புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!
Page 1 of 1 •
சிந்தனை செய் மனமே!
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!
காந்தார தேசத்து மன்னன் சுபலனின் மகள் காந்தாரி. மிதிலை நகரத்துப் புதல்வி மைதிலியைப் போல், காந்தார தேசத்தின் புதல்வியானாள், அவள். தந்தைக்கு மகள் என சுருங்கிவிடாமல், விரிவான தேசத்தின் மகள் என தேசம் காப்பவளாகத் தோற்றமளித்தாள்.
பீஷ்மரின் அறிவுறுத்தலால் திருதராஷ்டிரரை கணவராக ஏற்றாள் காந்தாரி. கணவர் பார்வையில்லாதவர் எனத் தெரிந்ததும், தனக்கும் பார்வை தேவையில்லை எனத் தன் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு, பதிவிரதையின் அறத்துக்கு ஏற்ப வாழ்ந்தாள். இவளின் அளவுக்கு, சிறப்பு கொண்ட பதிவிரதை எவரும் இல்லை.
ஒருமுறை, கடும் பசியுடன் காந்தாரியின் வீட்டுக்கு வந்தார் வியாசர். அவளும் அவரை அன்புடன் உபசரித்தாள். இதில் மகிழ்ந்த வியாசர், ''நூறு குழந்தைகளைப் பெறுவாய்!'' என அருளினார். அதன்படி கருவுற்றவளுக்குப் பேறுகாலம் தாமதமானது. இந்த நிலையில், குந்திதேவி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த விவரம் அறிந்து கலங்கினாள்; பொறாமைப்பட்டாள். ஆத்திரத்துடன் தனது வயிற்றைத் தானே அடித்துக்கொண்டதில், உள்ளேயிருந்த மாமிசப்பிண்டம் வெளியே வந்தது. அப்போது அங்கே தோன்றிய வியாசர், 101 மடக்கில் நெய் விட்டு நிரப்பினார்; மாமிசப் பிண்டத்தை குளிர்ந்த நீரில் கழுவி, 101 பாகமாகப் பிரித்து, நெய்யிலிட்டுப் பாதுகாத்தார். காலம் கனிந்ததும், அவை 101 குழந்தைகளாக உருப்பெற்றன. முதல் மடக்கில் தோன்றியவன் துரியோதனன்; கடைசி மடக்கில் உருவானவள், துச்சலா (விஞ்ஞானம் அறிமுகம் செய்த டெஸ்ட்டியூப் பேபி, விந்து வங்கி, இன்கு பேட்டர் போன்றவற்றின் முன்னோடி!).
திருதராஷ்டிரரும் பாண்டுவும் வியாசரின் அருளில் தோன்றியவர்கள். குந்தி மற்றும் மாத்ரிக்குப் பிறந்தவர்களும் தேவாம்சம் பொருந்தியவர்கள் (பாண்டவர்கள்). அதாவது, இணைப்பில் பிறக்காமல், அருளில் பிறந்தவர்கள். துரியோ தனன் பிறந்த வேளையில், அபசகுனம் தென்பட... குறிப் பறிந்த அறிஞர்கள், குலத்தை அழிவில் இருந்து காப்பாற்ற, அவனைத் துறக்கும்படி பரிந்துரைத்தனர். ஆனால், கண வனும் மனைவியும், துரியோதனனை இழக்க விரும்பவில்லை. ஆனால், நாம் ஒன்று நினைக்க, தெய்வம் வேறொன்றை நினைக்கும் அல்லவா?! பாரதப் போரில், துரியோதனனுடன் சேர்ந்து, மற்ற மகன்களும் மாண்டனர். ஒரு மகனை இழக்க விரும்பாத மனம், நூறு பேரையும் இழந்த துயரத்தைச் சந்தித்தது. துயரத்தில் மூழ்கியுள்ள பெரியன்னையைச்
சந்திக்கப் பாண்டவர்கள் தயங்கினர். காந்தாரி தங்களைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்று பயம்! பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் அவளைச் சந்திக்க... அவள் சாந்தமானதும் திருதராஷ்டி ரரின் அனுமதியுடன் காந்தாரியைச் சந்தித்தனர். அவர்கள் பயந்தது போலவே, அவளும் ஆத் திரத்துடன் சபிக்க முற்பட்டாள். வியாசர் அவளைச் சமாதானப்படுத்தி, ''கௌரவர்கள் தினமும் உன்னை அடிபணியும்போது, 'அறம் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு’ என வாழ்த்தினாய். அதன்படி, அறம் வென்றது. எனவே, சினம் வேண்டாம்'' என்றார்.
''பீமன், அறத்துக்குப் புறம்பாக யுத்தத்தில், தொப்புளுக்குக் கீழே கதையைப் பயன்படுத் தினான். அதை எப்படிப் பொறுப்பது?'' என்று காந்தாரி வினவ, பீமன் மன்னிப்புக் கேட்டான். அத்துடன், சூது விளையாட்டு மற்றும் திரௌ பதியின் வஸ்திராஹரணம் ஆகியவை அறத்துக் குப் புறம்பானவை என வாதிட்டான் பீமன். இதில் கோபமுற்றவள், ''துச்சாதனனின் ரத்தத் தைக் குடித்தாய். உன்னை எப்படி மன்னிப்பது?'' எனக் கத்தினாள். உடனே அவன், ''அவனது ரத்தம் என் பற்களைக் கடந்து உள்ளே செல்ல வில்லை. கைகள் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. அந்தக் கைகளால், 'அவிழ்ந்த உனது கேசத்தை சேர்த்து வைக்கிறேன்’ என்று சொன்ன வாக்குறு திப்படி, திரௌபதியின் தலையில் ரத்தத்தைப் படியச் செய்தேன்'' என்றான்.
இதன் பிறகு காந்தாரி, தருமரை அழைக்க... 'உங்கள் மைந்தர்களை அழித்தது தவறுதான்; மன்னியுங்கள்’ எனச் சொல்லி, அவளது காலில் விழுந்தார் தருமர். அவளது காலைத் தொட்டதும், தருமரின் கால் நகங்கள் கறுத்துப் போயின. காந்தாரியின் கோபமும் தணிந்தது.
வேதவியாசர், காந்தாரிக்கு திவ்ய திருஷ் டியை அளித்தார். போரில் தோற்றவர்களையும், இறந்தவர்களையும் கண்டு கவலையானாள். சிதையில் எரியும் கணவன்மார்களின் உடல்களை வலம் வந்துகொண்டிருந்த இளவயதுப் பெண்க ளைப் பார்த்ததும், ஸ்ரீகிருஷ்ணரை ஆவேசத்துடன் பார்த்தாள். ''இத்தனைத் துயரங்களுக்கும் நீயே காரணம்! நான் பதிவிரதை என்பது உண்மை யானால், எனது வம்சத்தில் சகோதரர்கள் ஒரு வருக்கொருவர் சண்டையிட்டு மாண்டதுபோல, நீ தோன்றிய யாதவ வம்சத்து சகோதரர்கள் ஒரு வருக்கொருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டும். நீயும் காட்டில், தனிமையில் மரணத்தைச் சந்திப் பாய்'' எனச் சபித்தாள். ''யுத்தத்தைத் தவிர்த்திருக்க உன்னால் முடியும். ஆனால், குரு வம்சம் அழிவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நீ'' என கிருஷ்ணரை நிந்தித்தாள். ஸ்ரீகிருஷ்ணர் பொறுமையுடன், ''தாங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், இவை முன்பே நிச்சயிக்கப்பட்ட விஷயங்கள். நடந்துதான் தீரும்!'' என்றார்.
யாதவன் ஒருவன், பெண் வேடமிட்டுத் தன்னை கர்ப்பவதியாகக் காட்டிக்கொண்டு, முனிவர் ஒருவரிடம், 'எனக்கு எந்தக் குழந்தை பிறக்கும்?’ என்றான். இதை அறியாமல் இருப்பாரா முனிவர்? அவனது விளையாட்டையே வினையாக்கினார். 'நீ உலக்கை ஒன்றைப் பெற் றெடுப்பாய்; அது, உனது குலத்தையே அழிக்கும்’ என்றார். அதன்படி, உலக்கையை ஈன்றெடுத்தான், அவன். அந்த உலக்கையைப் பொடிப் பொடியாக்கி, யமுனையில் கரைத்தனர் யாதவர்கள். அவை அனைத்தும் நாணல் காடாகத் தோன்றி வளர்ந்தன. யமுனைக் கரையில், இருதரப் புக்கும் சண்டை வலுத்தது; அனைத்து யாதவர்களும் ஒன்று திரண்டு, நாணலைப் பிடுங்கி அடித்துக்கொண்டு, மாண்டனர்.
உலக்கையில் இருந்த இரும்புக் காப்பினைப் பயன்படுத்தி, வேடன் ஒருவன் பாணம் உருவாக்கினான். வனத்தில், தனியே மரத்தில் அமர்ந்து, குழலூதும் கண்ணனின் கால்களைப் பறவை என நினைத்து, பாணம் தொடுத்தான். அது ஸ்ரீகிருஷ்ணரின் மறைவுக்குக் காரணமாயிற்று எனும் தகவல் புராணத்தில் உண்டு!
காந்தாரியின் சாபம்... யாதவர்களையும் கண்ணனையும் இறக்கச் செய்தது. பதிவிரதையின் சாபம் பலிக்காமல் போகாது. துளசியின் சாபம் கண்ணனைக் கல்லாக்கியது என்கிறது புராணம். பதிவிரதையரின் சரிதம், பாரதப் பண்பாட்டின் பெருமைக்கு எடுத்துக்காட்டு!
பிறவியில் பார்வையை இழந்தவன், ஒருகட்டத்தில், தினசரி வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்துவிடுவான். அவனது துயரமும் மாறி விடும். ஆனால், உலகைப் பார்த்து ரசித்த கண்கள், பார்வையை இழந் தால், தடுமாற்றம் நிகழும்; ஆறாத் துயரமாகிப் போகும். பார்வை இருந்தும், அதைக் கணவரின் நிலை கருதி பயன்படுத்தாமல் இருந்தது, அசாதாரணமான விஷயம். இப்படி, இரண்டு மனங்கள் ஒன்றாவது, தாம்பத்தியத்தின் சிறப்புக்கு அடித்தளம். கணவரைப் பின்பற்றுகிற விஷ யத்தில், தனது துயரத்தை அவள் பொருட்படுத்தவில்லை, பதிவிரதைக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு, காந்தாரி!
திருதராஷ்டிரருடன் இணைந்து மகாபாரதத்துக்கு வித்திட்டவள் காந்தாரி. எங்கே அறம் உள்ளதோ, அங்கே வெற்றி என்பதை நடத்திக் காட்டியவள் அவள்.
இன்றைய தம்பதியரிடம் உள்ள கருத்து வேறுபாடுகள், விபரீதங்களை நிகழ்த்தி வருவதைக் காண்கிறோம். பெற்றோரின் அன்புக்கு ஏங்குகிற குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர் என்பதும் வருத்தத்துக்கு உரிய ஒன்று. பண்பு இருக்குமிடத்தில் இன்பம் பொங்கும்.
எதிரிகளைச் சந்தித்த காந்தாரி, எரிந்து விழாமல், அவர்களையும் அரவணைத்துச் செயல்பட்டாள். அறம் எனும் குறிக்கோளுடன் வாழ்ப வர்கள், தாம் துயரத்தைச் சந்தித்தாலும் பிறரைத் துயரப்படுத்த மாட்டார்கள். துயரத்தின் தாக்கம், கோபத்துக்கு வடிகாலாக மாறினாலும், பிறகு அவர்களையும் அணைத்துக்கொள்கிற பாங்கு, பாரதத்தில் பிறந்த பெண்மணியின் மிகச் சிறந்த குணம்; அந்த நற்குணத்துக்குச்
சொந்தக்காரி, காந்தாரி!
நன்றி விகடன்.
அகக்கண் திறப்பாள்... காந்தாரி!
காந்தார தேசத்து மன்னன் சுபலனின் மகள் காந்தாரி. மிதிலை நகரத்துப் புதல்வி மைதிலியைப் போல், காந்தார தேசத்தின் புதல்வியானாள், அவள். தந்தைக்கு மகள் என சுருங்கிவிடாமல், விரிவான தேசத்தின் மகள் என தேசம் காப்பவளாகத் தோற்றமளித்தாள்.
பீஷ்மரின் அறிவுறுத்தலால் திருதராஷ்டிரரை கணவராக ஏற்றாள் காந்தாரி. கணவர் பார்வையில்லாதவர் எனத் தெரிந்ததும், தனக்கும் பார்வை தேவையில்லை எனத் தன் கண்களைத் துணியால் கட்டிக்கொண்டு, பதிவிரதையின் அறத்துக்கு ஏற்ப வாழ்ந்தாள். இவளின் அளவுக்கு, சிறப்பு கொண்ட பதிவிரதை எவரும் இல்லை.
ஒருமுறை, கடும் பசியுடன் காந்தாரியின் வீட்டுக்கு வந்தார் வியாசர். அவளும் அவரை அன்புடன் உபசரித்தாள். இதில் மகிழ்ந்த வியாசர், ''நூறு குழந்தைகளைப் பெறுவாய்!'' என அருளினார். அதன்படி கருவுற்றவளுக்குப் பேறுகாலம் தாமதமானது. இந்த நிலையில், குந்திதேவி குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த விவரம் அறிந்து கலங்கினாள்; பொறாமைப்பட்டாள். ஆத்திரத்துடன் தனது வயிற்றைத் தானே அடித்துக்கொண்டதில், உள்ளேயிருந்த மாமிசப்பிண்டம் வெளியே வந்தது. அப்போது அங்கே தோன்றிய வியாசர், 101 மடக்கில் நெய் விட்டு நிரப்பினார்; மாமிசப் பிண்டத்தை குளிர்ந்த நீரில் கழுவி, 101 பாகமாகப் பிரித்து, நெய்யிலிட்டுப் பாதுகாத்தார். காலம் கனிந்ததும், அவை 101 குழந்தைகளாக உருப்பெற்றன. முதல் மடக்கில் தோன்றியவன் துரியோதனன்; கடைசி மடக்கில் உருவானவள், துச்சலா (விஞ்ஞானம் அறிமுகம் செய்த டெஸ்ட்டியூப் பேபி, விந்து வங்கி, இன்கு பேட்டர் போன்றவற்றின் முன்னோடி!).
திருதராஷ்டிரரும் பாண்டுவும் வியாசரின் அருளில் தோன்றியவர்கள். குந்தி மற்றும் மாத்ரிக்குப் பிறந்தவர்களும் தேவாம்சம் பொருந்தியவர்கள் (பாண்டவர்கள்). அதாவது, இணைப்பில் பிறக்காமல், அருளில் பிறந்தவர்கள். துரியோ தனன் பிறந்த வேளையில், அபசகுனம் தென்பட... குறிப் பறிந்த அறிஞர்கள், குலத்தை அழிவில் இருந்து காப்பாற்ற, அவனைத் துறக்கும்படி பரிந்துரைத்தனர். ஆனால், கண வனும் மனைவியும், துரியோதனனை இழக்க விரும்பவில்லை. ஆனால், நாம் ஒன்று நினைக்க, தெய்வம் வேறொன்றை நினைக்கும் அல்லவா?! பாரதப் போரில், துரியோதனனுடன் சேர்ந்து, மற்ற மகன்களும் மாண்டனர். ஒரு மகனை இழக்க விரும்பாத மனம், நூறு பேரையும் இழந்த துயரத்தைச் சந்தித்தது. துயரத்தில் மூழ்கியுள்ள பெரியன்னையைச்
சந்திக்கப் பாண்டவர்கள் தயங்கினர். காந்தாரி தங்களைச் சபித்துவிட்டால் என்ன செய்வது என்று பயம்! பிறகு, ஸ்ரீகிருஷ்ணர் அவளைச் சந்திக்க... அவள் சாந்தமானதும் திருதராஷ்டி ரரின் அனுமதியுடன் காந்தாரியைச் சந்தித்தனர். அவர்கள் பயந்தது போலவே, அவளும் ஆத் திரத்துடன் சபிக்க முற்பட்டாள். வியாசர் அவளைச் சமாதானப்படுத்தி, ''கௌரவர்கள் தினமும் உன்னை அடிபணியும்போது, 'அறம் இருக்கும் இடத்தில் வெற்றி உண்டு’ என வாழ்த்தினாய். அதன்படி, அறம் வென்றது. எனவே, சினம் வேண்டாம்'' என்றார்.
''பீமன், அறத்துக்குப் புறம்பாக யுத்தத்தில், தொப்புளுக்குக் கீழே கதையைப் பயன்படுத் தினான். அதை எப்படிப் பொறுப்பது?'' என்று காந்தாரி வினவ, பீமன் மன்னிப்புக் கேட்டான். அத்துடன், சூது விளையாட்டு மற்றும் திரௌ பதியின் வஸ்திராஹரணம் ஆகியவை அறத்துக் குப் புறம்பானவை என வாதிட்டான் பீமன். இதில் கோபமுற்றவள், ''துச்சாதனனின் ரத்தத் தைக் குடித்தாய். உன்னை எப்படி மன்னிப்பது?'' எனக் கத்தினாள். உடனே அவன், ''அவனது ரத்தம் என் பற்களைக் கடந்து உள்ளே செல்ல வில்லை. கைகள் ரத்தத்தில் தோய்ந்திருந்தன. அந்தக் கைகளால், 'அவிழ்ந்த உனது கேசத்தை சேர்த்து வைக்கிறேன்’ என்று சொன்ன வாக்குறு திப்படி, திரௌபதியின் தலையில் ரத்தத்தைப் படியச் செய்தேன்'' என்றான்.
இதன் பிறகு காந்தாரி, தருமரை அழைக்க... 'உங்கள் மைந்தர்களை அழித்தது தவறுதான்; மன்னியுங்கள்’ எனச் சொல்லி, அவளது காலில் விழுந்தார் தருமர். அவளது காலைத் தொட்டதும், தருமரின் கால் நகங்கள் கறுத்துப் போயின. காந்தாரியின் கோபமும் தணிந்தது.
வேதவியாசர், காந்தாரிக்கு திவ்ய திருஷ் டியை அளித்தார். போரில் தோற்றவர்களையும், இறந்தவர்களையும் கண்டு கவலையானாள். சிதையில் எரியும் கணவன்மார்களின் உடல்களை வலம் வந்துகொண்டிருந்த இளவயதுப் பெண்க ளைப் பார்த்ததும், ஸ்ரீகிருஷ்ணரை ஆவேசத்துடன் பார்த்தாள். ''இத்தனைத் துயரங்களுக்கும் நீயே காரணம்! நான் பதிவிரதை என்பது உண்மை யானால், எனது வம்சத்தில் சகோதரர்கள் ஒரு வருக்கொருவர் சண்டையிட்டு மாண்டதுபோல, நீ தோன்றிய யாதவ வம்சத்து சகோதரர்கள் ஒரு வருக்கொருவர் அடித்துக்கொண்டு சாகவேண்டும். நீயும் காட்டில், தனிமையில் மரணத்தைச் சந்திப் பாய்'' எனச் சபித்தாள். ''யுத்தத்தைத் தவிர்த்திருக்க உன்னால் முடியும். ஆனால், குரு வம்சம் அழிவதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் நீ'' என கிருஷ்ணரை நிந்தித்தாள். ஸ்ரீகிருஷ்ணர் பொறுமையுடன், ''தாங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், இவை முன்பே நிச்சயிக்கப்பட்ட விஷயங்கள். நடந்துதான் தீரும்!'' என்றார்.
யாதவன் ஒருவன், பெண் வேடமிட்டுத் தன்னை கர்ப்பவதியாகக் காட்டிக்கொண்டு, முனிவர் ஒருவரிடம், 'எனக்கு எந்தக் குழந்தை பிறக்கும்?’ என்றான். இதை அறியாமல் இருப்பாரா முனிவர்? அவனது விளையாட்டையே வினையாக்கினார். 'நீ உலக்கை ஒன்றைப் பெற் றெடுப்பாய்; அது, உனது குலத்தையே அழிக்கும்’ என்றார். அதன்படி, உலக்கையை ஈன்றெடுத்தான், அவன். அந்த உலக்கையைப் பொடிப் பொடியாக்கி, யமுனையில் கரைத்தனர் யாதவர்கள். அவை அனைத்தும் நாணல் காடாகத் தோன்றி வளர்ந்தன. யமுனைக் கரையில், இருதரப் புக்கும் சண்டை வலுத்தது; அனைத்து யாதவர்களும் ஒன்று திரண்டு, நாணலைப் பிடுங்கி அடித்துக்கொண்டு, மாண்டனர்.
உலக்கையில் இருந்த இரும்புக் காப்பினைப் பயன்படுத்தி, வேடன் ஒருவன் பாணம் உருவாக்கினான். வனத்தில், தனியே மரத்தில் அமர்ந்து, குழலூதும் கண்ணனின் கால்களைப் பறவை என நினைத்து, பாணம் தொடுத்தான். அது ஸ்ரீகிருஷ்ணரின் மறைவுக்குக் காரணமாயிற்று எனும் தகவல் புராணத்தில் உண்டு!
காந்தாரியின் சாபம்... யாதவர்களையும் கண்ணனையும் இறக்கச் செய்தது. பதிவிரதையின் சாபம் பலிக்காமல் போகாது. துளசியின் சாபம் கண்ணனைக் கல்லாக்கியது என்கிறது புராணம். பதிவிரதையரின் சரிதம், பாரதப் பண்பாட்டின் பெருமைக்கு எடுத்துக்காட்டு!
பிறவியில் பார்வையை இழந்தவன், ஒருகட்டத்தில், தினசரி வேலைகளைச் சிறப்பாகச் செய்து முடித்துவிடுவான். அவனது துயரமும் மாறி விடும். ஆனால், உலகைப் பார்த்து ரசித்த கண்கள், பார்வையை இழந் தால், தடுமாற்றம் நிகழும்; ஆறாத் துயரமாகிப் போகும். பார்வை இருந்தும், அதைக் கணவரின் நிலை கருதி பயன்படுத்தாமல் இருந்தது, அசாதாரணமான விஷயம். இப்படி, இரண்டு மனங்கள் ஒன்றாவது, தாம்பத்தியத்தின் சிறப்புக்கு அடித்தளம். கணவரைப் பின்பற்றுகிற விஷ யத்தில், தனது துயரத்தை அவள் பொருட்படுத்தவில்லை, பதிவிரதைக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு, காந்தாரி!
திருதராஷ்டிரருடன் இணைந்து மகாபாரதத்துக்கு வித்திட்டவள் காந்தாரி. எங்கே அறம் உள்ளதோ, அங்கே வெற்றி என்பதை நடத்திக் காட்டியவள் அவள்.
இன்றைய தம்பதியரிடம் உள்ள கருத்து வேறுபாடுகள், விபரீதங்களை நிகழ்த்தி வருவதைக் காண்கிறோம். பெற்றோரின் அன்புக்கு ஏங்குகிற குழந்தைகள் அதிகரித்து வருகின்றனர் என்பதும் வருத்தத்துக்கு உரிய ஒன்று. பண்பு இருக்குமிடத்தில் இன்பம் பொங்கும்.
எதிரிகளைச் சந்தித்த காந்தாரி, எரிந்து விழாமல், அவர்களையும் அரவணைத்துச் செயல்பட்டாள். அறம் எனும் குறிக்கோளுடன் வாழ்ப வர்கள், தாம் துயரத்தைச் சந்தித்தாலும் பிறரைத் துயரப்படுத்த மாட்டார்கள். துயரத்தின் தாக்கம், கோபத்துக்கு வடிகாலாக மாறினாலும், பிறகு அவர்களையும் அணைத்துக்கொள்கிற பாங்கு, பாரதத்தில் பிறந்த பெண்மணியின் மிகச் சிறந்த குணம்; அந்த நற்குணத்துக்குச்
சொந்தக்காரி, காந்தாரி!
நன்றி விகடன்.
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|