புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
7 Posts - 58%
heezulia
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
8 Posts - 2%
prajai
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
4 Posts - 1%
mruthun
குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_m10குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !"


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Apr 15, 2011 1:28 pm

குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !"

கோவை சரளாவின் ஆன்மிக பயணம்
ரேவதி

கொங்குத் தமிழும், ஹை பிட்ச் குரலுமாக நம்மை அன்லிமிட்டெட்டாக சிரிக்க வைப்பவர், 'கோவை’ சரளா! கொஞ்ச நாளாகவே சரளாவை திரையில் காணவில்லை. இடையே, 'அவர் சாமியாராகி விட்டார்’ என்ற செய்தியும் பரவியது!

''சினிமா, டி.வி, பேட்டினு நானும் மக்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. ஒரு சாயங்காலம் வாங்களேன்!'' என்று சிநேகமான அழைப்பு சரளாவிடமிருந்து. சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள சரளாவின் வீட்டு மாடி... வரவேற்பறையே பூஜை அறையாக மாறியிருந்தது. 'ஓம் நமசிவாய’ என்ற ஒலி நாதம் சுகந்தமாக கசிந்துகொண்டே இருக்க, பாப் தலை, நெற்றியில் சந்தனப் பட்டை, பேரலல் பேன்ட், டாப் என வித்தியாசமான கெட்டப்பில் வந்தமர்ந்தார் சரளா!

''சாமியாரா போயிட்டேன்னு சொன்னாங் களா..?!'' என்று தானே தனக்கான முதல் கேள்வியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, சத்தமாகச் சிரித்தார்.

''சின்ன வயசுல இருந்தே கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி. தினமும் கோயில், வீட்டுல தவறாம பூஜை பண்ணுவேன். அரிதாரம் பூசிப்பூசி ஓய்ஞ்சு போய், என் சினிமா வாழ்க்கையில ஒரு பிரேக் விழுந்து, எனக்காகனு செலவழிக்க எனக்கு நிறைய நேரம் கிடைச்ச சமயத்துல, என்னோட ஆன்மிகத் தேடல் இன்னும் அதிகமாச்சு, ஆழமாச்சு. யோகா, தியான வகுப்புகளுக்குப் போனேன். ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். அதெல்லாம் என் மனசுக்கு ஒரு பேரமைதியைத் தந்துச்சு. இப்போ ஆன்மிக உலகத்துல போலிகள் மலிஞ்சுட்டதால... தவறான ஆட்களை பின்பற்றிடக் கூடாதுங்கற எச்சரிக்கை உணர்வு வரவே... 'வீடே கோயில்... வீட்டுலயே இருக்கற என் அம்மாவே தெய்வம்’னு உணர்ந்துட்டேன். நான் சாமியாரெல்லாம் கிடையாது. சாமிகிட்ட சரணடைஞ்சிருக்கற ஒரு மனுஷி!'' என்று சின்னதாகச் சிரித்தார் சரளா.

''வாழ்க்கை முழுக்க தனியாவே இருந்துடறதுனு நீங்க எடுத்த முடிவு...?'' என்று கேள்வியை முடிக்கும் முன்னே,

''கோயம்புத்தூர்ல அக்காக்கள், அண்ணன்கள்னு எங்களுது பெரிய குடும்பம். ஒன்பதாவது படிக்கறப் போவே 'வெள்ளிரதம்'ங்கற படத்துல நடிச்சேன். பிறகு, எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பாக்யராஜ் சார் மூலமா 'முந்தானை முடிச்சு' படத்துல கிடைச்ச வாய்ப்புதான் இந்த அளவுக்கு உயர வெச்சுது. 500 படங்களுக்கும் மேல நடிச்சாச்சு. நடிப்புல பம்பரமா சுழன்றுட்டிருந்த சமயத்துலயே திருமணத்தைப் பத்தின எண்ணம் பிரிஞ்சு போயிடுச்சு. 'செல்வி சரளா'வாவே இருந்துடு வோம்ங்கற என் முடிவு, எனக்கு சரியானதா, சௌகரியமானதாதான் பட்டுச்சு.

பொதுவா சின்ன வயசுல 'கல்யாணம் வேண்டாம்’னு முடிவெடுக்கற பொண்ணுங்க, மத்திம வயசுக்கு அப்பறம் அந்தத் தனிமையை எதிர்கொள்ள முடியாம... 'ஐயோ... நமக்குனு ஒரு குடும்பம் இருந்துருக்கலாமே’னு மன அழுத்தத்துக்கு ஆளாயிடறாங்க. அவங்களுக்கு சொல்ல எங்கிட்ட கொஞ்சம் வார்த்தைகள் இருக்கு. குடும்பங்கறது வரம்னா, தனிமைங்கறது தவம். அந்த தவத்தோட ஒவ்வொரு மணித்துளியையும் உங்களுக்காகவும், நட்புகள், உறவுகள்னு உங்க மேல உண்மையான அன்புள்ள ஜீவன்களுக்காகவும் செலவிடுங்க. அவங்க அந்தத் தவத்துக்கான பலனை அன்பா, அக்கறையா, ஆறுதலா, சந்தோஷமானு பல வடிவங்கள்ல உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பாங்க. நான் அப்படித்தான் அம்மா, சகோதர, சகோதரிகளோட குடும்பங்களையும் நேசிக்கறேன். பண்டிகை, விசேஷங்களுக்கு அவங்க வீட்டுக்குப் போயிடுவேன்!''

- தெளிவான வார்த்தைகள் தெளித்த சரளாவிடம், 'ஏப்ரல் 13'-ஐ நினைவுபடுத்தினோம்.

''போன எலெக்ஷன்ல ஒரு கட்சிக்காக பிரசாரம் பண்ணினதைத்தானே கேட்கறீங்க..? அதை ஒரு முதிர்ச்சியில்லாத முடிவா இப்போ உணர்றேன். பிறகு ஒரு சந்தர்ப்பத்துல என்னோட பிரசாரத்தை டி.வி-யில போட்டுப் பார்த்தப்ப எனக்கே செம காமெடியா இருந்துச்சு. உங்களுக்கு சந்தேகம் இருந்தா... இதோ இப்ப நடந்துகிட்டிருக்கற பிரசாரத்தை டி.வி-யில பாருங்களேன்... சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா கிடும். அந்த அளவுக்கு அரசியலே காமெடியா மாறிடுச்சி'' என்று விழுந்து விழுந்து சிரித்தவரிடம், நடிப்புலக இடைவெளி பற்றிக் கேட்டோம்.

''சினிமா உலகத்துல பெண் காமெடியன்களுக் கும், பெண் எழுத்தாளர் களுக்கும் எப்பவுமே பஞ்சம்தான். அதையும் மீறித்தான் மனோரமா அம்மா, நான் எல்லாம் முட்டி மோதி வந்தோம். 'கரகாட்டக்காரன்’, 'வரவு எட்டணா செலவு பத்தணா’, 'சதிலீலாவதி’னு பல சிக்ஸர்கள் அடிச்சேன். ஒரு பிரேக் விழுந்தப்போ, சீரியல், காமெடி ஷோ ஜட்ஜ்னு திரும்பினேன். இப்போ 'மஹாராஜா’, 'காஞ்சனா’னு நான் நடிச்ச ரெண்டு படங்கள் கூடிய சீக்கிரம் ரீலீஸாகப் போகுது. வாய்ப்புகள் கிடைக்கறவரை எல்லாரை யும் சிரிக்க வெச்சுட் டேதான் இருப்பேன். அதுல எனக்கு கிடைக்கற ஆத்ம திருப்தியை சொல்ல எங்கிட்ட வார்த்தைகள் இல்ல!''

- அத்தனை நேசித்துச் சொல்கிறார் 'கோவை’ சரளா!


நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 15, 2011 3:32 pm

நன்றி நன்றி சூப்பருங்க




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 24, 2011 8:18 am

குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Avl34கொங்குத் தமிழும், ஹை பிட்ச் குரலுமாக நம்மை அன்லிமிட்டெட்டாக சிரிக்க வைப்பவர், 'கோவை’ சரளா! கொஞ்ச நாளாகவே சரளாவை திரையில் காணவில்லை. இடையே, 'அவர் சாமியாராகி விட்டார்’ என்ற செய்தியும் பரவியது!

''சினிமா, டி.வி, பேட்டினு நானும் மக்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. ஒரு சாயங்காலம் வாங்களேன்!'' என்று சிநேகமான அழைப்பு சரளாவிடமிருந்து. சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள சரளாவின் வீட்டு மாடி... வரவேற்பறையே பூஜை அறையாக மாறியிருந்தது. 'ஓம் நமசிவாய’ என்ற ஒலி நாதம் சுகந்தமாக கசிந்துகொண்டே இருக்க, பாப் தலை, நெற்றியில் சந்தனப் பட்டை, பேரலல் பேன்ட், டாப் என வித்தியாசமான கெட்டப்பில் வந்தமர்ந்தார் சரளா!
''சாமியாரா போயிட்டேன்னு சொன்னாங் களா..?!'' என்று தானே தனக்கான முதல் கேள்வியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, சத்தமாகச் சிரித்தார்.







''சின்ன வயசுல இருந்தே கடவுள் நம்பிக்கை ஜாஸ்தி. தினமும் கோயில், வீட்டுல தவறாம பூஜை பண்ணுவேன். அரிதாரம் பூசிப்பூசி ஓய்ஞ்சு போய், என் சினிமா வாழ்க்கையில ஒரு பிரேக் விழுந்து, எனக்காகனு செலவழிக்க எனக்கு நிறைய நேரம் கிடைச்ச சமயத்துல, என்னோட ஆன்மிகத் தேடல் இன்னும் அதிகமாச்சு, ஆழமாச்சு. யோகா, தியான வகுப்புகளுக்குப் போனேன். ஆன்மிக சொற்பொழிவுக் கூட்டங்கள்ல கலந்துகிட்டேன். அதெல்லாம் என் மனசுக்கு ஒரு பேரமைதியைத் தந்துச்சு. இப்போ ஆன்மிக உலகத்துல போலிகள் மலிஞ்சுட்டதால... தவறான ஆட்களை பின்பற்றிடக் கூடாதுங்கற எச்சரிக்கை உணர்வு வரவே... 'வீடே கோயில்... வீட்டுலயே இருக்கற என் அம்மாவே தெய்வம்’னு உணர்ந்துட்டேன். நான் சாமியாரெல்லாம் கிடையாது. சாமிகிட்ட சரணடைஞ்சிருக்கற ஒரு மனுஷி!'' என்று சின்னதாகச் சிரித்தார் சரளா.
''வாழ்க்கை முழுக்க தனியாவே இருந்துடறதுனு நீங்க எடுத்த முடிவு...?'' என்று கேள்வியை முடிக்கும் முன்னே,
''கோயம்புத்தூர்ல அக்காக்கள், அண்ணன்கள்னு எங்களுது பெரிய குடும்பம். ஒன்பதாவது படிக்கறப் போவே 'வெள்ளிரதம்'ங்கற படத்துல நடிச்சேன். பிறகு, எங்க வீட்டுக்குப் பக்கத்துல இருந்த பாக்யராஜ் சார் மூலமா 'முந்தானை முடிச்சு' படத்துல கிடைச்ச வாய்ப்புதான் இந்த அளவுக்கு உயர வெச்சுது. 500 படங்களுக்கும் மேல நடிச்சாச்சு. நடிப்புல பம்பரமா சுழன்றுட்டிருந்த சமயத்துலயே திருமணத்தைப் பத்தின எண்ணம் பிரிஞ்சு போயிடுச்சு. 'செல்வி சரளா'வாவே இருந்துடு வோம்ங்கற என் முடிவு, எனக்கு சரியானதா, சௌகரியமானதாதான் பட்டுச்சு.
பொதுவா சின்ன வயசுல 'கல்யாணம் வேண்டாம்’னு முடிவெடுக்கற பொண்ணுங்க, மத்திம வயசுக்கு அப்பறம் அந்தத் தனிமையை எதிர்கொள்ள முடியாம... 'ஐயோ... நமக்குனு ஒரு குடும்பம் இருந்துருக்கலாமே’னு மன அழுத்தத்துக்கு ஆளாயிடறாங்க. அவங்களுக்கு சொல்ல எங்கிட்ட கொஞ்சம் வார்த்தைகள் இருக்கு. குடும்பங்கறது வரம்னா, தனிமைங்கறது தவம். அந்த தவத்தோட ஒவ்வொரு மணித்துளியையும் உங்களுக்காகவும், நட்புகள், உறவுகள்னு உங்க மேல உண்மையான அன்புள்ள ஜீவன்களுக்காகவும் செலவிடுங்க. அவங்க அந்தத் தவத்துக்கான பலனை அன்பா, அக்கறையா, ஆறுதலா, சந்தோஷமானு பல வடிவங்கள்ல உங்களுக்குத் திருப்பிக் கொடுப்பாங்க. நான் அப்படித்தான் அம்மா, சகோதர, சகோதரிகளோட குடும்பங்களையும் நேசிக்கறேன். பண்டிகை, விசேஷங்களுக்கு அவங்க வீட்டுக்குப் போயிடுவேன்!''
- தெளிவான வார்த்தைகள் தெளித்த சரளாவிடம், 'ஏப்ரல் 13'-ஐ நினைவுபடுத்தினோம்.
''போன எலெக்ஷன்ல ஒரு கட்சிக்காக பிரசாரம் பண்ணினதைத்தானே கேட்கறீங்க..? அதை ஒரு முதிர்ச்சியில்லாத முடிவா இப்போ உணர்றேன். பிறகு ஒரு சந்தர்ப்பத்துல என்னோட பிரசாரத்தை டி.வி-யில போட்டுப் பார்த்தப்ப எனக்கே செம காமெடியா இருந்துச்சு. உங்களுக்கு சந்தேகம் இருந்தா... இதோ இப்ப நடந்துகிட்டிருக்கற பிரசாரத்தை டி.வி-யில பாருங்களேன்... சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணா கிடும். அந்த அளவுக்கு அரசியலே காமெடியா மாறிடுச்சி'' என்று விழுந்து விழுந்து சிரித்தவரிடம், நடிப்புலக இடைவெளி பற்றிக் கேட்டோம்.
''சினிமா உலகத்துல பெண் காமெடியன்களுக் கும், பெண் எழுத்தாளர் களுக்கும் எப்பவுமே பஞ்சம்தான். அதையும் மீறித்தான் மனோரமா அம்மா, நான் எல்லாம் முட்டி மோதி வந்தோம். 'கரகாட்டக்காரன்’, 'வரவு எட்டணா செலவு பத்தணா’, 'சதிலீலாவதி’னு பல சிக்ஸர்கள் அடிச்சேன். ஒரு பிரேக் விழுந்தப்போ, சீரியல், காமெடி ஷோ ஜட்ஜ்னு திரும்பினேன். இப்போ 'மஹாராஜா’, 'காஞ்சனா’னு நான் நடிச்ச ரெண்டு படங்கள் கூடிய சீக்கிரம் ரீலீஸாகப் போகுது. வாய்ப்புகள் கிடைக்கறவரை எல்லாரை யும் சிரிக்க வெச்சுட் டேதான் இருப்பேன். அதுல எனக்கு கிடைக்கற ஆத்ம திருப்தியை சொல்ல எங்கிட்ட வார்த்தைகள் இல்ல!''
- அத்தனை நேசித்துச் சொல்கிறார் 'கோவை’ சரளா!

அவள் விகடன் குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Apr 24, 2011 11:05 am

//குடும்பங்கறது வரம்னா, தனிமைங்கறது தவம். அந்த தவத்தோட ஒவ்வொரு
மணித்துளியையும் உங்களுக்காகவும், நட்புகள், உறவுகள்னு உங்க மேல உண்மையான
அன்புள்ள ஜீவன்களுக்காகவும் செலவிடுங்க. அவங்க அந்தத் தவத்துக்கான பலனை
அன்பா, அக்கறையா, ஆறுதலா, சந்தோஷமானு பல வடிவங்கள்ல உங்களுக்குத்
திருப்பிக் கொடுப்பாங்க.//
அனுபவ பூர்வமான தத்துவம். பெண் சந்திரபாபுவாக என் கண்களில் கோவை...



குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Aகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Aகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Tகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Hகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Iகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Rகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Aகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Apr 24, 2011 11:17 am

கோவை சரளா இழந்தவைகள் ஏராளம்.. அவர் அதை பொருட்படுத்தாமல் தனிமை வரம் பூண்டுள்ளது மிகவும் உயர்ந்த மனோபாவத்தைக் குறிக்கிறது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Apr 24, 2011 11:20 am

திரையுலகின் நவீன காலத்து மனோரமா !!



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Apr 24, 2011 11:36 am

கலைவேந்தன் wrote:கோவை சரளா இழந்தவைகள் ஏராளம்.. அவர் அதை பொருட்படுத்தாமல் தனிமை வரம் பூண்டுள்ளது மிகவும் உயர்ந்த மனோபாவத்தைக் குறிக்கிறது.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



குடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Uகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Dகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Aகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Yகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Aகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Sகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Uகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Dகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" Hகுடும்பங்கறது வரம்...தனிமைங்கறது தவம் !" A
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sun Apr 24, 2011 11:48 am

குருவே இதுவும் பழைய பதிவு இருங்க பாத்துட்டு வரேன்
பழைய பதிவோடு இணைச்சாச்சு

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sun Apr 24, 2011 12:52 pm

அதிர்ச்சி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக