புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
24 Posts - 34%
ayyasamy ram
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
12 Posts - 17%
Rathinavelu
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
7 Posts - 10%
mohamed nizamudeen
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%
mruthun
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
99 Posts - 47%
ayyasamy ram
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
16 Posts - 8%
mohamed nizamudeen
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
11 Posts - 5%
Rathinavelu
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
manikavi
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
mruthun
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%
Guna.D
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_lcapகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_voting_barகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sat Apr 09, 2011 6:20 pm

First topic message reminder :

காசுமீரில் நடைபெற்று வரும் போராட்டம் உலகைக் கவரத் துவங்கிவிட்டது. இசுரேலின் உருவாக்கம் எப்படி நிரந்தரத் தலையிடியாக இருந்ததோ அதைவிடச் சற்றும் குறையாத அளவுக்கு தலையிடி கொடுத்தது இந்தியா பாக்கித்தான் சுதந்திர நாடுகளாகப் பிரிந்தமை. இந்தத் தலையிடியின் தலைப்பிள்ளைதான் காசுமீர் போராட்டம். தலையிடி 1947லிலேயே கருக்கொண்டு பின்னாளில் உருக்கொள்ளத் தொடங்கியது. இன்றைய சந்ததியினருக்கு இத்தலையிடியின் தாற்பரியம் புரிவதில்லையாதலால் வரலாற்று நிகழ்வுகள் சில குறிப்பிடப்படுவது அவசியமாகின்றது இவ்விடத்தில்.

அரசுக்கெதிரான போராட்டங்களில் தமிழ்மக்கள் பெற்றுள்ள அனுபவம் ஒரு குறுகிய கால வேகத்தின் விளைவாக ஏற்பட்டது. ஆனால், காசுமீரிய மக்கள் 1947இலிருந்து போராடி வருகின்ற போதும் ஈழத்து வேகம் அங்குக் காணப்படவில்லைதான். ஆனால் போராட்டத்திற்கான நியாய அடிப்படை காசுமீரிய மக்களுக்கு அசைக்க முடியாத அரணாக உள்ளது. ஏனெனில், உண்மையிலேயே, இம்மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பது ஆசைக்காட்டி மோசஞ் செய்யப்பட்ட விடயமொன்றாகிறது. இந்தியாவும் ஐ.நா.வும் தான் இதில் குற்றவாளிகள். இந்தக் குற்றத்தைப் பயன்படுத்தித் தனது நலனைத் தேடுவதில் குறியாக உள்ளது பாக்கித்தான்.

உலகின் மிகவுயர்ந்த மலைத் தொடர்களால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசமே காசுமீர். வருடத்தின் பெரும்பகுதி உறக்கத்தில் கழிய வேண்டிய அளவுக்கு ஒரே குளிர். கோடைக்கால இருப்பிடமாக மட்டும் பயன்பட்டிருக்க வேண்டிய பகுதி, குருதிக் கொட்டிக் கொண்டிருக்கிறது. 14ம் நூற்றாண்டுவரை(இந்திய) இந்து மன்னர்களினாலும் பின்னர்(1579) மொகலாய ஆட்சியின் கீழும் வந்த இப்பிரதேசம் 18ம் நூற்றாண்டில் ஆப்கானித்தான் ஆட்சியினரின் கட்டுப்பாட்டிலிருந்தது. 1819லிருந்து சீக்கியப் பேரரசு இங்கு உருவாக்கப்பட்டதுடன் 1846இல் இது பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்படும் வரை இரஞ்சித் சிங் என்பவரால் ஆளப்பட்டதெனத் தெரிகிறது. நமது அரசியலோடு ஒப்பிடுவதானால் இரஞ்சித் சிங்கின் ஒப்படைப்பை சங்கிலியனின் அரசு போர்த்துக்கேயரிடம் ஒப்படைக்கப்பட்டமையுடன் ஒப்பிடலாம். தற்போதைய யம்மு காசுமீர் மாநிலம் என்பது இரண்டாவது ஆங்கில சீக்கிய யுத்தத்தின் பின்பு பிரித்தானியர் காசுமீர் மீதான கட்டுப்பாட்டினை யம்முவிலிருந்த பட்டத்து மாமன்னனிடம் ஒப்படைக்கப்பட்டததன் மூலம் உருவாக்கப்பட்டது(1847). இப்படி ஒரு மாநிலம் உருவாக்கப்ப்ட்டமைக்கு ஒரு உள்நோக்கமும் உண்டு. இந்தியாவுக்கும் ஆப்கானித்தான், சீனா என்பவற்றிற்கும் இடையில் ஒரு தாங்கு அரசை(Buffer State) உருவாக்குவதே இந்த உள்நோக்கமாகும். அப்போதைய கவர்னர் செனரல் மவுண்ட்பேட்டன் பிரபு கொடுத்த அழுத்தத்தினால் ஏராளமான அரசாங்கங்கள் இந்தியாவுடன் இணைவதென்ற தீர்மானத்தையே எடுத்தன. இந்த வகையில் காசுமீரும் இணைய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையானோர் இசுலாமிய மக்கள். ஆனால் ஆட்சியளர் இந்துக்கள். மாமன்னன் அரிசிங் ஆட்சியிலிருந்தார்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கூட காசுமீரிய பிராமணர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் இசுலாமியர்கள் ஏறத்தாழ 12%. யம்மு காசுமீர் மாநிலத்தில் இசுலாமியர்கலே 2/3 பங்கு பெரும்பான்மையாயினர். காசுமீர் பள்ளத்தாக்கு முழுவதும் இசுலாமியர்களே நெருக்கமாக வாழ்கின்றனர். இந்தியா பாக்கித்தான் பிரிவினைக்கு சற்று முன்னர் கூட, காசுமீர் தொடர்ந்தும் சுதந்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மாமன்னன் அரிசிங்குக்கு ஊட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை பாக்கித்தான் பக்கத்திலிருந்து வந்த படையெடுப்பால் தகர்ந்தது. பாக்கித்தானிலும் ஆப்கானித்தானிலும் செல்வாக்குள்ளதான பதான்சு என்ற இனக்குழுவினரே காசுமீர் மீது படையெடுத்தனர். இந்த படையெடுப்பாலும்(செப் 1947), காசுமீரிய இசுலாமியர்கள் மேற்குப் பகுதிகளில் செய்த கிளர்ச்சியினாலும் அரிசிங் புதுதில்லியின் தயவை நாட வேண்டியவரானார். காசுமீரிய சிங்கம் எனப்பெயர் பெற்றவரும் அங்கு எதிர்க்கட்சியை நிறுவியருமான சேக் அப்துல்லாவும் நேருவைச் சந்தித்து காசுமீரைக் காப்பாற்றும்படி கோரினார். காசுமீர் இந்தியாவுடன் இணைந்த பின்னரே அங்கு படைகளை அனுப்பிவைப்பதாக நேரு பதிலளித்தார்(மிகவும் தந்திரமான பதில்). இதன் விளைவாக ஒக்டோபர் 27,1947ல் மாமன்னன் அரிசிங் காசுமீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன் படிக்கையில் கையொப்பமிட்டார். உடனடியாக இந்தியப்படைகள் விமானத்தில் வந்து காசுமீரில் இறங்கின. பாக்கித்தானிலிருந்து வந்த இனக்குழுவினரை இவை பின்வாங்கச் செய்தன.

பதான்சு ஏற்கெனவே கைப்பற்றியிருந்த பிரதேசமே ஆசாத்காசுமீர் என அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானுடன் இணைகப்பட்டுவிட்டது. 1948 மார்ச்சில் சேக் அப்துல்லா மாநில அரசாங்கத்தின் இடைக்கால முதலமைச்சரானார்.
துரோகத்தின் தொடக்கம்



மாமன்னன் அரிசிங் ஒப்பமிட்ட இணைப்பு ஆவணத்தின் ஏழாவது வாசகம் பின்வருமாறு கூறுகின்றது.

“இந்த ஆவணத்திலுள்ள எதுவேனும் ஏற்பாடு இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பு எதனையும் ஏற்குமாறு என்னை வற்புறுத்துவதாகாது. அல்லது அத்தகைய அரசியலமைப்பு எதனதும் கீழ் இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகள் செய்யும் எனது சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுமாகாது.”

இந்த வாசகமே இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குவது. காசுமீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது சரிதானா என்ற வினாவை ஒருவர் எழுப்பினால், அவர் ஏழாம் வாசகத்தைப் படித்துவிட்டார் என்று பொருள். அந்தக் கதையெல்லாம் வேண்டாம் மற்றையதைப் பாருங்கள் என இந்திய இராசதந்திரிகள் உடனே பதிலளிப்பார்கள். காசுமீரின் இந்த நிபந்தனையுடன் கூடிய இணைப்பினால்தான் இந்த அரசியலமைப்பில் 370ஆம் உறுப்புரை சேர்க்கப்பட்டது. இந்த உறுப்புரையின்படி அரசியலைப்பின் முதலாம் உறுப்புரையும் 370ம் உறுப்புரையும் மட்டுமே காசுமீருக்கு நேரடியாக ஏற்புடையதாகும். ஏனைய உறுப்புரைகள் யாவும் காசுமீருக்கு நீடிக்கப்படலாம். ஆனால் அதற்கு முன்பு மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும். சில விடயங்களில் கட்டாயமாக அதன் சம்மதம் பெறப்படல் வேண்டும். இவ்வகையில் இந்திய அரசியலமைப்புக்கூட மாநில அரசாங்கத்தின் சம்மதமின்றிச் சில விடயங்களில் அங்கு ஏற்புடையதாகாது என்ற நிலை. இது மட்டுமல்ல, காசுமீருக்கு மட்டுமே இந்திய மாநிலங்கள் எல்லாவற்றையும் விட தனியான மாநில அரசியலமைப்பு என்று ஒன்றும் உள்ளது. முழு இரையாண்மை கொண்ட நாடுகளில் மட்டும் காணப்படும் அம்சம் இது. இணைப்பின்போது மவுண்ட்பேட்டன் பிரபு வெளியிட்ட அறிக்கை பின்வரும் உத்தரவாதத்தை அளித்திருந்தது. ”ஏதாவது மாநிலத்தில் இணைப்பு விவகாரம் பிணக்கிற்கு உட்படுமானால், இணைப்பானது அந்த மாநில மக்களது விருப்பத்தின்படி தீர்மானிக்கப்படும். காசுமீரைப் பொறுத்தளவில் அங்கு சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு படையெடுப்பாளர் அகற்றப்பட்டதும், இணைப்புத் தொடர்பாக அங்கு அனைத்துமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளது”.

இந்த அறிக்கையும் இந்தியர்களுக்கு ஒவ்வாத விடயமாகும். ஏனெனில் இன்று வரை அத்தகைய வாக்கெடுப்பு எதுவுமே நடத்தப்பட்டிருக்கவில்லை. இதற்கு இந்திய அரசாங்கும் கூறும் காரணமோ இன்னும் வேடிக்கையானது. அறிக்கையிலுள்ள படையெடுப்பாளர் அகற்றப்பட்டதும் என்ற வாசகம் மிக முக்கியம்(ஆசாத் காசுமீர்) இன்னும் ஆக்கிரமித்தபடியுள்ளனர். அவர்கள் விரட்டப்படும் வரை வாக்கெடுப்பு இல்லை என்பது இந்தியாவின் வாதம். உண்மையில் இந்த விரட்டலுக்காகவே இரண்டு யுத்தங்கள் புரியப்பட்டன. ஆனாலும் எல்லைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்பட்டதாக இல்லை.

இன்னொரு நொண்டிச்சாக்கு காசுமீர் மக்கள் உள்ளூர் தேர்தல்களில் வாக்களித்தமை, மாநில அரசியலமைப்பை உருவாக்கியமை என்பதை வைத்துப் பார்த்தால் மக்கள் இணைப்பை அங்கீகரித்துவிட்டார்கள் என்பது. இவ்வேளையில்தான் அங்கு ஐ.நா. தலையிட்டு எல்லைக் காவல் செய்யவேண்டி ஏற்பட்டது. இது ஒரு கண்காணிப்பு பணியாக உள்ளது.

அனைத்து மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட இந்தியா காசுமீரில் அனைத்து மக்கள் வாக்கெடுப்பை நடத்தவில்லை.
சமரசங்கள் சரிவருமா?



சேக் அப்துல்லாவும் நேருவும் 1953இலிருந்து முரண்பட்டனர். இதன் விளைவு முன்னையவரின் தொடர்ச்சியான சிறைவாசம். 1964இல் முதலாவது தீவிரவாதக் குழ் தோற்றுவிக்கப்பட்டது. யம்மு காசுமீர் விடுதலை முன்னணி(J.K.L.M.)[Jammu Kashmir liberaton movement]. காசுமீரின் முழு விடுதலையைக் கோரிப் போராடுகிறது. வங்காளதேசம் உருவாகியதும் தன் கை ஓங்கிவிட்டத்தை அறிந்து இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பாக்கித்தானை அழைத்தது.

· 1972 யூலை 02ல் ஒப்பமிடப்பட்ட சிம்லா உடன்படிக்கையின்படி 1965இல் வரையப்பட்ட யுத்த நிறுத்த எல்லைக் கோட்டை மதித்து நடத்தல்.

· காசுமீர் சம்பந்தமான பிரச்சனைகளைப் பேசித்தீர்த்தல்.

· இறுதித் தீர்வுக்காகச் சமாதான ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடல்.

என்ற கட்டுப்பாடுகளை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

எந்தளவுக்கு 1947ஆம் ஆண்டைய தனது கட்டுப்பாடுகளை இந்தியா தட்டிக்கழிக்க முயல்கிறதோ அந்தளவுக்கு பாக்கித்தான் இன்று சிம்லா உடன்படிக்கையின் இந்தக் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்துகிறது. ஆனால் இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையைவிட வேறு பற்றுக்கோடு எதுவுமில்லை. இதுதான் தற்போதைய இழுபறி 870 மைல் நீளமான யுத்த நிறுத்த எல்லைக் கோட்டில் இரு நாடுகளுமே ஒவ்வொன்றும் இரண்டு இலட்சம் படைவீரர்களை நிறுத்தி வைத்துள்ளன. ஐ.நா. படைகளும் இங்கேதான் நிலைகொண்டுள்ளன.

1982இல் சேக் அப்துல்லா இறக்க அவரது மகன் பரூக் அப்துல்லா முதலமைச்சரானார். மாறி மாறி காங்கிரசு கட்சியுடன் தேர்தல் உடன்பாடு. இது 1975ல் இந்திரா காந்தியினால் தொடங்கி வைக்கப்பட்ட விவகாரம். 1986ல் இராசீவ் காந்தியும் பரூக்கும் செய்த உடன்பாடு காசுமீரிய மக்களை வன்முறைப் பாதைக்குத் தூண்டியது. 1987ல் புதிய கட்சி பிறந்தது. தேர்தலில் நடைபெற்ற அப்பட்டமான மோசடியால் மிதவாதத் தலைமைகளே வேண்டாம் என்ற நிலை காசுமீரில் ஏற்பட்டுவிட்டது. அன்றைய தேர்தலில் புதிய கட்சியான இசுலாமிய ஐக்கிய முன்னனியின் வாக்குப் பெட்டிகளுக்குக் காவல் நின்ற இளைஞர்களைத்தான் இன்னும் இந்தியப் படையினர் பட்டியல் வைத்துத் தேடி வருகின்றனர். வன்முறைகள் வெடித்தன. பாக்கித்தானில் பயிற்சி என்பது இரகசிய விடயமல்ல. 1990 சனவரியிலிருந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3,000 மக்கள் இறந்துள்ளதாக மனித உரிமைகள் நிறுவன அறிக்கைகள் கூறுகின்றன. 43 போராட்டக் குழுக்கள் உள்ளதாகவும் அறியப்படுகின்றது.

காசுமீரிய மக்களுடைய விருப்பு என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்த 1947இலிருந்து இன்றுவரை எவ்விதச் சந்தர்ப்பமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் தனிநாடாகப் போக விரும்புகிறார்களா? பாக்கித்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது இந்தியாவுடனேயே தொடர்ந்தும் இருக்க இசைகின்றார்களா? எப்படிக் கண்டு கொள்வது? இந்த மக்களது சுயநிர்ணய உரிமை மிகப்பெரிய மக்களாட்சி நாட்டினால் மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் சர்வதேசச் செல்வாக்குக் காரணமாகவே காசுமீரீய மக்களது சுயநிர்ணய உரிமைக்குரல் குரல்வளைக்கு வெளியே வரமுடியாதபடி அமுக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தம், உடன்படிக்கை, வாக்குறுதி என்பவற்றால் ஏமாற்றப்பட்டுவிட்ட காசுமீரிய மக்கள் இன்று சிக்கலிலிருந்து விடுபட வழியறியாது குருதிக் காணிக்கை செலுத்துகிறார்கள்.

கடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பேசுகையில் ”ஐ.நா.வின் கவனத்துக்குரிய ஒரு விடயம் காசுமீர்”, என அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் காசுமீர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1990 பிப்ரவரியில் 4 இலட்சம் மக்கள் காசுமீர் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று ஐ.நா. கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் ஒப்படைத்த மகசரில் ’தமக்கு முழு சுதந்திரம் வேண்டும்’ எனக் கேட்டிருந்தனர். ஆனாலும், ‘சேக் உல் முசாகிதீன்’ போன்ற தீவிரவாதக் குழுக்கள் பாக்கித்தானுடன் இணைவதை விரும்புகின்றன. இக்குழுவின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியப் படையினரின் அத்துமீறல்கள் தனியாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம். எல்லா விதங்களிலும் அந்நியமானவர்கள் எனக் கருதப்படும் இந்தியப் படையினர் காசுமீரில் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சில நகரங்களையே கொளுத்தியுள்ளதாக அறிக்கைகள் கூறியுள்ளன. பாலியல் பலாத்காரம் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. உல்லாசப் பயணம் வந்த கனேடியப் பெண் ஒருவரை படையினர் பலாத்காரம் செய்த கதை உலகம் அறிந்த விடயம். ஆனால் வெளிவராமல் அமுக்கப்பட்டுவிட்டமை ஏராளம். இந்த வரிசையில் அண்மைய அசுரத்பால் பள்ளிவாசல் முற்றுகையும் அமைந்துள்ளது. இசுபுல் முசாகிதீன் என்ற கட்சியின் தீவிரவாதத் தலைவரை கைது செய்ய நடத்தப்பட்ட முற்றுகை இறுதியில் பிசுபிசுத்துவிட்டது. அவர் பள்ளிவாசலுக்குள் இருந்தார் என்பதற்குச் சான்றில்லை.

எத்தனை நாளைக்குக் குரல்வளையை நெரிப்பது? அடக்கப்படும் மக்களுக்காக வெளியிலிருந்து குரல்கள் எழுவதும் தவிர்க்க முடியாது.



புத்தகம் : உலக தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்

எழுதியவர்கள் : வி.ரி.தமிழ்மாறன், வி.தமிழ்க்குமரன்.


ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 11, 2011 11:48 pm

இந்து wrote:குடியுரிமைச் சட்டம் இயற்றப்பெற்ற காலகட்டத்தில், ஈழத் தமிழர்களுக்கும், மலையக தமிழர்களுக்கும் ஒரு சுமூக உறவு இருந்ததில்லை. புலிகள் இயக்கம் தான் இவர்கள் இருவரையும் இணைத்தது. அதுவரை ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை ஒரு பொருட்டாகவே எண்ணியதில்லை. அதன் ஒரு முக்கிய காரணையாகத்தான் 5 இலட்சம் மலையகத் தமிழர்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்.

இதை இதைத் தான் எதிர்பார்த்தேன்..

மலையக தமிழர் என்று அழைக்கப்படும் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் ஏன் ஈழப்போராட்த்தை பெரும்பான்மையாக ஆதரிக்கவில்லை என்பதனை அழகாக காட்டி விட்டீர்கள்...

இந்திய வழி தமிழர்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் ஏன் சுமூக உறவு இருக்கவில்லை?

இலங்கையில் இந்தியத் தமிழர்களுக்குக் குடியுரிமை பிரச்சனை ஏற்பட்ட போது 'சக தமிழன்' என்கிற முறையில், ஏன் ஈழத்தவர் அவர்களுக்கு உதவவில்லை?
அவர்களும் தமிழர் தான் என்று உதவி இருக்கலாமே!!

சக தமிழர்களின் குடியுரிமையும், உரிமைகளும் நயவஞ்சகமாக பறிக்கப்பட்ட போது உதவாதவர்கள் தங்கள் உரிமைகள் பறிக்கப்படும் போது, உலகமே தங்களுக்கு உதவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயம்?

"தனி திராவிட நாடு" என்று இங்கு முழங்கிய போது, ஈழத்திலிருந்து ஆதரவு குரல் எதுவும் வரவில்லையே.. ஏன்? (அது தான் "ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே!")
அப்போது ஆதரிக்காதவர்கள், தற்போது மற்ற அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்று எட்ப்படி எதிர்பார்க்கலாம்?

தங்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற உணர்வு வந்த
போது தான் ஈழத்து மக்களுக்கு பிற தமிழர்கள் கண்ணிற்குத் தெரிந்தார்கள்
என்று கொள்ளலாமா?

தங்களுக்குத் தனி நாடு என்ற எண்னம் வரும் வரை, பிற தமிழர்களை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவர்கள், இன்றும் அந்த எண்ணம் வந்து இருக்காவிடில் பிற தமிழர்களை அரவணைத்து போய் இருப்பர் என்று எப்படி நம்புவது?

பிற தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சனைகளின் போது "சுமூக உறவு இல்லை" எண்று கை விரித்தவர்கள் தங்களுக்குத் தனி நாடு கிடைத்து இருந்தால், பிற தமிழர்களை அங்கே அனுமதித்து இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?


மேற்கண்ட கேள்விகளுக்கு என்ன பதில்?

தன் மொழியைச் சேர்ந்த பிறர் துன்பப்படும் போது அதைக் கண்டும் கவனியாதது போல் சென்றவர்கள், தங்களுக்கு ஒரு பிரச்சனை வரும் போது "குய்யோ முய்யோ" என்று ஒரு மொழி இனமே அழிவது போல் கூப்பாடு போடுவது கேவலமாக இல்லையா?
பி.கு:
* இந்த பதிவு ஏற்கனவே இடப்பட்ட ஒரு பதிவிற்கான பதிலுரையே.. யாரையும் புண்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்படவில்லை...
* இந்திய வாழ் இலங்கைத் தமிழர்கள் பற்றிய கருத்துகள் என்னுடையவை மட்டும் அல்ல.. பலரிடன் கலந்த பின் பெற்ற தகவல்!
* இங்கு முன்பே முத்தையா முரளிதரன் அவர்களைப் பற்றிய ஒரு சர்ச்சை பதிவு இருந்தது.. தனி ஈழம் உருவாவதில் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் அவ்வளவு இடுபாடு காட்ட வில்லை என்பதற்கு இருக்கும் சில சாட்சிகளில் அவரும் ஒருவர்.. அவர்
இலங்கை வாழ் இந்தியத் தமிழர்.




காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue Apr 12, 2011 12:12 am

இந்த பதிவினைத் துவக்கியவருக்கு ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்...

இன்று அவரால் சுதந்திரமாக ஈகரையில் இப்படி ஒரு பதிவினை எழுத முடிகிறது என்றால், அதற்கு இந்தியாவில் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் எழுத்து உரிமைகளே காரணம்..
மேலும், அவர் இப்படி சுதந்திரமாக எழுதவே, இங்கு அவருக்கு அளிக்கப்பட்டு இருக்கும் சுதந்திரமே காரணம்..


கிடைத்த சுதந்திரத்தைத் தவறாக பயன்படுத்துவது மிகவும் தவறு.. (இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதோ எழுதுவதோ சட்டப்படி குற்றம்)

தஞ்சம் புகுந்த நாட்டில் இருந்து கொண்டே அந்த நாட்டைப் பற்றி அவதூறாக விமர்சனம் செய்வது கேவலம்.
(மன்றத்தில் பதிவதால், நாகரிகம் கருதி, மனதில் தோன்றும் உவமைகளைத் தவிர்க்கிறேன்)

அப்படி பேசுவது எனில், இந்திய எல்லைக்கு அப்பால் போய் நின்று பேசுவது நன்று..

அபயம் என்று வந்தவருக்கு தஞ்சம் அளித்தவரைக் குறைகூறல் நன்றோ?

வள்ளுவர் வாக்குகளை இங்கே நினைவூட்டுகிறேன்!!

"நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று."

"கொன்றன்ன இன்னா செய்யினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்"

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு."



காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Apr 12, 2011 12:23 am

சிம்ப்ளி சுபர்ப்... உங்கள் பதிலில் தார்மீகமான தர்க்க நியாயங்கள் இருப்பதால் இவை எவரையும் புண்படுத்தாது என்பதை உணர்கிறேன்.. விவாதம் இதுவரை சிறந்த முறையில் தான் செல்கிறது என்பதில் ஐயமில்லை...

தொடருங்கள்..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Tue Apr 12, 2011 12:36 am

கலை wrote:சிம்ப்ளி சுபர்ப்... உங்கள் பதிலில் தார்மீகமான தர்க்க நியாயங்கள் இருப்பதால் இவை எவரையும் புண்படுத்தாது என்பதை உணர்கிறேன்.. விவாதம் இதுவரை சிறந்த முறையில் தான் செல்கிறது என்பதில் ஐயமில்லை...

தொடருங்கள்..

நன்றி...

பதிவிட்டவரின் பதிலுக்காக காத்து இருக்கிறேன்!!



காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Apr 12, 2011 10:29 am

ஆளுங்க wrote:
கலை wrote:சிம்ப்ளி சுபர்ப்... உங்கள் பதிலில் தார்மீகமான தர்க்க நியாயங்கள் இருப்பதால் இவை எவரையும் புண்படுத்தாது என்பதை உணர்கிறேன்.. விவாதம் இதுவரை சிறந்த முறையில் தான் செல்கிறது என்பதில் ஐயமில்லை...

தொடருங்கள்..

நன்றி...

பதிவிட்டவரின் பதிலுக்காக காத்து இருக்கிறேன்!!
இது போல பதில் தரக்கூடியவரைதான் நானும் எதிர்பார்த்து காத்து இருந்தேன்.உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி



காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Uகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Dகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Aகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Yகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Aகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Sகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Uகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Dகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 Hகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 3 A
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக