புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
56 Posts - 50%
heezulia
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
1 Post - 1%
Guna.D
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
1 Post - 1%
Shivanya
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
12 Posts - 2%
prajai
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
9 Posts - 2%
Jenila
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
4 Posts - 1%
jairam
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_m10தேர்தல் முறை சரியில்லை - சோலை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேர்தல் முறை சரியில்லை - சோலை


   
   
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Sat Apr 30, 2011 11:52 am


காஞ்சி மாநகரம்.

அண்ணாவைப் பெற்றெடுத்த பூமி.

இனவுணர்வுத் திருத்தலம்.

அந்தக் காஞ்சிப் பெருநகரம்... தேர்தல் என்று வந்தால் பறிபோய்விடுகிறது. ஆமாம்... முன்னரும் பா.ம.க.விற்குத்தான் தாரை வார்த்தனர். இப்போதும் அந்த புனித பூமி அந்தக் கட்சிக்குத்தான் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டது.

அந்தத் தொகுதியைக் கழகம் விட்டுக்கொடுக்க விரும்பவில்லைதான். ஆனால் அந்தத் தொகுதியில்லையேல் கூட்டணி இல்லை என்று பா.ம.க. தலைவர் படபடத்தார் என்று கேள்விப்பட்டோம்.

காரணம்... அந்தத் தொகுதி அவருடைய உறவினர் உலக ரட்சகனுக்குத் தேவை என்று. தேர்தலுக்கு முன்னர் இதே உலக ரட்சகனை அவர் செய்யாறு தொகுதி வேட்பாளராக்கி னார். அவரும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் செய்யாறு, செய்வது அறியாது திகைத்துப் போனது.

காரணம்... வெற்றி பெற்றவரை அதன்பின்னர் தொகுதி மக்கள் அத்தி பூத்தாற்போல்தான் கண்டுகளித்தனர்.

செய்யாறு -புலவர் கோவிந்தன் கட்டிக் காத்த கழகக் கோட்டை.

ஆனால் அதன்பின்னர் கூட்டணி என்ற பெயரால் பறிபோய்க்கொண்டே இருக்கிறது. சென்ற தேர்தலில் அந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நின்றார். கழகத் தொண்டர்கள் உயிர் கொடுத்து அவரை வெற்றிபெற வைத்தனர்.

அதன்பின்னர் அந்த சட்டமன்ற உறுப்பினர் அரிதாகக் காணப்பட்டார். ஆனால் பஞ்சாயத்து யூனியன் பி.டி.ஓ.க் களை அவர் தவறாது சந்தித்து வந்தார். ஒருவேளை மாதம் ஒருமுறை தொகுதி நிலவரம் அறியத் துடித்துப் போயிருக்க லாம்.

அந்தத் தொகுதியின் மாவட்டச் செயலாளர் எ.வ.வேலு. அவர்தான் உணவு அமைச்சர். அவரும் அந்த காங்கிரஸ் வேட் பாளர் வெற்றிக்காக அரும்பாடுபட்டார்.

ஆனால் வெற்றிபெற்று சட்டமன்றம் வந்த அந்த வேட்பாளர் எப்படி முழங்கி னார் தெரியுமா? தி.மு.க. ஆட்சியில் அரிசிக் கடத்தல் அபரிமிதம் என்றார். இந்தக் குற்றச்சாட்டை அவர் இன்னும் விரிவாக வே கூறினார். திருவண்ணாமலை மாவட் டமே திகைத்துப் போய்விட்டது. அவர் நன்றிக்குச் சந்நியாசம் கொடுத்தார்.

ஆனால் அதனைவிடக் கொடுமை என்ன தெரியுமா? அவரே தான் நடந்து முடிந்த தேர்தலிலும் செய்யாறு தொகுதி வேட்பாளர். கழகத் தொண்டர்கள் கண்ணீர் வடித்தனர். ஆனாலும் அவரும் வெற்றி பெற வேண்டும் என்று அறிவாலயம் சவுக்கைச் சுழற்றியது

எதற்காக இதனைக் கூறுகிறோம்? கூட்டணி என்றால் கழகக் கோட்டைகளைக் காலி செய்து தரவேண்டுமா? நன்றிக்கு இலக்கணம் தெரியாதவர்களைத் தொண்டர்கள் தூக்கிச் சுமக்க வேண்டுமா?



காஞ்சி - கழகக் கோட்டை. பறிபோய்விட்டது.

செய்யாறு - கழகத்தின் அரண். பறிபோய்விட்டது.

மொடக்குறிச்சி என்றால் சுப்புலட்சுமி ஜெகதீசன் நினைவிற்கு வருவார். அந்தத் தொகுதியும் பறிபோய்க் கொண்டே வருகிறது.

தேர்தலுக்குத் தேர்தல் இதேநிலை என்றால் கழகம் மெலிந்துபோகும். இதுவரை பா.ம.க.விற்கு விட்டுக் கொடுத்த தொகுதிகளை உற்றுப்பாருங்கள். தொண்டர்கள் துவண்டுவிட்டனர். கழகமும் வளரவில்லை. அரசியல் ரீதியாகப் பா.ம.க.வும் வளரவில்லை. பொறுப்புக்கு வந்த பலர் வளர்ந்திருக்கிறார்கள்.

இரும்பைக் காய்ச்சிக் காதுகளில் ஊற்றியதுபோல் எரிச்சல்தரும் பிரச்சாரம். கருணாநிதிக்கு ஆளவே தெரியவில்லை என்றார்கள். அவருடைய ஆட்சிக்குப் பூஜ்யம் மார்க் என்றார்கள். இனி விலாசத்தைக் காத்துக்கொள்ள கோபாலபுரம் போயே ஆகவேண்டும் என்ற நிலை வருகிறது. கருணாநிதியைப் போல் இன்னொருவர் ஆள முடியுமா என்கிறார்கள். அவருடைய ஆட்சிக்கு மக்கள் 100 மார்க் போடுகிறார்கள் என்கிறார்கள். இதனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? காற்றடிக்கும் திசை பார்த்துப் பயணம் போகிறவர்கள் நல்ல அரசியல் வியாபாரிகள்தானே? ஆனால் அதுதான் இன்றைக்கு கூட்டணிக் கோட்பாடு என்ற அவல நிலை உருவாகி வருகிறது.

தொகுதியும் கேட்கிறார்கள். திருவிழாச் செலவிற்குக் கவனிக்கச் சொல்கிறார்கள். வாகனத்தையும் கொடுத்து பெட்ரோலும் போடவேண்டியிருக்கிறது. அவர்கள் என்ன அன்னக்காவடிகளா? டெல்லியில் பத்தாண்டுகள் வளமான இலாகாக்களோடு பரிபாலனம் செய்தவர்கள் தான். கூட்டணி என்பது எரிகிற வீட்டில் அள்ளிக் கொள்வது ஆதாயம் என்று இலக்கணம் வகுக்கிறார்கள்.

சென்னையை அடுத்த வண்டலூர் ஒரு மைனர் பஞ்சாயத்து. ஊராட்சித் தேர்தலில் பா.ம.க. போட்டியிட்டது. எதிர்த்து நின்ற தி.மு.க. வேட்பாளர் ஆராவமுதன் வெற்றி பெற்றார். பா.ம.க.விற்கு டெபாசிட் போனது. ஆனால் இன்றைக்கு அதே வேட்பாளர்தான் செங்கல்பட்டு தொகுதி பா.ம.க.வேட்பாளர். தி.மு.க. தூக்கிச் சுமந்தது.

அநியாயமாக 63 தொகுதிகளைக் காங்கிரஸ் கட்சிக்குத் தி.மு.கழகம் ஒதுக்கித் தந்தது. அதன் வெற்றிக்குக் கழகத் தொண் டர்கள் வியர்வை சிந்தி வேலை செய்தனர். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தோற்கடிக்க காங்கிரஸ்காரர்களே வேலை செய்தார்கள். ஒளிவு மறைவு இல்லை. பலப்பல தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களாக களம் இறங்கினார்கள்.

சென்னையில் ஒரு காட்சி. நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப் போடுங்கள். ஆனால் கைச் சின்னத்தில் அந்தக் காங்கிரஸ் வேட்பாளருக்கு மட்டும் ஓட்டுப் போட்டுவிடாதீர்கள் என்று வீடு வீடாகப் பிரசாதம் வழங்கினார்கள். அன்பளிப்பு வீட்டிற்கு ஆயிரம் ரூபாய். அப்படிக் கொடுத்த வர்கள் அசல் காங்கிரஸ்காரர்கள்தான். கட்சி வெற்றி பெறவேண்டும் என்ற சிந்தனை எந்தக் காங்கிரஸ்காரருக்கும் இல்லை.



தேர்தல் முடிந்தாலும் தங்கபாலு உருவ பொம்மை எரிப்பது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. என்றைக்கு முடியும் என்று தெரியவில்லை. கூட்டணி என்றால் இத்தகைய கட்சிகளுடனும் கை குலுக்க வேண்டும்.

இந்த முறை தேர்தல் ஆணையம் கடுமையாக நடந்துகொண்டது. வரவேற் கிறோம். ஆனால் அதற்காக ஆயிரமாயிரம் வட இந்திய காவலர்களையும், துணை ராணுவத்தினரையும் இறக்குமதி செய்து எமர்ஜென்ஸி சூழ்நிலையை உருவாக்கியிருக்க வேண்டியதில்லை.

தமிழகத்தில் இதுவரை வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதில்லை. துப்பாக்கிச் சூடு, தடியடி நடை பெறும் அளவிற்கு வன்முறைகள் நடந்ததில்லை. ஆனாலும் கெடு பிடிகள் அனந்தம். வாக்குப்பதிவு முடிந்ததும் அ.தி.மு.க. பிரதிநிதி நேரில் சென்று தேர்தல் ஆணையருக்கு நன்றி சொன்னார்.

அறத்தின் வலிமை வலுவிழந்துவிடக்கூடாது. எவரும் தர்மத்தின் கோடுகளைத் தாண்டக்கூடாது என்று கண்டிப்புச் செய்வது நியாயம்தான். ஆனால் அந்த நியாயம் அனைவருக்கும் பொருந்தும்படியாக இருக்கவேண்டும்.

அமருகின்ற நீதிபதிகளில் இரண்டொருவர் வேறுபட்டாலும் நீதியா கிடைக்கும்? கறுப்பு ஆடுகள் எங்கும் நுழையவே செய்கின்றன.

எனவே இன்றைய தேர்தல் முறையில் மாற்றம் தேவை. அத்தகைய மாற்றம் வரும்போது கூட்டணி வியாபாரத்திற்கு வழி இருக்காது. ஆணையங்களின் தர்பாருக்கும் அவசியம் இருக்காது. வாக்குச் சீட்டுகளை விலை பேசமாட் டார்கள்.

ஆனால் தமிழகத்தில் அந்தக் கலைக்கு அடித்தளம் அமைத்ததே அ.தி.மு.கழகம்தான். அதன் ஆட்சியின்போது காஞ்சியிலும், கும்மிடிப்பூண்டியிலும் இடைத்தேர்தல். இந்தத் தேர்தலில்தான் வாக்குச் சீட்டுக்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டன.

அதன் பின்னர் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பின் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. இந்தத் தேர்தலிலும் முதன்முதலாக வாக்குச் சீட்டுகளை விலை பேசியது அ.தி.மு.க.தான். முதலில் யாரிடம் கிராமவாசிகள் பணம் வாங்குகிறார்களோ அவர்களுக்குத்தான் விசுவாசமாக இருப்பார்கள் என்று வியாபாரத்தை முன்னதாக ஆரம்பித்ததே அந்தக் கழகம்.

தேர்தலை எப்படி சந்திப்பது என்று திகைத்துப் போயிருந்த தி.மு.க.விற்கு வழி தெரிந்தது அ.தி.மு.க. காட்டிய வழிதான்.

இந்தத் தொற்றுநோய் வங்கத்திலும் பரவிவிட்டது. அங்கு மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்காகப் பணம் கொடுத்ததாகவும், அதில் அந்தக் கட்சி எம்.பி. ஒருவர் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்டதாகவும் எல்லா ஏடுகளிலும் செய்தி வந்திருக்கிறது. வாக்குச் சீட்டு வியாபாரச் சூறாவளியிலிருந்து எவரும் தப்ப முடியாது என்பதற்கு இது ஓர் உதாரணம்.

எதிரி எந்த ஆயுதத்தை எடுக்கிறாரோ அதே ஆயுதத்தை நாமும் எடுப்போம் என்று மார்க்சிஸ்ட் கட்சி உட்பட எல்லா கட்சிகளும் கருதுவது இயல்புதான். போர்க்களத்தில் ஆயுதங்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

இங்கே தமிழகத்திலும் தி.மு.க. பாசறையில் தான் பணம் விளையாடியது என்று கூறமுடி யாது. பத்து விரல்களும் தேயும் அளவிற்கு அ.தி.மு.க.வினரும்தான் காந்தி நோட்டுகளை எண்ணி எண்ணிக் கொடுத்தனர். எனவே பணம் விளையாடுவதைத் தடுக்க வேண்டுமானால் தேர்தல் முறையில் மாற்றம் தேவை.

அந்த மாற்றம் விகிதாச்சார தேர்தல் முறையாகும். அமெரிக்கா, ஜெர்மனி, போர்ச்சுக் கல், ஆஸ்திரேலியா, ரஷ்யா, டென்மார்க், இலங்கை... இன்னும் 80 நாடுகளில் இந்த முறை உண்டு.

அண்மையில் மன்னராட்சியை ஒழித்து நாடாளுமன்றத் தேர்தல் முறை கண்ட நேபா ளத்திலும் விகிதாச்சார தேர்தல் முறைதான்.

ஒவ்வொரு கட்சியும் எத்தனை சதவிகித வாக்குகள் பெறுகிறதோ, அதற்கு ஏற்ப சட்டமன்ற, நாடாளுமன்றத்தில் அத்தனை இடங்கள் பெறும். இந்த முறையில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்கமாட்டார்கள். அரசியல் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள்.

மன்றத்தில் அமர வேண்டிய உறுப்பினர்களின் பட்டியலை முன்னுரிமை அடிப்படையில் முன்னதாகவே தேர்தல் ஆணையத்திடம் அளித்திட வேண்டும்.

இப்போது கூட்டணி என்ற பெயரால் ஜனநாயகம் சோதனைக்கு உள்ளாகிறது. ஜாதி கள் கூத்தாடுகின்றன. பண பலம் தேர்தலைத் தீர்மானிக்கிறது. இத்தகைய எல்லாத் தீமைகளையும் ஒழிக்க விகிதாச்சாரத் தேர்தல் முறைதான் நமக்குப் பொருத்தமாக இருக்கும். அண்ணாவின் காஞ்சியும் பறிபோயிருக் காது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக