புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
77 Posts - 36%
i6appar
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
2 Posts - 1%
prajai
அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_m10அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே)


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Mar 19, 2011 12:01 am

ஸ்ரீராமருக்குப் பிறகு தோன்றியவன் பரதன். ஆனால், அன்னையின் ஆசையில் விளைந்த ஆணைக்குத் தலைவணங்காமல், நேர்மையின் உறைவிடமான ஸ்ரீராமரின் விருப்பத்தைத் தனது விருப்பமாக ஏற்றவன். ராமாயணத்தின் தரத்தை உயர்த்தி யவன்; அண்ணனை ஆண்டவனாகவே பார்த்தவன்; அண்ணன் தந்தைக்குச் சமம் என்பதால், ஸ்ரீராமரின் பாதுகையை ஏற்று, அரசுக்குப் பாதுகாவலனாக மாறி, பக்தனாகத் தோற்றமளித்தவன்.

கைகேயியின் விருப்பப்படி அரசை ஏற்கவில்லை, பரதன். ஸ்ரீராமனின் சேவகனாக இருந்து அவரது அரசைப் பாதுகாக்கும் பணியில் தன்னை இணைத்துக்கொண்டான். உள்ளத்தளவில் ராமருடன் நெருக்கமாகவே இருந்தான்.

ஜட பரதன், துஷ்யந்தனின் மகன் பரதன் என பரதர்கள் பலர் தோன்றியுள்ளனர். ஆனாலும், ஸ்ரீராமனின் தம்பியாகப் பிறந்து, பண்புடனும் நேர்மையுடனும் வாழ்ந்த பரதனின் வாழ்க்கை, பாரதத்துக்கே பெருமை சேர்த்தது.

கைகேயிக்குத் தசரதர் அளித்த வரம், பொய்யாகி விடக்கூடாது என்பதால், ஸ்ரீராமர் வனவாசம் சென்றார். பட்டாபிஷேகத்துக்கு தேதி பார்த்து, அரசுரிமையைத் தர விரும்பிய தசரதரின் எண்ணத்தை ஈடேற்றும் வகையில், ஸ்ரீராமரின் பாதுகையை ஏற்று, அரசுக்குப் பாதுகாவலனாக மட்டுமே இருந்தான் பரதன். பித்ரு வாக்கியப் பரிபாலனம் என்பது அவனது சிறப்பம்சம். ஸ்ரீராமரைப் போலவே அவனும் சிந்தித்தான். பாதுகை மூலம் அவனுக்கு அரசுரிமையைத் தந்தார், ஸ்ரீராமர். அதேபோல், வாலியை விலக்கி சுக்ரீவனுக்கு அரசுரிமை அளித்தார்; ராவணனை விலக்கி விபீஷணனுக்கு அரசுரிமையைத் தந்தார். ஆக, காட்டில் இருந்தாலும், அரசனாகவே இருந்தார் ஸ்ரீராமர்.

வரத்தால் வந்த அரசு முறையற்றது; நீதி நெறியுடன் வந்த அரசு நிலையானது. ராமரின் அவதார நோக்கத்தை அறிந்த பரதன், அண்ணனுக்கு உதவ அரசைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்றான். வனவாசம் முடிந்ததும், அவரிடம் அரசை ஒப்படைக்கத் தயாரான அவனது செயல் வியக்க வைக்கிறது. அந்தக் காலங்களில், தீர்த்தாடனம் மேற்கொள் பவர்கள், செல்வத்தை ஒப்படைத்துவிட்டு, 'காசிக்குச் சென்று வருகிறேன்; அதுவரை இதனைப் பாதுகாக்கவும்; திரும்பி வந்ததும் பெற்றுக் கொள்கிறேன்’ என்று கூறிச் செல்வார்கள். அந்தப் பொருள் 'ந்யாசம்’ எனப்படும். அதேபோல், ஸ்ரீராமர் தனது உரிமையை, ந்யாசமாக பரதனிடம் ஒப்படைத்தார். பிறகு திரும்பி வந்து பெற்றுக் கொண்டார்; பட்டாபிஷேகமும் நடந்தேறியது.

வனவாசம் மேற்கொண்ட பாண்டு, அரசுரிமையை ந்யாசமாக திருதராஷ்டிரரிடம் ஒப்படைத்துச் சென்றான். ஆனால் அவர், ந்யாசத்தை உரிமையாக்கிக் கொண்டதால், உருவானதுதான் மகாபாரதம். அறத்தை மீறிய செயலானது, அனர்த்தத்தில்தான் முற்றுப்பெறும். ஸ்ரீராமர், அறத்தின் வடிவம் என்கிறான் மாரீசன். ராமரை வழிபடும் பரதன், அறத்தின் மறு உருவம். ''தவறு செய்த கைகேயியை அழித்திருப்பேன். 'தாயைக் கொன்றவன்’ என அண்ணன் என்னைப் பழிப்பார் என்பதால் செய்யவில்லை'' எனும் பரதனின் உரை, அறத்தில் அவருக்கு இருக்கிற பிடிப்பை உணர்த்துகிறது (ஹன்யாமஹமிமாம்...).

அரசைத் துறந்து, வாக்குறுதியை நிறைவேற்ற வனவாசம் சென்றார் ஸ்ரீராமர். அரசைத் துறந்து, நாட்டில் இருந்தபடி, தாமரை இலைத் தண்ணீரென உலக சுகத்தில் பற்றின்றி, ராமரின் பாதுகைக்குப் பணிவிடை செய்தான் பரதன். இன்பத்தைச் சுவைக்கும் சூழல் இருந்தும், அதிலிருந்து விலகி இருப்பவனே தீரன் என்பான் காளிதாசன். பற்றற்ற நிலையில் பணியை ஏற்ற பரதனின் பக்குவம், முனிவர்களுக்கான இலக்கணத் தையும் கடந்து நிற்கிறது. ஆக, அறமானது நேரடியாக அரசாட்சி செய்தது; பரதன் சாட்சி யாக உடனிருந்தான்; மக்களின் பார்வையில், அரசின் பிரதிநிதியாக இருந்தான்.

பொய்யும் புனைச்சுருட்டும் ஒன்றுசேர்ந்து உண்மையைக் காட்டுக்கு விரட்டியது. கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கிக் கொண்ட மானைப் போல், பரதனிடம் சிக்கிக்கொண் டோம் என மக்கள் கணிப்பதை அறிந்த பரதன் கோபப்படவில்லை. மாறாக, மகிழ்ச்சியுற்றான் (மித்யாப்ரவ்ரஜி தோராமபுன்னகை. 'ராமர் வனவாசம் ஏற்றாலும், மக்களின் மனதில் அவர்தானே வாசம் செய்கிறார்! அவர்கள், ஸ்ரீராமரையே மன்னராக நினைக்கின்றனர்’ என அறிந்து பூரித்தான்.

மக்களை மகிழ்விப்பதே அரசனின் பணி என்கிறான் காளிதாசன். வனத்தில் உள்ள ஸ்ரீராமர்தான், தேசத்தை ஆள்கிறார் என்கிற பரதனின் ராம பக்திக்குக் கிடைத்த வெகுமதி, மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என்பதுதான். வசிஷ்டரின் அழைப்புக்கு இணங்க, மாமன் வீட்டிலிருந்து அயோத்திக்கு வந்தான் பரதன். கைகேயியின் களியாட்டமறிந்து வெகுண்டான்; விக்கித்துப் போனவன், செய்வதறியாது தவித்தான். ''நீ கேட்ட இரண்டு வரமும் உனக்குப் பலனளிக்கவில்லை.

ஸ்ரீராமரைக் காட்டுக்கு அனுப்பினாய்; அது, உனது வாழ்வை அவலமாக்கியது. தசரதனை இழந்து நீ மட்டுமா விதவையானாய்?! உனது சக்களத்தி களையும் அல்லவா விதவை ஆக்கி விட்டாய்! தசரதனின் இழப்பு, தேசத் துக்கு ஏற்பட்ட இழப்பு. அது, வீட்டுக்கும் இழப்பை ஏற்படுத்தியது. நாட்டையும் வீட்டையும் ஆள வேண்டியவன், காட்டுக்கு விரட்டப்பட்டால், நாடும் வீடும் காடாகிவிடுமே! ஜடாயு, ஸம்பாதி, சுக்ரீவன், அனுமன், விபீஷ ணன், வானரப் படையினர், முனிவர்கள் அனைவரும் ராமருடன் இணைந்து காட்டை நாடாக மாற்றினர் என்றால் மிகையாகாது. ஆக, வனவாசம் சென்ற வனுக்கா துயரம்?! அதனை அளித்த உனக்குத்தானே துயரம்?! உனது இரண்டாவது வரமும் பலனளிக்க வில்லை. அரியாசனத்தில் நான் அமரவும் இல்லை; அரசை ஏற்கவும் இல்லை'' என்றான் பரதன்.

அதுமட்டுமா? ''தசரதனுக்கு உன்னிடம் நெருக்கம் அதிகம். அதுவே அவரின் அழிவுக்குக் காரணமாயிற்று. அளவு கடந்த நெருக்கம், வெறுப்புக்குக் காரணமாவதும் உண்டு (அதிஸ்னேஹ:பாபசங்கீ). பாதகச் செயலில் ஈடுபட்டவனுடன் இணைந்தவனும் தண்டனையை ஏற்க நேரிடும் என்கிறது சாஸ்திரம். கைகேயியுடன் இணைந்த மற்ற இரண்டுபேரும் துயரத் தையே சந்தித்தனர். அவ்வளவு ஏன்... உன்னால், அயோத்தி நகரமே துயரத்தில் ஆழ்ந்தது'' எனும் பரதனின் கணிப்பை பிரதிமா நாடகம் பிரதிபலிக்கிறது.

அயோத்திக்கு வந்த பரதனுக்கு இருப்புக்கொள்ள வில்லை. ஸ்ரீராமர் இல்லாமல் அயோத்தியா எனச் சிந்தித்தவன், அவரைக் காண காட்டுக்கு ஓடினான். கூடவே, படைகளும் பின்தொடர்ந்தன. புடைசூழ வந்த பரதனைக் கண்ட லட்சுமணர் ராமரிடம், ''அண்ணா, அன்னை கைகேயி, தங்களைக் காட்டுக்கு விரட்டினாள். அவளின் மைந்தன், அதுபோதாது என்று படைகளுடன் போர் தொடுக்க வருகிறான்'' என்றான். வனத்தில், ஸ்ரீராம ருக்குப் பாதுகாவலனாக விளங்குபவன் லட்சுமணன். என்றைக்கும் இணைபிரியாதவன், அவன். காவலன், எதைக் கண்டாலும், எவரைச் சந்தித்தாலும் அவனது மனம், இதில் ஏதும் பிழை இருக்குமோ என்றே நினைக்கும். லட்சுமணனின் கணிப்பும் அவ்விதமே! அவனிடம் ஸ்ரீராமர், ''பரதனுக்கு என்னிடம் உள்ள பற்று, சொல்லில் அடங்காதது. அவனின் மனதை நான் அறிவேன். என்னை அணைத்து மகிழவே அவன் வருகிறான்'' என விளக்கினார். ஸ்ரீராமர் சொன்னபடியே நடந்ததும், உண்மை உணர்ந்து தெளிந்தான் லட்சுமணன்.

ராமருடன் வனத்துக்குச் செல்ல, லட்சுமணனுக்குச் சுமித்ரையின் அறிவுரை தேவைப்பட்டது. ஆனால், பரதனின் மனமானது, காந்தம் போல் ஈர்க்கப்பட்டு, ஸ்ரீராமரை வந்தடைந்தது. பரதனின் மனமானது, எதிர்பார்ப்பற்ற அன்புடன் ஸ்ரீராமரைப் பற்றிக்கொண்டு இருப்பதையே இது உணர்த்துகிறது. ''14 வருடங்கள் மரவுரி தரித்து, காய்-கனிகளைச் சாப்பிட்டுக் காலம் தள்ளு வேன். நீயில்லாத அயோத்தியில் நுழைய மாட்டேன். பட்டணத்துக்கு வெளியே வந்து, உனது வருகையை எதிர்நோக்கிக் காத்திருப்பேன். அரசுரிமையை, உனது பாதுகைக்கு அளிப்பேன்; அரசைக் கண்காணிப்பேன். வனவாசம் முடிந்ததும், நீ வராவிட்டால் நெருப்பில் இறங்கிவிடுவேன்'' என்றான் பரதன். அவனது உறுதியை உணர்ந்த ஸ்ரீராமர், நெகிழ்ந்து போனார்; அவனை வாரி அணைத்துக் கொண்டார்!

ஸ்ரீராமர் பாதுகையுடன் வந்த பரதன், அயோத்தி மக்களிடம் உரையாற்றினான். ''ராமபிரான், இந்த அரசின் பாதுகாவல னாக என்னைப் பணித்திருக்கிறார். எனவே, அவரின் பாதுகை, அரசனா கிறது. அரச மரியாதைகள் யாவும் பாதுகைக்கே நடைபெறும். வனவாசம் முடிந்ததும், அயோத்தியை அவரிடம் ஒப்படைத்துவிட்டுத் தூய்மையாவதே என் விருப்பம்'' என்றான் பரதன்.

பக்தன், பணியாள், குறிப்பறிந்து செயல்படுபவன், அறநெறி பிறழாதவன் மற்றும் தம்பிக்கு இலக்கணம் எனத் திகழ்ந்தவன், பரதன். அரசியல் தூய்மை மட்டுமின்றி உடன் பிறப்புகளுடனான உறவுப் பெருமையையும் உணர்த்துகிறது, அவனது சரிதம்.

நன்றி விகடன்..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அரசியல் தூய்மைக்கு பரதன் (சிந்தனை செய் மனமே) 47

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக