புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
21 Posts - 4%
prajai
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
7 Posts - 1%
mruthun
காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_m10காவிரியும் கர்நாடகத் தமிழரும்  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரியும் கர்நாடகத் தமிழரும்


   
   
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Mar 24, 2011 9:31 am

தமிழனாகப் பிறந்து பெங்களூரில் வந்து வாழ்வதில் நிறையப் புதுமையான அனுபவங்கள் கிடைக்கப் பெறுவதுண்டு. பொது இடங்களில் சத்தமாகத் தமிழில் பேசிக்கொண்டிருக்கிற நம்மவர்கள் நிறையப் பேரை இங்கே பார்க்க முடியும். அல்சூர் போன்ற பகுதிகளில் தமிழ்ச் செய்தித் தாட்கள் பரப்பிக் கிடக்கும் கடைகளைப் பார்க்க முடியும். சில இடங்களில் தமிழே உலகின் முதன் மொழி என்று எழுதிப் போட்டிருப்பதைப் பார்க்க முடியும். போகிற இடங்களில் எல்லாம் நாம் தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பிக்கும் முன், முகத்தை வைத்தே நம்மை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் நம் மொழியை மிக அழகாகப் பேசுவது அடிக்கடிப் பார்க்க முடியும். அப்படிப் பட்ட ஓர் உறவுக்கார ஊர் பெங்களூர் நம்மவர்களுக்கு.

காவிரிக்கு வெகு தொலைவில் இருக்கிற தென் பாண்டி நாட்டில் பிறந்து விட்டதால் காவிரிக்கும் எனக்கும் ஒரு சொட்டுக் கூட தொடர்பு இருக்கவில்லை. அவர்கள் விட்டாலும் விடா விட்டாலும் அதனால் எந்த லாபமும் இழப்பும் நேரடியாக அடைந்ததில்லை. ஆனால், தஞ்சையில் இருக்கிற நம் உறவினருக்கு இவர்கள் எப்போதும் நீர் விட மறுப்பவர்கள், நீர் கேட்டால் பெங்களூரில் இருக்கிற உறவினரை அடித்து விரட்டுபவர்கள், இன வெறியர்கள் என்று அவர்கள் பற்றிப் பல கடுமையான கருத்துக்கள் மட்டும் இருந்ததுண்டு. பள்ளிக்கூடத்தில் படிக்கிற காலங்களில் பெங்களூர் என்றாலே தமிழர்களை விரட்டி விரட்டி வெட்டுவார்கள் என்பது போன்ற ஒரு கருத்துக் கொண்டிருந்தது இப்போதும் நினைவிருக்கிறது. 1992-ல் அப்படி ஒன்று நிகழ்ந்திருக்கிறது. காவிரிப் பிரச்சினையை மையமாக வைத்து நடைபெற்ற பல்வேறு கலவரங்களில் தமிழர்கள் 18 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு முன்பும் பின்பும் அப்படியேதும் நடக்கவில்லை. ஆனால், எவருடையதாயினும் 18 உயிர்கள் என்பது அவ்வளவு மலிவானவையல்ல. அவற்றைப் பறித்தவர்களின் உயிரைப் பறிப்பது தவிர அதற்கு வேறு சரியான தண்டனை இருக்க முடியாது. காவிரிப் பிரச்சினை தலை தூக்கும் போதெல்லாம் பெங்களூரில் வாழ்கிற ஒவ்வொரு தமிழனும் வெளியில் தலை காட்டப் பயந்து, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடமாடுவது உண்மையே. தஞ்சைத் தமிழனுக்கு அது வாழ்க்கைப் பிரச்சினை. ஆனால், பெங்களூர்த் தமிழனுக்கோ அது பிழைப்புப் பிரச்சினை. ஆனால், உண்மையிலேயே கன்னடர்கள் அவ்வளவு மோசமானவர்களா? என் கருத்து, கண்டிப்பாக இல்லை என்பது. ஒரு சராசரித் தமிழனை விட சராசரிக் கன்னடன் ஓரளவு நல்லவனே. அதற்கான காரணங்களைச் சொல்கிறேன். இதற்கான காரணங்களை நான் ஏன் பேச வேண்டும் அல்லது நாம் ஏன் அவர்கள் பற்றிச் சரியான புரிதல் கொள்ள வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றினால், இதோ என் பதில். எல்லாப் பிரச்சினையையும் உச்ச நீதி மன்றத்தில் போய்த் தீர்க்க முடியாது. என் சகோதரனோடு எனக்குப் பல பிரச்சினைகள் வரலாம். ஒவ்வொரு பிரச்சினைக்கும் பஞ்சாயத்தைக் கூட்ட முடியாது. நாங்கள் இருவரும் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டியவர்கள். இருவரும் தன்னுடைய நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருப்பது ஒருபோதும் உருப்படுவதற்கான வழி இல்லை. உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வந்த போது, இங்கேயே இருந்து கொண்டு இங்கே இருப்பவர்களையே கண்டிக்கும் விதமாக, “உச்ச நீதி மன்றத்தை விடப் பெரியவர்கள் யாரும் இல்லை” என்று சொன்ன ஞான பீட விருது பெற்ற கன்னட அறிவாளர் கிரிஷ் கர்னாட் அவர்களை எனக்கு மிகவும் பிடித்தது. தனக்குச் சரியெனப் படுவதைப் பேசுவதற்கே பல நேரங்களில் தைரியம் தேவைப் படுகிறது. அதுவும் ஊரே ஒரே குரலில் ஒரு தவறைச் சரி போல வாதிடும் நேரத்தில் ஒத்து ஊதுவதுதான் சிறந்த அரசியல் பண்பாக மதிக்கப் படுகிறது. ஆனால், ஒருவேளை நாம் தவறோ என்று உடன் இருக்கிற இன்னும் பலர் யோசிக்க வேண்டுமானால் ஒரு சிலர் இது போலப் பேசியே ஆக வேண்டும். வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பும் தறி கெட்ட பேச்சுகளும் இத்தகைய பிரச்சினைகளுக்கு ஒரு போதும் முடிவாகா.

அதற்கு முன்பு, காவிரிப் பிரச்சினை பற்றிச் சிறிது பேசி விடுவோம். உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மதிக்காதது எந்த வகையிலும் மன்னிக்கத்தக்கதோ நியாயப் படுத்தத்தக்கதோ இல்லை. அந்த வகையில் நியாயம் தமிழகத்தின் பக்கமே உள்ளது. தஞ்சை மாவட்டம் கர்நாடகத்தில் ஒரு மாவட்டமாக இருந்திருந்தால் இது ஒரு பிரச்சினையாகவே ஆகியிராது. இதிலிருந்தே புரிகிறது, இது தண்ணீர் மட்டும் சம்பந்தப் பட்ட பிரச்சினை அல்ல; இன்னும் என்னென்னவோ சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பது. முதல் பிரச்சினை தமிழ்-கன்னட உறவில் இருக்கிற பிரச்சினைகளுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. பழங்காலங்களில் பெரும்பாலான தமிழ் மன்னர்கள் சுற்றி இருக்கிற இன்ன பிற இனத்தவரைத் தொடர்ந்து படையெடுத்துச் சென்று அவர்தம் ஆட்சிகளைக் கைப்பற்றி அவர்களைப் பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். சில முறை அவர்களும் அதை நம்மிடம் செய்திருக்கிறார்கள். இலங்கையும் கர்நாடகமும் இதற்கு முக்கிய எடுத்துக்காட்டுகள். எனவே, காலங்காலமாகவே அவர்களுக்கு நம் மீது ஒரு வித வெறுப்புணர்வு இருந்து வருகிறது. இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பவர்கள் என்கிற பய உணர்வும் உண்டு. அதற்கேற்றாற்போல் சில வாதங்களும் அவர்களிடம் உள்ளன.

அடுத்தது அரசியல். மக்கள் தொகை குறைவாக இருந்த காலங்களில் மழை சரியாகப் பெய்த காலங்களில் இது ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. காங்கிரஸ் மட்டுமே இரண்டு இடங்களிலும் ஆண்ட போது எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. இங்கே திராவிடக் கட்சிகள் தலையெடுத்த பின்பு காங்கிரசுக்குத் தமிழ்நாடு வேண்டாத நாடாகி விட்டது. தனி நாடு கேட்போருக்குப் பாடம் புகட்ட மத்தியில் இருப்பவர்களே இது போன்ற சிக்கல்களை வளர்த்து விட்டிருக்கிறார்கள். ஒரே கட்சி ஆண்ட போது வெற்றிக்காக வேண்டாத வேலைகள் பண்ண வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை. வெற்றி என்பது எட்டாக் கனியாகும் காலகட்டத்தில் இரு சாராருமே நரித்தனங்கள் செய்யத் தொடங்கி விட்டார்கள். வெல்வதை மட்டுமே முழு முதல் நோக்கமாகக் கொண்டு உழைக்கும் புதிய அரசியல் பண்பாடு வந்து சேர்ந்தது. வெல்ல முடியாத போது வென்றவரைச் சிக்கலுக்குள்ளாக்கும் வேலைகள் ஒரு வித ஈனக் களிப்பை உண்டு பண்ணின தோற்றவர்களுக்கு. இப்படியே சன்னம் சன்னமாக வளர்ந்து பிரச்சினை பூதாகரமாகி விட்டது. பிரச்சினை பற்றி எதுவுமே புரியாவிட்டாலும், “கொடுக்கக் கூடாது”/“விடக் கூடாது” என்கிற மனப்பான்மை மட்டும் உறுதியாக வளர்ந்து விட்டது. இன்றைக்கு அது ஒரு முடிவே இல்லாத பிரச்சினையாக வந்து நிற்கிறது.

எனக்கு நியாயம் என்று படுகிற, அவர்கள் வைக்கிற வாதங்களில் ஒன்று, “இதுவே தமிழ்நாட்டை நம்பி நாங்கள் வாழ்வதாக இருந்திருந்தால், நாங்கள் கொடுக்கிற இந்தச் சில சொட்டுகள் கூட எங்களுக்குக் கிடைத்திருக்காது” என்பது. எல்லாவற்றிலும் அரசியல் பண்ணுகிற நம்மவர்கள் இதைவிடக் கேவலமாகத்தான் நடந்திருப்பார்கள் என்று படுகிறது. காமராஜருக்குப் பின் நம்ம ஊரில் கிருஷ்ணா போன்ற ஒரு பண்பாளர் ஆட்சியில் அமர்ந்ததில்லை. எனவே யாராக இருந்தாலும் அது போலவே நடந்திருப்பர் அல்லது அதை விட மோசமாக நடந்திருப்பர் என்றுதான் படுகிறது.

இதே பிரச்சினையை இதை விட ஓரளவு பரவாயில்லாமல், ரோட்டுக்கு வராமல், தீர்த்திருக்க முடியும் நம்மால். நம்ம ஊர் நரிகளும் இதில் நிறைய விளையாடுகின்றன. தேவையில்லாத அறிக்கைகள், வம்பிழுத்தல்கள், அரசியலாக்கல்கள் எனப் பிரச்சினையைத் தீர்க்க உதவாத பல வேலைகள் செய்பவர்கள்தான் நம்முடைய சாபக்கேடு.

வெளியூரில் போய் வாழ்கிற போது எப்படி வாழ வேண்டும் என்கிற இங்கிதமும் நம்மவர்களுக்கு வந்தாக வேண்டும். அவர்களுடைய மற்றொரு மாபெரும் குற்றச்சாட்டு இது. “எங்களுக்கு ஏன் தெலுங்கர்களையும் மலையாளிகளையும் கண்டால் இவ்வளவு கோபம் வருவதில்லை? ஏனென்றால் அவர்கள் எங்கள் வீட்டுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு எங்களையே யார்னு கேட்கிற வேலையைச் செய்வதில்லை” என்பது. அதில் ஓரளவு உண்மை இருக்கிறது. அவர்கள் எவரும் உள்ளூர்க்காரர்களை அதிகம் சீண்டுவதில்லை. ஆனால் நம்மவர்கள் கொஞ்சம் ஓவர். அதற்கு இன்னொரு காரணம், நாம் எண்ணிக்கையில் கன்னடத்தவருக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள். அந்த ஊரின் வரலாற்றில் நமக்குப் பெரும் பங்கு இருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்திலேயே கூலி வேலைக்குப் போய் அங்கேயே குடியேறி விட்டவர்களின் அளவு கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களில் பலருக்குத் தமிழ் தெரியுமே ஒழிய தமிழ் நாட்டில் அவர்கள் ஊர் எது என்று தெரியாது. அந்த அளவுக்கு மண்ணின் மைந்தர்கள் ஆகி விட்டார்கள் நம்மவர்களும் அங்கே. எனவே, மும்பையில் செய்ய முடியாத சேட்டைகளை (அங்கேயே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வேறு கதை), டெல்லியில் காட்ட முடியாத உரிமையை நாம் இங்கு காட்டுவது இயற்கையானதுதான். ஆனால், அவர்கள் மொழியைக் கற்றுக் கொள்ள மறுப்பது, பொது இடங்களில் அவர்கள் மொழியையும் பண்பாட்டையும் கிண்டல் பண்ணுவது, நாமாகக் கூட்டம் (தனித் தமிழ்க் கூட்டம்) சேர்ப்பது, அதில் அவர்களை ஒதுக்கி வைப்பது, பணியிடங்களில் அவர்களுக்கு எதிராகவே அரசியல் பண்ணுவது இதையெல்லாம் நாம் தவிர்த்தே ஆகவேண்டும். நம் உரிமையைக் கேட்கத் தூண்டி விடுகிற யாரும் நமக்கு இதெல்லாம் கற்றுக் கொடுப்பதில்லை.

சராசரித் தமிழனை விட சராசரிக் கன்னடன் நல்லவன் என்ற ஒரு கருங்காலித்தனமான கருத்தொன்று வைத்தேன் துவக்கத்தில். அது எப்படி என்பது பற்றிச் சொல்கிறேன். பெரியார் சொன்னது போல், அடிப்படையில் நாம் ஒரு காட்டு மிராண்டிக் கூட்டம். நம்முடைய பழக்க வழக்கங்களில் ஒருவித மூர்க்கத்தனம் இருக்கிறது. பொது இடத்தில் இன்னொரு சக மனிதனை முறைப்பதைப் பெரிய பருப்புத் தனமாக நினைக்கிற மனோபாவம் நமக்கு மட்டுமே இருப்பது போல் தெரிகிறது. சாதாரணமாக ஓர் உரையாடலின் முடிவில் புன்னகைக்கிற குணம் நம்மிடம் இல்லை. கேள்வி கேட்போரைச் சண்டைக்காரன் போலப் பார்த்துப் பேசுவது சுய மரியாதையாகக் கருதப் படும் பண்பாடு நம்முடையது. ஓர் அயலவரைத் தம்மவராக ஏற்றுக் கொள்கிற பழக்கம் நமக்கில்லை. எம் ஜி ஆரை, ஜெயலலிதாவை, ரஜினி காந்தை ஏற்றுக் கொண்ட கதை வேறு. ஆனால், அடி மட்டத்தில் வெளியூர்க்காரர்கள் வந்து குடியேறும் அளவுக்குத் தமிழ்நாடு இன்னும் திறந்த மனப்பான்மை பெற்று விட வில்லை. அது பெங்களூரில் இருக்கிறது. அதை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். ஒரு கன்னடன் சென்னையில் வந்து வாழ்வதை விடத் தமிழன் பெங்களூரில் வந்து வாழ்வது எளிது. இந்த ஒரு வரியைத் தவறென்று யாராவது நிரூபிக்க விரும்பினால், தயவு செய்து முன் வருக. பெங்களூரை விடச் சென்னையில் சாப்பாடு நன்றாக இருக்கும் என்பதைத் தவிர நல்லதாக ஒரு கருத்து யாரிடமும் இருக்க முடியாது.

கர்நாடகத்தில் எல்லோருமே தமிழர்களை வெறுப்பவர்கள் அல்ல. அந்த வெறுப்புணர்வு என்பது நான்கே நான்கு மாவட்டங்களில் மட்டும் இருப்பது. பெங்களூர், மைசூர், மண்டியா, சாம்ராஜ் நகர் ஆகியவை மட்டுமே. காரணம், காவிரி. காவிரிப் பிரச்சினையின் போது மற்ற மாவட்டத்தினர் இவர்களுக்காக கண்ணைக் கூடச் சிமிட்ட மாட்டார்கள். சில தொலைக் காட்சிகளில் தக்க காட்சிகளுடன் அழகாகக் காட்டுவார்கள். “காவிரியில் நீர் விடக்கூடாது என்று வலியுறுத்தி இன்று நடைபெற்ற மாநிலம் தழுவிய போராட்டத்தால் மங்களூர், ஹுப்லி, சிமோகா போன்ற நகரங்களில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை; இயல்பு நிலை அப்படியே இருந்தது; கடைகளும் அலுவலகங்களும் வாகனங்களும் எப்போதும் போலவே இன்றும் இயங்கின” என்று. இதை இங்கிருந்து உற்றுக் கவனித்தவர்களுக்குத் தெரியும். நாம் நினைப்பது போல, மொத்தக் கர்நாடகமும் தமிழர்களை எதிரிகளாகப் பார்ப்பதில்லை. இதெல்லாம் நம் ஊடகத்தார் நமக்கு விதைத்த தவறான நச்சு விதைகள். அடிப்படையில் அவர்களும் வந்தாரை வாழ வைக்கும் குழுவினரே. அப்படியில்லையேல் பெங்களூரில் இத்தனை லட்சம் தமிழர்கள் வந்து கூடாரம் போட்டுக் கும்மாளம் போட முடியுமா?

ஆனால், காவிரிப் பிரச்சினை தலை தூக்க ஆரம்பித்ததும் இங்கே ஒரு விதமான மாற்றம் ஏற்படும். தமிழ்த் தொலைக்காட்சிகள் எல்லாம் தடை படும். அவர்கள் பேச்சில் ஒருவித வெறுப்புணர்வு வரும். மற்ற எல்லா இனத்தவர் மீதான வெறுப்புகளும் தொலைந்து போய்விடும். சிலர் நம்மை எதிரிகள் போல் பார்ப்பர். வீண் வாதங்களுக்கும் வம்புகளுக்கும் இழுப்பர். தமிழ் நாட்டு வண்டிகள் ஒட்டுவோரைத் தெருவில் போகிற நாய்கள் எல்லாம் முறைக்கும். எனக்குத் தலையெல்லாம் வெடிக்கிற மாதிரிக் கொதிக்கும். அவர்களுடைய இந்த மனநிலைக் கோளாறுக்கு என்ன காரணம் என்று இன்று வரை முழுமையாகப் புரியவில்லை.

இதுவரை காவிரிப் பிரச்சினையைப் பொருத்தமட்டில் நாம் அடி படுபவர்களாகவே இருந்து வந்திருக்கிறோம். அதற்கான பதிலடி சிறிது கூடக் கொடுக்கவில்லை. ஆனால், முதல் முறையாக போன முறை ஒகேனக்கல் பிரச்சினை வந்தபோது, திருமாவளவன் - ராமதாஸ் குழுவினர் புண்ணியத்தில், தமிழகத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் அவர்களுடைய வண்டிகளும் வணிகத் தலங்களும் அடிக்கப்பட்டன. சரியோ தவறோ இது ஒரு மாபெரும் மாற்றம்.

ஆனால், தமிழன் எம் ஜி ஆரை, ஜெயலலிதாவை, ரஜினி காந்தை ஏற்றுக் கொண்டது போல இங்குள்ளவர்கள் பெரிதாக வெளியினத்தார் எவரையும் பெரிதாக ஏற்றுக் கொண்டதில்லை. அதற்குக் காரணம் ஒன்று இருக்கிறது. நம்மிடம் மட்டுமே சினிமா மோகம் பேய் பிடித்து ஆடியது. அது நம்முடைய வேறொரு பிரச்சினை. அவர்கள் அங்கே வந்தார்கள் என்றால் அந்த அளவு நம் சினிமாத்துறை திறந்த வெளியாக இருந்தது. அதில் வாய்ப்புகள் இருந்தன. இங்கே சினிமா மோகம் இல்லை. இருக்கிற சிறிதளவு மோகமும் மேலே குறிப்பிட்ட அந்தச் சில மாவட்டங்களில் தான். மற்ற மாவட்டத்தினர் சினிமா குறைவாகப் பார்க்கிறார்கள் அல்லது இந்திப் படங்கள் பார்க்கிறார்கள். சினிமாத்துறை அவ்வளவு சிறப்பாக இல்லை. எம் ஜி ஆர், சிவாஜி அளவுக்கு ராஜ்குமார் பெரிதாகப் பேசப்படாதது அதனால்தான். கொஞ்சம் நஞ்சம் பேசப்பட்டது நம்மவர் வீரப்பன் செய்த காரியத்துக்குப் பின்புதான். மற்றபடி, இவர்களுடைய சினிமாத்துறையிலும் நம்மவர்கள் நிறைய இருக்கிறார்கள். கதாநாயகன், கதாநாயகி மட்டுமல்லாது, மற்ற பல பணிகளிலும். எப்படியிருப்பினும் யார் நல்லவர்கள் என்ற விவாதத்தில் அது பயனற்றது.

இவை எல்லாவற்றையும் விட நம்மை மேலானவர்களாகக் காட்டுகின்ற மிக அடிப்படையான ஒன்று, அரசியல் ரீதியாகப் பல முறை நாம் மொழி மற்றும் இன அடிப்படையிலான போராட்டங்களில் ஈடு பட்டிருக்கிறோம்; அத்தகைய பிரச்சினைகளுக்குள் தள்ளப் பட்டிருக்கிறோம். அப்படிப் பட்ட தருணங்களில் ஒரு முறை கூட ஒரு அயல் இனத்தவரின் உயிரை நாம் பறித்ததில்லை. யார் வந்து தூண்டி விட்டாலும் அது கொலையில் முடிந்ததில்லை. அதை அந்தப் பாதகர்கள் செய்திருக்கிறார்கள். அதற்குப் பின்பும் நான் சொல்கிறேன், அவர்கள் நம்மை விட நல்லவர்கள் என்று. ஏனென்றால், அதுதான் அவர்களுடனான என்னுடைய அன்றாட உறவுகள் மூலம் நான் புரிந்து கொண்டது. இதை இங்கே வந்து வாழ்ந்து விட்டுப் போன எல்லோருமே ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி பாரதீயின் பதிவுச் சுடர்கள்



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக