புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
1 Post - 14%
Manimegala
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
11 Posts - 4%
prajai
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
9 Posts - 4%
Jenila
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
4 Posts - 2%
Rutu
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
3 Posts - 1%
Guna.D
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
2 Posts - 1%
Barushree
கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_m10கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Apr 11, 2011 5:59 am

இனிய வலைத்தமிழ் மக்களே..!

சர்க்காரியா கமிஷன் விசாரித்த வழக்குகளில் மதுபான ஆலைக்கு அனுமதி கொடுத்த விவகாரம் சுவாரஸ்யமானது.

முதலில் வருபவர்க்கு முன்னுரிமை கொடு்தததால் ஊழலில் சிக்கி சிறையில் இருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா. முதலில் வராதவருக்குக்கூட முன்னுரிமை உண்டு தெரியுமா..? சொல்லாததையும், செய்யக் கூடிய தி.மு.க.வினருக்கு இதெல்லாம் ரொம்ப சாதாரணம்.. இதைத்தான் சர்க்காரியா கமிஷன் விசாரித்தது..


கருணாநிதியின் மதுபான ஆலை ஊழல் - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!  Mk


இன்றைக்குத் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடைகள்தான். தமிழகமே இன்று போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடை நடத்துகிறீர்களே.. கள் இறக்க மட்டும் அனுமதி இல்லையா என்று போராடி வருபவர்களும் இருக்கிறார்கள்.

முன்பொரு காலத்தில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு இருந்தது என்று சொன்னால் நம்புவீர்களா..? தமிழகத்தில் பூரண மதுவிலக்கு 1971-ம் ஆண்டு வரையிலும் இருந்தது. அதன் பின்னர்தான் மதுவிலக்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

மதுவிலக்கை நீக்கினால் மட்டும் போதுமா? தங்குத் தடையில்லாமல் மதுபானங்கள் கிடைக்க வேண்டுமல்லவா? அதற்கு அதிகப்படியான மது உற்பத்தி மாநிலத்தில் இருக்க வேண்டுமல்லவா? உற்பத்திக்காக தொழிற்சாலை வேண்டுமே..? இதனை மனதில் வைத்து தமிழக அரசு மதுபானங்கள் தயாரிக்கும் ஆலைகளுக்கு அனுமதி கொடுக்க முன் வந்தது.

லைசென்ஸ் கேட்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அவரின் நிதி நிலைமை நன்றாக இருக்க வேண்டும். நிர்வாகத் திறமை, மாநில அரசின் மதிப்பீட்டுச் சான்றிதழ்.. இவைகள்தான் ஆலை ஆரம்பிக்க விண்ணப்பிக்க தேவையானத் தகுதிகள்.

அரசு நிர்ணயித்த தகுதி திறமைகள் கொண்ட பல கம்பெனிகள் ஆர்வமுடன் அரசு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பித்தார்கள். விண்ணப்பங்களை ஆய்வு செய்த தொழில் துறைச் செயலாளர் எட்டு நிறுவனங்களின் விண்ணப்பங்கள் தகுதியானவை என்று குறிப்பு எழுதுகிறார்.

இவ்வாறு அவர் குறிப்பு எழுதிய பிறகு நடந்த கூட்டத்தில் அப்போதைய முதல்வரான கருணாநிதி புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்கிறார். பீர் தொழிற்சாலையை நிறுவுவதற்காக இன்னொரு விண்ணப்பதாரரைத் தேர்வு செய்யலாம் என்று சொல்கிறார் கருணாநிதி. இதைத் தொடர்ந்து ஏ.எல்.சீனிவாசன் என்பவர் புதிய விண்ணப்பத்தை அளிக்கிறார்.



இப்போது ஒன்பது விண்ணப்பங்களில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? இதிலென்ன சந்தேகம்? கடைசியாக வந்த ஏ.எல்.சீனிவாசனுக்குத்தான் முதல் அனுமதி கிடைத்தது. அவரோடு சுல்தான் மரைக்காயர் அண்ட் சன்ஸ் லிமிடெட், கோத்தாரி அண்ட் சன்ஸ் ஆகிய நிறுவனங்களும் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

சரி.. ஏ.எல்.சீனிவாசன் மட்டும்தான் பின் வாசல் வழியாக நுழைந்தார். மற்ற இரு நிறுவனங்களும் ஒழுங்காக ஆணை பெற்றிருக்கும் என்று நினைத்தால் நீங்கள் ஏமாந்து போய்விடுவீர்கள். சுல்தான் மரைக்காயர் மற்றும் கோத்தாரி நிறுவனங்களின் மீது சர்க்காரியா விசாரணை ஆணையத்திலேயே இரண்டு தனி விசாரணைகள் இது தொடர்பாக நடைபெற்றன.

1973-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஏ.எல்.சீனிவாசனுக்கு பீர் தொழிற்சாலை அமைக்க அனுமதி வழங்கப்படுகிறது. அனுமதிக் கடிதத்தில் சில கண்டிஷன்கள் போடப்படுகின்றன. 6 மாதங்களுக்குள் தொழிற்சாலையை நிறுவ வேண்டும் என்பது அதிலிருக்கும் முக்கியமான கண்டிஷன். அது அந்த அனுமதிக் கடிதத்திலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.சீனிவாசன் என்ன செய்கிறார் தெரியுமா..? 6 மாதங்களுக்குள் என்னால் தொழிற்சாலையை நிறுவ முடியாது. அதனால் 18 மாத கால அவகாசத்தை எனக்குக் கொடுங்கள் என்று அரசைக் கேட்கிறார். அவகாசம் கேட்டதை வைத்தே அவருக்குக் கொடுக்கப்பட்ட லைசென்ஸை ரத்து செய்யலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே இவர் சம்பந்தப்பட்ட விஷயங்களில் விதிமுறை மீறல்கள் இருந்ததால், இப்போதும் இவரது இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது.

அப்போதாவது அவர் தொழிற்சாலையைத் தொடங்கினாரா என்றால் இல்லை.. மீண்டும் 12 மாதங்கள் அவகாசம் கேட்கிறார். அதற்குள் செப்டம்பர் 1974 முதல் மீண்டும் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. ஏ.எல்.சீனிவாசனுக்குக் கொடுத்திருந்த அனுமதி தானாகவே ரத்தாகிறது.

இந்த வழக்கு சர்க்காரியா கமிஷனில் ஏன் விசாரணைக்கு வந்தது..?

நீதிபதி சர்க்காரியா, “யார் இந்த ஏ.எல்.சீனிவாசன்?” என்று ஆர்வமாக விசாரித்தார். அவருக்காக ஏன் அரசின் சட்டங்கள் இந்த அளவுக்கு வளைந்து கொடுத்துள்ளன என்பது அவரின் ஆதங்கம். சீனிவாசனின் பலத்தை அறிய எண்ணி விசாரணை நடத்துகிறார்.

அப்போதைய முதல்வர் கருணாநிதியின் மிக நெருங்கிய நண்பர் ஏ.எல்.சீனிவாசன். கவியரசு கண்ணதாசனின் உடன் பிறந்த அண்ணன். 'ஏ.எல்.எஸ். புரொடெக்ஷன்' என்ற பெயரில் திரைப்படத் தயாரிப்பு கம்பெனி வைத்திருந்தார். இதன் மூலம் சில திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டவர். இவர் 'சாரதா' என்ற திரைப்படத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் தயாரித்து வெளியிட்டார். படம் சூப்பர் ஹிட். இத்திரைப்படத்தின் மூலம் தனக்குக் கிடைத்த லாபத்தில்தான் அப்போது இயங்கிக் கொண்டிருந்த 'மெஜஸ்டிக் ஸ்டூடியோ'வை விலைக்கு வாங்கி தன்னை பணக்காரனாக்கிய 'சாரதா' படத்தின் பெயரையே அந்த ஸ்டூடியோவுக்கு வைத்து அதனை 'சாரதா ஸ்டூடியோ'வாக உருமாற்றினார்.

'சாரதா ஸ்டூடியோ'வில் இருந்து தனக்கு வர வேண்டிய பாக்கியை கருணாநிதியின் வேண்டுகோளின் பேரில் தள்ளுபடி செய்ய வேண்டி வந்தது என்று பக்தவச்சலம் என்பவர் சர்க்காரியா கமிஷனில் சீனிவாசனுக்கு எதிராகச் சாட்சியம் அளித்தார்.

அப்போது அரசு செய்தி நிறுவனம் தயாரிக்கும் படங்கள் தொடர்பான பெரும்பாலான பணிகள் ஏ.எல்.சீனிவாசனின் 'சாரதா ஸ்டூடியோ'வுக்கே வழங்கப்பட்டிருந்தது. இது மட்டுமில்லாமல், தொழிலாளர்களுக்குக் கட்ட வேண்டிய வருங்கால வைப்பு நிதியை 'சாரதா ஸ்டூடியோ' கட்டவேயில்லை.

இது தவிரவும், பல்வேறு காரணங்களுக்காக 'சாரதா ஸ்டூடியோ'வில் அப்போதைய காலக்கட்டத்தில் நடந்த வேலை நிறுத்தத்தை முறியடிக்கவேண்டி, அப்போது இருந்த தொழிலாளர் நலத் துறை அமைச்சர் என்.வி.நடராசன் மூலமாக தொழிலாளர்களுக்கு எதிரான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட தொழிலாளர் அமைப்புகள் வற்புறுத்தப்பட்டன. வேறு வழியில்லாமல் அவர்களும் ஒப்புக் கொண்டு கையெழுத்து போட்டதும் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தெரிய வந்தது.

மதுபான ஆலை அமைக்க அரசு நியமித்த நிபந்தனைகளில் முக்கியமான ஒன்று.. நிதி நிலைமை நன்றாக இருக்க வேண்டும் என்பது. தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான விதிப்படி கட்ட வேண்டிய தொழிலாளர் வைப்பு நிதியையே செலுத்தத் தவறிய ஒரு நபர் எப்படி நல்ல நிதி நிலைமையில் இருந்திருப்பார்? ஆனால் இதைப் பற்றியெல்லாம் யாருக்குக் கவலை? அவர்தான் முதலமைச்சர், கருணாநிதியின் நண்பர் அல்லவா? இந்த ஒரு தகுதியே போதாதா..?

விசாரணையின் இறுதியில் மதுபானத் தொழிற்சாலை அமைப்பதற்காக ஏ.எல்.சீனிவாசன் கடைசிவரையில் ஒரு துண்டு நிலத்தைக்கூட வாங்கவில்லை என்பது தெரிய வந்தது. சீனிவாசனின் உண்மையான நோக்கம், சென்னை புறநகரில் மதுபானத் தொழிற்சாலைக்கு கிடைத்த லைசென்ஸை வைத்து 100 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி அதனை ஸ்வாஹா பண்ண வேண்டும் என்பதுதான்..! நல்லவேளையாக அது காலத்தின் கோலத்தில் கரைந்து போனது..!

1971-ம் ஆண்டு காலத்திலேயே ஒரு மதுபானத் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்குவதில் இத்தனை தகிடுதத்தங்களைச் செய்தவர்கள், அதே வழியில் ஸ்வான் டெலிகாம், டி.பி.ரியாலிட்டீஸ் போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை வழங்கியிருப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்..?

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் - 03-04-2011





புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக