புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
13 Posts - 25%
prajai
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
2 Posts - 4%
Rutu
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
1 Post - 2%
viyasan
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
1 Post - 8%
Rutu
ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_m10ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்


   
   

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 3:29 am

First topic message reminder :

மொழி பெயர்ப்பாளரின் நன்றியுரை

திரு. கர்மயோகி அவர்களின் SPIRITUALITY & PROSPERITY PART – I என்ற ஆங்கில படைப்பை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு எனக்கு அனுமதி அளித்ததிற்கு என்னுடைய நன்றியறிதலை முதலில் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிப்பெயர்ப்பை புத்தகமாக வெளியிடுவதற்கு வெளியிட முன்வந்த கடலூர் தியான மையத்திற்கும், இம்மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்திற்கு ஏற்றபடி திருத்தம் செய்து கொடுத்த திரு. N.அசோகன் அவர்களுக்கும், தமிழாக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் தன்னுடைய தமிழாக்கப் பிரதிகளை படிப்பதற்கு எனக்கு வழங்கிய ராணிப்பேட்டை தியான மைய பொறுப்பாளர் திரு. S. லஷ்மிநாராயணன் அவர்களுக்கும் மற்றும் பல வகையில் உதவிய சக அன்னை அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னால் முடிந்தளவிற்கு இம்மொழி பெயர்ப்பினை எனக்குத் தெரிந்தளவிற்கு செய்துள்ளேன். அதையும் மீறி மூலத்தின் கருத்துச் சிறப்பு சில இடங்களில் சரியாக வெளிப்படவில்லை என்று வாசகர்களுக்கு மனதில் பட்டால் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களுக்கு இப்படி எழுத்து மூலமாக, இச்சிறு சேவையை செய்ய முடிந்ததிற்கு என் நன்றியறிதலை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.

M. மணிவேல்




ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:02 am

75. மனிதனின் பர்சனாலிட்டி

சாதாரணமாக அன்றாட உரையாடலின் போது, பொதுவாக ஒருவரின் உடல் அமைப்பையும் அழகையும் குறிப்பிடும் வகையில், உயரமானவர், அழகானவர், வசீகரமானவர் என்ற சொல்லை உபயோகிக்கிறோம். பர்சனாலிட்டி என்ற சொல் ஒருவருடைய மனவலிமை, குணநலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிற உள்ளே உள்ள இயற்கையான பண்புகள், மற்றும் திறனைப் பற்றித்தான் குறிக்குமேயன்றி, வெளித்தோற்றமல்ல. வெளித் தோற்றத்தை விவரிக்க விரும்பினால் "இவர் நல்ல உடற்கட்டு கொண்டவர்" என்று சொல்லலாம். உடற்கட்டு என்பது வெளித்தோற்றத்தை மட்டும் குறிக்கிறது. ஆன்மா மனிதனுக்குள்ளே ஆழ்ந்த மையத்தில் உறைகிறது. அங்கிருந்து வரும் அழைப்பு அதிக சக்தி வாய்ந்தது.

பழக்கங்கள் என்பது வெளியில் தெரியும் நடத்தையைக் குறிக்கும். அது ஒருவர் தன் மனதில் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிவிக்காது. வெளிப்புற பழக்கங்கள் உள்ளே உள்ள உண்மையான குணங்களை பிரதிபலிப்பதே நடத்தையாகும். பழக்கங்கள் வெளியில் தெரியும். நல்ல நடத்தை உள்ளே தெரியும். இரண்டுமே மனிதனின் ஜீவனின் மேல்மட்டத்திலிருந்து வரக்கூடியவை. முக்கியமான பிரச்சனைகளைச் சந்திக்கும் பொழுது இவை இரண்டுமே உதவிக்கு வராது. பழக்கங்கள், மற்றும் நடத்தைகளுக்குக் கீழே முறைப்படுத்தப்பட்ட சுபாவம் உள்ளது. சுபாவமானது, வலிமை, திறமை, ஞாபக சக்தி, விடாமுயற்சி இவைகளை வெளிப்படுத்துகிறது. இவைகள் யாவும் பலநிலைகளில் பலவித தீவிரத்துடன் முறைப்படுத்தப்பட்டுள்ளன. சுபாவத்தைக் கடந்து மனிதனின் முறைப்படுத்தப்படாத சக்தி உள்ளது. அந்த சக்தி, சுபாவம் கைகொடுக்காதபோது, புதிய பிரச்சனைகளைச் சந்திக்கத் தயாராகுகிறது.

ஆன்மாவை அழைத்தல் என்பது மேற்கண்ட நிலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து அழைப்பதாகும். ஆழத்திலிருந்து வரும் அழைப்பு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். நமது கட்டுப்பாட்டுக்குள் அடங்காத எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் பழக்கம், முதல்நிலையாகும். சிந்திப்பது, அடுத்த நிலையான நடத்தையாகும். நமது பண்புகளைக் குறிக்கும் எண்ணங்களின் ஆழத்திலிருப்பது சுபாவமாகும். நாம் நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால், சுபாவத்தின் நிலைக்குச் சென்று ஆன்மாவை அழைக்க முடியும். அது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஆன்மாவை அழைப்பதற்கு மனித இயல்பைக் கடந்து, எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். மனிதன் தன்னால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சனையை எதிர்கொள்ளும் பொழுது, சுபாவமும் கைவிட்ட நேரத்தில், அங்கே ஆன்மாவை அழைத்தால் நமக்குத் தெரிந்ததும் தெரியாததுமான பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

நம்முள் இறங்கும் அமைதியின் சக்தி அழைப்பின் ஆழத்தைத் தெரிவிக்கிறது.
யோகத்தில் அழைப்பை விடுப்பது மனிதன் இல்லை. விழித்துக் கொள்ளும் ஆன்மாதான் அழைப்பு விடுக்கிறது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:03 am


76. ஒரு பரிசோதனை - ஒரு உரையாடல்


இப்பரிசோதனைக்கான நிபந்தனைகள் நம்பிக்கையை ஆன்மாவிற்கு மாற்றுவது, அதிகபட்ச வேலைத்திறன் மற்றும் மௌன சக்தி என்று புரிந்து கொள்கிறேன்.

நம்பிக்கையை ஆன்மாவிற்கு மாற்றுவது என்றால் என்ன என்பதைப் பற்றி புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். நாம் மனதாலும் உணர்வாலும் செயல்படும் வழிகளில் நம் நம்பிக்கையை வைத்துள்ளோம். இந்த வழிகளின் மீது வைத்துள்ள நம்பிக்கை முழுவதுமாக ஆன்மாமீது திரும்ப வேண்டும். உதாரணமாக, உங்கள் உற்பத்திப் பொருளுக்குள்ள நற்பெயர்மீது நம்பிக்கை வைத்திருப்பீர்கள். உங்கள் பொருள் தரம் குறைந்ததாக இருந்தாலும், ஆன்மா அதையும் மீறி செயல்பட முடியும் என்று நம்ப வேண்டும்.

இது உண்மை என்பதை நான் பலமுறை என்னுடைய பொருட்களிலும் மற்றவர்களுடைய பொருட்களிலும் பார்த்திருக்கின்றேன். எப்பொழுதும் சிறந்த பொருளுக்கே பரிசு கிடைப்பது இல்லை. சில நேரங்களில் இரண்டாவது மூன்றாம் தரமுள்ள பொருள்கூட பரிசுகளை தட்டிச் செல்கின்றது. அது ஒரு அனுபவம் என்பதை நான் அறிவேன்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் ஆன்மாவின் செயல்பாட்டின் மீது, உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் உங்களைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எந்தவிதமான ஆராய்ச்சியையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், ஆன்மாமீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்பதாகும். அதுவே சிறந்தது. அது ஆன்மாமீது ஆன்மாவுக்காகவே வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கையாகும்.

அந்த மாற்றம் நிகழும். ஆனால் நிலையானதாக இருக்காது. அந்த மாற்றம் விட்டு விட்டு நிகழும்.

நம்பிக்கை உள்ள போதுதான், நீங்கள் செயல்பட வேண்டும் என்பதை முக்கியமாகக் கருதவேண்டும். நிலையான நம்பிக்கையிருந்தால் அதிகபட்சப் பலன் கிடைக்கும்.

மாற்றம் விட்டு விட்டு நிகழ்ந்தாலும் நம்பிக்கையால் செயல்படும் பொழுது, குறைந்த பலனாக இருந்தாலும், அது இப்பொழுது கிடைக்கும் பலனைவிட, அதிகமாகக் கிடைக்கும் என்று நம்பலாம்.

உங்கள் விஷயத்தில் தற்பொழுது விற்பனை ஆறு முதல் ஏழு கோடிகளுக்கு இடையில் உள்ளது. கம்பெனிக்கு சமநிலை எட்டு கோடியில் வரும். பிறகு குறைந்தபட்ச எட்டு கோடி அதிகபட்சமாக 80 கோடியாகவும் இருக்கும்.

நீங்கள் நல்ல நேரம், எண் கணித சாஸ்திரம், வாஸ்த்து போன்றவைகளை மறுக்கிறீர்கள்.

இவைகள் எல்லாம் கர்மத்தின் பயனால் ஏற்பட்ட பலன்களே, என்பதால் ஜாதகத்தில் கண்டுள்ளபடி அப்பலன்களை அளிக்கும். ஆன்மா இவற்றையெல்லாம் கடந்து நிற்கும். விருப்பம் உங்களுடையது. இவைகளில் ஏதாவது ஒன்றின் மீது நம்பிக்கை இருக்கும் வரையில், நீங்கள் ஆன்மாவை அழைக்க முடியாது. இந்த ஆராய்ச்சி உங்களுக்குப் பயன்படாது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:03 am


77. ஒரு ஆராய்ச்சி - முழுமையான முன்னேற்பாடுகள்


இப்பொழுது நீ உன் நிலையைக் கடந்து ஆன்மா மீது மாற்றம் நாடுபவராக உயர்ந்த நிலைக்கு வரத் தயாராகிவிட்டாய். அடுத்த கட்டம், வேலையில் பலதரப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள முன்னேற்பாடுகள் செய்வதாகும்.

நான் என் உள் அமைதியின் மூலம், என் நிலையைக் கடந்து ஆன்மாவை அழைக்கும் நிலைக்கும் மாறிவிட்டேன் என்பதை அறிவேன்.

மனம் பழைய சந்தேகங்களை நாடாமலும், கேள்விகளை எழுப்பாமல் இருப்பதும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருத்தலும், ஆன்மாவை அழைக்கும் அறிகுறிகளாகும்.

நான் ஏற்கனவே கூறியது போல் அமைதி வந்தும் போவதுமாக உள்ளது. அமைதி இருக்கும் பொழுது இந்த ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டுமென்று கூறுகிறீர்கள். அமைதி ஏன் விலகுகிறது?

நல்ல நேரம், உங்கள் பொருளுக்கு மார்க்கெட்டில் உள்ள பெயர் என்று இவற்றை நாடும் பொழுது, அமைதி விலகுகிறது. நீ அதிலிருந்து விலகி வரவேண்டும்.

நீங்கள் ஒருமுறை, முழுமையான ஏற்பாடு என்பது, நான் பழைய தவறுகளை செய்யாமல் இருத்தலும், காலந்தவறாமை, சுத்தம், மௌன உறுதி, முறைப்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதாகும் என்று கூறினீர்கள்.

ஒரு வேலையை சிறப்பாக முழுமையானதாக நிறைவேற்றுவதற்குத் தயாராக இருக்கவேண்டுமென்று கூறுகிறேன். அதுவே மிகச் சிறந்தது. குறைந்தபட்சமாக, உன்னுடைய உச்சகட்டத் திறமையை சிறிதளவும் விட்டுவிடாமல், வேலையில் வெளிப்படுத்த வேண்டும். இது இன்றியமையாததாகும்.

நான் என் வேலையை சிறு சிறு பகுதிகளாக, ஐந்து அல்லது பத்து பிரிவுகளாக பிரித்து, இந்த செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்துகிறேன்.

அது சிறந்த இலட்சியம். இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும் என்று யாராலும் கூற முடியாது.

என்னுடைய முந்தைய முயற்சிகளைவிட, அது சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் மீண்டும் கூறுகிறேன். இது நல்லது. ஆனால் உங்களுடைய சக்திகள் எல்லாம், செலவழிக்கப்பட வேண்டும். இந்த மனமாற்றத்தினாலும், முழுமையான முன்னேற்பாடுகளாலும், உன்னுடைய சூழலில் மாறுதல் ஏற்பட்டுள்ளதைக் காண்பீர்கள். வேண்டாத முரண்பாடான அறிகுறிகள் மறைந்து, உறுதியான நிச்சயமான பாஸிட்டிவ் சகுனங்கள் எழும். வேலையை நிறைவேற்றுமுன், அது முழுமையான உறுதியான உடன்பாடாக மாறவேண்டும். இப்பொழுது எஞ்சியிருப்பது வேலையை நிறைவேற்றுவது மட்டுமே.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:04 am

78. ஒரு ஆராய்ச்சி - மௌனமான செயல்பாடு

உன் மனநிலையை ஆன்மாவுக்கு மாற்றிக் கொண்ட பிறகு, விற்பனைக்காக எடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியில் இறங்கிவிட்ட நீ, இப்பொழுது மௌன சக்தியின் மூலமாக செயல்படத் தயாராகிவிட்டாய்.

விற்பனை நடக்கும் இடத்தில் நான் பேசக்கூடாது என்கிறீர்களா?

அப்படி இல்லை. பேசும் பொழுது, விலை, பேரம் பேசுதல், விலையில் தள்ளுபடி போன்ற விஷயங்களில், நீ முதலிலேயே அதைப் பற்றி பேசக்கூடாது என்கிறேன். ஏனெனில், அது உன்னுடைய முன்கூட்டிய எதிர்பார்ப்பைத் தெரிவித்துவிடும்.

அப்படியானால் நான் தகுதிக்கு மீறிய சலுகைகளை கேட்கக்கூடாது என்கிறீர்களா?

ஆம். அது மட்டுமல்ல. உன் மனம் அமைதி அடைந்து, தேவையானதற்கு மட்டும் பதில் சொல்வதாகவும், சந்தர்ப்பத்திற்கு தகுந்த பதில் மட்டும், சொல்லக்கூடியதாகவும், இருக்க வேண்டும்.

சில நேரங்களில் நியாயமற்ற முறையில் பேரம் நடக்கும் போது, அனுகூலமாக இல்லாத சூழ்நிலையில், நான் என் தேவையின் அவசியத்தை முன்னிட்டு, அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

அப்படிப்பட்ட நிலைகளில் பலன் அதிகமாகவே ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆம், மிகவும் மெச்சத்தகுந்ததே. அதை நான் கவனிக்கவில்லை.

எல்லாம் நல்லபடியாகவே போகும். நல்லபடியாக, திறமையாக செயல்பட்ட பின்பு, எழுத்து மூலமாக உத்திரவுகள் வரும் வரை, மனம் அமைதியாக இருக்காது.

அது மிகவும் கடினமானதுதான்.

நம் விஷயம் கூடி வருவதற்கு முன்னால், நம் மனம் அதைப்பற்றிய சிந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாமல், மன உறுதியுடன் இருக்க வேண்டும். நமது இந்த முடிவு நமக்கு வேறு பல வேலைகளை கொண்டு வந்து அதில் மூழ்கச் செய்து நாம் சாதித்த நல்ல விற்பனையை மறக்க வைக்கும்.

ஆகவே மாற்றம், முழுமையான முன் ஏற்பாடுகள், மௌனத்தின் மூலம் செயல்படுவது ஆகியவை எல்லாம் எனக்கு நல்ல பலனை அளிக்குமல்லவா?

நான் ஏற்கனவே உனக்கு கூறியது போல், இந்த மூன்று நிலைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்தால், உன்னுடைய மாற்றம் நிலையற்றதாக விட்டு விட்டு நிகழ்ந்தாலும், குறைந்தபட்சப் பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

நாம் அதிகபட்ச பலன்களை குறிவைத்து நாடுவோம். அதே சமயம் பொறுமையாகவும் இருப்போம்.

அதிகபட்ச பலன், ஒருவருடைய பர்சனாலிட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:04 am

79. ஒரு அடையாளமாக எடுத்துக் கொண்ட பரிசோதனையின் மூன்று நிலைகள்

ஒருவர் தன் வாழ்வில் ஆன்மாவை அழைக்கும் வழியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுது, வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறுகிறது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் நிலை மாறி, தோல்வியற்ற வெற்றியைக் காணமுடியும். இந்த உயர்ந்த உண்மையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு, நான் ஒரு பரிசோதனையை அடையாளமாக செய்து பார்க்கும்படி, கருத்துத் தெரிவித்தேன். இது நம்முடைய சாதாரண மனத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், நம்பும்படியாகவும் இருக்காது. நான் ஏற்கனவே கூறியபடி, இந்தியாவில் ஒரு தொழிலும் நசிந்து போகாது. அரசாங்கம் வேலைக்கு உத்திரவாதம் கொடுக்கும் பட்சத்தில், இந்தியா நடுத்தர வருமானம் உள்ள நாடாக மாறும். 2020 திட்டத்தின் குறிக்கோள், வெறும் கனவாக இருக்காது. அது குறிக்கோளைத் திட்டமிட்ட காலத்திற்குள்ளே சீக்கிரமாக அடைந்துவிடும். காலந்தவறாமை, அபரிமிதமான சுபிட்சத்தைத் தரும். ஆன்மா வெளிவரும் பொழுது, ஆன்மாவின் முன்னால் கர்மம் கரைந்துவிடும். இம்மாதம் நஷ்டத்தில் இருக்கும் கம்பெனி, அடுத்த மாதம் இலாபத்தை ஈட்டும். சுருங்கச் சொன்னால் முடியாதது என்பது எதுவும் முடியும் என்ற நிலை ஏற்படும்.

இந்தியன் மற்றவரைக்காட்டிலும், இதை அதிக திறமையுடன் செயலாற்றக் கூடியவன். ஏனென்றால் அவனது உடலில் ரிஷிகளின் ஒளி பரவியுள்ளது. ஒரு காலத்தில் அவன் முழுமையான மெய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான். இந்திய நாட்டில் ஜனநாயகப் பண்பின் வேர் ஊன்றியிருந்தது.

இந்த ஆராய்ச்சியின் சக்தி, வாழ்விலிருந்து ஆன்மாவுக்கு மாறுவதிலும் இயற்கையிலிருந்து ஜீவியத்திற்கு மாறுவதிலும், மனத்திலிருந்து நம்பிக்கைக்கு மாறுவதிலும் அடங்கும்.

இந்த சக்தியின் மகத்துவம், ஒருவருடைய திறமையின் சக்தியெல்லாம் தீர்ந்தவுடன் தெரியும்.

பலனின் அளவு மௌனமாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், அமைதி கலந்த பொறுமையுடன் காத்திருப்பதில் உள்ளது.

மேலே விவரிக்கப்பட்ட ஆன்மீகக் கருத்துக்களை, சாதாரண மொழியில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும்படியாக சொல்லலாம். மற்றவர் அதிர்ஷ்டம் பெறவேண்டுமென்று ஒருவர் நெஞ்சம் நல்லெண்ணத்தால் நிரம்பி அவருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் பொழுது தானும் சந்தோஷப்படுகிறார் என்றால், அப்படிப்பட்டவரின் ஆன்மா உள்ளிருந்து விழித்துக் கொள்ளும். அவரை விட்டு அகலாது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:04 am

80. ஆன்மாவுக்கு மாறுவதின் பல பரிமாணங்கள்

ஒரு வாசகர் தன்னுடைய விற்பனைத் தொழிலில் ஆன்மாவை அழைத்ததினால் அன்றே அவருக்கு விற்பனையில் நல்ல பலனைக் கொடுத்தது என்று எழுதியிருந்தார். இன்னொருவர் ஆன்மாவை அழைத்ததால், உள்ளுறை அமைதியையும், இனிமையையும் கொடுத்தது என்று தெரிவித்தார். இவைகள் லௌகீகத்திலும், ஆன்மீகத்திலும் ஆன்மாவை வெற்றிக்கரமாக அழைத்ததைக் குறிப்பதாகும். இன்னொரு வாசகர், ஆன்மாவை அழைக்கும் முறை தெரியாததால், இதை தன்னால் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். ஆன்ம அழைப்பு என்பது, நாம ஸ்மரணையா என்று கேட்டிருந்தார். நல்லதே நடக்கும் என்பவர்களால் அதை சுலபமாக பின்பற்ற முடியும். நம்பிக்கையற்றவருக்கு, தோல்வி மனப்பான்மையே குறுக்கே நிற்கும்.

சோதிடம் முதலானவைகள் போற்றத்தக்கது என்ற பரம்பரை பழக்கத்தை விடாமல் பற்றி நிற்பது, ஆன்மாவை அழைப்பதற்குத் தடையாகும். ஒருவர் சடங்குகளை விட்டுவிட பிரியப்பட்டாலும், அவர் வீட்டை ஒழுங்கற்றதாகவும் ஒட்டடை முதலானவை படிந்து அழுக்காவும் அசுத்தமாகவும் வைத்திருப்பார். ஒழுங்கீனமும் அழுக்கும் ஆன்மாவுக்கு தடைகளாகும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் என்றால் உயர்ந்த நிலையில் பரிசுத்தமாக வைத்திருப்பதாகும். ஒழுங்கு மிக மிக முக்கியம். வீட்டில் கூச்சலிடுவதும், சத்தமாக பேசுவதும் அறவே விலக்கப்பட வேண்டும். ஒருவர் மெதுவாக பேச வேண்டும்.

மனம் நல்ல நேரத்தை நினைக்காமல் இருக்க சம்மதித்தாலும், அது மனத்தின் ஆழத்தில் தவிர்க்கமுடியாத நிலையில் அதிலே நிலைத்து நிற்கும். ஆன்மா, சோதிடத்தை விட சக்தி வாய்ந்தது என்று அறிவது, மனம் ஆன்மாவுக்கு மாறுவதற்கு உதவிடும். மாற்றம், எந்தவிதமான சமரசத்தையும் ஏற்காது. ஏனெனில் அது சிறியதிலிருந்து பெரியது வெளிப்படுவதாகும். அடிக்கடி என்ன நிகழ்கிறது என்றால், மனம் மாற்றத்தை நாடுவதில் ஊசலாடிக் கொண்டே இருக்கும். நிலையாக நிலைத்து இருக்காது. ஆனால் தற்காலிக மாற்றத்திற்குக் கூட, ஆன்மா மனத்தின் தூய்மையை வேண்டுகிறது. உணர்ச்சிபூர்வமாகவும், மனதாலும் எல்லாவிதமான மூடநம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டுமென்று ஆன்மா எதிர்பார்க்கிறது.

ஆன்மா வாழ்க்கையைவிட பெரியது என்று ஏற்றுக் கொள்வது நமக்கு ஆன்மாவிற்கு மாறுவதற்கு உதவும். அந்த அறிவு நம்மை உயர்த்தவும் செய்யும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:05 am

81. ஆன்மா நம் அழைப்புக்காகக் காத்திருக்கிறது - மனிதன் ஆன்மாவை அழைப்பானா?

ஆன்மாவை அழைப்பது கடினம் என்று பலர் கூறியுள்ளார்கள். இதில் பெரிய இரகசியம் என்னவென்றால், ஆன்மா மனிதனிடத்தில் அதிக அளவில் அன்பு வைத்து, அவன் தன்னை அழைக்கமாட்டானா என்று, ஆர்வமுடன் காத்திருக்கிறது. உண்மையில் அது தன் உயர்ந்த அடிப்பீடத்திலிருந்து எழுந்து வந்து, மனிதனின் வீட்டுக்கதவு அருகில் நின்று கொண்டிருக்கிறது. மனிதன் தன் கவனத்தை ஆன்மா மீது செலுத்துவானா? ஆன்மா மனிதனிடத்தில் வசீகரமாக இருப்பதுபோல், மனிதனும் ஆன்மாவிடம் வசீகரமாக இருப்பானா? ஒருவர், ஏன் ஆன்மா இவ்வளவு தூரம் கீழே இறங்கி வந்து அவனுள் பிரவேசிக்காமல், அவனுடைய அழைப்புக்காகக் காத்திருக்கிறது என்று, கேள்வி எழுப்பலாம்.

ஒரு காலத்தில், ஒருவர் ஆன்மாவின் கடைக்கண் பார்வைக்கு, வருடக்கணக்கில் தியானத்தில் அமர்ந்து இருக்க வேண்டியதாக இருந்தது. இப்பொழுதோ, ஆன்மாவின் சக்தி பூமியின் சூழலுக்கு இறங்கி வந்து, தன்னை மனிதன் அணுகுவதற்கு சுலபமாக்கிக் கொண்டுவிட்டது. மனித குலத்தில் ஏற்புத்திறன் அதிகரித்து வருவதால், மனிதன் ஆன்மாவை அழைக்காமலேயே, ஆன்மாவே அவன் வாழ்வில் வந்து செயல்படும் நேரம் வரும். இதுவரையில் அப்படிப்பட்ட நேரம் இன்னும் வரவில்லை. ஆன்மா இறங்கி வரும் பொழுது, ஏற்புத்திறனை வெளிப்படுத்தக்கூடிய மக்களை அதிக அளவில் உருவாக்கக்கூடிய ஒருவர் அந்த நேரத்தை வரும்படி செய்வார்.

ஆன்மாவை உள்ளே அழைப்பதில், உண்மையில் மனிதனுக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லை. எது கடினம் என்றால், மனிதன் இதுவரையில் தன் மனத்தால் போற்றி வளர்த்து வந்த வாழ்வின் வழிமுறைகளான, தேசத்தைவிட குடும்பம் முக்கியம், மக்களிடம் விசுவாசத்தை விட சொத்தின் மீது விடாமுயற்சியுடன் இருப்பது, போன்றவற்றை விட முடியாது என்பதுதான். நாம் இன்றைய நாளில் சமூகத்தின் பண்புகளுக்கு கீழ்ப்படிதலாக இருக்க விரும்புகின்றோம். 38 வயதான நல்ல சம்பாத்தியமுள்ள ஒருவருடைய மகள், தன்னுடைய பெற்றோர்கள் அவள் திருமணத்தில் சிறிதும் அக்கரை காட்டாமல் இருக்கும் போதும், அவள் பெற்றோர்கள் மீது அதிக பாசம் வைத்திருந்தாள். நன்றியில்லாத, கடமை உணர்வு இல்லாத பெற்றோர்கள் மீது பாசம் இருக்கும் வரை, அவளால் ஆன்மாவை அழைக்க முடியாது. உலகத்தின் தாக்கம் நம்மேல் மிக அதிகமாகவுள்ளது. பல ரூபங்களிலும் வருகிறது. மனிதன் தன் வாழ்வை விட ஆன்மாவை அதிகமாக வசீகரிக்கக் கூடியவனாக இருப்பானா?



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:05 am

82. வாழ்வில் ஆன்மா செயல்படுவது

அநேக வாசகர்கள் ஆன்மாவை எப்படி அழைப்பது என்று கேள்வி கேட்டுள்ளார்கள். இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. இதன் வழிமுறைகள் புரிந்துகொள்ள முடியாதது அல்ல. அது ஒருவருடைய ஜீவியத்தை உயர்த்த வேண்டுமென்பதேயாகும். நாம் கேட்பதால் மட்டும் கிடைக்கக்கூடியது அல்ல. ஒவ்வொருவரும் அதை அடைய வேண்டுமென்று, தீவிரமாக முயன்றால், மிகச் சிறந்த முறையில் அடைய முடியும். ஆன்மாவை அழைப்பதற்கு ஒரு நாள் முழுவதையும் ஒதுக்கி இந்த முறையில் உள்ள சக்தி மற்றும் கஷ்டங்களை எல்லா நிலையிலும் ஆராய்ந்து, ஜீவியத்தின் நிலையை உயர்த்திக் கொள்ளும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள, 24 மணி நேரமும் அமர்ந்திருக்க வேண்டுமென்பதே நான் சொல்ல விரும்பும் யோசனையாகும்.

ஒரு நாளுக்கு மேல் ஒதுக்குவதற்கு முன்னால், அந்த வழியில் உள்ள ஒவ்வொரு தடைகளையும் அறிந்து அதை அகற்றுவதற்கு மனதை தயார்படுத்திக் கொள்வது முக்கியம். ஆன்மாவுக்கு மாறுவதற்கு வழிமுறைகள் என்னவென்றால், நம்புவது, புரிந்து கொள்ளுதல், மற்றும் மாறுவது என்பதாகும். ஆன்மா மனதைவிட சக்தி வாய்ந்தது என்று நீ ஏற்றுக் கொள்கிறாயா என்று நீ உன்னையே கேள். அப்படி நம்பமுடியவில்லையென்றால், ஆன்மாவிற்கும் மனதிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, நம்பிக்கை உண்டாக்கும் வரை அதை புரிந்து கொள்ள முயற்சி செய். எவ்வாறு உடலைவிட மனம் சக்தி வாய்ந்ததோ, அதுபோல் மனத்தைவிட ஆன்மா சக்தி வாய்ந்ததாகும். ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டதும் அந்த நம்பிக்கையை தீவிரப்படுத்தினால், ஆன்மாவின் உயர்ந்த தன்மையை உன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் காணமுடியும்.

சரியாகப் புரிந்து கொள்ளுதல், நம்பிக்கையை வலுப்படுத்தும். அமைதியும் மௌனமும் உள்ளே ஏற்படுவதற்கு, ஏற்கனவே தயாராகிவிட்டது என்பதை அறியலாம். தற்செயலாய் நடக்கக்கூடியது என்று எண்ணாமல், உள்ளே வேலையை ஒரு மனதாய் தீவிரமாக திடமான முயற்சியுடன் ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் அடுத்த கட்டமான உள்ளுரை உயர்ந்த அமைதிக்கு மாற்றவேண்டும். உள்ளே ஏற்பட்ட அமைதி, நீ உன்னுடைய எண்ணத்தை உயர்நிலைக்கு மாற்ற தயார் நிலைக்கு வந்து விட்டாய் என்பதைக் குறிக்கும்.

வெறுமனே சும்மா உட்கார்ந்திருக்காதே. ஏதாவது ஒன்றில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதை முழுமையாக செயல்படுத்து. அப்படி செயல்படும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் எண்ணத்தை மௌனத்திற்கு மாற்றம் செய். அது நகரும். வாழ்வு உன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப இனிமையாக வளைந்து கொடுக்கும். பொறுமையுடன் காத்திரு. ஒரே நாளில் சூழல் முற்றிலும் மாறி உனக்கு சாதகமாகவும் இனிமையானதாகவும் அமையும். இப்பொழுது உனக்கு எப்படி செயல்பட வேண்டுமென்று புரியும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:06 am

83. ஒருவருடைய ஆன்மாவில் நம்பிக்கை

நம்மில் பெரும்பாலானோர் உண்மையின் மீது நம்பிக்கையிருப்பது போல் ஆன்மாவிடமும் பொதுவாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். இக்கட்டான நிலையில் பொய்மையைவிட வாய்மைதான் நம்மைக் காப்பாற்றும் என்று எத்தனை பேர் நம்புகிறார்கள்? நாம் உண்மை மீது வைத்திருக்கும் மதிப்பு வெறும் உதட்டளவுதான். ஆன்மா மீது நம்பிக்கையும் அத்தகையதே. நாம் ஆன்மாவின் மீது நம்பிக்கையில்லை என்பதல்ல. ஆனால் அது நம் வாழ்வில் சாதனைகளை புரியும் அளவிற்கு தூய்மையான நம்பிக்கைக்கு உயரவில்லை.

முதலாவதாக ஒருவர், தன்னைத் தானே உண்மையில் மனதைவிட ஆன்மாவின் சக்தி உயர்ந்தது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளாரா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஆன்மாவை நம்புபவராக இருந்தால் அவர் அந்த நிலையிலிருந்து முழுமையான நம்பிக்கையை உயர்த்த வேண்டும். நம்பிக்கையில்லாத பட்சத்தில் அவர் பூரணமான நம்பிக்கைக்கு உயர்த்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நம்பிக்கையை உயர்த்திக்கொள்ள முடியாதவர்களுக்கு அதை உயர்த்திக் கொள்வதற்கான வேறு வழிமுறைகள் உண்டா? அது கடினமானதுதான். ஆனால் கடின உழைப்புக்கு முடியாதது அல்ல. மனம் சக்தி வாய்ந்தது என்றும் அதைவிட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்றும் அறிவார். ஆன்மா நம்மில் எல்லோரிடமும் உறங்கும் நிலையில் உள்ளதால், இதை புரிந்து கொள்வதற்கான முயற்சி ஆன்மாவை தூண்டுகிறது. அவர் தனக்குள்ளே தொடர்ந்து சிந்தித்த பின், மனதை விட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்று உணர்ந்து கொண்டதும், மனம் அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்கிறது. ஒரு முறை மனம் இதை புரிந்து கொண்டால், நம்பிக்கை ஏற்படுவது சாத்தியமே. இந்த புதிய அறிவின் தெளிவில் உள்ளே சென்று ஒருமுகப்படுத்த வேண்டும். அது நம்பிக்கை ஏற்படுவதற்கு வாய்ப்பாகும்.

நம்பிக்கையின்மையை விட நம்பிக்கை உயர்ந்தது, ஆனால் நம்பிக்கை காரியங்களை நடத்தாது. அவர் மேலும் நம்பிக்கையை சிரத்தையின் நிலைக்கு உயர்த்த முயற்சிக்க வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டுமென்ற ஒரு சிறு விருப்பமும் நிறைவேறுவதைக் காண்பார். இதுவே அவருக்கு சிரத்தை ஏற்பட்டதற்கு அறிகுறி. ஆன்மாவின் சக்தியைப்பற்றி மேலும் மேலும் அதிக அளவில் தெரிந்துகொள்வது, நம்பிக்கை ஏற்படுவதற்கு சாத்தியமாகிறது. நம்பிக்கை என்பது ஒரு துருப்புச்சீட்டு. அது அங்கு இருக்க வேண்டும் அல்லது உருவாக்கப்பட வேண்டும். அது அங்கு இருந்தால் அதை அதன் உயர்ந்த வெற்றி நிலைக்கு உயர்த்த வேண்டும். விடாமுயற்சி நம்பிக்கையை உருவாக்குகிறது என்று அன்னை கூறுகிறார். நம்பிக்கை பிறக்கும்வரை ஒருவர் விடாமுயற்சியுடன் முயன்று, அதை அதனுடைய முழுசக்திக்கு உயர்த்த வேண்டும். வாழ்வில் சாதனை படைப்பதற்கு, மேலும் வழிகள் உள்ளன. ஆனால் நம்பிக்கை மட்டும் திருப்பு முனையாக வாழ்வின் முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடியது.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 29, 2011 4:06 am

84. பகுத்தறிவை விட ஆன்மா சக்தி வாய்ந்தது

இது வெளிப்படையான உண்மை. இதைப்பற்றி அறிவிக்க வேண்டியது ஒன்றுமில்லை. நாம் செயல்படும்போது அது தெள்ளத் தெளிவாகத் தெரிவதில்லை. நாம் பகுத்தறிவைக் கொண்டு செயல்படுவதாக நினைக்கிறோம். பகுத்தறிவை விட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்று நமக்குத் தெரியும். ஆனால் செயலில் இறங்கும் பொழுது பகுத்தறிவைத்தான் நாம் சார்ந்திருக்கிறோம். வேறு வழியின்றி அதை நாடுவதையே நினைக்கிறோம்.

நம்முடைய வாழ்வில் சிறந்த சாதனை ஒன்று இருக்குமானால், அதை எண்ணிப் பார்த்தால் பத்து நிகழ்வுகளில், ஒன்பது வகைகள் தன்னாலேயே நிகழ்ந்திருக்க கூடுமேயன்றி, நம்முடைய முயற்சியாலோ அல்லது திட்டமிட்டதின் பலனாகவோ நிகழ்ந்திருக்காது. அந்த ஒரு நிகழ்வும் கூட நமது முயற்சியினால் கிடைத்த பலனாகத் தோன்றினாலும், அது எப்படி நிகழ்ந்தது என்று ஆழ்ந்து ஆராய்ந்துப் பார்த்தால், நெருக்கடியான நேரத்தில் அது தானாகவே நிகழ்ந்தது என்றும், நம்முடைய முயற்சியால் ஏற்பட்டதல்ல என்றும் தெரியவரும்.

இவை உன்னுடைய அனுபவமானால் அதை நீ நம்ப முன்வரவேண்டும். மேலும் ஒவ்வொரு முறையும் நம் மனம் செயல்படும் போது அதை ஆராய்ந்தால், நம் அனுபவ அறிவில், அந்த வேலை சிதறிப் போய்விட்டது என்றும் அல்லது அதன் பலன்கள் தாமதமானது என்றும் தெரியவரும். ஒவ்வொரு முறையும் நாம் நமது மனதை நம்பாமலும், பகுத்தறிவை நம்பாமலும் இருக்கும் போது பலன்கள் ஏற்படுகின்றன. நம் வாழ்வில் இது ஒரு சிறிய உண்மை. ஆனாலும் நாம் அதைக் காணத் தவறுகிறோம். சாதனைகள், பகுத்தறிவால் ஏற்படுவதன்று. அது உள்ளுரை மௌனத்தினால் ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. உண்மை என்னவென்றால், மௌனசக்தி பலனைக் கொண்டு வருகிறது என்பதாகும். அது பகுத்தறிவினால் அல்ல. மௌனம் என்பது ஆன்மா. ஆன்மா எப்பொழுதும் சாதிக்க வல்லது. மனம் சாதிப்பதைக் கெடுக்கும்.

ஆனால் மனம் என்பது நமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய தலைசிறந்த கருவியாகும். மனம் தானாகச் செயல்படும்பொழுது, அது அழிக்கும் தன்மையைப் பெறுகிறது. அது ஆதியான ஆன்மாவுக்கு சரணம் அடைந்தால், பெரிய சிருஷ்டிக்கு உரிய கருவியாகிறது. மனத்தை நம்புவதோ, நமது கருத்துக்களை வலியுறுத்துவதோ, திட்டமிடுவதில் நம் திறமையை நம்புவதோ, நம் காரியத்தைக் கெடுப்பதாகும். நம் உள்ளுரை ஆன்மா ஒப்புதல் அளித்து, மனத்தின் முறையான முடிவுகளுக்கு ஆன்மா சம்மதித்தால், நம்முடைய கருத்துக்கள் சக்தி வாய்ந்ததாகவும், திட்டமிடுவதில் செயல் ஊக்கமுடையதாகவும் இருக்கும்.

பகுத்தறிவை கைவிட்டால் நீ ஆன்மாவை அடைவாய்.

பகுத்தறிவை விடும்போது, நீ மௌனத்தை அடைகிறாய். அது ஆன்மாவின் சூழலாகும்.

அழியாத உண்மையான சக்தி ஆன்மாவின் இருப்பிடம். ஆன்மா என்பது எப்பொழுதும் நிலைத்து நிற்கும்.



ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்  - Page 9 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக