புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:25 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:53 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» கருத்துப்படம் 01/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Yesterday at 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Yesterday at 6:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:24 pm

» நாவல்கள் வேண்டும்
by சுகவனேஷ் Yesterday at 2:21 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:12 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:09 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

» எட்டாத ராணியாம்….(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:07 pm

» இளவரசிக்கு குழந்தை மனசு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:06 pm

» சாப்பிடும் முன் கடவுளை வேண்டணும்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:04 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:03 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
91 Posts - 54%
heezulia
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
59 Posts - 35%
mohamed nizamudeen
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
4 Posts - 2%
சுகவனேஷ்
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
3 Posts - 2%
Guna.D
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
1 Post - 1%
Ratha Vetrivel
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
1 Post - 1%
Saravananj
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
1 Post - 1%
prajai
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
21 Posts - 54%
heezulia
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
16 Posts - 41%
mohamed nizamudeen
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
1 Post - 3%
சுகவனேஷ்
வா! ஓடிப்போவோம் I_vote_lcapவா! ஓடிப்போவோம் I_voting_barவா! ஓடிப்போவோம் I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வா! ஓடிப்போவோம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 16, 2011 2:59 pm

சரியாக பத்துமணிக்கெல்லாம் வந்து விடுவேன் என்று சொன்ன கவிதாவைக் காணவில்லை. பஸ் ஸ்டாண்டில் கூட்டம் நிறைந்து வழிந்தது.

`கைக்கடிகாரத்தைப் பார்த்தான், கணேஷ். பத்தரை ஆகியிருந்தது.

அதேநேரத்தில் ஓட்டமும் நடையுமாக கையில் ஒரு சூட்கேசுடன் வந்து சேர்ந்தாள் கவிதா.

``ஸாரி கணேஷ்... வீட்டுக்குத் தெரியாம பெட்டியைத் தூக்கிட்டுப் புறப்படறது சாதாரண விஷயமா? காலையில ஏழு மணியிலிருந்தே புறப்பட ஆரம்பிச்சேன். அப்பா ஆபீஸ் போயி, அம்மா மார்க்கெட், தங்கை காலேஜ்ன்னு புறப்பட்டு... வீடு காலியாக இவ்வளவு நேரம் ஆயிடிச்சு'' என்று தான் தாமதமாக வந்ததற்கான காரணத்தைச் சொன்னாள்.

``சரி, எப்படியோ வந்து சேர்ந்துட்டே... பெட்டியில என்னெல்லாம் வெச்சிருக்கே?''

``நாலு ட்ரஸ்... அவ்வளவுதான்''

``வெறும் ட்ரஸ் தானா?''

``பின்னே?''

``உங்கம்மாவோட நகைங்க, உன் தங்கச்சியோட நகைங்க, உங்கப்பா சேர்த்துவெச்ச பணம் இதெல்லாம் கொண்டு வரலியா?''

``ஊரை விட்டு ரெண்டு பேரும் ஓடிப் போய் எங்காவது கல்யாணம் செய்துக்கலாம்னு சொன்னேன். வீட்டுல உள்ளவங்க நகை பணமல்லாம் எடுத்துட்டு வந்தா என்னைப் பத்தி அவங்க என்ன நினைப்பாங்க?''

``அறிவில்லாமப் பேசாதே கவிதா. காதல் கல்யாணம்னா சும்மாவா? இங்கிருந்து போயி எதை வெச்சு வாழறதாம்? நகையிருந்தா வித்து செலவு பண்ணலாம். ஒண்ணும் இல்லாமப் போயி என்ன செய்யறதாம்?''

``வண்டி இழுத்தாவது என்னைக் காப்பாத்துவேன்னு சொன்னியே''

``ஒரு பேச்சுக்கு சொல்றது தான். அதுக்காக நான் போயி வண்டியை இழுக்க முடியுமா? ச்சே... உன்னை நம்பிப் புறப்பட்டேன் பாரு... வெறும் கையோட வந்தவளை அழைச்சுட்டுப் போயி எப்படி வாழறதாம்?'' என்று சலித்துக் கொண்டான் கணேஷ்.

``கணேஷ்... நீ இப்படி நகைக்கும், பணத்துக்கும் ஆசைப்பட்டு என்னைக் காதலிச்சிருப்பேன்னு நான் நெனைக்கலை. அதுவும் எங்கம்மா நகை, என் தங்கை நகை என் அப்பா பணம்னு என் குடும்பத்துல இருக்கறவங்க பொருளுக்கெல்லாமா ஆசைப்படுவே?'' என்று ஆத்திரமானாள்

கவிதா.``இந்தக் கதையெல்லாம் பேசிட்டு இருக்க இப்ப நேரம் இல்லை. பணம் இல்லாமப் போயி என்ன பண்றது? அதைச் சொல்லு?''

`கணேஷ்... உன்னோட சுயரூபம் என்னன்னு தெரிஞ்சு போச்சு. பொண்டாட்டி பணத்துல வாழலாம்னு நெனைக்கற உன்னைக் காதலிச்சேன் பாரு... அதை நெனைச்சு நான் ரொம்ப வருத்தப்படறேன், உன்னை மாதிரி ஒருத்தனை நம்பி என் குடும்பத்தை விட்டுப் புறப்பட்டு வந்தேன் பாரு... என் புத்தியை செருப்பால அடிக்கணும். இனிமே காதல்ங்கற பேரைச் சொல்லி என் பின்னால சுத்தாதே குட் பை'' என்று வந்த வேகத்தை விட, அதிக வேகத்துடன் புறப்பட்டாள் கவிதா.

அவள் வேகமாகச் செல்வதைப் பார்த்த கணேஷுக்கு கண்களில் கண்ணீர். அங்கிருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்து இரண்டு தினங்களுக்கு முன் நடந்ததை நினைத்துப் பார்த்தான்.

கணேஷை கவிதாவின் அப்பா சந்தித்தார்.

``தம்பி... நீ காதலிக்கற கவிதாவோட அப்பா நான். உன்னைப் பத்தி விசாரிச்சேன். படிச்சவன். வேலைக்காக காத்துட்டு இருக்கேன்னு சொன்னாங்க. என் பொண்ணுக்கு என் சொந்தத்துலயே ஒரு பையனைக் கல்யாணம் செய்து குடுக்கறதா வாக்குக் குடுத்துட்டேன். அந்தப் பையன் கவர்மெண்டு சம்பளம் வாங்கறான். என் பொண்ணை அவனுக்குக் கட்டிக் கொடுத்தா காலம் பூராவும் சந்தோசமா இருப்பான்னு நான் நம்பறேன். உன் காதலி காலம் பூராவும் கஷ்டம் இல்லாம வாழணும்னு நீ நெனைச்சா, என் பொண்ணை விட்டுக் கொடுத்திடு தம்பி'' என்று அவர் கண்ணீரோடு நின்ற காட்சியைப் பார்க்க சகிக்காத கணேஷ் பதிலேதும் பேசாமல் சென்று விட்டான்.

இப்போது காதல் மட்டுமே கணேசனுடன் வாழப்போகிறது. காதலி யாருடனோ வாழப் போகிறாள் என்ற நினைப்பே மனசுக்குள் பாரம் ஏற்றியது.. `கவிதா நீ எங்கிருந்தாலும் வாழ்க' நினைத்துக் கொண்டவன், அவசரமாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டான். கூட்டமாய் நிரம்பி வழிந்த பஸ் ஸ்டாண்ட் இப்போது வெறிச்சோடிக் கிடந்தது.

- கே.ஆர்.காவேரி



வா! ஓடிப்போவோம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 3:18 pm

நல்ல கதை தான் அண்ணா ஆனால் ஒரு நல்ல தந்தையானவர் தான் மகளின் மனதை கஷ்டபடுத்தி தான் வாக்கை காப்பாற்ற நினைப்பாரா
தான் மகள் காதல் தோல்வியில் வேதனைபட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த வாக்கை காபற்றவேண்டும் என்று நினைதுள்ளார்



உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Feb 16, 2011 4:55 pm

SK wrote:நல்ல கதை தான் அண்ணா ஆனால் ஒரு நல்ல தந்தையானவர் தான் மகளின் மனதை கஷ்டபடுத்தி தான் வாக்கை காப்பாற்ற நினைப்பாரா
தான் மகள் காதல் தோல்வியில் வேதனைபட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த வாக்கை காபற்றவேண்டும் என்று நினைதுள்ளார்
இந்த கதைய பொறுத்த வரையில் தந்தை மகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்துள்ளாரே தவிர ர அவள் வேதனை பட வேண்டும் என்று நினைக்க வில்லை. வேலை இல்லாத ஒருவருக்காக ஒரு பெண் எத்தனை நாள் காத்திருக்க முடியும்.வேலை இல்லாத ஒருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுவதும் கஷ்டபடுவதற்கு பதில் நல்ல வேலையில் உள்ள ஒருவரை தன் மகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒரு தந்தை நினைக்கிறதுல
என்ன தப்பு




வா! ஓடிப்போவோம் Uவா! ஓடிப்போவோம் Dவா! ஓடிப்போவோம் Aவா! ஓடிப்போவோம் Yவா! ஓடிப்போவோம் Aவா! ஓடிப்போவோம் Sவா! ஓடிப்போவோம் Uவா! ஓடிப்போவோம் Dவா! ஓடிப்போவோம் Hவா! ஓடிப்போவோம் A
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Feb 16, 2011 5:25 pm

உதயசுதா wrote:
SK wrote:நல்ல கதை தான் அண்ணா ஆனால் ஒரு நல்ல தந்தையானவர் தான் மகளின் மனதை கஷ்டபடுத்தி தான் வாக்கை காப்பாற்ற நினைப்பாரா
தான் மகள் காதல் தோல்வியில் வேதனைபட்டாலும் பரவாயில்லை தான் கொடுத்த வாக்கை காபற்றவேண்டும் என்று நினைதுள்ளார்
இந்த கதைய பொறுத்த வரையில் தந்தை மகள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைத்துள்ளாரே தவிர ர அவள் வேதனை பட வேண்டும் என்று நினைக்க வில்லை. வேலை இல்லாத ஒருவருக்காக ஒரு பெண் எத்தனை நாள் காத்திருக்க முடியும்.வேலை இல்லாத ஒருவரை கல்யாணம் பண்ணிக்கிட்டு காலம் முழுவதும் கஷ்டபடுவதற்கு பதில் நல்ல வேலையில் உள்ள ஒருவரை தன் மகள் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கணும்னு ஒரு தந்தை நினைக்கிறதுல
என்ன தப்பு

ஒவொருதருக்கும் ஒவொரு ஃபீலிங்க் நான் சொன்னது என் ஃபீலிங்க்

அகீல்
அகீல்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010

Postஅகீல் Wed Feb 16, 2011 6:07 pm

நல்ல காதலன். எங்கு இருந்தாலும் வாழ்க



அகீல் வா! ஓடிப்போவோம் 154550
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக