புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_c10மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_m10மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_c10 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_c10மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_m10மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_c10 
2 Posts - 6%
heezulia
மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_c10மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_m10மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_c10மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_m10மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 03, 2011 9:04 am

மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Fore02


இஸ்லாமாபாத், மார்ச்.3- பாகிஸ்தானில் மதத்துவேஷ சட்டத்துக்கு எதிராக பேசி வந்த சிறுபான்மை இன மக்கள் நல மந்திரி ஷபாஸ் பட்டி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சட்டத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட 2-வது கொலை ஆகும் இது. ஏற்கனவே இந்த சட்டத்தை எதிர்த்து பேசிய பஞ்சாப் மாநில கவர்னர் கொல்லப்பட்டார்.

தவறாக பயன்படுத்தப்பட்ட சட்டம்

பாகிஸ்தானில், `மதத்துவேஷ சட்டம்' என்ற பெயரில் ஒரு சட்டம் உள்ளது. தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்க பலர் இந்த சட்டத்தை பயன்படுத்தி வந்தனர். இஸ்லாம் மதத்தை அவமதித்தார் என்று கூறி பொய்யாக பலர் இந்த சட்டத்தின் கீழ் தூக்கிலிடப்பட்டனர்.

இந்த சட்டத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனை தான் விதிக்கப்படும்.

ஆசியா பீவி

சமீபத்தில் ஆசியா பீவீ என்ற விவசாய கூலியான கிறிஸ்தவ பெண் இஸ்லாம் மதத்தை அவமதித்து விட்டார் என்று கூறி அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு போப் ஆண்டவர் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்காக இதில் சில திருத்தங்களை கொண்டு வர அந்த நாட்டு அரசு திட்டமிட்டது. இதற்கு பாகிஸ்தானில் உள்ள மத வெறியர்களும், இஸ்லாமிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பேரணிகள், கண்டனக்கூட்டங்கள் நடத்தின. இதனால் பாகிஸ்தான் அரசாங்கம் சட்டத்தை திருத்துவதை கைவிட்டது.

மந்திரி சுட்டுக்கொலை

இந்தநிலையில், பாகிஸ்தான் சிறுபான்மை இன மக்கள் நலத் துறை மந்திரி ஷபாஸ் பட்டி நேற்று இஸ்லாமாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டார். பாகிஸ்தான் மந்திரிசபையில் இருந்த ஒரே கிறிஸ்தவர் இவர் மட்டும் தான். அவர் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து பேசி வந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் அவரை கொல்ல தீர்மானித்தனர். அவருக்கு பல முறை கொலை மிரட்டல்கள் வந்தன.

நேற்று அவர் வீட்டில் இருந்து அலுவலகத்துக்கு புறப்பட்டார். காரில் அவர் சென்றபோது ஆயுதம் தாங்கிய சிலர் அந்த காரை வழிமறித்தனர். கார் நின்றதும் காரில் இருந்த அடையாளம் தெரியாத பெண் கீழே இறக்கி விடப்பட்டார். அதன்பிறகு மந்திரியை நோக்கி அவர்கள் துப்பாக்கியால் சுட்டனர். கிட்டத்தட்ட 20 நொடிகளுக்கு அவர்கள் சுட்டனர். அதன் பிறகு அவர்கள் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் மந்திரி பலத்த காயம் அடைந்தார். அவர் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். அவர் உடலில் பல குண்டுகள் பாய்ந்து இருந்ததாக டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

துண்டு பிரசுரங்கள்

இதுதொடர்பாக போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பின்யாமின் நிருபர்களிடம் கூறுகையில், `பல்வேறு திசைகளில் இருந்து 4 பேர் மந்திரியின் காரை நோக்கி சுட்டனர்' என்று குறிப்பிட்டார்.

சம்பவம் நடந்த இடத்தில் கிடந்த துண்டு பிரசுரங்களில் மதத்துவேஷ சட்டத்துக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த துண்டு பிரசுரம் உருது மொழியில் இருந்தது. இந்த துண்டு பிரசுரங்களை `தன்ஜிம் அல் கொய்தா தெக்ரிக் தலீபான் பஞ்சாப்' என்ற அமைப்பு வெளியிட்டு இருந்தது.

கடந்த ஜனவரி மாதம் பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் தசீர் அவரது பாதுகாவலராலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். அவரும் இந்த மதத்துவேஷ சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தான் கொல்லப்பட்டார்.

மதத்துவேஷி

ஷபாஸ் பட்டி கொலைக்கு தலீபான் இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. மதத்துவேஷ சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு ஷபாஸ் முயற்சி செய்தார். அதனால்தான் அவர் கொல்லப்பட்டார் என்று பாகிஸ்தான் தலீபான் கூறி உள்ளது.

தலீபான் செய்தி தொடர்பாளர் சஜ்ஜத் முகமன்ட் டெலிபோன் மூலம் நிருபர்களிடம் கூறுகையில், "சல்மான் தசீர் மாதிரி ஷபாஸ் பட்டியும் ஒரு மதத்துவேஷி. அவர் இஸ்லாமிய மதத்தை அவமதித்தார். அதனால் தான் கொல்லப்பட்டார்'' என்று தெரிவித்தார்.

பாதுகாப்பு இல்லாமல்...

பட்டி போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் காரில் பயணம் செய்தார். அரசாங்கம் அவருக்கு கொடுத்த 2 பாதுகாவலர்களையும் அவர் தன் வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு காரில் பயணம் செய்தார். தீவிரவாதிகள் சுட்டதில் காரின் கண்ணாடியில் 4 அல்லது 5 குண்டுகள் பாய்ந்து ஓட்டைகள் விழுந்து உள்ளன. காரின் பின் இருக்கை முழுவதும் ரத்தம் சிந்தி கிடந்தது.

பட்டப்பகலில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது பாகிஸ்தானியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. தீவிரவாதிகள் சுட்டபோது கார் டிரைவர் இருக்கைக்கு அடியில் தலையை குனிந்து கொண்டார். இதனால் அவர் தப்பினார். அதோடு தீவிரவாதிகள் மந்திரியை மட்டும் குறிபார்த்து சுட்டனர். பட்டி கொலைக்கு ஜனாதிபதி சர்தாரி, பிரதமர் கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.

தினதந்தி



மதத்துவேஷ சட்டத்தை விமர்சித்ததற்காக பாகிஸ்தான் மந்திரி சுட்டுக்கொலை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக