புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
30 Posts - 50%
heezulia
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
72 Posts - 57%
heezulia
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10அந்த மாதிரி ஒருத்தன் Poll_m10அந்த மாதிரி ஒருத்தன் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்த மாதிரி ஒருத்தன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 11, 2011 9:01 am

அந்த மாதிரி ஒருத்தன் Head2

காஞ்சனா அம்சமான பொண்ணு. வெள்ளாவியில் வைக்காமலே வெளுத்த பொண்ணு. பார்த்தமாத்திரத்தில் அந்த அழகில் உடனடியாக கிறங்கிப் போகாத இளசுகள் இருக்க மாட்டார்கள். வரதட்சணை கொடுக்கிறதா இல்லைன்னாலும் கூட `கட்டிக்க மாட்டேன்னு' எவனுமே சொல்லமாட்டான்.

ஆனால் காஞ்சனா குடும்பம் அந்தஅளவுக்கு அன்னக்காவடி குடும்பம் இல்லை. அப்பா மோகனவேல் விசைத்தறி ஓட்டும் தொழிலாளி. ஒரளவு வசதி வாய்ப்பிருந்தது. அவள் படிக்கிற காலத்திலேயே `பெண்ணைக் கொடுங்க' என்று கேட்டு வந்தார்கள் அநேகர். `பொண்ணு படிச்சு முடிக்கட்டும்' என்று இவர்களாகத்தான் தட்டிக் கழித்தார்கள்.

காஞ்சனாவும் உள்ளுரில் பள்ளிப்படிப்பு, பக்கத்து டவுணில் பட்டப்படிப்பு என்று முடித்து முன்று மாதம் தான் ஆகிறது. அதற்குள் இனி தடையில்லையே என்கிற மாதிரி சேலத்தில் இருந்து மாப்பிள்ளை வீட்டாரை அழைத்துக் கொண்டு வந்து விட்டார் புரோக்கர்.

பெண்ணைப் பார்த்ததும் மாப்பிள்ளை மார்த்தாண்டம் சொக்கிப் போனான். பேச்சு வரவில்லை. சந்தோஷம் வியர்வையாய் கழுத்துவரை வழிந்தது.

காபி கொடுக்கும்போதே காஞ்சனாவுக்கும் பூரணமாய் அவனைப் பிடித்துப் போயிருந்தது. இருவரின் பார்வைப் பரிமாற்றங்களும் அவர்களின் சம்மதத்தை இரண்டு குடும்பத்தாருக்கும் சொல்லாமல் சொல்ல...

"அப்புறம் என்ன...ஒரு நல்ல முகூர்த்த நாள் பார்க்கவேண்டியது தானே...''மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வந்த புரோக்கர் பொன்னுரங்கம் தனக்கு புரோக்கர் கமிஷன் நிச்சயமாகி விட்ட சந்தோஷத்தில் சொல்ல...

அடுத்ததாய் ஜாதகம் பார்க்கப்பட்டது. பொருத்தங்களும் பொருந்தி வந்தது.

அதையடுத்து கல்யாணத்துக்கு தேதி பார்க்கப்பட்டபோது தான் பேசினான் மார்த்தாண்டம். "தப்பா நினைச்சுக்கக் கூடாது. என் கூட வாழ வர்ற பொண்ணு கிட்ட எந்த வரதட்சணை யும் வாங்கக்கூடாதுங்கற நினைப்பு எனக்கு உண்டு. அப்படி இதுக்கு முன்னால பொண்ணு பார்க்கப்போன வீட்டுல நான் சொல்லி, அதனால் அவங்க எனக்கு என்ன குறையோன்னு நினைச்சு தயங்கிட்டாங்க. அதனால உங்க வீட்டுக்கு வர்றதுக்கு முன் னாடியே பெரியாஸ்பத்திரியிலே என் ஆரோக்கியத்தை டெஸ்ட் பண்ணி சான்றிதழ் வாங்கி யாந்திருக்கேன். இங்கே படிச்சவுக யாராச்சும் இருந்தா இப்பவே இந்த சான்றிதழை படிச்சுப் பார்த்துக்கலாம். இல்லேன்னா கூட உங்க ஊர் டாக்டர்மாருங்க கிட்ட காட்டி விசாரிச்சுக்கலாம்.''

மாப்பிள்ளை மார்த்தாண்டம் இப்படி நீண்ட பிரசங்கம் பண்ணி தன் நிலையை விளக்கி விட்டதில் பெண்ணின் மொத்தக் குடும்பமும் சில வினாடிகள் பிரமித்துக் கிடந்தது. காஞ்சனாவுக்கு மட்டும் இந்த முடிவு கொஞ்சம் அதிர்ச்சி தந்தது.

ஆனால் அவள் அதிர்ச்சியை அங்கே யார் கண்ணில் வாங்கினார்கள்? `உண்மையான ஆம்பளை மாப்பிள்ளைன்னா இது இவர்தான்' என்ற புகழாரத்துடன் திருமண தேதி குறிக்கப்பட்டது.

திருமணம் நடந்தது. அன்றே முதலிரவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

கதவு தாளிட்டவளை நோக்கி தாபத்தோடு அணைக்க வந்த மாப்பிள்ளை மார்த்தாண்டத் திடம் இருந்து பதமாய் விலகினாள் காஞ்சனா.

அவனுக்குள் சுருக்கென்ற வலி. ``என்னாச்சு காஞ்சனா... விலகிப் போறே?'' குழப்பமாய் கேட்டான் மார்த்தாண்டம்.

``உங்களோட போக்கு எனக்கு பிடிக்கலே...'' எரிச்சலைக் காட்டினாள் காஞ்சனா.

``என்ன போக்கு..?''

``வரதட்சணை, நகை, நட்டு, சீர்வரிசைன்னு எதுவுமே வேண்டாமுன்னு ஏன் சொல்லிட்டீங்க?''

``எல்லாம் காரணமா தான்...''

``அப்படி என்ன காரணமாம்..?''

"வரதட்சணை, சீர்வரிசை, நகைநட்டுன்னு வாங்கினா, நாளைக்கு ஏதாச்சும் ஒரு இக் கட்டுன்னா, நகைகளை அடமானம் வைக்கற நெலமை வரும். அப்புறம் அதை மீட்க முடியாமப் போயிட்டா புருசன், பெண்டாட்டிக்குள்ளாற நிம்மதி போயிரும். என்னை பொறுத்தவரைக்கும் வரதட்சணை வாங்காதவனுக்குப் பொண்ணு பொறந்தா, அவளுக்கும் வரதட்சணை வாங்காத மாப்பிள்ளை தான் கெடைப்பான். கண்டிப்பாக ஆண்டவனே கெடைக்க வைப்பான். அந்த நம்பிக்கையும் எனக்கு நெறையவே இருக்கு...அதோட..?''

"ம்....அதோட?''

"பார்க்கிறப்பவே தங்கமா வைரமா ஜொலிக்கிற இந்தப்பொண்ணைப் பார்த்தப்புறமும் தங்கம் வேணும்...தாமிரம் வேணும்னு எந்தப் பைத்தியக்காரனாவது இதோட மனசை சங்கடப் படுத்துவானா?''

அவன் சொல்லி நிறுத்த, காஞ்சனாவோ நெகிழ்ந்து போய் அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.



அந்த மாதிரி ஒருத்தன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jun 11, 2011 1:22 pm

சூப்பருங்க

இந்த மாதிரி சிலர் இருக்கிறாங்க... கதைகளும் நிஜ வாழ்வின் பிரதிபலிப்புதானே?



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக