புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
75 Posts - 55%
heezulia
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
44 Posts - 32%
mohamed nizamudeen
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
70 Posts - 55%
heezulia
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
41 Posts - 32%
mohamed nizamudeen
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_m10காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Sat Apr 09, 2011 6:20 pm

First topic message reminder :

காசுமீரில் நடைபெற்று வரும் போராட்டம் உலகைக் கவரத் துவங்கிவிட்டது. இசுரேலின் உருவாக்கம் எப்படி நிரந்தரத் தலையிடியாக இருந்ததோ அதைவிடச் சற்றும் குறையாத அளவுக்கு தலையிடி கொடுத்தது இந்தியா பாக்கித்தான் சுதந்திர நாடுகளாகப் பிரிந்தமை. இந்தத் தலையிடியின் தலைப்பிள்ளைதான் காசுமீர் போராட்டம். தலையிடி 1947லிலேயே கருக்கொண்டு பின்னாளில் உருக்கொள்ளத் தொடங்கியது. இன்றைய சந்ததியினருக்கு இத்தலையிடியின் தாற்பரியம் புரிவதில்லையாதலால் வரலாற்று நிகழ்வுகள் சில குறிப்பிடப்படுவது அவசியமாகின்றது இவ்விடத்தில்.

அரசுக்கெதிரான போராட்டங்களில் தமிழ்மக்கள் பெற்றுள்ள அனுபவம் ஒரு குறுகிய கால வேகத்தின் விளைவாக ஏற்பட்டது. ஆனால், காசுமீரிய மக்கள் 1947இலிருந்து போராடி வருகின்ற போதும் ஈழத்து வேகம் அங்குக் காணப்படவில்லைதான். ஆனால் போராட்டத்திற்கான நியாய அடிப்படை காசுமீரிய மக்களுக்கு அசைக்க முடியாத அரணாக உள்ளது. ஏனெனில், உண்மையிலேயே, இம்மக்களுக்கு சுயநிர்ணய உரிமை என்பது ஆசைக்காட்டி மோசஞ் செய்யப்பட்ட விடயமொன்றாகிறது. இந்தியாவும் ஐ.நா.வும் தான் இதில் குற்றவாளிகள். இந்தக் குற்றத்தைப் பயன்படுத்தித் தனது நலனைத் தேடுவதில் குறியாக உள்ளது பாக்கித்தான்.

உலகின் மிகவுயர்ந்த மலைத் தொடர்களால் சூழப்பட்ட ஒரு பள்ளத்தாக்குப் பிரதேசமே காசுமீர். வருடத்தின் பெரும்பகுதி உறக்கத்தில் கழிய வேண்டிய அளவுக்கு ஒரே குளிர். கோடைக்கால இருப்பிடமாக மட்டும் பயன்பட்டிருக்க வேண்டிய பகுதி, குருதிக் கொட்டிக் கொண்டிருக்கிறது. 14ம் நூற்றாண்டுவரை(இந்திய) இந்து மன்னர்களினாலும் பின்னர்(1579) மொகலாய ஆட்சியின் கீழும் வந்த இப்பிரதேசம் 18ம் நூற்றாண்டில் ஆப்கானித்தான் ஆட்சியினரின் கட்டுப்பாட்டிலிருந்தது. 1819லிருந்து சீக்கியப் பேரரசு இங்கு உருவாக்கப்பட்டதுடன் 1846இல் இது பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்படும் வரை இரஞ்சித் சிங் என்பவரால் ஆளப்பட்டதெனத் தெரிகிறது. நமது அரசியலோடு ஒப்பிடுவதானால் இரஞ்சித் சிங்கின் ஒப்படைப்பை சங்கிலியனின் அரசு போர்த்துக்கேயரிடம் ஒப்படைக்கப்பட்டமையுடன் ஒப்பிடலாம். தற்போதைய யம்மு காசுமீர் மாநிலம் என்பது இரண்டாவது ஆங்கில சீக்கிய யுத்தத்தின் பின்பு பிரித்தானியர் காசுமீர் மீதான கட்டுப்பாட்டினை யம்முவிலிருந்த பட்டத்து மாமன்னனிடம் ஒப்படைக்கப்பட்டததன் மூலம் உருவாக்கப்பட்டது(1847). இப்படி ஒரு மாநிலம் உருவாக்கப்ப்ட்டமைக்கு ஒரு உள்நோக்கமும் உண்டு. இந்தியாவுக்கும் ஆப்கானித்தான், சீனா என்பவற்றிற்கும் இடையில் ஒரு தாங்கு அரசை(Buffer State) உருவாக்குவதே இந்த உள்நோக்கமாகும். அப்போதைய கவர்னர் செனரல் மவுண்ட்பேட்டன் பிரபு கொடுத்த அழுத்தத்தினால் ஏராளமான அரசாங்கங்கள் இந்தியாவுடன் இணைவதென்ற தீர்மானத்தையே எடுத்தன. இந்த வகையில் காசுமீரும் இணைய வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. இங்கே பெரும்பான்மையானோர் இசுலாமிய மக்கள். ஆனால் ஆட்சியளர் இந்துக்கள். மாமன்னன் அரிசிங் ஆட்சியிலிருந்தார்.

இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கூட காசுமீரிய பிராமணர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இந்தியாவின் மொத்த மக்கட்தொகையில் இசுலாமியர்கள் ஏறத்தாழ 12%. யம்மு காசுமீர் மாநிலத்தில் இசுலாமியர்கலே 2/3 பங்கு பெரும்பான்மையாயினர். காசுமீர் பள்ளத்தாக்கு முழுவதும் இசுலாமியர்களே நெருக்கமாக வாழ்கின்றனர். இந்தியா பாக்கித்தான் பிரிவினைக்கு சற்று முன்னர் கூட, காசுமீர் தொடர்ந்தும் சுதந்திரமாக இருக்கும் என்ற நம்பிக்கை மாமன்னன் அரிசிங்குக்கு ஊட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த நம்பிக்கை பாக்கித்தான் பக்கத்திலிருந்து வந்த படையெடுப்பால் தகர்ந்தது. பாக்கித்தானிலும் ஆப்கானித்தானிலும் செல்வாக்குள்ளதான பதான்சு என்ற இனக்குழுவினரே காசுமீர் மீது படையெடுத்தனர். இந்த படையெடுப்பாலும்(செப் 1947), காசுமீரிய இசுலாமியர்கள் மேற்குப் பகுதிகளில் செய்த கிளர்ச்சியினாலும் அரிசிங் புதுதில்லியின் தயவை நாட வேண்டியவரானார். காசுமீரிய சிங்கம் எனப்பெயர் பெற்றவரும் அங்கு எதிர்க்கட்சியை நிறுவியருமான சேக் அப்துல்லாவும் நேருவைச் சந்தித்து காசுமீரைக் காப்பாற்றும்படி கோரினார். காசுமீர் இந்தியாவுடன் இணைந்த பின்னரே அங்கு படைகளை அனுப்பிவைப்பதாக நேரு பதிலளித்தார்(மிகவும் தந்திரமான பதில்). இதன் விளைவாக ஒக்டோபர் 27,1947ல் மாமன்னன் அரிசிங் காசுமீரை இந்தியாவுடன் இணைக்கும் உடன் படிக்கையில் கையொப்பமிட்டார். உடனடியாக இந்தியப்படைகள் விமானத்தில் வந்து காசுமீரில் இறங்கின. பாக்கித்தானிலிருந்து வந்த இனக்குழுவினரை இவை பின்வாங்கச் செய்தன.

பதான்சு ஏற்கெனவே கைப்பற்றியிருந்த பிரதேசமே ஆசாத்காசுமீர் என அழைக்கப்படுகிறது. இது பாக்கித்தானுடன் இணைகப்பட்டுவிட்டது. 1948 மார்ச்சில் சேக் அப்துல்லா மாநில அரசாங்கத்தின் இடைக்கால முதலமைச்சரானார்.
துரோகத்தின் தொடக்கம்



மாமன்னன் அரிசிங் ஒப்பமிட்ட இணைப்பு ஆவணத்தின் ஏழாவது வாசகம் பின்வருமாறு கூறுகின்றது.

“இந்த ஆவணத்திலுள்ள எதுவேனும் ஏற்பாடு இந்தியாவின் எதிர்கால அரசியல் அமைப்பு எதனையும் ஏற்குமாறு என்னை வற்புறுத்துவதாகாது. அல்லது அத்தகைய அரசியலமைப்பு எதனதும் கீழ் இந்திய அரசாங்கத்துடன் உடன்படிக்கைகள் செய்யும் எனது சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதுமாகாது.”

இந்த வாசகமே இந்தியாவின் இன்றைய ஆட்சியாளர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குவது. காசுமீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது சரிதானா என்ற வினாவை ஒருவர் எழுப்பினால், அவர் ஏழாம் வாசகத்தைப் படித்துவிட்டார் என்று பொருள். அந்தக் கதையெல்லாம் வேண்டாம் மற்றையதைப் பாருங்கள் என இந்திய இராசதந்திரிகள் உடனே பதிலளிப்பார்கள். காசுமீரின் இந்த நிபந்தனையுடன் கூடிய இணைப்பினால்தான் இந்த அரசியலமைப்பில் 370ஆம் உறுப்புரை சேர்க்கப்பட்டது. இந்த உறுப்புரையின்படி அரசியலைப்பின் முதலாம் உறுப்புரையும் 370ம் உறுப்புரையும் மட்டுமே காசுமீருக்கு நேரடியாக ஏற்புடையதாகும். ஏனைய உறுப்புரைகள் யாவும் காசுமீருக்கு நீடிக்கப்படலாம். ஆனால் அதற்கு முன்பு மாநில அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்க வேண்டும். சில விடயங்களில் கட்டாயமாக அதன் சம்மதம் பெறப்படல் வேண்டும். இவ்வகையில் இந்திய அரசியலமைப்புக்கூட மாநில அரசாங்கத்தின் சம்மதமின்றிச் சில விடயங்களில் அங்கு ஏற்புடையதாகாது என்ற நிலை. இது மட்டுமல்ல, காசுமீருக்கு மட்டுமே இந்திய மாநிலங்கள் எல்லாவற்றையும் விட தனியான மாநில அரசியலமைப்பு என்று ஒன்றும் உள்ளது. முழு இரையாண்மை கொண்ட நாடுகளில் மட்டும் காணப்படும் அம்சம் இது. இணைப்பின்போது மவுண்ட்பேட்டன் பிரபு வெளியிட்ட அறிக்கை பின்வரும் உத்தரவாதத்தை அளித்திருந்தது. ”ஏதாவது மாநிலத்தில் இணைப்பு விவகாரம் பிணக்கிற்கு உட்படுமானால், இணைப்பானது அந்த மாநில மக்களது விருப்பத்தின்படி தீர்மானிக்கப்படும். காசுமீரைப் பொறுத்தளவில் அங்கு சட்டமும் ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டு படையெடுப்பாளர் அகற்றப்பட்டதும், இணைப்புத் தொடர்பாக அங்கு அனைத்துமக்கள் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதே எனது அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளது”.

இந்த அறிக்கையும் இந்தியர்களுக்கு ஒவ்வாத விடயமாகும். ஏனெனில் இன்று வரை அத்தகைய வாக்கெடுப்பு எதுவுமே நடத்தப்பட்டிருக்கவில்லை. இதற்கு இந்திய அரசாங்கும் கூறும் காரணமோ இன்னும் வேடிக்கையானது. அறிக்கையிலுள்ள படையெடுப்பாளர் அகற்றப்பட்டதும் என்ற வாசகம் மிக முக்கியம்(ஆசாத் காசுமீர்) இன்னும் ஆக்கிரமித்தபடியுள்ளனர். அவர்கள் விரட்டப்படும் வரை வாக்கெடுப்பு இல்லை என்பது இந்தியாவின் வாதம். உண்மையில் இந்த விரட்டலுக்காகவே இரண்டு யுத்தங்கள் புரியப்பட்டன. ஆனாலும் எல்லைகளில் பெரிதான மாற்றங்கள் ஏற்பட்டதாக இல்லை.

இன்னொரு நொண்டிச்சாக்கு காசுமீர் மக்கள் உள்ளூர் தேர்தல்களில் வாக்களித்தமை, மாநில அரசியலமைப்பை உருவாக்கியமை என்பதை வைத்துப் பார்த்தால் மக்கள் இணைப்பை அங்கீகரித்துவிட்டார்கள் என்பது. இவ்வேளையில்தான் அங்கு ஐ.நா. தலையிட்டு எல்லைக் காவல் செய்யவேண்டி ஏற்பட்டது. இது ஒரு கண்காணிப்பு பணியாக உள்ளது.

அனைத்து மக்கள் வாக்கெடுப்பின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொண்ட இந்தியா காசுமீரில் அனைத்து மக்கள் வாக்கெடுப்பை நடத்தவில்லை.
சமரசங்கள் சரிவருமா?



சேக் அப்துல்லாவும் நேருவும் 1953இலிருந்து முரண்பட்டனர். இதன் விளைவு முன்னையவரின் தொடர்ச்சியான சிறைவாசம். 1964இல் முதலாவது தீவிரவாதக் குழ் தோற்றுவிக்கப்பட்டது. யம்மு காசுமீர் விடுதலை முன்னணி(J.K.L.M.)[Jammu Kashmir liberaton movement]. காசுமீரின் முழு விடுதலையைக் கோரிப் போராடுகிறது. வங்காளதேசம் உருவாகியதும் தன் கை ஓங்கிவிட்டத்தை அறிந்து இந்தியா சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் பாக்கித்தானை அழைத்தது.

· 1972 யூலை 02ல் ஒப்பமிடப்பட்ட சிம்லா உடன்படிக்கையின்படி 1965இல் வரையப்பட்ட யுத்த நிறுத்த எல்லைக் கோட்டை மதித்து நடத்தல்.

· காசுமீர் சம்பந்தமான பிரச்சனைகளைப் பேசித்தீர்த்தல்.

· இறுதித் தீர்வுக்காகச் சமாதான ரீதியிலான பேச்சுவார்த்தையில் ஈடுபடல்.

என்ற கட்டுப்பாடுகளை இரு நாடுகளும் ஏற்றுக்கொண்டன.

எந்தளவுக்கு 1947ஆம் ஆண்டைய தனது கட்டுப்பாடுகளை இந்தியா தட்டிக்கழிக்க முயல்கிறதோ அந்தளவுக்கு பாக்கித்தான் இன்று சிம்லா உடன்படிக்கையின் இந்தக் கட்டுப்பாடுகளை அலட்சியப்படுத்துகிறது. ஆனால் இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கையைவிட வேறு பற்றுக்கோடு எதுவுமில்லை. இதுதான் தற்போதைய இழுபறி 870 மைல் நீளமான யுத்த நிறுத்த எல்லைக் கோட்டில் இரு நாடுகளுமே ஒவ்வொன்றும் இரண்டு இலட்சம் படைவீரர்களை நிறுத்தி வைத்துள்ளன. ஐ.நா. படைகளும் இங்கேதான் நிலைகொண்டுள்ளன.

1982இல் சேக் அப்துல்லா இறக்க அவரது மகன் பரூக் அப்துல்லா முதலமைச்சரானார். மாறி மாறி காங்கிரசு கட்சியுடன் தேர்தல் உடன்பாடு. இது 1975ல் இந்திரா காந்தியினால் தொடங்கி வைக்கப்பட்ட விவகாரம். 1986ல் இராசீவ் காந்தியும் பரூக்கும் செய்த உடன்பாடு காசுமீரிய மக்களை வன்முறைப் பாதைக்குத் தூண்டியது. 1987ல் புதிய கட்சி பிறந்தது. தேர்தலில் நடைபெற்ற அப்பட்டமான மோசடியால் மிதவாதத் தலைமைகளே வேண்டாம் என்ற நிலை காசுமீரில் ஏற்பட்டுவிட்டது. அன்றைய தேர்தலில் புதிய கட்சியான இசுலாமிய ஐக்கிய முன்னனியின் வாக்குப் பெட்டிகளுக்குக் காவல் நின்ற இளைஞர்களைத்தான் இன்னும் இந்தியப் படையினர் பட்டியல் வைத்துத் தேடி வருகின்றனர். வன்முறைகள் வெடித்தன. பாக்கித்தானில் பயிற்சி என்பது இரகசிய விடயமல்ல. 1990 சனவரியிலிருந்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 3,000 மக்கள் இறந்துள்ளதாக மனித உரிமைகள் நிறுவன அறிக்கைகள் கூறுகின்றன. 43 போராட்டக் குழுக்கள் உள்ளதாகவும் அறியப்படுகின்றது.

காசுமீரிய மக்களுடைய விருப்பு என்ன என்பதை அவர்கள் வெளிப்படுத்த 1947இலிருந்து இன்றுவரை எவ்விதச் சந்தர்ப்பமும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அவர்கள் தனிநாடாகப் போக விரும்புகிறார்களா? பாக்கித்தானுடன் இணைய விரும்புகிறார்களா? அல்லது இந்தியாவுடனேயே தொடர்ந்தும் இருக்க இசைகின்றார்களா? எப்படிக் கண்டு கொள்வது? இந்த மக்களது சுயநிர்ணய உரிமை மிகப்பெரிய மக்களாட்சி நாட்டினால் மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் சர்வதேசச் செல்வாக்குக் காரணமாகவே காசுமீரீய மக்களது சுயநிர்ணய உரிமைக்குரல் குரல்வளைக்கு வெளியே வரமுடியாதபடி அமுக்கப்பட்டு வருகிறது. ஒப்பந்தம், உடன்படிக்கை, வாக்குறுதி என்பவற்றால் ஏமாற்றப்பட்டுவிட்ட காசுமீரிய மக்கள் இன்று சிக்கலிலிருந்து விடுபட வழியறியாது குருதிக் காணிக்கை செலுத்துகிறார்கள்.

கடந்த செப்டம்பரில் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பேசுகையில் ”ஐ.நா.வின் கவனத்துக்குரிய ஒரு விடயம் காசுமீர்”, என அமெரிக்க அதிபர் குறிப்பிட்டார். ஐ.நா.வின் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் காசுமீர் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. 1990 பிப்ரவரியில் 4 இலட்சம் மக்கள் காசுமீர் வீதிகளில் ஊர்வலமாகச் சென்று ஐ.நா. கண்காணிப்புக் குழுத்தலைவரிடம் ஒப்படைத்த மகசரில் ’தமக்கு முழு சுதந்திரம் வேண்டும்’ எனக் கேட்டிருந்தனர். ஆனாலும், ‘சேக் உல் முசாகிதீன்’ போன்ற தீவிரவாதக் குழுக்கள் பாக்கித்தானுடன் இணைவதை விரும்புகின்றன. இக்குழுவின் செல்வாக்கு தற்போது அதிகரித்து வருகிறது. இந்தியப் படையினரின் அத்துமீறல்கள் தனியாக ஆராயப்பட வேண்டிய ஒரு விடயம். எல்லா விதங்களிலும் அந்நியமானவர்கள் எனக் கருதப்படும் இந்தியப் படையினர் காசுமீரில் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சில நகரங்களையே கொளுத்தியுள்ளதாக அறிக்கைகள் கூறியுள்ளன. பாலியல் பலாத்காரம் முக்கிய ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. உல்லாசப் பயணம் வந்த கனேடியப் பெண் ஒருவரை படையினர் பலாத்காரம் செய்த கதை உலகம் அறிந்த விடயம். ஆனால் வெளிவராமல் அமுக்கப்பட்டுவிட்டமை ஏராளம். இந்த வரிசையில் அண்மைய அசுரத்பால் பள்ளிவாசல் முற்றுகையும் அமைந்துள்ளது. இசுபுல் முசாகிதீன் என்ற கட்சியின் தீவிரவாதத் தலைவரை கைது செய்ய நடத்தப்பட்ட முற்றுகை இறுதியில் பிசுபிசுத்துவிட்டது. அவர் பள்ளிவாசலுக்குள் இருந்தார் என்பதற்குச் சான்றில்லை.

எத்தனை நாளைக்குக் குரல்வளையை நெரிப்பது? அடக்கப்படும் மக்களுக்காக வெளியிலிருந்து குரல்கள் எழுவதும் தவிர்க்க முடியாது.



புத்தகம் : உலக தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள்

எழுதியவர்கள் : வி.ரி.தமிழ்மாறன், வி.தமிழ்க்குமரன்.


இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Mon Apr 11, 2011 6:13 pm

இது இந்தியா பற்றிய துவேசம் அல்ல. இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு உண்மையை உணர்த்துவதே ஆகும்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Apr 11, 2011 6:15 pm

நான் இந்த பதிவுக்கே வரலை.இந்த பதிவ பார்க்கவே இல்லை.அப்படியே பார்த்தாலும் நான் படிக்கவே இல்லை.அப்படியெ படித்தாலும் நான் பதில் சொல்லலை.
காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 230655 காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 230655 காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 230655 காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 230655




காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Uகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Dகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Aகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Yகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Aகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Sகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Uகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Dகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Hகாசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 A
இந்து
இந்து
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 06/03/2011

Postஇந்து Mon Apr 11, 2011 6:27 pm

நான் யாரையும் இந்த பதிவுக்கு வர வற்புறுத்தவில்லை. இந்தப் பதிவை பார்க்க கட்டாயப்படுத்தவில்லை. அப்படியே பார்த்தாலும் படிக்க சொல்லவில்லை. அப்படியே படித்தாலும் பதில் சொல்ல வற்புறுத்தவில்லை. அப்படியே முரணாக பதில் சொல்ல நினைத்தால் உண்மையை அறிந்துகொண்டு பின்னர் பதிலளிக்கலாம் என்றே கூறுகிறேன். அறிந்துகொள்ள விருப்பமுள்ளவர்களுக்கே எனது பதிவுகள். நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருக்கும் யாருக்காகவும் நான் எனது பதிவுகளை இடுவதில்லை.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 8:13 pm

இந்து wrote:இது இந்தியா பற்றிய துவேசம் அல்ல. இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு உண்மையை உணர்த்துவதே ஆகும்.

போச்சுடா... இதானா இப்போது பிரச்சினை...

சரி நானும் உங்க வழிக்கே வர்றேன்..

இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை திருத்தலாம் வாங்க... உங்க தலைமையில எங்களுக்கு வழி காட்டுங்க..

அதுக்கு முதல்ல என்ன என்ன வழிகள் இருக்கு என்று பட்டியலிட்டு கொடுங்க..

இந்த நிமிடம் முதல் இந்தியா பற்றி தரக்குறைவா எழுதுவதை நிறுத்திட்டு தமிழக சுதந்திரப்போர்னு ஒரு திரி தொடங்குங்க... அதில் எப்படி எல்லாம் இந்தியாவில் இருந்து தமிழகத்தை விடுவிப்பதுன்னு தெளிவா யாருக்கும் மனம் புண்படாம விளக்குங்க..

இதை எல்லாம் விட்டு ஒழிஙக்... இந்தியா துவேஷம் எதுவும் இல்லாம தனித்தமிழகம் பெற வழி வகைகளை மட்டும் சொல்லுங்க...

இந்த என் வேண்டுகோளை செய்ய தயாரா..?





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon Apr 11, 2011 8:52 pm

இவர் கட்டுரைகள் எப்படி இருக்குன்னா விருமாண்டி படத்துல கதாநாயகன் ஒரு கோணத்துலயும் வில்லன் ஒரு கோணத்துலயும் கதை சொல்லுவாங்க அதைப்போல இருக்கு நான் ஏதும் சொன்னா மத வெறியன்னு சொல்றாங்க என்ன கொடுமை சார் இது

ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 11, 2011 10:51 pm

உங்கள் மறுமொழியே உங்கள் துவேஷத்தைக் காட்டி விட்டது..

ஒவ்வொன்றாக வருவோம்...

இந்து wrote:வரலாற்றைத் தான் அவர்கள் எழுதியுள்ளார்கள். நீங்கள் வேண்டுமானால் காசுமீர் இணைப்பு ஒப்பந்தம் இனையத்தில் பார்க்க கிடைத்தால், படித்துப் பார்க்கவும்.

எதற்கு வேறு எங்கும் தேட வேண்டும்?
இதோ படியுங்கள்:

காஷ்மீர் இணைப்பு உடன்படிக்கை

இணைப்பு உடன்படிக்கை- மவுண்ட் பேட்டனின் ஒப்புதல்!

நீங்கள் கூறியவை உண்மை தான்..
ஆனால், இந்திய அரசு செய்வதிலும் தவறு இல்லையே..

ஒட்டுமொத்த காஷ்மீருக்கும் சேர்த்து தான் வாக்களிப்பு நடத்த வேண்டும் என்று மவுண்ட் பேட்டன் கூறுகிறார்..
இந்திய பகுதிகளில் அவற்றை நடத்த சாத்தியம் இருப்பினும், பாகிஸ்தான் அதற்கு ஒத்துக்கொள்ளுமா?

மேலும், ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள படி, காஷ்மீருக்கு சுய நிர்ணயம் அளிக்கப்பட்டுள்ளது!

முக்கிய விடயம்...
காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தால் மட்டுமே படைகளின் ஆதரவு என்று கூறியது நேரு அல்ல... மவுண்ட் பேட்டன் அவர்கள் ..
அவர் கூறியதில் என்ன தவறு?
வேறு ஒரு நாட்டில் நடக்கும் சண்டையில் இந்தியா பங்கெடுக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

இந்து wrote:பெரும்பாலான சட்டங்கள் காசுமீருக்கு ஒத்துவராது என்றே இருக்கும். காசுமீர் அரசின் ஒப்புதல் இல்லாமல் அங்கு எந்த ஒரு சட்டத்தையும் மத்திய அரசால் அமல்படுத்த இயலாது. அதனால் தான் அங்கு அடக்குமுறை ஏவப்பட்டு உள்ளது.

இதை யாரும் மறுக்கவில்லையே..
இந்திய அரசு இதுவரை காஷ்மீர் குறித்து இயற்றிய அனைத்து சட்டங்களுமே மாநில அரசின் சம்மதத்தைப் பெற்றவை...
அப்படி இல்லாத ஒரு சட்டத்தை உங்களால் எடுத்து காட்ட முடியுமா?

மாநில அரசின் ஒப்புதலுடன் சட்டம் இயற்ற அடக்குமுறை எதற்கு?
தீவிரவாதிகள் தவிர வேறு யார் மீதும் அடக்குமுறை இல்லை.. ஊரடங்கு உத்தரவுகள் உங்கள் மொழியில் அடக்குமுறையா?

2010 ஆம் ஆண்டிற்கான ஐ. நா உலக சுதந்திர அறிக்கை இந்தியாவின் வசம் உள்ள காஷ்மீரில் மக்கம் சுதந்திரமாக இருப்பதாகவே கூறுகிறது..
பாகிஸ்தானில் நிலை அப்படியல்ல. கவனிக்க!

இந்திய அரசு அங்கு வன்முறையைக் கையாண்டால், அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைந்து இருக்க சாத்தியம் இல்லை (2005-2008)



காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 11, 2011 11:19 pm

இந்து wrote:இது இந்தியா பற்றிய துவேசம் அல்ல. இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு உண்மையை உணர்த்துவதே ஆகும்.

என்னது தமிழ் நாடு இந்தியாவின் ஆக்கிரமிப்பில் உள்ளதா?
நான் ஒன்று கேட்கிறேன்..

தமிழனுக்கு என்றூ ஒரு தனி நாடு வேண்டும் என்பதற்காக (இனி ஈழம் கிடைக்க சாத்தியம் குறைவு என்பதால்) எது வேண்டுமானாலும் எழுதுவீர்களா ?

சற்று புரட்டிப் பாருங்கள்...

இந்திய சுதந்திரத்தின் போது,
தமிழகம் கீழ்கண்டவாறு பிரிந்திருந்தது:

* புதுக்கோட்டை (திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சை)
* திருவாங்கூர் ( கன்னியாகுமரி - மற்றும் கேரளா)
* ஆற்காடு (சென்னை, சேலம்)

இவை மட்டுமன்றி புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்து பின்னர் இந்தியாவுடன் இணைந்தவை!!

அந்த மூன்று அரசர்களில் சம்மதத்துடன் தான் மூன்று சமஸ்தானங்களும் இந்தியாவில் இணைந்தன..

சுதந்திரத்தின் போது பிரிக்கப்பட்டு இருந்தால் கூட தனியே தமிழகம் என்று ஒன்று சாத்தியம் இல்லை..
மூன்று சமஸ்தான அரசர்களும் தமிழுக்கென்று ஒரு நாடு உருவாக முயற்சி எடுத்து இருப்பார்களா என்று தெரியாது..

திருவாங்கூர் சமஸ்தானம் கேரளத்தைப் பெரும்பான்மையாக கொண்டது. ஆற்காடு சமஸ்தானமும் தற்போதைய ஆந்திராவில் சில பகுதிகளை உள்ளடக்கியது!

ஆக, தனியே தமிழ் நாடு என்று உருவாகியிருக்க சாத்தியம் இல்லை..

அப்படி உருவாகி இருந்தாலும், பாதிப்பு என்னவோ தமிழகத்திற்குத் தான்...

"தனி திராவிட நாடு" (தற்போதைய தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம்) என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்ட திராவிட கட்சிகள் இதை உணர்ந்தே கோரிக்கையைக் கை விட்டன...

மேலும், அப்படி ஆக்கிரமிப்பு என்று ஒன்று இருந்திருந்தால், தமிழக பகுதிகளில் வாக்கு சதவிகிதம் இவ்வளவு இருக்காது!



காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 11, 2011 11:26 pm

இந்து wrote:இது இந்தியா பற்றிய துவேசம் அல்ல. இந்தியாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் தமிழ்நாட்டின் மக்களுக்கு உண்மையை உணர்த்துவதே ஆகும்.

சரி...
உங்கள் கூற்று படியே கொள்வோம்!!

அப்படியெனில்,
தனி ஈழம் மட்டும் கேட்டது நியாயமா?

இலங்கையின் ஈழம் மற்றும் இந்தியாவின் தமிழகம் இவ்விரண்டையும் சேர்த்து "தனி தமிழகம்" என்று தானே நீங்கள் போராட்டத்தை ஆரம்பித்து இருக்க வேண்டும்?
இதற்கு பதில் கூற உங்களால் முடியுமா?

தற்போது தான் ஈழத்தமிழர்களான உங்கள் பார்வையில் தமிழகம் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பது தெரிகிறதா?

நீங்களே கொடுத்த வாக்குமூலம் ஒன்று இருக்கிறது..
அதையும் பேசுவோம்!



காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Apr 11, 2011 11:31 pm

அருமையான பதில்கள் நண்பரே... உங்களின் தர்க்க நியாயம் என்னை வியக்கவைக்கிறது..

தொடருங்கள்..





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Mon Apr 11, 2011 11:47 pm

இந்து wrote: ஆனால் காசுமீர் மக்கள், எந்த தருணத்திலும் தாங்கள் இந்தியர் என்று சொன்னதில்லை. அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை தங்களது சுதந்திரத்திற்காக இந்திய அரசிடம் போராடி வருகிறார்கள். இந்தியா காசுமீரை தனது காலணியாக அடக்கி வைத்துள்ளது. 1 குடிமகனுக்கு 10 இராணுவ வீரன் என்ற எண்ணிக்கையில் அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

யார் சொன்னது?
இந்திய காஷ்மீரில் உள்ள 85 % மக்கள் தாங்கள் இந்தியர் என்றே பதிவு செய்துள்லனர்.. இந்தியர் என்றழைக்கப்படுவதில் பெருமிதம் அடைவதாக கூறியுள்ளனர்..



காசுமீரிய மக்களின் சுயநிர்ணய உரிமையும் கசப்பான சில உண்மைகளும் - Page 2 Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக