியைத் தாண்டும்.
குஜராத் போன்ற மாநிலங்களில் ஒரு ஆண்டுக்குத் தேவையான மின்சாரத்தை மொத்தமாக வெளி மாநிலங்களில் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் தேவையும், தட்டுப்பாடும் ஏற்படும்போது மட்டுமே வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரத்தைப் பெற முயற்சி நடக்கிறது. அப்போதை சூழலில், வெளி மாநிலங்களில் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.14 வரை விற்கப்படுகிறது.
மாநிலத்தில் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது. அந்தத் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வந்து அவற்றின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் ஆகும்.
உடனடி தேவை: 2001-2006 வரையில் அதிமுக ஆட்சியில் எந்த மின் உற்பத்தித் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. அடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக எந்த மின் திட்டங்களையும் தொடங்கவில்லை. 2007-ம் ஆண்டுக்குப் பிறகே மின் உற்பத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஆட்சிக்கு வந்ததும் திட்டங்களைத் தொடங்கி இருந்தால் இப்போது மின்வெட்டு என்ற பேச்சுக்கு இடம் இருந்து இருக்காது.
எனவே, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சுமார் 10 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டங்களை அரசு வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மின் தட்டுப்பாட்டின் அளவு 2,500 மெகாவாட் என மின்வாரியம் கூறினாலும் ஆண்டுக்கு 1000 முதல் 1,500 மெகாவாட் அளவுக்கு தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளின் தேவையைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மின்வெட்டும், மின் தட்டுப்பாடும் நிச்சயம் இருக்கும் என மின்வாரிய அதிகாரிகளே சுட்டிக் காட்டுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், குறுகியகால மற்றும் நீண்ட கால திட்டங்களை மனதில் வைத்து அரசு செயல்படுவது அவசியம் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர்.
காற்றாலைகள் மூலம் தமிழகத்துக்கு 4,500 முதல் 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு தமிழகத்தில் மின்சாரம் கிடைக்கிறது. கோடையில் இதன் அளவு குறைந்து விடுகிறது. சர்க்கரை ஆலை போன்ற இணை மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 300 முதல் 400 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கிடைக்கிறது. அவற்றின் மின் உற்பத்தித் திறனையும், அதில் புதிய திட்டங்களையும் ஊக்குவிக்க வேண்டும். இந்தியாவில் மகாராஷ்டிரம் உட்பட ஒன்பது மாநிலங்களில் கடுமையான மின்தட்டுப்பாடு இருந்தும் எந்த மாநிலத்திலும் தொழில் உற்பத்தி பாதிக்கப்படவில்லை. ஆனால், தமிழகத்தில் தொழில் உற்பத்தியும், அதனால் மக்களுக்கு கடுமையான பாதிப்பும் ஏற்பட்டுள்ளன. இது சீர்செய்யப்பட வேண்டும்.
மின்உற்பத்திக்கான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக தமிழகத்தில் மின்வெட்டைப் போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை. மனிதத் திறமைக்கும், தடையில்லாத மின்சாரத்தையும் நம்பியே மாநிலத்துக்கு தொழிற்சாலைகள் வந்தன. ஆனால், இப்போது அத்தகைய சூழ்நிலை இல்லை. மின் தட்டுப்பாட்டைப் போக்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் கழித்து மின் உற்பத்தி சீராகி இருக்கும். ஆனால், தொழில் துறையும், தொழில் வளமும், மக்களும் காணாமல் போய் இருப்பார்கள்.

நன்றி தின மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக