புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_m10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_m10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_m10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_m10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_m10 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:46 am

கௌதம் வாசுதேவ் மேனன் வித்யாசமான படம் என்ற பெயரில் ஒரு கொடூரமான கொடுமையான படத்தைக் கொடுத்திருக்கிறார். என்ன ஆச்சு மனுஷனுக்கு? அவருக்கு என்ன! வித்யாசம் என்கிற பெயரில் எதை வேண்டுமானாலும் எடுப்பார். ஆனா பார்க்கிறது நாம்தான! படத்தில் நடிப்பவர்களுக்கு பைத்தியமோ இல்லையோ, படம் பார்ப்பவர்களுக்கு கண்டிப்பா பைத்தியம் புடிக்கும்! இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டதாம். அதற்காக எதை வேண்டுமானாலும் சினிமாவா எடுக்கலாம்னா, என்ன நியாயம்.

அவர் வளவளன்னு விளம்பரம் கொடுத்ததைப் பார்த்தால் ஏதோ தமிழ் சினிமாவின் திசையை திருப்புவதைப் போல் தெரிந்தது. உட்காரவே முடியாத இந்தப் படத்துக்கு இவ்வளவு பில்டப்பா என்று சிரிப்பு தான் மிஞ்சுகிறது. சொல்லவந்த விஷயம் ஏதோ சரியாகத்தான் இருக்கும் போல, ஆனா அது என்னனுதான் யாருக்குமே தெரியல! இந்தப் படத்தை பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்களோடு ஒப்பிட்டது இன்னொரு கொடுமை.

கதை என்னன்னா... ( அந்தக் கருமத்த வேற சொல்லனுமா... ) தன் அப்பா பல பெண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்வதை சிறு வயதிலேயே பார்த்து மன பாதிப்புக்கு ஆளாகிறானாம் வீரா. ஒரு சனியன் புடிச்ச சாவுகிராக்கி தான் இந்த வீரா. இவனைத் தத்தெடுத்து வளர்ப்பது ஒரு சூப்பர் ஆண்ட்டி. வாலிப வயசு விளையாடும் போது ஆண்ட்டியிடமே தன் லீலையைக் காண்பித்துவிடுகிறான் அந்த தருதல. ஆண்ட்டிக்கு கல்யாணம் நடக்குது, புருஷனைக் கொன்றுவிடுகிறான். அந்த ஆண்ட்டியை ‘மீனாட்சி அம்மா’ என்று தான் கூப்பிடுகிறான் வீரா. அது அம்மாவின் மேல் இருந்த பாசமாம். என்னடா ரீல் விட்ரீங்க?

பின்னர் இந்த சொரிநாயின் வேட்டை தொடருது... கொடூரக் கொலைகள், அபத்தமான கற்பழிப்புகள்... பார்க்க முடியாத பல விஷயங்கள்! எட்டு வயசுல ஒரு பொண்ணு, பத்து வயசுல ஒரு பொண்ணு என்று கத்தரிகாய் வியாபாரி மாதிரி லிஸ்ட் போடுகிறார்... அதில் வேறு இது எல்லாமே காதலாம்! ( கொடும சார் ).

கடைசியாய் கேடித்தனம் செய்த வீரா சைக்கோ என முடிவாகிறது. சைக்கோக்களை குழந்தைகள் போல பார்த்துக் கொள்ளவேண்டும் என்பது படத்தின் கருத்து. குழந்தை எப்படி இந்த பலான வேலைகளை செய்யும்? இந்த விஷயத்தில் ஆணுக்கு பெண் சளைத்தவர்கள் இல்லை என்று கடைசியில் அதே போன்ற ஒரு பெண் சைக்கோவை காட்டுகிறார்கள்.

படத்தில் சில நல்ல விஷயங்கள் இருந்ததில் சந்தேகமில்லை. ஆனால் மலத்தில் இருக்கிற அரிசியை எப்படி பொருக்கித்திண்ண முடியும்? கொஞ்சம் யோசிக்க வேண்டாமா.

படத்தில் ஒரே ஒரு ஆறுதல் சமீரா ரெட்டியின் நடிப்பு. அவரும் சில காட்சிகளைத் தவிர எல்லா காட்சிகளிலும் ஓடுகிறார் ஓடுகிறார் ஓடிக்கொண்டே இருக்கிறார். அதுக்கு முன்னாடி தியேட்டர விட்டு ஜனங்க ஓடுறாங்க பா!



 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:46 am

தினமலர் விமர்சனம்

கவுதம் வாசுதேவ் மேனனிடம் இருந்து யாரும் இப்படி ஒரு படத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்... அப்படி ஒரு அலற வைக்கும் படம்தான் நடுநிசி நாய்கள். பெற்ற தந்தையின் செய்கைகளால் பிஞ்சிலே பழுத்தவன் மனநோயாளியாக மாறி சமூகத்தில் நஞ்சை விதைக்கும் நச்சு பாம்பாக செயல்படுவதுதான் நடுநிசி நாய்கள் படத்தின் மொத்த கதையும்!

பெற்ற அப்பா மற்றும் அவரது நண்பர்களின் குரூப் செக்ஸ் ஷோக்களால் மனதளவில் எட்டு வயதிலேயே கெட்டுப் ‌போகும் ஹீரோ வீரா அதனால் அனாதையும் ஆகிறான். தன்னை எடுத்து வளர்க்கும் பக்கத்து வீட்டு பெண்மணியை பலாத்காரமும் செய்கிறான். அவனிடமிருந்து தப்பிப்பதற்காகவும், அந்த தவறான உறவில் இருந்து விடுபடுவதற்காகவும், அதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் அந்த அம்மணி, தன் நீண்ட நாள் நண்பரை வீராவின் சாட்சி கையெழுத்துடன் (?) பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார். முதல் இரவிலேயே வளர்ப்பு தாயின் காதல் கணவரை தீர்த்துக் கட்டும் வீரா, அதனால் ஏற்படும் தீ விபத்தால் வளர்ப்பு தாய் கம் தான் தாலி கட்டாத தாரத்தையும் இழக்க வேண்டிய சூழல். வளர்ப்பு தாய் இறந்தாரா? இருந்தாரா? வீரா என்ன ஆனார்? எப்படி வாழ்ந்தார்? அவரால் எத்தனை பெண்கள் வீழ்ந்தனர்? என்பதுதான் நடுநிசி நாய்கள் படத்தின் திகிலும் பிகிலுமான மீதிக் கதை!

சைக்கோ நாயகன் வீராவாக புதுமுகம் வீராவே நடித்திருக்கிறார். இவர் ஜோராய் நடித்திருப்பதாய் சொல்ல முடியாவிட்டாலும் படம் பார்ப்பவர்களை பேஜாராய் பயமுறுத்தி இருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார். வீராவின் எண்ணங்களில் அவ்வப்போது சின்ன வயது சமர் புகுந்து கொள்வதும், இல்லாத மீனாட்சி அம்மாளை இருப்பதாக கற்‌பனை செய்து கொண்டு பண்ணு இவர் பண்ணும் சேட்டைகளும், கொலைகளும் படம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்பும் பயமுறுத்தும் ரகம்.

ஹீரோ வீராவின் வளர்ப்பு தாய் கம் தாரம் (படிக்கவே அருவறுப்பாய் இருக்கிறதல்லவா?!) மீனாட்சி அம்மாவாக ஸ்வப்ண ஆப்ரஹாம், ஆரம்ப காட்சிகளில் இளைஞர்களில் இளைஞர்களின் சொப்பனத்தை ஆக்ரமிக்கும் அளவிற்கும் அதன் பின் அதே சொப்பனத்தில் வந்து பயமுறுத்தும்படியாகவும் நடித்து பீதியை கிளப்பி இருக்கிறார்.

ஹீரோ வீராவின் பள்ளித் தோழியாக வந்து பள்ளி அறைத்தோழி ஆகாமலே தப்பிக்கும் சுகன்யாவாக வரும் சமீரா ரெட்டி, தன் காதலன் அர்ஜூனுடன் சேர்ந்து பண்ணும் ரொமான்ஸ் காட்சிகள் மட்டுமே நச். மற்றபடி ப்ச்! சமீராவின் காதலர் அர்ஜூனாக வரும் அஸ்வின், போலீஸ் ஏ.சி.பி. விஜய்யாக வரும் தேவா, 8 வயது சமராகவும் , 13 வயது வீராவாகவும் வரும் மாஸ்டர் நடிகர்கள் என எல்லோரும் தங்கள் பங்கை சரியாக செய்திருக்கின்றனர். வீராவின் சென்னை பங்களாவில் குறைக்கும் - கடிக்கும் டைசன் உள்ளிட்ட நாய்கள் கூட நடுநிசி நாய்கள் படத்தில் நன்றாகவே நடித்திருக்கின்றன.

மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவு, ஆண்டனியின் படத்தொகுப்பு, ராஜீவ்வின் கலை, சிவகுமார் அண்ட் ரங்கநாத் ரவியின் பின்னணி இசை உள்ளிட்ட எல்லாமும் நடுநிசி நாய்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றன! ஆனால் கவுதம் வாசுதேவ் மேனனின் எழுத்தும், இயக்கமும்தான் பலவீனம்! ஒருவேளை மனநல நோயாளிகளை அடிக்கடி சந்திக்கும் மனநல மருத்துவர்களும் ஒரு மாதிரிதான் என்பார்கள்....! அது மாதிரி மனநல நோயாளி பற்றி படம் எடுத்த இப்பட இயக்குனருக்கும் ஏதாவது பிரச்சனையோ? தெரியவில்லை!

நடுநிசி நாய்கள் : குறைக்கவில்லை ; கடித்திருக்கிறது!!



 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat Feb 26, 2011 11:48 am

 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் 865843 என்ன கொடும சார் இது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:48 am

தட்ஸ்தமிழ் விமர்சனம்

கலை என்பது மக்களுக்காகத்தான். ஒவ்வொரு கலை வடிவமும் மக்களைப் பண்படுத்துவதாகவே இருக்க வேண்டும். அல்லது குறைந்தபட்சம் பொழுதைக் கொல்லவாவது உதவ வேண்டும். அதுவே அந்தப் படைப்புக்குப் பெருமை தரும்.

மக்களின் வாழ்வியல் சார்ந்த அல்லது நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகக் கூறிக்கொண்டு தனது வக்கிரத்தையும், மன விகாரங்களையும் காட்சிப்படுத்துவதை கலையின் வடிவமாகப் பார்க்க முடியாது. சமூகம் அதை அனுமதிக்கவும் கூடாது.

கெளதம் மேனன் இந்த இரண்டாவது வகையில் சுலபமாக சேர்ந்திருக்கிறார், நடுநிசி நாய்கள் மூலம்.

இந்தப் படத்தின் கதை? அப்படி ஏதாவது இருந்தால்தானே சொல்வதற்கு. மிகக் கேவலமான சில சம்பவங்களால் மனச் சிதைவு, மனப் பிறழ்வு மற்றும் மனநோயின் வேறென்னென்ன வடிவங்கள் இருக்குமோ, இவை அனைத்தையும் கொண்ட ஒரு சைக்கோவைப் பற்றிய படம் இது.

ஆல்பர்ட் ஹிச்சாக்கின் சைகோ, அந்நியன் ஸ்பிளிட் பெர்சனாலிட்டி இரண்டையும் கலந்து ஒரு கேரக்டரை உருவாக்கி.. அவர் மூலமாக சமூகத்தின் இன்னொரு அசிங்கமான பக்கத்தை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார் கெளதம். ஆனால், அதைச் சொல்லும்போது அவர் காட்டும் காட்சிகளை ஜீரணிக்கவே முடியவில்லை.

முறைகேடான உறவுகள் (Incest) என்பது இந்த சமூகத்தின் மோசமான விஷம். சரியான மனநிலையில் உள்ள ஒருவனால் அப்படியொரு கோணத்தில் யோசிக்கவும் முடியாது. எனவே அதைப் படமாக எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? இதை யாருக்காக சினிமாவாக எடுத்துள்ளார் கெளதம்?

வளர்த்த தாயையும் தெய்வத்துக்கு சமமாக மதிக்கும் பண்பைத்தான் முன்னோர்கள் இந்த சமுதாயத்தில் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அந்த புனித பிம்பத்தை உடைக்க வேண்டிய அவசியமே இல்லையே. வளர்த்த தாயுடன் ஒருவன் வன்புணர்ச்சி வைத்துக் கொள்வதாகக் காட்டுவதும், பெற்ற தந்தையுடன் குரூப் செக்ஸில் மகன் ஈடுபடுகிறான் என்பதாகக் காட்சிகள் வைப்பதும், மனச்சிதைவின் உச்சகட்டம் என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.

கதாநாயகியின் தொப்புளில் கை படுவதே ஆபாசம் என்று வரையறை சொல்லும் சென்சார் அல்லது ராமேஸ்வரக் கரையில் கொடிய துன்பங்களை அனுபவிக்கும் அகதிகளின் வாழ்க்கை சம்பந்தப்பட்ட காட்சிக்கு அனுமதி மறுக்கும் சென்சார், இந்த நடுநிசி நாய்களின் வக்கிரக் காட்சிகளில் தூங்கிக் கொண்டிருந்ததா... புரியவில்லை!

இசை இல்லை, பாடல்கள் இல்லை... என இந்தப் படத்தில் ஏகப்பட்ட இல்லைகள். இவற்றுடன் இதையும் சேர்த்துக் கொள்ளலாம் கெளதம் மேனன், 'இது படமில்லை... விஷக் குப்பை'!

நடு நிசி நாய்கள் - வக்கிரக் 'குரைப்பு'

வக்கிரத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கெளதம் மேனனுக்கே உரிய போலீஸ் இன்வஸ்டிகேசன் கதை. அசிங்கத்தைக் கலக்காமல் மேனன் அதை தனது வழக்கமான ஸ்டைலிலேயே சொல்லியிருந்தால்.....



 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Feb 26, 2011 11:51 am

இவருடைய படங்களில் அனைத்துமே வன்முறையை ஆதரிக்கும் சம்பவங்கள் அதிகம் இருக்கும்போது இவருடைய எண்ணமும் அதுவாகத்தான் இருக்கும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat Feb 26, 2011 11:53 am

சிவா சார் நமது தளத்தில் இந்த படதின் தரவிறக்க சுட்டி தந்து விடலாமா ?  நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் 440806 வேண்டாமா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 26, 2011 11:54 am

ஜு4லியன் wrote:சிவா சார் நமது தளத்தில் இந்த படதின் தரவிறக்க சுட்டி தந்து விடலாமா ?  நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் 440806 வேண்டாமா ?

தாராளமாகத் தரலாம்! தமிழ்ப் படம்தானே! சிரி



 நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Sat Feb 26, 2011 12:08 pm

அப்போ சரி  நடுநிசி நாய்கள் - நக்கீரனின் அனல் தெறிக்கும் விமர்சனம் 755837

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக