புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
5 Posts - 14%
heezulia
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
4 Posts - 1%
mruthun
தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_m10தமிழகம் வாசிக்கிறது - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழகம் வாசிக்கிறது


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Apr 23, 2011 2:29 pm

First topic message reminder :


” நகைக்கடைகளை விடவும் புத்தகக் கடைகளில் அதிக விற்பனையும் லாபமும் கிட்டுகின்றன.”

என்ன மூச்சு நின்று விட்டதா?. என்னைக் கொன்றே போடலாம் என்று தோன்றுகிறதா?.

ஜனத்திரள் நிரம்பி வழியும் புத்தகக் கடைகளைப் பார்க்க ஏக்கமாய்த்தான்
இருக்கிறது.வருடத்திற்கு ஒரு முறையேனும் நகைக்கடைக்கு, ஆறேழு முறையேனும்
துணிக்கடைக்கு குடும்பத்தோடு போகும் நாம் மொத்த ஆயுளில் எத்தனை முறை
குடும்பத்தோடு புத்தகக் கடைக்குப் போகிறோம்? ஜூன் மாதத்தில் குழந்தைகளின்
பாடப்புத்தகங்களுக்காக புத்தகக் கடை வரிசைகளில் நிற்பதோடு நமக்கும்
புத்தகக் கடைகளுக்குமான உறவு சுருங்கிப் போகிறது.

“படித்து முடித்துவிட்டு சும்மா இருப்பதாகச்” சொல்லிக் கொள்கிற அவலம்
தமிழ்ச் சமூகத்திற்கு மட்டுமே உரியது. பத்தாம் வகுப்பில் முப்பத்தொன்பது
சதம் மதிப்பெண்களோடு தேற்சி பெற்றவன் ஏதோ தான் படித்துக் களைத்துவிட்ட
களைப்பை உணர்வது என்பதும் நமக்கே உரிய சோகம்.

படித்தவன் எப்படி சும்மா இருக்க முடியும்? சும்மா இருப்பவன் எப்படி
படித்தவனாக முடியும்?

எதார்த்தம் இப்படி பல்லை இளித்துக் கொண்டு நிற்க, நகைக் கடைகளைவிடவும்
புத்தகக் கடைகளில் அதிக விற்பனையும் அதிக லாபமும் எப்படி?

27.04.1997 தினமணியில் வந்துள்ள அறிஞர். தமிழண்ணல் கட்டுரையின்
ஒருவரிதான் இந்தக் கட்டுரையின் தொடக்க வரி. இடைத் தொண்ணூறுகளில்
“அமெரிக்கா வாசிக்கிறது” என்கிற இயக்கம் லட்சோப லட்சம் டாலர்கள் செலவில்
தொடங்கப்பட்ட செய்தியும் நமக்கு கட்டுரையில் கிடைக்கிறது.

கற்றலும் வாசித்தலும் நுகர்பொருட்களே. அரசாங்கங்கள் இதற்கெல்லாம் மானியம்
ஒதுக்கக் கூடாது . மீறி ஒதுக்கினால் உலக வங்கி நிதியுதவி நிறுத்தப் படும்
என்று நேரடியாகவும் தனது எடுபிடியான உலக வங்கி மூலமாகவும் உலக
நாடுகளுக்கெல்லாம் குறிப்பாக வளரும் நாடுகளுக்கு உத்தரவு போட்டு அதில்
பெருமளவு வெற்றியும் பெற்றுள்ளது அமெரிக்கா.

பிசகற்று நுணுகினால் ஒரு உண்மை புரியும். கல்வி விலை பொருளானால்
இருப்பவன் மட்டுமே கல்வியை வாங்க முடியும். கற்றலுக்கும் வாங்கலுக்கும்
உள்ள இடைவெளி ஒரு குறுநூல் அளவுக்கு நீளும். கல்வியை காசின்றி கற்க
மட்டுமே முடிந்த உழைக்கும் , ஏழை, ஒடுக்கப் பட்ட பகுதி மக்களால்
கல்வியைக் காசு கொடுத்து வாங்க முடியாது. மத்தியத் தரவர்க்கத்தை இது
சற்று தாமதமாகத் தாக்கும்.

ஆக, மேற்சொன்ன உழைக்கும் மக்களிடம் இருந்து கல்வி களவு போகும். படித்தப்
பணக்காரனுக்கு தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். எனவே அடங்குதல்
அவனது இயல்பாகப் போகும். ஆகவே பணக்காரன் படிப்பதால் அமெரிக்காவிற்கு
ஆபத்தில்லை. ஆனால் , உழைப்பவன் படித்துத் தேர்ந்தால் அவனை அடக்க இயலாது.
கலியைப் பள்ளியிலிருந்து சந்தைக்குத் திருப்பாமெரிக்கா விரும்புவது
இதனால்தான். ஆனால் அமெரிக்கன் தடையின்றி செலவின்றி நிறைய வாசித்துவிட
வசதி செய்வதுதான் “ அமெரிக்கா வாசிக்கிறது” இயக்கத்தின் னோக்கமாக இருக்க
முடியும்.

தன் எல்லைக்கு எஞ்சிய உலகத்தில் அடிமைகள் மட்டுமே குவிந்துகிடக்க
ஆசைப்படும் அமெரிக்கா, குறைந்த பட்சம் தனது குடிகளாவது அறிவார்ந்து
இருக்க வேண்டுமென ஆசைப் படுவதற்காக நாமும் அவசரமாக அமெரிக்காவை ஒருமுறை
பாராட்டி விடலாம். அமெரிக்காவைப் பாராட்ட எஞ்சிய நம் வாழ்வில் வாய்ப்பே
கிட்டாமலும் போகலாம்.

பெசில்வேனியா பல்கலைகழகத்தில் இன்று வெளிவந்த தமிழ் நூல்களும் பைண்டு
செய்யப்பட்டு , தூசு தட்டப்பட்டு அடுக்கி வைக்கப் பட்டுள்ளன.7,56,640
சதுராடிப் பரப்பளவில் பன்னிரண்டு தளங்களில் சிகாகோ நூலகம் இயங்குகிறது
போன்ற தகவல்களும் தமிழண்ணல் கட்டுரையில் கிடைக்கின்றன.

இதில் நமக்கும் மகிழ்ச்சிதான். நமது வருத்தெமெல்லாம் அமெரிக்காவின்
உத்தரவுக்கு கீழ்ப்படிந்து வளரும் நாடுகள் நூலகத்திற்கான செலவை
நிறுத்திக் கொண்டதுதான்.

இன்று வெளிவந்த நூல்களும் வாங்கப் பட்டு, பைண்டு செய்யப்பட்டு சுத்தமாக
பாதுகாக்கப் படுகின்றன அங்கே. தமிழகத்து நூல்னிலையங்களில் தமிழ் நூல்கள்
நுழையப் படும் அவஸ்தை நம் நெஞ்சில் வலியைத் தருகிறது.

சமீப காலமாக தமிழகத்தில் வாசகத் தளம் நீண்டுகொண்டுமிருக்கிறது.
அகன்றுகொண்டுமிருக்கிறது. களகட்டும் புத்தகக் கண்காட்சிகள் இதற்கு
சான்று. ஆனால், பெருகியுள்ள மக்கட் தொகையோடு விகிதாச்சாரப் படுத்த இந்த
விரிதல் மிக மிகக் குறைவுதான். இந்த முரண்பட்ட விகிதாச்சாரத்தை
நேர்படுத்த ஓரளவு பலம் கொண்ட சக்தி நூலகம்.

தமிழன் வாசிக்க வேண்டும் என்று நாம் ஏன் முட்டிக்கொள்ள வேண்டும்?

“தான்” சார்ந்த சிந்தனையை “சமூகம்” சார்ந்த சிந்தனையாக புத்தகங்கள் மாற்றிவிடும்.

ந.முருகேசபாண்டியன் அவர்கள் 1984 ல் ஈழ விடுதலைக்ககப் போராடும் ஒரு
ராணுவக் குழுவின் தலைவரைச் சந்திக்கிறார். (அவர் வெளிப்படையாய்
சொல்லவில்லை. ஆனாலும் அது பிரபாகரன் அவர்களாக இருப்பதற்கு வாய்ப்புகள்
அதிகம்). இலங்கைத் தமிழர்களைச் சிதறாமல் ஒன்று திரட்டி தங்களது
போராட்டத்தில் ஈடுபடுத்த எப்படி முடிந்தது என்ற கேள்விக்குத் தான் பெற்ற
பதிலை அப்படியே “ யாழ்ப்பாண நூல்நிலையம் ஓர் ஆவணம்” என்ற நூலுக்கான தமது
மதிப்புரையில் தருகிறார்.

”யாழ்ப்பாணப் பகுதியில் கிராமங்கள் தோறும் தொடங்கப் பெற்ற வாசக சாலைகள்
தான் ஈழப் போரட்டத்தின் மையம்,. அதாவது வாசக சாலையில் நூல்களை வாசிக்க
ஆரம்பித்த இளைஞர்களின் மனநிலையில் ஏற்பட்ட விழிப்புணர்வு ஈழத்
தமிழர்களின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியமைத்து விட்டது.

உலகின் கழுத்தைப் பிடித்துத் திருகி அதன் கவனத்தைப் பல பத்து ஆண்டுகளாக
வைத்திருக்கும் ஒரு பெரும் போராட்டத்தின் மையமே நூலகங்கள்தான் என்பது நூலகங்களின் அழுத்தமான முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இதை சராசரி அரசியல்வாதிகள் உணர்வதில் சிக்கலுண்டு. சராசரிகள் படிக்கப் படிக்க அவனுக்குப் பாதிப்பு என்பதால் சராசரி அரசியல்வாதி இதில் அக்கறை காட்டுவதென்பது அத்தையின் தாடிதான். ஆனால் இடதுசாரி மனங்கொண்ட இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் இதன் அழுத்தம் உணர்வது சமூக மாற்றத்திற்கான இந்த நொடித் தேவையாகும்.


தனது வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட பகல் பொழுதுகளைப் போர்க்களங்களிலேயே செலவு செய்த திப்பு இளைஞர்களையும் புத்தகங்களியும் இணைக்க அக்கறைப் பட்டிருக்கிறான். எத்தகைய வளமையும், பாதுகாப்பும் பாழாய்ப் போக ஒரே ஒரு படிக்காத தலைமுறை போதும். இது உணர்ந்த திப்பு, நூலகத்தின் மீது கவனம் குவித்துள்ளான்.

திப்பு வீழ்ந்ததும் நகைகள் மற்றும் கலைப் பொக்கிஷங்களைச் சுருட்டிக் கொண்டு போன பறங்கியரின் நெற்றியடித்து பாடம் சொன்னது கீழையியல் ஆராய்ச்சியாளன் வில்கின்ஸ் கவர்னர் ஜெனரலுக்கு எழுதிப் போட்ட ஒரு கடிதம். அவன் எழுதினான், “ இந்தியாவில் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம் இது.” அவன் சொன்னது திப்புவின் நூலகத்தை.

அழகூட்டும் ஆபரணங்களையும் வளமை கூட்டும் செல்வங்களையும் பொக்கிஷமென நினைத்து ஞானப் பட்டறையை விட்டுப் போன அறிவினேழைகளாய் தங்களை உணர்ந்த பறங்கியர்கள் அதையும் கொண்டு போனார்கள்.

பொதுவாகவே ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட மண்பரப்பில் எஞ்சி நிற்கும் புராதன கலைச் சின்னங்களையும், நூலகங்களையும் அழித்துவிடுவார்கள். ஏனெனில் ஆக்கிரமிப்பிற்கெதிராய் மண்ணின் குடிகளை கிளர்ந்தெழச் செய்யும். நாளந்தா சிதைக்கப்பட்டதற்கும் , பாக்தாத்தை கைப் பற்றிய தைமூர் அங்குள்ள நூலகங்களை எரித்ததற்கும், புஷ் இர்ராகில் இதையே செய்வதற்கும் இதுதான் காரணம்.

எனவே மின் உற்பத்தி, தொழில் வளர்ச்சி, ஆகியவற்றின் மீது செலுத்தப்படும் கவனமும், முக்கியத்துவமும் நூலகங்களின் கட்டமைப்பின் மீதும் திருப்பப்பட வேண்டும்.

இடதுசாரி சிந்தனைக் கொண்ட அமைப்புகள் குறிப்பாக, இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் தங்களது வேலைத் திட்டத்தில் நூலகங்களை உருவாக்குதல், பராமரித்தல், வளர்த்தெடுத்தல் என்பவற்றிற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவர்கள் முடிவெடுத்து, இயக்கப் படுத்தி, ஒரே நேரத்தில் கல்லூரிகள், பள்ளிகள், ரயிலடிகள், பேருந்து நிலையங்கள் , கடைவீதி மற்றும் ஜனங்கள் திரளும் பகுதிகளில் உண்டியலடித்தாலே நூலகங்கள் உருவாகும். இவர்களது வல்லமையும் அர்ப்பணிப்பும் அத்தகையது.

நூலகங்கள் கட்டுவது, புத்தகங்கள் குவிப்பது என்பதோடு எதைப் படிப்பது, எதை விடுப்பது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். “கண்டதைப் படிக்க பண்டிதன் ஆவான்” என்பது முதுமொழி. கண்டதையும் கற்க ஏது நேரம் இன்று. நேற்றைவிடவும் வேகமாய்ச் சுழலும் இன்று சொல்லும் பாடம் இதைவிடவும் வேகமாய்ச் சுழலும் நாளை என்பதுதான். கிடைக்கிற சன்னமான நேரத்தில் எதை வாசிப்பது என்பதைத் தேர்ந்தெடுக்கும் தெளிவையும் வாசகனுக்கு கற்றுத் தரவேண்டும்.

மனிதனை ரசிகனாக்குகிற வேலையை ஊடகங்கள் பார்க்கின்றன. நாம் ரசிகனை வாசகனாக்க வேண்டும். இந்நிலையில் இருக்கிற வாசகனும் ரசிகனாவது ஆபத்தானது. வாசகனை ரசிகனாக்குவது உலகமயமாக்களின் ரகசிய வேலைத் திட்டங்களில் ஒன்று. இதன் விளைவிலொரு சிதறல்தான் பாக்கெட் நாவல். பேருந்து ஏறும் போது ஒரு பாட்டில் மினரல் வாட்டரும், ஒரு பாக்கெட்நாவலுமாய் ஏரி இறங்கும்போது இரண்டையும் கிடாசிவிட்டுப் போகும் பழக்கம் வளர்வதை அனுமதிக்கக் கூடாது. காலிக் குப்பியையும் புத்தகத்தையும் ஒன்றாக நினைக்கும் அயோகியத் தனத்தை மாற்றியே ஆக வேண்டும்.

வாய்ப்புக் கொடுத்தால் தமிழகம் வாசிக்கும்.

வாசிக்கும் தமிழகம் நிச்சயம் சாதிக்கும்.

சரி, என்ன செய்யலாம்?

(இது சில ஆண்டுகளுக்கு முன்னால் “இளைஞர் முழக்கம்” இதழில் வந்தது. சென்னையில் உருவான நூலகம் ஒன்று தவிர வேறு எந்த மாற்றமும் இல்லை என்பதாலும், பெரிதாய் இதை யாரும் அப்போதும் , பிறகு “அந்தக் கேள்விக்கு வயது 98” என்ற எனது நூலில் வந்தபோதும் படித்துவிடவில்லை என்பதாலும் இதைப் ‘உலக நூலக தின ‘ அடையாளமாகப் பதிவு செய்கிறேன்.)



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகம் வாசிக்கிறது - Page 3 38691590

இரா.எட்வின்

தமிழகம் வாசிக்கிறது - Page 3 9892-41

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 24, 2011 3:19 pm

மஞ்சுபாஷிணி wrote:
இரா.எட்வின் wrote:
மஞ்சுபாஷிணி wrote:எட்வின் இங்க குவைத்ல எப்படின்னா....

மதபிரகாரம் ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்துவதில்லை......

வாழ்த்துக்கள் என்பதே அன்பின் வெளிப்பாடு தானே?

அதை சந்தோஷமா ஏத்துக்கிட்டு இருந்தால் கொடுப்பவருக்கும் சந்தோஷம்... பெறுபவருக்கும் சந்தோஷம்....

இங்க நாங்க இதெல்லாம் பார்ப்பதில்லை....

நாங்க எல்லா பண்டிகைகளுமே சந்தோஷமா வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வோம்....

அதனால் தான் உங்களுக்கு சொல்லிட்டேன், வேண்டாம்னு சொன்னதால் திரும்ப பெற்றுக்கொண்டேன் அவ்வளவே.. இங்கே விஷயம் ஈஸ்டர் என்பதில்லை.... அன்பு தான் முக்கியம்...... தமிழகம் வாசிக்கிறது - Page 3 224747944

அன்பை யாரும் நிராகரிக்கறது இல்லை சுபா,
அன்பை ஒரு மத அடையாளத்தோடு வெளிப்படுத்தும்போதுதான் நான் மறுப்பது. மற்றபடி பொங்கல் வாழ்த்தையோ, உழைப்பாளர் தின வாழ்த்தையோ, புத்தாண்டு தின வாழ்த்தையோ , புத்தகதின வாழ்த்தையோ நான் நிராகரிப்பதில்லை.

அது சரி சுபா நீங்கள் ஏன் எனக்கு தீபாவளி மற்றும் ரம்ஜான் வாழ்த்துக்களை சொல்லவில்லை. காரணம் இதுதான் சுபா. நான் கிறிஸ்தவன் என்பது. அதைத்தான் நான் இல்லை என்கிறேன். சுபாவின் அன்பை அல்ல. இப்ப வாழ்த்துங்க ரெண்டு கை ஏந்தி வாங்கிகுவேன்.

இது ஓக்கே.... எனக்கும் மனசு சமாதானம் ஆச்சு.. இனிமே வாழ்த்தை அடுத்த வருஷம் நேரில் வந்து வாழ்த்துறேன்... சமைச்சு வைங்க..... சரியா? எதுக்கா? சாப்பிட தான்...

சரி சுபா,
நான் இப்பவும் சொல்கிறேன் நான் மதத்தில் நம்பிக்கை உள்ள எனது நண்பர்களை வாழ்த்தவே செய்கிறேன்.



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகம் வாசிக்கிறது - Page 3 38691590

இரா.எட்வின்

தமிழகம் வாசிக்கிறது - Page 3 9892-41
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Apr 24, 2011 4:02 pm

நல்லது எட்வின்... உங்க மனம் புண்படும்படி என் பதிவு இருந்தல் நான் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழகம் வாசிக்கிறது - Page 3 47
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Apr 24, 2011 4:06 pm

மஞ்சுபாஷிணி wrote:நல்லது எட்வின்... உங்க மனம் புண்படும்படி என் பதிவு இருந்தல் நான் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்..

அடப் போங்க சுபா,
ஆனா நான் உங்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லவே செய்வேன்



”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

தமிழகம் வாசிக்கிறது - Page 3 38691590

இரா.எட்வின்

தமிழகம் வாசிக்கிறது - Page 3 9892-41
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக