புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
91 Posts - 61%
heezulia
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
6 Posts - 4%
viyasan
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
eraeravi
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
283 Posts - 45%
heezulia
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
19 Posts - 3%
prajai
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
7 Posts - 1%
mruthun
கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_m10கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 17, 2011 11:48 pm

இது ஒருபாவரங்க தலைப்பு. எழுதியது இரண்டு கவிதைகள்

இது முதலாவது

கவிதை 1

வளைகடலும் பெரும் அலையும் வாய்திறந்துபேசுமொரு
வார்த்தை கூறும் சக்தியிருந்தால்
நுளைகுழியுள் விரையும்நண்டு நின்றுகதை கூறும்எங்கள்
நிமலரிவர் கொண்ட புகழ்தான்
அளையு மணல் உருள்திரையும் அழுதுமனம்கதறும்அந்த
ஆழ்கடலின் வேங்கைப் படைதான்
மழையுமிடி மின்னலென மாகடலில் வாழ்ந்தவர்கள்
மாறிநின்ற தெங்கே என்றுதான்

படையெடுத்து வந்தபகை பாய்ந்துவந்தபோதவரின்
பலமுடைத்து ஓடவைத்ததை
நடைபிழைத்து நகருமந்த நண்டு கேலிசெய்யுதென்று
நகைநகைத்து அலைஉருண்டிடும்
இடைநிறுத்தி இடர்கொடுத்து எதிரி வென்றமைந்தரவர்
ஏற்றம் கண்டு பெருமை கொண்டுமே
உடைத் தழிந்த கப்பல் டோரா உள்ளெடுத்தஆழிதன்னை
ஓவென்றூதிக் காற்று போற்றுமே

படபடக்க வெடியினோசை பளபளக்க அலைகிழித்து
பறந்த வேங்கைமைந்தர் கப்பலும்
துடிதுடித்து இளைமையோடு துணிவெடுத்த தலைமையோடு
தோன்றுமெழில் என்னசொல்லுவேன்
கடலிலொரு கப்பல்விட்ட தமிழன் என்று பெருமை சொன்ன
காலம் அயல் அன்றிருந்தது
கடலிலொரு போர்தொடுத்து கடற்படைதான் ஆட்சிசெய்த
காவலனின் பெருமை பெரியது

தரையடித்துவீழுமலை தலையடித்துகதறுவதாய்
தவிப்பெடுத்தபோது தென்றலோ
விரைவெடுத்து ஓடுமென்னை விடஎடுத்த வேகமுடன்
வினைமுடித்த வீரம்பேசுமே
வரைவிடுத்து எல்லையற்ற வகையெடுத்த படகெடுத்து
வளைவெடுத்து மைந்தர் ஓடவே
புரையெடுத்து கிறுகிறுத்து புலன்விடுத்துஅதிசயித்து
போர்தொடுத்த பகை வியக்குமே

மறமெடுத்த வீரர்தம்மின் உரமெடுத்த தோள்வலிமை,
மனமெடுத்த வலிமை ரண்டிலே
திறமெடுத்த தேதுஎன்று எதையெடுத்துக்கூற அங்கு
இலட்சியமே வலிமை கண்டது
புறமெடுத்துஓடச் சிங்கக் கொடிபிடித்த படகுகளை
அடிஅடித்து ஓடவைக்கவே
அறமெடுத்த நிலையைவிட்டு அயல்கிடக்கும்நாடு அச்சம்
அகமெடுத்து பிழைவிடுத்தது

உலகெடுத்த விதியுடைத்து படையெடுத்து வந்தவரோ
உடமைதோல்வி என்று கண்டதும்
தலைகடுத்து விசர்பிடித்துக் கிலியெடுத்து வியர்வைகொண்டு
தரமும்கெட்டவேலை செய்ததே
இமயம் தொட்டுக் குமரிவரை எமதுஎன்றுஆண்டதமிழ்
இறைமை கொண்ட கடல்பரப்பையே
சமயமிது இழந்துவிட்ட சரித்திரத்தில் தமிழ்படித்த
சபலமுள்ள அரசும் உள்ளது


மறைவெடுத்தஎங்கள்மன்னன் மறுபடிக்கு வந்துஎங்கள்
மாநிலத்தைஆழும் நாள் எப்போ?
கறைபிடித்த காலமிது கருகிவிட்ட வாழ்வுஇது
கண்மறைந்து போவதுமெப்போ?
துறைமுகத்தில் எங்கள்கொடி தடதடன்று காற்றிலாடி
திமிரெடுத்து நேர்பறப்பதை
இறை, எனக்கு வரமுமீந்து எமனெடுத்து எறிகயிற்றை
இடைநிறுத்தி ஈழம்காட்டுவாய்

(கவிதை2 கீழே)

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Mar 17, 2011 11:51 pm

(கவிதை1 மேலே)
கவிதை 2

அன்றோஒருநாள் அம்மாஅருகே அன்பில் திளைத்திருந்தேன்
நின்றே பெய்யுமழையின் வெள்ளம் நிலம் மீதோடக்கண்டேன்
தென்றல்வீசிச் சாரலடித்தே தூவானம் நனைக்க
ஒன்றாய் இரண்டாய் ஒற்றைகிழித்து ஓடம்செய்துவிட்டேன்

எட்டுகப்பல் நீரில்ஓட்டி எண்ணிப் பெருமைகொண்டேன்
கிட்டும் இன்பம் காகிதக் கப்பல் கவிழா வரைகண்டேன்
விட்டே குளமும் வாய்க்கால் என்று விந்தை உணர்வு கொண்டேன்
தட்டிக்கேட்கும் தலைவன்வந்து தமிழால் ஆளும்வரை

வெட்டிகிழித்து விரைந்தேஓடும் வெற்றிப்படகுகளை
விட்டுக்கடலில் விளையாடித்தான் வேங்கை புன்னகைத்தான்
சுட்டுவெடித்துப் பகைவர்கப்பல் தூள்தூள் என்றாகி
கட்டுக் குலைந்து கடலில்மூழ்கக் கண்டேன் வீரமதை

திசைகள் எட்டும் திரைகடலோடி திரிந்தார் வீரமது
அசைவில் புயலும் அடியில் இடியும் ஆனதுகண்டேனே
விசையோ டுலவும் படகில் தமிழன் வெற்றிக்களிப்புடனே
இசையும் கொடியும் எழுந்தேஆடத் திரிந்தான் தலைநிமிர்ந்தே

நெய்தல் குமரர் நிம்மதிகண்டு நீரில்மீன் கொண்டு
தையல்தம்மின் கண்ணில் அன்பும் காதல் தனைக்கண்டு
வெய்யில்காயும் மீனைப்போலே வெளியே காய்ந்தாலும்
கையில்காசும் களிப்பும்சுகமும் கண்டார் வாழ்வினிலே

கொள்ளிப்பேயாய் வந்தார் விதியும்கொண்டே வெறியாடி
அள்ளிச்செல்லும் வெள்ளம்ஆக அத்தனையும் இழந்தோம்
தெள்ளதெளியும் நீரைபோலே திகழும் வாழ்வுடைந்து
கள்ளிக்காடாய் கட்டை சுடுமோர் காடென்றாச்சுதடா

நீலஒளிவெண் மேகத்தோடு நின்றே வானோடி
ஆழப்பரந்த அலைகள்மீதும் அலைந்தேகடலோடி
காலாட்படைகள் கட்டு உடைத்து கயவர் பந்தாடி
காலாகால வரலா றொன்றில் தலைவர் தானிருந்தார்

சொல்லத்திறனும் பெருமைகொண்டே சுகமாய் ஆகிறதே
இல்லா திந்த உணர்வு எங்கள் இழிமைகொண்டோராம்
கல்லாய் நெஞ்சைக் கொண்டே எம்மைக்காட்டிக் கொடுத்தாரே
வல்லமையின்றி வாழ்வைக்கெடுத்தே வாழ்ந்தார் பயனென்ன

மெல்லத்தெரிதல் காணாய் இன்றோ வானில் விடிவெள்ளி !
கொல்லக்கண்டவர் மெல்லஎழுந்தே கூறும் மனம்கொண்டார்
வண்ணத்திரையில் மானும் மயிலும் வந்தே சதிராட
கண்ணால்கண்டே கவலைவிட்டுக் கடமை மறக்காதே

உரிமைப்போரை உலகத்தெங்கும் ஒன்றாய் கைக்கொள்ளு
தெரியும்பாதை திடமாய்காலைத் துணிந்தே வைத்துவிடு
விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு
திரையும்கடலில் விரையும் கப்பல் மீண்டும் கடலுனது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Mar 18, 2011 7:41 am

விரியும் ஈழம் வெகுநாளில்லை வேகம்கொண்டுஎழு - நிச்சயம் ஈழம் கிட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை அண்ணா! புரட்சிக் கவிதை படைத்த அன்பு அண்ணனுக்கு பாராட்டுக்கள்!



கைமாறிய கடல் கைக்கு வருமா? (இரு கவிதைகள்) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக