புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_rcap 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_rcap 
3 Posts - 8%
heezulia
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_rcap 
2 Posts - 5%
dhilipdsp
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_lcapஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_voting_barஉங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 17, 2011 9:23 pm

உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க......

இணையம் என்பது ஒரு கடலைப் போன்றது..
இதில் சிப்பி முத்துக்களும் உண்டு... உதவாத குப்பைகளும் உண்டு...

மின்னஞ்சல்கள் வந்த பிறகு தகவல் தொடர்பு மிக எளிதானது..
ஒருவர் சொல்லும் செய்தியை மிக விரைவாக அடுத்தவர் பெற முடியும்...

மின்னஞ்சல் நிறுவனங்கள் பல "முன்-அனுப்புதல்" (Forward) மூலம் தான் அதிக மின்னஞ்சல்கள் செல்வதாக தெரிவிக்கிறன...
இப்படி அனுப்பப்படும் மின்னஞ்சல்களால் சாதகமும் உண்டு, பாதகமும் உண்டு..

பலர் அறியாத தகவல்களை அறிய முடிவது சாதகம்...

பாதகம்: ஒரு தவறான செய்தி வழிவழியாக பரப்பப்படுவது!!

பலர் தங்களுக்கு வரும் செய்திகள் புதினவாக இருப்பதால், அவற்றை உண்மை என்று நம்பி அனுப்புவதாலேயே தவறான செய்திகள் பரப்பப்படுகிறன..

இந்த திரியின் மூலம், இணையத்தில் இப்படி பரவும் புரட்டுகளைப் (தவறான செய்திகள்) பற்றி அலசலாம்....

உறவுகள் தாங்கள் அறிந்த தவறான (தவறு என்று உணர்ந்த) செய்திகளையும் இங்கே பதியலாம்!!



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 17, 2011 9:30 pm

முதல் விடயத்தை அலைபேசியில் இருந்து துவங்குவோம்...

பலருக்கும் இந்த செய்தி மின்னஞ்சல் வடிவிலோ, குறுஞ்செய்தி வழியாகவோ பெற்று இருக்க வாய்ப்பு உண்டு (தமிழாக்கம்):

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 இலக்கங்களில்
தெரியவரும். அப்படி கிடைக்ககூடிய எண்களில் 7 மற்றும் 8வதாக வரக்கூடிய எண்களை கீழ்கண்ட பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து உங்களின் செல்போனின் தரத்தை அறிந்து கொள்ளுங்கள்.
00 ==> தரமான தொழிற்சாலையில் தயாரித்தது (செல்போன் தரம் மிக மிக நன்று)
01 அல்லது 10 ==> தயாரித்த நாட்டின் பெயர் பின்லாந்து (மிக நன்று)
08 அல்லது 80 ==> தயாரித்த நாட்டின் பெயர் ஜெர்மனி
(நன்று)
02 அல்லது 20 ==> ஒருங்கிணைப்பு செய்தது துபாயில். (சுமார்)
13 ==> ஒருங்கிணைப்பு செய்தது அஜேர்பயிஜான் (மோசம்)

உண்மை என்னவென்று பார்ப்போமா??

உங்களுடைய செல்போனில் *#06# என்று அழுத்திய உடன் நீங்கள் பயன்படுத்தக் கூடிய செல்போனில் அடையாள நம்பர் 15 - 17 இலக்கங்களில்
தெரியவரும்.. இதுவரை உண்மை தான்...

ஆனால் அதன் பிறகு உள்ளதை கவனிக்க:

அந்த எண்ணை கீழ்காண்பது போல் பிரித்துக் கொள்ளுங்கள்
AA-BBBBBB-CCCCCC-D**

AA - IMEI எண்ணை வழங்கும் அமைப்பின் எண்
BBBBBB - அலைபேசி மாதிரி எண் (Model No)
CCCCCC - அலைபேசி வரிசை எண் ( Serial No)
D** - checksum

இதில் AA-BBBBBB என்பது Type Allocation Code (TAC) எனப்படும்..
உங்கள் அலைபேசி தொலைந்து போனால், வரிசை எண்னைக் கொண்டே அலைபேசியைக் கண்டறியும் முயற்சி நடக்கிறது!!

இதில் உள்ள அலைபேசி மாதிரி எண் IMEI அமைப்பினால் வழங்கப்படுகிறது..
(ஒவ்வொரு அலைபேசி modelக்கும் ஒவ்வொரு எண்).. வரிசை எண் மட்டும் தயாரிப்பு நிறுவனம் தருவது..

எனவே, இந்த எண்ணைக் கொண்டு எங்கு தயாரிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கலாம் என்பது வெறும் கற்பிதமே!!!

(உ.தா:
நீங்கள் நோக்கியா அலைபேசி பயன்படுத்தினால், AA என்பது 35 ஆக இருக்கும்..
ஒரே மாடல் பேசிகள் (ஒரே கால கட்டத்தில் வாங்கியவை) இரண்டை வாங்கி பாருங்கள்
- BBBBBB ஒன்றாக இருக்கும்)

உங்கள் அலைபேசி எங்கு தயாரிக்கப்பட்டது என்பதை அறிய விருப்பமா?

உங்கள்
அலைபேசியின் மின்கலத்தை (battery) வெளியே எடுங்கள்.. மின்கலம்
அமர்ந்திருக்கும் இடத்தில் ஒரு முத்திரைச் சீட்டு (label) ஒட்டப்பட்டு
இருக்கும். அதில் உங்கள் IMEI எண்ணும் (*#060# அடித்தால் வரும் அதே எண்) , எங்கு தயாரிக்கப்பட்டது என்கிற விவரமும் இருக்கும்!!

குறிப்பு:
நீங்கள் அரத பழசான அலைபேசியைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியெனில், இது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு..

மேலே சொல்லப்பட்ட IMEI எண் இலக்கணம் 2004 ஆம் ஆண்டிற்கு பின் தயாரிக்கப்பட்ட அலைபேசிகளுக்கே பொருந்தும்!!
அதற்கு முந்தைய எண்களுக்குப் பொருந்தாது!

அப்போதைய IMEI எண் இலக்கணம் AA-BBBB-EE-CCCCCC-*

இதில் AA-BBBB என்பது மட்டுமே என்பது Type Allocation Code எனப்படும்..
(பின்னாளில் மாடல்கள் எண்ணிக்கை உயர்ந்ததும், மேம்பட்ட தொழில்நுட்பமுமே எண்ணிக்கையை மாற்ற காரணம் ஆனது)

EE என்பது எந்த நாட்டில் தயாரானது என்பது.. Factory Allocation Code (FAC)
அப்போதும் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் தவறு.. அவை அலைபேசிகளின் நிறுவனங்களைப் பொறுத்து மாறியது

தயாரிப்பு நாடுகள் வரிசையில் கொரியா, ஜப்பான் (முண்ணணி அலைபேசி தயாரிப்பாளர்களின் நாடுகள்) இல்லை என்பதை கவனிக்க!!

ஆதாரம்: நோக்கியா தளம், GSM, விக்கிபீடியா

பி.கு:
தங்கள் அலைபேசியின் IMEI எண்ணைப் பற்றி மேலும் அறிய வேண்டுவோர் கீழ் காணும் தளத்திலும் அறிந்து கொள்ளலாம்...
IMEI ANALYSIS



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 17, 2011 9:32 pm

வழிகாட்டும் திரி... தொடருங்க தல.. நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 17, 2011 10:25 pm

நன்றி கலை அவர்களே!!



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sun Apr 17, 2011 11:24 pm

தானியியக்க வங்கி இயந்திரம்

இதைப் பற்றிய ஒரு மிக அருமையான புரட்டு உண்டு (தமிழாக்கம்):

நீங்கள் ஒரு ATM உள்ளே நுழைகிறீர்கள்..
அப்போது, இரு திருடர்கள் உள்ளே புகுந்து உங்களைத் தாக்குகிறார்கள்.. பணம் கேட்டு உங்களை மிரட்டுகிறார்கள்.
என்ன செய்வது?

அவர்களிடம் தர்க்கம் செய்ய வேண்டாம்..

வழக்கம் போல் உங்கள் அட்டையைப் பயன்படுத்துங்கள்..
ஆனால், சங்கேத குறியீட்டு எண்ணைத் தலைகீழாக இடுங்கள்
உ.தா: உங்கள் பின் எண் 1254 என்றால் 4521 என்று அழுத்துங்கள்..

நீங்கள் இப்படி திருப்பி எண்ணை இடும் போது, பணம் வழக்கம் போல் வெளிவரும்..
ஆனால், இயந்திரத்தில் சிக்கி கொண்டு வெளியே வராது.. என்ன முயற்சி செய்தாலும் பணம் வெளியே வராது!!
அதே சமயம், உங்கள் அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு திருட்டு முயற்சி பற்றிய எச்சரிக்கை சென்று விடும்..

இந்த வசதி எல்லா ATM களிலும் உண்டு.. ஆபத்தையும், ஆபத்து சமயத்தில் உதவி பெறவும் இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது!!


உண்மை:

இதை யாராவது பரிசோதித்துப் பார்த்து இருக்கிறீர்களா?
இது ஒரு மிகப் பெரிய புரளி...

நீங்கள் திருப்பி அடித்தால், PIN NUMBER WRONG என்ற செய்தி வந்து மீண்டும் எண்ணைக் கேட்குமே தவிர, பணம் வராது!!
முயற்சி செய்யுங்கள்!!

இப்படி ஒரு முறையே நடைமுறையில் இல்லை..
உங்களுக்குக் காவல் துறையில் ஒரு நண்பர் இருந்தால் அவரிடம் கேட்டு பாருங்கள்!!

1994 ஆம் ஆண்டு ஜோசப் சிங்கர்ட் என்பவர் , மேற்கூறிய திட்டம் உடைய ATM மென்பொருளை உருவாக்கினார். அவர் பல வங்கிகளுக்கு அதைக் கொடுக்க முயன்றார்.. ஆனால், பலன் இல்லை..
எனவே, திட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், செயலாக வில்லை..

திட்டம் செயலாகாமல் போக முக்கிய காரணங்கள்:
* இருவழியொக்கும் எண்களை (palindromic Numbers) சங்கேத எண்ணாக வைக்க முடியாது (உ.தா: 1221, 3333). இது வாடிக்கையாளர்கள் தங்கள் சங்கேத எண்ணைத் தேர்வு செய்வதில் ஒரு தடையை (constraint) உருவாக்குகிறது
* ஒருவர் தவறாக எண்ணைத் திருப்பி அடித்தால் பொய் எச்சரிக்கை வரும்.
* காவல் நிலையம் ATM கு மிக அருகில் இருக்க வேண்டும். இல்லையேல், திருடர்கள் தப்பிக்க வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு இயந்திரத்திற்கும் தனி காவலரை நியமிப்பது நடைமுறைக்குச் சாத்தியம் அல்ல.
* திட்டம் அமலாக்கப்பட்டால், இது தொடர்பாக அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் விழிப்பு ஊட்ட வேண்டும்.. வாடிக்கையாளர்களுள் திருடர்கள் மறைந்திருக்க வாய்ப்பு உண்டு.
* திட்டம் அமலாக்கப்பட்டால், சில நாட்களில் திருடர்களுக்கும் இந்த விடயம் தெரிந்து விடும். அதன் பிறகு, இதில் உபயோகம் இல்லை.

ஆதாரம்: ஹோக்ஸ் லேயர்



உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 18, 2011 12:16 am

823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒரு நிகழ்வு பற்றிய ஒரு சுவாரசியமான (தவறான) செய்தி உண்டு!

அதிசயம் ஆனால் உண்மை...
இந்த வருடம் சூலை மாதம் (2011 July) ஒரு தனி சிறப்பு மிக்கது..
இந்த மாதத்தில் மொத்தம் 5 வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகள் உள்ளன. (It has 5 Fridays, 5 Saturdays and 5
Sundays).
இது 823 வருடங்களுக்கு ஒரு முறை நிகழும் ஒரு அற்புத நிகழ்வாகும்..
சந்தேகம் இருந்தால் உங்கள் காலண்டருடன் ஒப்பிட்டு பாருங்கள்!!


(குறிப்பு: மாதம் எப்போதும் 2011 July என்று வராது.. மாறுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு.. முன்பு, October 2010 என்று வந்தது)

உண்மை என்ன?

இதைப் படிக்கும் பலருக்கு அடிப்படை கணிதம் தெரிந்து இருக்கும்..
ஆனால், கணக்கிட்டோ, அல்லது குறைந்தபட்சம் நாள்காட்டியில் பார்த்தோ கூட உண்மையா என்று உறுதி செய்யாமல் அனுப்புகிறனர்..

ஆனால், உண்மை இது தான்...

செய்தியில் உள்ல அடிப்படை தவறு:
இந்த நிகழ்விற்காக 823 வருடங்கள் காத்து இருக்க தேவையில்லை..

இதற்கு முன்
5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த மாதங்கள்: ஜனவரி 2010, அக்டோபர் 2010
இனி வரப்போகும் மாதங்கள் : சூலை 2011, மார்ச் 2013, ஆகஸ்ட் 2014

சூலை மாதம் இந்நிகழ்வு 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்றாலும் தவறு தான்..
இதற்கு முன் சூலையில் 5 வெள்ளி, சனி, ஞாயிறு வந்த ஆண்டுகள்: 1994,2005
இனி வரப்போகும்
ஆண்டுகள் : 2011, 2016, 2022

28 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலண்டர் மீண்டும் திரும்பிவருவது குறிப்பிடத்தக்கது..

பி.கு:
ஒரு மாதத்தில் 5 வெள்ளி, சனி, ஞாயிறு வர வேண்டுமென்றால் 31 நாட்கள் கொண்ட மாதத்தில் மட்டுமே சாத்தியம்.
இந்த நிகழ்வு நடக்க மாதத்தின் முதல் நாள் வெள்ளியாக இருக்க வேண்டும் !




உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Apr 18, 2011 8:24 am

ஆளுங்க நண்பருக்கு மிக்க நன்றி .....
பயனுள்ள தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களுக்கு மிக்க நன்றி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Apr 18, 2011 10:21 am

மிக மிக அரிய தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 18, 2011 10:24 am

நல்ல முயற்சி தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் உங்களுக்கும் வந்திருக்கும்...... இதையெல்லாம் நம்பாதீங்க...... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Apr 18, 2011 10:56 am

மிக அருமையான அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய
தகவலை பகிர்ந்து கொள்ளும் என் நண்பர் ஆளுங்கவுக்கு
என் வாழ்த்துக்கள் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக