புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
30 Posts - 88%
heezulia
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_m10தமிழனும் சினிமாவும்  - எஸ். ராஜாராம் Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழனும் சினிமாவும் - எஸ். ராஜாராம்


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Wed Mar 02, 2011 10:53 am




தமிழனையும் சினிமாவையும் பிரிக்க முடியாது. ஒரு காலத்தில் ஒரே திரைப்படத்தை திரையரங்குகளில் ஓராண்டு ஓடச்செய்து வரலாற்றில் இடம்பிடித்த பெருமைக்குரியவன் தமிழன்.

ஆனால், அண்மைக்காலமாக தமிழ்த் திரைப்படங்கள் எதுவும் அதிகபட்சமாக 30 நாள்களுக்குமேல் ஓடுவதில்லை. என்ன ஆயிற்று? திரைப்படங்களின் தரம் குறைந்துவிட்டதா அல்லது தமிழன் திருந்திவிட்டானா?

திரையரங்குகளில் கட்டணம் அதிகம், புதிய திரைப்படங்கள் வெளிவந்த சில நாள்களிலேயே திருட்டு சி.டி. வெளிவந்துவிடுகிறது எனப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அதற்கு பரிகாரமாகத்தானோ என்னவோ திரைப்படங்களை சின்னத்திரையில் ஓடவைக்கிறான் தமிழன்.

தமிழனின் ரசனையை நன்றாகப் புரிந்துவைத்திருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள் இப்போது திரைப்படங்களை நம்பித்தானே "கல்லா' கட்டுகின்றன.

ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு போன்ற விசேஷ நாள்களில் "உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக, இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக' எத்தனை திரைப்படங்களை சேனல்கள் ஒளிபரப்பின. திரைப்படங்கள் தவிர மற்ற நிகழ்ச்சிகளும் திரைப்படங்களை, திரை நட்சத்திரங்களைச் சார்ந்துதான் இருந்தன. 2010-ம் ஆண்டின் டாப் 20 பாடல்கள், டாப் 20 நகைச்சுவைக் காட்சிகளை (வழக்கமாக டாப் 10 தானே உண்டு) சேனல்கள் ஒளிபரப்பின. நல்லவேளை, டாப் 20 அழுகைக் காட்சிகள், டாப் 20 வசனக் காட்சிகள், டாப் 20 ஆக்ஷன் காட்சிகள், டாப் 20 பஞ்ச் டயலாக் காட்சிகள் என்றெல்லாம் பயமுறுத்தாமல் இதோடு நிறுத்திக் கொண்டனவே.

இதுபோக, நடிகர், நடிகைகளின் பேட்டி, சின்னத்திரை நடிகர்களின் சங்கமம், தமிழ் சினிமா இந்த வாரம், கடந்த வாரம், வரும் வாரம் என சேனல்களும் நடித்துத் தள்ளிவிட்டன.

கடந்த ஆண்டை நினைவுகூர இந்த சினிமாவைவிட்டால் வேறு எதுவுமே இல்லையா?

இந்திய ரூபாய்க்கு அடையாளக் குறியீடு உருவாக்கிய தமிழன் உதயகுமாரிடம் ஒரு பேட்டி எடுத்திருக்கலாம்.

டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடித்து நொறுக்கும் தமிழகத்தின் முரளி விஜய்யுடன் ஒரு நேர்காணல் நடத்தியிருக்கலாம்.

1000-வது ஆண்டு விழா நடைபெற்ற தஞ்சைப் பெரிய கோயில் பற்றி ஒரு நிகழ்ச்சி தயாரித்து ஒளிபரப்பி இருக்கலாம். இன்னும், காமன்வெல்த் வில்வித்தையில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஸ்ரீதர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய சந்தோஷ் என சாதனைத் தமிழர்களை நினைவுகூர்வது நல்ல விஷயம் இல்லையா?

ஒருவேளை, ஸ்ரீதர் வில்வித்தை வீரராகவும், முரளி விஜய் கிரிக்கெட் வீரராகவும் சினிமாவில் நடித்திருந்தால் அவர்களது பேட்டி தொலைக்காட்சிகளில் வந்திருக்கக் கூடும்.

ஒரு கதாநாயகன் ஒரு படத்தில் விவசாயியாக நடித்திருந்தால், "விவசாயி கேரக்டரை எப்படி ஸ்டடி செய்தார், அந்த கேரக்டராகவே படத்தில் எப்படி வாழ்ந்திருந்தார் என்று அலசி ஆராய்ந்து நிகழ்ச்சி தயாரிக்கும் சேனல்கள், உண்மையிலேயே விவசாயத்தில் சாதனை படைத்த ஒருவரைத் தேடிப்பிடித்து அவரது சாதனையை எல்லோரும் அறியும்படி செய்வதேயில்லை.

பண்டிகை நாள்களில் ஒளிபரப்பாகும் சிறப்புப் பட்டிமன்றத்தின் பேச்சாளர்கள்கூட இப்போது சினிமாவில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

சினிமா அல்லாத மற்ற சமூகப் பொறுப்புடன் கூடிய நிகழ்ச்சியை சேனல்கள் ஏன் ஒளிபரப்புவதில்லை? சில சேனல்களில் "ரியாலிட்டி ஷோ, கேம் ஷோ' என்ற பெயரில் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன. தம்பதியர் பங்கேற்கும் அந்த நிகழ்ச்சிகளில் "உங்கள் திருமண தேதி என்ன? யார் முதலில் காதலை வெளிப்படுத்தினீர்கள்? திருமணத்துக்கு முன்பே ஒருவரை ஒருவர் பார்த்திருக்கிறீர்களா, உங்களுக்குப் பிடித்த நடிகர், நடிகை (இதிலும் சினிமாவை விடுவதாக இல்லை) யார்?'- இவையெல்லாம் உலகத் தமிழர்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில், அந்த நிகழ்ச்சிகளில் கேட்கப்படும் "அறிவுப்பூர்வமான' வினாக்கள். திரையரங்குகளில் மார்னிங் ஷோ, மேட்னி ஷோ, ஈவினிங் ஷோ-க்களைவிட இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் இந்த ஷோக்களுக்குத்தான் இப்போது மவுசு அதிகம்.

இசைக்கு என்றே தனியாகச் சேனல்கள் வந்துவிட்டதால் அதில் எப்போதும் இசைமழைதான். சொந்தங்களையோ நண்பர்களையோ நேரில் பார்த்தால் இரண்டு நிமிடம் பேச நேரமில்லாத நம் தமிழன், இசைச் சேனல்களின் காம்பியர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலகத் தமிழர்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்லச் சொல்லி, தனக்குப் பிடித்தமான சினிமாப் பாடலை "டெடிகேட்' செய்கிறான்.

ஆக, திரையரங்குகளுக்குச் சென்று சினிமா பார்க்க யாரும் தயாராக இல்லை என வருத்தப்பட வேண்டாம். அதற்குப் பதிலாக, தொலைக்காட்சிகளில் சினிமாவைத் தவிர வேறு எதையும் பார்க்கவும் யாரும் தயாராக இல்லை. இதிலும் ஓர் ஆச்சரிய முரண், நாடகத்தனமான சினிமாக்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை.

சினிமாத்தனமான நாடகங்கள் தொலைக்காட்சிகளில் ஓடோ ஓடு என்று ஓடுகின்றன. கவனியுங்கள்... தமிழன் என்றுமே சினிமாவைக் கைவிடமாட்டான்.

தினமணி


அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Mar 02, 2011 11:01 am

மக்கள் திருந்தாத வரை இந்த மாதிரி நடந்து கொண்டே இருக்கும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக