புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_c10நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_m10நூல் விமர்சனங்கள் :இரா இரவி - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூல் விமர்சனங்கள் :இரா இரவி


   
   

Page 2 of 2 Previous  1, 2

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Aug 02, 2010 9:51 pm

First topic message reminder :

நினைவில் நீ , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி


தொகுப்பாசிரியர் : கவிஞர் மணிமேகலை நாகலிங்கம்
“இந்நூல்
உணர்வுகளை புரிந்து கொள்ளும் உயரிய உள்ளங்களுக்கு” என்று காணிக்கை
செய்துள்ளார். உண்மை தான் மனைவி இறந்த வீட்டிலேயே மறுமணத்திற்கு பெண்
தேடும் மாப்பிள்ளைகள் மலிந்து விட்ட காலம் இது. ஆனால் எங்கோ பிறந்து,
வளர்ந்து, வந்து, கணவன், குழந்தைகள் என தியாக வாழ்க்கை வாழ்ந்து மறைந்த
மனைவியின் நினைவாக கவிஞர் மணிமேகலை நாகலிங்கம் தொகுத்து உள்ள ஹைக்கு கவிதை
நூல். முன்னனி ஹைக்கூ கவிஞர்களின் தலா மூன்று கவிதைகள் நூலில் உள்ளது. தலா
ஒரு ஹைக்கூ மட்டும் தங்களின் ரசனைக்காக எழுதி உள்ளேன்.
என்னைப்
பொருத்தவரை ஒரு பெண் இளம் வயதில் விதவையானால் அவளுக்கு மறுமணம் அவசியம்.
ஆனால் ஓர் ஆண், குழந்தைகள் இருக்கும் போது மனைவி இறந்து விட்டால், மறுமணம்
செய்யாமலே அவரின் நினைவாகவே வாழ்வது தான் சிறந்த வாழ்க்கை. குழந்தைகளுடன்
ஒரு தந்தை மறுமணம் செய்யும் போது குழந்தைகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி
விடுகின்றது. தந்தையின் மறுமணத்தின் காரணமாக அல்லல்பட்ட குழந்தைகள்
எண்ணிலடங்காதவை.என் வாழ்வில் நடந்த உண்மை. என் தாத்தா மறுமணம் செய்து
கொண்டதால் பேரனாகிய என் வாழ்க்கை வரை அந்த பாதிப்பு தொடர்ந்தது. அந்த வலி
என் நெஞ்சை விட்டு அகலவே இல்லை. மறுமணம் செய்யும் ஆண்களையே வெறுத்தேன்.
ஹைக்கூ கவிதை சிறந்த வடிவம் என்பதை உணர்த்திடும் நூல். மனைவியின் மேன்மையை
மகாகவி பாரதி சொன்ன வைர வரிகள் நூலின் பின் அட்டையில் உள்ளது.
ஓ மனிதர்களே மண்ணுக்குள் எல்லா உயிர்களும்
தெய்வமென்று பேசுகிறீர்கள் அது உண்மையென்றால்
நீங்கள் மாலையிட்டு கைபிடித்த மனைவியும் ஒரு தெய்வமில்லையா?
கவிஞர்
மணிமேகலை நாகலிங்கம் மறைந்து விட்ட மனைவியின் நினைவாக இந்த கணவன்
கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி இது. மனைவியின் நினைவு நாட்களில் ஏதாவது
தொண்டு செய்யுங்கள்.
புத்தகம்
உள்ளே மயிலிறகு
கண்ணாய் நீ – ஒவியக்கவிஞர் அமுதபாரதி
உதிரும் ஒவ்வொரு பொழுதும்
மீண்டும் வரப் போவதில்லை
உன்னை மாதிரி – வண்ணை சிவா
வருடங்கள் கழிந்தும்
சரியாய் அடையாளம் சொன்னது
அவளின் ஓரப்பார்வை – ஜி.மாஜினி
மரணம் செத்துப் போனது
காதல் முன்னே
யமுனைக்கரை தாஜ்மகால் – துறவி
ஒருவருக்கும் தெரியாமல்
ஒளிந்திருக்கிறாள்
மனதுக்குள் அவள்-சிவபெருமான்
உளி வடிக்கா
உயிர் சிலை
இதயத்தில் அவள் – உ.பாலஹாசன்
எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் ரேகை -அறிவுமதி
நானும் அவளும்
பிரிவதில்லை
புகைப்படத்திலிருந்து – அய்யப்பன்
அறைகிறேன் என்னையே
ஆனந்தமாய் உன்
ஞாபகச் சிலுவையில் – கோ.பாரதி மோகன்
கனவைக் கிள்ளிப் போனாய்
வலிக்கத்தான் செய்கிறது
நீயில்லாத பகல் – மு.முருகேஷ்
உள்ளதை நேசிக்காமல்
உள்ளத்தை நேசிப்பவள்
மனைவி – எஸ்.பி.என்
சமாதியும்
சன்னதி தான்
தெய்வமாய் மனைவி – கலையருவி
எனக்குப் பயன்படாது
எதற்கும் என்னிடம் இருக்கட்டும்
உன் ஒட்டுப்பொட்டு – ஆர். எஸ்.நாதன்
இதயத்தில் இன்னும்
ஈரமாய்
அவள் தந்த முத்தம் – பாலபாரதி
என் பாதங்கள்
சுவடு பதிக்கும்
உன் பாதையில் – தமிழ்நெஞ்சன்
கண்மூடி ரசித்தேன்
உருண்டு விளையாடும்
அவள் விழியை – பா.உதயக்கண்ணன்
வீடு நிறைந்திருந்தும்
மனம் காலியாகவே
அவள் இல்லாமல் – முகவை முனியாண்டி
நீ ஒருமுறை இறந்தாய்
நான் தினம் தினம்
புதைக்கப்படாமல் – ச.காவியன்
காலி செய்த வீடு
மறக்காமல் எடுத்து வந்தேன்
பழகிய நாட்களை – நா.கவிக்குமார்
அடையாளம் தெரியும்
தூரமாய் இருந்தாலும்
அவளின் நடை – ஆலா
சோகம்
அதுவும் சுகம் தான்
நினைவில் நீ – மணிமேகலை நாகலிங்கம்
ஒவ்வொரு
ஹைக்கூ கவிதையும் ஒவ்வொரு உணர்வுகளை ஏற்படுத்துகின்றன. மலரும் நினைவுகளை
உருவாக்குகின்றன. இந்த ஹைக்கூ கவிதைகளைப் படிக்கும் போது வாசகர்களின்
நினைவிற்கு காதல் மனைவியின் நினைவு வருவது நிச்சியம். இந்நூல் பற்றி
கவிஞர் வெண்ணிலா ஆணாதிக்க சிந்தனையின் வெளிப்பாடு என்று குறை சொல்லி
உள்ளார். அதுவும், அதற்கான மறுப்பும் நூலில் உள்ளது கூடுதல் சிறப்பு. இன்று
விமர்சனங்களை ஜீரணித்து கொள்ளும் பண்பு பலருக்கு இருப்பதில்லை. ஆனால்
தொகுப்பாசிரியருக்கு இப்பண்பு நிறையவே உள்ளது என அறிய முடிகின்றது.
காதலியை, மனைவியே வெறும் போகப் பொருளாகப் பார்க்காமல் உயிருள்ள சக மனுசியாக
மதித்து அவளது உழைப்பை, தியாகத்தை உணர்ந்து அவளின் நினைவாக வாழ்வதே
வாழ்க்கை.


eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Apr 24, 2011 6:10 pm

பொற்றாமரை

நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன்

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

எ .ஆர்.பதிப்பகம் கே .கே .நகர், மதுரை விலை ரூ 955

தமிழர்களின் கலையை உலகிற்குப் பறைசாற்றிடும் கலைப் பொக்கிஷம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் .சமீபத்தில் உலக அதிசயமாக அறிவிக்க வேண்டுமென்று இணையத்தில் வாக்கெடுப்பு நடந்தது .
சீனப் பெருஞ்சுவர் நீளமான ஒன்று .உலக அதிசயமாக உள்ளது .ஆனால்
உலகில் எந்தக் கோயிலிலும் இல்லாத அளவிற்கு கற்ச்சிலைகளும் ,சுதைச்
சிற்பங்களும் நிறைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை உலக
அதிசயமாக இன்னும் அறிவிக்கவில்லை என்பது வருத்தம்தான் அறிவிக்க இவர்கள்
யார் ?உலகத் தமிழர்கள் நாம் அறிவிப்போம் .
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் உலக அதிசயம்தான் என்று .

இந்த நூலை படித்து முடித்தவுடன் இந்த நிலைக்குதான் நான் வந்தேன் .
எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது .ஆனால் உலகின் முதல் மொழியான தமிழ்
பேசிய தமிழன் உலகம் வியக்கும் வண்ணம் ,கல்லிலே கலை வண்ணம் கண்ட திறனைக்
கண்டு வியந்து போனேன் .மீனாட்சி கோயில் பற்றி பல நூல்கள் வந்துள்ளன .ஆனால்
இந்த நூல் MASTER PEICE என்றே சொல்ல வேண்டும் .இது போன்ற நூல் இதற்கு முன் வரவில்லை .
இனி வரப்போவதுமில்லை என்று அறுதியிட்டுச் சொல்லலாம் .
பிரமாண்டமான நூல் .பிரமிக்க வைக்கும் நூல் .வாங்கிப் படித்துப் பார்த்தால்
நீங்களும் உணர்வீர்கள் .வண்ணப் புகைப் படங்கள் வளமான கலை நுட்பத்தைப் பறை
சாற்றுகின்றன .
நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் மேலூர் அரசு கலைக் கல்லூரியின் பேராசிரியர் .மீனாட்சி கோயில் பற்றிய தகவல் களஞ்சியமாக ,ஆய்வு நூலாக மலர்ந்து உள்ளது .சங்கம்
வைத்து தமிழ் வளர்த்த மதுரை மண்ணிலிருந்து வெளிவந்துள்ள நூல் .கலைக்
களஞ்சியமாக வந்துள்ள இந்த நூல், எ .ஆர்.பதிப்பகம் மூலம் வெளியிட்ட மருத்துவர் பொற்றாமரை கொண்டான் திரு .சீனிவாசன் ,அவரது அன்பு மனைவி திருமதி மல்லிகா
இருவரும் பாராட்டுக்குரியவர்கள் .மிகப் பெரிய தொகையை இந்த நூலிற்காக
முதலீடு செய்த தொண்டுள்ளத்தைப் பாரட்ட வேண்டும் .டாக்டர் ராதா தியாகராஜன்
அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது .அவரதுஅணிந்துரையில் சிறு துளி

சுருங்கக் கூறின் ஒரு வாரம் முழுவதும் கண்டறிந்து வணங்கிப் போற்றத்தக்க
இவ்வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மாபெருந்திருக் கோயிலின் அனைத்துப்
பகுதிகளையும் மாபெரும் வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அறிந்து கொண்ட மனநிறைவு
,இந்நூலினைப் படிப்பவர்களுக்கு உண்டாகும் .இவ்வரலாற்றை நுண்ணரிதின்
நோக்கித் தெள்ளிதின் வரைந்த டாக்டர் அம்பை மணிவண்ணனை மனமாரப்
பாராட்டுகின்றேன் .


நூல் ஆசிரியர் முனைவர் அம்பை மணிவண்ணன் மணியான மொழியில் ,அற்புத
வர்ணனைகளுடன் ,அழகு தமிழில் அற்புதமாக .மிகச் சிறப்பாக எழுதி உள்ளார்
.மீனாட்சி கோயில் பற்றிய முழுமையான நூல் .உலகில் எல்லா நூலகத்தில் இருக்க
வேண்டிய நூல் .வெறும் புகழ்ச்சி அல்ல உண்மை என்பதை வாங்கிப் படித்துப்
பார்த்தால் நீங்களும் உணர்வீர்கள்.296 பக்கங்களும் புகைப்படங்களும்
எழுத்து மட்டுமல்ல ,தமிழர்களின் திறமை உழைப்பு ,கலை ,பண்பாடு ,நாகரீகம்
,விழாக்கள் அனைத்துத் தகவல்களின் சுரங்கமாக உள்ளது
.இந்நூலில்
புகைப்படங்கள் சிறப்பா? கருத்துக்கள் சிறப்பா ?எனப் பட்டிமன்றமே நடத்தலாம்
.நடத்தினாலும் நடுவரால் தீர்ப்புச் சொல்ல முடியாது . அந்த அளவிற்கு
புகைப்படங்களும் ,கருத்துகளும் உள்ளத்தைக் கொள்ளைக் கொள்கின்றன .நூலில்
விமானத்தில் இருந்து எடுக்கப் பட்ட புகைப்படம் ,செயற்கைக்கோள் வரைபடம்
மீனாட்சி கோயிலில் உள்ள அனைத்துப் பகுதிகளின் புகைப்படங்கள் சிலைகள்
அதற்க்கான விளக்கங்கள் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன .
இந்த நூலைப் படித்துவிட்டு மீனாட்சி கோயில் சென்றுப் பார்த்தேன் .நான்
மட்டுமல்ல இந்த நூல் படிக்கும் அனைவருக்கும் தோன்றும் மீனாட்சி கோயிலை
கலைக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்று .இந்நூலை அயல்நாட்டில் உள்ள
நண்பர்களுக்குப் பரிசாகத் தந்து மகிழலாம் .மீனாட்சி கோயிலின் கலை
நுட்பத்திற்காகவே உலகில் தமிழனாகப் பிறந்த ஒவ்வொரு தமிழனும் பெருமை
கொள்ளலாம் .வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் தமிழன் பிரமாண்டமாக கலை
அம்சத்துடன் கட்டி எழுப்பிய கோயில் ,காலத்தால் அழியாத கலைச் சின்னமாக
உள்ளதை நூல் விளக்குகின்றது .
விழிகளுக்கு விருந்தாக கலை உள்ளது .கருத்து மனதிற்கு இனிமையாக உள்ளது
.மிகச் சிறப்பாக அச்சிட்ட மதுரை விநாயகா அச்சகதாரும் பாராட்டுக்கு
உரியவர்கள்மீனாட்சி கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள சிலைகளைப்
பார்த்தால் உண்மையில் மனிதர்கள் நிற்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன .சிலைகளின்
புகைப்படங்கள் ,விளக்கங்கள் ,இசை எழுப்பும் தூண்கள் பற்றிய தகவல்கள்
,மதுரையின் வரலாறு .கோயிலின் தோற்றம் ,வளர்ச்சி ,பிரகார ஓவியங்கள்
,கோபுரங்கள் பற்றிய விபரங்கள் ,திருமலை நாயக்கர் வரலாறு,தங்கக் கோபுரம்
,சிற்ப அமைப்பு ,வாயிற்க் காவலர்கள் சிலைகள் இப்படி பல்வேறு தகவல்கள்
நூலில் உள்ளது .

புதுமண்டபத்தில் உள்ள 34 சிலைகளின் பெயர்கள் அதன் விளக்கங்கள் நம்மை
வியப்பில் ஆழ்த்துகின்றன .கள்ளழகர் திருவிழா தகவல்கள் ,தேரின் கலைநய
வேலைப்பாடு எல்லாம் நூலில் உள்ளது.இந்நூலைப் படித்து முடித்தவுடன் நாமக்கல்
கவிஞர் பாடிய வைர வரிகள்தான் என் நினைவிற்கு வந்தது .

தமிழன் என்று சொல்லடா !
தலை நிமிர்ந்து நில்லடா !


--

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி




Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» நூலின் பெயர் : அம்மா அப்பா ! நூல் வகை : கவிதை ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி ! நூல் விமர்சகர் : முனைவர் ச. சந்திரா !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை.
» கடவுளின் நிழல்கள் ! நூல் ஆசிரியர் : கவித்தாசபாபதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக