புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
6 Posts - 46%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
372 Posts - 49%
heezulia
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
25 Posts - 3%
prajai
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_m10அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள இந்துமதம்


   
   

Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 11:36 am

First topic message reminder :

அர்த்தமுள்ள இந்துமதம் - பாகம் I


1. உறவு


அர்த்தமுள்ள இந்துமதம் - Page 3 Kanari10

‘மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டு விட்ட ஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர்

காட்டு மிராண்டிகளாகச் சிதறிக்கிடந்த மனிதர்கள் குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள். அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் ‘ஊர்’ என்று அழைகப்படது.
அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் ‘நகரம்’ என்றழைக்கப்பட்டது.

தனி மனிதர்கள் ‘சமூக’மாகி விட்டார்கள்.

தனி மனிதனுக்கான நியதிகளோடு சமுதாயத்திற்காகச் சில சம்பிரதாயங்களும் உருவாயின.

அந்தச் சம்பிரதாயங்களுள் சில புனிதமாக்க் கருதப்பட்டு தருமங்களாயின.

கணவன் - மனைவி உறவு, தாய்-தந்தை பிள்ளைகள் உறவு, தயாதிகள்- பங்காளிகள் உறவு, ஊர்ப்பொது நலத்துக்கான கூட்டுறவு முதலியவைகள் தோன்றின.

தந்தைவழித் தோன்றல்களெல்லாம் ‘பங்காளி’ களாவும், தந்தையுடன் பிறந்த சகோதரிகளெல்லாம் ‘தாயாதி’ களாகவும் ஒரு மரபு உருவாயிற்று.

வார்த்தைகளை கவனியுங்கள்.

தந்தைவழி பங்குடையவன் என்பதாலே ‘பங்காளிய யாகவும், தாயை ஆதியாக வைத்து விளைந்த சகோதரத்துவம் ‘தாயாதி’ என்றும் கூறப்பட்டது.

‘சகோதரன்’ என்ற வார்த்தையே ‘சக உதரன்- ஒரே வயிற்றில் பிறந்தவன்’ என்பதைக் குறிக்கும்.

சம்பிரதாயங்களாகத் தோன்றிய உறவுகள் மரபுகளாகி, அந்த மரபுகள் எழுதாத சட்டங்களாகிவிட்டன.

இந்த உறவுகளுக்குள்ளும், பொதுதவாகச் சமூகத்திலும் நிலவ வேண்டிய ஒழுக்கங்கள் சம்பிரதாயங்களாகி, மரபுகளாகி, அஐயும் சட்டங்களாகி விடன.
இந்தச் சட்டங்களே நமது சமூகத்தின் கௌரவங்கள்: இந்த வேலிகள் நம்மைக் காவல் செய்கின்றன.

இந்த உறவுகள், ஒழுக்கங்களுக்கும் நம்மதிக்குமாக உருவாக்கப்பட்டவை.
ஆனால் இவை மட்டும்தானா உறவுகள்?

இந்து மதம் அதற்கொரு விளக்கம் சொல்கிறது.

“பிறப்பால் தொடரும் உறவுகளல்லாமல், பிணைப்பால் தொடரும் உறவுகளே உன்னதமானவை என்பது இந்துமத்த்தத்துவம்

பிறப்பின் உறவுகளே பேதலிக்கின்றன.

பெற தந்தையைப் பிச்சைகு அலையவிடும் மகன் இருக்கின்றான்.
கட்டிய தாரத்தையும் பட்டின் போடும் கணவன் இருக்கின்றான்.

தாயைத் தவிக்கவிட்டுத் தாரத்தின் பிடியில் லயித்துக் கடக்கும் பிள்ளை இருக்கிறான்.

கூடப் பிறந்தவனே கோர்ட்டுப் படிக்கட்டுகளில் ஏறி எதிராக நிற்கிறான்.

சமூக மரபுகள் இவற்றை ஒழுக்க் கேடாக்க் கருதவில்லை.

முதலில் நமது சமூகங்களுக்கு, ‘இவையும் ஒழுக்க் கேடுகள்’ என்று போதித்தது இந்து மதம்.

கணிகை ஒருத்தியைக் கட்டிலில் போட்டு இரவு முழுவதும் விளையாடுகிறோம். இச்சை தீர்ந்ததும், அவளைத் தள்ளில் படு என்றுதான் சொல்லத் தோன்றுகிறதே தவிர, அங்கு நீக்கமுடியாத பிணைப்பு ஏற்படுவதில்லை.

அந்த உறவு இரவுக்கு மட்டுமே!


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:01 pm

“ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கெனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாத்துமாதிர ‘அலிபி’ தயார் செய்துவிட்டு, அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன்தன் என்னை இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்டியங்களோடு என்னைக் கைதுசெய்துவிட்டார்கள். காரணம் கொலை சொய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்க் கார்ர்கள். சாட்சியம் சரியாக இருந்ததால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு விட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கெனவே செய்த கொலைகளுக்காகவே சாகப் போகிறேன்.”

அவன் சொல்லி முடித்தபோது, ‘அரசன் அன்று கொல்வான்,தெய்வம் நின்று கொல்லும்ய என்று பழமொழியே என்நினைவுக்கு வந்தது.

அப்போது மாலை ஐந்து மணி இருக்கும். அறைக்கதவு மூடப்படும் நேரம். நானும் தர்முவும் எங்களுடைய அறைக்குத் திரும்பினோம்.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார்:

“என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா!”

ஆமாம்,பாம் கொடுத்த, ‘போனஸ்யதான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

அன்று இரவு நான் தூங்கவே இல்லை.

காலை ஐந்து மணிக்கு “முருகா! முருகா!” என்று பலத்த சத்தம்.

அப்போது நான் உணரவில்லை. இப்போது உணருகிறேன்.
“என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்”.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:02 pm

5. மறுபடியும் பாவம் - புண்ணியம்

“இந்து மத்த்தைப்பற்றி எழுத வந்து எங்கெங்கோ நடந்த சம்பவங்களை விரித்துக் கொண்டு போகிறாயே, ஏன்?” என்று நீ கேட்பது எனக்குப் புரிகிறது.

இந்து மத்த்தைப்பற்றி ராமகிருஷ்ணரும், விவேகானந்தரும், காஞ்சி ஆசாரிய சுவாமிகளும், விரிவுரை நிகழ்த்தும் வாரியாரும், பிறரும் சொல்லாத விஈயங்கள் எதையும் நான் புதியதாகச் சொல்லப் போவதில்லை.

ஆனால் அர்கள் சொன்னபடியேதான் உன் வாழ்க்கை நட்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவது என் கடமை.

“ஒவ்வொரு ஒலிக்கும் எதிரொலி இருக்கிறது” என்பது அவர்கள் வாதம்.

அப்படி விவாதித்தபோது கண்ணெதிரே நடந்த சாட்சியங்களை அவர்கள் காட்டவில்லை. த்துவார்த்த விளக்கமே கூறினார்கள்.
அந்தத் த்த்துவார்த்தம் என்னைப் போன்றவர்களுக்கு
அந்தத் த்த்துவப்படி நடந்த சம்பவர்களை நான் எழுதுவது உன்னைப் போன்றவர்களுக்கு,
பாவம்,புண்ணியம் என்பதையெல்லாம், வெறும் த்த்துவமாகவே கேட்டுக் கொண்டிருந்த மனிதனுக்கு சில நிகழ்ச்சிகளைச் சுட்டிக் காட்டினால் விளங்கும் என்பதற்காகவே இதை நான் எழுதுகிறேன்.

வாழ்க்கை ஒழுக்கத்தை, சமுதாய ஒழுக்கத்தை அதிகமாக வற்புறத்துவது இந்து மதம்தான்.

அதன் பாண்பாடுகள் உன்னதமானவை. அதன் சடங்குள் அர்தமுள்ளவை.மங்கல வழக்கு, அமங்கல வழக்கு எனப் பிறந்தது இந்துக்களிடம்தான்.
சில சின்னங்களை மங்கலமாகவும், சிலவற்றை அமங்கலமாகவும் அவர்க்க் காட்டினார்கள்.

மங்கல நிகழ்ச்சிகள் நடக்கும் வீட்டில், அமங்கல வார்தைகூடக்கேட்க்க்கூடாது என்றார்கள்.

பெண்ணுக்கு மங்கலம் என்றது தாலி.

திருமணத்தில் கட்டப்படும் அந்தத் தாலியை யார் அபகரித்தாலும், அந்தத் தாலி அவர்கள் குடும்பத்தையே அழித்துவிடும் என்பது, இந்துகள் நம்பிக்கை.

எனக்கொரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது.

பதினான்கு ஆண்டுகளுக்குமுன்னால் நான்படம் எடுக்கத் தொடங்கியபோது, எனது பாட்டுத் திறமையை மட்டுமே வைத்து, ஒரு படமெடுக விரும்பினேன்.

நன்கு பாடக்கூடிய ஒரு நடிகரை அதற்கு ஏற்பாடு செய்தேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:03 pm

ஒரு காலத்தில் ஓகோ என்று விளங்கிய அந்த நடிகர் நான் ஒப்பந்தம் செய்தபோது வறுமையிலிருந்தார்.

அவருடைய மனைவியின் கழுத்தில் தங்க மாங்கல்யம் இல்லை.

அரக்கு மஞ்சளை மஞ்சள் நூலில் கோர்த்து அணிந்திருந்தார்.

தாலி ஓரிடத்தில் அடகு வைக்கப்பட்டிருப்பதாக நடிகர் கூறினார்.

உடனே நான், அதற்கு வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு அவரையும் கூட்டிக்கொண்டு, அடகு பிடித்தவர் வீட்டிற்குப் போனேன்.
நடிகருடைய எல்லா நகைகளுமே அவரிடம்தான் அடகு வைக்கப்பட்டிருந்தன.

தாலிக்கு வேண்டிய பணத்தை மட்டும் கொடுத்துத் தாலியைத் திருப்பிக் கேட்டேன்.

அவர் பணத்தையும் வாங்கிக்கொண்டு, ஏராளமான வட்டி பாக்கியிருக்கிறது; இதை வட்டிக்கு வரவு வைத்துக்கொள்கிறேன்; தாலியைத் தரமுடியாதும என்று சொல்லிவிட்டார்.

பணம் கொடுத்தும் அந்தத் தாலி கிடைக்கவில்லை.

பிறகு நான் மேலும் கொஞ்சம் பணம் கொடுத்து, அவர்புதிய தாலியையே வாங்கி தன் மனைவியின் கழுத்தில் கட்டினார்.

என் படம் நடந்து கொண்டிருந்தபோதே, அந்த நடிகர் ‘இன்சால்வென்ட்’ ஆனார்.

ஆனால் மூன்றாவது மாதமே படம் வெளிவந்ததும் பத்துப் படங்களுக்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணமும் வந்தது. ‘இன்சால்வென்சி’யும் ரத்தாயிற்று. அவருடைய சொத்துக்கள் அவருக்கே திரும்பி வந்தன. இன்று அவர் சுகமாக நாடகங்களிலும் படங்களலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவருடைய மனைவி உத்தமி.

புராண காலத்துச் சீதை, வரலாற்றுக் காலத்துக் கண்ணகிக்கு நிகரான சத்தியவதி.

அந்தச் சத்தியவதியின் தாலியை வைத்திருந்தாரே அவரது குடும்பம் பட்ட பாடும், அதில் ஏற்பட்ட குழப்பும், அவர் நோயில் இழுத்துக்கிடந்து மாண்டதும் விவரிக்கமுடியாத பெருங்கதை.

அந்தத் ‘தாலி’ அவரது குடும்பத்தின் நிம்மதியையே அழித்துவிட்டது.

இந்துக்களின் மங்கல சூத்திரம் தன் சக்தியைக் காட்டி விட்டது.

பாவத்தின் விலை, அவரது வாழ்நாளிலேயே கிடைத்துவிட்டது.

நிற்க,

‘அன்னையும் பிதாவும் முதல்தெய்வம்’ என்பது இந்துக்கள் சம்பிரதாயம்.

‘தாயைப் பணிந்தவன் கோவிலுக்குப் போக வேண்டாம்’ என்பார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:03 pm

தாய்-தந்தையைச் சுற்றி வநுத கணபதிக்குத்தான் சிவபெருமான் மாம்பழத்தை அளித்தார்; உலகத்தைச் சுற்றி வந்த முருகனுக்கு அல்ல.

தாய் தந்தையருக்குத் தொண்டு செய்து கொண்டிருந்த ஒருபக்தன், மாறுவேடத்தில் வந்த இறைவனைக் கவனிகவில்லை என்உம், இறைவன் ஆத்திரமுற்றபோது ‘தன் முதற்கடமை இதுதான்’ என்று அவன் உறுதியாக்க் கூறினான் என்றும், இறைவனே மனமயங்கி, அவன் பாத்த்தில் விழுந்தான் என்றும் நாம் படிக்கிறோம்.

அந்தத் தாய் தந்தையரை மனமார நேசிக்கும் எவனுகும் எதிர்காலம் உண்டு.

நான் கண்ணெதிரிலேயே பாரகிறேன். பலரை.

ஆனால் தாயின் குரலைக் கேளாத ஒருவருடைய கதையை உனக்குச் சொல்ல வேண்டும்.

அவர் என்னுடைய சமூகத்தைச்சேர்ந்தவர்; ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர்.

அரது விதவைத் தாய் தன் வயிற்றைக் கட்டி வைத்து மகனுக்குச்சோறூட்டுவாள்.

எங்கள் பக்கத்தில் பிள்ளைகள் இல்லாத பணக்கார்ர்கள் ‘சுவிகாரம்’ எடுகும் பழக்கம் பரவலாக உண்டு.

அந்தச் சுவிகாரத்தில் பிள்ளையைப் பெற்ற தாய்க்கு விலையாக ஒரு தொகையையும் தருவார்கள்.

அந்தத் தொகைக்காகவும், தன் பிள்ளையாவது நல்ல இடத்தில் வாழட்டுமே என்றும் சுவிகாரம் விட்டு விட்டாள், அந்தத் தாயார்.

ஏழை மகன் லட்சாதிபதியானான். பணக்காரப் பெண்ணைக் திருமணம் செய்துகொண்டான். வசதியான வாழ்க்கையில், பெற்ற ‘தாயையே’ மறந்துவிட்டான்.

அவனால் மறக்க முடிந்தது; தாயினால் அது முடியவில்லை.

ஒருநாள் நான் அந்த மனிதனைப் பார்க்கப் போனேன். காய்கிற வெயிலில், அந்த வீட்டின் வெளித் திண்ணையில், அந்த அம்மையார் உட்கார்ந்திருந்தார்கள்.

என்னைப் பார்த்ததும் “ஐயா, நீ யார்?” என்று கேட்டார்கள்.

“என்ன ஆச்சி? என்ன வேண்டும்?” என்று நான் கேட்டேன்.
உடனே அந்த மூதாட்டி, “தம்பி, உள்ளே இருப்பது ன்பிளைதான். சுவிகாரம் விட்டுவிட்டேன். அவைப்பாகுறதுகாக்க் காலையில் இருந்து திண்ணையிலேயே உட்கார்ந்திருக்கேன். ஒருத்தரும் விடமாட்டேங்கிறாங்க. நீயாவது எம் மங்கிட்ட கொஞ்சம் சொல்லேன்ம என்றார்கள்.

என் கண்கள் கலங்கிவிட்டன.

ஆசையாக ஒரு கூடையில் பணியாரமும் உளுந்து வடையும் கொண்டு வந்து, துணியல் அதை மூடி வைத்திருக்கிறார்கள், தன் மகனுக்குத் தன் கையாலேயே ஊட்டி விடுவதற்காக.

நான் ஏகமாக உள்ளே போய், அந்தப் பையனைப் பார்த்து, “உன்னைப் பெற்ற தாயார் வந்திருக்கிறார்கள். கொஞ்சம் உள்ளே கூப்பிட்டு உட்கார வையப்பா” என்றேன்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:03 pm

அவர் கோபமக “அவுங்களுக்கு எப்பவும் இதே வேஐயாய்ப் போச்சு. வராதே வராதேன்னா எதுக்காக அழைத்து, “இந்தா ஆத்தா வந்திருக்காளாம், ஒரு இருநூறு ரூபாய் கொடுத்து, இனிமே ந்தப் பக்கம் வர வேண்டாம் என்று சொல்லும என்றார்.

“அதை நீயே கூப்பிட்டுச் சொல்லேன்” என்றேன் நான்.

அவர் மறுத்துவிட்டார், மனைவிக்கு பயந்து.

கணக்குப்பிள்ளை அந்தப் பணத்தைக் கொண்டு போய்க் கொடுத்ததும் அந்த அம்மையார்,
“அப்பச்சி! தம்பி! ஐயா! ஒருதரமாவது பார்த்துட்டுப் போயிடுறேன்!” என்று சத்தம் போட்டார்கள்.
அந்தக் குரல் அந்தப் பாவியின் காதில் விழவில்லை. விளைவு என்ன தெரியுமா?
தாயின் குரலைக் கேட்காத அந்தக் காதுகள், வேறு எந்தக்குரலையும் கேட்க முடியாதபடி, ‘டமாரச்’ செவிடாகிவிட்டன.

மனைவி மயக்கத்தில் மாதாவை மறந்தவன் கதி யென்ன என்பதைப் புராணங்களைப் படித்து நீ நம்பவில்லையானால், உன் பக்கத்து வீடுகளில் கேட்டுக் பார். இப்படியொரு அங்கேயும் நடந்திருக்கும்.

தாய் - தகப்பனுக்குச்செய்யும் பாம் உன் தலையைச் சுற்றி அடிக்கும்.

ஆயிரம் மனைவிமார்களை விலைக்கு வாங்கலாம்; அன்னையும் பிதாவும் மறுபடி வரமுடியாது.

இந்துக்கள் சொன்ன த்த்துவம் வேடிக்கைக் கதையல்ல.

‘யாருகு நீ பாவம் செய்தாலம் அதற்குத் தண்டனை உண்டு’ என்பது அழிக்க முடியாத உண்மை.

இத்தகைய நிகழ்ச்சிகளை நான் விவரித்துக் கொண்டே போகலாம்.
எவ்வளவோ பாவிகள் தங்கள் வாழ்நாளிலே தண்டிக்கப்ட்டதை நான் பார்த்திருக்கிறேன்..

‘பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனை’ என்து, எவ்வளவு உண்மை!

இறைவன் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை இந்துக்கள் சொன்னதுபோல் வேறு யார் சொன்னார்கள்?

இறைவா, இந்து சமூகம் உன்னையும் உன் ராஜாங்கத்தையும் சரியாக அளந்து வைத்திருப்பதை எண்ணி எண்ணி நான் வியக்கிறேன்.

சொந்த நிகழ்ச்சிகளில் இந்த அனுபவத்தைக் காணாதரை, ஞானமார்க்க உபதேசிகளை நான் கேலி செய்த்துண்டு.

ஒவ்வொரு படிக்கட்டிலும், ஒவ்வொரு உண்மையைக் காணக் கான, நமது ஞானிகள் ‘அறிவுலகத்தின் சுதரளிகள்’ என்றுதான் நான் நம்புகிறேன்.

இசையின் சுவையைப் பாடல் அதிகப்படுத்துவது போல், தத்துவத்தின் உண்மையைச் சம்பவங்களே உறுதி செய்கின்றன.

‘இந்து மகாசமுத்திரம்’ என்ற பெயர். இந்து மதத்துதக்கே பொருந்தும்.

‘பாவமும் குற்றமும் செய்துவிட்டுத் தெய்வத்தை வணங்கினால் பலன் உண்டா?’

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:04 pm

6.புண்ணியம் திரும்ப வரும்

“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்கும்”


ஆனால், செய்த வினையும் செய்கின்ற் தீவினையும், ஓர் எதிரொலியைக் காட்டாமல் மறையமாட்டா.
நீ விதைத்த விதைகளை நீயே அறுவடை செய்தபின்னால்தான் அந்த நிலத்தில் வேறுபயிர்களைப் பயிரிட முடியும்.

கொலை, களவு, சூது அனைத்தையும் செய்துவிட்டு, “குமரா! முருகா!” என்று கூவினால் குமரன் நீ வரும் கோயிலுக்குக் கூட வரமாட்டான்.

இதிலும் எனக்கோர் அனுபவம் உண்டு.

என்னிடம் படம் வாங்கிய ஒருவர், படத்துக்காக வசூலான கணக்குக்காட்டாமல், பொய்க் கணக்கு எழுதி, நான் அவருக்கு முப்பதினாயிரம் ரூபாய் தர வேண்டும் என்று கோர்ட்டிலே வழக்குத் தொடர்ந்தார்.

வேறு வழியில்லாமல் வயிற்றெரிச்சலோடு நானும் கொடுக்க வேண்டி வந்தது.

அவர் ஏற்கெனவே ஒரு பணக்காச செட்டியாரையும் ஆச்சாள்புரத்துக்கார்ர் ஒருவரையும் ஏமாற்றியவர்.

அவரது மூலதனமே ஏமாற்றுவதுதான்.

ஏமாற்றி என்ன பயன்?

அத்தனை பணமும் போய், நகை நட்டுகளும் போய், அன்றாடச் சோற்றுக்கே இன்று அலை மோதுகிறார்.

அவரை அடிக்கடி வடபழனி கோவிலில் காணலாம்.

உடம்புக்குச் சட்டையில்லாமல் இடுப்புக்குத் துண்டு கட்டிக்கொண்டு, அந்தப் ‘பாபாத்மா’ தினமும் கோயிலுக்கு வருகிறது.

நெற்றியில் கட்டுக்கட்டடாக விபூதி; இரண்டு காதிலும் கதம்ப몮 பூக்கள்; கையில் தேங்காய் பழம் கொண்ட தட்டு.

அந்த மனிதர் தினந்தோறும் முருகனைத் தேடுகிறார்.

முருகனோ அவரைக் கண்டாலே ஓடுகிறான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:04 pm

ஒருவன் வந்த வழியைப் பார்த்துத்தான், கந்தன் வரப்போகும் வழியைத் திறந்து விடுகிறான்.

ராஜாங்கம் கட்டி ஆண்டவனுங்கூட, நேர்மை தவறி நடந்தால் நிம்மதி இல்லாமல் துடிக்கிறான்.

இறைவனில் தராசு வணிகனின் தராசு அல்ல; அது எடையைச் சரியாகவே போடுகிறது.

குளத்திலே ஒருரூபாயைத்தவறிப் போட்டுஇட்டால், குளம் வற்றியுத்ம அது உன் கைக்கே கிடைக்கிறத - அது நேர்மையாகச் சம்பாதித்த பணமாக இருந்தால்.

ஒரு நடைபாதையில் நீ கணாடித் துண்டைப்போட்டால், நீ திரும்பி வரும்போது, அது உன் காலிலேயே குத்துகிறது.

குளிக்கும் அறையில் நான் எசஞ்சிலைத் துப்பி விட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து நான் உள்ளே போன போது, அது என் காலையே வழுக்கி விட்டது.

விதி என்பது இறைவன் விதித்தது மட்டுமல்ல; நீயே விதித்ததுமாகும்.

ஊரையெல்லாம் கேலி செய்த ஒரு பணக்கார்ர். ஊர் முழுவதும் கேலி செய்யும் நிலையில் வாழ்ந்து மடிந்ததை நான் அறிவேன். அவரும் பக்தர்தான்!

பக்தி செய்யும் எல்லாருக்கும் பரமனருள் கிடைப்பதில்லை.

அது பாவம் செய்யாதவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது.

‘உண்மையே தெய்வம்’ ‘ அனபே தெய்வம்’ என்று இந்து மதம் சொன்னது அதனால்தான்.

‘நம்பினோர் கெடுவதில்லை. நான்கு மறைத்தீர்ப்பு” உண்மைதான். ‘கெட்டவன்’ நம்பினால் அவனருள் கிட்டுவதில்லை.

அதுவும் உண்மைதான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:05 pm

காலங்களை நிர்ணயிக்கின்வனும், வாழ்க்கையின் கதியையே உருவாக்குகின்றவனுமான பரம்பொருள், உன் வாழ்க்கைக்குப் பொறுப்பேற்றுக் கொளவில்லை, ஆத்மாவுக்கே பொறுப்பேற்றுக் கொள்கிறான்.

மத்த்துறையை ‘ஆத்மார்த்தத்துறை என்பது அதனால்தான்.

ந்தியின் ஓட்டம் பள்ளத்தை நோக்கியே; அந்த நாயகனின் ஓட்டமும் எளிமையான நேர்மையை நோக்கியே.

ஒன்று, அறியாமல் செய்யும் தவறுகள் பாபங்கள் அல்ல; அவை வெறும் தவறுகளே!

அவற்றுக் உடனே மன்னிப்பு உண்டு.

அறிந்து செய்யும் தவற், தவறல்ல: அது குற்றம்.
அதற்கு மன்னிப்புக் கிடையாது!

ஆண்டவனின் அவதாரங்களேகூட, அறியாமல்தவறு செய்திருப்பதாக வழக்குக்கதைகள் உண்டு.

ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை கங்கைக்குக் குளிக்கச்சென்றார்.

அவரது அம்பாறாத் தூணியில் ஒரே ஒரு அம்பு மட்டுமே இருந்தது.
அந்த அம்பைப் படுக்கை வசமாக வைக்கக்கூடாதென்ற மரபுப்படி, அதைப் பூமியிலே குத்தி வைத்தார்.

‘ஒற்றை அம்பை ஊன்றி வை என்பது வழக்கு. அம்பை ஊன்றிய ராம்பிரான், கங்கையில் குளித்துவிட்டுக் கரையேறினார்.

ஊன்றிய அம்பை எடுத்தார்.

அதிலொரு தேரைக்குஞ்சு குத்தப்பட்டிருந்தது.

பூமிக்குள்ளிருந்த தேர்க்குஞ்சை அவர் அறியாமல் குத்திவிட்டார்.

தேரைக்குஞ்சு சாகும் தருவாயிலிருந்தது.

ராம்பினான் கபண்கள் கலங்கிவிட்டன்.

“ஐயோ, தேரையே! நான் குத்தும்போது நீ கத்தியிருந்தால் காப்பாற்றி இருப்பேனே. ஏன் கத்தவிலை?” என்றார்.

அதற்குத் தேரை சொன்னது;

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:05 pm

“பெருமானே! யாராவது எனக்குத்துண்பம் செய்யும்போதெல்லாம் நான் ‘ராமா ராமா’ என்றுதான் சத்தமிடுவேன். அந்த ராமனே என்னைக் குத்துகிறார் என்னும்போது, யார் பெயரைச் சொல்லி ஓலமிடுவேன்?”

ராம்பிரான் கண்ணீரோடு சொன்னார்: “தேரையே, என்னை மன்னித்துவிடு. இதுநான் அறியாமல் செய்த பிழை.”

தேரை சொன்னது:

“பெருமானே! ‘அறியாமல் செய்கின்ற பிழைகள் அப்பொழுதே மன்னிக்கப்படுகின்றன’ என்று சொன்னது உன் வாக்குத்தானே!”

தேரையின் ஆவி முடிந்தது. நான் பாவம் என்று குறிப்பிடும்போது, நீ அறியாமல் செய்த பிழைகளை எல்லாம் பாபக்கணக்கில் சேர்காதே.

சிறு வயதில் கடன் தொல்லை தாங்காமல் நான் ‘திருடியிருக்கிறேன்’ - என் தாயின் பணத்தைத்தான்.

திருடிவிட்டு நிம்மதியில்லாமல் இருந்திருக்கிறேன். கடவுளை வேண்டியிருக்கிறேன் - “இறைவா மன்னி” என்று.

அந்தத்தவற்றைக்கடவுள் மனிக்கவில்லை என்றால் இந்த வாழ்க்கையை எனக்கு அருளியிருப்பாரா?

என்னுடைய நண்பர்களில் என்னிடம் உதவி பெறாதவர் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

உதவி பெற்றவர்களில் நன்றியுடையவர்கள் குறைவு.

என்னுடைய ஊழியர்களில் என்னை ஏமாற்றாதவர்கள் குறைவு.

ஏமாற்றியவர்களில் நன்றாக வாழ்கின்றவர்கள் குறைவு.

எழுத்தின்மூலமே சம்பாதித்தவர்களில் என்னைப்போல் சம்பாதித்தவர்கள் குறைவு.

சம்பாதித்ததை அள்ளி இறைத்ததில், என்னைப்போல் அள்ளி இறைத்தவர்கள் குறைவு.

இவ்வளவு அறியாமைக்கிடையிலேயும், ஏதோ ஒரு சுடரொளி என்னைக் காப்பாறுகிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sun Nov 02, 2008 12:05 pm

ஏன் காப்பாற்றுகிறது? எதனால் அது என்னைக் காப்பாற்றுகிறது?

‘தர்ம்ம் தலைகாக்கும்’ என்ற இந்துகளின் பழமொழி எனக்கு நினைவுக்கு வருகின்றது.

செய்த பாவம் தலையிலடிக்கிறது - செய்த புண்ணியம் தலையைக்காக்கிறது.

ஆம்: செய்த புண்ணியம் திரும்பி வருகிறது.

புண்ணியம் என்பது, என்றும் எதிலும் நீ செய்யும் நன்றி!

பாவத்தில் முதற்பாவம், நன்றி கொல்லுதல்.

கஷ்ட காலத்தில் எனக்கு ஒரு ரூபாய் உதவியவரை நான் ஞாபகத்தில் வைதுக்கைம்மாறு செய்திருக்கிறேன்.

அந்த நாயகன் அறிய நான் நன்றி கொன்றதில்லை.

ஆகவே பாவம் செய்யாமல்,புண்ணியம் செய்து கொண்டே இறைவனைத்தியானித்தால் உன் வாழ்நாளிலேயே உனக்கொரு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

நான த்த்துவம் பேசவில்லை; அனுபவம் பேசுகிறது.

இந்துமத்த்தின் ஒவ்வொரு அணுவையும் நான் உணர்வதற்கு எதையும் நான் படிக்கவில்லை.

சாதாரணம் பழமொழிகளும் அனுபவத்தில் அவற்றின் எதிரொலிகளுமே, இந்துமத்த்தில் ஆழ்ந்த நம்பிக்கையை எனக்கு உண்டாக்கியிருக்கின்றன.

Sponsored content

PostSponsored content



Page 3 of 15 Previous  1, 2, 3, 4 ... 9 ... 15  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக