புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
25 Posts - 78%
heezulia
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
5 Posts - 16%
viyasan
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
201 Posts - 40%
heezulia
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
200 Posts - 40%
mohamed nizamudeen
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
21 Posts - 4%
prajai
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
7 Posts - 1%
mruthun
முதல் காதல். Poll_c10முதல் காதல். Poll_m10முதல் காதல். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல் காதல்.


   
   
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu 3 Sep 2009 - 7:49


முதல் காதல்.

மிதமான
குளிரில் பருகக் கிடைக்கும் ஒரு கோப்பைத் தேநீர் போன்றது காதல். அதன்
சுகம் அலாதியானது. அதிலும் முதல் காதல்? வாழ்வின் விளிம்பு நிலை வரை நம்
மனதை விட்டு அகலாத ஒரு சுகமான சுமை அந்த முதல் காதல். இந்த ஓராண்டுக்
காலம் ஓரளவு நிம்மதியாய் வாழ்ந்து விட்டு வாருங்கள் உங்களை பிறகு
பார்த்துக்கொள்கிறேன் என்று விதி எங்களை வழியனுப்பி வைத்த காலம் அது.
மேலிதழின் மேற்புறம் அரும்பும் மீசையோடு, சக வயது பெண்களை கண்டால்
உள்ளுக்குள் ஏதோ வலி ஏற்படும் பருவம் அது.


என்
பக்கத்து வீட்டுப் பைங்கிளி (இதுப் போன்ற உண்மை சம்பவங்களில் சிலரது பெயரை
தவிர்ப்பது நலம் என்றே கருதுகிறேன்) என் மனதில் ஏறி சிம்மாசனம் போட்டு
உட்கார்ந்துக் கொண்ட காலம். சக மாணவர்கள் காதல் எனும் போதையில் சிக்கி
தவிக்கும்போது அவர்களின் காதலியைப் பற்றி பள்ளிக்கூட நோட்டில் காதல்
கவிதைகள் எழுதித் தள்ளுவார்கள்.



அவர்களை
கேலி செய்துகொண்டிருந்த நானும் ஒரு நாள் அதே கேலிக்குள்ளானேன். ஏதோ ஒரு
மாலைப் பொழுதில் அவள் எனக்குள் ஏற்படுத்திய ஒரு தாக்கம் காதலானது. அது
எந்த நொடியில் காதலானது என்று தெரியாது. ஆனால் பல நாட்கள் அவளுடன் பழகி
இருக்கிறேன். எந்த இடத்தில் அது காதலானது என்பதை இன்றும் ஆராய்ந்துக்
கொண்டிருக்கறேன். காதல் ஏற்படும் நாளின் முன்னாள் வரை அவளின் தாய் "டேய்
கொஞ்சம் நாடார் கடைக்கு போயிட்டு வாடா" என்றால் "உங்களுக்கு வேற வேலைய
இல்லியா" என்று சினுங்கிக்கொள்ளும் நான் அவளின் காதல் வலையில் விழுந்தப்
பின்னர்.. "ஆண்ட்டி கடைக்கு போய் ஏதாச்சும் வாங்கிட்டு வரணுமா" என்றுக்
கேட்டு விட்டு அவளைப் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பேன். அவள்
ஒழுங்கு காட்டிவிட்டு வீட்டுக்குள் ஒடிவிடுவாள். தலையை ஒரு பக்கம்
சாய்த்தவாறு ஒழுங்குக் கட்டிவிட்டு திடீரென அவள் வீட்டுக்குள்
ஒடிவிடுவாள். ஓடியது அவள். அங்கே வழுக்கி விழுந்தவன் நான்.



பக்கத்து
வீடுதான் என்பதனால் அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து (அதற்கு முன் குறைந்த
பட்சம் ஏழு மணிக்கு எழுவேன்). அவள் வீட்டிக்கு சென்று அடுப்பு பத்தவைத்து
குளிர் காய்ந்துக் கொண்டிருப்பேன். என் அம்மா ஒரு முறை என்னைக்கேட்டால்.
"உனக்கு உண்மையாவே குளிருதாடா? ஆமாம் மா.. இப்பலாம் ரொம்பக் குளிருது.
நான் சொல்லி முடிக்கும் முன்னரே என் முகத்தில் வழிந்த வேர்வையை துடைத்து
விட்டு என் அம்மா சொன்னார். "டிசம்பர் மாசம்தான்டா குளிர் காயனும். இது மே
மாசம் போ உள்ளப் போய் வேலையப் பாரு" என்றார். அப்போதுதான் எனக்கு தெரியாது
காதல் மே மாதத்தை கூட டிசம்பர் மாதமாக மாற்றும் என்று. ஆனால் இயல்பாகவே
அப்படிதான் நடந்தது.



ஒரு
நாள் அவளின் ஒளிப்படம் (போட்டோ) எனக்கு கிடைத்துவிட்டது. அதை வைத்துகொண்டு
நான் செய்த அலப்பறை கொஞ்ச நெஞ்சமல்ல. எப்படியாவது அந்த ஒளிப்படத்திற்கு
முத்தம் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அவள் ஒளிப்படம்
கிடைத்தவுடன் அருகில் இருந்த தென்னந்தோப்பிற்கு ஓடி சென்றேன். சுற்றும்
முற்றும் பார்த்துவிட்டு பாக்கெட்டில் இருந்த அவளின் ஒளிப்படத்தை எடுத்து
பார்க்கப்போகும் நேரம் பார்த்து என் அம்மா அழைத்தார். "டேய் அங்க என்னடா
பண்ற" தென்ன மட்ட அறுந்து தலையில் விழப்போவுது" என்றார். "உன்
மண்டையில்தான் விழணும்" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு வேறு இடம்
நோக்கி ஓடினேன். மீண்டும் அவளின் ஒளிப்படத்தை எடுத்து முத்தம் கொடுக்கும்
வேளையில் அவளின் அம்மா அழைக்கும் சப்தம். "டேய் கொஞ்சம் இங்க வாடா" இந்த
நாய கொஞ்சம் வெளியிலக் கூட்டிட்டுப்போடா என்றார்.



அடுத்த
முறை அந்த நாயை வெளியிலக் கூட்டிட்டுப் போய் கொள்ள வேண்டியதுதான் என்று
மனதுக்குள் நினைத்துக் கொண்டே மீண்டும் பழைய இடத்துக்கே வந்தேன். பின்
அவசர அவசரமாய் வேறு யாரு கூப்பிடும் முன் முத்தம் கொடுத்துவிட வேண்டும்
என்றெண்ணி வாயருகே கொண்டு சென்றேன். திடீரென்று முதுகில் பெருத்த அடி
விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். விழுந்தது தென்ன மட்டை.



ஒரு
முறை அவளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது என் அம்மா அருகில் உள்ள டீக்
கடையில் இருந்து ஒரு கோப்பை (ஒரு கப்) காப்பி வாங்கி வருமாறு என்னை
அனுப்பினார். கடைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு வந்தேன். அம்மா மூடியைத்
திறந்துப் பார்த்துவிட்டு என்னை ஒரு முறை முறைத்தார். "எங்கடா காப்பி"
என்றார். பின்னர்தான் எனக்கு நினைவு வந்தது. காப்பி கடை வரை மட்டுமே
சென்று மீண்டும் அவளைப் பார்க்கும் ஆவலில் அவசர அவசரமாய் வீடு
திரும்பினேன்.



அன்று
எப்படியாவது அவளிடம் காதலை சொல்லிவிட வேண்டும் என்று மனதுக்குள்
நினைத்துக்கொண்டு அவளிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவள் பெயரை
உச்சரித்தேன். அவள் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன என்றால்.. ஹ்ம்ம்...
ஒன்னும் இல்ல.. என்று அசடு வழிய ஒரு சிரிப்பு சிரித்தேன். அவள் தலையில்
அடித்துக்கொண்டு மீண்டும் அவள் வேலையை பார்த்துக்கொண்டிருந்தாள். எனக்கோ
உடல் முழுதும் வியர்த்தது. சொல்ல வந்த வார்த்தைகள் நெஞ்சுக்
குழிக்குள்ளேயே சிக்கிக் கிடந்தன. கைகள் நடுங்க ஆரம்பித்தன. மீண்டும் அவள்
பெயரை உச்சரித்தேன். மீண்டும் திரும்பிப் பார்த்தால். சொற்களை இழந்து
ஒன்னும் இல்லை என்று சொல்லிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துவிட்டேன். இது
நடந்தது ஒன்பதாம் வகுப்பில் நான் படித்துக்கொண்டிருந்த காலம்.



இது
உண்மையான காதலல்ல... என்று எனக்கு இப்போது தெரியும். இது ஒரு ஆண் பெண்
ஈர்ப்பே தவிர இதைக் காதலாக எடுத்துக் கொள்ள இயலாது. ஆனால் அந்த வயதில்
இதுப் போன்ற வாசகங்கள் நம் மனதில் ஏறாது. யாராவது அறிவுரை கூற வந்தால்
கடித்து குதறிவிடத் தோன்றும். சில நாட்கள் கழித்து,



நான்
பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் காதல் ஒருமுறை
என்னைத் தீண்டியது.. இந்த முறை காதலில் விழுந்தவன் நானல்ல... பெண்..
என்னுடன் பத்தாவது படித்துக்கொண்டிருக்கும் சக மாணவி என்னை காதலிப்பதாக
அவள் தம்பியிடம் சொல்லியனுப்பினால்.



ஆனால்
எனக்குள் முதல் காதல் தோன்றிய தினத்தில் இருந்து பத்தாம் வகுப்பில் அவள்
தனது காதலை என்னிடம் கூற வந்த அந்த இடைப்பட்ட நாட்களில் என் குடும்பமே அதல
பாதாளத்துக்கு சென்று விட்டது. அந்தப் பெண்ணின் தம்பியிடம் நான் கூறிய
வார்த்தை.. நான் நிர்யாப் படிக்கணும்.. எனக்கு காதலிக்கிற எண்ணம் ஏதும்
இல்ல.." சொல்லிவிட்டு காதலிடமிருந்து நான் நகர்ந்து சென்றேன். இன்று வரை
நானும் காதலிடம் செல்ல வில்லை. வேறொரு காதலும் என்னைத் தேடிவரவில்லை.


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 3 Sep 2009 - 11:16

சொல்வதற்க்கு வார்த்தைகள் இல்லை நண்பா!! இதை படிக்கும் போது ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கும் முதல் காதல். மயிலிறகு போல வருடும்.
நன்றி......



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu 3 Sep 2009 - 13:07

வாவ்.. nice real ஸ்டோரி..loved it..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu 3 Sep 2009 - 13:12

மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக