புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 12:20 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - ஜெபராஜ் Poll_c10சிறுகதை - ஜெபராஜ் Poll_m10சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சிறுகதை - ஜெபராஜ் Poll_c10சிறுகதை - ஜெபராஜ் Poll_m10சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதை - ஜெபராஜ் Poll_c10சிறுகதை - ஜெபராஜ் Poll_m10சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சிறுகதை - ஜெபராஜ் Poll_c10சிறுகதை - ஜெபராஜ் Poll_m10சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிறுகதை - ஜெபராஜ் Poll_c10சிறுகதை - ஜெபராஜ் Poll_m10சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
சிறுகதை - ஜெபராஜ் Poll_c10சிறுகதை - ஜெபராஜ் Poll_m10சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
சிறுகதை - ஜெபராஜ் Poll_c10சிறுகதை - ஜெபராஜ் Poll_m10சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
சிறுகதை - ஜெபராஜ் Poll_c10சிறுகதை - ஜெபராஜ் Poll_m10சிறுகதை - ஜெபராஜ் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுகதை - ஜெபராஜ்


   
   
jabaraj.s
jabaraj.s
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 01/02/2011

Postjabaraj.s Tue Feb 22, 2011 3:32 pm

காதல்



இரவு ஒன்பது மணி, இந்நேரம் எல்லா இரயில் நிலையங்களும் பரபரவென்று இருக்கும், விதிவிலக்காக நான் இறங்கும் இரயில் நிலையம் வெறிச்சோடி இருக்கும். டிக்கெட் கொடுப்பவர் உள்ளே பாட்டுக்கேட்டுக்கொண்டே தூங்கிக்கொண்டிருப்பார். ஒரு ஆண் நாய் ஒரு பெண் நாயை பாடிக்கொண்டே (குரைத்துக்கொண்டே)விரட்டிச்செல்லும். அதை இரண்டு நாய் நிமிர்ந்து பார்த்துவிட்டு ஒரு முறை ஏதோ சொல்வதுபோல் குரைத்துவிட்டு மறுபடியும் தூங்கிவிடும். பிளாட்பாரத்தில் உள்ள இலைகள் எல்லாம் காற்றின் வேகத்தினால் பறக்கும், பறக்கும் இலைகள் தம் மீது விழுவது கூடத்தெரியாமல் அழுக்கு வேட்டியை போர்த்திக்கொண்டு நாலைந்து பேர் தூங்கிக்கொண்டிருப்பார்கள். இவ்வளவு நடந்தும் அந்த இடம் அமைதியாக இருப்பதால் இரயிலில் இருந்து இறங்கி ஒரு அரைமணி நேரம் இரயில்வே பெஞ்சில் அமைதியாக உட்கார்ந்து விட்டு செல்வது என் வழக்கம்.





இந்த வழக்கத்தை பின்பற்றும் என்பெயர் சுந்தரராஜன். மேஜர் இல்லை! பத்திரிக்கையாளன். என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாள் 4-பிப்ரவரி-2011. ஆம்! அந்த நாளில் தான் மறக்க முடியாத இரண்டு சம்பவங்கள் நடந்தன.



நான் பள்ளியில் படிக்கும் போதே பத்திரிகை படிப்பதையும் தினசரி வேலையாக செய்வேன். அதில் உள்ள எழுத்துக்கள், வரிகள், வார்த்தை ஜாலங்கள், உண்மைகள் எல்லாம் என்னை மயக்கின. அதனால் அதே போல் ஒரு பத்திரிக்கையாளனாக வர வேண்டும் என்று ஆசைபட்டேன். பி.ஏ. ஜெர்னலிஸ்ட் முடித்தேன். பல பத்திரிக்கைகளில் வாய்ப்பு கேட்டு கடைசியில் ஒரு பிரபல நாளிதழ் ஒன்றில் வேளையில் சேர்ந்தேன். இதுதான் அந்த முதல் சம்பவம். சந்தோஷத்தின் முதல் நாள். இரண்டாவது சம்பவம் ஒரு பெண். ஆம்! வேளை வந்தவுடன் காதலும் வந்துவிட்டது அதுவும் நான் இறங்கும் அதே இரயில் நிலையத்தில்.



நான் இறங்கும் இரயில் நிலையத்திற்கு முன்னால் இருக்கும் இரயில் நிலையத்திற்கும் அடுத்து உள்ள இரயில் நிலையத்திற்க்கும் இடைவெளி 10 கி.மீ தூரம். அதனால் எங்கள் ஊர் மக்கள் கலெக்டருக்கு மனு எழுதி அதில் கையெழத்திட்டு, ஒரு வழியாக ஆறு வருட காத்திருப்பிற்க்கு பின் அந்த இரயில் நிலையம் அமைக்க ஒப்பந்தம் இடப்பட்டு, ஒரு வருடத்தில் அதை அமைத்து முடித்து இந்த வருடத்துடன் எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. காலை வேளையிலும் மாலை வேளையிலும் கூட்டம் இருந்தாலும் இரவு எழு மணிக்கு மேல் காய்ச்சல் வந்ததுபோல் அமைதி ஆகிவிடும், நான் வேளையில் சேர்ந்த் அந்த நாள் வேளையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றேன். இரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீக்குள் என் வீடு இருப்பதால் நான் இரயிலில் தான் வீட்டிற்க்கு செல்வேன்.



அசைந்து! அசைந்து! வந்து ஒரு வழியாக என்னை துப்பிவிட்டு எதுவும் தெரியாததுபோல் சென்று விட்டது. நானும் அங்கே இருந்த இரும்பு (ச்)சேரில் சென்று அமர்ந்தேன். அன்று மூன்றாம் பிறை! (திரைப்படம் அல்ல). வெள்ளி கொலுசை வளைத்து வைத்தற்போல் நிலவு தோன்றியது. கொலுசிற்கு காவலாய் நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டிருந்தது. நட்சத்திரத்தை ரசித்துக்கொண்டிருந்த என்னை, என் கவனத்தை தூரத்தில் வரும் இரயில் கலைத்தது. யாராவது இறங்குவார்கள் என்று நினைத்து தனது உடலின் இயக்கத்தை நிறுத்தி மூச்சு விட்டது. யாரும் இறங்கபோவது இல்லை என்று நினைத்துக்கொண்டே யதேச்சையாக கவனித்தேன். எனக்கு முன்னால் உள்ள் பெட்டியிலிருந்து நான்கு பெட்டிக்கு முன்னால் இருந்த பெட்டியில் இருந்து ஒரு முழு பௌர்ணமி இறங்கியது!.



தன் மூச்சை நன்றாக இழுத்துக்கொண்டு மறுபடியும் தன் பயணத்தை தொடங்கியது இரயில். இரயிலில் இருந்து இறங்கிய பௌர்ணமி என்னை நோக்கி வந்தது என்பதை விட வந்தாள் என்பதே பொருந்தும். 'உஜாலா'வோ! அல்லது வேறு ஏதோ சொட்டு நீலத்தையோ போட்டது போல் வெண்மையான சுடிதார். சுருள் சுருளாய் இருந்த முடி காற்றில் அலை அலையாய் பறந்தது. காலில் உள்ள கொலுசு ஜில்! ஜில்! என்று காதில் இனிமையாய் ஒலித்தது. அந்த இடமே சொர்க்கம் போல் பரபரப்பாய் ஆகிவிட்டதென எனக்கு தோன்றியது.



ஆனால், மனதிற்குள் ஒரு எண்ணம். “யார் இவள்?” “இத்தனை நாள் நான் பார்த்தில்லையே?” அவள் என் அருகில் வந்துவிட்டாள். என்னை கடக்கப்போகிறாள்! கடக்கப்போகிறாள்! என்னை கடக்கும் போது தலையை குனிந்த நிலையிலேயே என்னை பார்த்தாள். 'கோல்கேட்' டால் சுத்தம் செய்த தன் பல்வரிசையால் என்னை பார்த்து மெலிதாக சிரித்தாள். வானத்தில் இருந்து ஒரு மின்னல் பாய்ந்து வந்து ஒரே நொடியில் தாக்கியது போல் பிரமித்துப்போனேன். அவள் வந்து போன அந்த இடமே மல்லிகை மணத்தால் நிறைந்தது. இருளின் ஒலி கூட சப்தஸ்வரமாய் ஒலித்தது!.



ஒரு சில வினாடிகளில் உணர்வு திரும்பிவிட்டேன். எங்கே அவள் என்று இரயில் நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பாதைக்கு சென்றேன். அவை மூன்று தெருக்கள் பிரிந்து செல்லும் பாதை. மூன்றிலுமே அந்த பெண்ணை காணவில்லை. சே! 'சரியான மடையன் நான்', என்று எண்ணிக்கொண்டே வலதுப்புறமாக உள்ள எனது வீட்டை நோக்கிச் சென்றேன்.



செல்லும் வழியில் ஒரு இளைஞன் நாகரீகமாக உடை அணிந்துக்கொண்டு, வாசனை வராத மல்லிகைப்பூவை கையில் வைத்துக்கொண்டு என்னை கடந்து சென்றான். இந்த இரவு வேளையில் எதற்கு செல்கிறான் என்று நினைத்துக்கொண்டே வீட்டை நோக்கி சென்றேன். தூங்கப்போகும் போது அந்தப்பெண்ணின் நினைவாகவே இருந்தது. நாளைக்கு எப்படியும் அவளை பின் தொடர்வேன் என்று நினைத்துக்கொண்டு தூங்கிவிட்டேன்.



மறுநாள், காலை எழுந்து எல்லாக் கடனையும் முடித்துவிட்டு, வேலைக்கு கிளம்பி, எல்லாம் முடித்து விட்டு மறுபடியும் அதே இரயில் நிலையம், அதே காற்று, அதே இலை, அதே லுங்கி மனிதர்கள், அதே நாய்கள், அதே பென்ச், அதே நான், அதே இரயில், அதே பெண், அதே உடையில் வந்தாள். என்னை தாண்டி செல்லும் போது, அதே மின்னல் சிரிப்பை உதிர்த்தாள், அந்த இடமே மல்லிகை பூவின் மணம் வீசியது. என்ன அச்சரியம்! அவள் கூந்தலில் எந்த பூவும் இல்லையே!.

மறுபடியும் மயக்கமாய் விட சென்றேன், சுதாரித்து எழுந்தேன் சென்று பார்த்தேன் அந்த பெண்ணை காணவில்லை.



'என்னை போன்ற மடையன் யாருமில்லை' என்று நினைத்துக்கொண்டு என் வீட்டை நோக்கி நடந்தேன். போகும் வழியில் அதே இளைஞன், அதே பளபளப்பான உடை, அதே பளிச்சென்ற தோற்றம், கையில் மல்லிகை பூ, என்னை கவனிக்காமல் அவன் பாட்டுக்கு சென்று விட்டான்.



மறுநாள், அதே சூழ்நிலையில் காத்திருந்தேன். அந்த இரயிலும் காணவில்லை, அந்த பெண்ணும் காணவில்லை, அரைமணி நேரம் காத்திருந்தேன் இரண்டு இரயில் வந்ததே தவிர அந்த பெண்ணை காணவில்லை. சரி, சீக்கிரம் வீட்டிற்க்கு சென்றிருப்பாள் என்று நினைத்து வீட்டிற்கு சென்றேன். என் எதிரே வரும் அந்த இளைஞன் காணவில்லை. இருட்டான தனிமையில் நான் மட்டும் நடந்து சென்றேன். இப்படியே மூன்று நாட்கள் சென்றன அந்த பெண்ணை காணவில்லை.



நான்காம் நாள் அவளைப் பார்த்துவிட்டேன் இருவரும் ஒரே இரயிலில் வந்து இறங்கினோம். அந்த பெண் யாரையோ சுற்றி சுற்றி தேடினாள் பின்பு அவளது வீட்டை நோக்கி நடந்தாள். நானும் அவளை பின் தொடர்ந்தேன். எங்களை நிலவு பின் தொடர்ந்தது, நிலவினை நட்சத்திரம் பின் திடர்ந்தது. ஆச்சரியம்! ஆச்சரியம்! அந்த பெண் என் வீடு இருக்கும் தெருவில் தான் நுழைந்தாள். நானும் அந்த தெருவினுள் நுழைந்தேன் காணவில்லை. ஆமாம்! அந்த பெண்ணை காணவில்லை. இப்படியே இரண்டு நாட்கள் பின் தொடர்ந்தும் எங்கள் வீட்டு தெருவில் நுழைந்தவுடன் காணாமல் போய்விட்டாள்.



மீண்டும் நான்கு நாட்கள் அந்த நேரம் வரும் இரயிலும் காணவில்லை அந்த பெண்ணும் காணவில்லை. ஐந்தாம் நாள் என உடல்நிலை சரியில்லமல் பொய்விட்ட காரணத்தால் நான் அன்று அழுவலகம் செல்லவில்லை. இரவு மணி எட்டு என்று கடிகாரம் கூறியது. எழுந்து சென்றேன் தெருவின் முனையை அடைந்தேன். தெருவின் முனையில் ஒரேயொரு வீடு மட்டுமே. சந்து திரும்பியவுடன் காணவில்லை என்றால் அந்த வீடு தான் அந்த பெண்ணின் வீடாக இருக்கும் என்று தீர்மானித்தேன்.



அது ஒரு மாடி வீடு, கீழே ஒரு வீடு மேழே ஒரு வீடு என இரண்டு குடித்தனம் உண்டு. முதலில் கீழ் வீட்டுக்குசென்று கதவை தட்டினேன். டக்! டக் ! சத்தம்.



"யாரு"? என்றது ஒரு வயதான குரல்.



சார், இங்க ஒரு பொண்ணு ஒரு பதினெட்டுல இருந்து இருபத்திரெண்டு வயசுக்குள்ள இருக்கும்



"பொண்ணா, எம் பொண்ணு இப்போ அமெரிக்கால இருக்கா" என்று கதவை திறந்து கொண்டே சொன்னார் அந்த வயதானவர்.



அவரே தொடர்ந்து, "மேலே புதுசா ஒருத்தர் குடி வந்துருக்கா அவால வேணா கேளுங்கோ என்றார்".



"ரொம்ப நன்றி சார்", என்று சொல்லிக் கொண்டே மேலே சென்றேன்.



டக்! டக்! கதவை தட்டினேன் பதிலில்லை, பக்கத்திலிருந்த ஸ்விட்சை அழுத்தினேன் உள்ளே அதன் மின்சார அழைப்பு கேட்டது பதிலில்லை. சரி, வீட்டில் யாரும் இல்லை என்று நினைக்கும் நேரத்தில்........



"யாரு"? என்று கதவை திறந்தாள் ஒரு பெண்.



வயது ஒரு முப்பத்தைந்திலிருந்து நாற்பதுக்குள் இருக்கும்



"இங்க பதினெட்டு இருபது வயசுல ஏதாவது பொண்ணு இருக்குதா"? என்றேன் தைரியமாக.



சே! ராத்திரியில் இந்த மாதிரி கேட்டால் ஏதாவது தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்று எண்ணிக்கொண்டேன்.



அந்தப்பெண் என்னை முறைப்பது போல் பார்த்தால். ஆனால், ஏனோ அவள் கண்களில் சிறிது கண்ணீர் எட்டிப்பார்த்தது



"இந்த வீட்டில் என்னை தவிர பெண்கள் யாரும் இல்லை" என்றாள் கோபமாக.



அப்போதுதான் அவளைக்கவனித்தேன், அதே வெள்ளை நிற சுடிதார், சுருள் சுருளாய் முடி, அதே பொன் முகம், நீளமான உதடு, வில் போன்ற புருவம், காந்தம் போன்ற கண்கள், கழுத்தில் ஒற்றை தங்கச் செயின், அத்தனையும் சுமந்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருந்தால், சட்டம் போட்ட போட்டோவில். அதற்கு கிழே.....



கே.அருள்மொழி



தோற்றம் : 10.09.1990 மறைவு : 3.02.2011



வானத்தில் முழு பௌர்ணமி ஒளி வீச, தூரத்தில் சிக்......புக்.......சிக்.......புக்...... என்று ஸ்டேஷனில் வந்து நிற்க்கும் இரயிலின் ஓசை கேட்டது. அவளை முதல் முதலாய் பார்த்த தினத்தை நினைத்துப் பார்த்தேன்..... தலை சுற்ற்ற்ற்றியது.



------------- X ------------- X ------------- X ------------- X -------------



தொ.எண் - 95000 05426.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Feb 22, 2011 5:39 pm

பயம் பயம் பயம்



சிறுகதை - ஜெபராஜ் Uசிறுகதை - ஜெபராஜ் Dசிறுகதை - ஜெபராஜ் Aசிறுகதை - ஜெபராஜ் Yசிறுகதை - ஜெபராஜ் Aசிறுகதை - ஜெபராஜ் Sசிறுகதை - ஜெபராஜ் Uசிறுகதை - ஜெபராஜ் Dசிறுகதை - ஜெபராஜ் Hசிறுகதை - ஜெபராஜ் A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 5:48 pm

சிறுகதை - ஜெபராஜ் 440806 காதல் மோகினி பார்த்தால் கூட வருமா...



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிறுகதை - ஜெபராஜ் Ila
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Feb 22, 2011 5:58 pm

கதை நன்றாக இருக்கிறது ஜெபராஜ்... திகில் கதை.... ஆனால் வழியில் ஒரு இளைஞன் கையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு நடந்து போவதை போல் எழுதி இருந்தீங்க தானே? அவரை பற்றி ஒன்னும் விவரங்கள் இல்லையேப்பா..
ஒரு ஆர்வக்கோளாறு தான்... தெரிந்துக்கொள்ளவேண்டுமென்று...
அருமையான கதைப்பா.. அன்பு வாழ்த்துக்கள் ஜெபராஜ்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிறுகதை - ஜெபராஜ் 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Feb 22, 2011 6:18 pm

[quote="மஞ்சுபாஷிணி"]கதை நன்றாக இருக்கிறது ஜெபராஜ்... திகில் கதை.... ஆனால் வழியில் ஒரு இளைஞன் கையில் மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு நடந்து போவதை போல் எழுதி இருந்தீங்க தானே? அவரை பற்றி ஒன்னும் விவரங்கள் இல்லையேப்பா..குஓட்டே

மாமா மல்லிகை பூ வாங்கி தரலயா அக்கா ?? சிறுகதை - ஜெபராஜ் 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சிறுகதை - ஜெபராஜ் Ila
ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Tue Feb 22, 2011 9:14 pm

சிறுகதை - ஜெபராஜ் 677196நன்றாக இருந்தது ...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Feb 23, 2011 12:48 pm

நன்றாக இருந்தது..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக