புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_c10ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_m10ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_c10 
6 Posts - 67%
heezulia
ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_c10ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_m10ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_c10ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_m10ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_c10ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_m10ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம்


   
   
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat Mar 12, 2011 6:32 pm

டோக்கியோ: ஜப்பானை புரட்டிப்போட்டு நிலைகுலைய செய்துள்ள நிலையில்
இங்குள்ள அணு மின் மையத்தில் இருந்து அழுத்தம் காரணமாக வாயுக்கசிவு
ஏற்பட்டுள்ளது. இது பெரும் அச்சம் தரும் விஷயமல்லை என்ற போதும் அணுஉலைகள்
இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீட்டர் வரை வசிப்போர் காலி செய்து
மாற்று இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில்
இன்று மதியம் ஜப்பான் நேரப்படி 3. 40 நிமி‌டம் அளவில் புகுஷிமாவில் உள்ள
ஒன்றாம் நம்பர் பிளாண்டில் பெரும் சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.
இதில் சீர் செய்யும் பணியில் இருந்த 4 பேர் காயமுற்றதாக ஜப்பானில் இருந்து
வரும் செய்திகள் கூறப்படுகிறது. இந்த வெடிப்பின் காரணமாக எந்த அளவிற்கு
சேதம் இருக்கும் என நிர்மாணிக்க முடியவில்லை. முன்னதாக இங்கு குளிரூட்டும்
சாதனங்கள் மூலம் வெப்பம் கட்டுப்படுத்தப்பட்டதாக ஜப்பான் அரசு முடிவு
செய்திருக்கிறது.
நேற்று மதியம் சுனாமி தாக்கியதில்
டோக்கியோவையொட்டி பல்வேறு தீவுப்பகுதிகள் மூழ்கின. கடலோரத்தில் இருந்த
துறைமுகங்கள், வீடுகள் முற்றிலும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய காத்திருந்த புத்தம், புது கார்கள்
ஆயிரக்கணக்கில் கடலில் குப்பைகள் போல சென்றன. 3 ரயில்கள் காணவில்லை. இதில்
எத்தனை பயணிகள் இருந்தனர் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.
சுனாமி ஏற்பட்டு சேதத்தில் சிக்கி தவிப்போரை மீட்கள் ஆயிரக்கணக்கான மீட்பு
படையினர் ஈடுபட்டுள்னர். விமானம், கப்பல் , மற்றும் வாகனங்களில் சென்று
ஆங்காங்கே உயிருக்கு போராடி வருவோரை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு
வருகிறது. ஆயிரத்து 600 பேர் இறந்திருக்கலாம் என்று ஜப்பானில் வெளியாககும்
ஒரு இணையதளம் கூறியிருக்கிறது. இன்றும் காலையில் நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் மக்கள் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.

அணுமின் கசிவு அதிகாரிகள் விளக்கம்: புகுஷிமாவில்
அணு மின் நிலையம் உள்ள பகுதியில் சற்று வாயு பரவியிருப்பதாக தெரிகிறது.
இது குறித்து அணு மைய அதிகாரிகள் கூறுகையில்; சுனாமி காரணமாக இங்குள்ள 5
அணு உலைகளில் 1 சேதமடைந்திருக்கிறது. இதனால் அழுத்தம் காரணமாக இது அணு
வெப்ப வாயு கசிந்துள்ளது. அணு கதிர் எதுவும் வெளியேறவில்லை. இது பெரும்
ஆபத்து இல்லை இருப்பினும் 10 கி.மீட்டர் வரை வசிப்போர்கள் காலி செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
அவசர நிலை பிரகடனம்:
இந்தப்பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இங்கு
வசிப்போர‌ை விமானம் மூலம் மீட்டு மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு
வருகின்றனர். அணுவை பிளப்பதன் மூலம் ஏற்படும் வெப்பமூட்டும் கருவி
வழக்கத்தை விட ஆயிரம் மடங்கு வெப்பம் வெளியேறி வருகிறது. இதனை கூல்
செய்யும் நிலையில் உள்ள கருவிகள் தங்களுடைய பணிகளை சரிவர செய்யவில்லை
இதனால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Mar 12, 2011 6:42 pm

பாவம் மக்கள் ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Ila
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Mar 12, 2011 6:46 pm

மிகவும் வருத்தப்பட வைக்கிறது இந்த சுனாமியின் பாதிப்பு




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Mar 13, 2011 10:56 am

இப்போ அணு கசிவு ஏற்படுருமொனு எல்லாரும் பயத்தின் உச்சியில் இருக்காங்க




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Mar 13, 2011 11:13 am

ஜப்பானில் சுனாமியால் சேதம் அடைந்த அணுமின் நிலையத்தில் அணு உலை வெடித்தது. கதிர்வீச்சு பரவும் அபாயத்தால் 1 லட்சம் பேர் வெளியேற்றம்


ஜப்பானை உலுக்கிய பூகம்பம்- சுனாமி யால் சேதம் அடைந்த அணுமின் நிலையத் தின் அணு உலை வெடித்ததால் பீதி ஏற்பட்டது. அணுகதிர்வீச்சு அபாயத்தால், சுற்றுப்புற பகுதியை சேர்ந்த 1 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

8.9 ரிக்டர் அளவிலான பயங்கர பூகம்பம் மற்றும் சுனாமி தாக்குதலில், ஜப்பான் நாடு பேரழிவை சந்தித்து உள்ளது.

1,700 பேர் பலி

30 அடி உயரத்துக்கு மேல் எழுந்த ராட்சத அலைகள், சென்டாய் நகரில் லட்சக்கணக்கான வீடுகளை கபளீகரம் செய்தன. ஜப்பான் வரலாற்றிலேயே மிகப்பெரியதான இந்த பூகம்பத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை பற்றி இதுவரை சரியான விவரங்கள் வெளியாகவில்லை.

ஏறத்தாழ 1,700 பேருக்கு மேல் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. மீட்பு பணி தொடர்ந்து முடுக்கி விடப்பட்டு உள்ளது.

10 ஆயிரம் பேர் கதி என்ன?

ஒரு கப்பல் மற்றும் 4 ரெயில்கள் அடித்துச்செல்லப்பட்டு இருப்பதாலும், பல கிராமங்கள் இன்னும் நீரில் மூழ்கி இருப்பதாலும் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், மியாகி மாகாணத்தில் உள்ள மினாமி சன்ரிகு என்ற நகரத்தை சேர்ந்த 10 ஆயிரம் பேரை காணவில்லை என்று, தனியார் டி.வி. ஒன்று தகவல் வெளியிட்டு உள்ளது. அவர்கள் கதி என்ன என்று தெரியவில்லை.

அணு உலைகளில் அவசர நிலை

சோதனை மேல் சோதனையாக பூகம்பம், சுனாமியை தொடர்ந்து ஜப்பானில் பல அணு உலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். அணு உலைகளில் உள்ள குளிர்பதனிகள் மற்றும் அவற்றை இயக்குவதற்கான ஜெனரேட்டர்கள் சேதமடைந்தன.

எனவே, அணு உலை வெப்ப அளவு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அணு உலைகளில் இருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டது. இதனால் 5 அணு உலைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்தி ஜப்பான் அரசு உத்தரவிட்டது.

அணு உலை வெடித்தது

மேலும், அணு உலைகளை சுற்றிலும் 3 கி.மீ. பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில், நேற்று பிற்பகல் 3.30 மணி (ஜப்பான் நேரப்படி) அளவில், தலைநகர் டோக்கியோவில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள புகுஷிமா நகரில் `டோக்கியோ எலக்டிரிக் பவர் கம்பெனி' நிர்வகித்து வரும் டைச்சி அணு உலையின் முதலாவது பிரிவில் பலத்த வெடிச்சத்தம் கேட்டது.

அதைத்தொடர்ந்து, வெள்ளை நிறத்தில் புகை கிளம்பியது. அணு உலை இருந்த கட்டிடத்தின் மேற்கூரை பகுதியில் இந்த வெடி விபத்து நடந்தது. குளிர்பதனிகள் செயலிழந்ததால் அதிகபட்ச வெப்பத்தால் அணுமூலப் பொருட்கள் உருகி இந்த வெடிவிபத்து நடந்து இருக்கலாம் என தெரிகிறது.

1 லட்சம் பேர் வெளியேற்றம்

உடனடியாக, அணு கதிர்வீச்சு தடுப்பு நடவடிக்கைகளை ஜப்பான் அரசு முடுக்கிவிட்டது. முதல் கட்டமாக புகுஷிமா அணு உலையில் இருந்து 10 கி.மீ. சுற்றளவிலும், பின்னர் 20 கி.மீ. சுற்றளவிலும் உள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

புகுஷிமா அணு உலையின் நிலைமை, பீதி ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக ஜப்பான் அணு பாதுகாப்பு ஏஜென்சி அறிவித்து இருந்தது. மேலும், தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏராளமான ராணுவ வீரர்களை ராணுவ அமைச்சகம் அனுப்பியது. ரசாயன பேரழிவை எதிர்கொள்ளும் வீரர்களும் அந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மக்களுக்கு எச்சரிக்கை

இது தவிர, புகுஷிமா பகுதியை சுற்றிலும் உள்ள மக்கள் அனைவரும் தங்களுடைய உடல் முழுவதையும் மூடிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தோல் வெளியே தெரியாத வண்ணம் ஆடை, டவல், முகமூடி போன்றவற்றை அணிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

ஆனால், இந்த வெடி விபத்து பற்றி மக்கள் அச்சம் அடைய வேண்டியது இல்லை என்று ஜப்பான் அரசின் செய்தி தொடர்பாளர் ïகியோ எடானோ பின்னர் அறிவித்தார். வெடிவிபத்துக்கு பின்னர் கதிர்வீச்சு அதிகரிக்கவில்லை என்றும், மாறாக குறையத்தொடங்கியதாகவும், அணு உலையின் அழுத்தமும் குறைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மற்றொரு அணு உலை

அதே நேரத்தில், தற்போது வெடித்துள்ள அணு மின் நிலையத்தில் உள்ள இரண்டாவது அணு உலையும் கடுமையாக சேதமடைந்துள்ளது. அதில் உள்ள குளிர்பதனி அமைப்புகளும் செயலிழந்த நிலையில் உள்ளன. எனவே, வெப்பநிலை அதிகரித்து அணுமூலப் பொருட்கள் உருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனால், அந்த அணு உலையும் எந்த நேரமும் வெடிக்கும் அபாயம் இருக்கிறது.

ஆனால், ஆயிரம் மடங்கு வரை கதிரியக்க வீச்சை கட்டுப்படுத்தும் அமைப்புகள் இருப்பதாலும், அணு உலைகளின் வெளிப்புற கட்டமைப்புகள் அனைத்தும் உறுதியாக இருப்பதாலும் கதிர் வீச்சு அபாயம் இல்லை என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

ரஷிய நிபுணர் கருத்து

டைச்சி அணு உலையின் முதல் பிரிவில் ஏற்பட்ட வெடி விபத்தினால், கடந்த 1986-ம் ஆண்டில் ஏற்பட்ட செர்னோபில் அணு உலை வெடித்தது போன்ற பேரழிவு ஆபத்து இல்லை என்று ரஷிய அணுசக்தி நிபுணர் யரோஸ்லோவ் கூறி இருக்கிறார்.

செர்னோபில் அணு உலை வெடித்து தீப்பற்றியதில் ஐரோப்பிய நாடுகள் வரை கதிர்வீச்சு சூழ்ந்தது குறிப்பிடத்தக்கது.



5-வது பெரிய பூகம்பம்

ஜப்பானை உலுக்கிய இந்த பூகம்பம், கடந்த நூற்றாண்டின் இதுவரை உலகில் நிகழ்ந்த 5-வது பெரிய பூகம்பமாகும். கடந்த 1923-ம் ஆண்டில் 7.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் டோக்கியோ பகுதியில் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் பலியானார்கள்.

தற்போதைய ஜப்பான் பூகம்பத்தால், பூமியின் அச்சு 25 செ.மீ. விலகி இருப்பதாக இத்தாலி நாட்டின் தேசிய புவி இயற்பியல் நிலையம் அறிவித்து உள்ளது. ஜப்பானின் பிரதான தீவு, பூகம்பத்தினால் 2.4 மீட்டர் அளவில் விலகி இருப்பதாகவும் அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.



ஜப்பான் அணு உலையில் வெப்பம் தாங்காமல் வெடிப்பு : புகுஷிமா பகுதி முழுவதும் வெண் புகை மயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக