புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
7 Posts - 58%
heezulia
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
3 Posts - 25%
வேல்முருகன் காசி
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
8 Posts - 2%
prajai
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_m10கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 15, 2011 9:39 pm

இறைவனுக்கு தீபாராதனை காட்டும் போது மணியும் சேர்ந்து ஒலிப்பதால் தெய்வீக உணர்வில் மனம் பரவசப்படுகிறது. வீட்டில் பூஜை அறையில் கூட, பெரியவர் மணி அடித்து பூஜை செய்கிறார். அப்போதுதான் பூஜையில் ஒரு நிறைவை அவர் உள்ளம் உணர்கிறது. இல்லத்தரசி வெள்ளிக்கிழமைகளில் ஒரு கையில் கற்பூரத் தட்டையோ, சாம்பிராணி தூபக் காலையோ எந்திக் கொண்டு மறு கையால் சிறு மணியை அடித்தபடியே வீடெல்லாம் வலம் வந்து, அங்கங்கே தீப தூபம் காட்டுகிறாள். இந்துக்கள் வீடுகளில் மட்டுமே பொலியும் தனி ஒலி, மணி ஒலி!

கோயில்களில் காலை சந்தி, உச்சிக் காலம், சாயரட்சை, அர்த்தஜாமம் என்று ஒவ்வொரு வேளை பூஜையின்போதும் "டாண்... டாண்' என்று மணி ஒலித்து, கோபுரத்தில் எதிரொலித்து, ஊருக்கெல்லாம் ஆராதனையை அறிவிக்கிறது.

சீனாவில் கிடைத்த மணி ஒன்று கி.மு.2600ல் செய்யப்பட்டது என்று கண்டறிந்திருக்கிறார்கள். ஆலய மணி தயாரிக்கும் கலை அவ்வளவு தொன்மைக் காலத்திலேயே இருந்து வந்திருக்கிறது.

இன்றைக்கு பலவிதமான மணிகளைப் பல இடங்களில் பார்க்கிறோம். பள்ளிக்கூட தொடக்கம், முடிவு இரண்டையும் அறிவிக்க மணிச் சத்தம், ரயில் வரப்போவதைத் தெரிவிக்க மணிச்சத்தம், ஆபீஸில் அதிகாரி பியூனை அழைக்கவும், ஓட்டல் முதலாளி சர்வரை அழைக்கவும் மேஜை மேல் மணி வைத்திருக்கிறார். தேவாலயங்களிலும் தெருக்கோயில்களிலும் மணி. காடு வனாந்தரங்களில் மேயும் மாடுகளின் கழுத்தில் மணி. பல காரணங்களை முன்னிட்டு பல இடங்களில் மணியடிக்கிறார்கள்.

ஆராதனை முடிந்ததும் தாங்கள் வழிப்பட்டதை தேவதைகள் உணர்வதற்காக பௌத்தர்கள் மணியடிக்கிறார்கள். இந்துக்கள் தங்கள் ஆலயத்தின் கதவுகளில் மணிகளைப் பொருத்தியிருப்பார்கள்.

முற்காலத்தில் பல உலோகத் துண்டுகளை ஒன்றாக்கித்தான் மணிகளைச் செய்தார்கள். ஆனால், ஒரே வகையான முழு எஃகு இரும்பைக் கொண்டு அமைத்த மணிதான் நல்ல நாதத்தை எழுப்பும் என்பதைப் பின்னர் அவர்கள் அறிய வந்தனர்.

மணியை எப்படித் தயாரிக்கிறார்கள்?

முதலாவதாக மணியைச் செய்ய ஆரம்பிக்குமுன், இரண்டு அச்சுகளைத் தயாரிப்பார்கள். ஓர் அச்சை மணியின் வெறிப்புறத்துக்கும், இன்னோர் அச்சை மணியின் உட்புறத்துக்குமாக தயாரித்துக் கொள்வார்கள். இவற்றைச் செய்வதற்கு பசுவின் ரோமமும் மணலும் பயன்படுத்தினார்கள்.

அச்சுகள் இறுகிய பின், உருக்கிய உலோகக்குழம்பை அவற்றிடையே வார்த்ததும் தயாரிப்பு வேலை முடிந்ததுபோலத்தான். மணியைத் தயாரிக்கும்போது அவசரம் கூடாது. அவசரப்பட்டால் அதன் அழகும் நாதத்தின் இனிமையும் கெடும். மணி பிளந்து போனால் அதைத் துண்டு போட்டு சேர்க்க முடியாது. முழு உலோகத்தையுமேதான் மறுபடியும் உருக்கி அச்சில் வார்க்க வேண்டும்.

பித்தளை, தகரம் இவற்றால் பெரிய மணிகளையும்; துத்தநாகம், ஈயம் இவற்றால் சிறிய மணிகளையும் செய்வதுண்டு.

சுமாரான உருவைக் கொண்ட ஒரு மணியைத் தயாரிக்க ஏறக்குறைய ஒரு மாத காலம் ஆகும்.

சில மணிகள் உலகப்புகழ்பெற்றிருக்கின்றன. 1875ஆம் ஆண்டு அமெரிக்கக் கப்பல்படைத் தலைவர் ஒருவர், ஜப்பானிலுள்ள ஓரிடத்திற்குச் சென்றபோது, பாழடைந்த ஒரு ஜப்பானியக் கோயிலை அடைந்தார். ஜப்பானிய மொழியில் ஏதோ வாசகம் பொறித்திருந்த ஒரு மணி அங்கே இருந்தது. அதை அவர் அமெரிக்காவிற்க எடுத்துச் சென்று ராணுவப் பயிற்சிப் பள்ளியில் உள்ள ஒரு நண்பருக்கு பரிசளித்தார்.

அந்த நண்பர் எப்போதாவது கால்பந்து விளையாடுவதானால், ஒவ்வொரு வெற்றிக்கும் அறிகுறியாக அந்த மணியை அடிப்பாராம்.

ஜப்பானிய மாணவன் ஒருவன், அமெரிக்காவிற்குப் பயிற்சி பெறச் சென்றிருந்தபோது, அதில் பொறித்திருந்த வாசகத்தை மொழி பெயர்த்துச் சொன்னான்:

""கோயில் கோபுரத்தில் இந்த அழகான மணியைத் தொங்கவிட்டிருக்கிறோம். ஒவ்வொருவனும் நேர்மையும் கருணையும் உள்ள வழியில் நடக்க முனைந்தால், ஆட்சியாளர்கள் நீதியையே வழங்கினால், காட்டுமிராண்டிகள் நம் நாட்டைத் தாக்க நெருங்க மாட்டார்கள்.''

ரஷ்யாவில் செய்த ஒரு மணிதான் உலகிலேயே மிகப்பெரியது. உலக அதிசயங்களுள் ஒன்றாக விளங்குவது. அதன் எடை 180 டன். தூக்கி மாட்டவோ, அடிக்கவோ அது பயன்படவில்லை. அதை அச்சில் வார்த்தபோதே பிளந்துவிட்டது. இப்போது அந்த மணியை ஒரு மேடை மீது ஏற்றி வைத்திருக்கிறார்கள். மணியில் ஏற்பட்டிருக்கும் பிளவின் வழியாக இரண்டு பேர் ஓரே சமயத்தில் உள்ளே நுழையலாம்.

1752-ம் வருடம் அமெரிக்காவில் சுதந்திரத்தை நினைவூட்டும் மணியை உருவாக்கினார்கள். முதல்முறை அதை அடித்தபோதே அது பிளந்துவிட்டது. பின்னர் அதை பழுது பார்த்து, அடித்தபோது நாதம் கணீரென்று இல்லை. "டாண்' என்று கம்பீரமாக ஒலிக்காமல், "டாஞ்ங்நுஞிநு...' என்கிற மாதிரி ஏதோ அழுது வடிந்தது. மூன்றாம் முறையாக அதை இனிமையாக ஒலித்தது. ""நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்களுக்கும் சுதந்திரத்தைப் பரப்புவாயாக'' என்ற சொற்களை அதன்மீது பொறித்தார்கள். ஆறரை டன் எடையுள்ள அதை சுதந்திர மண்டபத்தின் மீது வைத்தார்கள்.

போர்க் காலங்களில் வெற்றியின் போதும், ஜனாதிபதிகளின் இறுதி ஊர்வலத்தின் போதும் இந்த மணியை அடிப்பது ஒரு மரபு!

நம் நாட்டில் கிராமப்புற மக்கள் கடவுளுக்கு நேர்ந்து கொள்ளும்போது, "காரியம் நல்லபடி நடந்தேறினால் கோயிலுக்கு மணி கட்டுகிறேன்' என்று வேண்டிக்கொள்வார்கள். அவ்வாறே மணி கட்டுவார்கள். சில உள்ளூர் வணிகர்கள் கோயிலுக்கு பெரிய வெண்கல மணி ஒன்றை உபயமாக வழங்கி விட்டு, மணி மீத பெரிதாக "உபயம் : உத்திராபதி' என்று எழுதிவிடுவார்கள். மணி அடிப்பவர் அந்தப்பெயரைப் பார்த்த கோபத்தில் ஓங்கி ஒங்கி அடிக்க, மணியோசை கன கம்பீரமாக தன் நாதத்தைக் காற்றில் பரப்புகிறது.!

-ஆர்.சி.சம்பத்



கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Mar 15, 2011 9:43 pm

கோயில் மணியில இவ்வளவு விசயம் இருக்கா?
பகிர்வுக்கு நன்றி சிவா கோயிலில் தெய்வ சாந்நித்யத்தை உணர்த்துவது ஆலய மணி ஓசை 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக