புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
77 Posts - 36%
i6appar
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
2 Posts - 1%
prajai
அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_m10அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அருள் தரும் அம்மன் உலா! வீரமாகாளியே....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Apr 02, 2011 6:45 pm

அருள் தரும் அம்மன் உலா!


வீரமாகாளியே !
கரு.முத்து

உலக மகா சக்தியான அன்னைக்கு உருவம் ஒரு பெரிய விஷயமில்லை என்பதை பல நேரங்களில் அவளே நமக்கு உணர்த்தியிருக்கிறாள். பல புண்ணியத் தலங்களில் புற்றாகவும், மூங்கிலணையில் வெறும் கதவாகவும் இருந்து அருள்பாலிப்பவள், புதுக்கோட்டை மாவட்டம், குன்னாண்டார்கோவில் ஒன்றியத்தில் உள்ள பெரம்பூரில் உருவமற்று அரூபமாக, வெறும் நீள் சதுர கல்லாக இருக்கிறாள். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்து... முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் காடாக இருந்த அந்த இடம், இன்று அருள்மழை பொழியும் அற்புத ஆலயமாக மாறியிருக்கிறது.

இங்கு அன்னை இருக்கும் இடம் வெறும் சந்நிதியாக மட்டும் பார்க்கப்படவில்லை. நீதிமன்றமாக, காவல் நிலையமாக, மருத்துவமனையாக இன்னும் பல வடிவங்களில் திகழ்ந்து கொண்டிருக்கிறது. திருமணம் ஆகவில்லை, குழந்தை இல்லை, பக்கத்து வீட்டுக்காரன் செய்வினை வைத்துவிட்டான், கடன் வாங்கியவன் ஏமாற்றுகிறான் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு கவலையோடு வருகிறார்கள். அவர்கள் குறைகளையெல்லாம் களையும் மருத்துவராக, நீதிபதியாக, காவல் அதிகாரியாக திகழ்கிறாள் அன்னை.

மேற்கு பார்த்திருக்கும் ஒரு சிறிய ஆலயத்துக்குள் படர்ந்து வளர்ந்த ஒரு வேப்பமரத்துக்கு கீழே இருக்கும் அந்த நீள் சதுர கல்லில், ஐம்பொன்னாலான ஒரு சூலம் பதிக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே ஒரு திருவாட்சி. அதன் நடுவேயும் ஒரு சூலம். அதனையே அம்பாளாக அலங்கரித்து வழிபடுகிறவர்களுக்கு மனக் கண்ணில் அம்பாளை காணச் செய்கிறார்கள் அவளுக்கு காலம் காலமாக வழிபாடுகளை செய்து வரும் வேளாளர்கள். இது தவிர, இன்னும் பல சூலம் மற்றும் வேல்களையும் மண்ணில் செருகி வைத்திருக்கிறார்கள். இந்த அமைப்புதான் அம்மனின் கருவறை. அந்த நீள் சதுர கல்லும், சூலமும்தான் அம்மன் வீரமாகாளி.

மண்பானை செய்யும் வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அம்மனை பூஜிக்கும் உரிமை எப்படி கிடைத்தது என்பதில்தான் கோயிலின் கதை இருக்கிறது. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த இடத்தை ஆட்சி செய்த செம்முனி என்கிற முனி, மனித மாமிசம் தின்று ஊரையே காலி செய்து வந்தது. அதனால் வேகமாக குறைந்த தங்கள் குலத்தைக் காக்க, செம்முனியிடம் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள் மக்கள். அதன்படி இங்கு வசித்த வேளாளர்கள், தங்கள் குடும்பங்களில் இருந்து வருடத்துக்கு ஒரு பிள்ளையை மட்டும் முனிக்கு கொடுத்துவிடுவதாக முடிவானது.

கணவனை இழந்து, தன் ஒரே பிள்ளையுடன் வசித்து வந்த ஒரு விதவைத் தாயின் முறை அந்த வருடம் வந்து சேர, தன் பிள்ளையைக் காப்பாற்றும்படி வீரப்பூர் மலையில் இருக்கும் வீரமகாமுனியிடம் முறையிட்டாள் அந்தத் தாய். அக்கோரிக்கையை ஏற்ற வீரமகாமுனி, விஸ்வரூபம் எடுத்து வீரப்பூர் மலையில் இருந்து ஒரு காலை எடுத்து, பெரம்பூரில் இருந்த செம்முனியின் தலையில் ஒரே மிதியாக மிதித்தார். பூமிக்குள் புதைந்தது செம்முனி. செய்த தவறை உணர்ந்து வீரமகாமுனியிடம் மன்னிப்பு கேட்டது. அது புதைந்த இடத்தின் மீது, வீரப்பூர் மலையில் உள்ள தன் தங்கை காளியை அழைத்து வந்து, ஏற்கெனவே பெரம்பூரில் வேளாளர்கள் வழிபட்டு வந்த காளியுடன் இணைத்து, ஒரே சக்தியாக்கி, இங்கே காவல் தெய்வமாக நிறுத்தினார் வீரமகாமுனி. இதன் காரணமாகவே வீரமாகாளி என்ற பெயருடன் ஆண்டாண்டு காலமாக இங்கு அருளாட்சி செய்து வருகிறாள் அன்னை. மனித ரத்தம் குடித்து பழக்கப்பட்டதால் செம்முனியால் அதனை மறக்க முடியவில்லை. அதனால் தங்கள் வீட்டில் இருக்கும் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவன் ஒருவனை தேர்ந்தெடுத்து, வைகாசி மாதம் முதல் வெள்ளியன்று அவனின் தொடையைக் கீறி அதில் வழியும் ரத்தத்தை சோற்றில் கலந்து அதை பூமிக்குள் இருக்கும் செம்முனிக்கு படைக்கிறார்கள் வேளாளர்கள். இதனை 'பில்லிச்சோறு’ என்று அழைக்கிறார்கள்.

சென்னையில் இருந்து வந்திருந்தார்கள் சுடரொளி-சூர்யா தம்பதி. ''நான் பிறந்த வீடும் சரி, புகுந்த வீடும் சரி... நாத்திக குடும்பங்கள். ஆனா, எனக்கோ அம்பாளின் மீது அளவில்லாத பக்தி. அதிலும் இந்த வீரமாகாளினா... சரணாகதி அடைஞ்சிடுவேன். நல்ல வாழ்க்கையையும், முத்து முத்தான ரெண்டு பிள்ளைகளையும் எனக்கு கொடுத்தவ இவதான். இங்க வந்து போற ஒவ்வொருத்தரும் தங்களோட துன்பம் தீர்ந்ததை சொல்லும்போதெல்லாம்... என்னைப் பெத்தவள அவங்க புகழ்றது மாதிரி இனிக்கும்...'' என்று ஆத்தாள் இருக்கும் இடம் நோக்கி கையெடுத்தார் சுடரொளி. இப்படி வீரமாகாளியை தஞ்சமடைய வருகிறவர்கள் ஆயிரமாயிரம் பேர். திருடுபோன பொருளில், அடுத்தவர்கள் அபகரித்துக் கொண்ட சொத்தில் நான்கில் ஒரு பங்கை தருவதாக வீரமாகாளியிடம் வேண்டிக்கொண்டு சீட்டு எழுதி, படி கட்டினால்... மூன்று மாதத்துக்குள் நிச்சயம் கிடைத்து விடுகிறது; இங்குள்ள வனதேவதையின் கழுத்தில் மஞ்சள் நூலை கட்டிச் சென்றால்... மூன்று மாதத்துக்குள் திருமணம் நடக்கிறது; வேப்பமரத்தின் கிளைகளில் வளையலை மாட்டிவிட்டால்... வீட்டில் வளைகாப்பு நடக்கிறது; உடல் நலம் சரியில்லாதவர்களை அழைத்து வந்து இங்கு தங்க வைத்தால்... விரைவில் குணமடைகிறார்கள். இப்படி தன்னை நாடி வரும் அத்தனை பேரையும் அரவணைத்து அருள் செய்கிறாள் அன்னை வீரமாகாளி.



வைகாசி மாதம் நடக்கும் திருவிழாவில் முதல் வெள்ளி பில்லிச்சோறு, சனிக்கிழமை இரவு தேர், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கிடாவெட்டு, ஞாயிறும் திங்களும் பால்குடம் ஆகியவை முக்கியமானவை. இதற்காக லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கே திரளுவது... ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்!

கோயிலில் அன்று முறையில் இருந்த ராமசாமி வேளார் (வேளாளர் என்பதை இப்படித்தான் அழைக்கிறார்கள்), ''தப்பு செஞ்சவங்கள தண்டிக்கறலயும், தன்னையே கதினு வந்தவங்கள காப்பாத்தறதுலயும் இவள மிஞ்சி வேற ஒரு தெய்வமில்லீங்க. யாராலயாவது வஞ்சிக்கப்பட்டவங்க, பாதிக்கப்பட்டவங்க இங்க வந்துட்டாங்கனு தெரிஞ்சாலே... அவங்களை ஏமாத்துனவங்க உடனே அதுக்குண்டான பரிகாரத்தை தேடிப்போய் செஞ்சுடுவாங்க. தன் புள்ளைகளோட எல்லா வேண்டுதல்களையும் கனிவோட நிறைவேத்தி வைக்கற ஆத்தா இந்த காளி!'' என்றார் பரவசத்துடன்!

எப்படிச் செல்வது?

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளம் மற்றும் கிள்ளனூர் இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது பெரம்பூர். புதுக்கோட்டையில் இருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் திருச்சி, தஞ்சாவூர் சாலையில் உள்ள செங்கிப்பட்டி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மற்ற நாட்களில் பேருந்து வசதி குறைவு. புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள ஆதனக்கோட்டை எனும் ஊரில் இறங்கினால் ஆட்டோ கிடைக்கும்.

கோயில் திறந்திருக்கும் நேரம் காலை ஆறு முதல் இரவு ஒன்பது மணி வரை. கோயில் தொலைபேசி எண் 04339 - 248300

நன்றி விகடன்



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அருள் தரும் அம்மன் உலா!  வீரமாகாளியே.... 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக