புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
6 Posts - 46%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
372 Posts - 49%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
25 Posts - 3%
prajai
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்துமதம்


   
   

Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 11:36 am

First topic message reminder :

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் I


1. உறவு


அர்த்தமுள்ள இந்துமதம் - Page 6 Kanari10

‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.

கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளை கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.

முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு இரவுக்கு மட்டுமே!


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:20 pm

எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன? காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான்.

மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை.

‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் வைப்புறாமகா வருவது நன்றுய என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள்.

‘வலம்’ என்பது ‘நாம் வலிமயடைவோம்’ என்றும பொருள் தருகிறது.

‘வலியோம், வல்லோம், வல்லம், வலம்’

-இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருளுடையவை.

தனது வலிமையின்மீது நம்பிகை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச்சொன்னார்கள் இந்துக்கள்.

சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச்செல்லும் போது, போய்வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள்.

அதன் பொருள், “இன்னும் பல திருமணங்கள் விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும் நாங்கள் மீண்டும் வருகிறோம்” என்பதே.

அமங்கல வீடுகளுக்குச்செல்கிறவர்கள் திரும்பும்போது, நாங்கள் வரவேண்டியதாயிருக்காதும என்று நம்பிக்கையூட்டுவதாகும்.

மணமக்களை, “பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஏன் வாழ்த்துகிறார்கள்?

உலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள், இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.

அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல்நலம் எனப்பதினாறு வகையாக விரியும்.

மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே, இந்துக்கள் ‘பதினாறு பெற வேண்டும்ய என்று குறிப்பிடுகிறார்கள்.
நூற்றுக்கணக்காண ஆண்டுகள், விழுது விட்டு விழுதுவிட்டு ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான்.

இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பேறுகள் அனைத்தையும், மங்கல வழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள்.

‘கணவனின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள்.
யாராவது ஒருவர்தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் ‘வாழ்க’ என்பார்கள்.

தும்மினேனாக வழுத்தினாள்” என்றான் வள்ளுவன்.

தும்மும் போது சிலர் ‘நூறு வயது’ என்பார்கள்.

எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள்.

‘நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள். தீபத்தை அணைக்கச் சொல்லும்போது, ‘அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள். ‘வளர்த்து விடு’என்பார்கள்.

பெண் ருதுவாவதைப் ‘பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள்.

“காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம் , ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:20 pm

இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும்.

நான் சொல்லுவது சராசரி இந்துக்களை.

ஆத்திரக்கார்ர்கள் அமங்கலமாகப் பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்ததல்ல.

நன்றாக வாழ்கிற பெண்ணை எங்களூரில் ‘வாழ்வரசி’ என்பார்கள். கொச்சைத் தமிழில் ‘வாவரசி’ என்பார்கள்.

பெரும்பாலான இந்து சமூகங்களில், ‘கணவனை இழந்த பெண் வெள்ளைச் சேலை அணிய வேண்டும். என்று விதிவகுத்துவைத்திருப்பது ஏன்?

‘இவள் கணவனை இழந்தவள்’ என்று தனித்துக் காட்டுவதற்காகவும், கணவனை இழந்தும் ‘தூய்மையானவள்’ என்று குறிப்பதற்காகவும்.

ஆக, மங்கல மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே.

அமங்கலங்கள் குறிக்கப்படும்போதெல்லாம், அவற்றில் அடக்கமும் அமைதியும் வற்புறுத்தப்படுகின்றன.

“இந்தத் துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நீ ஏற்றுக் கொள்” எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடிப் பரிந்துரைபதன் நோக்கம்.

வாழாமல் இறந்துபோன குழந்தைகளை - வாலிபர்களை - கன்னிப்பெண்களை - இந்துக்கள் புதைக்கிறார்கள்.

கொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள்.

வாழாத உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள்.

சாம்பலை ஏன் ந்தியில் கரைக்கிறார்கள்?

“ஆறுபோல் உன் ஆத்மா ஓடிக் கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும்” என்பதற்காகவே.
இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள்.

அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள்.
இயற்கையாகவே மங்கலம், அமங்கலம் தெரிந்துவிடும். மங்கலச் சொற்கள், மங்கல அணி, மங்கல விழா என்ற வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்தும்.
அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது, சாப்பாடு மட்டமாக இருந்தாலும், ‘அற்புதமாக இருக்கிறது’ என்று சொல்வது, இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம்.

‘பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.” என்றான் வள்ளுவன்.

உலகத்தில், நாகரிகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களைக் குறிக்கிறது.

நமது நாகரிகமோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:21 pm

11. கல்லானாலும்….
புல்லானாலும்….


‘ஒரு பெண் உத்தமியாக இருக்க வேண்டும்; பத்தினியாக இருக்க வேண்டும்” என்ற மரபு எல்லா மதங்களிலும் உண்டு.

ஆனால் அதை வலியுறுத்தும் கதைகள் இந்து மத்தில்தான் அதிகம்.

இந்துப் புராணங்களில் வரும் எந்த நாயகியும் அப்பழுக்கற்ற பத்தினியாக்க் காட்சியளிப்பாள்.

குடும்பத்தில் கெட்ட சூழ்நிலை ஏற்படுவதற்குப் பெண்தான் காரணமாக அமைவாள் என்பதால், மானத்தையும் கற்பையும் பெண்ணுக்கே வலியுறுத்திற்று இந்து மதம்.

கற்பு என்பது, நல்ல தாயிடமிருந்து நல்ல மகள் கற்றுக்கொள்வது.

அடிப்படையிலிருந்தே அந்த ஒழுக்கம் வளர வேண்டுமென்பதற்கு, இந்து மதம் சான்று காட்டி நீதி சொல்கிறது.

‘பிற புருஷனை அவள்மனத்தால நினைத்தாலும் கற்பிழந்து விடுகிறாள்’ என்று இந்து மதம் அச்சுறுத்துகிறது.

பெண் ‘தலைகுனிந்து நடக்க வேண்டுமென்று இந்துக்கள் விரும்புவது’அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்குத்தான்.

அழகான ஆடவன்முத்தை அவள் பார்த்த ஒரு கணம் அதிர்ச்சி வந்து, பிறகு அவள் தன்னிலைகு மீண்டால்கூடக் ‘களங்கம்ய என்று இந்துக்கள் கருதுகிறார்கள்.

‘காலைப் பார்த்து நட’ என்று அவர்கள் போதிப்பது அவள் பிற முகங்களைப் பார்க்காமல் இருப்பதற்கு மட்டுமல்ல; பூமியிலும் வாழ்க்கையிலும் வழுக்கி விழாமல் இருப்பதற்குங்கூட!

பெண்ணுக்கு அதை அதிகம் வலியுறுத்தினாலும் ‘ஆணுக்கும் அது வேண்டும்ய என்கிறது இந்துமதம்.

திருமணத்தில் பெண்ணுக்குக் கழுத்தில் மாங்கல்யம் கட்டுகிறார்கள்! காலிலே ஆடவனுக்கு வெள்ளியால் ‘மெட்டி’ போடுகிறார்கள் இவை ஏன்?

நிமிர்ந்து நடந்துவரும் ஆடவன் கண்ணுக்கு எதிரே நடந்துவரும் பெண் கழுத்தில் மாங்கல்யம் இருப்பது தெரிய வேண்டும். ‘அவள் அந்நியன் மனைவி’ என்று தெரிந்து அவன் ஒதுங்கிவிட வேண்டும்.

தலைகுனிந்து நடக்கும் பெண்ணின் கண்களுக்கு எதிரே வரும் ஆடவன் கால்மெட்டி தெரிய வேண்டும். ‘அவன் திருமணமானவன்’எனத்தெரிந்து அவள் ஒதுங்கி விட வேண்டும்.

ஒருபெண்ணும் காளையும் சந்தித்து ஒருவரையொருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால பிரிவால் ஏங்கலாம்; துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ காவியமாகவோ ஆகலாம்.

ஆனால் திருமணமான ஒருபெண்ணுக்கு பரபுருஷன் மீது ஆசை என்பது கிஞ்சித்தும் வரக்கூடாது.

தாலி என்பது பெண்ணுக்குப் போடப்படும் வேலி; அதை அவள்தாண்டமுடியாது.
தமிழகத்திலே ஒரு மன்னனுக்குத் ‘தாலிக்கு வேலி’ என்ற பெயரே உண்டு.

திருமணத்தின் போது ‘அக்கினி’ வளர்க்கிறார்களே, ஏன்?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:22 pm

அவர்களது எதிர்கால ஒழுக்கத்திற்கு ‘அக்கினி அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான்.

அதனால்தான், கற்பு நிறைந்த பெண்ணைக் ‘கற்புக்கனல்’ என்கிறார்கள். அம்மி மிதிக்கிறார்களே, ஏன்?

எல்லாக்குடும்பங்களுக்கும் இன்றியமையாத்து அம்மி. அந்த அம்மியின்மீது காலை வைப்பது, ‘என் கால் உன்மீதுதான் ருக்கும்; உன்னைத் தாண்டிப்போஆகது என்று சத்தியம் செய்வதே.

“படி தாண்டாதப் பத்தினி’ என்பது வழக்கு.

“படியைத் தாண்ட மாட்டேன்” என்பதே அம்மியின் மீது சொல்லப்படுவது.

அருந்ததியைப்போல் நிரந்தரக் கற்பு நட்சத்திரமாக நின்று மின்னுவேன்” என்று ஆணையிடுவதே.

‘பால்-பழம்’ சாப்பிடுவது ஏன்?

அது “பாலோடு சேர்ந்த பழம்போலச் சுவை பெறுவோம்” என்று கூறுவதே.

பூ மணம் இடுவது ஏன்?

“பூமணம்போலப் புகழ் மணம் பரப்புவோம்” என்றே!

மாங்கல்யத்தில் மூன்று முடிச்சுப் போடுவதேன்?

ஒரு முடிச்சு கணவனுக்கு அடங்கியவளென்றும், மறு முடிச்சு தாய் தந்தையருக்குக்கட்டுப்பட்டவளென்றும், மூன்றாவது முடிச்சு தெய்வத்துக்குப் பயந்தவளென்றும் உறுதி கொள்ள வைப்பதே.

ஆம்; பெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும்; தாய்-தந்தை ‘காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் ‘காப்பு’ அணியப்படுகிறது.

‘அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாத்திற்காகவே கணவன் கையில் ‘காப்பு’க்கட்டப்படுகிறது.

குழந்தைப்பருவத்திலிருந்து முதுமைப் பருவம் வரை ஒருபெண்ணைப் பக்குவமாக வைத்திருக்க இந்து மதம் கூறும் வித்தியாசங்கள்தாம் எத்தனை!

‘கற்புடைய பெண் நினைத்தால் கடவுள்களையே குழந்தைகள் ஆக்கலாம்’ என்று போதிக்கும் அனுசூயையின் கதை.

‘கற்புடைய பெண் விரும்பினால், சூரியனையே உதிக்காமல் செய்யலாம்’ என்று கூறும் நளாயினியின் கதை.

கற்புடைய பெண் மரணத்தையும் வெல்லுவாள்’ என்று கூறும் சாவித்திரியின் கதை.

அதையே வேறு வடிவில் நாகபஞ்சமி கதை.

இவையெல்லாம் பொய்க்கதைகள் என்ற வாதிகலாம். ஆனால் ‘அவர்களைப் போல’த் தன்மனைவி இருக்க வேண்டும் என்று விரும்புகிறவனுக்கு இவை மெய்க்கதைகளே!

கொல்லப்பட்டான் கணவன் என்றறிந்து, துடித்தெழுந்து மதுரைநகர் வலம் வந்து, ‘செங்கதிர்ச் செல்வனே! என் கணவன் கள்வனா?” என்று நியாயம் கேட்டுத் துர்க்கைக் கோயிலில் வளையல்களை உடைத்து மதுரையை எரித்தாள் கண்ணகி.

‘அவள் இடது பக்கத்து மார்பைத்திருகி எறிந்தாள்; மதுரை எரிந்தது’ என்கிறது சிலப்பதிகாரம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:22 pm

“மார்பைத்திருகி எறிந்தால் மதுரை எரியுமா?” என்று கேலி பேசுவோருமுண்டு.

“இடது பக்கத்து மார்பை” என்று இளங்கோ சொல்வதைக்கவனிக்க வேண்டும்.

இடது பக்கம்தான் இதயம் இருக்கிறது. அதுவும் மார்பை ஒட்டியே இருக்கிறது.

‘அந்த இருதயத்து அக்கினி மதுரையையே எரித்தது’ என்பதைத்தான் இளங்கோ அப்படி விவரிக்கிறான்.

“கல்லானாலும் கணவன்! புல்லானாலும் புருஷன்” என்பது இந்துக்கள் பழமொழி.

“கல்லும் புல்லும் கணவனாகுமா?” என்று கேலி பேசுவோருமுண்டு.

வெறும் ஜடப்பொருள்களான கல்லையும், புல்லையும் இது குறிக்கவில்லை..

“உன் கணவன் மனது கல்லானாலும், அவன் உனக்கக்கணவனே; சம்பாதிக்க முடியாத சக்தியற்ற கோழையாக ஊருக்குப் புன்மையானவனாக, வெறும் புல்லைப் போல இருந்தாலும், அவன் உனக்குப் புருஷனே” என்பது அதன்பொருள்.

பெண்ணைத்தெய்வமாக்கிக்கணவனப்பக்தனாக்கி வாழ்க்கையைச் சந்தோஈமாக்க, இந்து மதம் எடுத்துகொண்ட முயற்சியைப் போல வேறு எந்த மதமும் எடுத்துக்கொண்டதில்லை.

அந்நியப் புருஷன் தன்னைப்பார்க்கிறான் என்று தெரிந்ததும் முந்தானையைச் சரிசெய்துகொள்ளும் பெண்கள் இந்துமத்த்தின் சிருஷ்டிகள்.

கற்புக்கு இவ்வளவு காவல் வேலிகள் போட்ட பிறகும், பலாத்தாரமாக, வேறு வழியில்லாமல் கெடுக்கப்பட்ட பெண்களுக்குப பரிகாரமென்ன?

இங்கே நிகழ்ச்சியொன்று பழைய த்த்துவத்தை வலயுறுத்துகிறது.

1947-48 - ல் பாகிஸ்தானில் கற்பழிக்கப்ட்ட இந்துப் பெண்கள் லட்சோபலட்சமாக இந்தியாவுக்கு வந்தார்கள்.

“அவர்கள் உடலால்தான் கெட்டார்கள். உள்ளத்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று காந்தியடிகள் வாதாடினார்.

எத்தனை இளைஞர்களுக்கு அந்த அநியாயம் புரிந்ததென்று தெரியவில்லை.

ஆனால், காந்தியடிகள் நேசித்து வணங்கிய ராம்பிரானின் வரலாற்றிலேயே அதற்கு நேரடியாகச்சாட்சியம் உண்டு.

அது அகலிகையின் கதை.

அகலிகையின் கதை.

அகலிகையின் முனிவன் மணந்தான்.

ஒருநாள் நள்ளிரவில் இந்திரன் சேவல் வடிவமெடுத்தான்; பொழுது விடிந்துவிட்டது. போலக்கூவினான்.

உண்மையறியாத முனிவன் சந்தியாவந்தனத்திற்குப் புறப்பட்டான்.

இந்திரன், முனிவன்போல் வேடமிட்டு அகலிகையை நெருக்கினான்.
திரும்பி வந்த முனிவன் உண்மையறிந்தான். அகலிகையைக் கல்லாகச் சபித்துவிட்டான்.

ராம்பிரானின் காலடிபட்டுத்தான் அந்த சாபம் நீங்க வேண்டும்.

ராமபிரான் ஒருநாள் அந்தக் கல்லை மிதித்தார். அகலிகைமீண்டும் உயிர் பெற்றாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:30 pm

முனிவனோ, “நான் என்று நினைத்து இன்னொருவனோடு அவள் கலந்ததெப்படி? இவள் பத்தினியானால் எனக்கும் இன்னொருவனுக்கும் ‘பேதம்’ தெரியாதா?” என்று கேட்டான்.

அதற்கு ராம்பிரான் சொன்னார்:

“கடந்த காலம், நிகழ்காலம்,எதிர்காலம் ஆகிய திரிகாலமும் அறிந்த முனிவன் நீ! நீயே உண்மைச் சேவல் எது, பொய்ச்சேவல் எது என்று தெரியாமல் சந்தியாவந்தனத்துக்குப்பிறப்பட்டாயே! அவளோ ஒரு காலமும் தெரியாத பேதை! உள்ளத்தால் உன்னையே நினைத்தாள். உடலால் தான் கெட்டாள். ஆகவே ஏற்றுக்கொள்வது உன் கடமை”.

முனிவன் அவளை ஏற்றுக்கொண்டு விட்டான்.

பாகிஸ்தானில் கற்பழிக்கப்பட்ட பெண்கள் பற்றிய காந்தியடிகளின் வாதம், ராம்பிரான் வாத்த்தின் எதிரொலியே!

நான் ஏற்கெனவே சொன்னதுபோல அறியாமல் செய்த பிழைகள் மன்னிக்கப்ட வேண்டியவையே!அவை விதிக்கணக்கில் சேர்க்கப்பட வேண்டியவையே!

‘அறிந்து கெடக்கூடாது’ எனக் குலமாதருக்கு விதித்த தடை, நமது குடும்ப வாழ்வை எவ்வளவு நிம்மதியாக்கி இருக்கிறது!

கற்பு என்றொரு வேலி போட்டு, பெண்ளைத் தெய்வங்களாக்கி, குடும்பங்களை மகிழ்ச்சிகரமாக்கிய ‘ஏ! இந்து மதமே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன்.’

12. நல்ல மனைவி

மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிதானத்தையும் எச்சரிக்கையையும் இந்துமதம் வலியுறுத்துகிறது.

‘அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே’ என்பது இந்துக்களின் எச்சரிக்கைப்பழமொழி.

இளம் பருவத்தின் ரத்தத்துடிப்பு வெறும் உணர்ச்சிகளையே அடித்தளமாக்க்கொண்டது.

அந்தப் பருவத்தில் காதலும் தோன்றும்; காம்மும் தோன்றும்.

ஒருபெண்ணிடம் புனிதமான காதல் தோன்றிவிட்டால், உடல் இச்சை உடனடியாக எழாது.

அவளைப்பார்க்க வேண்டும். பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். பேச வேண்டும். பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை வளரும்.

அவளைக்காணாத நேரமெல்லாம் கவலைப்படும்.

கனவு காணும்.

கற்பனை செய்யும்.

மிகவும் சிறு பருவத்தில் மட்டுமே அத்தகைய புனிதக் காதல் தோன்றும்.

அது நிறைவேறி, வாழ்க்கை வெற்றிகரமாக நடப்பதும் உண்டு; நிறைவேறாமல் தலையணையைக் கண்ணீரால் நனைப்பதும் உண்டு. நிறைவேறிய பிறகு கூட்டுறவில் தோல்வி ஏற்படுவதும் உண்டு.

ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும்போது உடல் இச்சை உந்தித் தள்ளுமானால், அந்தக் காதல் ஆத்மாவின் ராகம் அல்ல; சரீரத்தின் தாளமே!

உடல் இச்சையால் உந்தித்தள்ளப்படும் எந்த இளைஞனும் நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தவறிவிடுகிறான்.

எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவனுக்குப் பிடிக்கிறது.

அவள் சரியானவள், இவள் தவறானவள் என்று உணர முடியாமல் போகிறான்.

பெரும்பாலும் தவறான ஒருத்தியே அவனுக்கு வந்து சேருகிறாள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:31 pm

பூரித்து நிற்கும் சரீரத்தில் மட்டுமே ஒருவனுடைய பார்வை லயித்துவிட்டால், அந்தச் சரீரத்துள்ளே இருக்கும் இதயத்தின் சலனத்தை, சபலத்தை, அகங்காரத்தை, மோசத்தை, வேஷத்தை அவன் அறிய முடியாமல் போகிறது.

ஆனால் ஆத்மாவின் ராகம் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக் கருநீலக் கண்களை மட்டும் கவனிக்கிறது.

அந்தக்கருநீலக் கண்கள் அவனைப் பார்த்து நாணுவதிலும், அச்சப்படுவதிலும் ஆத்மாவின் புனித்த் தன்மை வெளியாகிறது.

அங்கே உடல் உருவம் மறைந்து, உள்ளமே மேலோங்கி நிற்கிறது.

புனிதமான அந்தக் காதலை அறியாதவர்கள் உடல் இச்சையால் தவறான பெண்களை மணந்து, நிம்மதி இழந்து விடுகிறார்கள்.

எதிர்காலக்குடும்ப நிம்மதியையும் ஆனந்தத்தையும் நாடும் இளைஞன், எத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு வடமொழியில் ஒரு சுலோகம் உண்டு.

கார்யேஷூதாசி
கரணேஷூ மந்திரி
ரூபேஷூ லட்சுமி
க்ஷமவா தரித்ரி
போத்யேஷூ மாதா
சயனேஸூ வேஸ்யா
சமதர்ம யுக்தா
குலதர்ம்பத்தினி

-சேவை செய்வதில் தாசியைப் போலவும்,
யோசனை சொல்லுவதில் மந்திரியைப்போலவும்,
அழகில் லட்சுமியைப் போலவும்,
மன்னிப்பதில் பூமாதேவியைப்போலவும்,
அன்போடு ஊட்டுவதில் அன்னையைப் போலவும்,
மஞ்சத்தில் கணிகையைப் போலவும்,
நடந்து கொள்ளக்கூடிய ஒருத்தியே குலதர்ம பத்தினி என்கிறது அந்த சுலோகம்.

கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி’ என்று பழமொழிக்கேபக்கணவனுக்கு என்னென்ன நேரங்களில் என்னென்ன தேவை என்பதை வீட்டுகு வந்த சில நாள்களிலேயே கண்டு கொண்டு, அந்தக் கடமைகளைச் செய்வதில் அவள் அடிமைபோல் இயங்க வேண்டும். (வடமொழியில் தாசி என்றால் அடிமை)

அவள் கல்வியறிவுளவளாய், இக்கட்டான நேரங்களில் நல்ல யோசனை சொல்பவளாய், ஒரு மந்திரியைப் போல இயங்க வேண்டும்.

‘பார்ப்பதற்கு லட்சுமி மாதிரி இருக்கிறாள்.’ என்கிறார்களே, அந்தமகாலட்சுமியைப் போன்ற திருத்தமான அழகு இருக்க வேண்டும்.

அழகு, என்றால் முடியை ஆறு அங்குலமாக வெட்டி, ஜம்பரைத் தூக்கிக் கட்டி, முக்கால் முதுகுபின்னால் வருவோருக்குத் தெரிகிற மாதிரி ஜாக்கெட் போட்டு, பாதி வயிற்றையும்பார்வைக்கு வைக்கும் நாகரிக அழகல்ல;

காஞ்சிபுரம் கண்டாங்கி கட்டி, அரைக்கை ரவிகை போட்டு, ஆறடிக் கூந்தலை அள்ளி முடித்து, மல்லிகைப் பூச்சூடி, முகத்துகு மஞ்சள் பூசி, குங்கும்ப் பொட்டு வைத்து, கால் பார்த்து நடந்து வரும் கட்டழைகையே, ‘மாகலட்சுமி போன்ற அழகு’ என்றார்கள்.

அவள் பார்க்கும்போதுகூட நேருக்குநேர் பார்க்கமாட்டாள்.

“யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்”

- என்றான் வள்ளுவன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:31 pm

‘ஒரு கண் சிற்க்கணித்தாள் போல நகும்’ என்பதும் அவளே.

எந்த ஆடவனின் அழகும் ஒரு பெண்ணின் பார்வையில் திடீரென்ற அதிர்ச்சியைத் தருமென்றால் மகாலட்சுமி மோற் குலப்பெண்கள், அந்த அதிர்ச்சிக்குப் பலியாகி விடுவதில்லை.

இடி தாங்கிக் கருவி, இடியை இழுத்துக் கிணற்றுக்குள் விட்டுவிடுவது போல் அழகான ஆடவன் தந்த அதிர்ச்சியை அடுத்த கணமே அவர்கள் விரட்டி விடுகிறார்கள்.

ரூபத்தில் மகாலட்சுமி, என்று சொல்லுகிற சுலோகம், அப்படிப்ட்ட ரூபத்திலுள்ள இதயத்தையும் மகாலட்சுஇயின் இதயமாகவே காட்டுகிறது.

பொறுத்தருள்வதில் அவள் பூமாதேவியைப் போல் இருக்க வேண்டும்.

கணவனது சினத்தைத் தணிக்கும் கருவியாக இருக்க வேண்டும்.

அவனது கோபத்தில் எண்ணெய் ஊற்றி குடும்பத்தை இரண்டாக்கி விடக்கூடாது.

நல்ல குலப் பெண்களால் அது முடியும். அறுசுவை உணவை அன்போடு ஊட்டுவதில், அவள் தாய்போல் இருக்க வேண்டும்.

‘தாயோடு அறுசுவைபோம்’ என்பது, நம் முன்னோர் மொழி.

பள்ளி அறையில் அவள் கணிகையைப் போலவே நடந்துகொள்ள வேண்டும். கணிகையின் சாகசம், சாதுர்யம், ஊடல், கூடல் அனைத்தும் உள்ளவளாய் இருக்க வேண்டும்.

மீண்டும் அவளையே பார்க்க வேண்டும். என்ற ஆசை கணவனுக்கு எழ வேண்டும்.
-அப்படிப்ட்ட ஒருபெண்ணைத் தன்பத்தினியாக ஏற்றுக்கொண்டவன், பெரும்பாலும் கெட்டுப் போவதும் இல்லை. வாழ்க்கையில் தோல்வியடைவதும் இல்லை.

நல்ல பெண்ணை மணந்தவன்,முட்டாளாய் இருந்தாலும், அறிஞனாகிவிடுகிறான். அவன் முகம் எப்பொழுதும் பிரகாசமாயிருக்கிறது.

தவறான பெண்ணை அடைந்தவன், அறிஞனானாலும் முட்டாளாகி விடுகிறான். அவன் முகத்தில் ஒளி மங்கி விடுகிறது.

எல்லாம் சரி. அத்தகைய நல்ல பெண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

அதற்குப் பாண்டிய நாட்டு இந்துக்களிடையே ஒருபழமொழி உண்டு.

‘தாயைப் பார்த்துப்பெண்ணெடு
தரத்தைப்பார்த்து வரவிடு
நிலத்தைப் பார்த்து பயிரிடு
நேரம் பார்த்து முடிவெடு’
- என்பார்கள்.

“தாயைத் தண்ணீர்த் துறையில் பார்த்தால்,
மளைப் படிக்கட்டில் பார்க்க வேண்டாம்” என்பார்கள்.

“தாயைப் போலபிள்ளை நூலைப்போல சேலை” என்பார்கள்.

தாயின் குணங்கள் பெண்ணுக்கும், தந்தையின் குணங்கள் பிள்ளைக்கும் படிவதாக ஐதீகம்.

அப்படிப் படியாமலும் போவதுண்டு; அது விதி விலக்கு.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:31 pm

ஆகவே, தாயைப் பற்றித் தெரிந்து கொண்டால்,பெண்ணைப்பார்க்க வேண்டியதில்லை.

இளைஞரின் துடிதுடிப்பு தாயைப்பற்றிக் கேள்வி கேட்பதில்லை. பெண்ணின் வாலிப்பான அங்கங்களே அவன்நினைவை மயக்குகின்றன.

அதனால்தான் ‘பெற்றோர் பார்த்து மகனுக்குப்பெண் தேட வேண்டும்’ என்கிறார்கள்.

பெற்றவர்கள் பெண் பார்க்கும்போது, பெண்ணின் குலம் கோத்திரம் அனைத்தையும் ஆராய்ந்து பார்த்தபிறகுதான், பேசி முடிக்கிறார்கள்.

அத்தகைய திருமணங்ள் - நிதானமாக அறிந்து முடிக்கப்ட்ட திருமணங்கள். நூற்றுக்குத்தொண்ணூறு வெற்றிகரமாக அமைந்திருக்கின்றன.

ஆத்திரத்தில் காதல்
அவசரத்தில் கல்யாணம்
-என்று முடிந்த திருமணங்கள். நூற்றுக்குத் தொண்ணூறு தோல்வியே அடைந்திருக்கின்றன.

ஆகவே, ஆயுள்காலக் குடும்ப வாழ்க்கைக்கு நிம்மதி வேண்டுமென்றால், பெணகள் தேடும் பொறுப்பை பெற்றோர்களிடமே விட்டுவிட வேண்டும்.

காவியத்துக்குச் சுவையான காதல் வாழ்க்கை, பல பேருக்கு நேர்மாறான பலனையே தந்திருக்கின்றது. (விதி விலக்குகளை இதில் நான் சேர்க்கவில்லை)

குடிப்பிறப்புப் பார்த்துதான பெண்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால் வாழ்க்கை மழுவதும் அமைதி இழந்து, அவமானம் சுமந்து, அழுது நொந்து சாக வேண்டியிருக்கும்.

‘குடிப்பிறப்பு’ என்பது ஜாதியைக் குறிப்பதல்ல; பெண் பிறந்த குடும்பத்தையே குறிப்பது.

எந்த ஜாதியிலும் நல்லபெண்கள் தோன்றுகிறார்கள்; கெட்ட பெண்களும் இருக்கிறார்கள்.

நல்ல பெண்களைத் தேர்ந்தெடுப்பதில் ஜாதி- மதம் -பார்ப்பது பயன்ற்றது.

குடிப்பிறப்புத்தான் இன்றியமையாத்து.

இலங்கையில் சீதையைக் கண்டு திரும்பிய அநுமன், இராமனிடம் இப்படிச் சொல்கிறான்.

“விற்பெரும் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பின்
நற்பெரும் தவத்த ளாய
நங்கையைக் கொண்டே னில்லை;
இற்பிறப் பென்ப தொன்றும்
இரும்பொறை என்ப தொன்றும்
கற்பெனும் பெயர தொன்றும்
களிநடம் புரியக் கண்டேன்!”

“ஆரியப் புத்ரா! நான் இலங்கையின் சீதை என்னும் நங்கையைக் காணவில்லை.

“குடிப்பிறப்பு என்ற ஒற்றுமையும், சிறந்த பொறுமை எனும் ஒன்றையும், கற்பு எனும் ஒன்றையும் கண்டேன்” என்கிறான்.

“நலத்தின் கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப்படும்”

என்றான் வள்ளுவன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:33 pm

“நடத்தையின் குற்றம் குலத்தின் குற்றமே” என்பது வள்ளுவன் வாதம்.

ஆகவே, ஒரு பெண்ணின் குடிப்பிறப்பைக்கூர்ந்து அறிதல் இன்றியமையாத்து.

நற்குடிப் பிறப்பை அறிந்துகொண்டு விட்டால், பிறகு பெண்ணின் உருவத்தை மட்டும் பார்த்தால்போதும் மற்ற குணங்கள் தாய் வழியே வந்திருக்கும்.

பொறுப்பற்ற இளைஞன், குடும்ப몮பொறுப்பை மேற்கொண்ட பிறகு, அந்த ரதம் நீண்ட தூரம் செல்ல வேண்டிய ரதம் என்பதை அறிந்தால், இதில் எச்சரிக்கையாக இருப்பான்.

நல்ல துணை கிடைக்காமல், பைத்தியக்கார்ரைப் போல் உலவும் துர்பாக்கியசாலிகளின் கண்ணீரில் இருந்து, பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் பாடத்தை இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

“பத்தாவுக்கேற்ற பதிவிரதை யாமானால்
எத்தாலும் கூடி வாழலாம் - சற்றேனும்
ஏறுமாறாக இருப்பாளே யாமாயின்
கூறாமற் சந்தியாசம் கொள்!”

“சண்டாளி சூர்ப்பநகை தாடகையைப்போல்வடிவு
கொண்டாளைப்பெண்ணென்று கொண்டாயே தொண்டா
செருப்படித்தான் உந்தன் செல்வமென்ன செல்வம்
நெருப்பிலே வீழ்ந்திடுதல் நேர்!”

-என்றான் தமிழ் மூதாட்டி.

“கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையை
எடுத்(து)
அப்புறம் தன்னில் அசையாமல் முன்வந்(து)
அயல்வளைவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்வந்(து)
உறங்குவாளை
எப்படி நான் நம்புவேன், இறைவா
கச்சி ஏகம்பனே!”

என்று புலம்பினார் பட்டினத்தார்.

சித்தர்கள், ரிஷிகள், சந்நியாசிகள் பலர் மனைவியால் விரக்தியுற்ற அப்படி ஆனவர்கள் என்பதால்தான் ந்தி மூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்கிறார்கள்.

“இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை
இல்லாளும் இல்லாறே ஆமாயின் -இல்லால்
வலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்
புலிகிடந்த தூறாய் விடும்”

இதுவும் மூத்தோர் மொழி.

Sponsored content

PostSponsored content



Page 6 of 15 Previous  1 ... 5, 6, 7 ... 10 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக