புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
81 Posts - 61%
heezulia
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
33 Posts - 25%
வேல்முருகன் காசி
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
10 Posts - 8%
mohamed nizamudeen
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
6 Posts - 5%
sureshyeskay
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
1 Post - 1%
viyasan
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
273 Posts - 44%
heezulia
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
230 Posts - 37%
mohamed nizamudeen
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
19 Posts - 3%
prajai
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
செவ்வாய் தோஷம்.... I_vote_lcapசெவ்வாய் தோஷம்.... I_voting_barசெவ்வாய் தோஷம்.... I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோஷம்....


   
   

Page 1 of 2 1, 2  Next

kannan312
kannan312
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Postkannan312 Thu Nov 06, 2008 12:12 am

செவ்வாய் தோஷம் பற்றி சிறந்த ஒரு விளக்கம் தேவை... உதவுகள்...

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Nov 06, 2008 1:15 am

செவ்வாய் தோசம்


தோசங்களில் மிகவும் கெட்ட தோசமாக செவ்வாய் தோசம் சோதிட சாத்திரத்தில் கூறப்படுகின்றது. செவ்வாய்க்கு எப்படிச் தோசம் ஏற்படுகிறது?

செவ்வாய் நன்கு பலம் பெற்றிருந்தால் அதாவது ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் தோசம் இல்லை. செவ்வாய் பலவீனப்பட்டு இருந்தால்தான் தோசம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒருவருக்குச் செவ்வாய் பலவீனப்பட்டு இருக்கும்போது ஏற்படுகிற தோசம் செவ்வாய் தோசம் எனப்படும்.

சாதகப் பொருத்தத்தில் செவ்வாய் தோசம் பெரும் குறையாகக் கருதப்படுகின்றது. சாதகத்தில் செவ்வாய், இலக்கினம், சந்திரன், சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இருக்கிறது என்று பொருள். இலக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்க்கு தோசம் ஏற்படுகிறது. மணப்பெண், மணமகன் இருவர் சாதகத்திலும் இந்த இடம் அமையாவிட்டால் நல்லது. இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தாலும் நல்லதுதான்.

மிதுனம், கன்னி ஆகிய வீடுகளில் 7 அல்லது 8 ஆம் இடமாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் கடும் தோசம் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு நடப்பு திசை செவ்வாயாக இருந்தால் மிகவும் பாதிக்கப்படுவர்.

மேடம், கடகம், விருச்சிகம், மகரங்களில் செவ்வாய் குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோசம் இல்லை.

செவ்வாய் தோசம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதைப் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டால் அந்த திசை புத்தி நேரங்களில் கணவரையோ அல்லது மனைவியையோ இழக்க நேரலாம். அல்லது பிரிய நேரலாம். திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இந்தச் செவ்வாய் திசை முடிந்துவிட்டால் சிக்கல் இல்லை.

மேற்கூறிய 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் கீழ்க்கண்ட வீடுகளாக இருந்தால் தோசம் இல்லை. அவைகளாவன:

1) மேடம், விருச்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இந்த இரு வீடுகளும் செவ்வாய்க்கு ஆட்சி வீடு என்பதால் தோசமில்லை.

2) மகரம், கடகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இதில் மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடு என்பதாலும் கடகம் நீச வீடு என்பதாலும் தோசமில்லை.

3) தனுசு, மீனம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இது நட்பு வீடாக இருப்பதால் தோசமில்லை.

4) கும்பம், சிம்மம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை இதில் கும்பம் சனி வீடாகவும், சிம்மம் சூரியனின் வீடாகவும் இருப்பதால் செவ்வாய் தோசம் அடிபடுகிறது.

5) சந்திரனுடன் செவ்வாய் இணைந்திருந்தால் சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இதனால் செவ்வாய்க்குத் தோசம் இல்லை.

விவாகப் பொருத்தம் பற்றிச் சொல்லும் வாக்கிய பஞ்சாங்கம் பிராமணருக்கு அதிபதியும், சத்திரியருக்குக் கணமும், வைசியருக்கு பெண் தீர்க்கமும் சூத்திரர்க்கு யோனியும் பிரதானமாகப் பொருந்த வேண்டும் என்கிறது.

விவாகப் பொருத்தத்தில் கூட வேதங்களின் ஓர் அங்கமான சோதிடம் நால்வருணத்தைப் புகுத்தி இருக்கிறது. கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஒருவன் பிராமணன், ஒருவன் சத்திரியன், ஒருவன் வைசிகன், ஒருவன் சூத்திரன் என்ற வருண வேறுபாடு தெரியுமா?

சாத்திரமானாலும் சடங்கானாலும் எங்கும் வருணவேறுபாடு சோதிட சாத்திரம் எழுதியவர்களால் திட்டமிட்டுப் புகுத்தப் பட்டுள்ளது. கோள்களை வருண அடிப்படையில் வகுத்திருக்கிறார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Nov 06, 2008 1:19 am

வருணம் கிரகம் இராசிஎண்
பிராமணன் குரு, சுக்கிரன் கடகம், விருச்சிகம், மீனம் 4, 8, 12
சத்திரியன் சூரியன், செவ்வாய் மேடம், சிம்மம், தனுசு1, 5, 9
வைசிகன் சந்திரன், புதன் இடபம், கன்னி, மகரம் 2, 6, 10
சூத்திரன் சனிமிதுனம், துலாம், கும்பம் 3, 7, 11


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Nov 06, 2008 1:20 am

சோதிடத்தில் சனி கெட்ட கோளாகவும் கறுப்பு நிறம் உடையதாகவும் கற்பிக்கப்பட்டதாலேயே அது சூத்திரருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. தமிழர்கள் சோதிட சாத்திரம் தங்களை சூத்திரர் என்று இழிவு படுத்தினாலும் அதைப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல், கவலைப்படாதது மட்டுமில்லாமல் அதனைப் பெருமையாக எடுத்துக் கொண்டு மற்ற வருணத்தாரைவிட சோதிடத்தைக்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நடித்து 1943 இல் வெளிவந்த பிரபாவதி படத்தில் ஒரு காட்சி. அடிமைத்தனமும் மூடத்தனமும் கொடி கட்டிப் பறந்த காலம் அது.

படுத்திருக்கும் அசுரன் ஒருவன் தலையை கலைவாணர் காலால் மிதிப்பார்.

"ஏண்டா என்னை மிதிச்சே?' கோபத்தோடு கேட்பான் அசுரன்.

"இப்படித்தான் பகவான் வாமன அவதாரத்திலே மகாபலிச் சக்ரவர்த்தி தலைமீது காலை வச்சு மிதிச்சார்' என்பார் கலைவாணர்.

"பகவான் இப்படியா மிதிச்சார்? அப்ப நல்லா மிதி' என்று கூறித் தலையைக் காட்டுவான் அசுரன்.

ஒரு சோதிடர் இருவரது சாதகத்திலும் 12 பொருத்தங்களில் 11 சரி வந்தாலும் திருமணம் முறிந்து விடும் என்கிறார்.

“சாதகத்தில் பொருத்தம் பார்க்கும் பொழுது, 12 பொருத்தத்தில் 5 க்கு மேற்பட்ட பொருத்தங்கள் அமைந்தாலே திருமணம் செய்துவிடுகின்றனர். ஆனால் சாதகத்தில் முழுமையாகப் பொருத்தம் உள்ளதா? என்பதைப் பார்க்கத் தவறி விடுகின்றனர்.

எட்டாமிடம் ஆண்களின் சாதகத்தில் ஆயுள் ஸ்தானமாகவும் பெண்களின் சாதகத்தில் மாங்கல்ய பலத்தைக் குறிப்பதாகவும் அமைகிறது

மேற்சொன்ன ஸ்தானங்களில் அசுப கிரங்கள் என்று அழைக்கப்படும் ராகு, கேது, சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும் அல்லது அவர்கள் பார்வை ஏற்பட்டாலும், 10 க்கு மேற்பட்ட பொருத்தங்கள் அமையப் பெற்றாலும் இத்தகைய அமைப்பு வரன் சாதகத்தில் அமையப் பெறவில்லையாயின், அப்படி நிச்சயிக்கப்படுகின்ற திருமணங்கள் பெரும்பாலும் தோல்வியில் முடிவடைகின்றன.

எனது நண்பர் ஒருவர் பொறியியல் முதுகலைப் பட்டம் பெற்று ஒரு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். அவருக்கு 2-9-1997 அன்று திருமணம் நடைபெற்றது. நண்பரின் நட்சத்திரம் இரேவதி மற்றும் பெண்ணின் நட்சத்திரம் உத்திரம் ஆகும்.

பொருத்தம் பார்த்த பொழுது மொத்தம் 12 பொருத்தங்களில் 11 பொருத்தம் உள்ளதால், திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆயினும் திருமணம் முடிந்த 3 மாதத்திற்குள் இருவருக்கும் ஒத்துப் போகாததால், மணப்பெண் தாய் வீட்டிற்குச் சென்றுவிட நேரிட்டது. பலமுறை நேரில் சென்று சமாதானப் படுத்தியும் அவர் மனம் மாறாததால், நண்பர் மணமுறிவு வழக்கொன்றை மார்சு 98 இல் தொடர்ந்தார்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Nov 06, 2008 1:20 am

நண்பரின் முன்னாள் மனைவியின் சாதகத்தில் செவ்வாய் சனியோடு இணைந்து களத்திரஸ்தானமான 7 ஆம் இடத்தில் அமையப்பெற்றது கடுமையான செவ்வாய் தோசத்தை ஏற்படுத்தியுள்ளது.

நண்பர் சாதகத்தில் செவ்வாய் தோசம் அமையப்பெறவில்லை. மேலும் அவருடைய சாதகத்தில் 7 ஆம் இடத்தில் களத்திரகாரகரான சுக்கிரன் அமையப்பெற்றது காரகோ பாவ நாஸ்தி என்ற விதியின்படி திருமண வாழ்வில் சிக்கலை ஏற்படுத்தியது.

கடக இலக்கினத்திற்குச் சுக்கிரன் பாதகாதிபதியாகின்றார். அவர் களத்திர ஸ்தானமான 7 ஆம் இடத்தில் அமையப் பெற்றால் இல்வாழ்வு சிறப்பதில்லை.

மேலும் விரையஸ்தானாதிபதியான புதன் 7 ஆம் இடத்தில் அமையப் பெற்றதால் இல்வாழ்வில் சிக்கல், பிரிவினை போன்று பாதகமான பலன்களை ஏற்படுத்தியது. மேலும் இவர்களுக்குத் திருமணம் நடைபெறுகின்ற பொழுது, நண்பருக்கு ஏழரைச்சனியும், அவருடைய மனைவிக்கு அட்டமா சனியும் நடைபெற்று வந்ததும் திருமணம் தோல்வியைத் தழுவியதற்கு ஒரு காரணம் ஆகும். (ஆர்.வி.சேகர், ஏ.பி 860, எச் பிளாக், 2வது தெரு, அண்ணா நகர், சென்னை-40, தினகரன்)

சாதகத்தில் 12 பொருத்தத்தில் 11 பொருத்தம் அமைந்தும் திருமணம் முறிந்துவிட்டது என்றால் சாதகப் பொருத்தம் பார்த்துத் திருமணம் செய்வதால் என்ன பயன்?

சாதகம் பார்த்துச் செய்த இணையர்களுக்கு இடையில் மணமுறிவு மட்டுமல்ல அவர்களுக்குக் குழந்தைகள் கூடப் பிறக்காமல் போகிறதே? அது ஏன்?

மேலே கூறிய திருமணப் பொருத்தங்கள் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லாமல், வானியல்பற்றிக் கொஞ்சமேனும் அறிவு இல்லாத அறிவிலிகளால் விதிக்கட்டுப்பாடின்றித் தான்தோன்றித்தனமாக விதிக்கப்பட்டவை ஆகும்.

ஒரு சோதிட நூல் திருமணப் பொருத்தத்தில் கிரகப் பொருத்தந்தான் முக்கியம் என்கிறது. இன்னொன்று இராசிப் பொருத்தந்தான் முக்கியம் என்கிறது. பிறிதொன்று தினப் பொருத்தந்தான் முக்கியம் என்கிறது. இதில் எது சரி? எது பிழை? எல்லாமே சரியாக இருக்க முடியாது!

ஆண்-பெண் இரு பாலாரையும் தேவ கணம் மனித கணம் இராட்சத கணம் என்று பிரிப்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. இந்த 27 நட்சத்திர மண்டலங்களது உருவமைப்பை (pயவவநசn) வரைந்து அவற்றுக்குப் பெயர் வைத்ததே மனிதன்தான். பின்னர் இந்த நட்சத்திரங்களைத் தேவ கணம், மனித கணம், இராட்சத கணம் என்று பிரிப்பதும் அவை ஒன்றுக்கு ஒன்று பொருந்தாது என்று கூறுவதும் முட்டாள்த்தனத்தின் உச்சக் கட்டமாகும். அதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமே இல்லை.

வசியப் பொருத்தம் என்பது ஆண், பெண் ஆகிய இருவருடைய உள்ளங்களிலும் பாசத்தையும் உண்மையான அன்பையும் வளர்ப்பதற்கும் ஒருவரிடத்தில் மற்றொருவர் அன்பு கொண்டு வாழச் செய்வதற்கும் மணப் பொருத்தம் இல்லாத ஒருவரை மற்றொருவர் வசியம் செய்வதற்கும் மிக அவசியமாம். இராசிப் பொருத்தம் மூலம் தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் வசியப்பட்டு எந்தக் கணத்திலும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காது பரிபூரண அன்புடன் வாழ்க்கை நடத்துவர் எனச் சோதிட சாத்திரம் சொல்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Nov 06, 2008 1:21 am

பிறவியில் மேட இராசியாக இருக்கும் பெண் சிம்மராசி அல்லது விருச்சிக இராசி ஆணிடத்தில்தான் வசியமாவாள். அத்தகைய பெண்ணை வேறு இராசியுடைய ஆணுக்குத் திருமணம் செய்து வைத்தால் அத்தகைய பெண் இயற்கையிலேயே இயற்கையின் தூண்டு தலிலேயே சிம்மராசியுடைய அல்லது விருச்சிக இராசியுடைய ஆணிடத்தில்தான் மன நாட்டங்கள் கொண்டுவிடுவாள். இதனால் அவளது கற்பொழுக்கத்திற்கும்கூட களங்கம் ஏற்பட்டு விடக்கூடுமாம். இவ்வாறு சோதிடர் ஒருவர் பெண்களைப்பற்றி மிகவும் இழிவாக எழுதியுள்ளார்.

ஒரு இராசிக்கு இன்னொரு இராசி வசியம், வசியம் இல்லை என்பதைச் சோதிட சாத்திரம் எழுதிய முனிவர்கள் எப்படிக் கண்டு பிடித்தார்கள்? அதற்கான சான்று என்ன?

மனிதர்களை அவர்களது குருதியின் அடிப்படையில் ஏ, பி, ஏபி. ஒ பிரிவு என்று மருத்துவர்கள் பிரித்து வைத்திருக்கின்றார்கள். அதற்கு அறிவியல் அடிப்படை இருக்கிறது. குருதி தேவைப்படும் ஒரு நோயாளிக்கு இன்னொருவருடைய குருதியை ஏற்றும் முறை 1900 இலேயே நடைமுறைக்கு வந்தது. நோயாளியின் குருதி எந்தப் பிரிவைச் சேர்ந்தது என்பதைச் சோதனை செய்து அதே பிரிவைச் சேர்ந்த குருதியையே உடலில் ஏற்றுகிறார்கள்.

சோதிடம் சில எண்களைப் பொருத்தம் என்று ஏற்றுக் கொள்வதும் சில எண்களைப் பொருத்தமில்லை என்று தள்ளுவதும் மூடநம்பிக்கையே யொழிய அதற்கு அறிவியல் அடிப்படை எதுவும் இல்லை. மணப்பெண் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக் கொண்டு வந்து மணமகன் நட்சத்திரத்தில் முடியும் போது அந்த எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று ஏதாவது ஒன்றாக இருந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு என்று சோதிடம் சொல்கிறது.

மிகுதி எண்களான 1,2,3,5,6,8,9,11,12,14,15,17,18,20,21,23, பொருத்தம் இல்லை என்று அதே சோதிடம் சொல்கிறது. கேள்வி என்னவென்றால் இந்த எண்கள் செய்த பாவம்தான் என்ன? ஏன் அவற்றைக் கெட்ட எண்கள் என்று தள்ள வேண்டும்? அடிப்படை என்ன?

இருபத்தேழு நட்சத்திரங்களை மிருக அம்சத்தோடு சோடி சேர்த்து அதன் அடிப்படையில் யோனிப் பொருத்தம் பார்ப்பது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது சொல்லாமலே உங்களுக்கு விளங்கும்.

உரோகிணி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்களோடு பாம்பைச் சேர்க்கச் சொன்னது யார்? உத்திராடம் நட்சத்திரத்தோடு கீரியை முடிச்சுப் போடுமாறு யார் சொன்னது? அதற்கான ஏது அல்லது ஏதுக்கள் என்ன?

கீரிக்கும் பாம்புக்கும் இடையில் இயற்கையாக இருக்கும் பகைமையை மனதில் கொண்டு உரோகிணி, மிருகசீரிடம் மற்றும் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இடையில் யோனிப் பொருத்தம் இல்லை என்று சொல்வது கடைந்தெடுத்த ஏமாற்று வேலை ஆகும்.

தமிழர்களைப் பொறுத்தளவில் குறிப்புப் பார்க்காமல் திருமணம் நடைபெறுவதில்லை. அறிவியல் பட்டதாரிகள் கூட இதற்குப் புறநடை இல்லை. இது காரணமாகவே திருமணப் பொருத்தம் பார்ப்பது ஒரு புரட்டு என்பதை மெய்ப்பிக்க அது பற்றி விரிவாக எழுத வேண்டி நேரிட்டது.

சோதிடப் பேய் பிடித்துப் பலர் அலைவது போதாதென்று இப்போது எண் சாத்திரக்காரர்களும் கடை விரிக்கின்றார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Thu Nov 06, 2008 1:21 am

யாருக்காவது உங்கள் பிறந்த நாளைத் தற்செயலாகச் சொல்லிப் பாருங்கள். உடனே 'அதுதானே பார்த்தேன். நீங்கள் ஒண்ணாம் இலக்கக்காரர். அதாவது பிறந்த நாளும் ஒன்று பிறந்த திகதியின் கூட்டுத்தொகையும் ஒன்று. ஒண்ணாம் இலக்ககாரர்கள் பிடிச்சிராவிகள், இறங்கி வரமாட்டார்கள்’ என்று பலன் சொல்லத் தொடங்கி விடுவார்கள்.

சோதிடம்போல் எண் சாத்திரத்தில் கூட்டல், பிரித்தல், கணித்தல் (computation) வரிசை ஒழுங்கு மாற்றல் (permutation) போன்ற சிக்கல்கள் இல்லை. ஒன்றில் இருந்து ஐம்பது வரை எண்ணத் தெரிந்திருந்தால் போதும் சுப்பனும் குப்பனும் தங்களை எண்சாத்திரிகள் என்று சொல்லிக் கொண்டு பலன் சொல்லக் கிளம்பலாம்!

தமிழர்கள் வீடு வாங்கும்போது 8 ஆம் இலக்கத்தை விரும்புவதில்லை. சோதிடத்தில் எட்டு சனியோடு (அட்டமத்துச் சனி) தொடர்பு படுத்திப் பேசப்படுவதே அதற்குக் காரணமாகும். வேறு காரணம் இல்லை.

இதே போல் சீனர்கள் 4 யை விரும்புவதில்லை. அது மரணத்தோடு தொடர்புடைய எண் என்பது அவர்கள் கொண்டிருக்கும் மூட நம்பிக்கை ஆகும். கிறித்தவர்கள் 13 யை விரும்புவதில்லை. தொடர்மாடி வீடு கட்டும்போது 12 ஆவது மாடிக்கு அடுத்த மாடியை 14 ஆவது மாடி என்றுதான் இலக்கமிடுகின்றார்கள். காரணம் இயேசுநாதர் சிலுவையில் அறைந்து கொல்லப்படுவதற்கு முதல்நாள் அவரது இறுதி இரவு உணவில் கலந்து கொண்டவர்களது எண்ணிக்கை 13 என்பதே!

பன்னிரண்டாம் மாடிக்கு மேலே 13 ஆவது மாடி இல்லாமல் 14 ஆவது மாடி இருப்பது கனடியத் தமிழ் வானொலி சக்கிடுத்தாருக்கும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது!

(சோதிடப் புரட்டு நூலில் இருந்து)

hemalatha
hemalatha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 01/03/2010

Posthemalatha Mon Mar 01, 2010 11:39 pm

þýÛõ ±ò¾¨É ¾¼¨Å ¾¡ý ¦ºùÅ¡®️ §¾¡ºõ ÀüÈ¢ ÀÊôÀÐ. «¼ Å¢Îí¸ôÀ¡.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 01, 2010 11:41 pm

hemalatha wrote:þýÛõ ±ò¾¨É ¾¼¨Å ¾¡ý ¦ºùÅ¡®️ §¾¡ºõ ÀüÈ¢ ÀÊôÀÐ. «¼ Å¢Îí¸ôÀ¡.

இந்த டீலிங் நல்லாருக்கே!!! செவ்வாய் தோஷம்.... 502589



செவ்வாய் தோஷம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Mar 01, 2010 11:46 pm

செவ்வாய் தோஷம்.... 677196 செவ்வாய் தோஷம்.... 677196 செவ்வாய் தோஷம்.... 677196 செவ்வாய் தோஷம்.... 677196 செவ்வாய் தோஷம்.... 677196

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக