புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_m10ஆன்மீக சிந்தனைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மீக சிந்தனைகள்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 3:58

First topic message reminder :

சத்ய சாய் பாபா

* நாம் நம் கடமையைச் செய்கிறோம் என்பதை மட்டுமே எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அதில் வெற்றி கிடைக்குமா அல்லது தோல்வியில் முடியுமா என்று சிந்தித்துக் கொண்டே கடமையைத் தள்ளிப் போடக் கூடாது. அப்பொறுப்பினை ஆண்டவனிடம் ஒப்படைத்து விட வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் வெற்றி தோல்விகள் எவ்விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதில்லை.


* இருண்ட அறையில் அசுத்தமும், தூசியும் நிறைந்து இருக்கும். நாளடைவில் தேள், பாம்பு போன்ற விஷஜந்துக்களும் ஒளிந்து கொள்ள ஏதுவாகும். அதே அறையை சுத்தமாக்கி, கதவு ஜன்னல்களைத் திறந்து வைத்தால் வெளிச்சமும், நல்லகாற்றும் வர வழியுண்டாகும். அதுபோல, மனம் என்னும் வீட்டில் காமம், கர்வம், பொறாமை போன்ற விஷஜந்துக்களை நுழைய விடாமல் அன்பு என்னும் ஒளியை பரப்புங்கள். தூய்மை என்னும் காற்றையும் நிரப்புங்கள்.


* கண்ணிமையில் பூசிய கருநிற மை கண்ணுக்குள் படிவதில்லை. நீரில் இருக்கும் தாமரை மலர் சேற்றினைத் தீண்டுவதில்லை. கடவுளை முற்றிலுமாக உணர்ந்த மனிதர்கள் உலகவாழ்வில் ஈடுபட்டாலும், அவர்கள் மனம் அதில் ஈடுபடுவதில்லை. எப்போதும் இறைவனையே எண்ணிக் கொண்டு இருப்பர்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:25

பகவத் கீதை


* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால் குளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும். இந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக வாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.

* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி அடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும் வென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக மதிப்பவனுமே யோகியருக்கெல்லாம் தலைசிறந்த யோகியாகிறான்.

* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு கொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப் படுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில் நடந்து கொள்பவர்கள்தான் உத்தமமானவர்கள்.

* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை துறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து, விழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது ஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை அடக்க வேண்டும்.

* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது. அதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால நேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக் கொண்டிருப்பவனுக்கும் யோகம் கிட்டுவதில்லை.

* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும், விழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல் இருப்பான்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:26

சிவானந்தர்


பொருள் சம்பாதிப்பதற்கான வழிவகைகளைத் தேடுவதே இன்றைய கல்வியின் நோக்கமாக இருக்கிறது. மாணவனை ஒழுக்கமுடையவனாகவும், ஆன்மிக எண்ணம் உடையவனாகவும் மாற்றும் வகையில் கல்வித்தரம் அமைய வேண்டும்.
கல்வி என்பது மனிதவாழ்வின் முக்கிய அம்சங்களாக ஒழுக்கம், அன்பு, தூய்மை, சகிப்புத்தன்மை, தைரியம், வாய்மை, அடக்கம், சேவை, தியாகம் ஆகிய உயர்பண்புகளை வளர்க்கும் விதத்தில் அமைய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் ஒழுக்கபோதனை வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும். படிப்பு முடிந்த பின்பும் மாணவ வாழ்க்கை முடிந்து விட்டதாக எண்ணக்கூடாது. மனிதன் வாழ்வின் இறுதிவரை மாணவர்களாக இருந்து வரவேண்டும். நல்ல விஷயங்களை கேட்பதற்கு மாணவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். உள்ளக்கட்டுப்பாடு என்பது மாணவ பருவத்தில் மிகவும் முக்கியமான ஒன்று. சுயகட்டுப்பாட்டினை மாணவப் பருவத்தில் கடைபிடிப் பவர்கள் வாழ்வில் ஈடுபடும் போது நல்ல சமுதாயத்திற்கு வாய்ப்பாக அமைகிறது. மாணவர் வாழ்வில் ஆசிரியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஆசிரியர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருந்தால் மட்டுமே மாணவர்களை நல்லமுறையில் வழிநடத்த இயலும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:26

ரமணர்


மனிதன் தானே எல்லாவற்றையும் செய்வதாக எண்ணிக் கொள்கிறான். பிரச்னையே இங்குதான் தொடங்குகிறது. நம்மையும் மீறிய ஒரு சக்தியால் நாம் இயக்கப்படுகிறோம் . நாம் அச்சக்தியின் ஒரு கருவியே என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். அதைப் புரிந்து கொண்ட பின் பல துன்பங்களிலிருந்து மனம் விடுபட்டு விடும். அந்த எண்ணம் தோன்றாதவரைக்கும் நமக்கு நாமே துன்பங்களை வரவழைத்துக் கொள்கிறோம் என்பதே உண்மை. மரணத்திற்குப் பிறகு என்ன என்பதைப் பற்றி எண்ணி இப்போதே விடை தேட வேண்டாம். எதிர்காலத்தைப் பற்றி எதிர்காலமே கவனித்துக் கொள்ளும். எனவே, அந்தக் கவலையை விடுத்து நிகழ்காலத்தில் நிறைவாக வாழ முற்படுங்கள். ஒருவன் தன்னைப் பற்றி முதலில் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். தன்னைப் பற்றியே சரியாகவும், முறையாகவும் அறிந்து கொள்ள முடியாத ஒருவனால் உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வது முடியாத செயல். அப்படி அறிந்து கொண்டதாக ஒருவன் எண்ணினால், அது அஸ்திவாரம் இல்லாமலேயே சுவர் எழுப்பியது போன்றதாகும். உடுத்தும் உடையை மாற்றிக் கொள்வதும், வீட்டைத் துறப்பதும் மட்டும் சந்நியாசமன்று. மனதில் உள்ள ஆசாபாசங்களையும், பந்தங்களையும் துறப்பதே உண்மையான சந்நியாசம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:27

சின்மயானந்தர்


ஒருவன் தன் வேண்டாத தீய ஆசையை நிறைவேற்றிக்கொள்ளவும், தவறான வழியில் பணம் சம்பாதிக்கவும் கொலை செய்கிறான். அதனால் அவனது வாழ்நாளே வீணாகிறது. ஆனால், நாட்டைக் காக்க எல்லைக்குச் செல்லும் போர்வீரன் அங்கே எதிரிகளைச் சுட்டு வீழ்த்துகிறான். போர்புரிவதைத் தன் கடமையாகச் செய்கிறான். அதன் பின் தேசத்திற்குள் வந்தபின் யாரைக் கொல்லலாம்? என்று அவன் அலைவதில்லை.பிரசவ சமயத்தில் தேவைப்பட்டால் கர்ப்பிணிப்பெண்ணுக்கு மருத்துவர் பிராந்தியைக் கொடுக்கிறார். அவளும் அதைக் குடித்து விடுகிறாள். ஆனால், பெண்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாவதில்லை. குழந்தையுடன் வீடு திரும்பியபின், அவள் எங்கே அந்த பிராந்தி? என்று கேட்பதில்லை. ஆனால், குடிகாரனின் நிலைமை அப்படியல்ல. அவனால் நாள்தோறும் குடிக்காமல் இருக்க முடிவதில்லை.ண நம்முடைய நோக்கம் உயர்ந்ததாக சுயநலமில்லாததாக இருந்தால் நாம் செய்யும் செயல்களின் வாசனை நம்மை பாதிப்பதில்லை. இப்படி, ஒவ்வொரு கடமையையும் பரோபகாரமாகச் செய்யும் போது பந்தங்களில் சிக்கிக்கொள்ள மாட்டோம். ஏற்கனவே சுயநலத்துடன் சில செயல்களைச் செய்திருந்தாலும் கூட, அதன் பாதிப்பும் நம்மை விட்டு முழுமையாக நீங்கி விடும். இந்த ரகசியத்தையே "கர்மயோகம்' என்று ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:28

சித்தானந்தர்


* வெளிப்பொருட்கள் மீதான மோகமே மனிதர்களை தீய நிலைக்கு தள்ளுகிறது. இவற்றிலிருந்து விடுபட உள்மனம் சுத்தமாகவும், நல்ல முடிவை எடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மனிதர்களின் மனமும், அறிவும் ஒரு செயலை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது. இதை தவிர்த்து வெளிப்பொருட்களால் எந்த செயலையும் செய்து விட முடியாது. இந்த சக்திகளை ஒன்றாக திரட்டி, உறுதியுடன் செயல்பட தொடங்கினால் வெளிப்பொருட்களின் பாதிப்புகளை வென்று விடலாம்.

* எந்த செலையும் 'முடியாது' என்று ஒதுக்கி வைக்காதீர்கள். ஒரு செயலை பற்றிய சரியான எண்ணம் இல்லாதவர்கள்தான் அதனை செய்யாமல் இருப்பார்கள். அதனை நிச்சயமாக செய்ய வேண்டும் என முடிவெடுத்து செயல்பட துவங்கினால், முதலில் தோல்வி கிடைப்பதுபோல தெரிந்தாலும், கடின முயற்சியால் அதில் வெற்றி காணலாம். சந்தேகம் இல்லாத மனிதர்கள் எந்த செயலையும் மிக எளிதாக செய்து விடுவார்கள்.

* மனிதர்கள் ஒவ்வொருநாளும் புதுப்புது சூழலையும், வாய்ப்புகளையும் சந்திக்கிறார்கள். அதற்கேற்ப தங்களது அறிவை பயன்படுத்தி, உள்ளத்தில் உறுதியுடன் செயல்பட்டால் மட்டுமே அதில் வெற்றி காண முடியும். புதிய சூழலை கண்டு அச்சம் கொண்டு ஒதுங்கிவிட்டால், வாழ்வில் வெற்றி பெற முடியாது. உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அது சரிப்படாது என்று ஒதுங்கிக் கொள்வதைவிட, அதனை தன்னம்பிக்கையுடன் செயல்படுத்தி வெற்றி காண வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:28

கிருபானந்த வாரியார்


* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.

* சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.


* நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.


* ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:29

அதிவீரராம பாண்டியன்

ஒருவருக்குத் தீங்கு செய்பவர்கள் தம்மால் தீங்கு செய்யப்பட்டவர்களின் கண்களின் முன்பாகவே கேடு அடைவது திண்ணம்.

தூரத்திலிருந்து துன்பம் செய்கிறவனை வெறுப்பதைக் காட்டிலும் அருகிலிருந்து துன்பம் செய்கிறவனை அதிகம் வெறுக்க வேண்டும். புறப்பகையைவிட உட்பகையே அபாயகரமானது.

புண்ணியத்தினால் கிடைத்த தனம் குறைவுபடாது. தன்னுடைய தனத்தைத் தான் மட்டுமே அனுபவிப்பது தகுதியுடையதல்ல. யாசகர்கள் எதைக் கேட்க நினைத்தார்களோ அதைக் கொடுத்தால் அல்லாமல் அவரால் தரப்பட்ட புகழ் நில்லாது.

ஒருவருக்கு லாபத்துக்குக் கொடுப்பதைக் காட்டிலும் இரப்பவர்க்குக் கொடுப்பதில் அனேகங்கோடி இன்பமுண்டாகும்.

சிங்கத்துக்கு தான் வந்த வழியைத் திரும்பிப் பார்த்தல் இயற்கை.

யார் எதைச் சொன்னாலும் குற்றமுடையோர் தம்மைப்பற்றித் தாம் சொல்கிறார்கள் என்ற எண்ணிக் கொள்வார்கள். அவர்களிடம் குற்றம் இருக்கிற குற்றம்தான் இதற்குக் காரணம்.

இருவர் ஒத்த கருத்துடையவர்களாக இருக்கும் போது, அதில் அன்னியர் தலையிடுவது அறிவுடைமையாகாது.

ஒருவனுக்குப் பிறக்குமிடம், பழகும் இடம், உறையும் இடம் ஆகியவை நல்ல இடங்களாக இருப்பின் நன்மை பயக்கும்.

நல்ல குலத்தில் நல்லோருக்குப் பிறந்து, நல்லோருடன் வளர்ந்து, பெரியோர்களுடன் சேர்ந்து பெருமைகொண்டு வாழ்பவன் வாழ்க்கையில் குறையேதுமில்லாமல் நிறைவே நிறைந்திருக்கும்.

நல்லது செய்பவன் எந்நாளும் மனத்திருப்தியோடு வாழலாம். பொல்லாங்கு செய்பவன் புழுங்கி புழுங்கிச் செத்துக் கொண்டிருப்பான்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:30

வள்ளலார்


ஏழைகள் வயிறு எரியச் செய்வது பாவம். பசித்தோர் முகத்தை பாராதிருப்பது பாவம். கோள் சொல்லி குடும்பம் கலைப்பது பாவம். குருவை வணங்க கூசி நிற்பது பாவம்.


மாமிசம் உண்டு உடலை வளர்ப்பது பாவம். கல்லும் நெல்லும் கலந்து விற்பது பாவம். தவம் செய்வோரை தாழ்த்தி பேசுவது பாவம். தாய் தந்தை மொழியை தட்டி நடப்பது பாவம்.


நல்லோர் மனதை நடுங்க செய்வது பாவம். தானம் கொடுப்போரை தடுப்பது பாவம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:30

குழந்தையானந்த சுவாமி


* சில மனிதர்கள் தான் சம்சாரத்தின் அக்கரையை அடைகிறார்கள். அதிகமான மனிதர்கள் தர்மத்தை கேலி செய்து இக்கரையிலேயே ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

* ஒருவன் யுத்தத்தில் லட்சக்கணக்கான மனிதர்களை ஜெயித்தாலும், உண்மையில் வீரனில்லை. எவன் தன்னைத் தானே ஜெயித்துக் கொள்கிறானோ அவன்தான் உண்மையான வீரன்.

* பாபம் நம்மை அடைவதில்லை என்று கவலையில்லாமல் இருக்கக் கூடாது. எப்படி சொட்டு சொட்டாக நீர் விழுந்து பானை நிரம்பிவிடுகிறதோ, அப்படியே மனிதனும் படிப்படியாக பாவியாகிறான்.

* யாரையும் கடினமான சொற்களால் பேசக்கூடாது. கடினமான வார்த்தைகளைப் பேசுவதனால் கடினமான சொற்களைக் கேட்க வேண்டியதிருக்கும். பிறரை துன்புறுத்துவதால் நீயும் துன்பத்தை அனுபவிக்க வேண்டி இருக்கும். பிறரை அழ வைப்பதால் நீயும் அழ வேண்டியிருக்கும்.

* யார் ஒருவரால் ஆசைகளை ஜெயிக்க முடியவில்லையோ, அவன் விபூதி பூசியும், உபவாசம் இருந்தும் சாதனைகள் செய்தாலும் மனதை பவித்ரமாக்கிக் கொள்ள முடியாது.

* பிறருக்கு உபதேசம் செய்ய முனைபவன், தான் முதலில் அதன்படி நடக்க வேண்டும். தன்னையே வசியப்படுத்துபவனால் தான் பிறரை வசியப்படுத்த முடியும். தன்னை வசியப்படுத்துதல் என்பது கடினமான காரியம்.

* பாபம், புண்ணியம் எல்லாம் நம்முடைய செயல்கள் தான். ஒருவன் மற்றொருவனைப் பவித்ரமாக்க முடியாது.

* இந்த உலகமாவது நீர்க்குமிழி போல், கானல் நீர் போல் ஆனது. அதனால் இந்த ஜெகத்தைச் துச்சமாக மதிப்பவனை மரணம் வந்து அடைவதில்லை.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 24/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri 31 Oct 2008 - 4:31

முரளீதர சுவாமி


* நன்மை நடக்கும்போது மகிழ்பவர்கள், தீமை நிகழும் போது இறைவன் இருக்கிறானா என சந்தேகிக் கின்றனர். "இறைவன் எப்படி இவ்வாறு தவறு நடக்க அனுமதிக்கிறார்?' என சந்தேகத்துடன் கேள்வியும் எழுப்புகின்றனர். உண்மையில் உலகில் நன்மை, தீமையென்று எதுவுமே கிடையாது. இன்று நன்மையாக தெரிவது, நாளை தீய செயலாகவும், இப்போது தீமையாக தெரிவது சிலகாலம் கழித்து நல்லதாகவும் தெரியும். உலகில் நடக்கும் எந்த சிறிய செயலும் இறைவனுக்கு தெரிந் தேதான் நடக் கிறது. அவருக்கு தெரியாமல் எதுவும் இம்மியளவுகூட அசைவதில்லை. இயற்கையாக நிகழும் செயலை, நமது சிறிய அறிவிற்கு ஏற்றவகையில் நல்லது என்றும், தீயது என்றும் பிரிவுபடுத்திப் பார்க்கிறோம்.


* நாம் காணும் ஒவ்வொன்றும் நமது உள்ளத்தை பொறுத்தே அமைகிறது. மனம் நல்லதை நினைக்கும்போது, பார்க்கப்படுவது தீமையானதாக இருந்தாலும், அதிலுள்ள நன்மை மட்டுமே தெரியும். அதேசமயம் மனம் தீயவற்றை எண்ணி கொண்டிருக்கும்போது, நல்லவற்றை பார்த்தாலும் தீமையாகவே தெரியும். மொத்தத்தில் அனைத்தும் உங்களது உள் பார்வைக்கு ஏற்பவே தெரிகிறது. அனைத்தும் நன்மையாகவே நடக்க வேண்டுமென விரும்பினால், முதலில் மனதை நல்லதாக வைத்துக் கொள்ளுங்கள்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக