புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
19 Posts - 54%
mohamed nizamudeen
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
heezulia
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 9%
T.N.Balasubramanian
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
Raji@123
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
2 Posts - 6%
kavithasankar
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
139 Posts - 40%
ayyasamy ram
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
20 Posts - 6%
Rathinavelu
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சதுரங்கக் காதல் - Page 2 I_vote_lcapசதுரங்கக் காதல் - Page 2 I_voting_barசதுரங்கக் காதல் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதுரங்கக் காதல்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:39 pm

First topic message reminder :

வித்யாவா அது ?
கண்ணனின் கண்களுக்குள்
ஆச்சரியக் கண்வெடிகள்
ஆயிரம் ஆயிரம் வெடித்தன.

கோடிப் புறாக்கள்
கிளறிச் சென்ற
தானிய முற்றமாய்
காலங்கள் சிதறின.

குமரியின்
கிராமத்துக் கல்லூரியில்
பார்வை எறிந்து எனக்குள்
வேர்வைக் கால்வாயை
வெட்டிச் சென்றவள்.

என் கண்ணுக்குள் விழுந்த
முதல் காதலுக்கும்,
என் கன்னத்தைத் தழுவிய
முதல் கண்ணீருக்கும்
காரணமானவள்.

ஆறு வருடங்கள்
ஆறுபோல் ஓடிக் கடந்தபின்,
இங்கே
அமெரிக்காவின் விமானலையத்தில்!

ஆச்சரியம்
கனவுகளின் கரைகளை
கரையான்களாய் உருமாறிக்
கவலையின்றிக் கரைக்கின்றன.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:44 pm

காதலா ?
இன்னொருவனை
உயிருக்குள்
உருக்கி ஊற்றியிருக்கும்
ஓர்
பெண்ணிடமா நீ
கண்ணியம் உடைக்கப் போகிறாய் ?

சாரதிக்கும் அவளுக்கும்
காதலென்று
நீ எப்படி சொல்கிறாய் ?

மோகன் சிரித்தான்,
அதோ
அது வானமில்லை என்று சொல்,
அதன் கீழே
மிதப்பவை மேகமல்ல
காயப் போட்ட சேலை என்று சொல்
நம்புகிறேன்.

சாரதி அவளை
காதலிக்கவில்லை என்று
சொல்லாதே.

விளைந்து நிற்கும் வயலில்
போய்
விதைகள் முளைத்தனவா
என்று
விசாரிப்பவன் முட்டாள்.
மோகன் சொன்னான்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:44 pm

விளைந்து நிற்பவை
களைகளா இல்லை
அறுவடைக்கான தானியமா என்று
தூரத்திலிருந்து பார்த்தால்
துல்லியமாய் தெரிவதில்லையே !

அருகில் சென்று விசாரிக்கலாமா ?
கண்ணன் கேட்டான்.

காதலின் கிளைகளை காட்டினால்
அவள்
நட்பின் இழைகளையும்
அறுக்க நேரிடலாம்.

ஏன் இந்த வேண்டாத சிந்தனை ?
அவளை நீ
தோழியாய் பார்ப்பதே தகும்.
காலம் உனக்கு
உரிய பதிலை தரும்.

இப்போது என்னுடைய
வார்த்தைகள்,
உன்னுடைய கருத்துக்களை
நேருக்கு நேர்
தலைகளால் மோதுகின்றன,

இவை எல்லாம்
உன் நன்மைக்கானவை
என்பதை
வருடங்கள் போனபின்
விளங்கிக் கொள்வாய்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:45 pm

உன் மீதான அவளின்
நம்பிக்கைகளை
நீயாய் போய்
வெட்டிக் கொள்ளாதே,
ஸ்நேகப் பறவையை
வெட்டிக் கொல்லாதே.

மோகன் சொல்லிவிட்டு
நகர்ந்தான்.

காதலிப்பவனுக்குத் தானே
அதன் வலி தெரியும்.
முட்டை ஓடு
உடைய மறுத்தால்
வெளிவரும் வரை குஞ்சு
வேதனைப் படாதா ?

நிறை மாத தாய்மை,
கரங்களில்
மழலையை அள்ளும் வரை
கலங்கியே புலம்பாதா ?

அப்படித்தான் புலம்பினான்
கண்ணன்.

அப்படியே போயிற்று,
கண்ணன் எனும் கார்மேகம்
நிறம் மாற்றி
பின் தேசம் மாறிப்
போயே விட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:45 pm

இப்போது தான்
மீண்டும் அந்த ஈரத்தை
அவன் மேகங்கள்
மீண்டும் உணர்கின்றன.

விமான நிலையத்துக்கும்
கிராமத்துக்கும் இடையே
பறந்து கொண்டிருந்தன
சிந்தனைகள்.

வித்யாவை நெருங்கினான்
கண்ணன்.

‘வித்யா.’

இயல்பாய் கூப்பிட்டாலும்
கடைசியில் கொஞ்சமாய்
பிசிறடித்ததாய்
பிரமை பிடித்தது அவனுக்கு.

வித்யா திரும்பினாள்,
‘கண்ணன்ன்ன்ன்’ .
ஆச்சரியக் குரலோடு
அருகில் நெருங்கினாள்.

கண்ணனுக்குள் இருந்த
நட்போ காதலோ
ஏதோ ஒன்று
போர்வை விலக்கி
எட்டிப் பார்த்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:46 pm

4

வித்யாவின் விழிகள் முழுதும்
மகிழ்வின் மின்மினிகள்
மின்னின.

கண்ணன்
ஆச்சரியப் பட்டான்.

இது தான் நட்பா ?
ஆறாண்டு கடந்தபின்னும்
வினாடி நேரத்தில்
எப்படி என்பெயரை
நினைவுப் பரலிருந்து
தூசு தட்டி எடுக்க முடிகிறது ?

எப்படி இருக்கே வித்யா ?
கண்ணனின்
கண்ணுக்குள் இருந்து
கால்முளைத்த கனவுகள்
இமை மயிர்களைப் பிடித்திறங்கின.

நான் நல்லா இருக்கேன்
நீங்க ?

வித்யாவின் விழிகளும்
கேள்விகளை
மனசுக்குள்ளிருந்து
வரவழைத்துக் கொடுத்தன.

நீண்ட நாட்களுக்குப் பின்
அருவியில்
சந்தித்துக் கொண்ட
நதிகள் போல
அகம் ஆரவாரமாய் இருந்தது
இருவருக்கும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:46 pm

வருடங்களுக்குக் கொஞ்சம்
வயதாகி விட்டது
வித்யா,

கல்லூரி வாழ்க்கையில்
பருந்துகளாய் பறந்தவர்கள்
பின்
எருதுகள் போல
உருமாற வேண்டி இருக்கிறது.

காலத்தின் கட்டாயம்
வயிற்றின் கட்டளை
வாழ்க்கையின் அழைப்பு !
எப்படி வேண்டுமானாலும்
பெயரிட்டழைக்கலாம்.

எனக்கு அயல் தேச வாழ்க்கை
சிலருக்கு
தாய் மண்ணின் மீது
பாதம் பதித்து நடக்கும் பணி.

நீ.
எப்படி இங்கே ?
எப்போ திருமணம் ஆச்சு ?

வித்யா சிரித்தாள்.
கல்லூரிக்கு வெளியே
கால் வைத்ததும்
கால்க்கட்டும் வந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:47 pm

காதல் கல்யாணம் அல்லவா ?
அதனால்
மோதித் தான் எங்களால்
தீபம் கொளுத்த முடிந்தது.

உங்கள் காதல்
வெற்றியில் முடிந்ததில்
எனக்கு
மட்டற்ற மகிழ்ச்சி !
பொய் சொல்லி சிரித்தான்
கண்ணன்.

திருமண வாழ்க்கை எப்படி
போகிறது வித்யா ?

வாழ்க்கைக்கு என்ன ?
பழக்கப் பட்ட பாய்மரக் கப்பல்
அது.
காற்று வீசும் திசையில்
காதல் துணிகளை
கட்டி வைக்கிறேன்.
பயணம் போகிறது.
புன்னகைத்தாள் வித்யா .

சரி,
உமா எப்படி இருக்கிறாள் ?
உங்கள் மனைவி?

எதிர்பாராத கேள்வியில்
ஒருவினாடி
உறைந்தான் கண்ணன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:47 pm

5

உமா !

கண்ணனின் மாமன் மகள்.
கண்ணனை
நேசித்து வந்த
கன்னிகை.

கல்லூரி கால
நினைவுகளின் உலுக்கலால்
உதிர்ந்து போன
காதல் பூக்களை
மீண்டும் பொறுக்கி
தன் கிளைகளுக்குத் தந்தவள்
அவள் தான்.

சிறு வயதிலெல்லாம்
சின்னச் சிரிப்போடு
சந்தித்துக் கொண்டவர்கள்,
இப்படி
வாழ்வில்
சங்கமித்துக் கொள்ள
சம்மதிப்பார்கள் என்று
சத்தியமாய் யாரும்
சிந்தித்திருக்கவில்லை.

உமாவிற்கு வீட்டில்
வரன் வேண்டுமென்ற
வரம் தேடும் பிரார்த்தனைகளும்,
பயணங்களும்
நடந்தபோது,
உமாதான் மெல்லமாய்
தன் தாயின் காதுகளுக்குள்
கண்ணனை ஊற்றியிருக்கிறாள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:48 pm

வெண்ணை திருடிய
கண்ணனைக் கும்பிட்டுக் கிடந்த
தாய்,
தன் பெண்ணின் கண்களிலும்
கண்ணனே
காதல் திருடியதைக் கண்டு
கண் விரித்தாள்.

சொந்தத்தில் திருமணமா ?
அது
வியாதிகளின் விளை நிலமம்மா,
வேண்டாம்.
தடுத்தாள் தாய்.

சொந்தங்களை மீறிய
திருமணங்களுக்கு
நோய் ஒன்றுமே நேர்வதில்லையா ?
சொந்தத்தில் திருமணம்
என்றால் அது
சொர்க்கத்தில் நடப்பது போல,

திருமணங்களால் உருவாகும்
சொந்ததை ஆதரிப்பீர்கள்,
சொந்தங்களால் உருவாகும்
திருமணத்தை மட்டும்
எதிர் விசையாய் எதிர்ப்பீர்களோ ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 29, 2008 10:49 pm

சரமாரிக் கேள்விகள்
அம்மாவைச் சரிக்க,
கண்ணனின் வீட்டோடு
கல்யாணப் பேச்சுகளும்
துவங்கின.

கண்ணனும் முதலில்
தயங்கினான்,
காதல் கவலைகள் ஒருபுறம்
கல்யாணக் கவலைகள்
ஒருபுறம் என்று,
இரு சிறகுகளிலும்
பாரம் இறக்கிவைத்த
பட்டாம் பூச்சியாய் படபடத்தான்.

இறுதியில்,
உமா கண்ணனைத் திருடினாள்,
திருமணம் செய்து
தாலியை வருடினாள்.

திருமணத்துக்கு
நண்பர்கள் யாரையுமே
கண்ணன் அழைக்கவில்லை.

விஷயம் எப்படி
வித்யா வரை எட்டியது ?

ஆச்சரியப் புதிருக்கு
விடை தேடி
வித்யாவின் விழி தீண்டினான்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக