புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
3 Posts - 2%
Saravananj
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
1 Post - 1%
prajai
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
தாய் மனம் I_vote_lcapதாய் மனம் I_voting_barதாய் மனம் I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மனம்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Mon Apr 18, 2011 9:55 pm

"என்ன கார்த்திக், ஆபிசுக்கு கிளம்பலையா?" என்று சாரதா சாவகாசமாய் டிவி பார்த்துக் கொண்டிருந்த மகனைக் கேட்டாள்.

"இல்லை. நான் அந்த வேலையை விட்டுட்டேன்"

"ஏன்?"

"அந்த மேனேஜர் என்னை என்னவோ விலைக்கே வாங்கிட்ட மாதிரி பேசறான். போடா நீயும் ஆச்சு உன் வேலையும் ஆச்சுன்னு வந்துட்டேன்"

படிப்பு முடிந்து இந்த ஒரு வருட காலத்தில் இது அவன் விட்ட நான்காவது வேலை. இந்த வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை. முதல் வேலைக்குப் பத்து நாள் போயிருப்பான். 'வேலை ரொம்ப அதிகம். கசக்கிப் பிழிகிறார்கள்' என்று விட்டான். முதல் வேலையை விட்டு மூன்று மாதம் கழித்து இரண்டாவது வேலைக்கு ஐந்து நாள் போனான். 'வேலை ரொம்ப போர். என் படிப்புக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. இதைக் கொஞ்ச நாளைக்கு செஞ்சா எனக்கு படிச்சதெல்லாம் மறந்து போயிடும்' என்று போவதை நிறுத்தினான். பிறகு இரண்டு மாதம் கழித்து மூன்றாவது வேலைக்கு ரெண்டு வாரம் போனான். அவர்களே நிறுத்தி விட்டார்கள். 'மூணு நாலு நாள் போக லேட்டாயிடுச்சு. அதை எதோ க்ரைம் மாதிரி சொல்லி இனி வர வேண்டான்னு சொல்லிட்டாங்க. இந்த ஒரு வேலை இல்லாட்டி வேற நூறு வேலை'. பிறகு நாலு மாதம் கழித்துப் போன இந்த நான்காவது வேலையையும் இப்போது விட்டு விட்டான். இனி அடுத்த வேலை கிடைக்கும் வரை காலை பதினோரு மணி வரை உறக்கம், மாலை வரை டிவி, பின் வெளியே போனால் இரவு பன்னிரண்டு வரை நண்பர்களுடன் கும்மாளம் என்று இருப்பான்.

சாரதாவின் கணவர் இறந்த போது கார்த்திக்கிற்கு ஐந்து வயது. அவருடைய அரசாங்க வேலை கருணை அடிப்படையில் அவளுக்குக் கிடைத்தது. திருமணமாகிப் பல வருடங்கள் கழித்துப் பிறந்த ஒரே மகனுக்குத் தந்தை இல்லாத குறை தெரியக் கூடாது என்று அவள் அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாள். அவன் மிக நன்றாகப் படித்தாலும் சோம்பலும், பொறுப்பின்மையும் அவன் வளரும் நாட்களில் தெரிந்தன. ஆனால் சின்னவன் தானே, பெரியவனானால் சரியாகி விடும் என்று அவள் பெரிது படுத்தவில்லை. ஆனால் அவன் படிப்பை முடித்த பின்னும் அது தொடர்ந்தது. ஒவ்வொரு முறை வேலை விட்ட போதும் அடுத்ததில் சரியாகி விடுவான் என்ற அசட்டு நம்பிக்கை வைத்திருந்தாள். ஆனால் இத்தனை நாட்கள் இவன் தானாக சரியாவான் என்று இருந்த நம்பிக்கை இப்போது முழுவதுமாக கரைய சாரதா ரௌத்திரமானாள்.

"அப்படின்னா பழையபடி தண்டச்சோறாய் இந்த வீட்டுல உட்கார்ந்து சாப்பிடறதா உத்தேசமா?"

தாயின் திடீர் கோபம் அவனைத் திகைப்படைய வைத்தது. "என்னாச்சு உனக்கு. ஏன் இப்படி பேசறாய்?"

"அப்புறம் என்னடா. காலம் பூரா உனக்கு உழைச்சுக் கொட்டற மெஷினா நான். படிக்க வைக்கிறது என்னோட கடமை. வேணும்கிற அளவு செலவு செஞ்சு படிக்க வச்சுட்டேன். அப்புறமா வேலைக்குப் போய் சம்பாதிச்சு பிழைக்கிறது தாண்டா ஒரு ஆண் பிள்ளைக்கு அழகு"

"அப்படின்னா அந்த மேனேஜர் என்னை அடிமை மாதிரி நடத்துனாலும் நான் பொறுத்துட்டு போகணும்."

"சம்பளம் தர்றவன் வேலை வாங்கத் தாண்டா செய்வான். அதை அடிமை மாதிரின்னு ஏண்டா நினைக்கிறாய்"

கார்த்திக் எரிச்சலடைந்தான். "இப்ப கடைசியா என்ன சொல்கிறாய்?"

"சம்பாதிச்சு காசு கொண்டு வர்றதாயிருந்தா வீட்டுல இரு. இல்லாட்டி வீட்டை விட்டுப் போன்னு சொல்றேன்"

அந்த வார்த்தைகளை எதிர்பார்க்காத கார்த்திக் அதிர்ச்சியடைந்தான். கோபத்தோடு கேட்டான். "அப்ப பெத்த பிள்ளைய விட உனக்கு காசு தான் முக்கியம்"

"ஆமா. அப்படியே வச்சுக்கோ"

"போயிட்டா நீ கெஞ்சிக் கூப்பிடாலும் நான் வர மாட்டேன்."

"நல்லது" சாரதா உறுதியாக நின்றாள்.

"நீ செத்தா கொள்ளி போடக் கூட ஆளில்லை. ஞாபகம் வச்சுக்கோ"

"அந்தக் கவலை உனக்கு வேண்டாம். கார்ப்பரேஷன்காரன் பார்த்துக்குவான். நீ கிளம்பு"

கார்த்திக் கோபத்துடன் எழுந்து தன் துணிமணிகளை சூட்கேஸிலும், இன்னொரு பையிலும் நிரப்பிக் கொண்டான். "நான் இங்கிருந்து போயிட்டா பட்டினி கிடப்பேன்னு மட்டும் நினைக்காதே எனக்கு ·ப்ரண்ட்ஸ் இருக்காங்க."

"யார் எத்தனை நாள் பார்த்துக்குறாங்கன்னு நானும் பார்க்கறேன்"

"என் ·ப்ரண்ட்ஸ் எனக்காக உயிரையும் கொடுப்பாங்க"

"சரி போய் அவங்க உயிரை எடு. என்னை விடு"

அவன் கோபமாக வெளியேறிப் போகும் வரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவன் போன பிறகு அருவியாய் சாரதா கண்களில் இருந்து கிளம்பியது.

அங்கு இல்லாத மகனிடம் சாரதா அழுகையினூடே வாய் விட்டு சொன்னாள். "அம்மாவுக்கு இப்ப எல்லாம் உடம்புக்கு முடியறதில்லைடா. நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியலை. உன்னை தப்பா வளர்த்துட்டேன். அதை சரி செய்யாமல் போனா செத்தாலும் என் ஆத்மா சாந்தியடையாதுடா. செத்துட்டா கார்ப்பரேஷன்காரன் பார்த்துக்குவான்னு சொன்னேன். சாகாம உடம்புக்கு முடியாம படுத்துகிட்டா அவன் கூட பார்க்க வர மாட்டான்னு எனக்கு தெரியும்டா. எனக்கு உன்னை விட்டா நாதி எதுவும் இல்லை. ஆனாலும் உன்னை அனுப்பிச்சிருக்கேன்னா நீ நல்லாகணும்னு தாண்டா. நீ இங்கே இருக்கிற வரைக்கும் நல்லாக மாட்டேடா. அதுக்குத் தான் உன்னை அனுப்பிச்சிருக்கேன். அம்மா மேல உனக்கு கோபம் கடைசி வரைக்கும் இருந்தாலும் பரவாயில்லை. அம்மாவைப் பார்க்க நீ கடைசி வரைக்கும் வராட்டி கூட பரவாயில்லை. நீ திருந்தி ஒரு நல்ல வேலையில இருக்காய்னு நான் சாகறதுக்குள்ளே கேள்விப்பட்டா எனக்கு அது போதும்டா."

- என்.கணேசன்
http://enganeshan.blogspot.com/

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 10:01 pm

மிக அருமையான கதைதான், பிள்ளைகள் பெத்தவங்க இருக்கும்போது அவங்கள கவனிக்காம அப்புறம் போட்டோவுக்கு மரியாத செஞ்சு என்ன புண்ணியம். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் தாய் மனம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 10:04 pm

தாய் பாசத்துக்கு நிகராக எதையும் ஒப்பிட்டு சொல்லமுடியாது
அருமையான கதை சூப்பருங்க

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Mon Apr 18, 2011 10:28 pm

தாய் மனசு! நன்றி

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தாய் மனம் Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக