புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
8 Posts - 3%
prajai
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
ஈகை Poll_c10ஈகை Poll_m10ஈகை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 10, 2011 9:00 am

பத்தாம் வகுப்பு தேர்வுக் கட்டணம் கட்டச் சொல்லி பள்ளித் தலைமையாசிரியரால் சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் பெரும்பான்மையான மாணவர்கள் கட்டிவிட்டார்கள். ஆனால், வசதியில்லாத சில மாணவர்கள் தாமதமாகக் கட்டினார்கள். அப்படியும் அந்த வகுப்பில் இரண்டு மாணவர்கள் மட்டும் கட்டாமலே இருந்தார்கள்.

முதல் பாடவேளை.

தலைமையாசிரியரே அந்த வகுப்பிற்கு வந்து தேர்வுக் கட்டணம் செலுத்தாத அந்த இரண்டு பேரிடம் காரணத்தைக் கேட்டார். "என் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதால் வேலைக்குப் போக முடியவில்லை. வேலைக்குப் போகாததால் பணம் கட்ட முடியவில்லை'' என்று ஒரு மாணவன் காரணத்தைச் சொன்னான்.

இன்னொருவன் சொன்னான், "கூலி வேலை செய்யும் என் அம்மாவால் தேர்வுக்கு பணம் கட்ட முடியவில்லை. `உனக்கு படிப்பு எதற்கு? உங்கப்பா செத்தபிறகு நமக்கு கஞ்சிக்கு வழியில்லை. என்னோட கூலி வேலைசெய்ய வா, சாப்பாட்டு கஷ்டமாவது தீரும்'னு அம்மா சொல்லிட்டாங்க. என் மாமாதான் அடுத்த வாரம் எப்படியாவது பணம் தாரேன்னு சொல்லியிருக்காரு'' என்றான்.


"நாளை மறுநாள்தான் தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசிநாள். நீங்க என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இந்த ரெண்டு நாள்ல பணம் கட்டுனீங்கன்னா, தேர்வு எழுதலாம். இல்லேன்னா உங்களால தேர்வு எழுத முடியாது. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்'' என்று சொல்லிவிட்டுச் சென்றார் தலைமையாசிரியர். அந்த இரண்டு மாணவர்களையும் பார்க்க பாவமாக இருந்தது.

சுந்தரத்திற்கு.`ம்... பணக்கார வீட்டுப்பையன் செல்வம் தனது பாக்கெட் மணியை செலவு செய்யாமல் சேர்த்து வைத்தாலே இந்த இரண்டு நாளில் இவர்களின் தேர்வுக்கட்டணத்தை செலுத்திவிட முடியும். பணம் இருப்பவரிடம் இரக்க குணம் இல்லாமல் படைத்து விட்டானே ஆண்டவன். என்னைப் போன்ற கொடுக்க நினைக்கும் குணம் இருப்பவர்களையும் ஏழையாகப் படைத்து விட்டான். இப்படி மனிதர்களை வேதனைப்படுத்திப் பார்ப்பதில் அந்த பகவானுக்கு என்ன இன்பமோ?' என்று அவர்களின் நிலைமையைப் பார்த்து மனதிற்குள் சொல்லிக் கொண்டான்.

`என் குடும்பமோ ஏழைக் குடும்பம். அதனால்தான் அடுத்த ஆண்டு படிப்பிற்காக சஞ்சாயிகா திட்டத்தில் கஷ்டப்பட்டு இருநூறு ரூபாய் சேர்த்து வைத்துள்ளேன். அதிலிருந்து இவர்களுக்கு பணம் எடுத்துக் கொடுக்கலாம். ஆனால், அடுத்த ஆண்டு என் படிப்பிற்கு பணம் கட்ட முடியாத சூழ்நிலை வந்து விட்டால் என்னால் படிக்க முடியாமல் போய்விடுமே!' என்று எண்ணியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டான்.

மாலை பள்ளி முடிந்து வீட்டிற்குப் போக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் சுந்தரம். அப்போது பள்ளிக்கு எதிரே இருந்த பிளாட்பாரத்தில் வயோதிக பிச்சைக்காரர் ஒருவர், தன்னுடைய தட்டில் இருந்து அருகில் நின்ற நாய்க்கு சோறு வைத்துக் கொண்டிருந்தார். அது வாலை ஆட்டிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்த அவனுக்குள் பல்வேறு சிந்தனைகள் ஓடின.

`இவர் எடுப்பதோ பிச்சை. இந்த ஏழ்மையிலும் இன்னொரு ஜீவனுக்குப் பசியாற்றுகிறாரே! பொருள் இல்லா நிலையிலும் அவருக்கு ஈகை குணம் உள்ளதே! கொடுக்க நினைத்தால் மனம் மட்டும் போதும் என்று காட்டிவிட்டாரே! பசிக்கும் போது உணவு கொடுப்பதுதானே புண்ணியம். சமயத்தில் உதவுவது தானே நல்ல தர்மம்?

நமக்கு மட்டும் வேண்டும் என்று எண்ணினால் அது சுயநலம் இல்லையா? பகிர்ந்துண்ணும் பண்பு பறவையிடமே இருக்கும்போது, பகுத்தறிவுள்ள மனிதரிடம் இருக்க வேண்டாமா? நல்லது செய்பவர்களுக்குத்தானே தெய்வம் துணை நிற்கும். நல்ல எண்ணம் மட்டும் இருந்து என்ன பயன்? நல்ல செயல் செய்வது தானே சிறந்த மனிதருக்கு அடையாளம்'' என்ற எண்ணம் அவனுக்குள் வந்தபோது, அவன் தெளிவடைந்திருந்தான்.

நாளை தன் சிறுசேமிப்பில் இருந்து இருவருக்கும் பணத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்ற முடிவுடன் பேருந்தில் ஏறினான் சுந்தரம்.

மாசு. சவுந்தரராசன்



ஈகை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Mar 10, 2011 10:11 am

நல்லதொரு படிப்பினை சொல்ற கதை.பகிர்ந்தமைக்கு நன்றி சிவா



ஈகை Uஈகை Dஈகை Aஈகை Yஈகை Aஈகை Sஈகை Uஈகை Dஈகை Hஈகை A

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக